Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts
Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts

Sunday, 14 December 2008

பொன்னியின் செல்வன்: சில கேள்விகளும் ஒரு தற்குறியின் (மேலும்) சில பதில்களும்


எவ்ளோ நேரம் நான் வெய்ட் பண்றது...நேரமாச்சி கிளப்புக்கு போலாம் வா....இப்படி ஒருவர் படுத்தியதால் பொன்னியின் செல்வன் பற்றிய நேற்றைய பதிவு ஒரு அவசர ஆர்வ‌ பதிவு.. கிளப்புக்கு போய்விட்டு திரும்பி வந்து ஒரு ச்சின்ன குட்டி தூக்கம் போட்டு விட்டு எழுந்தால் ஞாயிறு மதியம் ஆகியிருக்கிறது...

என‌க்கு இருப்ப‌தை போன்றே ப‌ல‌ருக்கும் கேள்விக‌ள் இருப்ப‌து பெரிய‌ ம‌கிழ்ச்சி..பின்ன, ஒண்ணியும் பிரியலயேன்னு பொல‌ம்புன‌து என‌க்கு மட்டும் தான‌ தெரியும்..இப்ப‌ க‌ம்பெனிக்கு இவ்ளோ பேரு இருக்காங்க‌ளா..அதான் ஒரே குஜாலாக்கீது....

டாக்ட‌ர் ப்ரூனோ, ஒரிஜின‌லாக‌ கேள்விக‌ளை எழுப்பிய‌ ச‌ந்திர‌சேக‌ர‌ன் கிருஷ்ண‌ன், ம‌ற்றும் ப‌ல‌ர் கேள்விக‌ளுக்கு என‌க்கு தெரிந்த‌தை சொல்கிறேன்..

1) ஆதித்ய கரிகாலர், இறந்துதான் போனார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? சமாதி, கல்வெட்டு, இரங்கற்பா இந்த மாதிரி...........அவர் தலைமறைவானதாக அல்லது சாமியாராய்ப் போய்விட்டதாகக் கூட சொல்லலாம். (சுரேஷ்..)

ஆதித்ய‌ க‌ரிகால‌ர் இற‌ந்து தான் போனார் என்று திருவால‌ங்காட்டு செப்பேடுக‌ளை ஆதார‌ம் காட்டி க‌ல்கி வாதிக்கிறார்...மேலும் ச‌ரித்திர‌த்திலும் இது உறுதிப்ப‌டுத்த‌ப் ப‌ட்டிருக்கிற‌து..

ஆனால் டாக்ட‌ர் ப்ரூனோ சொல்லியிருப்ப‌து போல் அவ‌ர் எப்ப‌டி இற‌ந்தார் என்ப‌த‌ற்கு ஆதார‌ங்க‌ள் இல்லை...அவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்டாரா இல்லை த‌ற்கொலை செய்து கொண்டாரா?

க‌ல்கியின் க‌தைப்ப‌டி, க‌ரிகால‌ர் நெஞ்சில் வீர‌பாண்டிய‌ன் வாள் பாய்ந்திருக்கிற‌து...(ப‌ல‌ரும் நினைப்ப‌து போல் இடும்ப‌ன் காரியின் சுருள் க‌த்தி அல்ல‌...).. அந்த‌ வாளை க‌டைசியாக‌ கையில் வைத்திருப்ப‌து க‌ரிகால‌ர் தான்...அதுவுமில்லாம‌ல் நிக‌ழ்ச்சி ப‌ல‌ நாட்க‌ளுக்கு முன்ன‌ரே ஆதித்த‌ க‌ரிகால‌ரின் ம‌ன‌ நிலை நிலைய‌ற்று இருந்த‌தாக‌ வ‌ருகிற‌து..(பார்க்க‌ பார்த்திபேந்திர‌ன் உட‌னான‌ அவ‌ர் உரையாட‌ல்க‌ள், ம‌ற்றும் இளமையில் இற‌ப்ப‌து குறித்து அவ‌ர் சிந்த‌னைக‌ள்).

க‌ல்கியின் க‌தைப்ப‌டி, நந்தினியுடன் வாதித்து கொண்டிருக்கும் ஆதித்த‌ரின் க‌டைசி வாக்கிய‌ம் "ந‌ல்ல‌து! ந‌ம் இருவ‌ருடைய‌ வாழ்க்கைக்கும் ப‌ரிகார‌ம் ஒன்று தான்! விமோச‌ன‌ம் ஒன்று தான்..இதோ, ந‌ந்தினி! என் பிராய‌ச்சித்த‌ம்!.."

இந்த‌ வ‌ச‌ன‌ம் வ‌ரும்போது தான் வ‌ந்திய‌த்தேவ‌னுடைய‌ க‌ழுத்தை நெறித்து விட்டு காள‌முக‌ வேட‌த்துட‌ன் பெரிய‌ ப‌ழுவேட்ட‌ரைய‌ர் வ‌ருகிறார்..ஆனால் அதே ச‌ம‌ய‌ம் த‌ன் முன்னே பார்க்கும் ந‌ந்தினி க‌ரிகால‌ன் த‌ரையில் கிட‌ப்ப‌தையும் அவ‌ன் மார்பில் வீர‌பாண்டிய‌ன் வாள் பாய்ந்திருப்ப‌தையும் பார்க்கிறாள்..
இனி க‌ல்கியின் வ‌ரிக‌ளிலேயே...

"(ந‌ந்தினி) க‌ண்க‌ளை துடைத்துக் கொண்டு எதிரே பார்த்தாள்.க‌ரிகால‌ன் கீழே விழுந்து கிட‌ப்ப‌தை பார்த்தாள்.அவ‌ன் உட‌லில் வீர‌பாண்டிய‌ன் வாள் பாய்ந்திருப்ப‌தையும் பார்த்தாள்"

இத‌ற்கு பின்ன‌ரே ர‌வி தாஸ‌ன் சீனில் வ‌ருகிறான்..என‌வே ர‌வி தாஸ‌ன் கொன்றிருக்க‌ முடியாது..ப‌ழுவேட்ட‌ரைய‌ர் அப்பொழுது தான் பிர‌வேசிக்கிறார்..க‌ரிகால‌ன் கையில் இருந்த‌ க‌த்தியை பிடுங்கி அவ‌ர் க‌ரிகால‌னை கொல்ல‌ கார‌ண‌ங்க‌ள் இல்லை..வ‌ந்திய‌தேவ‌னோ தூர‌மாக‌ ஒளிந்திருக்கிறான்..ம‌ணிமேக‌லை சீனிலேயே இல்லை..இருந்தாலும் க‌ரிகால‌னை கொல்ல‌ அவ‌ளுக்கு கார‌ண‌ங்க‌ள் இல்லை..
எஞ்சியிருப்ப‌து ந‌ந்தினி, க‌ரிகால‌ன் ம‌ட்டும் தான்..ஒன்று ந‌ந்தினி கொன்றிருக்க‌ வேண்டும்..இல்லை க‌ரிகால‌ன் த‌ற்கொலை செய்து கொண்டிருக்க‌ வேண்டும்..

இத‌ற்கு பின்ன‌ர் பாட்ஷா ரேஞ்சில் நான் தான் கொன்னேன் என்று ப‌ழுவேட்ட‌ரைய‌ர், ம‌ணி மேக‌லை என்று ப‌ல‌ர் சாட்சி சொல்வ‌து ந‌ம்பும்ப‌டி இல்லை..

2) அட நந்தினியின் குழந்தையின் அப்பா யார் ? some confussions are there! (ராஜி)

அது யாரென்று க‌தையில் இல்லை..ஆனால், அது ந‌ந்தினியின் குழ‌ந்தை இல்லை என்ப‌து உறுதி... கரிகால‌னுக்காக‌ காத்திருக்கும் க‌டைசி காட்சியில் "அன்று ப‌ள்ளிப்ப‌டை காட்டில் யாரோ ஒரு சிறுவ‌னை உன் ம‌க‌ன் என்று கொண்டு வ‌ந்தார்க‌ள்" என்று அவ‌ள் புல‌ம்புவ‌தாக‌ வ‌ருகிற‌து.. என‌வே அந்த‌ குழ‌ந்தை ந‌ந்தினியின் ம‌க‌ன் அல்ல‌ என்ப‌து உறுதி.

3) வீர‌பாண்டிய‌னுக்கும் ந‌ந்தினிக்கும் என்ன‌ உற‌வு? ம‌க‌ளா இல்லை காத‌லியா இல்லை இர‌ண்டுமேவா? (என்னை அடிக்க‌ வராதீர்க‌ள்..க‌தையில் வ‌ரும் பெரும் குழ‌ப்ப‌ம் இது).. க‌தையில் இர‌ண்டு வீர‌பாண்டிய‌ர்க‌ளா இல்லை ஒரே வீர‌ பாண்டிய‌னா?

முத‌லில், க‌தையில் இர‌ண்டு வீர‌பாண்டிய‌ர்க‌ள் இல்லை.. வீர‌பாண்டிய‌ ம‌ன்ன‌ர் போரில் தோற்று இல‌ங்கை ஓடுகிறார்..அங்கு பிச்சியாக‌ சுற்றிக் கொண்டிருக்கும் ம‌ந்தாகினியுட‌ன் உற‌வு ஏற்ப‌டுகிற‌து..அதில் பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ள் தான் ந‌ந்தினியும், ம‌துராந்த‌க‌ சோழ‌னாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் உத்த‌ம‌ சோழ‌னும்... ஆக மகள் என்பது உறுதி.. இதையே நந்தினியும் கடைசி காட்சியில் சொல்கிறாள்..

இதே வீர‌பாண்டிய‌ன் இல‌ங்கை அர‌ச‌னின் உத‌வியுட‌ன் ப‌டை திர‌ட்டி மீண்டும் போர் வ‌ருகிற‌து..இந்த‌ போரில் தான் ஆதித்த‌ க‌ரிகால‌னால் த‌லை வெட்ட‌ப்ப‌ட்டு இற‌க்கிறார். இந்த‌ இட‌த்தில் ந‌ந்தினி ஆதித்த‌னிட‌ம் கெஞ்சுவ‌து "இவ‌ர் என்னை ம‌ண‌ந்து கொள்ள‌ப் போகிற‌வ‌ர்...என‌க்காக‌ விட்டுவிடுங்க‌ள்..."

குழ‌ப்ப‌ம் இப்பொழுது தான் வ‌ருகிற‌து...ந‌ந்தினிக்கு வீர‌ பாண்டிய‌ன் த‌ன் த‌ந்தை என்று தெரியுமா? தெரிந்திருக்க‌ வாய்ப்பில்லை என்றே தோன்றுகிற‌து..ஆனால் வீர‌பாண்டிய‌னுக்கு க‌ண்டிப்பாக‌ தெரிந்திருக்க‌ வேண்டும்...அத‌னாலேயே அவ‌ன் ந‌ந்தினியை அர‌சியாக்குவேன் என்று சொல்லியிருக்க‌ வேண்டும்..ஏனெனில் அவ‌ள் தான் வாரிசு! ஆனால் ந‌ந்தினி அதை த‌ப்பாக‌ நினைத்துக் கொண்டிருக்க‌ இட‌ம் இருக்கிற‌து..ஏனெனில் அவ‌ளுக்கு த‌ன் பிற‌ப்பு ப‌ற்றி உண்மை தெரியாது...

ஆனால் க‌டைசி காட்சியில் ந‌ந்தினி வீர‌பாண்டிய‌ன் த‌லையை அன்பே என்று விளிப்ப‌த‌ன் அர்த்த‌ம் என்ன‌? த‌ன் த‌ந்தை என்று தெரிந்த‌ பின்னும் "அன்று என் காத‌லை கொன்றீர்க‌ள், பின் என்னை காத‌லித்த‌வ‌ரை கொன்றீர்க‌ள்" என்று க‌ரிகால‌னிட‌ம் சொல்வ‌த‌ன் அர்த்த‌ம் என்ன‌?? என்னை காத‌லித்த‌வ‌ரை என் மேல் அன்பு செலுத்திய‌வ‌ர் என்றும் அர்த்த‌ம் சொல்ல‌லாம்..(வாத‌த்திற்காக‌!)

இதில் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து க‌டைசி வ‌ரை தான் வீர‌பாண்டிய‌னை காத‌லித்த‌தாக‌ ந‌ந்தினி எங்கும் சொல்ல‌வில்லை..யாரிட‌மும் சொல்ல‌வில்லை..(இல்ல‌ நான் எங்க‌னா மிஸ் ப‌ண்ணிட்டேனா?)
"என் நெஞ்சை கிழித்து பாருங்க‌ள், நீங்க‌ள் தான் இருப்பீர்க‌ள்" என்று க‌ரிகால‌ன் சாகும் முன் அவ‌னிட‌ம் சொல்கிறாள்..."அடுத்த‌ முறை பிற‌ந்தால் உங்க‌ளையே க‌ண‌வ‌னாக‌ அடைவேன்" என்று பெரிய‌ ப‌ழுவேட்ட‌ரைய‌ரிட‌ம் சொல்கிறாள்..

ஆக‌, வீர‌பாண்டிய‌ன் மேல் அவ‌ளுக்கு காத‌ல் இருந்த‌து என்று என்னால் சொல்ல‌ முடிய‌வில்லை..ஆனால் வீர‌பாண்டிய‌ன் த‌ன்னை காத‌லித்த‌தாக‌ அவ‌ள் எண்ணியிருக்க‌ வாய்ப்புண்டு..

என‌க்கு என்ன‌வோ அவ‌ள் உண்மையில் காத‌லித்த‌து க‌ரிகால‌னை ம‌ட்டுமே என்று தோன்றுகிற‌து...அவ‌ன் த‌ன்னை ஏமாற்றிவிட்டான் என்ற‌ எண்ண‌த்திலே அவ‌னை ப‌ழிவாங்க‌ விழைகிறாள்..

அண்ண‌ன் த‌ங்கை என்று ஆகிவிட்ட‌ பின் எந்த‌ கால‌த்திலும் ம‌ண‌க்க‌ முடியாது என்ப‌தாலும் அந்த‌ உற‌வின் மோச‌மான‌ நிலையும் எண்ணியே க‌ரிகால‌ன் உயிர் துற‌க்கிறான்..
டாக்ட‌ர் ப்ரூனோ சொல்லும் எடிப‌ஸ் காம்ப்ளெக்ஸ், எல‌க்ட்ரா காம்ப்ளெக்ஸ் இந்த‌ க‌தையில் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை..

4) க‌தையின் தீவிர‌மான‌ காத‌ல் எது?

என‌க்கு தெரிந்த‌ வ‌ரை, ம‌ணிமேக‌லையின் காத‌ல்.. காத‌ல‌னுக்காக‌ கொலைப் ப‌ழியை சும‌க்க‌ தானே முன்வ‌ந்த‌வ‌ள்...காத‌ல‌னுக்கு அபாய‌ம் செய்தால் த‌ன் ச‌கோத‌ர‌னையே கொல்வேன் என்ற‌வ‌ள்...பின் காதலன் இறந்து விட்டான் என்றவுடன் அவனை எண்ணி பைத்தியம் ஆனவள்..
இதைப் போன்றே தீவிர‌மான‌ இன்னொரு காத‌ல் ம‌ந்தாகினியின் காத‌ல்.

ச‌ரி...ஏதோ என்னால் முடிந்த‌ விள‌க்க‌ங்க‌ள்...

இனி யாரும் கேட்காத‌, ஆனால் என்னை ப‌டித்த நாளிலிருந்து உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி..

பொன்னியின் செல்வ‌ன் என்று த‌லைப்பு இருந்தாலும் இந்த‌ க‌தையின் முக்கிய‌ பாத்திர‌ங்க‌ள் வ‌ந்திய‌த் தேவ‌ன், ஆழ்வார்க்க‌டியான் ம‌ற்றும் ந‌ந்தினி..

இதில் வ‌ந்திய‌த் தேவ‌ன் ம‌ட்டுமே உண்மை, ம‌ற்ற‌வை க‌ற்ப‌னைப் பாத்திர‌ங்க‌ள்.. ந‌ந்தினி என்று ஒருவ‌ர் இருந்த‌தாக‌ சோழ‌ வ‌ம்ச‌ம் தொட‌ர்புடைய‌ எதிலும் ஆதார‌ம் இல்லை.

இப்ப‌டி இருக்கையில் ஒரு க‌ற்ப‌னை பாத்திர‌த்தை ப‌டைத்து அதில் உற‌வுச் சிக்க‌லை க‌ல்கி உருவாக்க‌ கார‌ண‌ம் என்ன‌? அவ‌ரின் நோக்க‌ம் வ‌ர‌லாற்று புதின‌மா இல்லை உற‌வுச்சிக்க‌லை ச‌ரித்திர‌ப் பிண்ண‌னியில் சொல்லும் முயற்சியா? அது ர‌சிக‌ர்க‌ளால் த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ப்ப‌ட்டு திசை திரும்பி விட்ட‌தா?

டாக்ட‌ர் ப்ருனோ சொல்வ‌து போல் இது எடிப‌ஸ் காம்ப்ளெக்ஸ்/எல‌க்ட்ரா காம்ப்ளேக்ஸ் அடிப்ப‌டையான‌ க‌தையா? இந்த‌ க‌தையின் இன்ஸ்பைரேஷ‌ன் ஷேக்ஸ்பிய‌ரின் ஹாம்லெட்டா?

சிறிய‌ வ‌ய‌தில் ஒரே ஒரு பாக‌ம் ம‌ட்டும் ப‌டித்திருந்தாலும், பொன்னியின் செல்வ‌னை நான் சென்ற‌ வ‌ருட‌ம் தான் ப‌டித்தேன்.. என‌க்கென்ன‌வோ இது உற‌வுச்சிக்க‌லை சொல்லும் க‌தையாக‌ தான் ப‌டுகிற‌து!

யாரேனும் விள‌க்கினால் ந‌ல‌ம்!

(எல்லாரும் கேட்கும் போது எனக்கு மட்டும் என்ன மானம் வாழுது...அதனால கேட்கிறேன்...பிடிச்சிருந்தா ஓட்டுப் போட்டுட்டு போங்க!)

Saturday, 13 December 2008

பொன்னியின் செல்வன் சில கேள்விகளும் ஒரு தற்குறியின் பதில்களும்


நீ என்ன படிச்சிருக்கன்னு கேக்குறது தான் இப்ப தமிழ்மணத்துல ஃபேஷனாருக்கு :0) அதனால நெறைய பேரு அவங்க படிச்சத பத்தி எழுதிகிட்டு இருக்காங்க..


இப்ப சமீபத்துல (இது டோண்டு சாரோட சமீபம் இல்ல..சமீபம்னா நேத்தி நள்ளிரவு சுமார் ஒன்றரை மணி அளவில்!) கிரிஷ் சந்துரு பொன்னியின் செல்வன் பத்தி அழகா எழுதியிருந்ததை படிச்சிட்டேன்.. அவரு எழுதினதை இங்க போடுறது காப்பி அடிக்கிற மாதிரி அநாகரீகம்கிறதுனால, தயவு செஞ்சி அவரு பிளாக்ல போய் படிச்சிக்கங்க...

இப்ப மேட்டரு அவரு பிளாக் இல்ல..அதுல கடைசியா சில கேள்விகள வச்சிருக்காரு...

அதுக்கு முன்னாடி...நீங்க பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்களா? என்னது இல்லியா? அப்பிடின்னா இந்தா இங்க போயி டவுன்லோட் பண்ணி படிங்க...

இதை படிப்பதற்கு நீண்ட நாட்களாகும், ஆனால் சுகமானது...

இப்ப படிக்காதவங்க எல்லாம் வெளிய போய்ட்டாங்களா? சரி, படிச்சவங்களுக்கு மட்டும் கேள்வி.

கேள்வியெல்லாம் கிரிஷ் சந்துருவோடது...பதில் மட்டும் தான் நம்மது!
என் பதிலெல்லாம் தப்புதப்பா இருக்கலாம்..இல்ல இல்ல, அப்பிடித்தான் இருக்கும்...அதனால எதுனா குந்தாங்கொறையா ஒரு மார்க் போட்டு விடுங்க..

1) மிகப்பெரிய குழப்பம் நந்தினி வீரபாண்டியனின் காதலியா மகளா ? நாவலின் இறுதி வரை நந்தினியை வீரபாண்டியனின் பத்தினி என்றே ஸ்தாபித்து விட்டு கடைசியில் மகள் என்று சொல்வது சரியாக நிருபிக்கப்படவில்லை. குந்தவையும் வந்தியத்தேவனும் கடைசியில் பேசும் போது ஆதித்த கரிகாலன் ஒருவேளை போர் வெறியில் சரியாக கேட்காமல் விட்டிருக்கலாம் என்று கூறுவதாக அமைத்தது ஒரு வேளை கல்கியின் சப்பைகட்டோ ? இவ்வளவு பெரிய நாவலில், இத்தனை கதாபாத்திரங்கள் வந்து போகும் இடத்தில் உறவுக்குழப்பத்தில் இந்த விஷயம் மறைந்து விடும் என்று நினைத்தாரோ ? ஒரு வேளை நந்தினி மகளாகவே இருந்தாலும், பள்ளிப்படை காட்டில் பட்டாபிஷேகம் செய்யும் குழந்தை நந்தினியை அம்மா என்று அழைக்கிறதே. அந்த குழந்தை நந்தினிக்கும் யார்க்கும் பிறந்த குழந்தை ? எனக்குத் தோன்றும் ஒரே விடை - பழுவேட்டரையர் வாயிலாக வெளிப்படும் கூற்றாலேயே நாம் நந்தினி வீரபாண்டியனின் மகள் என்று அறிகிறோம். ஆனால் அதைத் தவிர மற்ற இடங்களில் அவர்களை காதலி என்றே சொல்கிறார் - ஒருவேளை அந்த பழுவேட்டரையர் குறிக்கும் வீரபாண்டியனும், ஆதித்த கரிகாலன் கொன்ற வீரபாண்டியனும் வெவ்வேறு ஆசாமிகளா ? அப்படியென்றால் இரு வீரபாண்டியர்களுக்கும் என்ன உறவு ?



இதற்கு நான் இட்ட பின்னூட்டம்:உண்மையில் அருள்மொழியின் அண்ண‌ன் ஆதித்த‌ க‌ரிகால‌னின் ம‌ர‌ண‌ம் எப்ப‌டி நிக‌ழ்ந்த‌து என்ப‌த‌ற்கு ச‌ரித்திர‌த்தில் எந்த‌ ஆதார‌மும் இல்லை.. அவ‌ன் கொல்ல‌ப்ப‌ட்டானா இல்லை த‌ற்கொலை செய்து கொண்டானா? ந‌ந்தினி வீர‌பாண்டிய‌னின் ம‌க‌ளா இல்லை காத‌லியா? அப்ப‌டியானால் ந‌ந்தினிக்கும் ஆதித்த‌ க‌ரிகால‌னுக்கும் என்ன‌ உற‌வு?

பொன்னியின் செல்வ‌ன் க‌தையின் மிக‌ முக்கிய‌ முடிச்சு இந்த‌ உற‌வு சிக்க‌லே..
நந்தினியின் தாய் ம‌ந்தாகினி. த‌ப்பியோடிய‌ வீர‌பாண்டிய‌னுக்கும் ம‌ந்தாகினிக்கும் உற‌வு (ம‌ந்தாகினியின் விருப்ப‌ம் இல்லாம‌ல்) ஏற்ப‌ட்ட‌தாக‌ சிறையில் இருக்கும் பைத்திய‌க்கார‌ன் மூல‌ம் குறிப்பால் உண‌ர்த்த‌ப்ப‌டுகிற‌து.. ம‌ந்தாகினியை சில‌ கால‌ம் காத‌லித்து கைவிட்ட‌வ‌ன் சுந்த‌ர‌ சோழ‌ன். ம‌ந்தாகினி, வீர‌பாண்டிய‌னுக்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் ந‌ந்தினியும், சோழ‌ குடும்ப‌த்தில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் உத்த‌ம‌ சோழ‌னும்!

அப்ப‌டியானால் ந‌ந்தினிக்கும் ஆதித்த‌ க‌ரிகால‌னுக்கும் என்ன‌ உற‌வு முறை? ஒரு வித‌த்தில் அண்ண‌ன் த‌ங்கை.

ஆதித்த‌ க‌ரிகால‌ன் சிறு வ‌ய‌திலேயே ந‌ந்தினியை காத‌லித்த‌தாக‌வும், இது த‌வ‌று என்று தெரிந்த‌ செம்பிய‌ன் மாதேவியார் அவ‌ர்க‌ளை பிரித்த‌தாக‌வும் வ‌ருகிற‌து.

இந்த‌ அண்ணன் த‌ங்கை உற‌வு முறை தெரிய‌ வ‌ருவ‌தாலேயே ஆதித்த‌ க‌ரிகால‌ன் த‌ற்கொலை செய்து கொண்டு இற‌க்கிறான்..

வீர‌பாண்டிய‌ன், ந‌ந்தினி உற‌வில் எந்த‌ குழ‌ப்ப‌மும் இல்லை. ந‌ந்தினி ம‌ந்தாகினி போல் இருப்ப‌தாக‌ க‌தையில் வ‌ருகிற‌து.
இந்த‌ க‌தை 1950க‌ளில் எழுத‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌ தெரிகிற‌து..2008லும் (எந்த‌ கால‌த்திலும்) சொல்ல‌ முடியாத‌ ஒரு உற‌வு பிர‌ச்சினையை க‌ல்கி 1950க‌ளில் வெளிப்ப‌டையாக‌ சொல்ல‌ முடியாது என்ப‌தாலேயே இந்த‌ உற‌வு சிக்க‌ல் மூடி ம‌றைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌ தெரிகிற‌து....கேட்க‌ செவியுள்ள‌வ‌ன் கேட்க‌ க‌ட‌வ‌ன்!

ஆதித்த‌ க‌ரிகால‌னை கொல்ல‌ சூழ்ச்சி செய்த‌தாக‌ ர‌விதாஸ‌னும், உட‌ந்தையாக‌ இருந்த‌தாக‌ ப‌ல‌ கேர‌ள‌த்து குறு நில‌ ம‌ன்ன‌ர்க‌ளும் பிற்கால‌த்தில் ராஜ‌ராஜ‌ சோழ‌னால் த‌ண்டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். ராஜ‌ராஜ‌ன் இத‌ற்காக‌ கேர‌ள‌த்து மீது ப‌டையெடுத்து சென்று ச‌தியாலோச‌னையின் முக்கிய‌ கேந்திர‌மாயிருந்த‌ (அல்ல‌து அவ்வாறு ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌) காந்தாளூர் சாலையை அழித்த‌து வ‌ர‌லாறு. (காந்தாளூர் சாலை க‌ல‌ம‌றுத்த‌ருளிய‌!).

ஆனால், ந‌ந்தினி எந்த‌ கால‌த்திலும் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வில்லை. அத‌ற்கு கார‌ண‌ம் அவ‌ளுக்கு ப‌ழி வாங்கும் வெறி இருந்த‌து, அத‌ற்கு கார‌ண‌மும் இருந்த‌து ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ள் ராஜ‌ ராஜ‌ன், குந்த‌வையின் ச‌கோத‌ரி என்ப‌தும் ஒரு கார‌ண‌மாயிருக்க‌க் கூடும்.
என‌க்கு புரிந்த‌ வ‌ரை, இந்த‌ க‌தை எழுத‌ ஆர‌ம்பிக்கும் போது க‌ல்கியின் முக்கிய‌ நோக்க‌மே இந்த‌ உற‌வு சிக்க‌லை விள‌க்குவ‌தாக‌ இருந்திருக்க்கூடும்..ஆனால், அத‌ன் அபாய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு தாண்டி சென்று விட்ட‌தாக‌ தெரிகிற‌து...


2) நந்தினியும் போலி மதுராந்தகனும் மந்தாகினியின் குழந்தைகள் என்று இருக்கும் பட்சத்தில், அவை பாண்டிய மன்னனுக்குப் பிறந்தவை என்ற பட்சத்தில் - மந்தாகினி ஏன் சுந்தர சோழரை காப்பாற்ற வேண்டும். ஒரே காரணம் அவர்களது முதல் காதல் தான். காதலிப்பது ஒருவனை கைப்பிடிப்பது மற்றொருவனை என்ற கலாசாரம் அந்த காலத்தில் கிடையாதே. அப்படி இருக்கும் போது இது எப்படி சாத்தியம். வீரபாண்டியன் மூலம் குழந்தை பிறந்தது என்று வைத்துக் கொண்டாலும், பாண்டிய வம்சத்தைக் காப்பாற்றாமல் அதன் பகை வம்சமாகிய சோழ வம்சத்தை காப்பாற்றுவது ஏன் ?


ம‌ந்தாகினி சுந்த‌ர‌ சோழ‌ரை காப்பாற்ற‌ கார‌ண‌ம் சுந்த‌ர‌ சோழ‌ர் அவ‌ள‌து காத‌ல‌ன்..ம‌ந்தாகினியும் சுந்த‌ர‌ சோழ‌ரை காத‌லித்த‌து உண்மை...வீர‌பாண்டிய‌ன் அவ‌ளை வ‌ற்புறுத்தியே அடைந்த‌தாக‌ தெரிகிற‌து, ம‌ந்தாகினி விரும்பி அவ‌னை கைப்பிடித்த‌தாக‌ க‌ல்கி சொல்ல‌வில்லை.
ம்ந்தாகினி சோழ‌ நாட்டுப் பெண்..(அவ‌ள‌து அண்ண‌ன் முறையான‌ திருவிட‌ங்க‌ர் கோடிய‌க்க‌ரையில் இருக்கிறார்...அவ‌ள‌து த‌ங்கையான‌ ஊமைப்பெண் செம்பிய‌ன் மாதேவியிட‌ம் வேலைப்பார்த்த‌தாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து. அந்த‌ ஊமைப்பெண் தான் சேந்த‌ன் அமுத‌னின் தாய்.) ம‌ந்தாகினியின் குடும்ப‌மே சோழ‌ நாட்டு குடும்ப‌மாக‌ தான் தெரிகிற‌து..

3) வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்குமிடையிலான காதலை மிகவும் மேலோட்டமாக காட்டியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவ்வளவு தீரணான வந்தியத்தேவனும் புத்திகூர்மையான அரசிளங்குமரியும் இவ்வளவு மேலோட்டமாகவா மோகிப்பார்கள் ? எனக்குத் தெரிந்தவரை intensity அதிகம் இருக்கும் personlityகள் காதலில் மிகவும் தீவிரமாகவே இருப்பார்கள். ஒருவேளை கல்கி இளவரசி தனது நிலையிலிருந்து இறங்கி சொல்லுதலாகாது என்று நினைத்து அந்த காதலை அதிதீவிரமாக எழுதவில்லை போலும். வானதி ராஜராஜன் மீதும், மணிமேகலை வந்தியத்தேவன் மீதும் கொண்ட காதலின் அளவு கூட இல்லாமல குந்தவையும் வந்தியத்தேவனும் கொண்ட காதலின் தீவிரத்தை மேலோட்டமாக கல்கி ஏன் எழுதினார் ?

இத‌ற்கு கார‌ண‌ம் குந்த‌வையின் அன்றைய‌ நில‌வ‌ர‌ம். ராஜ்ய‌த்தில் த‌ந்தைக்கு உட‌ல் நிலை ச‌ரியில்லை..அடுத்து ம‌ன்ன‌ன் ஆக‌ வேண்டிய‌ ஆதித்த‌ க‌ரிகால‌ன் வ‌ட‌புலத்தில் ஒதுங்கி இருக்கிறான்...ப‌ழையாறைக்கோ, த‌ஞ்சைக்கோ அவ‌ன் த‌ந்தையை பார்க்க‌க் கூட‌ வ‌ருவ‌தில்லை.. ம‌ற்றொரு த‌ம்பி க‌ட‌ல் க‌ட‌ந்து இல‌ங்கையில் போர் ந‌ட‌த்திக் கொண்டிருக்கிறான்...
இதில் ராஜ்யபார‌ம் முழுவ‌தும் குந்த‌வையின் மீது விழுகிற‌து..க‌ரிகால‌னுக்கு எதிராக‌ ச‌தி ந‌ட‌க்க‌க்கூடும் என்று அவ‌ளும் எண்ணுகிறாள்...இத்த‌கைய‌ சூழ்நிலையில் காத‌லிப்ப‌து எப்ப‌டி?
வ‌ந்திய‌த் தேவ‌னின் நிலையும் அப்ப‌டியே..
ஆனால் வான‌தி, ம‌ணிமேக‌லையின் நிலை அப்ப‌டி அல்ல‌. வான‌திக்கு இப்ப‌டி ராஜ்ய‌ க‌வ‌லைக‌ள் ஏதுமில்லை..ம‌ணிமேக‌லைக்கும் சோழ‌ ராஜ்ய‌த்தின் பிர‌ச்சினைகள் ப‌ற்றி தெரிய‌வில்லை...அர‌சு, அர‌சியாத‌ல் குறித்து அவ‌ளுக்கு விருப்ப‌மும் இல்லை.. அத‌னாலேயே அவ‌ள் பட்ட‌த்து இள‌வ‌ர‌ச‌ன் ஆதித்த‌ க‌ரிகால‌னையே ம‌ண‌ம் செய்ய‌ ம‌றுக்கிறாள்...

வேற‌ யாருக்காவ‌து எதுனா கேள்வி இருக்கா? இப்ப‌வே கேட்டுக்க‌ங்க‌..அப்புற‌ம் ப‌ரிட்சைல‌ தெரியாம‌ முழிக்க‌ப்படாது...சொல்லிட்டேன் :))