Monday 19 April 2010

எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கருணாநிதியின் ஒப்புதல் வாக்குமூலம்

எண்பது வயதில் பக்கவாதத்தாலும் இன்ன பிற நோய்களாலும் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு சிகிச்சை பெற வந்த பார்வதி அம்மாள் ஒரு கொடிய பயங்கரவாதி போல நடத்தப்பட்டு விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாது வந்த விமானத்திலேயே அந்த விமானம் திரும்பி செல்லும் வரை இருக்க வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் கருணாநிதி வழக்கம் போல 1975 கதையையும் சில புள்ளி விபரங்களையும் அள்ளி விட்டுருக்கிறார்.

அவரது அறிக்கைப்படி, நடந்த விவகாரத்திற்கு முழு பொறுப்பு. 5.5.2003 அன்று, அன்றைக்கிருந்த ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் படியே பார்வதியம்மாள் இந்தியாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், கருணாநிதி மிகத் தெளிவாக, சொல்லாது திட்டமிட்டு மறைத்த விஷயம், அன்றைக்கிருந்த மத்திய ஆட்சி வாஜ்பாய் தலைமையில், திமுகவின் ஆதரவுடன் நடந்த ஆட்சி, கருணாநிதியின் ஆட்சி. மாறன், டி.ஆர். பாலு, ஆ.ராசா என்று திமுகவின் முக்கிய புள்ளிகள் எல்லாம் ஆட்சியில் முக்கிய பங்கும், அதிகாரமும் செலுத்திய ஆட்சி. தமிழ்நாட்டு விவகாரங்களில் மாறனையும் திமுகவையும் மீறியோ, அல்லது அவர்களுக்கு தெரியாமலோ எந்த ஒரு முடிவையும் மத்திய அரசு எடுக்க முடியாத படி, திமுகவின் முழு செல்வாக்கின் கீழ் நடந்த ஆட்சி.
(இதன் பின்னரே முரசொலி மாறன் நவம்பர் 23, 2003ல் இறக்கிறார். உடல்நலமில்லாது இருந்த அவரை, இந்திய அரசின் செலவில் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தது இதே கருணாநிதி தான் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்)

அதாவது, ஜெயலலிதாவின் அதிமுக அரசு எழுதிய கடிதத்தை மாறனும், பாலுவும், கருணாநிதியும் நினைத்திருந்தால் ஏற்காது கிடப்பில் போட்டிருக்கலாம். ஆனால், கருணாநிதியின் மந்திரிகள் முழு ஒப்புதல் அளித்தே பார்வதி அம்மாள் இந்தியா உள்ளே நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது! இதையே சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க கோரியோ, கருணாநிதியை கைது செய்ய கோரியோ ஜெ. அரசு கடிதம் கொடுத்திருந்தால் செய்திருப்பார்களா?

ஆக, இந்த மனிதத் தன்மையே இல்லாத செயலில் பொறுப்பு அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மட்டுமா? இல்லை கருணாநிதிக்கும் பங்கு உண்டா? இதைப் படிப்பவர்களும், திமுக தொண்டர்களும் முடிவு செய்து கொள்ளலாம்.

=============

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், விமான நிலையத்தில் நடந்த விஷயம் எதுவுமே தனக்கு இரவு 12 மணி வரை தெரியாது என்று சொல்லியிருக்கிறார். அதே சமயம், அங்கு சென்னை நகர போலீசும், விமான நிலைய பாதுகாப்பு போலீசும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்வதி அம்மாளை வரவேற்க சென்ற வைக்கோவும், நெடுமாறனும் உள்ளே செல்லவே முடியாது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வருக்கு, தலைநகரின் ஏர்போர்ட்டில் போலீஸ் குவிக்கப்படுவதே தெரியாதாம்..இது என்ன விதமான நிர்வாகம் என்ற கேள்வி எழுந்தாலும் கருணாநிதியின் வயதும் உடல்நிலையும் கருதி அதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், துணை முதல்வர், அன்பழகன், வீராசாமி போன்ற மூத்த மந்திரிகள், டிஜிபி, தலைமைச் செயலாளர் என்று யாருக்குமே தெரியாதா? அப்படியானால், போலீசார் யார் உத்தரவும் இன்றி அவர்களே குவிந்து கொண்டார்களா??

===========================

அடுத்து, இந்திய இறையாண்மை குறித்து நான் கேள்வி எழுப்புவதை சில‌ நண்பர்கள் தனிப்பட்ட முறையில் கண்டித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எழுப்பும் கேள்விகள்,

1. ஒரு எண்பது வயதான, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதிய பெண் எந்த விதத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு சவாலாக இருப்பார் என்று நினைக்கிறீர்கள்? இன்னும் பத்து வருடத்தில் உலகின் சூப்பர் பவர் ஆவோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் நாடு, நடக்கவே முடியாத ஒரு மூதாட்டியை பார்த்து தொடை நடுங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

2. கார்கில் போருக்கு முக்கிய காரணம் முஷாரஃப் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார்கள். உங்கள் இந்தியாவின் ஜனாதிபதியும், பிரதமரும் அவருக்கு விருந்தளித்து அவரை கடவுள் போல நடத்தினார்கள். கார்கில் போரில் இறந்து போனவர்களுக்கு இது இந்தியா செய்த துரோகமா இல்லையா? இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட முஷாரஃப்ஃபுக்கு விருந்தளித்தால் அது இறையாண்மையை பாதுகாப்பதாக அர்த்தமா?


3. பார்வதி அம்மாள் ஒன்றும் விசா, பாஸ்போர்ட் என்று எதுவும் இல்லாது வந்து விடவில்லை. முறைப்படி அனுமதி பெற்றே வந்திருக்கிறார். அவரை அனுமதிக்க முடியாது என்றால் விசா தராது மறுக்க வேண்டியது தானே? உடல் நலமில்லாத ஒருவரை எதற்கு அலைக்கழிக்க வேண்டும்? யாரெல்லாம் தடை செய்யப்பட்ட லிஸ்டில் இருக்கிறார்கள் என்பது விசா வழங்கிய இந்திய தூதரகத்துக்கும் இந்திய தூதருக்கும் தெரியவில்லை, ஆனால் விமான நிலையத்தில் இருக்கும் குடியேற்ற அதிகாரிகளுக்கு பயணி விமானத்தை விட்டு இறங்கும் முன்னரே தெரிகிறது. இது தற்செயலாக நடந்த தவறா இல்லை பிரபாகரனின் தாய் என்பதற்காக அவரை வரவழைத்து அவமானப்படுத்த உங்களின் இந்திய அரசும் தமிழக அரசும் திட்டமிட்டு செய்த இழிவான செயலா?

பின் குறிப்பு: நண்பர் தமிழ்ப்ரியன், எனது முந்தைய பதிவு, அதில் சொல்லி இருக்கும் நபரின் பேச்சு போலவே நரகலான எழுத்து என்று சொல்லியிருக்கிறார். நன்றி தமிழ்ப்ரியன். நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. அந்த எழுத்துக்காக நான் முழு மனதுடன் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், அரசியல் மேடையில் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேவலமாக பேசுவதை விட, என் எழுத்து கேவலமாக இல்லை என்றே நான் இன்னமும் நினைக்கிறேன். நன்றி.

Saturday 17 April 2010

விஷக்கிருமி!

என்றைக்கோ ஒரு நாள் இந்த நபரை டிவியில் பார்த்து விட்டு இவன் ஒரு விஷக் கிருமி என்று சரியாக சொன்னவரை மீண்டும் நினைத்துப் பார்க்கத் தான் வேண்டியிருக்கிறது. பெரிய அளவில் விபரம் தெரிந்த பருவம் இல்லையென்றாலும் இப்படி ஒரு நபரை ஒரு காலத்தில் உயர்வாக நினைத்தோமே என்று ஒரு குற்ற உணர்ச்சி நீண்ட காலமாக உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது. இந்த ஒரு செயலுக்காகவே இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்து எத்தனை முறை என்னை செருப்பால் அடித்துக் கொண்டாலும் பாவம் மிச்சம் இருக்கத்தான் செய்யும்.


நான் ஒன்றும் தேவலோகத்தில் சஞ்சரிக்கவில்லை. செத்தவரின் உடலை தர லஞ்சம் கேட்கும் கடவுள் பக்தி உள்ள கணவான்கள், அறுபது வயது விதவையை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சார காவலர்கள், ஊர்க்கடைகளின் இங்கிலீஷ் போர்டுக்கு தார் பூசி விட்டு தன் பேரன் பேத்திகளுக்கு வடமொழி பெயரிட்டு தமிழ் வளர்க்கும் டாக்டர்கள் என்று பலரையும் பார்த்து தான் இருக்கிறேன்.

ஆனால், அதனினும் கேவலமான மனிதர்களை சந்திக்கக் கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, அப்படி யாரேனும் இருப்பார்கள் என்று நினைக்கவும் இல்லை.

ஆனால், அப்படி ஒரு நபர் இருக்கிறார். எந்த ஒரு சபை நாகரீகமும், மனிதாபிமானம் என்ன, மனிதத் தன்மையே இல்லாத விஷக்கிருமிகள் இருக்கத்தான் செய்கின்றன.

மனைவி, துணைவி என்று மூன்று பெண்களுடன் குடும்பம் நடத்திக் கொண்டே ஒருவனுக்கு ஒருத்தி என்று வாய்க் கூசாது கலாச்சாரம் பேசும் அந்த நபர் அரசியல் மேடையில் வாய் திறந்து நரகலை கக்கியிருக்கிறார்.
"இந்த அம்மையார் யார் யாரையோ பார்த்து `பதி பக்தி இல்லாதவர்' என்று சொன்னார். ஆனால் இவர் காட்டிய பதி பக்தி இதுதான். கணவரை போன்றவருக்கு ஒரு நோய் நொடி என்றதும், அவருக்கு வேலையே வேண்டாம், வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று சொன்ன உத்தமி"
இது ஒரு மூத்த அரசியல்வாதி, எண்பது அகவையை கடந்தவன் என்று தன்னையே வியந்து கொள்ளும் ஒரு நபர் பேசும் பேச்சா?? கணவரைப் போன்றவர் என்று இந்த நபருக்கு எப்படி தெரியும்?? அப்படி அந்தரங்களில் நுழைந்து பார்த்தால், விபச்சாரியிடம் போய்விட்டு சர்வீஸ் சரியில்லை என்று காசு கொடுக்காது ஓடி வந்த சிலரின் அசிங்கங்க‌ளையும் பேச வேண்டி வருமே??
================

இந்த நபரின் வாய்மொழி தான் இப்படி அழுகிய பிணம் போல நாறுகிறது என்றால் அரசியல் செயல்பாடுகளும் அப்படித் தான் இருக்கிறது. எண்பதை கடந்த நோய்வாய்ப்பட்ட, கணவனையும் மகனையும் இழந்து சிறையில் அடைபட்டிருந்த மூதாட்டிக்கு சென்னையில் இறங்க அனுமதியில்லை. அவர் ஒன்றும் அரசியல் நடத்தி ஒரு மகன் முதல்வர், மற்றொரு மகன் மத்திய மந்திரி, மகள் எம்.பி, பேரனுக்கும் மந்திரி பதவி, நாலாயிரம் கோடி சொத்து, ப்ரைவேட் ஜெட், ப்ரைவேட் தீவு என்று குடும்பத்துக்கு சொத்தும் பதவியும் சேர்க்க வரவில்லை. மருத்துவ சிகிச்சைக்கு தான் வந்தார்.

ஆனால், அவர் விமானம் விட்டு இறங்கக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது!! இப்படி ஒரு கேவலமான செயலை வேறு எங்கேனும் கேள்விப்பட்டதில்லை. இதை செய்தவர்கள் எப்படிப் பட்ட இழிபிறவிகளாக இருக்க முடியும்??

ஒரு எண்பது வயது நடக்கமுடியாத நோய்வாய்ப்பட்ட மூதாட்டியால் உங்களின் இறையாண்மைக்கும் இன்ன பிற மயிருக்கும் பங்கம் வருமென்றால் என்ன விதமான அரசாங்கம் நாடு அது??

பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு இன்றைக்கு சொம்பு தூக்கும் கூட்டம் இந்த நபரின் காலை மட்டுமல்ல, கழுவாத பின்புறத்தைக் கூட நக்கலாம்.ஆனால் என்றாவது ஒரு நாள் சரித்திரம் சரியாக எழுதப்படும். அன்றைக்கு உன் பெயர் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் உமிழப்படும்!

Wednesday 7 April 2010

திறக்கக் கூடாத கதவு 2: இஸ்லாம் தலையை வெட்டச் சொல்கிறதா?

எல்லாருக்கும் ஒரு பெயர் இருக்கிறது. சில பெயர்கள் பெற்றோர் வைப்பவை, சில பெயர்கள் எமினெம் போல சம்பந்தப்பட்டவர்களே வைத்துக் கொள்வது. அவர் பெயர் அலி சபாத்.

அலி சபாத் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இதைப் படிக்கும் மிடில் ஈஸ்ட் நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். அவர் லெபனானை சேர்ந்தவர். ஐந்து குழந்தைகளின் தகப்பன். லெபனானின் பெரும்பான்மை மதமான இஸ்லாமியர். தொழில் முறையில் ஒரு டி.வி. நிகழ்ச்சியாளர். டி.வி நிகழ்ச்சி என்றால் யாரோ எழுதி யாரோ இசையமைத்த பாடலை நோகாமல் யாருக்கோ டெடிகேட் செய்யும் நிகழ்ச்சி அல்ல, ஒரு வகையில் ஆவி அமுதா போல, தமிழ்நாட்டின் எண்ணற்ற திருட்டு சாமியார்கள் போல குறி சொல்லும் நிகழ்ச்சி.

இஸ்லாமின் விதிகளின் படி குறி சொல்லுதல், உருவ வழிபாடு போன்றவை கடுமையான குற்றங்கள். ஒரு இஸ்லாமியரான அவருக்கும் அது தெரிந்தே இருக்கும். சரி குறி சொன்னதுடன் நிறுத்தி இருக்கலாம். ஆனால் எல்லா இஸ்லாமியர்களுக்கும் இருப்பது போல கடமையோ அல்லது கனவோ, மெக்கா/மெதினா புனிதப் பயணம் செய்ய அவருக்கும் தோன்றி இருக்கிறது.

விதி சில நேரங்களில் புனிதப் பயணம் என்ற பெயரிலும் வரும் போலிருக்கிறது. புனிதப் பயணமாக சவுதி அரேபியா சென்ற அவர், 2008ல் சவுதி அரேபியாவின் மத பாதுகாப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 2008லிருந்து இரண்டு வருடங்களாக அவரது நிலை யாருக்கும் தெரியவில்லை. அவரது மனைவி குழந்தைகள் உட்பட.
சமீபத்தில் அவருக்கு மத ரீதியான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மரண தண்டனை சென்ற வெள்ளியன்று (ஆமாம், புனித வெள்ளி தான்) நிறைவேற்றப்படுவதாக இருந்த நிலையில் அலி சபாத்தின் வழக்கறிஞரும் மற்ற பல மனித உரிமை அமைப்புகளும் செய்த முயற்சியின் விளைவாக தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அன்றைக்கு நடப்பதாக இருந்தது மட்டுமே தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர தண்டனை இன்னமும் மாற்றப்படவில்லை. எந்த நேரத்திலும் அவரது தலை துண்டிக்கப்படலாம்.

அலி சபாத் குறி சொல்லும் நிகழ்ச்சி நடத்தியது சரியா, பகுத்தறிவான செயலா என்ற கேள்விகளை விடுத்து, அவர் யார் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தியதாகவோ, பொது மக்கள் கூடும் இடங்களிலும் அலுவலகங்களிலும் குண்டு வைத்ததாகவோ இல்லை ஓடும் ரயிலில் பீக் அவரில் ஏறி குண்டு வைத்ததாகவோ தெரியவில்லை.

அவர் செய்த ஒரே குற்றம் இஸ்லாமால் தவறு என்று சொல்லப்பட்ட ஒரு செயலை செய்ததே.

சம்பந்தப்பட்டவர் லெபனானை சேர்ந்தவர். புனித பயணமாக வந்த மாற்று நாட்டவரை சவுதி மத போலீஸ் கைது செய்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சவுதி அரசு, அல் குரானையே அரசியல் சட்டமாக அறிவித்திருக்கும் ஒரு நாடு. அங்கு சட்டம் என்றால் இஸ்லாமின் ஷரியா சட்டமே.

குரானை அரசியல் சட்டமாக அறிவித்து ஷரியா சட்டத்தை பின்பற்றும் ஒரு நாடு மதத்தின் பெயரால் மாற்று நாட்டவர் ஒருவரின் தலையை வெட்ட உத்தரவிடுகிறது என்றால், எழும் கேள்வி, உண்மையிலேயே இஸ்லாமும் குரானும் இது போன்ற சில்லறை குற்றங்களுக்கு தலையை வெட்டவும் கை காலை வெட்டவும் உத்தரவிடுகிறதா? எல்லையற்ற அருளாளனால் அருளப்பட்டதாக சொல்லப்படும் குரானில் உண்மையிலேயே இப்படி உத்தரவுகள் இருக்கிறதா? இப்படி சொல்லியிருந்தால் அது என்ன விதமான கருணை?

==================
சரி, அல்குரான் சட்டம், அலி சபாத்தின் தலை என்று இதை கடந்து போய்விடலாம். ஆனால் உங்கள் தலைக்கு எப்படியோ இதில் என் தலைக்கு நிச்சயமாக ஆபத்து இருக்கிறது.

ச‌வுதியின் ஷரியா சட்டப்படி, அயல் நாட்டவர்களும் மாற்று மதத்தினவரும் கூட விதிவிலக்கல்ல. இதை படிக்கும் நீங்கள் எப்படியோ, ஆனால் எனக்கு இஸ்லாம் மீதோ அல்லது வேறு எந்த ஒரு மதத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்பதால் மது அருந்துதல், பன்றி மாமிசம் உண்ணுதல் போன்ற விஷயங்களை நான் விரும்பி கொண்டாட்டத்துடன் தான் செய்து கொண்டிருக்கிறேன். விரும்பி இல்லாவிட்டாலும் விழாக்களின் போது மற்றவர்களுக்காக கோவில்களுக்கும், சர்ச்சுக்கும் கூட செல்வது உண்டு. வேறு வழியின்றி முழங்காலிட்டோ இல்லை என்றைக்கும் கண் திறக்காத கல்சிலைகளின் முன் கைகட்டி நிற்பதும் கூட உண்டு.

அப்படியானால் என்றைக்காவது சவுதி சென்றால் என் தலையும் துண்டாக்கப்படும் வாய்ப்புண்டா? உலகில் இருக்கும் அறுநூறு கோடி பேரில் சுமார் முப்பது சதவீதம் இஸ்லாமை கடைபிடிப்பவர்கள் என்று வைத்துக் கொண்டாலும் மீதி இருக்கும் சுமார் 420 கோடி பேர் நிலை என்ன? இப்படி தலைகளை துண்டித்துக் கொண்டே போனால் உலகத்தில் எத்தனை தலைகள் மிஞ்சும்?

தொடர்புடைய சுட்டிகள்:

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8598134.stm

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8600398.stm

http://edition.cnn.com/2010/WORLD/meast/03/31/saudi.arabia.sorcery/index.html

படம் உதவி: சி.என்.என் மற்றும் பிபிசி