Saturday 29 November 2008

மும்பை தீவிரவாதம்: கருணாநிதி, காடுவெட்டி குருவும்,அப்சல்குருவும்!

சைனாவின் முக்கிய ஏற்றுமதி குறைந்த விலையில் செய்யப்படும் பொருட்கள்..ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி தேயிலை..பிரிட்டனின் முக்கிய ஏற்றுமதி ஃஃபினான்ஷியல் ஸெர்விஸஸ்...இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி ஐ.டி. செர்வீஸஸ்...ஆனால் சில நாடுகளின் முக்கிய ஏற்றுமதி தீவிரவாதம் அதனால் ஏற்படும் ஹோல்சேல் மர்டர்!


இந்த கடைசி கேட்டகரியில் வருவது பாகிஸ்தான்..மதவாதத்தையும், தீவிர வாதத்தையும் மட்டுமே ஏற்றுமதி செய்யும் இந்த பாழாய் போன, மனித நாகரீகத்தின் புற்று நோயான இந்த தேசம் அனைத்துலக தீவிரவாதிகளின் தாய்நாடு என்பதை கிட்டத்தட்ட இந்த உலகமே மிகச்சமீப காலமாக புரிந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது...


மும்பையில் சில காட்டுமிராண்டி மிருகங்கள், மனித உருவம் தரித்த ஜந்துக்கள் எந்த காரணமும் இன்றி அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கும் இந்த தீவிரவாத தேசத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்று எனக்குத் தெரியாது... இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை...

ஆனால், சம்பந்தம் இருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை!

ஏனெனில் இந்த தேசத்தின் பின்ணனி அப்படி! ஆஃப்கனில் அமெரிக்க போர் ஆரம்பித்த காலத்திலிருந்து தீவிரவாதிகளின் மயிரைக் கூட புடுங்காமல், அமெரிக்க பணத்தில் கொழுத்த இந்த தேசம், ஆஃப்கனில் தலிபான் தறுதலைகள் ஓரளவு ஒழிக்கப்பட்ட பின், அடுத்து தனது கும்பி கழுவ என்ன செய்வது என்று யோசிப்பதாக தெரிகிறது.. இவர்களிடம் இருக்கும் ஒரே ஏற்றுமதி சரக்கு தீவிர வாதம்...கொன்று குவிப்பது... தங்களிடம் இன்னமும் சரக்கு இருக்கிறது என்று காட்ட இந்த புற்று நோய் தேசமே இதை செய்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

இதில் அந்த அரசுக்கும், ஜனாதிபதி, பிரதமருக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் கூட, அந்த அரசு எந்திரங்கள் பயன்படுத்த்ப்பட்டிருக்க கூடும்.. தலிபான் காட்டுமிராண்டிகளின் அதிகாரபூர்வ முதன்மை வேலையாளான ஐ.எஸ்.ஐ யின் பங்கு மிகவும் கேள்விக்குறியது...


அப்பிடியெல்லாம் இல்ல, பாகிஸ்தான் ஒரு புனித தேசம் என்பவர்கள் சில வாரங்களுக்கு முன் சைனா, சவுதி அரேபியா, வேர்ல்ட் பேங்க் என்று கையேந்தியதை ஞாபகப்படுத்தி கொள்வது நல்லது...அப்படியே உலகில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடும் பெரும்பான்மையான ஓநாய்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக சொல்வதையும் நினைவுப்படுத்துவது நல்லது!

ஒட்டு மொத்த‌ உல‌க‌த்தையும் ஆஃப்க‌ன் போன்று க‌ற்கால‌த்திற்கு கொண்டு செல்வ‌தே இவ‌ர்க‌ளின் நோக்க‌மாக‌ இருக்க‌க் கூடும். அதே ச‌ம‌ய‌ம் இவ‌ர்க‌ள் அணிவ‌து நைக் ஷூஸ், Gap டீ ஷ‌ர்ட்! குடிப்ப‌து ஸ்காட்ச் விஸ்கி!

இந்த‌ வெறி பிடித்த‌ மிருக‌ங்க‌ளை ஒட்டு மொத்த‌மாக‌ அழிப்ப‌து இய‌லாத‌ காரிய‌ம் என்றாலும், இந்தியாவை ம‌ட்டுமே அடிக்க‌டி தாக்குவ‌து ஏன்? மும்பை குண்டு வெடிப்பு, அக்ஷ‌ர்தாம் தாக்குத‌ல், பெங்க‌ளுரில் தாக்குத‌ல்..டெல்லி மார்க்கெட்டில் தொட‌ர் குண்டு வெடிப்பு...இப்பொழுது மீண்டும் மும்பையில் கொலை வெறி!

இவ‌ர்க‌ளுக்கு தைரிய‌ம் த‌ருவ‌து அவ‌ர்க‌ள் அடித்திருக்கும் க‌ஞ்சா, அபின் ம‌ட்டும் அல்ல‌, இன்னொரு முக்கிய‌ கார‌ண‌மும் உண்டு...

அந்த‌ முக்கிய‌ கார‌ண‌த்திற்கு ப‌ல‌ பெய‌ர்க‌ள்...சில‌ உதார‌ண‌ம்...கையாலாகாத‌, அறுப‌து வ‌ய‌திற்கு மேல் சினிமா க‌தாநாய‌க‌ன் ஆக‌ முய‌ற்சிக்கும் சிவ‌ராஜ் பாட்டீல்...பார்லிமெண்டை தாக்கி, சில‌ பாதுகாவ‌ல‌ர்க‌ளை கொன்ற‌ அப்ச‌ல் குருவை தூக்கிலிட்டால் சிறுபான்மையின‌ரின் ம‌த‌ உண‌ர்வுக‌ள் பாதிக்க‌ப்ப‌டும் என்று ஒட்டு மொத்த‌மாக‌ ஒரு ச‌மூக‌த்தையே தீவிர‌வாதியுட‌ன் இணைக்கும் முட்டாள்க‌ளான‌ காங்கிர‌ஸ்...அர‌சிய‌ல் என்றால் எவ‌ன் காலையும் ந‌க்குவேன் என்று சொல்லும் க‌ருணாநிதி....

மும்பை பிர‌ச்சினையில் த‌மிழ்நாட்டில் ஒரு முக்கிய‌ நிக‌ழ்வு பின்த‌ள்ள‌ப்ப‌ட்டு விட்ட‌து.. தேசிய‌ பாதுகாப்பு ச‌ட்ட‌த்தில் கைது செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌ காடுவெட்டு குரு என்ற‌ அன்னை தெர‌சாவின் ம‌று பிற‌வி மீதான‌ வ‌ழ‌க்கு வாப‌ஸ் வாங்க‌ப்ப‌ட்டு அவ‌ர் விடுத‌லை செய்ய‌ப்பட்டு இருக்கிறார்...

அவரை குண்டர் சட்டத்தில் அடைத்தது முன் இருந்த‌ ஜெ. அர‌சு அல்ல‌. இதே க‌ருணாநிதி அர‌சு தான்.. இத‌ற்கு க‌ருணாநிதி அர‌சு சொல்லிய‌ கார‌ண‌ம்...

"மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ரை கொல்லும்ப‌டி தூண்டினார்...தொகுதி எம்.எல்.ஏ வை கொல்வேன் என்று பேசினார்... ம‌த்திய‌ ம‌ந்திரி ராஜா தொகுதிக்குள் வ‌ந்தால் உயிருட‌ன் திரும்பி போக‌ முடியாது என்று பேசினார்"

இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ "அன்னை தெர‌சா" காடுவெட்டி குரு தொட‌ர்ந்த‌ வ‌ழ‌க்கு சென்ற‌ வார‌ம் ஹை கோர்ட்டில் விசார‌ணைக்கு வ‌ந்த‌து...காடுவெட்டிக‌ளால் தாங்க‌ள் பேசிய‌தை ம‌றுக்க‌ முடிய‌வில்லை...அவ‌ரின் ஒரே வாத‌ம், "அதை நான் பொது ம‌க்க‌ளிட‌ம் பேச‌வில்லை...ஆக‌வே க‌ல‌வ‌ர‌த்தை தூண்டினேன் என்று குற்ற‌ம் சாட்ட‌ முடியாது"...ஆக‌, அவ‌ர் தான் பேசிய‌தை அவ‌ராலே ம‌றுக்க‌ முடிய‌வில்லை!

ஆனால், என்ன‌ ஆச்ச‌ரிய‌ம்....தொண்ணூற்றேழு வ‌ய‌து கிழ‌வ‌ன் ஒரு இர‌வில் ப‌தினேழு வ‌ய‌து கும‌ரியாக‌ (ஆமாம் கிழ‌வ‌ன் கும‌ர‌ன் ஆவ‌து கூட‌ இல்லை, கும‌ரியாக‌வே ஆகி விட்டான்!) ஆவ‌து போல், ஓரே வார‌த்தில் க‌ருணாநிதி அர‌சு வ‌ழ‌க்கை வாப‌ஸ் வாங்கி விட்ட‌து!

இத‌ற்கு கார‌ண‌ம் என்ன‌? "அன்னை தெர‌சா" காடுவெட்டியார் த‌ன்னை மிக‌ கேவ‌லமாக‌ பேசிய‌தாக‌ ஒப்பாரி வைத்த‌ க‌ருணாநிதி இன்று ம‌ன‌ம் மாற‌க் கார‌ண‌ம் என்ன‌? காடுவெட்டியார் நிஜ‌மாக‌வே அன்னை தெர‌சா ஆகிவிட்டாரா இல்லை வ‌ள்ள‌லார் ஆகிவிட்டாரா? இல்லை கூட்டணி வைச்சா தான் க‌ட்சி பொழைக்கும், அதுனால‌, தேச‌மாவ‌து, பாதுகாப்பாவ‌து...எவ‌ன் நாச‌மா போனா என‌க்கென்னா....கூட்ட‌ணி வ‌ச்சி, நாலு சீட்ட‌ பிடிச்சி அடுத்து சென்ட்ர‌ல்ல‌ எவ‌ன் க‌வ‌ர்ன்மென்ட் வ‌ந்தாலும் நான் ரெண்டு மினிஸ்ட‌ர் போஸ்ட் வாங்க‌ணும் என்ற‌ "உய‌ர்ந்த‌, க‌லாச்சார‌ம் மிக்க‌" அர‌சிய‌ல் கார‌ண‌மா??

அதெல்லாம் இருக்க‌ட்டும்...கருணாநிதிக்கும், மும்பை தாக்குத‌லுக்கும் என்ன‌டா ச‌ம்ப‌ந்த‌ம்...மொட்டை த‌லைக்கும் மொழ‌ங்காலுக்கும் முடிச்சி போடுற‌தே ஒன‌க்கெல்லாம் வேலையாப் போச்சி... என்று சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு...

இருக்கிற‌து ஐயா, இருக்கிற‌து! இவ‌ர்க‌ளின் அர‌சிய‌லில் தேச‌ப்பாதுகாப்பு ச‌ட்ட‌த்தை கேலியாக்கி விட்டார்க‌ள்..பொடா ச‌ட்ட‌த்தை வைகோ மீது பாய்ச்சி ஜெ. கேலியாக்கிய‌து போல்..

இப்ப‌டி இவ‌ர்க‌ளுக்கு வேண்டாம் என்றால் ஒருவ‌ரை கைது செய்வ‌தும், ஓட்டு பொறுக்க‌ வேண்டுமென்றால் அவ‌ரை விடுத‌லை செய்வ‌தும் என்று விளையாடியே நாச‌மாக்கி விட்டார்க‌ள்...இந்த‌ பிர‌ச்சினையில், காடுவெட்டி குருவை குண்ட‌ர் ச‌ட்ட‌த்தில் உள்ளே அடைத்த‌ க‌லெக்ட‌ரும், மாவ‌ட்ட‌ காவ‌ல் அதிகாரியும் கேலி பொருளாகி விட்டார்க‌ள்... நாளை ஒருவ‌ன் தீவிர‌வாதி என்று தெரிந்தாலும் அவ‌னை உள்ளே த‌ள்ள‌ ம‌ன‌ம், தைரிய‌ம் வ‌ருமா? எந்த‌ அர‌சிய‌ல் வியாதி ச‌ப்போர்டுக்கு வ‌ருவான் என்று யாருக்கு தெரியும்?

ஆக‌, இப்ப‌டி அர‌சிய‌லுக்காக‌ நாட்டையே நாச‌ம் செய்துவிட்டார்க‌ள்...இதில் வ‌ய‌தில் மூத்த‌ அர‌சிய‌ல்வாதி என்ப‌தால்....

க‌ருணாநிதி முத‌ல் குற்ற‌வாளி!

Sunday 23 November 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு

முன் அறிவிப்பு 1: வழக்கம் போல இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே. கதை மாந்தர்கள் மற்றும் பதிவரின் நலம் கருதி அவர்களின் அடையாளங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.

முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.





அத்தியாயம் மூன்று - புதை மணல்

இதன் முந்திய பாகங்களை படிக்க இங்கே சொடுக்கவும்.
அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு


காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்

திருக்குறள், அதிகாரம் 117, படர்மெலிந் திரங்கல்


"கைக்கிளைன்னா இன்னா?"

வேதாளத்தின் கேள்விக்கு விடை தெரியாமல் விக்கிரமாதித்தன் விழித்தான்..

"கைக்கிளைன்னா...ம்ம்ம்...எதுனா கைக்கு பக்கத்துல இருக்கிற மரக்கிளையா? ஊருல சொல்லுவாங்க..."

"ம்க்கும். உன் மண்டை கிளை. கைக்கிளைன்னா பொருந்தா காதல்..ஒனக்கு புரியற மாதிரி சொல்றதுன்னா பொருந்தா காமம்.. அதெல்லாம் பொற நானூறு, அக நானூறு படிச்சவங்களை கேக்கணும்..நீயே சால்ட்டு கொட்டாயில ஜல்ஸா பண்ற பொறம்போக்கு..உன்ட்ட போயி கேட்டேன் பாரு..எனக்கு அய்யாவோட இதயத்துல கூட எடம் கெடைக்காது போலருக்கு"

"அட சட்டி போட்ட சனியனே..இப்பிடி கைக்கிளு சைக்கிளுன்னு டைம்மை வேஸ்ட் பண்ணாத.. கெளம்பு கெளம்பு..இப்ப கெளம்பினா தான் சாயந்திரத்துக்குள்ள மந்திரவாதிய பாக்க முடியும்..."

"ஆமா அவன் பெரிய நயந்தாரா..அப்பிடியே பாத்துட்டாலும்...ரொம்ப‌ ப‌ற‌க்காத‌ மாதி...நீ என்ன‌ ஆட்சில‌யா இருக்க? ஆட்சி போன‌ ஒரு அம்மா தான் ராஜினாமா செய்யி, ராஜினாமா செய்யின்னு ப‌ற‌க்க‌றாங்க‌ன்னா நீ எதுக்கு ப‌ற‌க்குற‌?"

"ஆச்சி போனாலும் அறிக்கை விடுவாங்க...அதெல்லாம் ஒனக்கு எதுக்கு..ரொம்ப பேசுன உம் மேல மான நஷ்ட ஈடு வழக்கு தான்...பாத்துக்க..."

"அவங்க மானம் என்ன ஒரு கோடி ரூவா தான...நம்ம வடிவேலு வாங்குற சம்பளத்த விட ச்சீப்பா இருக்கு...குடுத்துட்டா போச்சி..ஆனா மானத்தை எப்பிடி நஷ்டப்படுத்துறதுன்னு தான் எனக்கு பிரியல..அது என்ன புண்ணாக்கு யாவாரமா நஷ்டமாவுறதுக்கு.."

"வேலையில்லாத வெட்டி பையன் வழுக்கையனுக்கு மொட்டை போட்டானாம்..அப்பிடி தான் இருக்கு உன் கத...இப்பிடி ஊர் வம்பு பேசுறதுக்கு பேசாம கெளம்பினா இன்னேரம் பாதி தூரம் போயிருக்கலாம்..."

"போலாம் மாதி...எதுனா சரக்கு வச்சிருக்கியா...நான் காச்சிரதையும் கெடுத்துட்ட..."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல....நீ வா போலாம்.."

"இரு மாதி...இவ்வளவு தூரம் வந்துட்ட...கதையை கேக்காம போனா எப்பிடி.."

"என் நேரம்..சரி என்ன கதை அது...சீக்கிரம் சொல்லித் தொலை.."

"எல்லாம் நம்ம மருத‌ காரய்ங்க கதை தான்..வைகை காஞ்சி போனாலும் வை கையை அப்பிடின்னுட்டு இருக்காய்ங்களே அவய்ங்க ஊரு கத தான்..."

தலையில் மாட்டியிருந்த சட்டியை கையில் எடுத்துக் கொண்ட வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது...
=================================


வைஜெயந்தி ஓடிக் கொண்டிருந்தாள்....அவளுக்கு மூச்சிரைத்தது...சுற்றிலும் மணல்...இது என்ன இடம்..ஏன் ஓடிக் கொண்டிருக்கிறேன்...எங்கு ஓடுகிறேன்..கால் வலிக்குதே..உக்காரலாமா...தெரியலியே..எவ்வளவு நேரம் ஓடணும்...இது என்ன யாருமே இல்ல இங்க...வெறும் பொட்டல் மணல் காடா இருக்கே...அய்யோ இது என்ன..கால் உள்ள போகுதே...இது என்ன இடம்..புதை மணலா...நான் அவ்வளவு தானா...சுபா..அய்யோ சுபா உன்னை தனியா விட்டுட்டு போறேனே.....

"ஹெல்ப்...ஹெல்ப்..யாராவது காப்பாத்துங்களேன்.."

வைஜெயந்தி அலறினாள்.. திடீரென்று அவளது முகத்தை பிடித்து யாரோ உலுக்கினார்கள்...

"ம்மா..ம்மா..என்னம்மா ஆச்சு...எந்திரிம்மா..."

வைஜெயந்திக்கு சட்டென்று விழிப்பு வந்தது...என்ன ஆயிற்று...

"என்னம்மா ஆச்சி.."

அந்த அரை இருட்டில் குழந்தை சுபா பயத்துடன் விழித்துக் கொண்டிருந்தது..

"ஒண்ணுமில்ல குட்டி...அம்மா ஏதோ படம் பார்த்தனா..அதான் கெட்ட கனா. நீ தூங்கு...காலையில ஸ்கூலுக்கு போகணுமில்ல.."

குழந்தையை படுக்க வைத்து விட்டு வைஜெயந்தி வியர்த்திருந்த முகத்தை துடைத்துக் கொண்டாள்..

என்ன ஒரு மோசமான கனவு..புதை மணலில் புதைவது போல்..டைம் என்ன...நான்கு ஆகிறது..அதி காலையில் கண்ட கனவு பலிக்குமோ...கடவுளே..
இனி தூக்கம் வராது..வெறுமனே படுத்திருக்க வேண்டியது தான்..அது இன்னும் கொடுமை...மூடிய கண்களும் விழித்திருக்கும் மனமும்...நரக வேதனை..

ஏன் என் வாழ்க்கை இப்படி போகிறது..தின்று..தூங்கி..உழைத்து..மீண்டும் தூங்கி...தின்று...உழைத்து...இது வாழ்க்கையா..சிறையா...இது தான் புதை மணலா..நான் புதைந்து கொண்டு தான் இருக்கிறேன்...உயிருடன்...

ஆஃபிஸ் ஒன்பது மணிக்கு தான்..பழங்காநத்தத்தில் இருந்து சிம்மக்கல்லில் இருக்கும் ஆஃபிஸ் என்னவோ பக்கம் தான்..ஆனால் ட்ராஃபிக் ஜாமிலும், மதுரையில் அடிக்கும் வெயிலிலும் சென்று திரும்பி வருவதற்குள் வாழ்க்கை கசந்து விடுகிறது...அப்படியே வீடு வந்தால் மட்டும் என்ன..இங்கு என்ன வாழ்கிறது...எந்த ராஜ குமாரன் காத்துக் கொண்டிருக்கிறான்...குழந்தையை தவிர...அவளும் இல்லாவிட்டால் இந்த வாழ்க்கையே அர்த்தம் இல்லாது போய்விடும்..

இன்றைக்கு ஆஃபிஸில் என்ன வேலை...தினமும் செய்யும் அதே வேலை தான்..இல்லை இன்று புதிதாய் சில இஞ்சினியர்கள் சேருகிறார்கள்..அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்டில் இருப்பதால் நான் தான் அவர்களுக்கு சம்பள கணக்கு எல்லாம் ஓபன் செய்ய வேண்டி இருக்கும்..சீக்கிரமே கிளம்ப வேண்டி இருக்கும்...சீக்கிர‌மே திரும்பி வ‌ர‌ முடிந்தால் ந‌ல்ல‌து...குழ‌ந்தை பாவ‌ம் காத்துக் கொண்டிருப்பாள்..

வைஜெய‌ந்தி புர‌ண்டு குழ‌ந்தையை இறுக‌ அணைத்து கொண்டாள்..அன்றைய‌ தின‌ம் த‌ன‌து வாழ்க்கையில் சில‌ புதிய‌ க‌ண‌க்குக‌ள் திற‌க்க‌ப்ப‌ட‌ போவ‌து அவ‌ளுக்கு தெரியாது....


=======================

குன்ற‌த்திலே கும‌ர‌னுக்கு கொண்டாட்ட‌ம்

அங்கே குவிந்த‌த‌ம்மா பெண்க‌ள் எல்லாம்

வ‌ண்டாட்ட‌ம் வ‌ண்டாட்ட‌ம்

குன்ற‌த்திலே கும‌ர‌னுக்கு கொண்டாட்டம்...

ப‌த்துக்கு ப‌த்து சைஸில் இருந்த‌ அந்த‌ அறையின் ஒரு மூலையில் அந்த‌ ப‌ழைய‌ ஆடியோ ப்ளேய‌ர் அல‌றிக் கொண்டிருந்த‌து.

"மாப்ள‌...கும‌ரா...ஒம் பேரு திருக்கும‌ர‌ன்கிற‌துக்காக‌ இப்பிடி திருப்ப‌ர‌ங்குன்ற‌த்துல‌ இருந்து கிட்டு குடிக்கும் போது சாமி பாட்டு கேட்கிற‌து ஓவ‌ர் அல‌ப்ப‌ரையா இல்ல‌..."

"மாப்ள‌ அண்டா...அதுக்கு தாண்டா எங்க‌ அப்ஸு அப்ப‌வே தெளிவா திருக்கும‌ர‌ன்னு பேரு வ‌ச்சிருக்காரு...ரொம்ப‌ தெளிவுல்ல‌...எவ‌னும் என்ன‌ ம‌ரியாத‌ இல்லாம‌ கூப்பிட‌ முடியாது..."

"வேணாம்...இதோட ஆறு ரவுண்டு ஆயிடுச்சி..மணி வேற நாலு ஆயிடுச்சி...விடியப் போவுது..இதோட நிறுத்திக்கோ..போதும்..."

"ய்யால...நாங்கல்லாம் அறுவது ரவுண்டு அடிச்சாலும் ஸ்டெடியா நிப்போம்டி..விடிய தான் போவுது மாப்ள...வேல கெடைச்சிருச்சில்ல...வாழ்க்கைல மொத வேலைங்கிறது ஒரு தடவை தான் கெடைக்கும்...அப்பவே கொண்டாடிறணும்..."

"நீ பேசுவடா...ஒனக்கெல்லாம் வேலை குடுத்தாய்ங்க பாரு..அவய்ங்கள சொல்லணும்...வேலைக்கு இன்னிக்கி தான ஜாய்ன் பண்ற...மொத நாளே இப்பிடி விடிய விடிய குடிச்சிட்டு போனா வெளங்குமா..."

"அடடா...மாப்ள...அக்கறையில நெஞ்ச நக்கிட்டடா..அப்பிடியே அந்த ஊறுகாய இங்க தள்ளு...அதையும் நக்கிராத...பூண்டு ஊறுகாயும்..பட்டை சரக்கும்...சும்மா கும்முனு தூக்குது..."

"போடாங்...முட்டாக் கூ...ஒனக்கு போயி சொன்னேன் பாரு...என்ன பிஞ்ச செருப்பால தான் அடிக்கணும்..."

"அவசரப்படாத மாப்ள...இந்த ரவுண்டு முடிச்சிட்டு ஓஞ் செருப்ப பிச்சே அடிச்சிருவோம்....அப்பிடியே..காலைல‌ என்னை நீ தான் ஆஃபிஸுல‌ டிராப் ப‌ண்ண‌னும்...என் வ‌ண்டிய‌ எங்க‌ அப்ஸு எடுத்துட்டு போறாராம்...வ‌ய‌சானாலும் அவ‌ரு அல‌ப்ப‌ரை தாங்க‌ முடிலை...இப்ப‌வும் பொட்டிக்க‌டைக்கு போற‌துனாலும் ய‌ம‌ஹாவுல‌ தான் போவேங்கிறாரு..."

"ச‌ரி ச‌ரி..ட்ராப் ப‌ண்றேன்..ஆபிசு எங்க‌ இருக்கு..."

"சிம்ம‌க்க‌ல்லுல‌ மாப்ஸ்.."

"ச‌ரி...ஆனா ஆபிஸ்ல‌ ஒழுங்கா இரு...எதுனா ஜாரியா பாத்து பின்னாடி போயிராத‌...வெட்டிபுடுவாய்ங்க‌..."

"ஆமா...நாங்க‌ ஜாரி பாக்க‌ தான் போறோம் பாரு...அட‌ப் போடா.."

"ரொம்ப‌ நேர‌ம் ஆச்சிடா..இந்தா முருக‌ன் கோவிலுக்கு டூரிஸ்டெல்லாம் வந்துட்டாய்ங்க‌...இப்ப‌ தூங்கினா தான் காலையில‌ எட்டு மணிக்காவது எந்திரிக்க‌ முடியும்.. நீ அப்பிடியே க‌ட்டைய‌ சாத்து...நான் இப்பிடி சாத்துறேன்..."

"சாத்திட்டா போச்சி..."

குடி போதையில் திருக்கும‌ர‌ன் தூங்கி போன‌ போது அன்றைய‌ தின‌ம் அவ‌னுடைய‌ வாழ்க்கையை முற்றிலும் மாற்ற‌ப் போவ‌து அவ‌னுக்கு தெரியாது...

=============================


கதையை சொல்லிக் கொண்டு வந்த வேதாளம் திடீரென நிறுத்திக் கொண்டது...

"என்ன தாளமே நிறுத்திட்ட..."

வேதாளம் இளித்தது...

"ஒனக்கு தெரியாதா மாதி...இதுக்கு மேல சொல்றதுன்னா எனக்கு எதுனா உள்ள போணும்..என்ன சரக்கு வச்சிருக்க..."

"சரக்கா...ஒரு மண்ணும் இல்ல..நீ ஒழுங்கா கதைய சொல்லு..எனக்கு நேரமாவுது.."

"ஹி ஹி ஹி...மாதி...இந்த டுபாக்கூரெல்லாம் என்ட்ட விடாத...ஒன்ன பத்தி எனக்கு தெரியாதா...கார்ல எதுனா சரக்கு இல்லாம நீ வெளிய வர மாட்டியே....என்ன சரக்கு வச்சிருக்க..."

"ம்ம்ம்...எனக்கு மட்டும் கொஞ்சமா டெக்கீலா வச்சிருக்கேன்...அதெல்லாம் ஒனக்கு பிடிக்காது..."

"டெக்கீலாவோ ஷகீலாவோ....எங்களுக்கு எல்லாம் பிடிக்கும் போ போ போயி எடுத்துட்டு வா..."

"ச்சை...ஒரு வேதாளத்துக்கு சரக்கு வாங்கி தர்ற நிலமைக்கு நான் வந்துட்டேனே.."

விக்கிரமாதித்தன் புலம்பிக் கொண்டே காரை நோக்கி நடந்தான்...

============= தொடரும் =============

Thursday 20 November 2008

முடிவே இல்லா பாதையில்....

சின்ன‌ பொறியில் வடை..
ஆசையாய் தான் இருக்கிற‌து...

நேற்றும் இன்றும் நாளையும்
காலையும் மாலையும்

இர‌வில் கூட‌ க‌ன‌வில்...

தின‌ந்தோறும் அதே முக‌ங்க‌ள்

உள்ளே போனால் என்ன‌...
இட‌மும் வ‌ல‌மும்
முன்னும் பின்னும்
மேலும் கீழும்...

அங்கு என்ன வெளிச்சம்..
உள்ளே யாரது...

இல்லை அது இன்னொரு பொறி..


இத‌ற்கு மேல் எங்கே செல்ல?

முடிவே இல்லா பாதையில்

விடிவே இல்லா இரவுகளின்

விடையே இல்லா கேள்விகள்..

==========================

அழுத்து அழுத்து இன்னும்

கீழே கீழே கீழே... இன்னும் கீழே

இத‌ற்கு மேல் ஆழ‌ம் இல்லை...

சரி விட்டுத் தொலை ச‌னிய‌னை..

=========================

செத்திருந்த‌து சுண்டெலி

முடிவே இல்லா பாதையில்

விடிவே இல்லா இரவுகளின்

விடையே இல்லா கேள்விகளுடன்!


============

Monday 17 November 2008

சட்டக்கல்லூரி கலவரம் - போலீசுக்கு பாராட்டு - தொடர்ச்சி...

சட்டக்கல்லூரி கலவரம் சம்பந்தமாக நான் இட்ட முந்திய பதிவின் சில விஷயங்களை தெளிவுபடுத்தவே இந்த அவசர பதிவு..

முதலில், என் பதிவில் எந்த இடத்திலும் ஜாதி பற்றி குறிப்பிடவே இல்லை..ஏனெனில் எனக்கு எந்த ஜாதியும் இல்லை, எந்த ஜாதி மீதும் தனிப்பட்ட பிடிப்போ, மரியாதையோ இல்லை.எந்த ஒரு விஷயத்தையும் ஜாதிக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுடன் பேசுவதே எனக்கு விருப்பமில்லை..அது யாராக இருந்தாலும், எந்த ஜாதியாக இருந்தாலும்!

ஜாதி ந‌ம்பிக்கை உடைய‌வ‌ர்க‌ள் முடிந்தால் உங்கள் ஜாதி க‌ண்ணாடியை சிறிது நேர‌ம் க‌ழ‌ட்டி வைத்து விட்டு ப‌டியுங்க‌ள்..இல்லையேல் இத்துட‌ன் ப‌டிப்ப‌தை நிறுத்திக் கொள்ள‌லாம்.. நான் யாரையும் ப‌டிக்க‌ வேண்டும் என்று வ‌ற்புறுத்த‌வில்லை. நீங்க‌ள் ப‌டிப்ப‌தால் என‌க்கு சில‌ ல‌ட்ச‌ங்க‌ள் வ‌ர‌ப்போவ‌தும் இல்லை.. என‌வே பிடித்தால் ப‌டியுங்க‌ள்..இல்லையேல் போய்க் கொண்டே இருக்க‌லாம்..I simply don' care!

இனி...

1. உண்மையில் அன்று ந‌ட‌ந்த‌து என்ன‌? இர‌ண்டு மாணவ(?????) குழுக்க‌ள் ச‌ட்ட‌க்க‌ல்லூரியில் அடித்து கொண்ட‌ன‌ர். இத‌ற்கு கார‌ண‌ம் என்ன‌வாக‌ வேண்டுமானாலும் இருக்க‌ட்டும். ஜாதியாக‌வும் இருக்க‌லாம் இல்லை வேறு கார‌ண‌ங்க‌ளாக‌வும் இருக்க‌லாம்.. என்ன‌ கார‌ண‌மாக‌ இருந்தாலும் உருட்டு க‌ட்டை, க‌ம்பிக‌ளுட‌ன் அலையும் ஒரு கும்ப‌லையும், க‌த்தியுட‌ன் திரியும் ஒரு கும்ப‌லையும் என்ன‌ வித‌மான‌ மாண‌வ‌ர்க‌ளாக‌ பார்க்க‌ முடியும்?? இவ‌ர்க‌ள் நிஜ‌மாக‌வே ப‌டிக்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள் தானா??

க‌ல்லூரிக‌ளில் மாண‌வ‌ர்க‌ளுக்குள் பிர‌ச்சினை வ‌ருவ‌து புதித‌ல்ல‌. ஆனால், எத்த‌னை மாண‌வ‌ர்க‌ள் கொலை வெறியுட‌ன் க‌த்தி, க‌ட்டையுட‌ன் திரிகிறார்க‌ள்?

உங்க‌ளில் எத்த‌னை பேர் க‌ல்லூரியில் ப‌டித்திருக்கிறீர்க‌ள்? நீங்க‌ள் இப்ப‌டி தான் க‌த்தி, க‌ட்டையுட‌ன் அலைந்தீர்க‌ளா?

2. ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ஏதோ உட‌ன‌டி ச‌ம்ப‌வ‌மாக‌ தெரிய‌வில்லை.முன் கூட்டியே திட்ட‌மிட்டு ஆயுத‌ங்க‌ளுட‌ன் வ‌ந்திருப்ப‌தாக‌ தெரிகிற‌து..இப்ப‌டி கொலைக்கு திட்ட‌மிடுப‌வ‌ர்க‌ளை மாண‌வ‌ ம‌ணிக‌ள் என்று கொண்டாட‌ வேண்டுமா??

3. இந்த‌ ச‌ட்ட‌க்க‌ல்லூரியில் ப‌டிக்கும் மாண‌வ‌ர்க‌ள் ப‌ல‌ரும் ந‌டுத்த‌ர‌ குடும்ப‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள்..டாட்டாவின் ம‌க‌ன்க‌ளோ, பிர்லாவின் பேர‌ன்க‌ளோ இல்லை...பிள்ளை ப‌டித்து முடித்த‌தும் வேலைக்கு போவான்..குடும்ப‌த்தை முன்னேற்றுவான்..அக்கா, த‌ங்க‌ச்சிக்கு க‌ல்யாண‌ம் ப‌ண்ணி வைப்பான்..அவ‌ன் ப‌டிக்க‌ வாங்கின‌ க‌ட‌னை அடைப்பான்...இப்ப‌டி ப‌ல‌ க‌ன‌வுக‌ள், திட்ட‌ங்க‌ளுட‌ன் க‌ட‌ன் வாங்கி ப‌டிக்க‌ வைக்கும் பெற்றோரும் இருக்க‌க் கூடும்....ஆனால், எதைப் ப‌ற்றியும் க‌வ‌லை இல்லாம‌ல், கொலை வெறியுட‌ன் அலையும் ந‌ப‌ர்க‌ள் மீது என‌க்கு எந்த‌ ம‌ரியாதையும் இல்லை.

4. ச‌ரி, இவ‌ர்க‌ள் ஜாதிக்காக‌வே ச‌ண்டையிட்ட‌தாக‌ வைத்துக் கொண்டாலும், இவ‌ர்க‌ள் ச‌ண்டையிட்டால் இல்லை கொலை செய்தால் ஜாதி பிர‌ச்சினை தீர்ந்து விடுமா? இத‌ற்கு முந்தைய‌ ஜாதிக் க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ளின் இன்றைய‌ நில‌வ‌ர‌ம் என்ன‌?? அவ‌ர்க‌ளின் குடும்ப‌ங்க‌ள் என்ன‌ நிலைமையில் உள்ள‌ன‌??

க‌ல‌வ‌ர‌த்தில் ஈடுப‌ட‌ தூண்டி விட்ட‌வ‌ர்க‌ள் இன்று க‌ட்சி த‌லைவ‌ர்க‌ளாக‌வும், எம்.எல்.ஏ, எம்.பி, ம‌ந்திரிக‌ளாக‌வும் இருக்கிறார்க‌ள்...அடுத்து வ‌ரும் தேர்த‌லில் எந்த‌ தொகுதி வேண்டும், எத்த‌னை தொகுதி வேண்டும் என்று பேர‌ம் பேசிக் கொண்டிருக்கிறார்க‌ள்..அவ‌ர்க‌ளின் வாரிசுக‌ள் டெல்லியிலும், சென்னையிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்க‌ள்..

ஆனால், ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள்? அவ‌ர்க‌ள் செத்து சுண்ணாம்பாகி விட்டார்க‌ள். அவ‌ர்க‌ள் வாரிசுக‌ள் வேலை, வ‌ச‌தி இன்றி வ‌றுமையில் இருக்கிறார்க‌ள்.. இதை ச‌ந்தேக‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் தென் மாவட்ட‌ங்க‌ளிலும், வ‌ட‌ மாவட்ட‌ங்க‌ளிலும் விசாரித்து அறிய‌லாம்..

தூண்டி விடுப‌வ‌ர்க‌ள் ஏ.சி. ரூமில் உட்கார்ந்து கொண்டு, வ‌றுத்த‌ முந்திரியும், இம்போட்ட‌ட் விஸ்கியும் குடித்துக் கொண்டு அடுத்து எவ‌னை கொல்ல‌லாம், எந்த‌ ப‌ஸ்ஸை எரிக்க‌லாம் என்று விவாதித்து கொண்டிருக்கிறார்க‌ள்..

5. அடுத்து போலீஸ்.. நீங்க‌ள் எந்த‌ க‌ல்லூரியிலாவ‌து குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒரு வார‌ம் ப‌டித்திருந்தால் கூட‌ தெரியும்.. பொதுவாக‌, க‌ல்லூரியின் ம‌திலுக‌ளுக்குள் உள்ளே ந‌ட‌க்கும் பிர‌ச்சினையில் போலீஸ் த‌லையிடுவ‌து இல்லை..இருக்கிற‌ வேலையில‌ இது எதுக்கு புதுசா என்ற‌ அவ‌ர்க‌ளின் சுய‌ந‌ல‌மும் ஒரு கார‌ண‌ம் என்றாலும், ஒரு க‌ல்லூரிக்குள் ந‌ட‌க்கும் பிர‌ச்சினையில் போலீஸ் அவ்வ‌ள‌வு எளிதாக‌ த‌லையிட‌ முடியாது..உண்மையிலேயே க‌ல்லூரி முத‌ல்வ‌ர், க‌ல்லூரி சேர்ம‌ன், போலீஸ் உய‌ர் அதிகாரி, அந்த‌ வ‌ட்டார‌ எம்.எல்.ஏ, எம்.பி, த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் அள‌வுக்கு விவாதித்து தான் த‌லையிட‌ முடியும்..

ச‌ரி, இந்த‌ பிர‌ச்சினையில் போலீஸ் த‌லையிட்டு இருந்தால் என்ன‌ ஆகியிருக்கும்? "ஏய், ஓதுங்கி போங்க‌ப்பா" என்றால் இந்த‌ கூட்டம் வில‌கியிருக்குமா? இருக்காது...அடுத்து?? போலீஸ் த‌டிய‌டி ந‌ட‌த்த‌ வேண்டி வ‌ரும்.. போலீஸ் த‌டிய‌டி ந‌ட‌த்தினால் என்ன‌ ஆகும்?? இர‌ண்டு கும்ப‌ல்க‌ளுக்கு இடையில் ந‌ட‌ந்த‌ ச‌ண்டை போலீஸ் ‍வ‌க்கீல்க‌ள் என்றும், அர‌சுக்கும் ஜாதிக‌ளுக்கும் இடையிலான‌ ச‌ண்டையாக‌வும் மாறும்..தென் மாவட்ட‌ங்க‌ளில் சில‌ சிலைக‌ள் உடையும்.. வ‌ட‌ மாவட்ட‌ங்க‌ளில் சில‌ ப‌ஸ்க‌ள் கொளுத்த‌ப்ப‌டும்..சில‌ர் உயிருட‌ன் கொளுத்த‌ப்ப‌டுவார்க‌ள்..சில‌ர் வெட்டிச் சாய்க்க‌ப்ப‌டுவார்க‌ள்...

இதில் எந்த‌ ஜாதிக்காவ‌து எந்த‌ ப‌ல‌னாவ‌து உண்டா? ஒரே ஒரு ப‌ல‌ன் உண்டு..புதிய‌ ஜாதி த‌லைவ‌ர்க‌ள் உருவாவ‌ர்க‌ள்..அவ‌ர்க‌ள் ம‌க‌ன்க‌ளும், பேர‌ன் பேத்திக‌ளும் ம‌ந்திரி ஆவார்க‌ள்...ஸ்விஸ் பேங்கில் அக்க‌வுண்ட் ஓப்ப‌ன் செய்வார்க‌ள்...பத்திரிக்கைகளுக்கும், சில டீ.வி.களுக்கும் சில நாட்கள் செய்தி பஞ்சமில்லை...

ஆனால் க‌ல‌வ‌ர‌த்தில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள், அதில் செத்த‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ளின் குடும்ப‌ நிலைமை? செத்த‌வ‌ர்க‌ள் அடையாள‌ம் தெரியாம‌லே புதைக்க‌ப்ப‌ட‌க்கூடும்...கேட்பாரின்றி அவ‌ர்க‌ள் ம‌ண்ணில் அழுகிக் கொண்டிருப்பார்க‌ள்..அவ‌ர்க‌ள் குடும்ப‌ங்க‌ள் உயிருட‌ன் செத்துக் கொண்டிருக்கும்...

6. என் முந்தைய‌ ப‌திவுக்கு பின்னூட்ட‌மிட்ட‌ ஹ‌ரிஜ‌னா என்ப‌வ‌ர் சொல்கிறார்..

//ஏதோ புதுசா சொல்றதா நினைத்து நடந்த சம்பவத்தின் கொடுரத்தை மறைக்க என்ன அவசியம் வேண்டிருக்கு. //

நான் எதையும் ம‌றைக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. நான் ஜாதி சங்க தலைவனோ இல்லை ஜாதியை வைத்து இரண்டு சட்டசபை தொகுதி, ஒரு எம்.பி. தொகுதி என்று பேரம் பேசுபவனோ இல்லை.

//நீ எல்லாம் பதிவு போடவில்லை என்று யார் அழுதார்கள்.
வெட்டி வேலையயை விட்டுவிட்டு வேறு வேலை எதாவது இருந்தால் பார்.//

நான் ப‌திவு போட‌ வேண்டும் என்று யாரும் அழ‌வில்லை..அது போல‌ இவ‌ர் பின்னூட்ட‌ம் போட‌ வேண்டும் என்றும் நான் அழ‌வில்லை..

ஆனால் இவ‌ர் சொல்வ‌தில் ஒரு விஷ‌ய‌ம் ச‌ரியான‌து..ப‌திவு போடுவ‌து வெட்டி வேலையே.. எதை எடுத்தாலும் ஜாதியுட‌ன் பார்க்கும் காமாலை க‌ண்க‌ளுக்கு ம‌த்தியில் வேறு வித‌மாக‌ பாருங்க‌ள் என்று சொல்வ‌து கூட‌ த‌வ‌று தான்..

அடுத்து அந்நிய‌ன் என்ப‌வ‌ர் அனானியாக‌ எழுதுவ‌து..

//உனக்குள்ள‌ என்ன பெரிய பருப்புன்னு நினைப்பா!!! ஒழிஞ்சவன விடு. ஒழிச்சவன் மட்டும் உலகத்துல நல்லது பண்ணிடுவனா!!! //

நான் ப‌ருப்பும் இல்லை..செருப்பும் இல்லை. ஒழிச்ச‌வ‌ன் ந‌ல்லது ப‌ண்ணுவான் என்றும் நான் எங்கும் சொல்ல‌வில்லை. நான் சொல்ல‌ வ‌ருவ‌து ரொம்ப‌ சிம்பிள்...ந‌ட‌ந்த‌து இர‌ண்டு ர‌வுடி கும்ப‌ல்க‌ளுக்கு இடையில் வ‌ழ‌க்க‌மாக‌ ந‌ட‌க்கும் மோத‌ல்..அவ்வ‌ள‌வே.

//ஒருவேளை அவனும் உன்னப்போல வலையம் எழுதுவான். அவனை தட்டி எவன் கேட்ப்பான். பிரட்சினையின் வீரியம் தெரியாமல் ம*** போல எழுத்தாதே!!!//

ச‌ரி, பிர‌ச்சினையில் வீரிய‌ம் தெரிந்த‌ இவ‌ர் என்ன‌ செய்ய‌ போகிறார் என்று தெரிய‌வில்லை.ஒரு வேளை இவ‌ர் சில‌ பேரை வெட்டி சாய்க்க‌ போகிறாரோ என்ன‌வோ?

அப்ப‌டி எண்ண‌மிருந்தால் செய்யுங்க‌ள்...அவ‌ர்க‌ள் உங்க‌ள் ஜாதி காக்க‌ வ‌ந்த‌ தெய்வ‌ங்க‌ள் என்று கூட‌ கும்பிடுங்க‌ள். என‌க்கு ஆட்சேப‌ம் இல்லை..

8. இங்கு பின்னூட்ட‌மிடுப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள். உங்க‌ளுக்கு எதிர் க‌ருத்து இருந்தால் த‌வ‌றில்லை..ஆனால் அதை எழுதும் போது அநாக‌ரீக‌மாக‌ எழுதி உங்க‌ள் த‌ர‌த்தை நீங்க‌ளே குறைத்து கொள்ளாதீர்க‌ள்...அப்ப‌டியெல்லாம் இல்ல‌, என‌க்கெல்லாம் த‌ர‌மே இல்லை...என்று கேவ‌லமாக‌ எழுதினால் அது உங்க‌ள் பாடு!

=======================

Saturday 15 November 2008

சட்டக்கல்லூரி கலவரம் - போலீசுக்கு பாராட்டு

சட்டக்கல்லூரி கலவரம் பற்றி பல பதிவர்கள் எழுதி தீர்த்து விட்டார்கள்..அதனால் நான் சொல்ல வருவதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்..

வழக்கமாக போலீசுக்கு ஒரு கொள்கை உண்டு. பொது இடத்தில் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு செய்யாமல் இரண்டு ரவுடி கும்பல்கள் சண்டையிட்டு கொண்டால் பெரும்பாலும் தலையிட மாட்டார்கள்..இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

ஏனெனில் எந்த ரவுடி கும்பலில் எவன் செத்தாலும் போலீசுக்கும் சமுதாயத்திற்கும் லாபமே. இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை..

சட்டக் கல்லூரி கலவரத்திலும் போலீசார் இந்த அணுகுமுறையையே பின்பற்றி இருப்பதாக தெரிகிறது. அடிதடி நடந்த இடம் ட்ரெயின் ஸ்டேஷனோ, இல்லை மக்கள் வந்து போகும் இடமோ இல்லை. கல்லூரி உள்ளே நடந்து இருக்கிறது..

சரி, சண்டை போட்டது யார்? படத்தில் ஒருவன் கத்தியுடன் ஓடி வருகிறான்..மற்றொரு கும்பல் உருட்டு கட்டை, இரும்பு கம்பியுடன் திரிகிறது.
உண்மையில் மாணவர்களாய் இருந்தால், கத்தியும் இரும்பு கம்பியும் எப்படி வரும்? ஆக இவர்கள் மாணவர்கள் என்பதை விட, ரவுடிகள் என்பது தான் சரி.

கல்லூரிக்கு வருவதாலேயே எல்லாரும் மாணவ மணிகள் என்று ஆகிவிட முடியாது..ஆக அடித்துக் கொண்டிருப்பது இரண்டு ரவுடி கும்பல்கள் என்று தெரிகிறது.

இந்த‌ கும்ப‌லில் எவ‌ன் ஒழிந்தாலும் யாருக்கு ந‌ஷ்ட‌ம்? இவ‌ர்க‌ளா வ‌ந்து ச‌ட்ட‌த்துறையை காப்பாற்ற‌ போகிறார்க‌ள்? இல்லை ச‌ட்ட‌ மேதைக‌ளாக‌ போகிறார்க‌ளா??

நாட்டுக்கு ந‌ஷ்ட‌மா? ச‌முதாயத்திற்கு ந‌ஷ்ட‌மா? ஒரு வேளை அவ‌ர்க‌ள் வீட்டுக்கு வேண்டுமானால் ந‌ஷ்ட‌மாக‌ இருக்க‌லாம்..ஆனால், இத்த‌கைய‌ பிள்ளைக‌ள் இருப்ப‌தை விட‌ இல்லாம‌ல் இருப்ப‌தே நல்லது என்று அவ‌ர்க‌ள் கூட‌ நினைக்க‌க்கூடும்..

இப்ப‌டிப்ப‌ட்ட‌ ர‌வுடி கும்ப‌லில் எவ‌ன் ஒழிந்தாலும் ச‌ரி என்று "க‌ண்டுக்காம‌ல்" விட்ட‌ காவ‌ல் துறையை பாராட்டுகிறேன்!

Saturday 8 November 2008

செளத்தாம்ப்டன் பெண்ணும், ஜப்பனீஸ் யென்னும்!

எச்சரிக்கை: கதையில் நிறைய "F Word" வருகிறது..சட்டியிலிருப்பது அகப்பையில் வருவதை எந்த சொம்பு சனியும் சட்டமோ, சட்டையோ போட்டு தடுக்க முடியாது என்பதால், சென்சார் செய்யாமல் அப்படியே! F Worட் என்றாலே எனக்கு எரிச்சல் என்பவர்கள், படிப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கிறேன் :0(

முன்குறிப்பு: இந்த கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் முற்றிலும் கற்பனையே!. இருந்த, இருக்கிற, இனிமேல் இருக்கப் போகிற யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவன அல்ல!



"Your damn fridge is fucking empty Gemmy..couple of beers...half a bottle of scotch ..and some stupid red wine..I get frigging headache all the time with this red wine crap.. Shall I go out and get some drinks for us?"

"such a dick head you are Niti..I just told you..my mom is visiting us this evening and we are going out with her for my aunt's party...And we are going on holiday tomorrow...do you at least remember my mom?"

"Alright..alright..I remember one nagging old lady...it must be your mom..like daughter..like mom...it must be in the genes...There is no need to see your aunt...anyway, its already seven in the evening..where is your mommy?? with her brilliant victorian brain... ended up in a different street?"

"That's it..not a word more...otherwise you will be holidaying very much with your own boring self..shut up now..or find a new girl friend..You and your stupid grin..."

"mmh...That's not a bad idea...Never thought dumping you would be this easy.."

"I'll kill you bastard..."

When Gemma jumped on Nitin, as if on cue, his mobile phone started ringing..

Sandy Calling...Sandy Calling..
=============

"Who's that Niti?"

"Sandy...Jason Saunders..my ex boss. Remember I worked for the bank?"

"yeah..but that was years ago.."

"Yep..possibly that old fox forgot that...I am not working for him any more.. Gimme a minute Gemmy..I will take this call..back in a minute"

Nitin didn't really want to talk to Sandy...What the hell after all those bitter taste with the bank..but again, its not wise to ignore powerful permanent secretary of state...particularly if you are in financial markets..

"Evening..Niththi here..."

"Niti...my boy...its me..Sandy...long time..no see..how the hell are you"

"Pretty good until this moment...now I am not so sure Sandy.."

There was a laugh at the other end..

"Niti..Niti..Same old sarcastic Niti..You never change..do you?.."

"Apparently so..Otherwise I would have changed my mobile number...wouldn't I ? Anyway, whats up Sandy? You were not even bothered to keep in touch for the last two years..."

"Little boy with big head...It's refreshing to speak to an opinionated ass hole...What do you think Niti?"

"You called me to say I am an ass hole??"

"tut..tut...Nah...Why should I say that? Every one knows it except you.."

Nitin started laughing..

"Righto boss...Seriously, whats up?"

"Nothing so serious boy..I am just wondering what you are upto these days...particularly this evening..."

Not so serious?? means serious..Otherwise why Saunders calls at this time of the day?..

"What do you mean Sandy? Sounds like you are trying to say something.."

"Indeed I am...Can you drive upto London this evening? Where are you now?"

"I am in Southampton..You must be kidding or you are getting very old Sandy...Remember, I dont work for you or the bank anymore. I left or should I say, I was rather cornered to leave?"

"For the love of God, how many times I have to repeat it Niti? Nobody asked you to leave..you are such a adamant moron you left the bank on your own terms..And you are still blaming us?"

"I am not blaming anyone Sandy..I have no fucking time for those shitty games..But the fact is a fucking fact...In anycase, is that why you called me?"

"Not really..I suppose you have noticed that Yen is rapidly strengthening against the yankees..."

"Of course I do..And we all know the frigging reason. don' we? I even submitted a report on this...Well over two years back..And as usual it was fucking NFAed(**), and went to the waste bin.."

"Dont be so sure Niti..We all know your report on Yen Carry Trade..and your report is back again..live and kicking...You think that report can still help us to stop yen surging ahead?"

"Fuck you Sandy...You know its too late to implement the measures that report suggested.. its late...just way too late..It's not only Japanese interst rate..but the Yankees interest rate as well... As the yankees are screwed up there is not much we can do..And we can't stop the sterling taking a hit...shoulder to shoulder we sink with the yankees.."

"Sterling..Thats what I am concerned about Nitin..We can't really afford a currency problem right now. We are assembling a task group..and we want you onboard..."

"Me?? You must be really insane..I remind you again, I dont work for the bank..Neither I want to work for the bank.."

"We all serve the Queen Nitin..Dont forget that...Your name came from the top.."

"From the top?"

"Yes. From THE BOSS himself...He got your report..and he wants you to get involved..."

"The Boss himself??? holy fucking shit! but...even if the boss wants, you can't really take me onboard..I trade markets...currencies too..You cant allow an active trader to get into goverment secrets.."

"No you are not Nitin.. As of 6:15 this evening you dont have any open positions..We know that..And we have given instructions to your broker not to accept any orders from you until furhter notice..."

"JESUS MARY JOSEPH! You bastards still monitoring my accounts?"

"errr..well...not really...but your accounts came to our attention after you made those big losses on Lehman Brothers..."

"I was caught my trousers down.."

"Yeah..Nice to see you in your underwear..once in a while..such a pretty sight"

"Pretty sight?...I know all you bastards are gay up there..I guess you ordered Champagne..didn't you?"

"Certainly ...But couldn't celebrate much as you recovered your losses the next day.."

"I am so sorry to ruin your little party Mr.Saunders.."

"Back to the point Nitin. The boss wants you onboard to work on this problem...On top of your head, can you think of any solution?"

"mmhhh...not many options...We can ask the Japanese to reduce their interest rate...but their rate is already way too low..they dont have much room to dick around..."

"Yes..Thats what I thought.. And also we want you to make a little travel.."

"Little travel? To where?"

"To D.C and Tokyo...Can you meet your old friends from the Hill and the Street and get a feeling as well as some data on outstanding carry trade value?"

"To D.C and Tokyo?? You must be really a looney Sandy...I have plans to go on Holiday...I am off to Santiago and the rest of south america.."

"I am sorry Nitin..I know this sounds ridiculous..but you seems to be the better choice...you wrote that report...and you have already dealt with the Hill boys and Street boys...and you like Japanese girls anyway.."

"Fuck you Sandy..."

"That you can do in Tokyo Nitin...But for now, can you drive up to London right away? I would really appreciate it...We have a meeting in two hours time..."

"Now?? And when do I travel to D.C?"

"There is a flight from Heathrow to Dulles International...around 10:30 this evening.. You have a meeting with Hill boys..Then a flight to New York...Street boys...Then from JFK to Tokyo...Back to London on BA..."

"Fucking hell...You have already planned everything...didn't you? But I dont even have my passport with me..."

"Dont worry Nitin..I already have a passport on your name..just drive upto London...I'll sort out everything else..."

"Do I have an option Sandy?"

"Only if you want to go against the wishes of the Boss..."

"Alright...count me in.."

The phone went dead.
==================================

"Gemmy...honey...will you forgive me?.."

"What? fuck..no, dont say Sandy is a girl and you are sleeping with her..."

"Oh shit..no, no.. not that.. Sandy is sixty three year old man..and he needs a help..."

"on what?"

"some little problem..the bank...currency markets...He wants me to travel to Washington and Tokyo..."

"When?"

"Actually now..."

"Fuck! You agreed to meet my mom and aunt...now you want to run away...and what the fuck about our holiday?"

"errr...sorry honey...I am really sorry...we will rearrange it..please.."

"Fuck off Nitin...Fuck off...and dont ever comeback to Southampton.."

Sometimes....Japanese yen is more important than southampton girl friend??.. with this thought, Nitin started driving towards an enigma called London.

**NFA - No Further Action
========================

P.S.1: On 31st October, Japanese central bank reduced interst rate by 20 basis points, after holding the interst rate at 0.5% for 7 years. The interest rate meeting was actually a tie. But apparently under pressure from the goverment of Japan, the governor voted in favor of interest rate cut. Within weeks the Bank Of England shocked the financial markets by reducing interst rates by 150 basis points, more than expected by the markets.

P.S.2: Nitin is back home in Hampshire, England. He is still trying to get in touch with Gemma, but so far no success.
========================

டேய் லூசு, இத்த‌னை நாளா த‌லைம‌றைவா இருந்துட்டு இப்ப‌ என்ன‌ இங்கிலிபீசுல‌ க‌தை விட்ற‌ன்னு கேக்கிறீங்க‌ளா??

அது ஓண்ணுமில்லீங்க‌..க‌தையில‌ வ‌ர்ற‌ நிதின் மாதிரி, நானும் கொஞ்ச‌ம் அவ‌ச‌ர‌மா ட்ராவ‌ல் ப‌ண்ண‌ வேண்டிய‌தாயிடுச்சி..அத‌னால‌ தான் ஒண்ணும் எழுத‌ முடிய‌லை...இப்ப‌ வ‌ந்துட்டோமில்ல‌?

உன் மொக்கை இல்லாம‌ கொஞ்ச‌ நாளு ந‌ல்லாருந்தோம்னு சொல்ற‌வ‌ங்க‌ளுக்கு....இடையில‌ வ‌ர்ற‌ இன்ப‌ம் நிலைக்காது..துன்ப‌த்தை தாங்க‌ ப‌ழ‌கிக்க‌ங்க‌!