Wednesday 29 December 2010

கடுங்குண பெருவழுதியும் தாருவின் காகமும்

பன்னிரண்டு வாழைப்பழம் இருந்தால் அது ஒரு சீப்பு. ஆறு என்றால் அரை சீப்பு. இப்பொழுதெல்லாம் யாரும் தமிழில் சொல்வதில்லை. அரை டஜன். தமிழ் தான் பிரச்சினை. இல்லாவிட்டால் எதற்கு அவரங்ஸேபை அவுரங்க சீப்பு என்று எழுதுகிறார்கள். இப்படி கேட்டால் கலா டீச்சர் துரத்தி விடும். ஹிஸ்டரி. அதனாலயே கேட்பது வழக்கம். வெளியில் போய் படம் போஸ்டர் பார்க்கலாம். கொலையும் செய்வாள் பத்தினி என்று ஒரு பட கேப்ஷன். என்ன படம் ஞாபகமில்லை.

ஞாபகம் தான் பெரிய பிரச்சினை. இவனை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுவது யார் என்று எனக்கு தெரியவில்லை. ஹிஸ்டரி க்ளாஸ் கட் பண்ணியதன் விளைவு. நரசிம்மவர்ம பல்லவன் மகேந்திரன் இரண்டாம் புலிகேசியா மூன்றாம் புலிகேசியா. தொலையட்டும். ஏதோ ஒரு நம்பர்.  கடுங்குண பெருவழுதிக்கு கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு என்று வசனம் சொல்லாதீர்கள். இவனை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிட்டால் எல்லாருக்குமே பீதியில் பேதியாகும். எதிரே சூரிய வெளிச்சத்தில் கம்பம் பளபளத்தது. போர்க்காலத்தில் நெய்க்கு பஞ்சம். ஆமணக்கு எண்ணெய் தடவி இருப்பார்கள் போலிருக்கிறது. கேஸ்டர் ஆயில். பெருவழுதியை யானை மீது ஏற்றி கம்பத்தின் நுனியில் உக்கார வைத்தால் படைவீரர்களுக்கு அன்றைய வேலை முடியும். அரசு வேலை என்றாலும் டென் ட்டூ ஃபோர் இல்லை.கருணாநிதி ஆட்சிக்கு வர இன்னமும் காலம் இருக்கிறது. .அவர்களும் எவ்வளவு நேரம் தான் காத்திருப்பார்கள். மீதியை நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசை பார்த்துக் கொள்ளும். இது கொஞ்சம் காமெடி. நியூட்டன் வரும் முன்னரே புவி ஈர்ப்பு விசை இருந்தது.

என் முகத்தில் பல்லி ஒன்று விழுந்து ஓடியது. பத்து மணிக்கு மேல் படுத்திருந்தால் பல்லி விழுமோ. என்ன எழவோ. காலையில் பல்லி முகத்தில் விழித்தால் என்ன பலன். சித்தியானந்தாவை கேட்கலாம். அவர் தான் இப்பொழுது பாப்புலர் சாமி. ஆனால் அவர் கதவை மூடிக் கொண்டு எப்பொழுதும் பிஸி.டோரை திற ஏரு வரட்டும் என்று ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாராம். தமிழ் இலக்கியம் வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.

புரண்டு படுத்தால் ஃபோன் அடிக்க ஆரம்பித்து விட்டது. தாரு. தாருவை உங்களுக்கு தெரியாது என்றால் நீங்கள் அவரை தினமும் படிக்காத கோடிக்கணக்கான வாசகர்களில் ஒருவர். பிரபல எழுத்தாளர். தமிழில் தான் எழுதுகிறார். பூடான், ம‌ணிப்புரி, சிக்கிம், மேகாலயா. பொங்கல் லாட்டரி இல்லை. இங்கெல்லாம் அவருக்கு கட் அவுட் இல்லாத இடமே இல்லை. மேகாலயாவில் காடுகளை அழித்து இவரது கட் அவுட் செய்து கொண்டிருக்கிறார்கள். பூடானுக்கு இங்கு இருந்து தான் ஏற்றுமதி. பூடான் இந்தியாவில் இருக்கிறது என்று தமிழர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குஷ்பு இட்லி தின்றால் இப்படி தான் மூளை செத்துப் போகும்.


பெருவழுதியை யானை மீது ஏற்றி இருந்தார்கள். பெருவழுதி என்றால் வயதான கிழவன் என்று நினைக்காதீர்கள். குடும்ப பெயர். வயதென்னவோ இருபது சொச்சம் தான். ஆனாலும் அவன் கறுத்த‌ முகம் வெளுத்து போய் இருந்தது. ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட் எல்லாம் இல்லை. மரண பயம்.இனி தப்பிக்க வழி இல்லை. இப்படி கழுவில் ஏற வேண்டும்  என்பது விதி. குல சாபம். தமிழ் குலம்.


தாருவின் குரல் சங்கீதம் போல் இருக்கும். அவருக்கு மட்டும். இன்னைக்கு ஈவ்னிங். ரிலீஸ் பண்றேன். தாரு இப்படி அடிக்கடி ரிலீஸ் பண்ணுவது வழக்கம் தான். மம்மி ரிடர்ன்ஸ். நோ வொண்டர். கண்டிப்பா வந்துடு. என் புக் ரிலிசூக்கு தமிழ்நாடே திரண்டு வரும்னு டைம்ஸ் ஆஃப் பூடான்ல போட்ருக்காங்க. என்னைத் தவிர எழுத யார் இருக்கா. மூணு லட்சம் பேரு வரணும். அண்ணா சாலைல நிக்க இடம் இருக்கக்கூடாது. இருந்தா தமிழ் இலக்கியம் செத்துடுச்சு.மன்சூர் அலிகானுக்கு இப்பொழுதெல்லாம் வாய்ப்பே கிடைப்பதில்லை.


யானை மீது இருந்த கடுங்குண பெருவழுதியை பாகன் அங்குசத்தால் குத்தினான். பெருவழுதிக்கு முறைக்கவும் தெம்பு இருக்கவில்லை. பரிதாபம். பாகனின் முகத்தில் வெள்ளையாய் பற்கள். இப்பொழுதெல்லாம் யானை பயப்படுவதே இல்லை. அங்குசத்தை கூர் தேய்க்க வேண்டும். சொல்லிக் கொண்டே பெருவழுதியின் இடுப்புத் துணி விலக்கி தொடையில் மெல்ல மெல்ல குத்தினான். அங்குசம் ஒரு அரை இஞ்ச் போயிருக்கும். பெருவழுதி கால்கள் வழியே சிவப்பு நிறம் வழிந்தது.

நான் போன போது அரங்குக்கு பின்னால் நாலு பேர் எதையோ கலக்கிக் கொண்டிருந்தார்கள். டாஸ்மாக் வாசம். தாருவுக்கு டாஸ்மாக் பிடிக்காது. எல்லாம் ஃபாரீன் சரக்கு தான். அஜீத் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணாங்களாம். பீர் எல்லாம் மனுஷன் குடிப்பானா. அதான். ஒரு லிட்டர் சரக்கு. ஒரு வாளி தண்ணி. மிக்ஸ் பண்ணி கட் அவுட்டுக்கு அபிஷேகம் பண்ணப் போறோம். அட்வான்ஸ்ட் பின் நவீனத்துவம். அடுத்த வருடம் டிவி விளம்பரம். மஞ்சள் பையில் சிக்கன் பிரியாணி, ஓல்டு மங்க் ரம், ஊறுகாய்.இனி தமிழ் இலக்கிய வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.  மூணு லட்சம் பேரு. எப்படியும் ஒரு லட்சம் பேர் வந்துடுவாங்க. கரூரில் கொங்கு முன்னேற்ற கழக மாநாடு. முப்பது லட்சம் பேர் வருகிறார்களாம். மணல் ஓடும் அமரவாதி ப்ரிட்ஜ். கழக கண்மணிகள் கட்டியது. தாங்குமா என்று தெரியவில்லை.

கந்தவேலா டைரக்டர் காகத்தை ரிலீஸ் செய்தார். அப்படியே போய் இருக்கலாம். இந்த நாவல் ஒரு தேவிகா புத்தகம். இதை வீட்டில் வெளியில் கம்மாக் கரையில் என்று எங்குமே படிக்க முடியாது. அவர் வேறு எங்கு வைத்து படித்தார் என்று தெரியவில்லை. ரூம் போட்டு படித்திருப்பார் போல.  தாரு பெய்லீசும் ஷிவாஸ் ரீகலும் அடிக்காமலயே உற்சாகம்.தானாக‌ வந்து ஆடு மாட்டுகிறது.

பாகன் கடுங்குண பெருவழுதியை கழுவில் தூக்கி வைத்தான்.

வெளியில் வந்து இருட்டான இடத்தில் மறைந்து நின்று கொண்டேன். கொஞ்சமாய் வெளிச்சம். யாரும் என்னை பார்க்க முடியாது. காகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.பன்னிரண்டு வாழைப்பழம் இருந்தால் அது ஒரு சீப்பு. ஆறு என்றால் அரை சீப்பு. இப்பொழுதெல்லாம் யாரும் தமிழில் சொல்வதில்லை. அரை டஜன். தமிழ் தான் பிரச்சினை. இல்லாவிட்டால் எதற்கு அவரங்ஸேபை அவுரங்க சீப்பு என்று எழுதுகிறார்கள். இப்படி கேட்டால் கலா டீச்சர் துரத்தி விடும். ஹிஸ்டரி. அதனாலயே...............

========================

Monday 6 December 2010

நந்தலாலாவும் தரை டிக்கட்டும்

நான் படம் பார்ப்பதில்லை. பொய் போல தெரிந்தாலும் அது தான் உண்மை. நான் பொழுதுபோக்குகிறேன்.  யோசித்துப் பார்த்தால் இசை மழையில் நனையவோ இயக்கத்தை வியக்கவோ கமல்ஹாசனின் அசைவில் எது மார்லன் ப்ராண்டோ எது அல்பசினோ என்றோ எனக்கு தோணுவதே இல்லை. திருவிழாவில் தொலைந்த குழந்தை கொஞ்ச நேரம் குரங்காட்டம் பார்ப்பது தான் நான் செய்வது. திருப்பி படியுங்கள். திருவிழா போன குழந்தை அல்ல தொலைந்த குழந்தை. இது வரையில் பார்த்த படங்களில் மிகவும் பிடித்தது எங்கள் வீட்டு பிள்ளை. எம்ஜிஆர் நடித்தது தான். ரொம்ப பழசு என்பவர்களுக்கு விக்ரம் நடித்த சாமி. தேவையான துக்கங்கள் என்னிடமே உண்டு. திரையில் மீண்டும் பார்க்கும் மனநிலை இல்லை.ஒற்றை வார்த்தையில் சொன்னால் ஒன்னரை ரூபாய் டிக்கட் எடுத்து மணலை குவித்து உட்காரும் தரை டிக்கட்டு.


ஆனால், உலகத் திரைப்பட நிபுணர்களையும் தரைடிக்கட்டுகளையும் ஒருங்கிணக்கும் ஒற்றை புள்ளி உண்டு. அம்மா என்று சொல்லித் தொலைக்காதீர்கள். தமிழ்படம். அம்மாவே இல்லாதவனுக்கும் இருப்பது நட்பு. அம்மாவையும் அப்பனையும் வெட்டி ஜெயிலுக்கு சென்றவனுக்கு கூட ஏதாவது நட்பு இருந்து தான் தீரும். அவனை எவருமே நட்பாக நினைக்காவிட்டாலும் அவன் யாரையாவது நட்பாக நினைத்துக் கொண்டிருப்பான். 

எப்படி திட்டமிட்டு யாரையும் காதலிக்க முடியாதோ அப்படியே திட்டமிட்டு நட்பும் ஏற்படுத்த முடியாது. ஏதோ ஒரு கணத்தில் எதிர்பாராத நேரத்தில் தான் உண்மையான நட்புகள் ஏற்படுகின்றன. சிறிய ஓடையாக ஆரம்பித்து பெருநதியாக பிரவாகமெடுக்கும் நதியைப் போல. நந்தலாலா நட்பெனும் நதியின் ஓட்டம். நதிக்கே உரிய சுழிவுகள், தடைகள், பெருக்கெடுப்பு. 


அம்மாவை பார்ப்பதற்காக பள்ளியிலிருந்து ஓடி வரும் ஒரு சிறுவனுக்கும் அதே நோக்கத்துடன் மனநிலை தவறியவர்களுக்கான இடத்திலிருந்து தப்பி வரும் நடுத்தர வயது ஆளுக்கும் நட்பு. எங்கே என்றால் இருவரும் மூத்திரம் அடிக்க போகும் இடத்தில். யோசித்து பார்த்தால் என்னுடைய எல்லா நட்புகளும் இப்படி தற்செயலாக நிகழ்ந்தவை தான். உண்மையில் அப்பொழுது ஏற்படுவது நட்பு கூட அல்ல. ஒரு தற்செயலான நிகழ்வு. எந்த நதியும் பெருநதியாக பிறப்பதில்லை. 


சந்தேகத்துடனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்லும் முயற்சியுடனும் தொடரும் நட்பு போக போக பலமாகிக் கொண்டே போகிறது. கிளைநதிகள் போல இடையில் வந்து சேரும் மேலும் சில நட்புகள். 


ஒரு காட்சியில் மனநிலை தவறியவர் போல வரும் மிஸ்கினை பலர் சேர்ந்து அடிக்கிறார்கள். அப்பொழுது அந்த வழியாக வரும் பழைய நண்பர்களை கண்டவுடன் மிஸ்கினுக்கு வரும் பலம். நண்பனின் தோளைப் பிடித்துக் கொண்டு அவர் ஆடும் கொண்டாட்டம். அழகிய குறுங்கவிதை. அனுபவித்தவர்கள் பாக்கியவான்கள்.


மிஸ்கின், விபச்சாரி பாத்திரத்தில் வரும் ஸ்னிக்தா(?), சிறுவன் அகி ஒரு ட்ரக்கின் பின்னால் உட்கார்ந்து போய் கொண்டிருக்கிறார்கள். அகி உயிரைப் போல பாதுகாத்து வரும் அவன் அம்மாவின் படம் காற்றில் பறந்து போகிறது.மிஸ்கினை உலுக்க அந்த பாத்திரம் நல்ல உறக்கத்தில். ஸ்னிக்தா சத்தம் போட்டு ட்ரக்கை நிறுத்தி ஓடோடிப் போய் அந்த படத்தை எடுக்கிறார். அகி அதைப் பிடிங்கிக் கொண்டு ஓடுகிறான். அப்பொழுது ஸ்னிக்தாவின் முகம் காட்டும் உணர்ச்சிகள். In the end we remember not the words of our enemies but the silence of our friends. Martin Luther King.


லாரியின் ஹார்னை திருடி விட்டதாக மிஸ்கினை அடித்து நொறுக்கும் டிரைவர். மிஸ்கின் சொல்லும் ஒரே வரியில் அதிர்ந்து போய் அப்படியே உறையும் இடம். ஒரே ஒரு வசனம் கூட இல்லை. கடைசி வரை அந்த பாத்திரத்துக்கு வசனமே இல்லை. ஆனால் அந்த முகபாவங்கள். அந்த பாத்திரம் வரும் அத்தனை காட்சிகளும் உறைந்து போன இசை போல. 


சில நேரங்களில் நட்பின் வார்த்தைகள் வாள் போல. ஒற்றை அல்ல. பல வாட்கள் ஒரே நேரத்தில். மென்டல் என்று சொன்னதற்காக ஆட்டோ ட்ரைவரை அடித்து நொறுக்கும் மிஸ்கின், அதே வார்த்தையை சொல்லும் ஒரு ஆறு வயது பையனிடம் எதுவும் செய்ய முடியாமல் கதறும் இடம். நட்பு சுகம் மட்டுமல்ல, அது உயிர் வாதையும் கூட. உயிருடன் தோலை உரிக்கும் வாதை.


இந்த படத்தில் பல குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கு தெரிந்த முக்கியமான குறியீடு கடைசி காட்சியில் அம்மாவை மனநல விடுதியில் சேர்த்து விட்டு மிஸ்கின் வெளியே வருகிறார். அவர் உள்ளிருந்த இடம் இருட்டாகவும் வெளியே வருமிடம் வெளிச்சமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் இருளும் ஒளியுமே மிகப் பெரிய குறியீடு.நட்பெனும் பிரமாண்ட வெளிச்சம்.


சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் கவிதையின் சுகம் அதன் அனுபவமே.விளக்கம் அல்ல.பனிக் கொட்டும் நள்ளிரவில் கொஞ்சமான போதையுடன் விஸ்கியும் சிகரெட்டுமாக இப்படி ஒரு படம் பார்ப்பதும் கூட கவிதையின் கொண்டாட்டமே.கவிதை கலைமகள் என்று எவன் சொன்னான்?


நதி போல நகரும் படத்தில் பிரச்சினை என்றால் ஸ்னிக்தாவின் பாத்திரம் துருத்திக் கொண்டு தெரிகிறது. சிறுவன் அகி கடைசியில் ஸ்னிக்தாவை அம்மாவாக ஏற்க எந்த காரணமும் இல்லை. சில இடங்களில் இல்லை பல இடங்களில் இளையராஜா படுத்துகிறார். மெளனம் மிகப் பெரிய இசை. தமிழ்ப்பட சாபம் போல கடைசியில் வரும் காட்சிகள்.


இந்த படம் கிகுஜிரோவின் காப்பியா இல்லை இன்ஸ்பைரேஷனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எப்படி பார்த்தாலும் இது நிச்சயம் பார்க்க வேண்டிய படமே. இயக்குனர் மிஸ்கினை விட நடிகர் மிஸ்கின் வாழ்ந்து காட்டியிருக்கிறார். இயக்குனர் மிஸ்கினை பிடிக்காவிட்டாலும் நடிகர் மிஸ்கினுக்காக. 

இது காப்பியா ஒரிஜினலா என்ற விவாதத்தை நான் வேண்டுமென்றே விலக்குகிறேன். நான் இன்னும் கிகுஜிரோ பார்க்கவில்லை என்பதும் ஒரு காரணம். ஆனால், இந்த படம் காப்பியாக இருக்கும் பட்சத்தில் இயக்குனர் மிஸ்கினுக்கு என் வருத்தங்க‌ளையும் கண்டனங்களையும் பதிவு செய்கிறேன். எப்படி இருந்தாலும் நடிகர் மிஸ்கின் இயக்குனரை தாண்டிப் போய்விட்டார். அதற்காக, மிஸ்கின் ஐ லவ் யூ என்று சொல்லத் தோன்றுகிறது.

Tuesday 23 November 2010

பூனைகளின் கதை

மனைவியிடம் சண்டையிட்டு
தனித்தே புரண்டு படுத்த ஒரு பின்னிரவில்
என் பிணங்கள் மூடி தூர்ந்து போன என் கல்லறையின்
மண் விலக்கி வெளி வந்த அவன்
என் முகம் தொட்டு கதை சொல்ல ஆரம்பித்தான்.

கடவுள் கதை நிறைய உண்டு
காதல் கதை உனக்கே தெரியும்.
பாட்டி சொன்ன கதையல்ல
பார்க்கப் போகும் கதையும் அல்ல.

கடுவன் பூனை தாய்ப் பூனை
குட்டிப் பூனை
காமத்தில் கால்பரவாது செல்லும் பூனை
பல‌ திருட்டுப் பூனைகள்
திருடுவது பூனை குணம்

கருமமே கண்ணாய் சில பூனைகள்
கனவிலே சில பூனைகள்
எந்நேரமும் மீசை முறுக்கி சில பூனைகள்

வெள்ளை கறுப்பு பழுப்பு என்று பல நிறம்
எல்லாப் பூனையும் தினம் வரும்
தினம் போகும்.
வருமிடம் போகுமிடம் எனக்குத் தெரியாது
வந்து கொண்டே தான் இருக்கின்றன பூனைகள்

இப்படியே போனது சில நாட்கள்
அன்றைக்கு
அத்தனை பூனைகளையும்
தின்று செரித்து
வெறுமனே சோம்பிக் கிடந்தது அந்தப் பூனை.

எல்லாவற்றையும் தின்றேன்
இனி நீதான் மிச்சம்.
எழுந்து வந்தது என்னைக் கண்டு.

நீளமாய் கால்கள்
இரவால் செய்தது போல ஒரு நிறம்
பற்களும் கூட.
முன்பொரு முறை பார்த்திருக்கிறேன் எங்கோ
அதற்கு கண்ணே இல்லை.

வியர்த்திருந்த முகம் துடைத்து எழுந்தேன்
கதை சொன்னவன் காணவில்லை.
கையெட்டும் தூரத்தில்
மெல்லியதாய் கேட்டது
ஒரு பூனைக் குரல்.

Wednesday 17 November 2010

கலாச்சாரமும் சில கழிசடைகளும் (அ) இது தாண்டா விபச்சாரம்

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி. மண்ணே இல்லாத காலத்தில் தோன்றி என்ன மயிரை தின்றார்கள் என்று தெரியவில்லை. அது போய் தொலையட்டும்.  படி தாண்டா பத்தினி. இப்படி ஒரு சொல்லாடல் புனிதமான கலாச்சாரம் என்று இன்று பலரும் மயிரை தட்டிக் கொள்ளும் புடுங்கி கலாச்சாரத்தில் தான் இருக்கிறது. அது என்ன படி தாண்டா பத்தினி? அப்போ தாண்டி கடைக்கு போனா? படிக்க போனா? அவங்க எல்லாரும் விபச்சாரியா? இன்றைக்கு படிக்கவும் வேலைக்கும் போகாமல் இருப்பவர்கள் எத்தனை பேர்? அய்யோ எங்க கலாச்சாரம் புனித கலாச்சாரம் என்று ஊளையிடும் கும்பல் இந்த அளவுகோலை ஏற்குமா?


புருஷன் செத்துட்டா பொண்டாட்டி உடன்கட்டை ஏறிடணும். இல்லாட்டி அந்த பெண்ணின் தலையை மொட்டையடிச்சி வெள்ளை சேலை கொடுத்து இருட்டில் உட்கார வைத்ததும் இந்த கலாச்சாரம் தான். அப்படி கணவனை இழந்த பெண் எதிரில் வந்து விட்டால் முண்டச்சி மூஞ்சில முழிச்சா போற காரியம் வெளங்குமா என்று அசிங்கப்படுத்தியதும் இந்த புடுங்கி கலாச்சாரம் தான். கலாச்சாரம் கலாச்சாரம் என்று ஊளையிடும் பன்றி கூட்டம் இன்றைக்கு இதை சொன்னால் செருப்படி தான் விழும்.

ஒரு காலத்தில் ஊரெல்லாம் குடுமி.பின்னர் பாகவதர் க்ராப் தான் பாப்புலர். இன்றைக்கு மிலிட்டரி கட்டிங். கலாச்சாரம் உண்மையிலேயே மயிறு மாதிரி தான். மயிறு போலவே அதுவும் மாறிக் கொண்டே தான் இருக்கும். மொட்டை அடிப்பதோ கொண்டை வளர்ப்பதோ அவனவன் இஷ்டம். 

திருமணம் ஆயிரம் காலத்து பயிரோ இல்லை ஆறுமாசத்து மயிரோ ஆனால் அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கூட சில சமூகங்களில் தாய்மாமனுக்கு முதல் உரிமை என்று மணம் செய்வார்கள். சில சமூகங்களில் அது மிகவும் தவறான விஷயம். சில திருமணம் மூன்று நாள். சில ஒரு வேளையில் முடியும். காதல் திருமணம் செய்தால் ஆள் வைத்து வெட்டிப் போடுவது ஒரு கும்பல் என்றால் நல்லா இருந்தா சரி என்று வாழ்த்துபவர்கள் ஒரு விதம். 

இரண்டு பேருக்கு பிடித்து போனால் அதில் திருமணம் என்ற ஃபார்மாலிட்டி எதற்கு என்று வாழ்வது அவர்கள் விருப்பம். மனம் ஒத்து போகாமல் வேண்டா வெறுப்பாக குடித்தனம் நடத்துவதை விட லிவிங் டுகெதர் எந்த விதத்தில் மோசமாக போய்விட்டது?

பெண்கள் மேலுடை அணியக்கூடாது என்று வன்முறையாக அரை நிர்வாணமாக அலைய விட்டதும் இதே கழிசடை கலாச்சாரம் தான். பாட்டு கத்துக்கறதும் பவுடர் போடறதும் தேவடியா செய்றது என்று சொன்னதும் இதே கலாச்சாரம் தான். இதை மாற்ற முயன்ற போதும் இதே போன்று பல பன்றிகள் ஊளையிட்டு தான் இருக்கும். கல்யாணம் செய்வதோ செய்யாமல் சேர்ந்து வாழ்வதோ அவரவர் விருப்பம். அதெல்லாம் விபச்சாரம், ஆனால், நாங்கல்லாம் ரொம்ப கல்ச்சர்ட் என்று சொல்லும் கும்பல் தங்கள் வீட்டு பெண்கள் மேலுடை அணியக்கூடாது என்று சொல்லுமோ? தன் அம்மாவோ தங்கையோ பாட்டு பாடினால் அவர்களை விபச்சாரி என்று சொல்வார்கள் போல.

எந்த ஒரு கருத்துக்கும் எதிர்கருத்து உண்டு. சிலர் திருமணம் அவசியம் என்று நினைக்கிறார்கள். சிலர் மனம் ஒத்துப் போனால் திருமணம் அவசியமல்ல என்று நினைக்கிறார்கள். இதில் எந்த தவறுமில்லை. அது அவரவர் விருப்பம். ஆனால் கருத்து சொல்கிறேன் என்ற போர்வையில் வக்கிரம் பிடித்த பன்றிகள் லிவிங் டுகெதர் விபச்சாரம் என்றும் அதை ஆதரிப்பவர்கள் விபச்சாரிக்கு பிறந்தவர்கள் என்றும் தங்கள் வக்கிரத்தை வாந்தி எடுத்து ஊளையிடுகிறது. அப்படி பார்த்தால் காலையில் மணம் முடித்து அன்றே இரவில் மணவாழ்க்கையை ஆரம்பிக்கும் கலாச்சாரம் கூட்டிக் கொடுக்கும் கலாச்சாரம் என்று யாரேனும் சொல்லிவிடக்கூடும்.


அஞ்சு பவுன் குறையுது பைக் வாங்கி கொடுத்தா தான் தாலிக் கட்டுவேன்னு சில சொறி நாய்ங்க எழுந்து போகுதே அது தாண்டா விபச்சாரம். பிடிக்காத ஒருத்தனுக்கு விடாப்பிடியா கல்யாணம் பண்ணி வைக்கிறானுங்களே அது வற்புறுத்தி விபச்சாரம். விதவை பெண்ஷனுக்கு லஞ்சம் கேக்குறானே அது பட்டப்பகல் விபச்சாரம். என் கருத்துக்கு ஒத்துக்காட்டி நீ விபச்சாரிக்கு பொறந்தவன்னு எவனாவது சொல்றானே அவன் செய்றது தான் விபச்சாரம். 



லிவிங் டுகெதரை ஆதரிப்பவன் விபச்சாரிக்கு பிறந்தவன் என்றால் நானும் சொல்வேன்,நீ விருந்தாளிக்கு பிறந்தவன். என் வீடு விபச்சாரம் நடக்கும் வீடு என்றால் உன் வீடு கூட்டிக் கொடுக்கும் வீடு. என்னாலும் பேச முடியும்.


டிஸ்கி: இவ்விடம் வக்கிரம் பிடித்த நாய்களுக்கு நாய்களின் பாஷையிலும் சொறி சிரங்கு மனநோய் பன்றிகளுக்கு பன்றியின் பாஷையிலும் பதில் சொல்லப்படும்.மைனஸ் ஓட்டு போடுபவர்களைப் பற்றி உதிர்ந்த மயிரளவும் எனக்கு கவலையில்லை.

Monday 18 October 2010

எந்திரனும் கோவில்பட்டி முறுக்கும்

எனக்கு பரவை முனியம்மாவை பிடிக்கும். அவரை பார்க்கும் போதெல்லாம் என்னவோ என் பாட்டியை பார்ப்பது போல இருக்கிறது. ஏய் கெய்வி என்னா சமையல் பண்ற இன்னும் ரெண்டு இட்லி போடு என்றால் அது என் முதுகில் போடும். அடி வாங்கிய கதையெல்லாம் அப்புறம். இன்றைய ஸ்டேட்மெண்ட் எனக்கு பரவை முனியம்மாவை பிடிக்கும். அகிரா குரோசேவா தெரியும் ஹூ ஈஸ் திஸ் பர்வாய் மொனியம்மா என்பவர்கள் ப்ரவுசரை மூடிவிட்டு தம்மடிக்க போங்கள். சிலேவின் சுரங்கத்தில் ஒரு வாக் போகலாம். ஏய் சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி என்றெல்லாம் பாடியிருக்கிறது.

இந்த கதை எதுக்கு என்றால் நேற்றிலிருந்து எனக்கு பரவை முனியம்மாவை கொஞ்சம் கூட பிடிக்காமல் போய்விட்டது. அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்கிறான் என்றால் எனக்கு மட்டும் எவ்ளோ செலவானாலும் பரவால்ல என்று அடுத்தவர்கள் சூனியம் வைக்கிறார்கள். அவர்களை சொல்லியும் குற்றமில்லை. என் புத்தியை சொல்ல வேண்டும்.  ஒரு பாப்கார்னுக்கும் கறுப்பு காஃபிக்கும் ஆசைப்பட்டு எவனாவது எந்திரன் பார்ப்பானா?

ஒரு ரூபாய் அரிசிக்கும் வழியில்லை. ஓட்டுப் போடவும் காசு தர மாட்டேன் என்கிறார்கள். இதெல்லாம் இல்லாமல் எப்படி அய்யா ஒரு தமிழன் இருக்க முடியும். நான் தமிழனே இல்லை என்று சொன்னது போன மாசம். இது இந்த மாசம். நம்புங்கள். அதனால் தான் பாப்கார்னுக்கு ஆசைப்பட்டு கிளம்பி விட்டேன். கூட்டிப் போனவர்கள் நல்லவர்கள் தான்.பரம்பரையாக ஆட்டுக்கு மஞ்சத் தண்ணி தெளிப்பது தான் அவர்கள் வழக்கம். பாப்கார்ன், காஃபி எல்லாம் சரியாக செய்துவிட்டார்கள். வெட்டப் போகும் ஆடு மண்டையை ஆட்டினால் அவர்களும் தான் என்ன செய்வார்கள்.

குப்பனும் சுப்பனும் ஒரே மாதிரி இருப்பார்கள். ரெண்டு பேரும் நல்லவங்க தான். சுப்பனோட ஆளு சுப்பம்மாவை பார்த்ததும் குப்பனுக்கு கும்முன்னு கெளம்பிடுது லவ்ஸ். விட்டுக் கொடுத்துடுன்னு கேக்குறான். சுப்பன் விட்றா மாதிரி இல்லை. ரெண்டு பேருக்கும் ஜாரி மேட்டர்ல சண்டை வந்துடுது. சுப்பன் குப்பனை அடிச்சி பெண்டை கழட்டி குப்பையில போட்டுடறான். லவ்வு எவ்ளோ பெரிய மேட்டரு. மசுரு போனாலும் உசிரு போனாலும் லவ்வை விட்ற முடியுமா விட்டா அவன் தமிழனா அதனால குப்பன் குப்பையில இருந்து எந்திரிச்சி வந்துடறான். அவனுக்கு எல்ப்பு பண்ண சுப்பனை பிடிக்காத ஒரு ஆளு.

ஜங்க்கர் இந்தியாவின் ஆகப் பெரிய டைரக்டர். அவரு பத்து வருஷம் செட்டு போட்ட யோசிச்ச கதை. ஒலகத்துல இப்படி ஒரு படம் எங்கயுமே வந்ததில்லை. சொன்னது ரஜினியா இல்லை உலக ரஜினி ரசிக மன்ற தலைவர் திருக்குவளை மு கருணாநிதியான்னு தெரியலை. 

பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரின்னு எங்க பாட்டி சொல்லிருக்கு. அது அவங்க அம்மா என்ன சொன்னாலும் கேக்காதாம். அது வேற கதை. அப்புறம் சொல்றேன். அய்யா, நான் கேட்பதெல்லாம் ஒன்று தான். அறுபத்தாறு வயது ஆள் இருபத்தாறு வயது யூத்தா வர்றது ஓக்கே. ஆனா, அதுக்காக ஆறு வயது பையனோட ஜட்டியை போட்டுக்கிட்டு திரிஞ்சா என்ன சொல்றது? 

ராணி காமிக்ஸும் இரும்புக்கை மாயாவியும் நானே படிச்சிருக்கேன். எழுத்துக் கூட்டித் தான். குப்பன் சுப்பன் கதையையும் இரும்புக்கை மாயாவி ராணி காமிக்ஸ் கதையவும் மிக்ஸ் பண்ணுங்க. அதுல கொஞ்சமா சப்பை காமெடியை ஒரு ஸ்பூன் போடுங்க. அப்புறம் கூகிள் பண்ணி, பன்னி இல்லை பண்ணி பைட்டு, பிட்டு, டெரா, ஸீட்டா,கம்ப்யூட்டர் இதெல்லாம் சேருங்க. சேர்த்தாச்சா? என்னவோ ஒண்ணு மிஸ் ஆகுதுல்ல? ரைட்டு. உங்க வீட்ல எதுனா அட்டு ம்யூசிக் இருக்கா? அட்டு இல்லாட்டி பரவால்ல. கிச்சன்ல எலி, பன்னி, எருமை எதுனா ஓட விட்டு அதை ரெக்கார்ட் பண்ணுங்க. பண்ணியாச்சா? அதை யார்னா ஒரு ரிட்டயர்டு தமிழய்யா கிட்ட குடுத்து பாட்டு எழுத சொல்லுங்க. கவனமா இருங்க. பைட்டு, பிட்டு, ஃபைட்டு, சிட்டு, அட்டு, குட்டு, பேபி,ஸ்டார் பக்ஸ் காஃபின்னு செம்மொழில எழுதணும். இல்லாட்டி திருக்குவளை மு கருணாநிதி வரி விலக்கு தரமாட்டாரு. அவரு வீட்டு சொத்தா? எல்லாம் பேரனுங்க சொத்து. வாரி வழங்கிட முடியுமா?

எல்லாம் ரெடி. எதுனா ஒரு பேரனையும் ஒரு ஜங்க்கரையும் பிடிங்க. என்னது பேரனை தெரியாதா? நீங்கள்ல்லாம் உருப்பட வழியே இல்லை. அவ்ளோ பெரிய ஃபாமிலி. ஒருத்தரை கூடவா தெரியாது? ஒரு நூறு பேரு இருப்பாங்களே?

அவ்ளோ தான். உங்க கையில ஒரு எந்திரன் இருக்கான்.உள்ளூருக்கு ரஜினி ஓக்கே. உலக அளவுல மார்க்கெட் பண்ணனுமே? யாராவது கைய பிடிச்சி இழுத்தாக் கூட ஐஸ்க்ரீம் எனக்கு பிடிக்காதுன்னு சொல்ற மாதிரி ஒரு எக்ஸ்பிரஷன் காட்டணும். கரெக்டா பிடிக்கிறீங்க போங்க. அடச்சீ. கைய விடுங்க.ஆமா. ஐஸ்வர்யாவை புக் பண்ணுங்க. அவங்களுக்கும் நடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாம என்ன அவங்களை நடிக்கவா சொல்ல போறோம்? நான் குடிப்பது கோக்னு சொல்ற மாதிரி ரெண்டு டயலாக் சொல்லணும். நமக்கு அவங்க போறும். 

உங்களுக்கே தெரியாம நீங்க ஒரு பெரிய புரட்சி பண்ணிட்டீங்க. இது வரைக்கும் சிம்பு, சொம்பு, டி ராஜேந்தர் இவங்க தான் தாடி வளர்த்துக்கிட்டு எனக்கு அவ வேணும்னு வஜனம் சொல்லிட்டிருந்தாங்க. ஆனா இப்ப ஒரு ரோபோ சொல்லுது. எனக்கு சனா வேணும் அதென்னய்யா சனா? என்னவோ கெட்ட கனா. விடுங்கோ. வெள்ளைக் காரன் ஸ்டீம் கண்டுபிடிச்சி ரயில் விட்டான். தமிழன் அதே ஸ்டீமை வெச்சி இட்லி சுட்டான். என்ன இருந்தாலும் கல் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி. டாஸ்மாக்ல க்யூவில நிக்க வேண்டியதா இருக்கு. ரோபோ லவ் தான் பண்ணுதுன்னா ஜன்க்கர் அதுக்கும் மேல போறாரு. அரிமா அரிமா எனக்கு பின்னால சொறிம்மா சொரிம்மான்னு ட்ரீம்ல டூயட் வேற பாடுது. ஸ்டீமை வச்சி ட்ரைன் மட்டும் தான் விடணும்னு எவன் சொன்னான்? கம்ப்யூட்டர் கனவுல டூயட் பாடும்னு அசின் என்ன அசிமோவ் கூட நினைச்சதில்லை. ஒரே தாண்டு. இனிமே தமிழனுக்கு என்ன தெரியும்னு எவனாவது கேப்பான்? எந்திரனை பார்க்க சொல்லிடுவோம். ஒரு பய வாயை திறக்க மாட்டான். 

சரி, நாம மட்டுமா சிக்கினோம் நிறைய பேரு இருப்பாங்கன்னு தியேட்டர்ல எண்ணிப் பார்த்தா மொத்தம் முப்பத்தஞ்சி பேரு. பிரிட்டனில் அரங்கு நிறைந்த காட்சிகள். உண்மை செய்திகளை உருவாக்குவது உங்கள் சன் டிவி. சன் என்றால் தமிழ். தமிழுக்கு தலையும் கொடுப்பார் கருணாநிதி. அவர் தலை இல்லை. தினகரனில் யாராவது வேலை பார்க்கறீங்களா?

ரஜினி இமயமலைக்கு போய்ட்டாராம். அங்கயே இருந்தா அவருக்கு நல்லது. திரும்பி வந்து இன்னொரு சங்கர் படத்துல நடிச்சா அடுத்த வாய்ப்பு சங்கு மார்க் லுங்கிகள் ஜட்டிகள் விளம்பரம் தான். 

இப்படி ஒரு த்ராபையான படத்தை எடுக்க ஜன்க்கருக்கு ஐடியா கொடுத்தது சுஜாதா என்கிறார்கள். அவர் இல்லை என்பதால் வசதியாய் போயிற்று. எனக்கு என்னவோ இது பரவை முனியம்மாவின் ஐடியா என்று தான் தோன்றுகிறது. கோவில்பட்டி முறுக்கு அவனை குனிய வச்சி நொறுக்கு என்று பாடியது அவர் தானே? சந்தேகமிருந்தால் ஜிய்யாங் ஜிய்யாங் ஜினுக்கு அவனை புத்தூருக்கு அனுப்பு என்று அடுத்த வரி வேறு.

இருக்கட்டும். படுக்க வைத்து பத்து லாரியை ஏற்றியது போல எனக்கு வலிக்கிறது. நான் புத்தூருக்கு போய்விட்டு வந்து பரவை முனியம்மாவுக்கு கச்சேரியை வைத்துக் கொள்கிறேன்.

====================================

Thursday 14 October 2010

கள்ளி

உதடு கிழிந்து குருதி வழிய‌
கடித்து செல்லும் ஒட்டகங்கள்
திசை இல்லாத திசையில் கிளம்பி
மணல் போர்வை மூடும் காற்றின் இரவுகள்
தானும் நிழலும் தவிர தனியே
தினமும் புதிய முள்ளுடன்
வளர்ந்து கொண்டே இருக்கிறது கள்ளி.

Thursday 23 September 2010

ஆசை


உருவம் காட்டிய கண்ணாடி உடைத்து
சிதறிப் போன சில்லுகளை சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
ஏதேனும் ஒன்று காணாமல் போகும்.

=========================================

Monday 13 September 2010

சிலுவை

அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
புதிய ஏற்பாடு. மார்க்கு: அதிகாரம் 14 வசனம் 18
==================
ஏனென்று தெரியவில்லை. சில நாட்களாக உறக்கம் பிடிப்பதில்லை. விட்டு விட்டு கத்தும் தவளை போல தூக்கமும் விழிப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நான் புதர் நடுவே இருந்த அந்த கற்பாறையில் மெதுவே புரண்டு படுத்தேன். என்னை சுற்றிலும் கற்பாறைகளும் குற்றுச் செடிகளும் கடல் நடுவே துள்ளி எழும் மீன் கூட்டம் போல சூழ்ந்திருக்க மீட்பரால் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றவர்கள் கரை ஒதுங்கிய படகுகளை போல கால் விரித்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். மீட்பரை தொடர்ந்து வந்த நாள் முதலாய் இப்படி உறங்குவதே சுகமாக இருக்கிறது.

மீட்பரிடம் பேசி நாட்களாயிற்று. இப்பொழுதெல்லாம் அடிக்கடி தனிமையில் இருக்கிறார். நீண்ட நாளாய் புதைந்திருந்த திராட்சை ரசம் போல அவரிடம் இது வரை நான் காணாத ஒரு துக்கம் அடர்ந்திருக்கிறது. எப்பொழுதும் விழிப்பாயிருங்கள் என்று சொல்பவரிடம் என் தூக்கம் குறித்து கேள்வி எழுப்பவும் துணிவில்லை. நான் உறக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருக்க மண் துளைத்து எழும் கற்றாழை போல‌ தூரத்தே நீட்டியிருந்த மற்றொரு கற்பாறையிலிருந்து அந்த மனிதன் எழுந்து நின்றான். நான் அந்த இரவில் கண்களை கசக்கிக் கொண்டு உற்று பார்த்து அது கலிலியேனாகிய யூதாஸ் காரியேத்து என்று அடையாளம் கண்ட அதே நேரம் அவன் திருடனை போல சுற்றிலும் பார்த்து விட்டு மெதுவாக எங்கோ நடக்க ஆரம்பித்தான்.

எனக்கு விழிப்பாயிருங்கள் என்று மீட்பர் சொல்லியது நினைவில் வந்து அடி வயிற்றில் சூடாக எதுவோ கசிய ஆரம்பித்தது. ஆசிர்வதிக்கப்பட்டவர்களில் யூதாஸ் மேல் எனக்கு ஒரு போதும் முழு நம்பிக்கை இருந்தது இல்லை. மீட்பர் அறியாதது ஒன்றுமில்லை என்பதால் மீட்பரை கேள்வி கேக்கவும் முடியவில்லை. நான் மெதுவே எழுந்து நின்று பாறைகளுக்கும் குத்து செடிகளுக்கும் இடையில் பதுங்கி புல் ஊறும் பாம்பு போல அவனறியாது யூதாஸை தொடர ஆரம்பித்தேன்.
============================
நான் பார்த்த போது உயரமான கற்பாறையில் இஸ்ரவேலின் ராஜாவாக‌ மீட்பர் அமர்ந்திருக்க யூதாஸ் காரியேத்து அவர் முன்னே மண்டியிட்டு இருந்தான். நிலவொளி மீட்பரின் கண்ணில் பட்டு கருணை போல வழிய நான் இருவரின் பக்கவாட்டு முகமும் தெரியும் படி பாறைகளுக்கிடையில் ஒளிந்து கொண்டேன். மணலில் புதையும் ஒட்டகத்தின் கால்கள் போல என் மனம் ஏனோ தள்ளாட ஆரம்பித்தது.

பிதாவின் சித்தப்படி நடக்கும்.இன்றிலிருந்து மூன்றாம் நாள். மீட்பரின் குரல் மெதுவாக ஒலிக்க யூதாஸ் கற்பாறையில் முகம் தேய்த்து ரபீ ரபீ என்று அலற ஆரம்பித்தான். அவன் குரல் வாதை மிகுந்த கழுதையின் குரல்வளை நெறிக்கப்படுவது போல தீனமாக இருந்தது. அவன் நீண்ட நேரம் அழுது புலம்பி என்னைக் கைவிட்டீர் பிதாவேவென்று எழுந்து நிற்க நான் ஒளிந்திருந்த நிலையில் பின் நகர்ந்து அவன் முகம் பார்த்தேன். பாறை கிழித்து தோல் வ‌ழன்ற முகத்தில் நிலவொளியுடன் ரத்தம் ஒழுக அவன் தலை கலைந்து முள்முடி சூட்டப்பட்ட மனிதன் போல இருந்தான். அவன் தள்ளாட்டத்துடன் தன் இடத்துக்கு திரும்பாது எதிர் திசையில் நடக்க ஆரம்பிக்க நான் மீட்பரிடம் பேசத் துணிவின்றி யாரும் அறியாவண்ணம் என்னிடம் வந்து படுத்துக் கொண்டேன்.
===============
அன்றிலிருந்து மூன்றாம் நாள் நாங்கள் கெத்சமனே போய் இருக்கையில் மீட்பர் மிகுந்த துக்கமாயிருந்தார். எங்களை விடுத்து தனிமையில் போய் நீண்ட நேரம் ஜெபமாயிருந்தார். பின்னர் அவர் எங்களிடையே பேசிக் கொண்டிருக்கையில் பலர் புடை சூழ வந்த யூதாஸ் ரபீ ரபீ என்று மீட்பரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். அவனுடன் வந்தவர்கள் உடனடியாக மீட்பரை கைது செய்து அழைத்துப் போக மீட்பரின் சீடர்கள் யூதாஸ் காரியேத்துவை பலவாறாக தூஷிக்க ஆரம்பித்தார்கள்.

அவனோ அவர்களை விடுத்து மானமுள்ள‌ திருடன் போல‌ தலைகுனிந்து நடக்க ஆரம்பிக்க நான் கூட்டத்திலிருந்து விலகி அவனை பின் தொடர ஆரம்பித்தேன்.
================================
முதுகு பிறவிக் கூன் போல வளைந்து இஸ்ரவேலின் மிகப் பெரிய சிலுவையை சுமப்பவன் போல யூதாஸ் காரியேத்துவின் நடை தள்ளாடியது. கெத்சமனே நகரிலிருந்து விலகி வெகு தூரம் நடந்த அவன் அந்த காட்டுப்பகுதி வந்ததும் நின்றான். சுற்றிலும் பார்த்து விட்டு தன் பணப்பையிலிருந்து சில வெள்ளிக் காசுகளை எடுத்து வாயில் போட்டான். தோற்பையிலிருந்த நீரை குடித்து விட்டு அவன் மீண்டும் நடக்க ஆரம்பிக்க அவன் வாயில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அவன் மேலும் சிறிது தூரம் நடந்து வயிற்றை பிடித்துக் கொண்டு இரண்டாக மடிந்து மண்ணில் விழுந்தான்.

அவனறியாமல் பின் தொடர்ந்து கொண்டிருந்த நான் அவன் விழுந்ததும் அவனை நோக்கி ஓடினேன். அவன் வாயிலிருந்து வடிந்த ரத்தம் இஸ்ரவேலின் மண்ணை நனைக்க அவன் முகம் ரத்தத்தில் தோய்ந்திருக்க மண்ணில் புரண்டவாறே என் திசை நோக்கி கை நீட்டி கத்தினான். எனக்குத் தெரியும். உனக்கு தெரியும். எல்லாம் தெரியும்.

நான் யூதாஸ் காரியேத்து கண் சொருகி வாய் கோணி கைகள் வயிற்றை அழுத்திப் பிடித்து உடல் இரண்டாக மடிந்து வாயிலிருந்து ரத்தம் வடிய உயிர் துறப்பதை ஏதும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
========================

நான் ஓட்டமும் நடையுமாக கெத்சமனே திரும்பி வந்து மீட்பரின் மற்ற சீடர்கள் நின்ற கூட்டத்தில் கலந்து கொண்டேன். காவலர்கள் பேதுருவானவனிடம் மீட்பர் குறித்து விசாரிக்க அவன் அவரை ஒரு போதும் அறிகிலேன் என்று மறுதலித்தான். அப்பொழுது கோழிக் கூவிட அவன் முகம் பொத்தி பெரும் அழுகையுடன் கூட்டம் விலக்கி ஓட கூடியிருந்த மக்களில் சிலர் மீட்பரையும் சிலர் யூதாஸையும் தூஷிக்க ஆரம்பித்தார்கள்.

காவலர்களில் ஒருவன் என்னை கவனித்திருக்க வேண்டும். அவன் என்னை நோக்கி வந்து சவுக்கை நீட்டி கேட்டான். இந்த மக்கள் தூஷிப்பதை கேட்டாயா. அவர்களை நீ அறிவாயா.

நான் மறுதலிப்பாக தலையசைத்தேன். இம்மக்கள் யாரை தூஷணை செய்கிறார்கள், நான் எதுவும் அறிகிலேன்.

சொல்லும் போதே இனி எப்பொழுதும் நான் பேச முடியாது என்பதை உணர்ந்தேன். என் இதயம் திடீரென்று மிகவும் கனமாக இருந்தது.அந்த கனம் இனி ஒரு போதும் இறங்காது என்பது எனக்குத் தெரியும்.
==========================================
பின் குறிப்பு 1: இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்ததில் யூதாஸின் பங்கு பற்றி நிறைய விவாதம் இருக்கிறது. பிதாவின் சித்தம் படியே நடந்தது என்பது இயேசுவின் வாக்கு எனில் பழி ஏன் யூதாஸின் மேல் என்பது அதில் ஒரு முக்கிய பக்கம். ஆகவே இது முற்றிலும் என் சிந்தனை அல்ல. ஆனால், இப்படி ஒரு கோணத்தில் போர்ஹே எழுதியிருப்பதாக படித்ததும் இதை எழுதிப் பார்க்க தோன்றியது. நான் போர்ஹே எழுதியதை படித்ததில்லை என்பதால் இது காப்பி அல்ல.

பின் குறிப்பு 2: பல்வேறு எரிச்சல்களுக்கும் கசப்புகளுக்கும் மத்தியில் காலைப் பிடித்த முதலை போல கிறுக்கும் பழக்கம் தொடர்வதால் இது தமிழ்ப்பதிவுலகில் காஞ்சிரம் ஆகிக் கொண்டிருக்கும் ஒருவனின் நூற்றி ஒன்றாவது கிறுக்கல். எத்தனை காலம் தொடரும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

Friday 10 September 2010

என் பெயரில் ஒரு போலி : எச்சரிக்கை பதிவு

கலாச்சார காவலர்களும் குடி கெடுக்கும் நாட்டமைகளும் நிறைந்த இந்த பொய் நிகர் உலகத்தில் இது நடக்கும் என்று சில வாரங்களாக எதிர்பார்த்த விஷயம் நடந்தே விட்டது. அதுவும் பிரபல பதிவர் என்று பரப்பும் போதே இது எதிர்பார்த்த
விஷயம் தான்.

கையை பிடிச்சு இழுத்த கதை கிடைக்கவில்லையோ என்னவோ என்னைப் போலவே பெயருடன் ஒரு போலி கிளம்பி வந்திருக்கிறது. நான் "அது சரி" என்று பெயர் வைத்திருந்தால் அந்த போலி "Adhusari" என்று பெயருடன் திரிகிறது.

எப்படி குடைச்சல் கொடுக்கலாம் என்று எந்த தறுதலை ரூம் போட்டு யோசித்ததோ இதை எழுதும் இன்றைக்கு 10/09/2010 அன்று சுட சுட ஒரு போலி ப்ரஃபைலை ஏற்படுத்தி என் பெயரில் கமெண்ட் போட ஆரம்பித்திருக்கிறது.

அதனால் வேறு வழியின்றி எனது ஃப்ரஃபைல் பெயருடன் எனது ப்ரஃபைல் ஐ.டியும் இணைத்து " அது சரி(18185106603874041862)" என்ற பெயரில் மட்டுமே எனது பின்னூட்டங்கள் வரும். வேறு எந்த பெயரிலும் வந்தாலும் அது போலியின் பின்னூட்டம். அதை நிராகரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த போலி உயிரினத்தின் கமெண்டுக்கு நான் பொறுப்பல்ல.

ஆனால், இந்த ஐ.டியையும் இணைத்து போலி பெயரை உருவாக்குவது பெரிய காரியமல்ல. இந்த போலிகளை கண்டுபிடிக்க ஒரே வழி ஏற்கனவே டோண்டு ராகவன் அவர்கள் சொன்ன எலிக் குட்டி சோதனை தான். ப்ரஃபைல் பெயர் மீது மவுஸை வைத்தால் அது என் ப்ரஃபைலுக்கு செல்ல வேண்டும். எனது ப்ரஃபைலில் "முரண்தொடை, வருங்கால முதல்வர்" என்று இரண்டு தளங்கள் இருக்கும். இது தான் அது நான் இட்ட பின்னூட்டம் என்பதற்கு ஒரே அடையாளம்.

நான் அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை. அதனால் உங்கள் தளங்களில் என் பெயரில் பின்னூட்டம் வந்தால் தயவு செய்து அதை செக் செய்யுங்கள்.

இங்கே இணைத்திருப்பது எனது ப்ரஃபைலின் படம். பெரிதாக்க க்ளிக் செய்யவும்.


அடுத்து அந்த போலியின் ப்ரஃபைல்.
இதை பார்க்க இங்கே சுட்டவும். பெரிதாக்கி அந்த ப்ரஃபைல் என்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். போலியின் நோக்கம் புரியும். எட்டே முக்கால் மணிக்கு ப்ரஃபைலை உருவாக்கி உடனே ஓடோடிப் போய் நண்பர் கலகலப்ரியாவின் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறது. அடுத்து பதிவர் மதார் அவர்களின் பதிவிலும் ஒரு பின்னூட்டம். மதாரின் பதிவில் ஆன பின்னூட்டத்தின் காரணம் யூகிக்க கஷ்டமில்லை. நேற்று இரவு குருஜி சுந்தரின் பஸ்ஸில் வினவு இடுகையில் எப்படி அவரது பெயரை இழுத்தார்கள் என்று கேள்வி கேட்டதன் பலன். அந்த வினோத உயிரி இதை கவனித்து மதாரின் பதிவில் போய் என் பெயரில் பின்னூட்டம் இட்டிருக்கிறது. (இதை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். கூகிள் பஸ்ஸிலும் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக அறிமுகமே இல்லாத நபர்களை தவிர்க்கலாம். இது வேண்டுகோள் மட்டுமே.)

பொய் நிகர் உலகத்தில் போலி உயிரினங்கள் பெருகிவிட்டது. இது போன்ற உயிரினங்களை கண்டு நான் சொல்வதை சொல்லாமல் நிறுத்த போவதில்லை என்றாலும் இந்த உயிரிகளை கண்டு கடும் அருவெறுப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.


==============================


Tuesday 31 August 2010

பம்பரக்கண்ணு..பச்சமொளகா...இஞ்சி மரப்பா....இனிக்க வச்சா... (அ) அய்யாங்...ட்டொய்ங்..4

நம்பினால் நம்புங்கள் நம்பாவிட்டால் நாசமாய் போங்கள். எனக்கும் பாமா விஜயத்துக்கும் கொஞ்சம் கூட ராசியில்லை.பின்னர் என்ன? கலாநிதி மாறன் வழங்கும் சிங்கம் தயாநிதி மாறன் வழங்கும் எந்திரன் எல்லா இடத்திலும் மாஃபியா ப்ரதர்ஸ் இல்லை மாறன் பிரதர்சை பார்த்து கடுப்பாகி பாமா விஜயம் பார்க்க ஆரம்பித்தால் அதையும் நான் கண்டுபிடிக்கவில்லை. டோண்டு ராகவனின் சமீபத்திய பதிவில் லிங்க் இருந்தது. சரி என்று பார்க்க ஆரம்பித்தால் சனியன் முடிய மாட்டேன் என்கிறது. இரண்டு நாட்களாக பார்த்து இன்று முடித்து விடலாம் என்றால் எழவு இன்றைக்கும் பார்க்க முடியாது போலிருக்கிறது. மூன்று கணவன்மார்களில் பாமாவுக்கு யாருடன் தொடர்பு என்று இன்றைக்கும் தெரிய போவதில்லை. ஒரு ஏழை பிச்சைக்கார மொக்கை பதிவனுக்கு தான் எத்தனை பிரச்சினைகள்.

என்ன கேடு என்று கேட்காதீர்கள் அய்யா. சுந்தர்ஜி பஸ்ஸை பார்த்து அய் பஸ்ஸு நல்லாருக்கு என்று சொன்னவனை ஏறு ஏறு என்று வினவு பஸ்ஸில் அடித்து ஏற்றியிருக்கிறார்கள். அதுவும் பிரபல பதிவர் என்று. எனக்கே தெரியாமல் நான் எப்பொழுது பிரபல‌மாகி தொலைத்தேன் என்று தெரியவில்லை. சரி போய்த் தொலையட்டும் சாருவே பிரபலமாக சிங்கிள் பாட்டில் குத்தாட்டம் போடும் போது மரண மொக்கையன் ஆன எனக்கு என்ன‌ பிரபலமானால் நல்லது தான். நாலு காசு பார்க்கலாம் என்றால் இந்த மெய்நிகர் உலகில் பிரபலமாகி என்ன செய்து தொலைப்பது என்று தெரியவில்லை. சிங்கிள் பாட்டில் ஆட சாருவுக்கு தொடர்ந்து சான்ஸ் கிடைக்குமா என்று கவலையாக இருக்கிறது.

தமிழ்மணத்தில் மகுடம் என்று ஒன்று கொடுக்கிறார்கள். மண் குடம் கொடுத்தாலாவது சுண்டக்கஞ்சி காய்ச்சலாம். மகுடத்தை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே மெய் நிகர் உலகில் பிரபலமாகி விட்டேனாம்.மெய் உலகத்தில் பிரபலாமானால் என் மெய்யை காட்டி எழவு மெய் நிகர் உலகத்தில் படிப்பவர்களுக்கு தமிழ் வேறு தட்டுப்பாடு. மெய் என்றால் பாடி. அதாவது உடம்பு. என்ன சொன்னேன்? மெய் உலகில் பிரபலமானால் என் மெய்யை காட்டி ஏதாவது விளம்பரத்தில் வந்து கும்பி வளர்க்கலாம். மெய் நிகர் உலகத்தில் பிரபலமாகி என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. சரவணா ஸ்டோர்ஸில் ஜட்டி கூட வாங்க முடியாது. அது என்ன எப்ப பார்த்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் ஜட்டி என்று கேட்கிறார்கள். உலகத்திலேயே தமிழ்நாட்டில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸில் தான் ஜட்டி விலை மலிவு என்று கருணாநிதி ஆதாரத்துடன் அறிக்கை விட்டிருக்கிறார். படித்து தொலையுங்கள். எல்லாத்தையும் மொக்கை பதிவனே சொல்ல முடியாது. இதில் நான் மொக்கையா சாதா மொக்கையா என்று வேறு கேள்வி இருக்கிறது.ஸ்பெஷல் மொக்கை இல்லை. அது தெரியும்.

அது என்னய்யா மெய் நிகர் உலகம்? இங்கு என்ன மெய்யாக இருக்கிறது? ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று எழுதுகிறார்கள். ஊருக்குள் போனால் எல்லா தெருவிலும் ஜாதி சங்கம் தான் இருக்கிறது. சில ஊர்களில் இன்னும் விசேஷம். சங்கத் தெரு என்றே வைத்திருக்கிறார்கள். எல்லா ஜாதிக்கும் ஒரு கட்டிடம். ஒரே தெருவில். மெய் நிகர் உலகில் எந்திரனுக்கு மாபெரும் எதிர்ப்பு காட்டுகிறார்கள். மெய் உலகத்திலோ பாடல் வந்த அன்றே பத்து லட்சம் சி.டி. விக்கிறார்கள். சிங்கம் மொக்கை என்றார்கள். அது என்னடாவென்றால் சூப்பர் ஹிட்டாக போகிறது. விஜய் படம் மொக்கை என்று எழுதி விட்டு முதல் ஆளாக பார்க்க போகிறார்கள். கருணாநிதி அந்தோ கதி என்றார்கள். அவரானால் வாலிப வயோதிக அன்பர்களுக்கு சவால் விடுவது போல மானாட மயிலாட உளியின் ஓசை என்று இம்சை செய்கிறார்.

பெண் உரிமைக்கு கொடி பிடிக்கிறார்கள். ஆனால் சோவியத் யூனியனிலோ இல்லை சைனாவிலோ எந்த பெண்ணாவது ஜனாதிபதியை விடுங்கள் பொலிட்பீரோ மெம்பராக இருப்பதாக கூட தெரியவில்லை. கம்யூனிஸ்டுகள் எத்தனை வருடம் சோவியத் யூனியனை ஆண்டார்கள்? எத்தனை வருடமாக சைனாவை ஆள்கிறார்கள். அத்தனை வருடத்திலும் தகுதியாக ஒரு பெண் கூடவா கிடைக்கவில்லை? இது மெய் உலகமா, மெய் நிகர் உலகமா இல்லை பொய் உலகமா. என்ன கருமாந்திரம். வர வர வோட்கா அடித்தால் ஒரு மயிறும் ஏற மாட்டேன் என்கிறது. இல்லாவிட்டால் இப்படி கேள்வி வருமா.மாயா மாயா எல்லாம் மாயா என்று ரஜினிகாந்த் சொன்னால் மனிஷா கொய்ராலா ரொம்ப கிழவியாகிட்டா என்கிறார்கள். வேண்டுமானால் பொய் நிகர் உலகம் என்று சொல்லுங்கள். எல்லாம் மாயா. கேரளா போனால் கிடைப்பது கட்டஞ்சாயா. மொக்கை கவிஞன் என்று ப்ரூவ் பண்ணியாக வேண்டும். வேறு என்ன.

பொய் நிகர் உலகத்தில் என்னவோ செய்கிறார்கள். செய்தால் எனக்கென்ன? எனக்கு மெய் தான் முக்கியம். பாடியை சொல்லவில்லை. மெய் உலகத்தை சொல்கிறேன்.வினவு சொல்கிறார். பெரிய கட்சி சிறிய கட்சி எதை வைத்து அளப்பது. குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் வரும் ஆட்களை வைத்து சுந்தர் அளப்பாரா என்று கேள்வி வேறு. அய்யா, சுந்தர் எப்படி அளப்பார் என்று எனக்கு தெரியாது. ஆனால், மொக்கை பதிவன் எப்படி அளப்பான் என்றால் அந்த கட்சி ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்று தான் அளப்பான். பாதிப்பு என்றால் பொய்நிகர் வாழ் தமிழர்களுக்கு புரிந்து தொலைக்காது என்பதால் இம்பாக்ட். ஒரு கட்சியின் இம்பாக்ட்டை வைத்து தான் அது பெரிய கட்சியா சிறிய கட்சியா இல்லை லெட்டர் பேடு கட்சியா என்று அளப்பது. நீங்கள் ஒட்டு மொத்த சமூகத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். நான் எதுவும் சொல்லவில்லை. நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். நல்லதோ கெட்டதோ போலி திராவிட குடும்ப கட்சிகளும் தலைவர் சூழ் காங்கிரஸ் கட்சியும் கடப்பாறை பிஜேபியும் ஏற்படுத்தும் பாதிப்பில் சொல்லிக் கொள்ளும் சதவீதமாக கூட நீங்கள் ஏற்படுத்துவதில்லை. அய், நாங்க சிதம்பரத்துல தமிழ் ஓத வைச்சோம் மூணு பேருக்கு ஜாதி மறுப்பு திருமணம் செஞ்சி வைச்சோம் என்று சொல்வதெல்லாம் நல்லது தான். ஆனால் உத்தப்புரமும் திண்ணியமும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இங்கு போனால் வேறு எங்காவது இருக்கும்.

சூர மொக்கை பதிவன் சொன்னால் என்ன சூத்தை காட்டினால் என்ன என்று நினைக்காதீர்கள். எனக்கு பாராளுமன்றம் என்பதே உங்கள் வழியாக தான் தெரியும். பாராளுமன்றம் பன்றித் தொழுவம் நக்சல் பாரி பாதையே நமது பாதை என்று துண்டு பிரசுரம் விட்டது மக இகவா இல்லை இடது/வலது/போலி/ மார்க்சிய/லெனிய/மாவோயிஸ்ட் அமைப்புகளா? சரி யார் விட்டால் என்ன எனக்கு பாராளுமன்றம் என்பதை விட பன்றித் தொழுவம் எப்படி இருக்கும் என்றே பார்க்கத் தோன்றியது. இதை பார்க்கும் போது நான் ஐந்தாம் கிளாஸ் தான் படித்தேன். கட் அடித்து விட்டு தியேட்டருக்கு போனால் அங்கே சுவற்றில் எழுதி இருந்தது. நான் அஞ்சாங்கிளாஸ் முடித்து இருபது வருடம் ஆகப் போகிறது. இன்னமும் பாராளுமன்றம் இருக்கிறது. அந்த‌ தியேட்டரும் இருக்கிறது. மயிராண்டிகள் என்னை அன்றைக்கு உள்ளே விடவில்லை என்பது வேறு கதை. அப்புறம் சொல்கிறேன்.

பச்சை மிளகாயா பூசணிக்காயா என்றால் சிவப்பு மிளகாய்க்கு என்னாயிற்று. சரி விடுங்கள். அது சிவப்பு மிளகாய் விற்றவர்கள் பிரச்சினை. நமக்கு என்ன. பச்சை மிளகாய் பொய் நிகர் உலகத்தில் இல்லாது மெய் உலகத்தில் இருந்தால் உபயோகம் தான். ரசம் வைக்கலாம். ஆனால் அய் அழகா இருக்கே என்று கண்ணில் தேய்த்தால் அப்புறம் தெரியும் சேதி. விருப்பமிருப்பவர்கள் உங்கள் கண்ணில் தேய்த்துக் கொள்ளுங்கள். என் கண்ணில் தேய்த்து தொலைக்காதீர்கள். நான் கெட்ட வார்த்தை பேசி நீங்கள் கேட்டதில்லை.

நாக்கூசாமல் சொல்கிறார்கள். கூச்சப்பட்டு எழுதுவதில்லையாம். அப்படி எழுதாதவர்கள் மொக்கை பதிவர்களாம். அய்யா புரட்சி போராளிகளே நீங்கள் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாக சொன்ன பதிவை எடுத்துக் கொண்டு ஓடி வந்த அல்லக்கைகள் என்ன செய்தார்கள் என்று தெரியுமா? மேல் கீழ் வாய் மூடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் யாருக்காவது புரிகிறதா? மேல் வாய் எனக்கும் புரிகிறது. அது என்ன கீழ் வாய்? நான் கேட்கவில்லை. பொய் நிகர் உலகத்தின் புரட்சி போராளிகள் முன்பு எழுதிய வரிகள் தான். மாவோவின் அபார புரட்சி பற்றி நான் எழுதினால் அசிங்கமாக படம் போடுகிறார்கள். இந்த இடுகையை பெண்களும் படித்து தொலைக்கலாம் என்பதால் அந்த படம் இங்கு வராது. சுருக்கமாக சொன்னால் அந்த படத்தின் அர்த்தம் Cock Suckers. இங்கிலீஷ் தெரியாதவர்கள் யாரிடமும் கேட்டுத் தொலைக்காதீர்கள். இது தான் இவர்களின் புரட்சி. என்ன சொன்னான் என்பதை விடு. சொல்பவனின் கோமணத்தை பிடுங்கு.அம்மணமாக்கு. வாழ்க கொள்கை. வளர்க புரட்சி. எல்லாரும் புரட்சி செய்யுங்கள்.

பொய் நிகர் உலகத்திலேயே இது தான் இவர்களின் பச்சை மிளகாய். அப்படியானால் மெய் உலகத்தில் எப்படி இருக்கும்? புரட்சியை கேள்வி கேட்பவன் நடுத்தெருவில் அம்மணமாக்க படலாம். அது மக்கள் விரோத சிந்தனை இல்லையா என்று கேட்காதீர்கள். அது மக்களுக்கான என்டர்டெயின்மெண்ட். சீசரின் ரோமில் க்ளாடியேட்டர்கள் இருந்தார்கள்.

இதை எழுதியதற்காக நாளை நான் அம்மணமாக இருக்கும் படம் வரலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. பாத்ரூமில் குளிக்கும் போது கூட அம்மணமாக இருக்க முடியவில்லை என்றால் நான் பேசாமல் ஏதேனும் கம்யூனிஸ்ட் நாட்டுக்கே குடியேறி விடலாம். வேறு என்னதான் செய்து தொலைப்பது.

இத்தனை எழுதிய பின்னரும் அது என்ன பச்சை மொளகாய் இஞ்சி மொரப்பா என்று எழவெடுப்பவர்கள் கையில் நிறைய காசிருந்தால் டென், டவ்னிங் ஸ்ட்ரீட் வரவும். அடுத்த மாதம் தேதி தருகிறேன்.இப்பொழுது நான் பாமா விஜயம் பார்க்க வேண்டும். எனக்கு நாகேஷ் மேல் தான் சந்தேகம்.அவருடன் தான் பாமாவுக்கு தொடர்பிருக்க வேண்டும். எதற்கும் முழுதாய் பார்த்துவிட்டு நாளை சொல்கிறேன்.

பாமா விஜயம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த இணைப்பை சொடுக்கலாம். மேஜர் சுந்தர்ராஜன், நடிகர் கார்த்திக்கின் அப்பா முத்துராமன், நாகேஷ், பாலையா நடித்தது.படம் மிக நீளமாக இருந்தாலும் விஜய் படங்களை விட பெட்டர். இணைப்புக்கு நன்றி சொல்ல விரும்புபவர்கள் டோண்டு ராகவன் அவர்களுக்கு சொல்லவும்.

====================

Thursday 19 August 2010

புரட்சி செய்வது எப்படி (அ) அய்யாங்...டொய்ங்.. 3

இனிமேல் புரட்சியைப் பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். பொலிட்பீரோவை கூட்டி எடுத்த இறுதி முடிவு. பின்னர் என்ன ஐயா? மாவோவின் புரட்சி பற்றி எழுதினாலும் எழுதினேன் புரட்சின்னா என்ன, எப்படி புரட்சி செய்வது என்று துளைத்து எடுக்கிறார்கள். மொபைல் ஃபோனை ஆஃப் பண்ணி வைப்பது எனக்கு பிடிக்காது. கால் மேல் கால் போட்டால் அந்த காலை சொல்லவில்லை, என்ன செய்வது? வேறு வழியில்லாமல் ஆஃப் செய்து விட்டேன்.

புரட்சி பற்றி என்னை எழுத தூண்டியதே முகிலன் தான். சரி அவர் ஏதாவது செய்வார் என்று பார்த்தால் புரட்சிக்கு அவர் கொடுக்கும் விளக்கத்தை ஏற்காமல் அவரை மிடில் கிளாஸ் முகிலன் என்று சொல்லிவிட்டார்கள். அதுவும் கூட பெரிய ஆச்சரியம் இல்லை. கம்யூனிஸ்டுகள் சுயமாக யோசித்து லெனின் சொன்னதை தவிர வேறு எதையும் ஏற்க மாட்டார்கள்.

சரி போய்த் தொலையட்டும், ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் கடன் வாங்கி எழுதுபவன் இதை எழுத மாட்டேனா? எழுதித் தொலைக்கலாம் என்றால் புரட்சி எங்கு கிடைக்கும் என்று கேட்கிறார்கள். அய்யா அது என்ன கத்தரிக்காயா வெண்டைக்காயா இல்லை மலிவு விலையில் விற்க சரவணா ஸ்டோர்ஸ் ஜட்டியா? புரட்சி ஐயா புரட்சி. அன்னம்மா கிழவி மீனு மீனு என்று விற்றதை போல‌ இப்பொழுதெல்லாம் இணையத்தில் புரட்சி புரட்சி என்று கூவிக் கூவி விக்கிறார்கள்.சில மண்டபங்களில் கூட விற்பதாக கேள்வி. எனக்கு இதில் பெரிய பிரச்சினை இருக்கிறது. இணைய புரட்சிகளில் எது போலிப் புரட்சி எது போளிப் புரட்சி என்று ஒரு எழவும் தெரியவில்லை. அதையெல்லாம் நம்பி ஏமாந்து போய் அப்புறம் கமிஷனர் ஆஃபிஸில் க்யூவில் நின்று தொலைக்காதீர்கள்.

புரட்சி எப்படி இருக்கும் என்றால் கொஞ்சம் உருளைக் கிழங்கு சைஸில் ஆனால் சிவப்பாக இருக்கும். சக்கரை வள்ளிக் கிழங்கை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள். அய்யா அது ஸ்வீட் பொட்டட்டோ. சிவப்பாக இருப்பது ஸ்வீட்டாம். அறிவு உள்ளவர்கள் வெள்ளைக்காரனின் வர்க்க விரோத போக்கை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். இல்லை, புரட்சி இன்னும் நல்ல சிவப்பாக இருக்கும் என்றால் அப்ப பீட்ருட்டு என்கிறாள் லூஸி. எங்கு போய் முட்டிக் கொள்ள?

இப்படி புரட்சியை கண்டுபிடிப்பதே பெரும் பிரச்சினை என்பதால் வாங்கப் போகும் போது ஏற்கனவே புரட்சி செய்தவருடன் போவது நல்லது. அதுவும் கூட்டுப் புரட்சி செய்தவராய் இருந்தால் இன்னும் உத்தமம். அது என்ன கூட்டு புரட்சி.எல்லா எழவையும் நானே சொல்லித் தொலைக்கிறேன். பொறுங்கள். புரட்சி செய்ய பொறுமை அவசியம். கம்யூனிஸ்டுகளை பாருங்கள். புரட்சி வருது புரட்சி வருது என்று எத்தனை காலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் போன இடமெல்லாம் வறட்சி தான் வந்தது என்றாலும் அவர்களே பொறுமையாக இருக்கும் போது உங்களுக்கு என்ன?

புரட்சியை கொண்டு வந்தால் மட்டும் போதாது.அதை செய்வதில் தான் எல்லாமே இருக்கிறது. முதலில் புரட்சியை நீள வாக்கில் கத்தரிக்காயை போல அரிந்து கொள்ளுங்கள். நல்ல உயர்தர சிவப்பு ஒயின் எடுத்து அதில் தடவுங்கள். ஃப்ரெஞ்ச் ஒயினோ சிலே ஒயினாகவோ இருப்பது உத்தமம். ஏழைகளாக இருப்பவர்களும் தமிழ்நாட்டில் இருப்பவர்களும் டாஸ்மாக் சரக்கில் ஊற வைக்கலாம். சுவை கொஞ்சம் மட்டம் தான். ஆனால் தமிழ்நாட்டில் இந்த அளவு புரட்சி செய்வதே பெரிய விஷயம் என்பதால் ‍பரவாயில்லை. அதற்காக வெள்ளை ஒயின் சேர்ப்பது வர்க்க விரோத மனப்பான்மை. அப்படி செய்பவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்.

புரட்சி ஒரு பக்கம் ஊறும் போது ஒரு பெரிய வெங்காயம் ஆமாம் பெரியார் சொன்ன அதே வெங்காயம் தான். வெங்காயத்தை கண்டுபிடித்ததே பெரியார் தான் என்று தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை கெடுக்க நான் தயாரில்லை. பெரியாரையும் நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். இல்லை வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளுங்கள். எட்டு பச்சை மிளகாய், கொஞ்சம் இஞ்சி, ஆறு பல் பூண்டு, சோம்பு, சீரகம், கொஞ்சம் வறுத்த வெந்தயம், ஆந்திரா குண்டு மிளகாய் பதினெட்டு எல்லாம் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

எல்லாம் அரைத்த பின், ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை வதக்கி அது வதங்கும் போதே ஒரு கொத்து கறுவேப்பிலையும் சேருங்கள். நன்றாக வதங்கியதும் புரட்சி ஊறிக் கொண்டிருக்கும் சிவப்பு ஒயினை இதில் கொட்டி அப்படியே மசாலா சேர்த்து வெட்டி வைத்த புரட்சியையும் சேர்த்து நன்றாக தளதளவென்று சிவப்பாக வரும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், அவ்வளவு தான் ஐயா. நீங்கள் புரட்சி செய்து விட்டீர்கள். இதையே ஏழைகளின் கல்யாணத்திலோ அம்மனுக்கு ஆடி மாசம் கூழ் ஊத்தும் போதோ செய்தால் அது கூட்டுப் புரட்சி.

புரட்சி செய்வது எப்படி என்று நான் சொன்னால் அதுல கோழிக்கறி போட்டா சூப்பரா இருக்கும் என்கிறாள் ஜெயந்தி. அய்யா, புரட்சி செய்வதே கோழிக்கறி வாங்க முடியாத ஏழைகளுக்காக‌ தான். இதில் கோழி சேர்க்கலாமா என்று கொழுப்பெடுத்தவன் தான் சொல்வான். புரட்சி காலையில் பூரிக்கு நன்றாக இருக்கும். பூரி செய்ய முடியாது புரட்சி மட்டும் செய்பவர்கள் அதை மட்டுமே கூட தின்னலாம். அதிகம் போனால் பின்பக்கம் புடுங்கி விடும் என்பதால் கொஞ்சமாக தின்பது நலம்.

நான் இப்படி மாய்ந்து மாய்ந்து புரட்சி செய்வது பற்றி எழுதினால் பார்ப்பானீய ஆணாதிக்க தொழிலாளர் விரோத தேசிய இனங்களை ஒடுக்கிய கஸின் கோயம்பத்தூரில் இருந்து போன் செய்து எந்திரன் பாட்டு கேட்டியா ச்சும்மா அதிருதுல்ல என்கிறான். எந்திரனை எதிர்த்து வெடித்திருக்கும் ஒரு மாபெரும் புரட்சி பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த வர்க்க விரோதிகளை என்ன செய்யலாம்?

Wednesday 18 August 2010

எந்திரனும் ஏழைப் பங்காளன்களும் (அ) அய்யாங்...டொய்ங்.. 2

நாலு நாள் ஊரில் இல்லாமல் திரும்பி வந்து பார்த்தால் எந்திரனை எதிர்த்து இணையத்தில் புரட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். ஒரு வேளை படம் ரிலீஸ் ஆகிவிட்டதோ என்று தேடிப் பார்த்தால் ஒன்றும் இல்லை. பொரச்சி வருகுது பொரச்சி வருகுது என்று ஏழைப் பங்காளர்கள் அட்வான்ஸாகவே ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் மீதும் தவறில்லை. அவர்களும் எவ்வளவு நாள் தான் காத்திருப்பார்கள்?

இதைச் சொன்னால் ஆமா நான் கூட ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கேன், சிவாஜி வந்து ரெண்டு வருஷம் ஆச்சு என்கிறார் முகிலன். அய்யா, நான் அதைச் சொல்லவில்லை. ஒரிஜினலாக ஒரு புரட்சி வரப் போகுது என்று கம்யூனிஸ்டுகள் ரொம்ப நாளாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தோழர் பிரகாஷ் காரத் அப்படித் தான் சொல்லியிருக்கிறார். அதெப்படி சொல்லலாம் என்று அவர் மீது பாய்ந்து தொலைக்கிறார்கள் ஆதிக்க வாதிகள். அவர் சொல்வதில் தவறென்ன? அவர் என்ன தானாகவா சொல்கிறார்? அவருக்கு முந்தி இருந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித் என்ற தோழர் அதையே தான் சொல்லியிருக்கிறார். அவரும் கூட ஒரிஜினல் இல்லை. மாவோ சொன்னதாக அவர் சொன்னார். மாவோ லெனின் சொன்னதை சொன்னார். லெனின் ஜார் மன்னரின் கடைசி குழந்தை வரை கொன்று மனித நேயத்தை நிலை நாட்டிய பின் புரட்சி வென்றது என்று அறிவித்து விட்டார்.

அதெப்படி குழந்தையை சுட்டுக் கொன்று விட்டு மனித நேயம் என்று கேட்கிறார்கள் பாசிஸ்டுகள்.லெனின் சொன்னதை கேள்வி கேப்பவனுக்கு சுய அறிவு இல்லை. மார்க்ஸ் என்ன சொல்லியிருக்கிறார்? மாவோ என்ன செய்தார்? இது எதுவும் தெரியாமல் ஓசியில் ப்ளாக்கும் ஓட்டை கம்ப்யூட்டரும் இருக்கிறது என்று வாதாட கிளம்பி விடுகிறார்கள்.

சொந்தமாக சிந்திப்பவர்கள் மாவோ சொன்னதை ஏற்று நடப்பார்கள். செய்த‌தை திரும்பி செய்து தங்கள் தெருவில் புரட்சி புரிவார்கள். அப்படி மாவோ என்ன செய்து விட்டார் என்று கேவலமாக பேசுகிறார்கள்.

மாவோ மக்களுக்காக உயிரை கொடுத்துப் போராடியவர் என்று நான் சொன்னால் ஆமா, மக்கள் உயிரைத் தானே என்று நக்கல் செய்கிறார்கள். மாவோ தன் உயிர் மற்றவர் உயிர் என்று பிரித்து பார்த்ததில்லை. அதனால் தான் புரட்சி முழு வெற்றி பெறும் முன்னரே ஷியாங்க்‍ கே ஷேக்கை எதிர்த்து நடந்த போரில் ஒரு லட்சம் பேரை பட்டினி போட்டு கொன்றார். மக்கள் செத்தால் என்ன, புரட்சி ஜெயிக்க வேண்டும்.

ஊரையெல்லாம் காப்பாற்றும் ரங்கநாதனே அக்கடா என்று படுக்கும் போது மாவோவுக்கு களைப்பு வராதா? பாவம் அவரும் எவ்வளவு நாள் தான் போராடுவார் எத்தனை பேருக்கு தான் புரட்சி செய்வார்? சீனர்கள் இருட்டானால் சும்மா இருக்க மாட்டேன்கிறார்கள். ஒரு லட்சம், ரெண்டு லட்சம், பத்து லட்சம் ஒரு கோடி. ம்ஹூம். சீனாவில் மக்கள் தொகையோ பெருகிக் கொண்டே போகிறது. மக்களுக்காக மக்களால் அரசு நடத்தும் சிந்தனைத் தொட்டி (Think Tank) மாவோ சிந்தித்தார், செயல்பட்டார், அடுத்த புரட்சியை மலர வைத்தார். பிள்ளை பெறுவதற்கு அரசு அனுமதி பெற வேண்டும். ஆஹா, இதுவல்லவா புரட்சி இது எனக்கு தெரியாது போயிற்றே என்று லெனின் மாஸ்கோவில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்து நொந்து கொண்டார். நல்லவேளை எதையாவது வெட்ட சொல்லி புரட்சி செய்யவில்லையே என்று மகிழ்ந்த சீனர்கள் பத்திரமாக பொத்திக் கொண்டு புரட்சி வாழ்க என்று குரல் கொடுத்தார்கள்.

இதையெல்லாம் சொன்னால் மயிராண்டி குடிச்சிட்டு ஒளறாதடே. நம்மூரு சேப்பு சட்டைங்க நல்லவனுவ என்கிறான் "டயரு" தங்கராஜ். அவன் சொல்வதும் கூட உண்மை தான். டாட்டாவுடன் ஒப்பந்தம் போட்டு நந்திகிராமத்தில் அடிதடி நடத்தினார்களே தவிர, மாவோ போல நந்திகிராம் மக்களை பட்டினி போட்டு கொல்லவில்லை. ஏழைப்பங்காளர்களுக்கு புரட்சி செய்ய வாய்ப்பு தராமல் மக்கள் ஊரை விட்டு ஓடிவிட்டார்களாம். அறிவு கெட்ட தனமாக மக்கள் இப்படி இருந்தால் புரட்சி எப்படி ஐயா வரும்? இந்தியா விளங்குமா? உருப்படுமா?

Monday 9 August 2010

பார்த்த ஞாபகம்


அப்படி ஒன்றும் அடிக்கடி தேடுவதில்லை
ஆனாலும் சொல்லாமல் தான் நினைவில் வருகிறது
இங்கு தான் எங்கோ.
ஆனால் எங்கு வைத்தேன் எப்பொழுது வைத்தேன்
நீ சிறுசாருக்கச்ச பாத்திருக்கேன்
அது ஆச்சே ரொம்ப நாள் என்றாள் அம்மா
நான் பார்க்கவேயில்லை என்கிறாள் கேத்தி
போனாப் போகுது விடு
அதான் நிறைய இருக்கே என்றான் ஐஸின் மேல் விஸ்கி ஊற்றிய நண்பன்
நீண்ட நேரம் புலம்பிய பின்
சரி எப்படி இருக்கும் சொல்லு தேடிப் பார்க்கலாம்.
எத்தனை முயற்சித்தும் நினைவில் வரவே இல்லை என் முகம்.

===================

Wednesday 4 August 2010

எக்ஸ்டஸி....


இலை மறந்து பட்சியின் கண் பார்..
வில் வளைத்து அம்பு தொடுத்து குறி வை...
உண் உடுத்து புணர்
ஓடுவது ஆறு தேங்குவது சாக்கடை
பின் கால் வை முன்னே செல்...
கொள்ளியிடு வம்சம் வளர்
காதல் செய் உயிரென உருகு
துரோகம் செய் கடமை புரி
பொய் சொல் உண்மை உயிர்
எக்ஸ்டஸி எடு மேலே போ...
கீழ் அழுந்து அது ப்ரோஸாக்கின் காலம்
கக்கக்க‌ப்போ
கருத்துக்களை கச்சிதமாக
கவ்விக் கொள்கிறீர்கள் போங்கள்.
இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா
அமெரிக்கா ஆஸ்த்ரேலியா பிரிட்டன்
மற்றும் உலக நாடுகளெங்கும்
உற்சாக விற்பனை.
======================

Sunday 25 July 2010

ஆனந்த விகடனும் சாநிதாவும் (அ) அய்யாங்...டொய்ங்..

சாருவின் மனங்கொத்தி பறவை: ஆழ்துளை கிணறு உள்ளே விழும் குழந்தை தீயணைப்பு படை மீட்பு, துளையை மூடாத பொறுப்பில்லாத தொழிலாளிகள். இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். சாநிக்கு எழுதுவதற்கு சுய சொறிதல் தவிர வேறு எந்த விஷயமும் இல்லை. மனம் கொத்தி பறவை. மண்ணாங்கட்டி பறவை என்று வைத்திருக்கலாம். ஆனந்த விகடன் ஏற்கனவே பின்பக்கம் துடைக்கு டிஷ்யூ பேப்பர் அளவு தரம். இப்பொழுது துடைத்த டிஷ்யூ பேப்பர் போல இருக்கிறது.

சுய சொறிதலை விற்றே ஒருவன் எழுத்தாளனாகும் நிலை கேடு கெட்ட தமிழ் சூழலில் தான் இருக்கிறது. நேபாள மொழியிலோ இல்லை மணிப்புரி மொழியிலோ இந்த அவல நிலை இல்லவே இல்லை. இப்படி சொறிபவன எழுத்தாளன் என்றால் அஸ்ஸாமில் செருப்பால் அடிப்பார்கள். ஆனால் தமிழில் பத்திரிக்கையில் எழுத வைக்கிறார்கள். பின்னர் எப்படி ஐயா தமிழர்கள் படிக்க வருவார்கள்? அதனால் தான் கருணாநிதி இலக்கியவாதியாகவும் முத்தமிழ் அறிஞராகவும் ஆகிவிட்டார்.

அறிஞர் என்றதும் வேறு ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. திராவிட இயக்கத்தாருக்கு எதுகை மோனை மீது என்றுமே தீராத தாகம் உண்டு. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று எகனை மொகனையில் முழங்கிய தஞ்சாவூர் தட்சிணாமூர்த்தி பெயரை மாற்றிக் கொண்டு கருணாநிதி ஆனார். கானாவுக்கு கானா...கலைஞர் கருணாநிதி. அப்படின்னா ஆனாவுக்கு ஆனா...அறிஞர் அண்ணா. நெடுஞ்செழியன்? காசா பணமா போட்டுக்க..நானாவுக்கு நானா...நாவலர் நெடுஞ்செழியன்.

லஸ் கார்னரை லூஸ் கார்னர் என்று சொல்ல வேண்டும். சாரு இருநூறு வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறார். ஓசியில் அவர் குடிக்க மட்டுமே போவார். ஓசியில் ப்ளாக் கிடைத்தது என்று எழுத ஓடி வந்து விடவில்லை. எழுத வரும் முன் நானூறு வருடம் படித்திருக்கிறார். கூகிள் மேப் வருவதற்கு முன்னரே ஸ்கூல் புக்கில் மேப் பார்த்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் குளிரில் குண்டித் துணி இல்லாமல் அலைந்திருக்கிறார். எல்லாம் படித்து விட்டு அப்புறம் என்னை மாதிரி எவனும் எழுத மாட்டெங்குறான் என்று கடுப்பாகித் தான் எழுத வந்திருக்கிறார். இப்பொழுது ஒரு நாளைக்கு முப்பது மணி நேரம் எழுதுகிறார்.

ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரம் தான் இருக்கிறது என்று எனக்கு மீண்டும் மீண்டும் கடிதம் வருகிறது. ஐய்யா நான் பிச்சைக் காரன். விந்து விற்பவன் (என் எழுத்தை சொல்லவில்லை). ஆனால் எழுத்தை விற்க மாட்டேன்...தமிழ் சூழலில் அதை எவனும் வாங்க மாட்டேன் என்கிறான். நான் பிச்சை எடுக்கிறேன். தினமும் ஆறு மணி நேரம் தெருவில் போக வர இருபப்வர்களிடன் பிச்சை எடுக்கிறேன். யாரும் வராவிட்டால் பார் போய் ஆறு மணி நேரம் பிச்சை எடுக்கிறேன்...இப்படி தான் இந்த முப்பது மணி நேரம்.

தமிழ் வளமான மொழி. ஒன்று சொன்னால் சரியாக வேறு அர்த்தம் வந்து தொலைக்கும். முந்திய பத்தியை பாருங்கள். உத்தம தமிழ் எழுத்தாளன் என்னை பத்தி எழுத்தாளன் என்கிறான். அவன் குற்றாலத்தில் குளிக்கும் போது அவனை துண்டுடன் பார்த்த ஒரே தமிழ் எழுத்தாளன் நான் தான். நான் இருநூறு வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எத்தனை பேர் போந்தேவின் கழுதை படித்தீர்கள்?

என்ன சொல்ல வந்தேன். ஆமாம். தமிழின் வளமை. ஆறு மணி நேரம் பிச்சை எடுக்கிறேன் என்று நான் எழுதினேன். அதாவது எனக்கு ஆறு மணி நேரம் தேவை என்று. அதையே ஃபோன் செய்து, ஆறு மணி நேரமாக பிச்சை எடுக்கறீங்க? ஆன்லைனில் விளம்பரம் செய்தால் அரை மணி நேரத்தில் பிச்சை கிடைக்குமே என்கிறார்கள்.

தமிழ் சூழலை குறை சொல்லிக் கொண்டே என்ன மயிருக்கு தமிழில் எழுதற என்று அஞ்சனா கேட்கிறாள். அஞ்சனம் என்றால் கறுப்பு. ஆனால் அஞ்சனா கறுப்பல்ல. செம அழகி. இப்படி அழகான பெண்கள் எனக்கு கடிதம் எழுதுவதாக எனக்கு நானே கடிதம் எழுதுவதை கூட வயிறெரிகிறார்கள். தமிழர்களுக்கு வயித்தெரிச்சல் அதிகம். உத்தம தமிழ் எழுத்தாளன போல என்னால் தமிழ் சினிமாவுக்கு எழுத முடியாது. டேனி பாயலிடமும் ரோஜர் கும்ப்ளேவிடமும் சான்ஸ் கேட்டிருக்கிறேன். மிச்சம் மீதி இருந்தால் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். பிச்சைக்காரனுக்கு பிச்சை போடாதவர்களை பற்றி என்ன சொல்ல? ஸ்டேன்லி குப்ரிக்கிடம் கேட்கலாம். அவர் செத்துப் போய்விட்டதாக சொல்கிறார்கள்.

அதை விடுங்கள். எனக்கு இந்தி தமிழ் மலையாளம் இப்படி பல மொழி தெரியும். எனக்கு சிலே மொழியில் எழுத வேண்டும். ஆனால் சிலேயில் என்ன மொழி பேசுகிறார்கள் என்றே தெரிந்து தொலைக்க் மாட்டேன் என்கிறது. அமெரிக்காவின் உத்தரவுப்படி சிலேவில் யாருமே பேசுவதில்லை.

ஏன் இப்படி எல்லாரையும் திட்டிக் கொண்டே இருக்கிறாய் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். நான் யாருக்கும் நண்பனில்லை. எனக்கும் யாரும் நண்பனில்லை. தமிழ்நாட்டில் என்னுடன் நண்பன் என்று சொல்லிக் கொள்ளவே பயப்படுகிறார்கள். அந்த ஒரு தமிழ் எழுத்தாளனுக்கும் இல்லாத அளவுக்கு எனக்கு நண்பர்கள் அதிகம். அதிலும் பெண் நண்பிகள் அதிகம். நானே உருவாக்கிக் கொள்வதால் அதில் கஞ்சத் தனம் பார்ப்பதே இல்லை.

இப்படி நண்பர்களே இல்லாததால், டெல்லியிலிருக்கும் போதே யார் என்ன சொன்னாலும் நண்பர்கள் சொன்னார்கள் என்று சொல்லி விடுவேன். அன்று கூட அப்படித் தான் ஒரு ஜந்தர் மந்திர் ரோடில் ஒரு பஞ்சாபி காரன் என்னவோ சொன்னான். எனக்கு பஞ்சாபி தெரியாது. ஆனால் அவன் பஞ்சாபியில் தான் பேசுகிறான் என்றும் தெரியாது. அதனால் நண்பன் என்னவோ சொல்கிறான் சொல்லிவிட்டு போகட்டும் என்று விட்டு விட்டேன். நான் இப்படி இருப்பதால் கதவை இறுக்கு பூட்டாத நேரங்களில் சித்யானந்தர் கூட டோரு நீ ஒரு குழந்தை என்பார். அப்போது பஞ்சிதா யாரென்றே எனக்கு தெரியாது.

இத்தனை தூரம் சொல்லியும் இருநூறு வருடமாக எழுதியும் ரஞ்சனா மாத்ரிதில் இருந்து ஃபோன் செய்து கேட்கிறாள். முட்டாள் தமிழர்கள் மட்டுமே Madrid என்பதை மாட்ரிட் என்று உச்சரிப்பார்கள். அதை மாத்ரித் என்று தான் ஸ்பெயில் சின்ன குழந்தை கூட உச்சரிக்கும். ஸ்பெயின் அழகான மொழி.

நான் ரஞ்சனாவிடன் சொல்லி விட்டேன். இதோ பார். நான் எழுதுவதை எந்த மொழியில் எழுதினாலும் எவனும் படிக்க மாட்டான். அதனால் தான் தமிழில் எழுதுகிறேன். இங்கே கொஞ்சம் பேராவது படிக்கிறார்கள். தமிழ் இலக்கிய சூழல் நாசமாகி விட்டது. இருநூறு வருடமாக தினம் முப்பது மணி நேரம் எழுதும் ஒருவன் ஒரு ஃபெராரி கார் கூட வாங்க முடியவில்லை. இந்த நாடு உருப்படுமா? தமிழர்கள் கலாச்சாரம் இல்லாத மொன்னைகள். அவர்களுக்கு பெராரி கார் தெரியாது. ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ என்று பெரீஸ் பிஸ்கட் தான் தெரியும்.

மதிய நேரத்தில் எழுத வேண்டிய விஷயமா இது? இந்த கருமத்திற்கு தான் நான் ஆனந்த விகடன் போன்றவைகளை படிப்பதில்லை. அதை தமிழர்கள் மட்டுமே படிப்பார்கள். நானோ தமிழனே இல்லை என்று ராஜராஜ சோழனிடமே நேரில் போய் அறிவித்தவன்.நான் ஏன் ஆனந்த விகடன் எல்லாம் படிக்க வேண்டும்?

பஸ்ஸில் இப்படி தனியாக உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தால் வானம்பாடி பாலா எட்டிப் பார்த்து அதுவும் சனிக்கிழமை சாருவை படிப்பார்களா என்று கேட்கிறார்.

அதை தானே அய்யா நானும் நாற்பதாயிரம் பக்கம் எழுதி இருக்கிறேன். சனிப்பிணம் தனியாக போகாது என்று சொல்கிறார்கள். அதை முதலில் சொல்லியது என் அப்பத்தா. இதைச் சொன்னால் நீதான் தமிழன் இல்லையே என்கிறார்கள். அதை விடுங்கள். சனிப் பிணம் தனியாக போகிறதோ இல்லையோ சனிக்கிழமை சாருவை படித்தவன் தனியாக தண்ணியடிக்க போவான். வர்ற கடுப்புக்கு அவனும் பாவம் வேறு என்ன தான் செய்து தொலைவான்? சரி போய்ட்டு வாடா என்று நானும் விட்டு விட்டேன்.

அது என்ன அய்யாங் டொய்ங் என்று கேட்கிறார்கள். அது எப்படி ஓரு ஏழை பிச்சைக்கார ப்ளாக் எழுத்தாளன் என்றால் மட்டும் உங்களால் கேட்க முடிகிறது. இந்த கேள்வியை ஆனந்த விகடனை பார்த்து கேட்டிருக்கிறீர்களா? முதலில் அங்கே போய் கேட்டு விட்டு என்னிடம் வாருங்கள். டப்ளினில் மீட் பண்ணலாம். ஆனால் இனிமேல் அடிக்கடி இப்படி அய்யாங் டொய்ங் வரலாம். நான் ஒரு குழந்தை எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. நாளைக்கு எமினமின் ம்யூஸிக் ஃபெஸ்டிவல் போவதாக ப்ளான் செய்திருக்கிறேன். திறந்தவெளிக் கொண்டாட்டம் தான். திறந்தவெளி என்றால் ஓப்பன் ஆடிட்டோரியம் என்று மட்டுமே தமிழர்களுக்கு புரிகிறது. என்ன செய்ய?

==================================================

Tuesday 13 July 2010

அறிவுஜீவி அண்ணன் சிவராமனுக்கு.....

முக்கிய அறிவிப்பு: எனக்கும் "அன்பின்" அண்ணன் சிவராமன் அவர்களுக்கும் எந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினையோ இல்லை வாய்க்கா வரப்பு தகராறோ இல்லை...எனக்கு பாப்லோ நெருதா, பூக்கோ, போர்ஹே, உம்பர்ட்டோ எக்கோ என்று எவரையும் தெரியாது....ஆனால், சாத்தான் வேதம் ஓதுவதை போன்ற ஆதாரமற்ற, போகிற போக்கில் அள்ளி விடும் இடுகைகளை ஒப்புக் கொள்ள முடியவில்லை என்பதால் இந்த இடுகை...

நான் கேப்பிடலிஸ்ட் என்பதும், போலி நாட்டாமைகளை எனக்கு பிடிப்பதில்லை என்பதும் மற்றொரு காரணம்.

//''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.
//

போலியோ மருந்து கண்டுபிடிக்கும் முன் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன? இப்பொழுது எத்தனை பேருக்கு அந்த நோய் வருகிறது? அப்படியே வந்தாலும் எந்த நாடுகளில் வருகிறது? அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலா இல்லை மருந்து வாங்க வசதியில்லாத மூன்றாம் உலக நாடுகளிலா?

//அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது...
//

உங்கள் வாதமே உங்கள் முகத்தில் அறைகிறது...உங்கள் வாதப்படி, உலகம் முழுவதும் அம்மை தடுப்பூசி போடப்படுகிறது...ஆனால், அம்மைத் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டார்களா? அப்படியானால், இந்தியாவில் குறைந்த பட்சம் மூன்று தலைமுறைகள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை சுமார் ஆறு கோடியாக இருக்கலாம்...ஆனால் உண்மை அப்படி இல்லை...இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 110 கோடி...(இல்லை, இந்த எண்ணிக்கையும் பார்ப்பானீய பொய் என்பீர்களா?)

//மேலே சொன்ன மூன்று சம்பவங்களும் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது. //

கம்யூனிஸ நாடுகளால் ஒரு கருமமும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காக எவன் எதை கண்டுபிடித்தாலும் அய்யோ முதலாளித்துவம் சுரண்டுகிறது என்று பின்புறத்தில் அடித்துக் கொண்டே அதை திருடும் சோவியத் மனப்பான்மை தவிர இந்த வரிகளில் வேறு எதுவும் இல்லை.

உங்களுக்கு ஒரு ஐடியா.... கம்யூனிஸ கருணைக் கடவுள் ஸ்டாலின் பற்றி போலந்தில் போய் பிரச்சாரம் செய்து பாருங்கள்...ஒரு செருப்பல்ல, ஒரு லட்சம் செருப்புகள் உங்கள் முகத்தில் எறியப்படும்...

//மருந்துகள் என்பன மருத்துவர்களாலேயே தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட முறை அழித்து துடைக்கப்பட்டு -

மருந்தை தயாரிக்க தொழிற்சாலைகளும், விற்பனை செய்ய மருந்துக் கடைகளும் உருவாகின. அதாவது மருந்து என்பது பண்டமாகியது. //

மருந்துகள் ஒற்றை மருத்துவனால் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே ஆதிக்க மனப்பான்மை...தவிர, அன்றைக்கிருந்த மக்கள் தொகை என்ன? இன்றைக்கிருக்கும் மக்கள் தொகை என்ன? ஒற்றை மருத்துவனை நம்பி அழிந்து போன கிராமங்கள் எத்தனை?

//1763ல் சலிசிலிக் அமிலத்தின் மருத்துவப் பண்புகள் உணரப்பட்டன. 1817ல் அபினியிலிருந்து மார்பினும், அடுத்த ஆண்டே நக்ஸ்வாமிகாவிலிருந்து ஸ்டிரைசினும், 1820ல் சின்கோனா மரப்பட்டையிலிருந்து கொயினாவும் பிரித்தெடுக்கப்பட்டது.//

உணரப்பட்டன? ஒற்றை வரியில் திருட்டு தனமாக கடப்பதில் இருந்தே தெரிகிறது உங்கள் நேர்மைத்திறம்...

இவை எதுவும்....மார்க்ஸாலோ எங்கல்சாலோ சொல்லப்படவில்லை...மாவோவாலும், லெனினாலும் கண்டுபிடிக்கப்படவில்லை...விடாத ஆராய்ச்சியாலும், அந்த ஆராய்ச்சியை நடத்த முதலீடு செய்த சிலராலும் தான் கண்டுபிடிக்கப்பட்டதே தவிர ஓவர்நைட்டில் உணரப்படவில்லை......துண்டு பிரச்சாரம் செய்பவர்கள் எதையுமே கண்டுபிடித்ததாக சரித்திரம் பதிவு செய்யவில்லை...

//இந்தியாவிலிருந்து ரூபார்பும், ஆப்பிரிக்காவிலிருந்து சென்னாவும், ஜப்பானிலிருந்து பச்சைக் கற்பூரமும், கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து நட்மெக்கும் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட மருந்துகள் மீண்டும் இதே நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. //

விவசாயிடமிருந்து நெல்லை வாங்கி, அரவை மில்கள் விவசாயிக்கே அரிசி விற்கின்றன....இதில் என்ன தவறு?? நெல்லை யாரும் தின்ன முடியாது...

//மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.//

ஏன் உங்கள் துண்டு பிரச்சார பீரங்கியை முடுக்கி விட்டு, மஞ்சள் காமாலை ஆட்கொல்லி நோயல்ல, அது ஒரு வரம் என்று பிரச்சாரம் செய்திருக்கலாமே?

உணவு முறையை ஒழுங்குபடுத்துவது நோய்வராமல் வேண்டுமானால் தடுக்கலாம்...ஆனால் நோய் வந்தவர்களுக்கு என்ன செய்வது? எல்லாரும் அவனவன் பிரச்சினையை அவனே பாத்துங்கங்க..இருந்தா இருங்க செத்தா சாவுங்க என்று விட்டுவிடுவது பைத்தியக்கார அரசாங்கம் செய்யும்...இல்லாவிட்டால் கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்யும் (ஆனால், பொலிட்பீரோ மெம்பர்கள் சரியாக தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்பது வேறு விஷயம்)...

ஆனால், கொஞ்சமாவது பொறுப்புள்ள அரசாங்கங்கள் அப்படி இருக்க முடியாது.

//தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...//

பொத்தாம் பொதுவாக தடை செய்யப்பட்ட மருந்து...வழக்கமான உங்கள் யோக்யதை தெளிவாக தெரிகிறது...

என்ன மருந்து தடை செய்யப்பட்டது? என்ன காரணங்களால், எந்த வயதான, எந்த உடற்கூறு உள்ள நபர்களுக்கு தடை செய்யப்பட்டது? எந்த ஆதாரமும் தராது எதற்கு உளறி வைக்கிறீர்கள்?

//'முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே... தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?' பொது புத்தியில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியது எவ்வளவு உண்மையோ... அவ்வளவு உண்மை தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும்.//

மீண்டும் முட்டாள்தனமான வாதம்...

உண்மையல்ல என்று ஸ்டேட்மென்ட்...தொடர்ந்து "தடுத்து நிறுத்தியது எவ்வளவு உண்மையோ" என்ற சொல்லாடல்... அப்படியானால், நிறுத்தியது என்பதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள்...

ஆக, இந்த தடுப்பூசிகள் உண்மையிலேயே சில நோய்களை வராது தடுத்திருக்கின்றன அல்லது குணப்படுத்தியிருக்கின்றன...ஆனால், இப்படி தடுப்பூசிகள் இல்லையென்றால் மட்டும் இந்த புதிய நோய்களோ இல்லை வேறு புதிய நோய்களோ வந்திருக்காது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

//எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும். இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை - அதாவது தானாகவே மறையும் தன்மை - மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் - தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் - நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன. //

ஆமாம்...தானாகவே ஏற்படும்...(அப்புறம் எதற்கு இவர்களால் தோன்றியது, அவர்களால் ஏற்பட்டது என்று பிரச்சாரம் செய்கிறீர்கள்?) தானாகவே மறையும்...

னால், அப்படி மறைவதற்கான காலம் என்ன? போலியோ நோய் வந்தவர்களின் கால்கள் என்றைக்கு நேராகி இருக்கின்றன? யானைக்கால் வியாதி என்றைக்கு தானாகவே குணமாகும்? எய்ட்ஸ் வந்தவர்களில் எத்தனை பேருக்கு தானாகவே குணமாகி இருக்கிறது??

//1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக...//

சரி, இதற்கு என்ன ஆதாரம்? பைத்தியக்காரனின் திருமொழிகளை மட்டுமே ஆதாரமாக கொள்ள முடியாது. தவிர, 1950களில் உலக மக்கள் தொகை என்ன? இன்றைக்கு மக்கள் தொகை என்ன? எத்தனை சதவீதம்? இன்றைக்கு போலியோ நோய் கண்டவர்களின் எண்ணிக்கை என்ன?

அப்படிப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை எந்த நாட்டில் அதிகம்? மருந்து பயன்படுத்தும் ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளிலா இல்லை மருந்து வாங்க வசதியில்லாத மூன்றாம் உலக, கம்யூனிஸ்டுகளால் நாசம் செய்யப்பட்ட நாடுகளிலா?

//அம்மோனியம் சல்பேட் - வயிறு குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில் விஷம் பரவும்.//

அம்மோனியம் சல்பேட் : இது நைட்ரஜன், ஹைட்ரஜன், கந்தகம், ஆக்ஸிஜனின் கூட்டுக் கலவை...கத்தரிக்காயில் கந்தகம் இருக்கிறது...குடிக்கும் நீரில் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் இருக்கின்றன...முட்டையிலும் கோழிக்கறியிலும் இருக்கும் எல்லாப் புரோட்டீன்களுக்கும் அடிப்படை நைட்ரஜன்...நடைமுறையில் பலரும் பல விதத்தில் அம்மோனியம் சல்ஃபேட் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்...எத்தனை பேர் நரம்பு மண்டலத்தில் விஷம் பரவி இருக்கிறது?

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல்வேறு பொருட்களும் ஏதோ ஒரு விதத்தில் இயற்கையாகவே உருவாவது, அல்லது உணவுப் பொருட்களிலேயே இருக்கிறது...மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் கூட கார்ஸியோஜெனிக் தான்...புற்று நோய் வரவைக்கும் தன்மை கொண்டது...அரிப்பு தன்மை கொண்டது...அதனால் சுவாசிக்காமல் நிறுத்தி விடலாமா?

உங்களின் மற்ற திரிபு வாதங்கள் கம்யூனிஸ்டுகளின் துண்டு பிரச்சாரம் தான்...அதற்கு வழக்கம் போல எந்த மரியாதையும் கிடையாது. முடிந்தால் ஆதாரம் கொடுங்கள்...

//சுற்றுப்புற சீர்கேட்டை களையாமல் -

ஏகாதிபத்தியங்களுக்கு கூஜா தூக்கியபடி வலம் வருகிறதே ஆளும் வர்க்கம்...

இவர்களால்தான் தடுப்பூசி வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது. கொள்ளை லாபமும் பன்னாட்டு நிறுவனங்கள் அடைகின்றன. மக்களும் கொத்து கொத்தாக பலவித நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதை இனியும் அனுமதிக்கத்தான் வேண்டுமா?//

சுற்றுப்புற சீர்கேட்டை களைய வேண்டியது தான்...ஆனால் இன்றைக்கு சுற்றுப்புறத்தை சீர்கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சைனா...உங்களை போன்ற கம்யூனிஸ்டுகள் அதை முதலில் சரி செய்யலாம்...ஆனால் மாட்டீர்கள்...ஊருக்கு உபதேசம், பொலிட்பீரோ மெம்பருக்கு ஏசி கார் என்பது தானே கம்யூனிஸம்!

உங்கள் ஒட்டு மொத்த இடுகையும் குப்பை என்பதை நிறுவ ஒரு எளிய கேள்வியே போதும். ஐம்பது வருடங்களுக்கு முன் மனிதர்களின் ஆயுட்காலம் என்ன? இன்றைக்கு ஆயுட்காலம் என்ன? அன்றைக்கு கொள்ளை நோயால் அழிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை என்ன? இன்றைக்கு எத்தனை கிராமங்களுக்கு அந்த கதி ஏற்படுகிறது?

மீண்டும் மீண்டும் கம்யூனிஸமும், நீங்களும் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் செய்யும் முட்டாள் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள்...

ஆனால், ஒரு ஆச்சரியம்...எப்படி இதுவெல்லாம் பார்ப்பானீயம், ஆணாதிக்கம், சாதி வெறி என்று நிறுவாது விட்டீர்கள்? ஒரு வேளை இரண்டாம் பாகம் வருகிறதோ?

பின்குறிப்பு: போர்ஹெ தெரியாதவர்களுக்கும் பூக்கோ படிக்காதவர்களுக்கும் நாட்டாமை சிவராமன் பதில் சொல்வதில்லை என்பதால் இவை பதில் எதிர்பார்த்து வைக்கப்பட்ட கேள்விகள் அல்ல... நாட்டாமைகளின் முகம் எத்தனை போலியாக உளுத்துப் போயிருக்கிறது என்பதை காட்டவே இந்த கேள்விகள் ...

மருத்துவ ரீதியான விளக்கங்களுக்கு டாக்டர் ப்ருனோவின் இந்த இடுகையை பார்க்கவும்...டாக்டர் ப்ரூனோ உண்மையான டாக்டர்...திடீர் நாட்டாமை, போலி பகுத்தறிவுவாதிகள் போல போலி டாக்டரோ இல்லை திடீர் டாக்டரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

====================================