Saturday 5 June 2010

வினவு புகழ் சிவராமன் மன்னிப்பு கேட்பாரா?

வாய்ச் சொல்லில் வீரடி கிளியே
வஞ்சனைகள் செய்வாரடி கிளியே
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலையென்றும்
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே செப்பித் திரிவாரடி கிளியே
செய்வதறியாரடி கிளியே

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே!

இது வேறு யாருக்கு பொருந்துகிறதோ நேற்று வரை நான் பெரிய மதிப்பு வைத்திருந்த அன்பின்(!) தோழர் சிவராமனுக்கு நன்றாகவே பொருந்துகிறது.

செய்த தவறுக்கு முகத்திற்கு முன் வந்து நெஞ்சில் வாள் பாய்ச்சுபவன் எதிரி. தவறை சுட்டிக் காட்டி கண்டிப்பவன் நண்பன். எதுவும் செய்யாமல் முதுகில் குத்துபவன்??? என்ன பெயர்?? முதுகில் குத்துபவர்களுக்கு என்ன பெயர்?? உலக இலக்கியங்களிலும், உலகப்படங்களிலும் சரி, உள்ளூர் இலக்கியங்களிலும் உள்ளூர் படங்களிலும் சரி...ஒரே பெயர் தான்...துரோகி...

எனக்கு நட்பு பெரிதல்ல கொள்கை தான் பெரிது..அதற்காக எந்த நட்பையும் இழக்க நான் தயாராக இருக்கிறேன். சொல்கிறார் அன்புக்குரிய தோழர்....நட்பா கொள்கையா என்று வந்தால் கொள்கை முக்கியம் தான்...ஆனால், கொள்கை வீரர்கள் யாரும் முதுகில் வாள்பாய்ச்சுவதில்லை தோழரே...அப்படி பாய்ச்சுபவன் பெயர் வீரனல்ல...வேறு ஒன்று!

வினவை ஆதரிப்போம் வாருங்கள்...அழைத்தார் அண்ணன்...அதிலே சொல்கிறார். "ஒருவேளை நான் எழுதியிருந்தாலும் அப்படித்தான் எழுதியிருப்பேன். ஏனெனில் வரிக்கு வரி வினவுத் தோழர்களின் இடுகையை ஆதரிக்கிறேன்.". ..அண்ணனின் நேர்மைத் திறம் அந்த "ஒருவேளை" என்ற ஒற்றை வார்த்தையில் தான் இருக்கிறது...அண்ணன் சொல்ல மறந்தது அல்லது மறைத்தது அந்த இடுகையை எழுதிக் கொடுத்ததே அவர் தான். சுகுணா திவாகர் (நன்றி சுகுணா) வந்து முகத்திரைகளை கிழித்த பின், இவரும் உலகின் ஒப்பற்ற நாட்டாமை வினவு(களும்) வருகிறார்கள்...ஆமாம், அவர் எழுதிக் கொடுத்ததும் இருக்கிறது...ஆனால், அது மட்டுமே இல்லை!

இந்த வெண்ணை வெட்டி விளக்கத்தை மணிகண்டன் அன்றைக்கு வினவு இடுகையில் கேட்கும் போதே சொல்லியிருக்கலாமே?? அல்லது பின் குறிப்பு சொன்ன கொள்கை வீரர் சிவராமன் அண்ணனாவது சொல்லியிருக்கலாமே??

இந்த வீரர் நர்சிம்மை (மறுபடியும் உங்கள் பெயரை இழுப்பதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் நர்சிம். உங்கள் மீது எனக்கு எந்த வன்மமும் இல்லை, உங்களை வைத்து நான் பிழைப்பு நடத்தவும் முயற்சிக்கவில்லை. ஆனால், வேறு வழியின்றி உங்கள் பெயரை கொண்டு வரத் தான் வேண்டியிருக்கிறது)...எங்கே விட்டேன்...ஆம், கொள்கை வீரர் அண்ணன் வீர வினவு புகழ் சிவராமன் நர்சிம்மை கண்டித்து அந்த இடுகையை தனது தளத்திலே எழுதியிருந்தால் இவரை மிகவும் மதிக்கலாம்...கொள்கைக்க்காக நட்பை துறந்த வீர நாட்டாமை என...ஆனால் சுகுணா திவாகர் சொல்லும் வரை வாய் திறக்கவில்லையே இவரும் இவரது நீதிமான் வினவு தோழர்களும்.

அடுத்து ஆணாதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் உலக நீதித் தோழர், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தோழர் சொல்கிறார்.

" “பர்தா நற்குடி” பிரச்சினையில் இந்துப் பெண்களின் மானம் கப்பலேற்றப்பட்டதாக பொங்கி எழுந்த இந்துப்பதிவர்கள் இப்போது ஒரு ‘இந்து’ பெண் பதிவர் மீது நடத்தப்பட்டிருக்கும் கொடூரத்தைக் கண்டு மேல் கீழ் வாய்மூடி இருப்பதற்கு காரணமென்ன? சுஜம்லாவை எதிர்த்து பொங்கி எழுந்த மரண மொக்கை பதிவரான கலகலப்பிரியா என்ற வீராங்கனை இப்போது கயவன் நர்சீமுக்கு எதிராக ரவுத்திரம் பழகாமல் இருப்பது ஏன்? ஏனெனில் முல்லையின் மானத்தை விட ஒரு பாப்பானின் மானம் பெரிதல்லவா? ஆக இங்கும் இந்துப் பதிவுலகம் அப்படியேதான் செயல்படுகிறது."

உலகப்படம் பார்த்து உலக இலக்கியம் படித்து நுண்ணர்வை வளர்த்துக் கொண்ட கொள்கை வீர கோமானே...நற்குடியில் பிறந்தவர்கள் பர்தா அணிவார்கள் என்று சொல்லி உலகில் பர்தா அணியாத சுமார் இருநூறு கோடிப் பெண்கள் நாறக்குடியில் பிறந்தவர்கள், கன்னமிடும் கள்வருக்கு அன்னமிடும் பெண்டீரை தாமாக தாரை வார்க்கும் கூட்டம், திறந்து வைத்த பண்டங்கள் என்று சொன்ன பதிவை எதிர்த்து நீங்கள் என்ன எதிர் வினை புரிந்தீர்கள்?? உலகப்படம் பார்த்து ஆஹா நமக்கு எவ்ளோ புரிகிறது என்று சுயமோகத்தில் மூழ்கி இருந்தீர்களா?... ஒன்றும் சொன்னதாகவே தெரியவில்லையே?? ஆமாம், நாங்கள் கலகலப்ரியாவுக்கு கம்பு தூக்கிக் கொடுத்தோம், ஆனால், நீங்கள் யாருக்கு சொம்பு தூக்கிக் கொண்டிருந்தீர்கள்?? இன்றைகு துள்ளிக் குதிக்கும் நியாயவான்கள் சிவராமன் அவர்களும் வினவுகளும் அன்றைக்கு எழுதுகிறார்கள்.


"ஆக முசுலீம் பெண்பதிவர் சுமஜ்லா தனது சுதந்திரம் பாதுகாப்பு கருதி இந்த பர்தா சங்கதியை பதிவு செய்திருக்கிறார் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். இல்லையேல் நாளை ஒரு முசுலீம் பெரிசு ” காலம் கெட்டுக்கிடக்கு, நம்ம சுமஜ்லா பொண்ணு ஏதோ இன்டர்நெட்டுக்காரனுக கூட்டத்துக்கு போய்ட்டு வந்துச்சாமே?” என்று வாங்கிவிட்டால் என்ன செய்வது?".

அதாவது, பர்தா அணிந்தால் நற்குடி மற்றதெல்லாம் நாறக்குடி என்று எழுதினால் அகில உலக ஆணாதிக்க, பார்பனீய எதிர்ப்பு வாதிகளான அண்ணன் சிவரமானுக்கும் வினவுக்கும் அது சுகந்தம்...சொக்க தங்கம்...


இப்படி புனுகு பூசி எழுதியும், மவுனம் சாதித்தும் தங்கள் போலி முற்போக்க்குத் தனத்தை அவர்களுக்கே ஐயம் திரிபற நிறுவிக் கொண்ட சிவராமன் தான் இன்றைக்கு கேட்கிறார்... ரவுத்திரம் பழகும் மரண மொக்கை இந்து பதிவர் வீராங்கனை கலகலப்ரியா இதற்கு ஏன் ரவுத்திரம் கொள்ளவில்லை?? (என்ன எழுதினாலும் கலகலப்ரியா சொந்தமாக சொந்தப் பெயரில் எழுதுகிறார்...கலகலப்ரியா எழுதுவது மரண மொக்கை என்றால் ஒண்ணாங்கிளாஸ் பையன் போல எங்கோ படித்ததை வாந்தியெடுப்பதற்கு என்ன பெயர்? ஒளக எள‌க்கியத்தை அறிமுகப்படுத்துதல்??)

அட உலக அறிவாளிகளே...எத்தனை உலக இலக்கியம் படித்தும் உலகப்படம் பார்த்தும் உங்கள் அடிப்படை அறிவு இந்த அளவுக்குத் தான் இருக்கிறது....யாராவது மயிலாப்பூருக்கு வழி கேட்டால் இவன் எந்த ஜாதி, வடகலையா தென்கலையா என்று யோசிக்கும் அளவுக்கு துறு ஏறிப் போயிருக்கும் உங்கள் ஜாதி வெறி மூளைகளில் கடைசி வரை ஒன்று ஏறவேயில்லை...பர்தா நற்குடி பதிவு எந்த இரண்டு தனிப்பட்ட பதிவர்களுக்கிடையில் நடந்த பிரச்சினை அல்ல...பொதுப்படையாக அடிமைத் தனத்தை நிறுவ வைக்கப்பட்ட கூற்று. ஆனால், நர்சிம்மின் புனைவு பிரச்சினையில் நீண்ட காலமாக இரு பதிவர்களுக்கிடையில் நடந்து வரும் பிரச்சினையின் வெளிப்பாடு என்ற விதமாக இருக்கிறது...பொதுவாக எதுவும் தவறாக எழுதாத ஒருவர் (ஆமாம், நீங்கள் எத்தனை தான் பிரச்சாரம் செய்தாலும் இதற்கு முன்பு நர்சிம் இப்படி எழுதியதில்லை!) இப்படி திடீரென்று மயிரே போச்சி என்ற ரீதியில் எழுதினால் என்ன பிரச்சினை...ரெண்டு பக்கமும் தெரியாம எப்படி கருத்து சொல்வது என்ற நினைப்பிலேயெ பலரும் பெரும்பாலும் மவுனமாக இருக்கிறார்கள்...

ஆனால், பர்தா நற்குடி விஷயத்தில் ஆழ்ந்த மவுனம் சாதித்து தன் முற்போக்கை நிரூபித்த அண்ணன் சிவராமனுக்கு இது தான் கொண்டாட்டமாக போய்விட்டது. ஜாதிக்கு புனுகு பூசும் பழமைபேசி, கோமாளி குசும்பன், இந்து வீராங்கனை பதிவர் கலகலப்ரியா, லக்கி லுக்குக்கு உரிமை இல்லை என்றெல்லாம் பூந்து விளையாடி இருக்கிறார்....

பழமைபேசி அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி எந்த விஷயத்திலும் அடபுடா பொறுக்கி தாயோளி என்று பேசியதும் இல்லை...எழுதியதும் இல்லை. எனக்கே அவருடன் தீவிர கருத்து வேறுபாடு உண்டு...அது அவருக்குமே தெரியும்...ஆனாலும் இன்றைக்கும் அவர் தரம் தாழ்ந்து போவதுமில்லை...எனது ஜாதி என்ன என்று ஆராய்ச்சி செய்து XYZ ஜாதிக்காரனின் பொறுக்கித் தனம் என்று இடுகை இடுவதுமில்லை..

குசும்பனை பொறுத்தவரை என்றைக்குமே அவரது நிலைப்பாடு ஒன்றாகத் தான் இருக்கிறது. முடிந்தவரை பிரச்சினை தீர்க்க நினைப்பது தான் அவரது எண்ணமாக இருக்கிறதே தவிர என்றைக்கும் அவன் எந்த ஜாதி, இவன் எந்த ஜாதி என்று கண்டுபிடித்து அதை ஊதி விட்டு தனது அஜெண்டாவை நிறைவேற்றும் எண்ணம் அவருக்கு இல்லை.

ஏ.சி. ரூமில் உட்கார்ந்து கொண்டும் கட்சி அலுவலகத்தில் கதை பேசியும் "ஒளக இலக்கியம்" வளர்க்கும் உங்களை விட, மொட்டை மாடியில் ஒளகப்படம் பார்த்து அய்யோ எப்படில்லாம் கஷ்டப்படறாங்க...அதை அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்துட்டான் என்று சிலாகிக்கும் உங்களை விட..வன்புணர்ச்சி வன்புணர்ச்சி என்று வரிக்கு வரி சொல்லிக் கொண்டே ஜேவிபி பற்றி வாய் திறக்காத வினவுகளை விட‌...கலகலப்ரியாவுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும், உலக இனங்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டே குடும்பத்துடன் கற்பழிப்பு, கழுத்தில் டயரை மாட்டி எரித்துக் கொல்லுதல் என்று இனவெறி பிடித்த ஜம்னா விமுக்தி பெரமுனா(ஜேவிபி) என்ற பொறுக்கி கம்யூனிஸ்ட்டுகளாலும் ஜாதி மத இனவெறியர்களாலும் சொந்த மண்ணிலிருந்தே துரத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையும் அதன் துயரமும் தெரியும்....அதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்று எல்லாராது வாழ்க்கையும் எழுத முடியாத வகையில் அவலமானதும் தெரியும். .. அவர் ஒன்றும் உங்களைப் போல உலகப்படம் பார்த்து துயரத்தை நிழலில் பார்த்தவரல்ல...ரத்தமும் சதையுமாக நேரில் பார்த்தவர்...பாதிக்கப்பட்டவர்.... இன்றைக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நேரிலேயே நின்று போராடிக் கொண்டு தான் இருக்கிறார்......போலித் தோழர் சிவராமன், வினவு...நேரடியாகவே சொல்கிறேன்..உங்கள் எல்லாரையும் விட, ஒரு படி என்ன ஆயிரம் படி அவர் மேலாகத் தான் இருக்கிறார்.

எத்தனை நாள் வன்மமோ...தெரியவில்லை...கிடைத்த கேப்பில் நர்சிம்மை ஆதரிக்கும் லக்கி லுக் என்ற யுவகிருஷ்ணா....லக்கி லுக்குக்கு இனி எதையும் கேட்க எந்த தகுதியும் இல்லை என்று கொள்கை வீரர் சிவராமன் போட்டுத் தாக்கியிருக்கிறார். நர்சிம்மின் அந்த இடுகையிலேயே அந்த இடுகையில் ஒப்புதல் இல்லை என்று தான் அவர் சொல்லியிருக்கிறார். நற்குடி பர்தா பிரச்சினையிலும் கேபிள் சங்கரின் இடுகைக்கான பின்னூட்டத்தில் தான் அவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். அதற்கும் இடுகை போடவில்லை...இதற்கும் இடுகை போடவில்லை....இரண்டு பிரச்சினையிலுமெ அவரது நிலைப்பாடு ஒன்றாகத் தான் இருக்கிறது. இடுகை போட்டால் தனது நிலை இது தான் என்று தெளிவாகவே "தனது தளத்தில்" இடுகை போடுவார். எல்லாரும் கருணாநிதியை கும்மிய போது கூட அவர் தனது நிலை என்பதை வெளிப்படையாகவே சொல்லியிருந்தார். ஆனால், கொள்கைக்காக நட்பை துறப்பதாக சொல்லும் நீங்கள் சிவராமன்?? (என்ன மயிருக்குடா என்னை இழுக்கறிங்க என்று நீங்கள் கேட்டாலும்...மன்னிக்க லக்கிலுக்...சில பிம்பங்களை உடைக்க உங்கள் எழுத்துக்களின் அடிப்படையில் உங்களை இழுக்க வேண்டியிருக்கிறது)

போகிற போக்கில் செக்ஸ் டார்ச்சர் செய்தவர்கள், டார்ச்சருக்கு உள்ளானவர்கள் என்று சில பேருடைய பெயர்களையும் உதிர்த்திருக்கிறீர்கள்....என் பெயரை என்ன ஆதாரத்துடன் எழுதின என்று ஒருவர் கேட்டிருக்கிறார்.(மன்னிக்க நண்பரே...உங்கள் பெயரை எழுதினால் அவர்கள் செய்த தவறை நானும் செய்வதாகி விடும்...ஆனால், உங்கள் கேள்வியை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்)...இன்றைக்கு வரைக்கும் சிவராமனும் சரி, அவரது தோழர்களும் சரி அதற்கு பதில் சொல்லவில்லை....எந்த ஒரு பொறுப்பும் இன்றி சில பெண் பதிவர்களின் பெயரையும் எழுதியிருக்கிறீர்கள்.....உங்களின் கிசுகிசு எழுதும் வெறியை வெளிப்படுத்தியிருக்கிறீர்களே தவிர, அதனால் அவர்களின்,முக்கியமாக அந்த பெண் பதிவர்களின் குடும்ப வாழ்க்கையில் எத்தனை பிரச்சினை வரும் என்று யோசித்தீர்களா உலக அறிவாளி அவர்களே?? உள்ளூர் சமூகமே தெரியாமல் உலக இலக்கியம் பேசுவது கோழி முட்டையை பார்க்காதவன் டயனோஸர் முட்டையை கண்டுபிடித்ததாக சொல்வது போல இருக்கிறது...எவன் என்ன ஆனால் என்ன யார் குடி கெட்டால் என்ன எனக்கு வியாபாரம் நடந்தா சரி என்று எழுதுவதற்கு ஒரு பெயர் இருக்கிறது..அதற்கு பெயர் மஞ்சள் பத்திரிக்கை...

இந்த பிரச்சினையில் முதலில் ஜாதியை இழுத்தவர் தோழர் காமராஜ் (நர்சிம்மின் எழுத்தை கண்டிப்பதே பதிவின் அடிப்படை என்ற புரிதலில் அவரது இடுகைக்கு நான் ஓட்டும் போட்டிருக்கிறேன்)...இவர்கள் எல்லாரும் சொல்வது, "அவ பொறப்பு அப்படி மாப்ள" "நம்ம வளப்பு வேற" என்ற வார்த்தையாடலில் நர்சிம்மின் பார்ப்பன வெறி தெறிக்கிறதாம். (இந்த வார்த்தைகளை வைத்து தான் கொள்கைக் கோமான் சிவராமன் நர்சிம்மை பார்ப்பன வெறியன் என்று கண்டுபிடிக்கிறார்)...

ஆனால்...உலக இலக்கியம் படித்தும் "ஒளகப்படம்" பார்த்தும் அறிவை வளர்க்கும் பெருமதிப்புக்குரிய அறிவுஜீவிகளே...உலகப்படம் இருக்கட்டும்...உள்ளூர் சங்கதி தெரியுமா?? என்றைக்காவது மதுரையின் தெருக்களில் சட்டையின் கையை ஏற்றி விட்டுக் கொண்டு லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு சண்டையிட்டு இருக்கிறீர்களா? உருண்டு புரண்டு இருக்கிறீர்களா?? அதில் வந்து விழும் வார்த்தைகளை கவனித்து இருக்கிறீர்களா?? ஆனால்...நான் சண்டை போட்டிருக்கிறேன்.....அரிவாளால் வெட்டு வாங்கிய காயம் இன்றைக்கும் என் இடது காலில் இருக்கிறது....ஒன் பொறப்பே இப்பிடித் தானாடா என்று கேட்கப்பட்டிருக்கிறேன்...அதற்கு அர்த்தம் ஒங்க ஜாதியே இப்பிடித் தான்டா என்றில்லை..தாயளி...நீ பொறந்ததில இருந்தே இப்பிடித் தானாடா என்று தான்! நம்ம வளப்பு அப்பிடியில்ல மாப்ள என்று சொல்வது...பெரும்பாலும் வகையில்லாமலோ துணிவில்லாமலோ சரிக்கு சரியாக சண்டை பிடிக்க விருப்பமில்லாமலோ விலகிச் சொல்பவர்கள் சொல்வது...சந்தேகம் இருந்தால் அரசரடியிலோ அனுப்பானாடியிலோ பழங்காநத்தத்திலோ திருப்பரங்குன்றத்திலோ திருமங்கலத்திலோ வண்டியூரிலோ வாடிப்பட்டியிலோ அண்ணா நகரிலோ போய் சண்டைப் போட்டு பாருங்கள் ...என்ன அர்த்தத்தில் அந்த வார்த்தைகள் பேசப்படுகிறது என்று...உலக இலக்கியம் என்ற பெயரில் கட்டுரை மட்டுமே எழுதும் சிவராமனை விட, நர்சிம் நன்றாகவே நேட்டிவிட்டி எழுதுவார்...தேவையானால் அவரது "வெத்தலைப் பெட்டி" படியுங்கள்!

இன்றைக்கு நர்சிம் தான் செய்தது தவறு தான், மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லி விட்டார் (அதை ஏற்கிறார்களா இல்லையா என்பது பாதிக்கப்பட்ட பதிவரின் முழு உரிமை...பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் அவர் சொல்வது தான் முடிவாக இருக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு)..

ஆனால் தேவையின்றி மஞ்சள் பத்திரிக்கை பாணியில் குசும்பன், லக்கிலுக், கலகலப்ரியா,விதூஷ், பழமைபேசி, தண்டோரா, குசும்பன், செக்ஸ் டார்ச்சர் செய்த பதிவர்கள், செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளான பதிவர்கள் ((நேம் டிராப்பிங் சிவராமன்?) என்று தன் வன்மத்தை தீர்த்துக் கொண்ட் சிவராமனும் வினவு கும்பலும் (ஆமாம், அதில் எழுதுபவர்கள் ஒருவர் என்று தெரியவில்லை) மன்னிப்பு கேட்பார்களா?? அதற்கான அறமும் துணிவும் நேர்மையும் அவர்களிடம் இருக்கிறதா??

தனிப்பட்ட சந்தேகம் 1: தோழர் சிவராமன் தான் வினவு என்ற பெயரில் எழுதுகிறாரா இல்லை வினவு தான் சிவராமன் என்ற பெயரில் எழுதுகிறாரா?? இல்லை இரண்டு பேரும் வேறு வேறு என்றால், சிவராமன் எழுதி வினவு தளத்தில் வேறு பெயரில் இதுவரை எத்தனை இடுகைகள் வந்திருக்கின்றன??

தனிப்பட்ட சந்தேகம் 2: தாம்ப்ராஸ் சங்கத்தில் நர்சிம்மின் தந்தை உயர் பொறுப்பில் இருக்கிறார்...அதனால் நர்சிம்மின் சிந்தனையே பார்ப்பன சிந்தனை என்று சொல்லும் சிவராமன் அவர்கள் ஆர்க்குட்டில் வன்னிய பேரவையில் சேர்பவர்களைப் பற்றி என்ன சொல்கிறார்?? அமெரிக்காக் காரன் கண்டுபிடித்த டெக்னாலஜியின் அடிப்படையில் அமைந்த ஆர்க்குட் போன்ற தளங்களில் கூட வன்னிய பேரவை, நாடார் பேரவை, செட்டியார் சங்கம், கவுண்டர் பேரவை என்ற் குழு அமைப்பதை குறித்து வினவு என்ன சொல்கிறது?? ஊருக்கு இளைச்சவன் ஆண்டி...குனிய குனிய கும்மு என்ற ரீதியில் பாப்பானீயம்??

பி.கு 1: முந்திய இடுகையில் நர்சிம்முக்கு கண்டனம்...இந்த இடுகையில் என்ன வக்காலத்து....நர்சிம் எதுனா ஓசி குவாட்டர் வாங்கி குடுத்தாரா என்று யோசிப்பவர்கள் இரண்டு இடுகையையும் மீண்டும் படிக்கவும்...எவரிடமும் வாங்கிக் குடிக்கும் தூரத்திலோ நிலையிலோ நான் இல்லை...நான் குடிக்கும் அளவுக்கு யாராலும் வாங்கிக் கொடுக்கவும் முடியாது!

பி.கு 2: இந்த இடுகையில் எனது சொந்த காரணங்களும் இருக்கிறது...எனது பதிவின் தலைப்பில் இருக்கும் In the end, we remember not the words of our enemies, but the silence of our friends....என்ற வரிகளை சிலர் கவனித்து இருக்கலாம்...அது இன்றைக்கு இந்த இடுகைக்காக எழுதப்பட்ட வரிகளல்ல...நான் பதிவு எழுத ஆரம்பித்த நாளிலிருந்தே அது தான் இருக்கிறது....நண்பர்கள் என்ற பெயரில் துரோகிகள் பாய்ச்சிய வாள்கள் இன்றைக்கும் என் முதுகில் இருக்கிறது.....எட்டு வருடமாக இல்லாது நேற்றிலிருந்து அதில் மீண்டும் ரத்தம் கசிய ஆரம்பித்திருக்கிறது. அதுவும் இந்த இடுகைக்கு ஒரு காரணம்.

பின் குறிப்பு 3: இதில் வினவு, சிவராமன் தவிர்த்து பெயர் எழுதப்பட்ட மற்ற பதிவர்கள் (குசும்பன், லக்கி லுக், பழமைபேசி, கலகலப்ரியா,விதூஷ், நர்சிம், தண்டோரா) எல்லாரிடத்திலும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...உங்களை இழுக்கும் நோக்கமில்லை...ஆனால், உங்கள் பெயர்கள் கொள்கை வீரன் சிவராமனால் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டதால் வேறு வழியின்றி எடுத்தாளப்பட்டிருக்கிறது. மன்னிப்பீர்களாக...

விடுபட்டு விட்ட முக்கியமான ஒன்று: இந்த விஷயத்தின் உண்மைத் தமிழனின் இடுகையை முற்றிலுமாக ஆதரிக்கிறேன்.

70 comments:

அது சரி(18185106603874041862) said...

கருத்தை பகிர விரும்புபவர்கள் இடுகையை ஆதரித்தோ எதிர்த்து கருத்து சொல்லலாம்...ஆனால், தயவு செய்து தனி மனித தாக்குதல்களை தவிர்க்கவும்.

கல்வெட்டு said...

பிரதர் ,
நீங்க கோக் குடிக்காதீங்க அது அமெரிக்க பானம்.

ஆனா அமெரிக்காரன் நடத்தும் பிளாக், ட்வீட்டர், அப்புறம் டொமைன் சர்வீஸ் எல்லாதுலேயும் வெக்கம் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்.

பிளாச்சிமடாவில் தயாரித்து அமெரிக்காவிற்கா அனுப்புறான்? இந்திய சொம்புகள்தான் குடிக்கின்றன.

நிலத்தையும் தண்ணீரையும் வீண் செய்வதில் திருப்பூர்காரன் முதல் ஆம்பூர்காரன் வரை எல்லாரும் இந்தியப் பிரஜைகளே.
இவர்கள் எல்லாரும் வணிகத்தொடர்பு கொண்டுள்ளது அம்ரிக்ககாரனிடம். அடிப்படையே சரியில்லை.

கொடுமை என்னவென்றால் பிளாச்சிமடா மக்கள் போராடுவது கம்யூனிஸ்ட் கருமாந்திரங்களை எதிர்த்தே.

மக்களுக்கான சித்தாந்தம் என்று இல்லாமல், தனக்குப்பிடித்த சித்தாந்தம் ஒன்றை திணிப்பது என்றால் இப்படித்தான்.

* லீனா வைப் போட்டுதாக்கு
(அவர் நிந்தனை செய்தது கம்யூனசிக் கடவுள் அல்லவா)

* ஆண் பதிவர்களை கிசுகிசுவாக எழுது
அவர்கள் எல்லாம் ஆட்டுக்குட்டியைக் கல்யாணம் செய்துள்ளார்கள். எனவே அவர்களின் மனைவிமார்கள் பெண்கள் அல்ல. அவர்கள் எங்களிடம் பிராது ஏதும் கொடுக்கவில்லை அதனால் அவர்களின் கஸ்டம் எங்களுக்கு கஸ்மாலம் போன்றது.)

**

உலகசினிமா, இலக்கியம், புண்ணாக்கு, மின் நவீனம் , பின் நவீனம் என்று இவர்கள் விடாத சரடா? அதையும் பார்த்து " ஆ " சிலர் அண்ணே உங்களவுக்கு எனக்கு எழுத வராது என்று பைத்தியமாய் புலம்புவார்கள்.

**

சுய வாழ்க்கையில் சரியில்லாதவர்கள் எந்த நவீனம் படித்தாலும் அல்லது இந்த இசத்தில் மதத்தில் கருமாந்திரத்தில் இருந்தாலும் ...

ஆங் ..பதிவு எதைப் பற்றியது... விடுங்க..அது முடிவது யார் கையிலும் இல்லை.


:-((((

உண்மைத்தமிழன் said...

தங்களுடைய பெரும் ஆதரவிற்கு எனது நன்றிகள் ஸார்..!

Mahesh said...

நீங்கள் கேட்டுவிட்டீர்கள்...பதில்கள் கிடைப்பது சந்தேகமே :(

Sanjai Gandhi said...

வழக்கம் போல டாப் சாரே.. சிவா சவால் விட்டிருக்கிறார்.. இதுங்க இன்னும் ஒளிஞ்சிகிட்டு இருக்குதுங்க..


அய்யய்யோ, இந்த கல்வெட்டு அடங்கவே மாட்டேங்கிறாரே :))

vasu balaji said...

அந்த இடுகையைப் பார்த்தால் நர்சிம்மின் அருவெருப்பான இடுகை, அதனால் ஏற்பட்ட முல்லையின் மன உளைச்சலை அவ்வப்போது தொட்டுக்கொண்டு மார்க்கட்டிங் செய்யப்பட்டவை ஆணாதிக்கம், பார்ப்பனீயம், சாதீயம். சம்பந்தப் படாதவர்களை இழுத்து விட்டதும் இதற்காகத்தான்.

/இப்படி திடீரென்று மயிரே போச்சி என்ற ரீதியில் எழுதினால் என்ன பிரச்சினை...ரெண்டு பக்கமும் தெரியாம எப்படி கருத்து சொல்வது என்ற நினைப்பிலேயெ பலரும் பெரும்பாலும் மவுனமாக இருக்கிறார்கள்.../

இதுவே பெரிய குற்றம் இவர்களுக்கு. இதற்காக செந்தழல் ரவி போன்றவர்கள் கூட கண்டனம் ஏன் தெரிவிக்கவில்லை என்பதையும் தாண்டி, கலகலப்ரியாவை கள்ள மவுனம் என்று தரக்குறைவாக பேசும் அவசியம் என்ன வந்தது?

உண்மைத்தமிழன் இடுகையிலும் பின்னூட்டங்களில் இன்னொரு புயலுக்கு வித்திடப்படுகிறது வேதனை. ஒரு ‘சகோதரர்’ பெண்களுக்கு ஆறுதல் தன் இடுகையில் சொல்லிவிட்டு உண்மைத்தமிழன் இடுகையில் அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு நடந்தால் என்ற வாழ்த்தைக் கூறும் இழவு. சை.

எப்போதும் போல் பட்சபாதமற்ற விவாதத்துக்கும், ஒட்டுமொத்தமாக ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்படினும் இவர்களுக்காகப் பேசுவதால் சல்லிக்காசுக்கு பிரயோசனமில்லை என்பதால் விடுபட்டுப் போனவர்களுக்கு குரல் கொடுத்தமைக்கு நன்றி அது சரி.

குடுகுடுப்பை said...

...கலகலப்ரியாவுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும், உலக இனங்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டே குடும்பத்துடன் கற்பழிப்பு, கழுத்தில் டயரை மாட்டி எரித்துக் கொல்லுதல் என்று இனவெறி பிடித்த ஜம்னா விமுக்தி பெரமுனா(ஜேவிபி) என்ற பொறுக்கி கம்யூனிஸ்ட்டுகளாலும் ஜாதி மத இனவெறியர்களாலும் சொந்த மண்ணிலிருந்தே துரத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையும் அதன் துயரமும் தெரியும்....அதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்று எல்லாராது வாழ்க்கையும் எழுத முடியாத வகையில் அவலமானதும் தெரியும். .. அவர் ஒன்றும் உங்களைப் போல உலகப்படம் பார்த்து துயரத்தை நிழலில் பார்த்தவரல்ல...ரத்தமும் சதையுமாக நேரில் பார்த்தவர்...பாதிக்கப்பட்டவர்.... இன்றைக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நேரிலேயே நின்று போராடிக் கொண்டு தான் இருக்கிறார்......போலித் தோழர் சிவராமன், வினவு...நேரடியாகவே சொல்கிறேன்..உங்கள் எல்லாரையும் விட, ஒரு படி என்ன ஆயிரம் படி அவர் மேலாகத் தான் இருக்கிறார்.//
அது அது இது சரி

Anonymous said...

ada pongada neengalum unga kupigalum

whitecat said...

ada da ada daaaaaaa

vasu balaji said...

/"வினவு புகழ் சிவராமன் மன்னிப்பு கேட்பாரா?"//

மாட்டேன்னு மறுத்தா அது ஆணாதிக்கமா, பார்ப்பனீயமா?

செல்வ கருப்பையா said...

உங்கள் கருத்துக்களுடன் முழுதும் உடன்படுகின்றேன். சிவராமனைத் தெரியவில்லை - வினவு நேர்மையாக பதில் அளிக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

கலகலப்ரியா said...

omg.. i luv it.. அப்டின்னு சொல்லத்தான் வருது.. ஆனா என்னோட பேரு இருக்கிறதால... அப்டிச் சொன்னா.. boast - அப்டின்னுடுவாங்க... அதனால கொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்றேன்.. :)
________________________________

அதுசரி.. இதில நீங்க கேட்டிருக்கிற கேள்வி எல்லாத்துக்கும் பதில் சொல்லும் பக்குவம் இருக்கிறதா அவர்களுக்கு..? உங்க பார்வைக் கோணம் வேறு... அவர்களால் அதை கொஞ்சம் கூட எட்ட முடியாது..

உலகப்படமோ.. எதுவோ.. யாரோ சொன்னதைக் கேட்டுத் தலையை ஆட்டிக் கொண்டிருப்பவர்கள்.. சுயமாகச் சிந்திக்கும் தன்மையை அடியோடு இழந்தவர்கள்..

_______________________________

தீர்க்கமான பார்வையும்.. நேரிடையான கேள்வியும்... நேர்மையான பதிலும்.. உங்களுக்கு வாய்த்திருக்கிறது.. அதைச் சம்மந்தப்பட்டவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்களா என்பது கேள்விக்குறி..
_________________________________

// குடுகுடுப்பை said...
...கலகலப்ரியாவுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும், உலக இனங்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டே குடும்பத்துடன் கற்பழிப்பு, கழுத்தில் டயரை மாட்டி எரித்துக் கொல்லுதல் என்று இனவெறி பிடித்த ஜம்னா விமுக்தி பெரமுனா(ஜேவிபி) என்ற பொறுக்கி கம்யூனிஸ்ட்டுகளாலும் ஜாதி மத இனவெறியர்களாலும் சொந்த மண்ணிலிருந்தே துரத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையும் அதன் துயரமும் தெரியும்....அதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்று எல்லாராது வாழ்க்கையும் எழுத முடியாத வகையில் அவலமானதும் தெரியும். .. அவர் ஒன்றும் உங்களைப் போல உலகப்படம் பார்த்து துயரத்தை நிழலில் பார்த்தவரல்ல...ரத்தமும் சதையுமாக நேரில் பார்த்தவர்...பாதிக்கப்பட்டவர்.... இன்றைக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நேரிலேயே நின்று போராடிக் கொண்டு தான் இருக்கிறார்......போலித் தோழர் சிவராமன், வினவு...நேரடியாகவே சொல்கிறேன்..உங்கள் எல்லாரையும் விட, ஒரு படி என்ன ஆயிரம் படி அவர் மேலாகத் தான் இருக்கிறார்.//
அது அது இது சரி//

do i deserve this..? :(.. காலையில் நான் படித்த முதல் இடுகை.. தொண்டை அடைத்துக் கொண்டிருக்கிறது.. இதயம் சற்று இலேசானது போலவும்.. பாரமானது போலவும் தோன்றுகிறது..

(குடுகுடுப்பை நீங்க இது கவிதைன்னு எதிர்க்கவுஜ போட வேணாம்.. அது ரெடி பண்றேன்..)

கடைசியில் மன்னிப்புக் கேட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.. (எதுக்காவது ஒரு கண்டனம் சொல்லிடுறேன்..)

குசும்பன் said...

//குசும்பன், லக்கி லுக், பழமைபேசி, கலகலப்ரியா,விதூஷ், நர்சிம், தண்டோரா)//

இங்கேயும் என் பெயரா? அவ்வ்வ்! அண்ணே தலைநகரம் என்கிற படத்தில் வடிவேலு ரவுடிங்ககூட தானா போய் ஏறுவார் போலீஸ் ஏத்திக்கமாட்டார் யார் டா நீ கோமாளிமாதிரி இருக்கன்னு விரட்டிவிடுவார். ஆனா இங்க நான் ஒருவாரமா என்னை இறக்கிடுங்க என்று கதறுகிறேன் ஆள் ஆளுக்கு ஜீப்பில் ஏத்திக்கிட்டே இருக்கிங்க:)))

ரைட்டு விடுங்க:))) டேக் இட் ஈசி!

vasu balaji said...

follow up

இராகவன் நைஜிரியா said...

I love your article. Keep going.

பிரபாகர் said...

நண்பா! உங்கள் நெஞ்சில் தட்டி பாராட்டுகிறேன்! (இனிமேல் முதுகு வேண்டாமே)... எண்ணத்தை அப்படியே எழுத்தாக்கி மனதை லேசாக்கியிருக்கிறீர்கள். உங்களை நினைத்து பெருமையாய் இருக்கிறது.

உலகிலேயே மிகவும் கொடுமையானது, கொடூரமானது சினேகத்துரோகம்தான்!

பிரபாகர்..

வெண்பூ said...

சுந்த‌ரை மூக்கில் குத்திய‌போது வ‌லித்த‌தை விட‌ இப்போது சிவ‌ராம‌ன் முதுகில் குத்திய‌து வ‌லிக்கிற‌து ந‌ண்ப‌ரே... இனி இங்கே யாரை ந‌ம்புவ‌து, யாரை ந‌ம்பாம‌ல் இருப்ப‌து ஒன்றுமே புரிய‌வில்லை... ஒவ்வொரு முறை யாராவ‌து ப‌திவுல‌கில் என்ன‌ கிடைத்த‌து என்று கேட்ட‌ போதெல்லாம் ந‌ட்பைத்த‌விர‌ வேறென்ன‌ வேண்டும் என்று நானே கேட்டிருக்கிறேன்... இவ‌னைப் போன்ற‌வ‌ர்க‌ளின் ந‌ட்புக‌ள் கிடைக்காம‌லே இருந்திருக்க‌லாம்.. :(((

Anonymous said...

கம்பு சொம்பு என்ன அர்த்தம்

மதுரை நக்கல்
பிறப்பு வளர்ப்பு எதார்த்தம்

Unknown said...

எழுந்து நின்று சல்யூட் வைக்கிறேன் அதுசரி.

நீங்கள் எழுதியிருப்பது மிகச்சரி...

சிவராமன் என்ற வினவு இப் பிரச்சனையை வேறு தளத்துக்கு இழுத்துச் சென்று விட்டார்.

// அவர் ஒன்றும் உங்களைப் போல உலகப்படம் பார்த்து துயரத்தை நிழலில் பார்த்தவரல்ல...ரத்தமும் சதையுமாக நேரில் பார்த்தவர்...பாதிக்கப்பட்டவர்.... இன்றைக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நேரிலேயே நின்று போராடிக் கொண்டு தான் இருக்கிறார்......போலித் தோழர் சிவராமன், வினவு...நேரடியாகவே சொல்கிறேன்..உங்கள் எல்லாரையும் விட, ஒரு படி என்ன ஆயிரம் படி அவர் மேலாகத் தான் இருக்கிறார்//

வரிக்கு வரி வழிமொழிகிறேன்.

Unknown said...

//இதற்காக செந்தழல் ரவி போன்றவர்கள் கூட கண்டனம் ஏன் தெரிவிக்கவில்லை என்பதையும் தாண்டி, கலகலப்ரியாவை கள்ள மவுனம் என்று தரக்குறைவாக பேசும் அவசியம் என்ன வந்தது?//

நானும் கேக்கிறேன்.

Unknown said...

// Anonymous said...
கம்பு சொம்பு என்ன அர்த்தம்

மதுரை நக்கல்
பிறப்பு வளர்ப்பு எதார்த்தம்//

கம்பு எடுத்துக் கொடுக்குறது - ஒரு விசயத்தை செய்ய தூண்டிவிடுவது

சொம்பு எடுத்து வருவது - ஒருவர் ஒரு விசயத்தை செய்த பின் அவருக்கு சப்போர்ட் செய்வது.

Anonymous said...

muran thodaiya illai muttaal thodaiya poththikkittu poiyaa vanduttaaru periya pudungi.

Anonymous said...

//ஆனால் தேவையின்றி மஞ்சள் பத்திரிக்கை பாணியில் குசும்பன், லக்கிலுக், கலகலப்ரியா,விதூஷ், பழமைபேசி, தண்டோரா, குசும்பன், செக்ஸ் டார்ச்சர் செய்த பதிவர்கள், செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளான பதிவர்கள் ((நேம் டிராப்பிங் சிவராமன்?) என்று தன் வன்மத்தை தீர்த்துக் கொண்ட் சிவராமனும் வினவு கும்பலும் (ஆமாம், அதில் எழுதுபவர்கள் ஒருவர் என்று தெரியவில்லை) மன்னிப்பு கேட்பார்களா?? அதற்கான அறமும் துணிவும் நேர்மையும் அவர்களிடம் இருக்கிறதா??//

மானங்கெட்டவர்களின் மன்னிப்பு ஒரு விசயமா ?

ரோஸ்விக் said...

வாதங்களும், கருத்துக்களும் மிகச்சரி... வழிமொழிகிறேன்.

ரோஸ்விக் said...

நான் குடிக்குமளவுக்கு யாரும் வாங்கி கொடுக்க முடியாது... - சரியான நகைச்சுவை. மிகவும் சிரித்தேன். :-)

Anonymous said...

பேர் போட்டு கருத்துச் சொல்லும் அளவுக்கு துணிவில்ல அதுசரி. நீங்க கேள்வி கேட்டிருக்கும் ஆட்கள் அப்படி.

கேள்விகள் போக பிடித்தவை:

In the end, we remember not the words of our enemies, but the silence of our friends

உண்மை. நானும் இதை அனுபவித்திருக்கிறேன்.

நான் குடிக்கும் அளவுக்கு யாராலும் வாங்கிக் கொடுக்கவும் முடியாது

:-)

என்றைக்காவது மதுரையின் தெருக்களில் சட்டையின் கையை ஏற்றி விட்டுக் கொண்டு லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு சண்டையிட்டு இருக்கிறீர்களா? உருண்டு புரண்டு இருக்கிறீர்களா?? அதில் வந்து விழும் வார்த்தைகளை கவனித்து இருக்கிறீர்களா?? ஆனால்...நான் சண்டை போட்டிருக்கிறேன்.....அரிவாளால் வெட்டு வாங்கிய காயம் இன்றைக்கும் என் இடது காலில் இருக்கிறது....

இதைப் படிக்கும் பொழுது இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது. :-)

http://www.youtube.com/watch?v=eVlzNgof44g

sunil kumar said...

ஆனாலும் நீங்க இப்படியெல்லாம் பதிவு போட்டு பொரட்சி ,தோழர், பார்பனீய எதிர்ப்பு , பெண்ணுரிமை ன்னு ரொம்ப நல்லா போய்னு இருக்குற ஒரு பொளப்புல இப்படி மண்ணை போடறது நல்லவா இருக்கு?
கல்வெட்டு சார் நீங்க ரொம்ப மோசம் சார் இப்படியெல்லமா தெளிவா கேள்வி கேக்குறது? அவிகளுககு "வினவ" மட்டும் தானே தெரியும் வெளங்க வைக்க தெரியாதுன்னு உங்களுக்கு தெரியாதா? ஆனாலும் ஒருத்தன் கொஞ்சம் நல்லா கல்லா கட்டுனா உங்களுக்கெல்லாம் புடிக்காதே

Anonymous said...

ஹே, நம்ம கல்வெட்டு பத்தி யாராவது ஏதாவது சொன்னா இங்க இருந்து பிளேனே வரும். அதுக்கு ஸ்பான்சர் பிரபல தொழிலதிபர் சஞ்சேய்காந்தி. =))

Anonymous said...

இன்று தான் வானம்பாடி ஐயாவோட பக்கம் பார்த்து வந்தேன். அருமை என்று நான் சொல்லவேண்டியதில்லை. ஆனால் மன்னிப்பு கேட்பதற்கு கண்டங்கள்.

////"வினவு புகழ் சிவராமன் மன்னிப்பு கேட்பாரா?"//

மாட்டேன்னு மறுத்தா அது ஆணாதிக்கமா, பார்ப்பனீயமா?////
எப்ப‌டி சார்? எப்படி உங்களால் இப்படி எல்லாம் கேட்க முடிகிறது.

அது சரி(18185106603874041862) said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இன்னும் சிறிது நேரத்தில் பதிலிடுகிறேன்...

Santhose said...

yo very nice post. I am your regular reader and visit your page every day (expecting some posts).
I want you to start Vikaramathian and Vedalam again. pl.....


Santhose

Sridhar Narayanan said...

//கல்வெட்டு said...
பிரதர் ,
நீங்க கோக் குடிக்காதீங்க அது அமெரிக்க பானம்.

ஆனா அமெரிக்காரன் நடத்தும் பிளாக், ட்வீட்டர், அப்புறம் டொமைன் சர்வீஸ் எல்லாதுலேயும் வெக்கம் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்.

பிளாச்சிமடாவில் தயாரித்து அமெரிக்காவிற்கா அனுப்புறான்? இந்திய சொம்புகள்தான் குடிக்கின்றன.

நிலத்தையும் தண்ணீரையும் வீண் செய்வதில் திருப்பூர்காரன் முதல் ஆம்பூர்காரன் வரை எல்லாரும் இந்தியப் பிரஜைகளே.
இவர்கள் எல்லாரும் வணிகத்தொடர்பு கொண்டுள்ளது அம்ரிக்ககாரனிடம். அடிப்படையே சரியில்லை.

கொடுமை என்னவென்றால் பிளாச்சிமடா மக்கள் போராடுவது கம்யூனிஸ்ட் கருமாந்திரங்களை எதிர்த்தே.

மக்களுக்கான சித்தாந்தம் என்று இல்லாமல், தனக்குப்பிடித்த சித்தாந்தம் ஒன்றை திணிப்பது என்றால் இப்படித்தான்.

* லீனா வைப் போட்டுதாக்கு
(அவர் நிந்தனை செய்தது கம்யூனசிக் கடவுள் அல்லவா)

* ஆண் பதிவர்களை கிசுகிசுவாக எழுது
அவர்கள் எல்லாம் ஆட்டுக்குட்டியைக் கல்யாணம் செய்துள்ளார்கள். எனவே அவர்களின் மனைவிமார்கள் பெண்கள் அல்ல. அவர்கள் எங்களிடம் பிராது ஏதும் கொடுக்கவில்லை அதனால் அவர்களின் கஸ்டம் எங்களுக்கு கஸ்மாலம் போன்றது.)
//

நாம நினைக்கிறது எல்லாம் இவர் எழுதிடறார் முதல்லயே. :)

மற்ற பதிவர்களின் பெயரை குறிப்பிட்டதற்கு நீங்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டவிதம் அருமை. :)

Sanjai Gandhi said...

//அதுக்கு ஸ்பான்சர் பிரபல தொழிலதிபர் சஞ்சேய்காந்தி. =)//

தோடா... நல்லா கிளப்பறாய்ங்கய்யா பீதிய.. ஏற்கனவே ஒரு டீலிங் பெண்டிங்ல இருப்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன்..

அது சரி(18185106603874041862) said...

//
கல்வெட்டு said...
பிரதர் ,
நீங்க கோக் குடிக்காதீங்க அது அமெரிக்க பானம்.

ஆனா அமெரிக்காரன் நடத்தும் பிளாக், ட்வீட்டர், அப்புறம் டொமைன் சர்வீஸ் எல்லாதுலேயும் வெக்கம் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்.

பிளாச்சிமடாவில் தயாரித்து அமெரிக்காவிற்கா அனுப்புறான்? இந்திய சொம்புகள்தான் குடிக்கின்றன.

நிலத்தையும் தண்ணீரையும் வீண் செய்வதில் திருப்பூர்காரன் முதல் ஆம்பூர்காரன் வரை எல்லாரும் இந்தியப் பிரஜைகளே.
இவர்கள் எல்லாரும் வணிகத்தொடர்பு கொண்டுள்ளது அம்ரிக்ககாரனிடம். அடிப்படையே சரியில்லை.

கொடுமை என்னவென்றால் பிளாச்சிமடா மக்கள் போராடுவது கம்யூனிஸ்ட் கருமாந்திரங்களை எதிர்த்தே.

மக்களுக்கான சித்தாந்தம் என்று இல்லாமல், தனக்குப்பிடித்த சித்தாந்தம் ஒன்றை திணிப்பது என்றால் இப்படித்தான்.

* லீனா வைப் போட்டுதாக்கு
(அவர் நிந்தனை செய்தது கம்யூனசிக் கடவுள் அல்லவா)

* ஆண் பதிவர்களை கிசுகிசுவாக எழுது
அவர்கள் எல்லாம் ஆட்டுக்குட்டியைக் கல்யாணம் செய்துள்ளார்கள். எனவே அவர்களின் மனைவிமார்கள் பெண்கள் அல்ல. அவர்கள் எங்களிடம் பிராது ஏதும் கொடுக்கவில்லை அதனால் அவர்களின் கஸ்டம் எங்களுக்கு கஸ்மாலம் போன்றது.)

**

உலகசினிமா, இலக்கியம், புண்ணாக்கு, மின் நவீனம் , பின் நவீனம் என்று இவர்கள் விடாத சரடா? அதையும் பார்த்து " ஆ " சிலர் அண்ணே உங்களவுக்கு எனக்கு எழுத வராது என்று பைத்தியமாய் புலம்புவார்கள்.

**

சுய வாழ்க்கையில் சரியில்லாதவர்கள் எந்த நவீனம் படித்தாலும் அல்லது இந்த இசத்தில் மதத்தில் கருமாந்திரத்தில் இருந்தாலும் ...

ஆங் ..பதிவு எதைப் பற்றியது... விடுங்க..அது முடிவது யார் கையிலும் இல்லை.


:-((((

//

கல்வெட்டு அண்ணே,

சும்மா நச்சு நச்சுன்னு கரெக்டா சொல்றீங்க......நொய்யல் ஆற்றையும், அமராவதியையும் சாக்கடையா ஆக்குனது யாரு? என்னைக்காவது ஈரோடு தாண்டி பன்னாரி பக்கம் போயிருக்காங்களா? அங்க ஆறெல்லாம் நாசமா போயி குளிக்க வேணாம், நடந்து போனாலே கேன்சர் வந்துடும் போலருக்கு...அமெரிககா காரனா அமராவதியை கெடுத்தான்?

உங்கள் கருத்துகளுடன் முற்றிலும் உடன்பாடு.

அது சரி(18185106603874041862) said...

//

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தங்களுடைய பெரும் ஆதரவிற்கு எனது நன்றிகள் ஸார்..!

//

இந்த விஷயத்தில் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் உண்மைத் தமிழன்!

அது சரி(18185106603874041862) said...

//
Mahesh said...
நீங்கள் கேட்டுவிட்டீர்கள்...பதில்கள் கிடைப்பது சந்தேகமே :(

//

பார்ப்போம்...

அது சரி(18185106603874041862) said...

//

SanjaiGandhi™ said...
வழக்கம் போல டாப் சாரே.. சிவா சவால் விட்டிருக்கிறார்.. இதுங்க இன்னும் ஒளிஞ்சிகிட்டு இருக்குதுங்க..

//

நன்றி சஞ்சய்...ஆமா, அவரு இடுகை போட்டு சவால் விட்டுட்டு இருக்காரு...இவங்க அவரு இடுகைக்கு போயி நான் அங்க வேலை பார்க்கலை, இங்க வேலை பார்க்கலைன்னு சொல்றாங்களே தவிர, அவரு யாருக்கிட்ட நடந்துக்கிட்டாருன்னு கூட வேணாம், என்ன செஞ்சாருன்னு கூட சொல்ல துப்பில்லாம இருக்காங்க...என்னத்தை சொல்ல! :((

அது சரி(18185106603874041862) said...

//

வானம்பாடிகள் said...

இதுவே பெரிய குற்றம் இவர்களுக்கு. இதற்காக செந்தழல் ரவி போன்றவர்கள் கூட கண்டனம் ஏன் தெரிவிக்கவில்லை என்பதையும் தாண்டி, கலகலப்ரியாவை கள்ள மவுனம் என்று தரக்குறைவாக பேசும் அவசியம் என்ன வந்தது?
//

என்னவோ எல்லாரும் எல்லா விஷயத்திலும் கருத்து சொல்லிட்ட மாதிரி, அவங்களை மட்டும் கள்ள மவுனம்னு சொல்ல என்ன வந்துச்சி?
இதுக்கு ரவியண்ணன் பதில் சொல்வார்னு நானும் எதிர்பார்க்கிறேன்...

அது சரி(18185106603874041862) said...

//

வானம்பாடிகள் said...

உண்மைத்தமிழன் இடுகையிலும் பின்னூட்டங்களில் இன்னொரு புயலுக்கு வித்திடப்படுகிறது வேதனை. ஒரு ‘சகோதரர்’ பெண்களுக்கு ஆறுதல் தன் இடுகையில் சொல்லிவிட்டு உண்மைத்தமிழன் இடுகையில் அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு நடந்தால் என்ற வாழ்த்தைக் கூறும் இழவு. சை.

//

ஆமா...அவங்க ஆணாதிக்கத்தை எதிர்க்கிறவங்களாம்...இது தான் அவங்க எதிர்க்கிற ஸ்டைல்!

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...

அது அது இது சரி

//

நன்றி குடுகுடுப்பை..

அது சரி(18185106603874041862) said...

//

whitecat said...
ada da ada daaaaaaa

//

என்னவோ சொல்ல வந்து சொல்லாதே போயிட்டீங்க போலருக்கே...

அது சரி(18185106603874041862) said...

//

வானம்பாடிகள் said...
/"வினவு புகழ் சிவராமன் மன்னிப்பு கேட்பாரா?"//

மாட்டேன்னு மறுத்தா அது ஆணாதிக்கமா, பார்ப்பனீயமா?

//

ரெண்டுமில்ல...கம்யூனிஸம்...இல்லாட்டி பொர்ச்சி...

அது சரி(18185106603874041862) said...

//
செல்வ கருப்பையா said...
உங்கள் கருத்துக்களுடன் முழுதும் உடன்படுகின்றேன். சிவராமனைத் தெரியவில்லை - வினவு நேர்மையாக பதில் அளிக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

//

செல்வ கருப்பையா.. வெல்கம் பேக்....இணையத்துல தான் இருக்கீங்களா?? திருப்பி எழுத ஆரம்பிச்சிட்டீங்களா??

vasu balaji said...

அது சரி said...
//ரெண்டுமில்ல...கம்யூனிஸம்...இல்லாட்டி பொர்ச்சி...//

இந்த யிஸம், ஈயம், திக்கம் கடிக்கற கடி தாங்கல நாராயணா:))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

do i deserve this..? :(.. காலையில் நான் படித்த முதல் இடுகை.. தொண்டை அடைத்துக் கொண்டிருக்கிறது.. இதயம் சற்று இலேசானது போலவும்.. பாரமானது போலவும் தோன்றுகிறது..
//

I like to give credit where its due..

//
கடைசியில் மன்னிப்புக் கேட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.. (எதுக்காவது ஒரு கண்டனம் சொல்லிடுறேன்..)

//

நல்லவேளை...சொன்னீங்க..அப்புறம் இதுக்கும் ஏன் கண்டனம் தெரிவிக்கலைன்னு உங்க ஜாதியை கண்டுபிடிச்சிடுவாங்க...

அது சரி(18185106603874041862) said...

//
குசும்பன் said...
//குசும்பன், லக்கி லுக், பழமைபேசி, கலகலப்ரியா,விதூஷ், நர்சிம், தண்டோரா)//

இங்கேயும் என் பெயரா? அவ்வ்வ்! அண்ணே தலைநகரம் என்கிற படத்தில் வடிவேலு ரவுடிங்ககூட தானா போய் ஏறுவார் போலீஸ் ஏத்திக்கமாட்டார் யார் டா நீ கோமாளிமாதிரி இருக்கன்னு விரட்டிவிடுவார். ஆனா இங்க நான் ஒருவாரமா என்னை இறக்கிடுங்க என்று கதறுகிறேன் ஆள் ஆளுக்கு ஜீப்பில் ஏத்திக்கிட்டே இருக்கிங்க:)))

ரைட்டு விடுங்க:))) டேக் இட் ஈசி!

//

நீங்க ஸ்மைலி போட்டிருந்தாலும் நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியுது குசும்பன்....மன்னிப்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி...

அது சரி(18185106603874041862) said...

//
இராகவன் நைஜிரியா said...
I love your article. Keep going.

//

Thanks Raghavan...

அது சரி(18185106603874041862) said...

//
பிரபாகர் said...
நண்பா! உங்கள் நெஞ்சில் தட்டி பாராட்டுகிறேன்! (இனிமேல் முதுகு வேண்டாமே)... எண்ணத்தை அப்படியே எழுத்தாக்கி மனதை லேசாக்கியிருக்கிறீர்கள். உங்களை நினைத்து பெருமையாய் இருக்கிறது.

உலகிலேயே மிகவும் கொடுமையானது, கொடூரமானது சினேகத்துரோகம்தான்!

பிரபாகர்..

//

நன்றி பிரபாகர்...நீங்க முதுகுல தட்ட நினைச்சாலும் என்னோட முதுகுல இடம் இல்லை பிரதர்.....கொஞ்சூண்டு எடம் இருந்துச்சி...அதையும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு ஃப்ரண்ட் யூஸ் பண்ணிட்டார்...

அது சரி(18185106603874041862) said...

//
வெண்பூ said...
சுந்த‌ரை மூக்கில் குத்திய‌போது வ‌லித்த‌தை விட‌ இப்போது சிவ‌ராம‌ன் முதுகில் குத்திய‌து வ‌லிக்கிற‌து ந‌ண்ப‌ரே... இனி இங்கே யாரை ந‌ம்புவ‌து, யாரை ந‌ம்பாம‌ல் இருப்ப‌து ஒன்றுமே புரிய‌வில்லை... ஒவ்வொரு முறை யாராவ‌து ப‌திவுல‌கில் என்ன‌ கிடைத்த‌து என்று கேட்ட‌ போதெல்லாம் ந‌ட்பைத்த‌விர‌ வேறென்ன‌ வேண்டும் என்று நானே கேட்டிருக்கிறேன்... இவ‌னைப் போன்ற‌வ‌ர்க‌ளின் ந‌ட்புக‌ள் கிடைக்காம‌லே இருந்திருக்க‌லாம்.. :(((

//

வலி புரிகிறது வெண்பூ...இன்றைய நிலையில் பதிவுலகில், நட்பைத் தவிர மற்ற எல்லாமும் கிடைக்கிறது :(

(கடைசி வரியில் ஒருமையை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது...)

அது சரி(18185106603874041862) said...

//

Anonymous said...
கம்பு சொம்பு என்ன அர்த்தம்

மதுரை நக்கல்
பிறப்பு வளர்ப்பு எதார்த்தம்

//

நன்றி அனானிமஸ்...

முகிலன் சொல்லியிருப்பது தான் அர்த்தம்.கம்புன்னா தூண்டி விடறது..சொம்புன்னா எதுனா சப்பைக் கட்டு கட்டி சப்போர்ட் பண்றது..

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...


நீங்கள் எழுதியிருப்பது மிகச்சரி...

சிவராமன் என்ற வினவு இப் பிரச்சனையை வேறு தளத்துக்கு இழுத்துச் சென்று விட்டார்.

//

நன்றி முகிலன்...

ஆமா...சிவராமனும் வினவுகளும் இதை வழக்கம் போல தங்கள் அஜென்டாவுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
muran thodaiya illai muttaal thodaiya poththikkittu poiyaa vanduttaaru periya pudungi.

//

நடத்துங்க...சொல்றதுக்கு வேற ஒண்ணியும் இல்லியா?

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
//ஆனால் தேவையின்றி மஞ்சள் பத்திரிக்கை பாணியில் குசும்பன், லக்கிலுக், கலகலப்ரியா,விதூஷ், பழமைபேசி, தண்டோரா, குசும்பன், செக்ஸ் டார்ச்சர் செய்த பதிவர்கள், செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளான பதிவர்கள் ((நேம் டிராப்பிங் சிவராமன்?) என்று தன் வன்மத்தை தீர்த்துக் கொண்ட் சிவராமனும் வினவு கும்பலும் (ஆமாம், அதில் எழுதுபவர்கள் ஒருவர் என்று தெரியவில்லை) மன்னிப்பு கேட்பார்களா?? அதற்கான அறமும் துணிவும் நேர்மையும் அவர்களிடம் இருக்கிறதா??//

மானங்கெட்டவர்களின் மன்னிப்பு ஒரு விசயமா ?

//

நல்லதொரு கேள்வி....

கலகலப்ரியா said...

//(கடைசி வரியில் ஒருமையை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது...) //

like it..! :)

அது சரி(18185106603874041862) said...

//
ரோஸ்விக் said...
வாதங்களும், கருத்துக்களும் மிகச்சரி... வழிமொழிகிறேன்.

5 June 2010 14:43
//

நன்றி ரோஸ்விக்..

அது சரி(18185106603874041862) said...

//
ரோஸ்விக் said...
நான் குடிக்குமளவுக்கு யாரும் வாங்கி கொடுக்க முடியாது... - சரியான நகைச்சுவை. மிகவும் சிரித்தேன். :-)

5 June 2010 14:52
//

அட...அது நகைச்சுவையெல்லாம் இல்லைங்க ரோஸ்விக்...போன மாசம் ஃப்ரண்ட் ஒருத்தன் பர்த்டே பார்ட்டிக்கு வாங்கித் தரேன்னு கூட்டிப் போயி, யப்பே...நம்மால முடியாது சாமீன்னு பாதில ஓடிட்டான்...அப்புறம் என்ன பண்றது....அவனால முடியலைன்னா நாம விட்ற முடியுமா?...நானே காசு போட்டு வாங்கி குடிச்சேன்...:))

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
பேர் போட்டு கருத்துச் சொல்லும் அளவுக்கு துணிவில்ல அதுசரி. நீங்க கேள்வி கேட்டிருக்கும் ஆட்கள் அப்படி.
//

அட...அவ்ளோ பெரிய ரவுடிங்களா அவங்க...அவ்வ்வ்....நான் தான் மேட்டரு தெரியாம பேட்டை தாதாங்க கூட கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கனா...:)))


//
என்றைக்காவது மதுரையின் தெருக்களில் சட்டையின் கையை ஏற்றி விட்டுக் கொண்டு லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு சண்டையிட்டு இருக்கிறீர்களா? உருண்டு புரண்டு இருக்கிறீர்களா?? அதில் வந்து விழும் வார்த்தைகளை கவனித்து இருக்கிறீர்களா?? ஆனால்...நான் சண்டை போட்டிருக்கிறேன்.....அரிவாளால் வெட்டு வாங்கிய காயம் இன்றைக்கும் என் இடது காலில் இருக்கிறது....

இதைப் படிக்கும் பொழுது இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது. :-)

http://www.youtube.com/watch?v=eVlzNgof44g

//

அய்யோ...அந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்...விக்ரம் பிடிச்ச நடிகர்...அப்புறம் பரவை முனியம்மா அந்த பாட்டுல சும்மா கலக்கிருப்பாங்க...லின்க் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் பாஸூ...

அது சரி(18185106603874041862) said...

//

sunil kumar said...
ஆனாலும் நீங்க இப்படியெல்லாம் பதிவு போட்டு பொரட்சி ,தோழர், பார்பனீய எதிர்ப்பு , பெண்ணுரிமை ன்னு ரொம்ப நல்லா போய்னு இருக்குற ஒரு பொளப்புல இப்படி மண்ணை போடறது நல்லவா இருக்கு?
கல்வெட்டு சார் நீங்க ரொம்ப மோசம் சார் இப்படியெல்லமா தெளிவா கேள்வி கேக்குறது? அவிகளுககு "வினவ" மட்டும் தானே தெரியும் வெளங்க வைக்க தெரியாதுன்னு உங்களுக்கு தெரியாதா? ஆனாலும் ஒருத்தன் கொஞ்சம் நல்லா கல்லா கட்டுனா உங்களுக்கெல்லாம் புடிக்காதே

//

சுனில்குமார்,

பொளப்பை கெடுத்தான்டா வர்க்க விரோதின்னு என்னை வெட்டாம இருந்தா சரி :))

ஆமா, கல்வெட்டுக்கு நானும் கண்டனம் தெரிவிச்சிக்கிறேன்...இப்பிடில்லாம் எடக்குமடக்கா கேள்வி கேட்டா அப்புறம் அவங்க எப்படி கடை நடத்தறது?

அது சரி(18185106603874041862) said...

//
அனாமிகா துவாரகன் said...
ஹே, நம்ம கல்வெட்டு பத்தி யாராவது ஏதாவது சொன்னா இங்க இருந்து பிளேனே வரும். அதுக்கு ஸ்பான்சர் பிரபல தொழிலதிபர் சஞ்சேய்காந்தி. =))

//

பீதியை கெளப்பாதீங்க அனாமிகா..நான் அவர் கருத்தோட ஒத்துப் போகிறேன்னு சொன்னாலும் ப்ளேன் அனுப்புவீங்களா? :)))

(ஆமா, அதை சீக்கிரம் அனுப்பி வைங்க...இங்க ட்ராஃபிக் ஜாம்ல இருந்து தப்பிக்க யூஸ் பண்ணிக்கிறேன்)

vasu balaji said...

பாஸ்! இந்த வேதாளம் கடத்தல் ப்ரோஜக்ட் ஒன்னு அப்புடியே நிக்குதே! எப்போ பாஸ் கடத்துவாரு:)))

அது சரி(18185106603874041862) said...

//

அனாமிகா துவாரகன் said...
இன்று தான் வானம்பாடி ஐயாவோட பக்கம் பார்த்து வந்தேன். அருமை என்று நான் சொல்லவேண்டியதில்லை. ஆனால் மன்னிப்பு கேட்பதற்கு கண்டங்கள்.

////"வினவு புகழ் சிவராமன் மன்னிப்பு கேட்பாரா?"//
//

வருகைக்கு நன்றி அனாமிகா...இந்த பிரச்சினையில் தேவையில்லாமல் இழுக்கப்பட்டவர்களின் பெயரையே நானும் இழுத்திருக்கிறேன்...அதற்காகவே அந்த மன்னிப்பு...

அது சரி(18185106603874041862) said...

//

Santhose said...
yo very nice post. I am your regular reader and visit your page every day (expecting some posts).
I want you to start Vikaramathian and Vedalam again. pl.....


Santhose

//

சந்தோஷ்,

என்னது டெய்லி படிக்கறீங்களா?? ஆஹா...இந்த பின்னூட்டத்தை போட்டதே நான் தான்னு கெளப்பி விட்ருவாங்களே :)))

டெய்லில்லாம் வேணாம் பாஸ்...மாசம் ஒரு தடவை படிச்சாலே போதும்...நான் தமிழ்ல "எளக்கியம்" வளக்கறது வெள்ளைக்காரங்களுக்கு பிடிக்கலை போல...நிறைய வேலை வந்துடுது..மாசம் ஒண்ணு எழுதறதுக்கே டைம் கிடைக்க மாட்டேங்குது..

வேதாளம் தான?? அது எங்கனா திரிஞ்சிண்டிருக்கும்...சீக்கிரம் கண்டுபிடிச்சிடறேன்..:))

அது சரி(18185106603874041862) said...

//
ஸ்ரீதர் நாராயணன் said...
//கல்வெட்டு said...
பிரதர் ,
நீங்க கோக் குடிக்காதீங்க அது அமெரிக்க பானம்.


//

நாம நினைக்கிறது எல்லாம் இவர் எழுதிடறார் முதல்லயே. :)

//

கல்வெட்டு பத்தி நீங்க சொல்றதை நானும் ரிப்பீட்டுகிறேன் ஸ்ரீதர் :)

அது சரி(18185106603874041862) said...

//
SanjaiGandhi™ said...
//அதுக்கு ஸ்பான்சர் பிரபல தொழிலதிபர் சஞ்சேய்காந்தி. =)//

தோடா... நல்லா கிளப்பறாய்ங்கய்யா பீதிய.. ஏற்கனவே ஒரு டீலிங் பெண்டிங்ல இருப்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன்..

//

என்னது...நீங்க தொழிலதிபர் இல்லியா? அப்ப நீங்க தொழிலதிபர்னு எல்லாரும் சொல்றது புரளியா? :))

அது சரி(18185106603874041862) said...

//

வானம்பாடிகள் said...
பாஸ்! இந்த வேதாளம் கடத்தல் ப்ரோஜக்ட் ஒன்னு அப்புடியே நிக்குதே! எப்போ பாஸ் கடத்துவாரு:)))

//

நாம தான் பதிவுலகு வந்து படாதபாடு படுறோம்னா அதாவது பாதாள லோகத்துல சந்தோஷமா இருக்கட்டுமே சார்...அங்க பாருங்க, ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், பார்ப்பனீயம், இந்து வெறி, பார்ப்பான், தோர்ப்பான், பொரட்சி, புண்ணாக்குன்னு எதுவும் இல்லியாம்....சாயந்தரம் வேலையை முடிச்சமா...மரத்துல ஏறுனமான்னு பிரச்சினையே இல்லாம தொ(தூ)ங்கிக்கிட்டு இருக்கலமாம்...

vasu balaji said...

/மாசம் ஒண்ணு எழுதறதுக்கே டைம் கிடைக்க மாட்டேங்குது../

அல்லோ! இது எதிர்வினை. இதை படைப்புன்னு கள்ளக் கணக்கில் கொண்டு வருவதை கண்டிக்கிறேன்:)).

ராஜ நடராஜன் said...

வழக்கம்போலவே தாமதமான பின்னூட்டம்.

எழுத்துல உறுமல்ங்கிறது இதுதான்.

ஜேம்ஸ் கேமரூன் எப்படியிருக்காரு?நல்லாப் போகுதாமா?ஏதாவது பிரச்சினைன்னா தோழர்களுக்கு மின்மடல் அனுப்பச்சொல்லுங்க.அலேக்கா மக்கள் பார்வையை திசை திருப்பறதுக்கு செம ஐடியாக்கள் இலவசமாக இடுகையாக தரப்படும்.

1,2 சந்தேகத்தோட நிறுத்திகிட்டிங்க போல இருக்குது:)

கல்வெட்டு said...

:-))


ம.க.இ.க மற்றும் அவர்களது ஆதரவுத்தளமான் வினவிற்கு எந்த அரசியல் நெறிகளும் இல்லை என்பதைச் சொல்லவே அந்த எடுத்துக் காட்டுகள்.

கோக் அமெரிக்க பானம் அதைக் குடிப்பவன் மொள்ளமாறி, அமெரிக்கா நாடு சரியில்லை என்று கதறும் இவர்கள் எந்த அடிப்படையில்

பிளாக்கர் (பல தோழர்களின் பதிவு முகவரி பிளாகர்தான்)

ஈமெயில் vinavu@gmail.com

பேஸ்புக் http://www.facebook.com/vinavungal

அமெரிக்க நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்துகிறார்கள்?

அப்புறம் வினவு டாட் காமிற்கு டொமைன் சர்வீஸ் செய்யும் அமெரிக்க கம்பெனி என்று ..தங்களின் வசதிக்கு ஏற்ப பயன்படுத்துக் கொள்கிறார்கள் .

தமிழ்மணமே அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம். அதில் இவர்கள் ஏன் இணைந்து உள்ளார்கள்? ஆனால் கோக் கூடாதாம்.

சரி கோக்கை தண்ணீர் பிரச்சனையாகக் கொண்டால் இவர்கள் திருப்பூர் பனியன் சார்ந்த சாயப்பட்டறைக் கழிவுகள், ஆம்பூர் வட்டார தோல் பதனிடும் கழிவுகள் என்று கோக்கிற்கு முன்பே நீரைக் கெடுத்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை அல்லவா முதலில் எதிர்த்து இருக்க வேண்டும்?

இவர்களின் அரசியல் அவர்களின் தேவை சார்ந்து.

நாளை இவர்களும் கோக் குடித்தால் அதை நியாயப்படுத்த அது செந்நிறமாக உள்ளது என்று நியாயப்படுத்துவார்கள்.

செலக்டிவ் அமெரிக்க எதிர்ப்பு செய்கிறார்கள். அது போலவே லீனா விசயத்திலும். இப்போது வலிப்பதிவுகளில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளிலும்.

**

கோக் தண்ணீர் பிரச்சனை குறித்தான விசயத்தில் எனது கருத்து ஒட்டுமொத்த தமிழகத்தின் நீர் ஆதரம் மற்றும் மாசுபடுத்தல் சார்ந்தது.

கோக் என்ன ? உள்ளூர் மாப்பிள்ளை விநாயகர் , பவண்டோ போன்ற நிறுவனங்கள் நீரைச் சுரண்டி வணிகமயமாக்கினாலும் தவறு தான். தண்ணீர் பிரச்சனை என்றால் இரண்டுமே எதிர்க்கப்பட வேண்டியவை.

.

வெண்பூ said...

ம‌ன்னிப்பு கோருகிறேன் அதுச‌ரி.. "இதைப் போன்ற‌ ந‌ட்புக‌ள் கிடைக்காம‌லேயே இருந்திருக்க‌லாம்" என்று திருத்தி வாசிக்க‌வும். சுட்டிக்காட்டிய‌த‌ற்கு ந‌ன்றி.

Anonymous said...

naan konja naaladhaan tamil blogs padichuttu varen.. ovvoruthavanga ovvoru vidhamaana vishayangalla killadigala ezhudharadhaala indha blogs thamizhin anaithu mugangalaiyum internetil konarndhu thamizhai ulagam muzhudhum parappum innumoru oodagamaagavey naan ninaithirundhen.. aanaal sameebga kaalamaaga nadandhu varum vishayangalai paarthaal thamizhargalidayey ethanai vanmam undu ethanai jaadhi undu ennum kanakkai ulagariya seidhiruppadhudhaan michamena padugiradhu.. ungal karuthai naan mutrilum vazhi mozhigiren.. iru thani nabar pirachinaiyai iru jaadhigalukku idaiyeyaana pirachinayaaga dhisai thiruppum malindha puthikkaarargal irukkum thamizh naatil pirandhadharkaaga mudhan mudhalaaga varundhugiren..
avargalai puratchi kaarargal enru azhaikkum kevalam veru- thamizhil adhigam kevalappaduthappattirukkum vaarthai puratchi enrey thonrugiradhu..