Tuesday 31 August 2010

பம்பரக்கண்ணு..பச்சமொளகா...இஞ்சி மரப்பா....இனிக்க வச்சா... (அ) அய்யாங்...ட்டொய்ங்..4

நம்பினால் நம்புங்கள் நம்பாவிட்டால் நாசமாய் போங்கள். எனக்கும் பாமா விஜயத்துக்கும் கொஞ்சம் கூட ராசியில்லை.பின்னர் என்ன? கலாநிதி மாறன் வழங்கும் சிங்கம் தயாநிதி மாறன் வழங்கும் எந்திரன் எல்லா இடத்திலும் மாஃபியா ப்ரதர்ஸ் இல்லை மாறன் பிரதர்சை பார்த்து கடுப்பாகி பாமா விஜயம் பார்க்க ஆரம்பித்தால் அதையும் நான் கண்டுபிடிக்கவில்லை. டோண்டு ராகவனின் சமீபத்திய பதிவில் லிங்க் இருந்தது. சரி என்று பார்க்க ஆரம்பித்தால் சனியன் முடிய மாட்டேன் என்கிறது. இரண்டு நாட்களாக பார்த்து இன்று முடித்து விடலாம் என்றால் எழவு இன்றைக்கும் பார்க்க முடியாது போலிருக்கிறது. மூன்று கணவன்மார்களில் பாமாவுக்கு யாருடன் தொடர்பு என்று இன்றைக்கும் தெரிய போவதில்லை. ஒரு ஏழை பிச்சைக்கார மொக்கை பதிவனுக்கு தான் எத்தனை பிரச்சினைகள்.

என்ன கேடு என்று கேட்காதீர்கள் அய்யா. சுந்தர்ஜி பஸ்ஸை பார்த்து அய் பஸ்ஸு நல்லாருக்கு என்று சொன்னவனை ஏறு ஏறு என்று வினவு பஸ்ஸில் அடித்து ஏற்றியிருக்கிறார்கள். அதுவும் பிரபல பதிவர் என்று. எனக்கே தெரியாமல் நான் எப்பொழுது பிரபல‌மாகி தொலைத்தேன் என்று தெரியவில்லை. சரி போய்த் தொலையட்டும் சாருவே பிரபலமாக சிங்கிள் பாட்டில் குத்தாட்டம் போடும் போது மரண மொக்கையன் ஆன எனக்கு என்ன‌ பிரபலமானால் நல்லது தான். நாலு காசு பார்க்கலாம் என்றால் இந்த மெய்நிகர் உலகில் பிரபலமாகி என்ன செய்து தொலைப்பது என்று தெரியவில்லை. சிங்கிள் பாட்டில் ஆட சாருவுக்கு தொடர்ந்து சான்ஸ் கிடைக்குமா என்று கவலையாக இருக்கிறது.

தமிழ்மணத்தில் மகுடம் என்று ஒன்று கொடுக்கிறார்கள். மண் குடம் கொடுத்தாலாவது சுண்டக்கஞ்சி காய்ச்சலாம். மகுடத்தை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே மெய் நிகர் உலகில் பிரபலமாகி விட்டேனாம்.மெய் உலகத்தில் பிரபலாமானால் என் மெய்யை காட்டி எழவு மெய் நிகர் உலகத்தில் படிப்பவர்களுக்கு தமிழ் வேறு தட்டுப்பாடு. மெய் என்றால் பாடி. அதாவது உடம்பு. என்ன சொன்னேன்? மெய் உலகில் பிரபலமானால் என் மெய்யை காட்டி ஏதாவது விளம்பரத்தில் வந்து கும்பி வளர்க்கலாம். மெய் நிகர் உலகத்தில் பிரபலமாகி என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. சரவணா ஸ்டோர்ஸில் ஜட்டி கூட வாங்க முடியாது. அது என்ன எப்ப பார்த்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் ஜட்டி என்று கேட்கிறார்கள். உலகத்திலேயே தமிழ்நாட்டில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸில் தான் ஜட்டி விலை மலிவு என்று கருணாநிதி ஆதாரத்துடன் அறிக்கை விட்டிருக்கிறார். படித்து தொலையுங்கள். எல்லாத்தையும் மொக்கை பதிவனே சொல்ல முடியாது. இதில் நான் மொக்கையா சாதா மொக்கையா என்று வேறு கேள்வி இருக்கிறது.ஸ்பெஷல் மொக்கை இல்லை. அது தெரியும்.

அது என்னய்யா மெய் நிகர் உலகம்? இங்கு என்ன மெய்யாக இருக்கிறது? ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று எழுதுகிறார்கள். ஊருக்குள் போனால் எல்லா தெருவிலும் ஜாதி சங்கம் தான் இருக்கிறது. சில ஊர்களில் இன்னும் விசேஷம். சங்கத் தெரு என்றே வைத்திருக்கிறார்கள். எல்லா ஜாதிக்கும் ஒரு கட்டிடம். ஒரே தெருவில். மெய் நிகர் உலகில் எந்திரனுக்கு மாபெரும் எதிர்ப்பு காட்டுகிறார்கள். மெய் உலகத்திலோ பாடல் வந்த அன்றே பத்து லட்சம் சி.டி. விக்கிறார்கள். சிங்கம் மொக்கை என்றார்கள். அது என்னடாவென்றால் சூப்பர் ஹிட்டாக போகிறது. விஜய் படம் மொக்கை என்று எழுதி விட்டு முதல் ஆளாக பார்க்க போகிறார்கள். கருணாநிதி அந்தோ கதி என்றார்கள். அவரானால் வாலிப வயோதிக அன்பர்களுக்கு சவால் விடுவது போல மானாட மயிலாட உளியின் ஓசை என்று இம்சை செய்கிறார்.

பெண் உரிமைக்கு கொடி பிடிக்கிறார்கள். ஆனால் சோவியத் யூனியனிலோ இல்லை சைனாவிலோ எந்த பெண்ணாவது ஜனாதிபதியை விடுங்கள் பொலிட்பீரோ மெம்பராக இருப்பதாக கூட தெரியவில்லை. கம்யூனிஸ்டுகள் எத்தனை வருடம் சோவியத் யூனியனை ஆண்டார்கள்? எத்தனை வருடமாக சைனாவை ஆள்கிறார்கள். அத்தனை வருடத்திலும் தகுதியாக ஒரு பெண் கூடவா கிடைக்கவில்லை? இது மெய் உலகமா, மெய் நிகர் உலகமா இல்லை பொய் உலகமா. என்ன கருமாந்திரம். வர வர வோட்கா அடித்தால் ஒரு மயிறும் ஏற மாட்டேன் என்கிறது. இல்லாவிட்டால் இப்படி கேள்வி வருமா.மாயா மாயா எல்லாம் மாயா என்று ரஜினிகாந்த் சொன்னால் மனிஷா கொய்ராலா ரொம்ப கிழவியாகிட்டா என்கிறார்கள். வேண்டுமானால் பொய் நிகர் உலகம் என்று சொல்லுங்கள். எல்லாம் மாயா. கேரளா போனால் கிடைப்பது கட்டஞ்சாயா. மொக்கை கவிஞன் என்று ப்ரூவ் பண்ணியாக வேண்டும். வேறு என்ன.

பொய் நிகர் உலகத்தில் என்னவோ செய்கிறார்கள். செய்தால் எனக்கென்ன? எனக்கு மெய் தான் முக்கியம். பாடியை சொல்லவில்லை. மெய் உலகத்தை சொல்கிறேன்.வினவு சொல்கிறார். பெரிய கட்சி சிறிய கட்சி எதை வைத்து அளப்பது. குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் வரும் ஆட்களை வைத்து சுந்தர் அளப்பாரா என்று கேள்வி வேறு. அய்யா, சுந்தர் எப்படி அளப்பார் என்று எனக்கு தெரியாது. ஆனால், மொக்கை பதிவன் எப்படி அளப்பான் என்றால் அந்த கட்சி ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்று தான் அளப்பான். பாதிப்பு என்றால் பொய்நிகர் வாழ் தமிழர்களுக்கு புரிந்து தொலைக்காது என்பதால் இம்பாக்ட். ஒரு கட்சியின் இம்பாக்ட்டை வைத்து தான் அது பெரிய கட்சியா சிறிய கட்சியா இல்லை லெட்டர் பேடு கட்சியா என்று அளப்பது. நீங்கள் ஒட்டு மொத்த சமூகத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். நான் எதுவும் சொல்லவில்லை. நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். நல்லதோ கெட்டதோ போலி திராவிட குடும்ப கட்சிகளும் தலைவர் சூழ் காங்கிரஸ் கட்சியும் கடப்பாறை பிஜேபியும் ஏற்படுத்தும் பாதிப்பில் சொல்லிக் கொள்ளும் சதவீதமாக கூட நீங்கள் ஏற்படுத்துவதில்லை. அய், நாங்க சிதம்பரத்துல தமிழ் ஓத வைச்சோம் மூணு பேருக்கு ஜாதி மறுப்பு திருமணம் செஞ்சி வைச்சோம் என்று சொல்வதெல்லாம் நல்லது தான். ஆனால் உத்தப்புரமும் திண்ணியமும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இங்கு போனால் வேறு எங்காவது இருக்கும்.

சூர மொக்கை பதிவன் சொன்னால் என்ன சூத்தை காட்டினால் என்ன என்று நினைக்காதீர்கள். எனக்கு பாராளுமன்றம் என்பதே உங்கள் வழியாக தான் தெரியும். பாராளுமன்றம் பன்றித் தொழுவம் நக்சல் பாரி பாதையே நமது பாதை என்று துண்டு பிரசுரம் விட்டது மக இகவா இல்லை இடது/வலது/போலி/ மார்க்சிய/லெனிய/மாவோயிஸ்ட் அமைப்புகளா? சரி யார் விட்டால் என்ன எனக்கு பாராளுமன்றம் என்பதை விட பன்றித் தொழுவம் எப்படி இருக்கும் என்றே பார்க்கத் தோன்றியது. இதை பார்க்கும் போது நான் ஐந்தாம் கிளாஸ் தான் படித்தேன். கட் அடித்து விட்டு தியேட்டருக்கு போனால் அங்கே சுவற்றில் எழுதி இருந்தது. நான் அஞ்சாங்கிளாஸ் முடித்து இருபது வருடம் ஆகப் போகிறது. இன்னமும் பாராளுமன்றம் இருக்கிறது. அந்த‌ தியேட்டரும் இருக்கிறது. மயிராண்டிகள் என்னை அன்றைக்கு உள்ளே விடவில்லை என்பது வேறு கதை. அப்புறம் சொல்கிறேன்.

பச்சை மிளகாயா பூசணிக்காயா என்றால் சிவப்பு மிளகாய்க்கு என்னாயிற்று. சரி விடுங்கள். அது சிவப்பு மிளகாய் விற்றவர்கள் பிரச்சினை. நமக்கு என்ன. பச்சை மிளகாய் பொய் நிகர் உலகத்தில் இல்லாது மெய் உலகத்தில் இருந்தால் உபயோகம் தான். ரசம் வைக்கலாம். ஆனால் அய் அழகா இருக்கே என்று கண்ணில் தேய்த்தால் அப்புறம் தெரியும் சேதி. விருப்பமிருப்பவர்கள் உங்கள் கண்ணில் தேய்த்துக் கொள்ளுங்கள். என் கண்ணில் தேய்த்து தொலைக்காதீர்கள். நான் கெட்ட வார்த்தை பேசி நீங்கள் கேட்டதில்லை.

நாக்கூசாமல் சொல்கிறார்கள். கூச்சப்பட்டு எழுதுவதில்லையாம். அப்படி எழுதாதவர்கள் மொக்கை பதிவர்களாம். அய்யா புரட்சி போராளிகளே நீங்கள் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாக சொன்ன பதிவை எடுத்துக் கொண்டு ஓடி வந்த அல்லக்கைகள் என்ன செய்தார்கள் என்று தெரியுமா? மேல் கீழ் வாய் மூடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் யாருக்காவது புரிகிறதா? மேல் வாய் எனக்கும் புரிகிறது. அது என்ன கீழ் வாய்? நான் கேட்கவில்லை. பொய் நிகர் உலகத்தின் புரட்சி போராளிகள் முன்பு எழுதிய வரிகள் தான். மாவோவின் அபார புரட்சி பற்றி நான் எழுதினால் அசிங்கமாக படம் போடுகிறார்கள். இந்த இடுகையை பெண்களும் படித்து தொலைக்கலாம் என்பதால் அந்த படம் இங்கு வராது. சுருக்கமாக சொன்னால் அந்த படத்தின் அர்த்தம் Cock Suckers. இங்கிலீஷ் தெரியாதவர்கள் யாரிடமும் கேட்டுத் தொலைக்காதீர்கள். இது தான் இவர்களின் புரட்சி. என்ன சொன்னான் என்பதை விடு. சொல்பவனின் கோமணத்தை பிடுங்கு.அம்மணமாக்கு. வாழ்க கொள்கை. வளர்க புரட்சி. எல்லாரும் புரட்சி செய்யுங்கள்.

பொய் நிகர் உலகத்திலேயே இது தான் இவர்களின் பச்சை மிளகாய். அப்படியானால் மெய் உலகத்தில் எப்படி இருக்கும்? புரட்சியை கேள்வி கேட்பவன் நடுத்தெருவில் அம்மணமாக்க படலாம். அது மக்கள் விரோத சிந்தனை இல்லையா என்று கேட்காதீர்கள். அது மக்களுக்கான என்டர்டெயின்மெண்ட். சீசரின் ரோமில் க்ளாடியேட்டர்கள் இருந்தார்கள்.

இதை எழுதியதற்காக நாளை நான் அம்மணமாக இருக்கும் படம் வரலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. பாத்ரூமில் குளிக்கும் போது கூட அம்மணமாக இருக்க முடியவில்லை என்றால் நான் பேசாமல் ஏதேனும் கம்யூனிஸ்ட் நாட்டுக்கே குடியேறி விடலாம். வேறு என்னதான் செய்து தொலைப்பது.

இத்தனை எழுதிய பின்னரும் அது என்ன பச்சை மொளகாய் இஞ்சி மொரப்பா என்று எழவெடுப்பவர்கள் கையில் நிறைய காசிருந்தால் டென், டவ்னிங் ஸ்ட்ரீட் வரவும். அடுத்த மாதம் தேதி தருகிறேன்.இப்பொழுது நான் பாமா விஜயம் பார்க்க வேண்டும். எனக்கு நாகேஷ் மேல் தான் சந்தேகம்.அவருடன் தான் பாமாவுக்கு தொடர்பிருக்க வேண்டும். எதற்கும் முழுதாய் பார்த்துவிட்டு நாளை சொல்கிறேன்.

பாமா விஜயம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த இணைப்பை சொடுக்கலாம். மேஜர் சுந்தர்ராஜன், நடிகர் கார்த்திக்கின் அப்பா முத்துராமன், நாகேஷ், பாலையா நடித்தது.படம் மிக நீளமாக இருந்தாலும் விஜய் படங்களை விட பெட்டர். இணைப்புக்கு நன்றி சொல்ல விரும்புபவர்கள் டோண்டு ராகவன் அவர்களுக்கு சொல்லவும்.

====================

Thursday 19 August 2010

புரட்சி செய்வது எப்படி (அ) அய்யாங்...டொய்ங்.. 3

இனிமேல் புரட்சியைப் பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். பொலிட்பீரோவை கூட்டி எடுத்த இறுதி முடிவு. பின்னர் என்ன ஐயா? மாவோவின் புரட்சி பற்றி எழுதினாலும் எழுதினேன் புரட்சின்னா என்ன, எப்படி புரட்சி செய்வது என்று துளைத்து எடுக்கிறார்கள். மொபைல் ஃபோனை ஆஃப் பண்ணி வைப்பது எனக்கு பிடிக்காது. கால் மேல் கால் போட்டால் அந்த காலை சொல்லவில்லை, என்ன செய்வது? வேறு வழியில்லாமல் ஆஃப் செய்து விட்டேன்.

புரட்சி பற்றி என்னை எழுத தூண்டியதே முகிலன் தான். சரி அவர் ஏதாவது செய்வார் என்று பார்த்தால் புரட்சிக்கு அவர் கொடுக்கும் விளக்கத்தை ஏற்காமல் அவரை மிடில் கிளாஸ் முகிலன் என்று சொல்லிவிட்டார்கள். அதுவும் கூட பெரிய ஆச்சரியம் இல்லை. கம்யூனிஸ்டுகள் சுயமாக யோசித்து லெனின் சொன்னதை தவிர வேறு எதையும் ஏற்க மாட்டார்கள்.

சரி போய்த் தொலையட்டும், ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் கடன் வாங்கி எழுதுபவன் இதை எழுத மாட்டேனா? எழுதித் தொலைக்கலாம் என்றால் புரட்சி எங்கு கிடைக்கும் என்று கேட்கிறார்கள். அய்யா அது என்ன கத்தரிக்காயா வெண்டைக்காயா இல்லை மலிவு விலையில் விற்க சரவணா ஸ்டோர்ஸ் ஜட்டியா? புரட்சி ஐயா புரட்சி. அன்னம்மா கிழவி மீனு மீனு என்று விற்றதை போல‌ இப்பொழுதெல்லாம் இணையத்தில் புரட்சி புரட்சி என்று கூவிக் கூவி விக்கிறார்கள்.சில மண்டபங்களில் கூட விற்பதாக கேள்வி. எனக்கு இதில் பெரிய பிரச்சினை இருக்கிறது. இணைய புரட்சிகளில் எது போலிப் புரட்சி எது போளிப் புரட்சி என்று ஒரு எழவும் தெரியவில்லை. அதையெல்லாம் நம்பி ஏமாந்து போய் அப்புறம் கமிஷனர் ஆஃபிஸில் க்யூவில் நின்று தொலைக்காதீர்கள்.

புரட்சி எப்படி இருக்கும் என்றால் கொஞ்சம் உருளைக் கிழங்கு சைஸில் ஆனால் சிவப்பாக இருக்கும். சக்கரை வள்ளிக் கிழங்கை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள். அய்யா அது ஸ்வீட் பொட்டட்டோ. சிவப்பாக இருப்பது ஸ்வீட்டாம். அறிவு உள்ளவர்கள் வெள்ளைக்காரனின் வர்க்க விரோத போக்கை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். இல்லை, புரட்சி இன்னும் நல்ல சிவப்பாக இருக்கும் என்றால் அப்ப பீட்ருட்டு என்கிறாள் லூஸி. எங்கு போய் முட்டிக் கொள்ள?

இப்படி புரட்சியை கண்டுபிடிப்பதே பெரும் பிரச்சினை என்பதால் வாங்கப் போகும் போது ஏற்கனவே புரட்சி செய்தவருடன் போவது நல்லது. அதுவும் கூட்டுப் புரட்சி செய்தவராய் இருந்தால் இன்னும் உத்தமம். அது என்ன கூட்டு புரட்சி.எல்லா எழவையும் நானே சொல்லித் தொலைக்கிறேன். பொறுங்கள். புரட்சி செய்ய பொறுமை அவசியம். கம்யூனிஸ்டுகளை பாருங்கள். புரட்சி வருது புரட்சி வருது என்று எத்தனை காலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் போன இடமெல்லாம் வறட்சி தான் வந்தது என்றாலும் அவர்களே பொறுமையாக இருக்கும் போது உங்களுக்கு என்ன?

புரட்சியை கொண்டு வந்தால் மட்டும் போதாது.அதை செய்வதில் தான் எல்லாமே இருக்கிறது. முதலில் புரட்சியை நீள வாக்கில் கத்தரிக்காயை போல அரிந்து கொள்ளுங்கள். நல்ல உயர்தர சிவப்பு ஒயின் எடுத்து அதில் தடவுங்கள். ஃப்ரெஞ்ச் ஒயினோ சிலே ஒயினாகவோ இருப்பது உத்தமம். ஏழைகளாக இருப்பவர்களும் தமிழ்நாட்டில் இருப்பவர்களும் டாஸ்மாக் சரக்கில் ஊற வைக்கலாம். சுவை கொஞ்சம் மட்டம் தான். ஆனால் தமிழ்நாட்டில் இந்த அளவு புரட்சி செய்வதே பெரிய விஷயம் என்பதால் ‍பரவாயில்லை. அதற்காக வெள்ளை ஒயின் சேர்ப்பது வர்க்க விரோத மனப்பான்மை. அப்படி செய்பவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்.

புரட்சி ஒரு பக்கம் ஊறும் போது ஒரு பெரிய வெங்காயம் ஆமாம் பெரியார் சொன்ன அதே வெங்காயம் தான். வெங்காயத்தை கண்டுபிடித்ததே பெரியார் தான் என்று தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை கெடுக்க நான் தயாரில்லை. பெரியாரையும் நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். இல்லை வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளுங்கள். எட்டு பச்சை மிளகாய், கொஞ்சம் இஞ்சி, ஆறு பல் பூண்டு, சோம்பு, சீரகம், கொஞ்சம் வறுத்த வெந்தயம், ஆந்திரா குண்டு மிளகாய் பதினெட்டு எல்லாம் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

எல்லாம் அரைத்த பின், ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை வதக்கி அது வதங்கும் போதே ஒரு கொத்து கறுவேப்பிலையும் சேருங்கள். நன்றாக வதங்கியதும் புரட்சி ஊறிக் கொண்டிருக்கும் சிவப்பு ஒயினை இதில் கொட்டி அப்படியே மசாலா சேர்த்து வெட்டி வைத்த புரட்சியையும் சேர்த்து நன்றாக தளதளவென்று சிவப்பாக வரும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், அவ்வளவு தான் ஐயா. நீங்கள் புரட்சி செய்து விட்டீர்கள். இதையே ஏழைகளின் கல்யாணத்திலோ அம்மனுக்கு ஆடி மாசம் கூழ் ஊத்தும் போதோ செய்தால் அது கூட்டுப் புரட்சி.

புரட்சி செய்வது எப்படி என்று நான் சொன்னால் அதுல கோழிக்கறி போட்டா சூப்பரா இருக்கும் என்கிறாள் ஜெயந்தி. அய்யா, புரட்சி செய்வதே கோழிக்கறி வாங்க முடியாத ஏழைகளுக்காக‌ தான். இதில் கோழி சேர்க்கலாமா என்று கொழுப்பெடுத்தவன் தான் சொல்வான். புரட்சி காலையில் பூரிக்கு நன்றாக இருக்கும். பூரி செய்ய முடியாது புரட்சி மட்டும் செய்பவர்கள் அதை மட்டுமே கூட தின்னலாம். அதிகம் போனால் பின்பக்கம் புடுங்கி விடும் என்பதால் கொஞ்சமாக தின்பது நலம்.

நான் இப்படி மாய்ந்து மாய்ந்து புரட்சி செய்வது பற்றி எழுதினால் பார்ப்பானீய ஆணாதிக்க தொழிலாளர் விரோத தேசிய இனங்களை ஒடுக்கிய கஸின் கோயம்பத்தூரில் இருந்து போன் செய்து எந்திரன் பாட்டு கேட்டியா ச்சும்மா அதிருதுல்ல என்கிறான். எந்திரனை எதிர்த்து வெடித்திருக்கும் ஒரு மாபெரும் புரட்சி பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த வர்க்க விரோதிகளை என்ன செய்யலாம்?

Wednesday 18 August 2010

எந்திரனும் ஏழைப் பங்காளன்களும் (அ) அய்யாங்...டொய்ங்.. 2

நாலு நாள் ஊரில் இல்லாமல் திரும்பி வந்து பார்த்தால் எந்திரனை எதிர்த்து இணையத்தில் புரட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். ஒரு வேளை படம் ரிலீஸ் ஆகிவிட்டதோ என்று தேடிப் பார்த்தால் ஒன்றும் இல்லை. பொரச்சி வருகுது பொரச்சி வருகுது என்று ஏழைப் பங்காளர்கள் அட்வான்ஸாகவே ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் மீதும் தவறில்லை. அவர்களும் எவ்வளவு நாள் தான் காத்திருப்பார்கள்?

இதைச் சொன்னால் ஆமா நான் கூட ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கேன், சிவாஜி வந்து ரெண்டு வருஷம் ஆச்சு என்கிறார் முகிலன். அய்யா, நான் அதைச் சொல்லவில்லை. ஒரிஜினலாக ஒரு புரட்சி வரப் போகுது என்று கம்யூனிஸ்டுகள் ரொம்ப நாளாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தோழர் பிரகாஷ் காரத் அப்படித் தான் சொல்லியிருக்கிறார். அதெப்படி சொல்லலாம் என்று அவர் மீது பாய்ந்து தொலைக்கிறார்கள் ஆதிக்க வாதிகள். அவர் சொல்வதில் தவறென்ன? அவர் என்ன தானாகவா சொல்கிறார்? அவருக்கு முந்தி இருந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித் என்ற தோழர் அதையே தான் சொல்லியிருக்கிறார். அவரும் கூட ஒரிஜினல் இல்லை. மாவோ சொன்னதாக அவர் சொன்னார். மாவோ லெனின் சொன்னதை சொன்னார். லெனின் ஜார் மன்னரின் கடைசி குழந்தை வரை கொன்று மனித நேயத்தை நிலை நாட்டிய பின் புரட்சி வென்றது என்று அறிவித்து விட்டார்.

அதெப்படி குழந்தையை சுட்டுக் கொன்று விட்டு மனித நேயம் என்று கேட்கிறார்கள் பாசிஸ்டுகள்.லெனின் சொன்னதை கேள்வி கேப்பவனுக்கு சுய அறிவு இல்லை. மார்க்ஸ் என்ன சொல்லியிருக்கிறார்? மாவோ என்ன செய்தார்? இது எதுவும் தெரியாமல் ஓசியில் ப்ளாக்கும் ஓட்டை கம்ப்யூட்டரும் இருக்கிறது என்று வாதாட கிளம்பி விடுகிறார்கள்.

சொந்தமாக சிந்திப்பவர்கள் மாவோ சொன்னதை ஏற்று நடப்பார்கள். செய்த‌தை திரும்பி செய்து தங்கள் தெருவில் புரட்சி புரிவார்கள். அப்படி மாவோ என்ன செய்து விட்டார் என்று கேவலமாக பேசுகிறார்கள்.

மாவோ மக்களுக்காக உயிரை கொடுத்துப் போராடியவர் என்று நான் சொன்னால் ஆமா, மக்கள் உயிரைத் தானே என்று நக்கல் செய்கிறார்கள். மாவோ தன் உயிர் மற்றவர் உயிர் என்று பிரித்து பார்த்ததில்லை. அதனால் தான் புரட்சி முழு வெற்றி பெறும் முன்னரே ஷியாங்க்‍ கே ஷேக்கை எதிர்த்து நடந்த போரில் ஒரு லட்சம் பேரை பட்டினி போட்டு கொன்றார். மக்கள் செத்தால் என்ன, புரட்சி ஜெயிக்க வேண்டும்.

ஊரையெல்லாம் காப்பாற்றும் ரங்கநாதனே அக்கடா என்று படுக்கும் போது மாவோவுக்கு களைப்பு வராதா? பாவம் அவரும் எவ்வளவு நாள் தான் போராடுவார் எத்தனை பேருக்கு தான் புரட்சி செய்வார்? சீனர்கள் இருட்டானால் சும்மா இருக்க மாட்டேன்கிறார்கள். ஒரு லட்சம், ரெண்டு லட்சம், பத்து லட்சம் ஒரு கோடி. ம்ஹூம். சீனாவில் மக்கள் தொகையோ பெருகிக் கொண்டே போகிறது. மக்களுக்காக மக்களால் அரசு நடத்தும் சிந்தனைத் தொட்டி (Think Tank) மாவோ சிந்தித்தார், செயல்பட்டார், அடுத்த புரட்சியை மலர வைத்தார். பிள்ளை பெறுவதற்கு அரசு அனுமதி பெற வேண்டும். ஆஹா, இதுவல்லவா புரட்சி இது எனக்கு தெரியாது போயிற்றே என்று லெனின் மாஸ்கோவில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்து நொந்து கொண்டார். நல்லவேளை எதையாவது வெட்ட சொல்லி புரட்சி செய்யவில்லையே என்று மகிழ்ந்த சீனர்கள் பத்திரமாக பொத்திக் கொண்டு புரட்சி வாழ்க என்று குரல் கொடுத்தார்கள்.

இதையெல்லாம் சொன்னால் மயிராண்டி குடிச்சிட்டு ஒளறாதடே. நம்மூரு சேப்பு சட்டைங்க நல்லவனுவ என்கிறான் "டயரு" தங்கராஜ். அவன் சொல்வதும் கூட உண்மை தான். டாட்டாவுடன் ஒப்பந்தம் போட்டு நந்திகிராமத்தில் அடிதடி நடத்தினார்களே தவிர, மாவோ போல நந்திகிராம் மக்களை பட்டினி போட்டு கொல்லவில்லை. ஏழைப்பங்காளர்களுக்கு புரட்சி செய்ய வாய்ப்பு தராமல் மக்கள் ஊரை விட்டு ஓடிவிட்டார்களாம். அறிவு கெட்ட தனமாக மக்கள் இப்படி இருந்தால் புரட்சி எப்படி ஐயா வரும்? இந்தியா விளங்குமா? உருப்படுமா?

Monday 9 August 2010

பார்த்த ஞாபகம்


அப்படி ஒன்றும் அடிக்கடி தேடுவதில்லை
ஆனாலும் சொல்லாமல் தான் நினைவில் வருகிறது
இங்கு தான் எங்கோ.
ஆனால் எங்கு வைத்தேன் எப்பொழுது வைத்தேன்
நீ சிறுசாருக்கச்ச பாத்திருக்கேன்
அது ஆச்சே ரொம்ப நாள் என்றாள் அம்மா
நான் பார்க்கவேயில்லை என்கிறாள் கேத்தி
போனாப் போகுது விடு
அதான் நிறைய இருக்கே என்றான் ஐஸின் மேல் விஸ்கி ஊற்றிய நண்பன்
நீண்ட நேரம் புலம்பிய பின்
சரி எப்படி இருக்கும் சொல்லு தேடிப் பார்க்கலாம்.
எத்தனை முயற்சித்தும் நினைவில் வரவே இல்லை என் முகம்.

===================

Wednesday 4 August 2010

எக்ஸ்டஸி....


இலை மறந்து பட்சியின் கண் பார்..
வில் வளைத்து அம்பு தொடுத்து குறி வை...
உண் உடுத்து புணர்
ஓடுவது ஆறு தேங்குவது சாக்கடை
பின் கால் வை முன்னே செல்...
கொள்ளியிடு வம்சம் வளர்
காதல் செய் உயிரென உருகு
துரோகம் செய் கடமை புரி
பொய் சொல் உண்மை உயிர்
எக்ஸ்டஸி எடு மேலே போ...
கீழ் அழுந்து அது ப்ரோஸாக்கின் காலம்
கக்கக்க‌ப்போ
கருத்துக்களை கச்சிதமாக
கவ்விக் கொள்கிறீர்கள் போங்கள்.
இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா
அமெரிக்கா ஆஸ்த்ரேலியா பிரிட்டன்
மற்றும் உலக நாடுகளெங்கும்
உற்சாக விற்பனை.
======================