Friday 26 December 2008

ஜெயமோகனின் மத்தகம்: நட்பு,துரோகம்,காமம், காதல், சோரம்... வாள்வீச்சு


யானையை பிடிக்காதவர்கள் யார்? என் அம்மா போல்...நான் கொடுத்த பத்து பைசாவிற்கு தலை தடவிய யானை...என்னடா ஒரே ஒரு வாழைப்பழம் தானா...ஓரக்கண்ணால் நக்கலாக சிரித்தாலும் துதிக்கையால் என் தோள் தட்டிய யானை...ஏழு வயதில் வகுப்பில் முதல் ராங்க் வாங்கியதற்காக என் தந்தை தோள் தழுவியதை விட இன்னமும் மறக்காமல் இருக்கிறது... நான் எவ்ளோ பெரிய ஆள்...நீயெல்லாம் சும்மா சுள்ளான் என்று பலம் காட்டாமல் யப்பா, யப்பா என்று நான் அலற அலற துதிக்கையால் வாரி மத்தகத்தின் மேல் தூக்கி வைத்துக் கொண்ட யானை...ஒரு வேளை யானை என்னை அணைத்து முத்தமிடுவதாகக் கூட நினைத்து கொண்டிருக்க கூடும்....சிலரது அன்பு நமக்கு புரிவதில்லை...புரிந்த போது அவர்கள் இருப்பதில்லை...
ஜெயமோகனின் மத்தகத்தை யானை காதலின் பேரிலேயே படிக்க ஆரம்பித்தேன்..ஆனை ஆனை அழகர் யானை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை..
இப்படி சிறுபிள்ளையாக ஆரம்பித்தது விரைவில் மாறியது...வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது ஜெயமோகனுக்கு கை வந்த கலை....அதிலும் அந்த மொழி நடை அவர் ஏற்றிக் கொண்டிருப்பது ஊசி என்பதே பல நேரங்களில் மறக்க செய்கிறது...
கேசவன் யானையின் தலைமைப் பாகனான ஆசான்...அவருக்கு அடுத்த நிலையின் அருணாசலம் அண்ணன்...அடுத்து யானை மேய்க்கும் பரமன்...அவனுக்கும் அடுத்த நிலையில் சுப்புக் கண்....மூன்றாம் நிலையில் இருக்கும் பரமன் சொல்வதாகவே கதை நிகழ்கிறது...
ஆசான் "சவமே" என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக அவரது காலை முறிக்கும் கேசவன்...சுப்புக்கண் தன் முன்னால் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தான் என்பதற்காக அவன் அருகில் வந்தால் விரட்டி அடிக்கும் கேசவன்...
// சுப்பு நடுங்கியபடி கைகளை மார்பில் வைத்துக்கொண்டு மெல்ல அலைநாக்குகள் ததும்பிய நீர் விளிம்புவரை வந்தான். அவன் நீரில் கால் வைக்கவும் கேசவன் பயங்கரமாகப் பிளறியபடி எழுந்தான். நீரலைகள் எழுந்து மணல் விளம்பை நக்கின. //
// ஆசானே.. ஆனை என்னை கொன்னு போடும். என்னை கொன்னு போடும் ஆசானே. வயசான அம்மை இருக்கா ஆசானே” என்று கெஞ்சி அழுதான். நான் கேசவனைப் பார்த்தேன். பக்கவாட்டில் நன்றாக மல்லாந்து கிடந்தான். பக்கவாட்டு நெற்றிக்குழியில் நீர் தேங்கியிருந்தது. சிறிய கண்களைச் சுற்றி சருமம் சுருங்கி விரிந்தது. அவனுடைய உடலே சுப்புக்கண்ணை கவனிக்கிறது என்று எனக்குத் தெரியும். சுப்புக்கணின் கால்கள் நீரைத் தொட்ட அந்தக் கணமே யானை பிளிறி எழும். .....கனத்த கால்கள் மணலில் கிருகிருவென பள்ளம் செய்ய மெதுவாக நடந்து சுப்புக்கண்ணை நோக்கிச் சென்றது.
.... சுப்புக்கண் அப்படியே தரையோடு தரையாக விழுந்து கிடந்தான்...
....என் உடலில் நாற்றம் அடித்தது. கீழே மணலில் சுப்புக்கண் பேதி போயிருந்தான். //
// பிற யானைகளுக்குப் போல ‘காலெடுத்தானே’ ‘கையெடுத்தானே’ ‘வலத்தானே’ ‘இடத்தானே’ என்றெல்லாம் கத்தக் கூடாது, சொல்லக்கூடாது. துரட்டியும் குத்துக்கம்பும் எடுப்பதைப் பற்றி கற்பனைகூட செய்ய முடியாது. //
கேசவனின் பெரிய தம்புரானின் மறு உருவம்...ஆளும் தம்பிரானின் ஆத்ம ஸ்நேகிதன்..ராஜ ஸ்நேகிதம்...ராஜ கல்பனை பெற்ற யானை.அதன் மத்தகத்தின் மீது தம்புரானை தவிர யாரையும் அது அனுமதிப்பதில்லை...
//
அந்த உத்தரவு எப்படி கேசவனுக்குத் தெரிந்தது என்பதே ஆச்சரியம்தான். வேறு எவரையும் தன் மத்தகத்தின் மீது ஏறுவதற்கு கேசவன் அனுமதித்தததில்லை. சட்டென்று பயங்கரமாக பளிறியபடி கொம்பு குலுக்கிய கேசவன் ஓரடி பின்னால் வைத்தான். கோபம் கொண்ட ·பல்குனன் நாயர் தன் உடைவாளை உருவியபடி ”எந்தடா?” என்று கேட்டபடி ஆசானை வெட்ட வருவதற்குள் கேசவன் மீண்டும் பிளிறியபடி துதிக்கையால் பல்குனன் நாயரை ஓங்கி ஒரு தட்டு தட்டினான். நாயர் தெறித்துப் பின்னாலிருந்த கல்தூணில் மண்டை அடித்து கீழே விழுந்து மூர்ச்சையானான் //
// கோபமாக உள்ளே வந்த இளையதம்புரான் ”கேசவனுடே மீதெ திடம்பும் ஞானும் அல்லாதே ஆரும் கேறல் அருது எந்நு சொன்னது என்னுடெ ராஜ கல்பனை. அது கடந்நவன் ஆரெந்நாலும் மரணம் அவனுடெ விதி. ஆருக்குண்டு மறு வாக்கு? ம்ம்? //
// சொல்லும் பொருளும் அறிஞ்š நான் சொல்லுந்நேன். கேசவன் நம்முடைய ஆனை. அவனுடெ மீதே நாம் அல்லாதே ஓராளும் கயறுக இல்ல” என்றார். //
இப்படி ராஜ மரியாதையுடன் வலம் வரும் கேசவன் மீது ஆசான், பாகன்கள் என்று யாரும் ஏறி விடமுடியாது...ஆனால் அவனுக்கோ கரடிக்குளம் நாராயணன் என்ற யானையை மிஞ்சி விட ஆசை... பாகன் பரமனும் அருணாசலம் அண்ணனும் நட்பு..ஆனால் அருணாசலத்தின் காதலியை பரமன் மிரட்டி அடைகிறான்...
// அருணாச்சலம் அண்ணா தணிந்து, ”மக்கா லே, நீ எனக்க தம்பியில்லா? அவ உனக்கு அம்மையப் போலாக்கும் லே” என்றார். ”அந்தச் சோலியே வேண்டாம். நடக்குமா நடக்காதா சொல்லும்” என்றேன். //
// அருணாச்சலம் அண்ணன் சட்டென்று என் கால்களைப் பற்றிக் கொண்டார். இருட்டில் அவரது கண்கள் பளபளவென்று ஈரமாக இருப்பதைக் கண்டேன். அவர் கைகைள் என் கால்களில் சூடாகப் பதிந்தன. ”தம்பி, உன்னை என் சொந்தத் தம்பியாட்டு நெனைச்சியேம்ல… வேண்டாம்ல… மகாபாவம்ல. //
முதலில் சாவேன் என்று மிரட்டி பின்பு பரமனுடன் உடன்படும் அருணாசலத்தின் காதலி...
// அவள் தரையிலேயே கிடந்தாள். நான் அவள் கைகளைப் பற்றித் தூக்கி எடுத்தேன். வியர்த்துக் குளிர்ந்த உடம்பு நீரில் வந்த வாழை போலிருந்தது... ”என்னை கொல்லப்படாது… என்னையும் என் பிள்ளையையும் நாசம் பண்ணிப்பிடாது… நான் செத்திருவேன்….கூடப்பிறப்பா நினைக்கணும்…தம்புரானே….உங்கள தெய்வமா கும்பிடுதேன்” என்று என்னை உந்தி நெளிந்தபடி கண்ணீர் வழியச் சொன்னாள். அவளைப் பேசவே விடக்கூடாது என்று இறுகப் பிடித்து இழுத்துப் பாயில் தள்ளினேன். ”அய்யோ வயித்தில பிள்ள… பாத்து” என்று அவள் பதறிக் கெஞ்ச ஆரம்பித்தாள். //
இப்படி செய்யும் பரமன் அடுத்து அருணாசலத்திற்கு மேலும் பெரும் துரோகம் செய்கிறான்...அவரது மனைவியை தான் பெண்டாள்கிறான்...கோயில் நகையை திருடுகிறான்...
// அவரது கண்கள் மூன்று மாதம் தாண்டாத குழந்தையின் பனிபடர்ந்த விழிகளுடன் இருந்தன. ”ஓடிவாங்க ஓடி வாங்க… அண்ணனை ஆனை தூக்கிப் போட்டுட்டுது… அய்யோ” என்று கதறியபடி நான் தோப்புக்குள் நுழைந்து நெய்யாற்றின்கரை கோயிலை நோக்கிச் ஓடினேன். //
இதையெல்லாம் ஒட்டியோ என்னவோ கேசவன் பரமனை அருகிலும் நெருங்க விடுவதில்லை...பரமனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சுப்புக்கண் (மரண பயத்துடன் கதையில் அறிமுகமாகும் அதே சுப்புக்கண்!!) அதிகாரம் பெறுகிறான்...
// அவனுக்குத் தெரியாமலிருக்காது. ஒரு மாதமாக என்னை கேசவன் அருகிலேயே விடுவதில்லை. என்னுடைய வாசனை கிடைத்தாலே முன்னங்காலை தூக்கி வைத்து ம்ம் என்று ஒலியெழுப்பும். //
கேசவனின் பாடும் சுகமில்லை...தம்புரானுக்கு உடல் நிலை சரியில்லாது போக, அவரின் மகனின் அதிகாரம் ஏற்படுகிறது...அவனுக்கோ குதிரைகளே பிரியம்....அப்பொழுது தான் கேரளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆங்கிலேயர் ஸ்னேகிதம்...யானையை பிடிப்பதில்லை...தம்புரான் இறக்க அங்கு செல்லும் கேசவனுக்கு செல்லும் கேசவனுக்கு பல்வேறு அனுபவங்கள்...
// உள்ளே இருந்து இளையதம்புரான் வருவதைக் கண்டேன். அவர் கையில் நீளமான துப்பாக்கி இருந்தது. மூக்குத் துளைபோல இரட்டைக் குழல்கொண்ட தோள் உயரமான துப்பாக்கி. பழுத்த மூங்கில் நிறமான குழாய். ஈட்டி மரத்தாலான மட்டை. அதை தோளில் தூக்கியபடி வந்த தம்புரான் வாசலில் நின்று கடும் கோபத்தில் முகம் சுளித்து, ”போ.. போடா” என்றார். //
// அவர் துப்பாக்கியை நீட்டியபடி மேலும் பின்னகர்ந்து குறி பார்த்தார். //
// இளைய தம்புரான் அந்தக் துப்பாக்கியின் கீழே உள்ள வளையத்துக்குள் சுட்டுவிரலால் அழுத்த அது மூடி திறந்து கொள்ளும் ஒலி கேட்டது. //
ஐயோ கேசவா என்று மனதில் ஒலி எழுந்த நேரத்தில் கேசவனின் முடிவு..... ஜெயமோகன் ஊசி ஏற்றுகிறார் என்று நினைத்திருந்த நேரத்தில் ஒரே நேரத்தில் பல வாள்களை வீசுகிறார்... மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை..... யானைக் கதையாக படிப்பவர்களுக்கு முடிவில் கதை முற்றிலும் ஒரு புதிய கோணம் காட்டுகிறது.. நட்பு, துரோகம்,சூழ்நிலைக்கேற்ப மாறும் கற்பு, நான்கு வருணங்கள், தொடர்ந்து கைமாறும் அதிகாரம்...வர்க்க பேதத்தை உடைப்பதில் ஆங்கிலேய ஆட்சியின் மறைமுக பங்கு...உண்மையில் முடிவில் தான் இந்த கதை ஆரம்பிக்கிறது....
சூரியனுக்கு டார்ச் அடிப்பது அனர்த்தம் என்று தெரிந்தாலும் ஜெயமோகனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
இவ்வளவு சொல்லிவிட்டு இதை சொல்லாவிட்டால் நன்றியாகாது...ஓரளவு ஜெயமோகனை படித்திருந்தாலும்....நான் இந்த கதை படிக்க முக்கிய காரணம் திரு. சுரேஷ் கண்ணன் அவர்களின் இந்த பதிவே... சுரேஷ் கண்ணனுக்கு நன்றி!

சமீப காலமாகவே எனக்கு தெரிந்த மிஸஸ்.டவுட் அவர்களும் மத்தகம் குறித்து மிக அழகாக ஒரு பதிவிட்டிருக்கிறார்...
ஜெயமோகனை படிக்க விரும்புபவர்கள் தயவு செய்து அவர் தளத்திலேயே படித்து கொள்ளுங்கள்....
மத்தகத்தின் சுட்டிகள்

Saturday 20 December 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் ஐந்து

முன் அறிவிப்பு 1: வழக்கம் போல இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே. கதை மாந்தர்கள் மற்றும் பதிவரின் நலம் கருதி அவர்களின் அடையாளங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.

முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.



இந்த கதையின் முந்திய பாகங்களை இங்கே படிக்கலாம்..பாகம் ஒன்று, பாகம் இரண்டு, பாகம் மூன்று, பாகம் நான்கு

முன்கதைச் சுருக்கம்:
எடின்பரோவில் தனது கேர்ள் ஃப்ரண்டுடன் ரெஸ்ட்ராண்டில் இருந்த மாதித்தனை வேதாளத்தை பிடித்து வரும்படி மந்திரவாதி தொல்லை செய்கிறான்..வேதாளத்தை பிடிக்க செளத் வேல்ஸ் செல்லும் விக்கிரமனிடம் வேதாளம் வைஜெயந்தியின் கதையை சொல்கிறது..
இருப‌த்தொரு வ‌ய‌தான‌ திருக்கும‌ர‌ன் த‌ன‌து முத‌ல் வேலையில் சேர‌ அலுவ‌ல‌க‌ம் செல்கிறான்..அங்கு அவ‌ன‌து மேல‌திகாரி குருமூர்த்தி அவ‌னுக்கு வைஜெய‌ந்தியை அறிமுக‌ப்ப‌டுத்தி வைக்கிறார்...வைஜெய‌ந்தியை பார்க்கும் திருக்கும‌ர‌ன் திகைப்புட‌ன் நிற்கிறான்.
இனி.....

அலை பாயுதே....
வாழ்க்கையில் ஒரு கணமேனும் காதலிக்காதவர்கள் இல்லை..ஆனால் காதல் எப்பொழுது வருகிறது...ஏன் வருகிறது..யார் மீது வருகிறது..எதற்காக எதை எதிர்பார்த்து வருகிறது...சங்க காலத்திலிருந்து இந்த காலம் வரை யாரும் கண்டுபிடித்ததாக தெரியவில்லை...மல்லிகை மலர்வதும் மனங்கள் திறப்பதும் எதிர்பாராத தருணத்தில் எப்படியோ நடக்கிறது...யாயும் யாயும் யாராவீரோ என்று இருந்தவர்கள் செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் கலந்து விடுவதும் நடந்து விடுகிறது....

அவள் கண்கள் இப்படித்தான் இருக்கும்...இப்படித்தான் சிரிப்பாள்..பேசும் போது முகம் இப்படியெல்லாம் மாறும்...யாருக்கும் தெரியாமல் மனம் அதன் போக்கில் கட்டி அமைக்கும் பிம்பங்கள்...

அத்தனையும் பிம்பம்...பிம்பத்தை எங்கு சென்று தேடுவது என்ற கையறு நிலையில் என்றாவது ஒரு நாள் அவளை எதிர்பாராமல் சந்திக்க...அதே மனம் ஆனந்த கூச்சல் இடுகிறது...இவளா இவளா என்று தேடி எந்த இடத்திலும் திறக்காத கதவுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஹோவென திறந்து விடுகிறது...

வைஜெயந்தியை பார்த்த திருக்குமரனின் மனக்கதவுகள் தடேரென்று திறந்து கொண்டன...இப்பொழுது தான் முதல் முறையாக பார்க்கிறேனா? இல்லையே...எத்தனையோ முறை ஏந்திய முகமாயிற்றே இது..எத்தனை முறை இந்த விரல்களை வருடியிருப்பேன்..கரம் கோர்த்த உணர்வு இப்பொழுதும் இருக்கிறதே..இந்த புன்னகை...ஜென்ம ஜென்மமாக வருவதல்லவா...எப்படி பிரிந்தேன்...ஏன் பிரிந்தேன்..எந்த ஜென்மத்தில்...
கள் குடித்த குரங்குக்கும் காதல் கொண்ட மனதிற்கும் காலங்களும் சூழ்நிலைகளும் தெரிவதில்லை...ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...குருமூர்த்திக்கு காத்திருக்க காலம் இல்லை..

"என்ன குமரன் ரொம்ப ஸ்டன் ஆகி நிக்கிறீங்க...இவங்களை முன்னாடியே தெரியுமா..."

வேகமாய் ஓடி வந்து கீழே விழுந்த குழந்தை போல மனம் திடீரென்று மட்டுப்பட்டது...யார் இவங்க...ரொம்ப நாள் பார்த்த மாதிரி இருக்கு...ஆனா இவங்க யாருன்னே எனக்கு தெரியாதே..இது என்ன கனவா.....

"ம்ம்ம்..ஆமா ஸார்...இல்ல சார்..."

"என்ன இது....தெரியுமா தெரியாதா...வைஜெயந்தி....இவர் உங்களுக்கு தெரிஞ்சவரா..."

திருக்குமரன் திரு திரு குமரன் ஆக விழிப்பது பார்த்து வைஜெயந்திக்கு சிரிப்பாக இருந்தது...யார் இவன்...இது வரை பெண்களையே பார்க்காத பிறவி போல்...

"இல்ல ஸார்...நானும் இப்ப தான் பார்க்கிறேன்..."

குருமூர்த்தி ச‌லித்துக் கொண்டார்...

"ச‌ரி ச‌ரி, அவ‌ரு உங்க‌ள எங்க‌யோ பார்த்திருப்பார் போல‌ருக்கு...மிஸ்ட‌ர் கும‌ர‌ன், இவ‌ங்க‌ வைஜெய‌ந்தி...அக்க‌வுண்ட்ஸ்...வைஜெய‌ந்தி...இவ‌ர் திருக்கும‌ர‌ன்...புதுசா ஜாய்ன் ப‌ண்றாரு...இவ‌ர‌ கூட்டிப் போயி டாக்குமெண்ட்ஸ், பேங்க் அக்க‌வுண்ட் டீட்டெய்ல்ஸ் எல்லாம் வாங்கிடுங்க‌..முடிச்சிட்டு நாராய‌ண‌ன் கிட்ட‌ அனுப்புங்க‌...அவ‌ரு ஹெச்.ஆர். விஷ‌ய‌த்தை முடிச்சிருவாரு..."

"ஓக்கே ஸார்...வாங்க‌ கும‌ர‌ன்..." வைஜெய‌ந்தி திருக்கும‌ர‌னை அழைத்து கொண்டு வெளியேற‌ முனைந்தாள்...

"வைஜெய‌ந்தி...ஒரு நிமிஷ‌ம்...ஸாட்ட‌ர் டே அபர்ணாவுக்கு ப‌ர்த்டே...காலைல‌ கோயிலுக்கு போய்ட்டு ஈவ்னிங் சின்ன‌தா ஒரு பார்ட்டி...நீங்களும் சுபாஷினியும் வ‌ந்தா தான் அவ‌ ப‌ர்த்டேவே கொண்டாடுவேன்னு ஒரே அடம் பிடிக்கிறா....கொஞ்ச‌ம் சிர‌மம் பார்க்காம‌ வ‌ர‌முடியுமா? நானே உங்க‌ளையும் சுபாவையும் பிக்க‌ப் ப‌ண்ணிட்டு ட்ராப் ப‌ண்ணிர்றேன்..."

"ஓ...க‌ண்டிப்பா வ‌ந்துர்றேன் ஸார்...நானும் அப‌ர்ணாவ‌ பார்த்து ரொம்ப‌ நாளாச்சு..சுபாவும் ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ப்ப‌டுவா...."

"தேங்க்ஸ் வைஜெய‌ந்தி.."

"நோ மென்ஷ‌ன் ஸார்...அப்ப... நான் இவ‌ரை கூட்டிக்கிட்டு போயி பார்மாலிட்டியெல்லாம் முடிச்சிட்டு அனுப்பி வைக்கிறேன் ஸார்..."

சொல்லிவிட்டு க‌த‌வை திற‌ந்து வெளியேறும் வைஜெய‌ந்தியையும், ப‌ள்ளிக்கூட‌ சிறுவ‌ன் போல் அவ‌ள் பின்னாலேயே செல்லும் திருக்கும‌ர‌னையும் பார்த்த‌வாறே குருமூர்த்தியின் ம‌ன‌ம் உழ‌ல‌ ஆர‌ம்பித்த‌து...

வைஜெய‌ந்தியின் பின்னால் செல்வ‌து திருக்கும‌ர‌ன் மட்டும் தானா...என் ம‌ன‌மும் போகிற‌தே...உன்னை பார்த்து திகைப்ப‌து அவ‌ன் ம‌ட்டும‌ல்ல... நானும் தான் வைஜெய‌ந்தி...நான் உன்னை ம‌ன‌துக்குள் பூஜிப்ப‌து உன‌க்கு தெரியுமா...ஓவ்வொரு நாளும் உன் நினைவுக‌ளுட‌ன் தான் விடிகிற‌து...ஒவ்வொரு இரவும் உன் நினைவுகளுடன் தான் முடிகிறது...எப்பொழுதும் உன்னுட‌ன் இருக்க‌த் துடிப்ப‌து என் ம‌க‌ள் ம‌ட்டும‌ல்ல‌...அவ‌ளை விட‌ அதிக‌ம் துடிப்ப‌து நான் தான்...

நாற்ப‌து வ‌ய‌தாகி விட்டால் ஆண் புத்தி நாய் புத்தி ஆகிவிடும்....உங்களுக்கு நாற்பத்தி ரெண்டே ஆகிவிட்டது..நீ சொல்ல‌லாம்...இல்லை வைஜெய‌ந்தி....ப‌தினெட்டு வ‌ய‌தில் தான் காத‌ல் வ‌ரும் என்று யார் சொன்னார்க‌ள்....நாற்ப‌து வ‌ய‌தில் என‌க்கு முப்ப‌த்தி ரெண்டு வ‌ய‌தான‌ உன் மீது காத‌ல் வ‌ர‌க்கூடாது என்று விதி இருக்கிற‌தா...

குருமூர்த்தி...இது என்ன‌ அயோக்கிய‌த்த‌ன‌மான‌ சிந்த‌னை...இன்னொரு ம‌ன‌ம் க‌டிந்து கொண்ட‌து...

இல்லை இது அயோக்கிய‌த் த‌ன‌ம் இல்லை...என் ம‌னைவி இருந்த‌ வ‌ரை என் ம‌ன‌தில் வேறு யாருக்கும் இட‌ம் இல்லையே...அவ‌ள் இல்லாத‌ வெற்றிட‌த்தில் அல்ல‌வா இப்பொழுது அலை பாய்கிற‌து...எத்தனை கோவில்கள்...எத்தனை டாக்டர்கள்...அவளை மட்டும் யாராவது கேன்சரில் இருந்து காப்பாற்றி இருந்தால்...கோடி கோடியாய் சொத்திருக்கிற‌து...ஆனாலும் என் ம‌க‌ளுக்கு ஒரு தாய் இல்லை...நான் ம‌ன‌ம் விட்டு பேச‌ ஒரு ஜீவ‌ன் இல்லை...அவ‌ளுக்கு ஒரு தாயை கொடுக்க‌ வேண்டிய‌து என் க‌ட‌மைய‌ல்ல‌வா...வைஜெய‌ந்தியை விட‌ ந‌ல்ல‌ தாய் யார் இருக்க‌ முடியும்...அவ‌ள் ம‌க‌ளுக்கும் என்னால் ந‌ல்ல‌ த‌ந்தையாக‌ இருக்க‌ முடியுமே..

இதை விரைவில்...விரைவில் என்ன‌ இந்த‌ ஸாட்ட‌ர் டேவே அவ‌ளிட‌ம் சொல்லி விட‌ வேண்டிய‌து தான்...அத‌ற்காக‌ தானே வ‌ர‌ச் சொல்லியிருக்கிறேன்...ப்ளீஸ், ந‌ல்ல‌ ப‌தில் சொல் வைஜெய‌ந்தி...

எனக்கு நீ வேண்டும்...நீ ம‌ட்டுமே வேண்டும்...

குருமூர்த்தி சுய‌ சிந்த‌னையின்றி தான் இதுவ‌ரை கிறுக்கிக் கொண்டிருந்த‌ த‌ன் க‌ம்பெனியின் லெட்ட‌ர் பேடை பார்த்தார்...அதில் ஒரே ஒரு வார்த்தை ம‌ட்டும் ப‌ல‌ முறை அழுத்த‌மாக‌ எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து...


வைஜெய‌ந்தி....

=========போர் இனி ஆரம்பம்===========

Sunday 14 December 2008

பொன்னியின் செல்வன்: சில கேள்விகளும் ஒரு தற்குறியின் (மேலும்) சில பதில்களும்


எவ்ளோ நேரம் நான் வெய்ட் பண்றது...நேரமாச்சி கிளப்புக்கு போலாம் வா....இப்படி ஒருவர் படுத்தியதால் பொன்னியின் செல்வன் பற்றிய நேற்றைய பதிவு ஒரு அவசர ஆர்வ‌ பதிவு.. கிளப்புக்கு போய்விட்டு திரும்பி வந்து ஒரு ச்சின்ன குட்டி தூக்கம் போட்டு விட்டு எழுந்தால் ஞாயிறு மதியம் ஆகியிருக்கிறது...

என‌க்கு இருப்ப‌தை போன்றே ப‌ல‌ருக்கும் கேள்விக‌ள் இருப்ப‌து பெரிய‌ ம‌கிழ்ச்சி..பின்ன, ஒண்ணியும் பிரியலயேன்னு பொல‌ம்புன‌து என‌க்கு மட்டும் தான‌ தெரியும்..இப்ப‌ க‌ம்பெனிக்கு இவ்ளோ பேரு இருக்காங்க‌ளா..அதான் ஒரே குஜாலாக்கீது....

டாக்ட‌ர் ப்ரூனோ, ஒரிஜின‌லாக‌ கேள்விக‌ளை எழுப்பிய‌ ச‌ந்திர‌சேக‌ர‌ன் கிருஷ்ண‌ன், ம‌ற்றும் ப‌ல‌ர் கேள்விக‌ளுக்கு என‌க்கு தெரிந்த‌தை சொல்கிறேன்..

1) ஆதித்ய கரிகாலர், இறந்துதான் போனார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? சமாதி, கல்வெட்டு, இரங்கற்பா இந்த மாதிரி...........அவர் தலைமறைவானதாக அல்லது சாமியாராய்ப் போய்விட்டதாகக் கூட சொல்லலாம். (சுரேஷ்..)

ஆதித்ய‌ க‌ரிகால‌ர் இற‌ந்து தான் போனார் என்று திருவால‌ங்காட்டு செப்பேடுக‌ளை ஆதார‌ம் காட்டி க‌ல்கி வாதிக்கிறார்...மேலும் ச‌ரித்திர‌த்திலும் இது உறுதிப்ப‌டுத்த‌ப் ப‌ட்டிருக்கிற‌து..

ஆனால் டாக்ட‌ர் ப்ரூனோ சொல்லியிருப்ப‌து போல் அவ‌ர் எப்ப‌டி இற‌ந்தார் என்ப‌த‌ற்கு ஆதார‌ங்க‌ள் இல்லை...அவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்டாரா இல்லை த‌ற்கொலை செய்து கொண்டாரா?

க‌ல்கியின் க‌தைப்ப‌டி, க‌ரிகால‌ர் நெஞ்சில் வீர‌பாண்டிய‌ன் வாள் பாய்ந்திருக்கிற‌து...(ப‌ல‌ரும் நினைப்ப‌து போல் இடும்ப‌ன் காரியின் சுருள் க‌த்தி அல்ல‌...).. அந்த‌ வாளை க‌டைசியாக‌ கையில் வைத்திருப்ப‌து க‌ரிகால‌ர் தான்...அதுவுமில்லாம‌ல் நிக‌ழ்ச்சி ப‌ல‌ நாட்க‌ளுக்கு முன்ன‌ரே ஆதித்த‌ க‌ரிகால‌ரின் ம‌ன‌ நிலை நிலைய‌ற்று இருந்த‌தாக‌ வ‌ருகிற‌து..(பார்க்க‌ பார்த்திபேந்திர‌ன் உட‌னான‌ அவ‌ர் உரையாட‌ல்க‌ள், ம‌ற்றும் இளமையில் இற‌ப்ப‌து குறித்து அவ‌ர் சிந்த‌னைக‌ள்).

க‌ல்கியின் க‌தைப்ப‌டி, நந்தினியுடன் வாதித்து கொண்டிருக்கும் ஆதித்த‌ரின் க‌டைசி வாக்கிய‌ம் "ந‌ல்ல‌து! ந‌ம் இருவ‌ருடைய‌ வாழ்க்கைக்கும் ப‌ரிகார‌ம் ஒன்று தான்! விமோச‌ன‌ம் ஒன்று தான்..இதோ, ந‌ந்தினி! என் பிராய‌ச்சித்த‌ம்!.."

இந்த‌ வ‌ச‌ன‌ம் வ‌ரும்போது தான் வ‌ந்திய‌த்தேவ‌னுடைய‌ க‌ழுத்தை நெறித்து விட்டு காள‌முக‌ வேட‌த்துட‌ன் பெரிய‌ ப‌ழுவேட்ட‌ரைய‌ர் வ‌ருகிறார்..ஆனால் அதே ச‌ம‌ய‌ம் த‌ன் முன்னே பார்க்கும் ந‌ந்தினி க‌ரிகால‌ன் த‌ரையில் கிட‌ப்ப‌தையும் அவ‌ன் மார்பில் வீர‌பாண்டிய‌ன் வாள் பாய்ந்திருப்ப‌தையும் பார்க்கிறாள்..
இனி க‌ல்கியின் வ‌ரிக‌ளிலேயே...

"(ந‌ந்தினி) க‌ண்க‌ளை துடைத்துக் கொண்டு எதிரே பார்த்தாள்.க‌ரிகால‌ன் கீழே விழுந்து கிட‌ப்ப‌தை பார்த்தாள்.அவ‌ன் உட‌லில் வீர‌பாண்டிய‌ன் வாள் பாய்ந்திருப்ப‌தையும் பார்த்தாள்"

இத‌ற்கு பின்ன‌ரே ர‌வி தாஸ‌ன் சீனில் வ‌ருகிறான்..என‌வே ர‌வி தாஸ‌ன் கொன்றிருக்க‌ முடியாது..ப‌ழுவேட்ட‌ரைய‌ர் அப்பொழுது தான் பிர‌வேசிக்கிறார்..க‌ரிகால‌ன் கையில் இருந்த‌ க‌த்தியை பிடுங்கி அவ‌ர் க‌ரிகால‌னை கொல்ல‌ கார‌ண‌ங்க‌ள் இல்லை..வ‌ந்திய‌தேவ‌னோ தூர‌மாக‌ ஒளிந்திருக்கிறான்..ம‌ணிமேக‌லை சீனிலேயே இல்லை..இருந்தாலும் க‌ரிகால‌னை கொல்ல‌ அவ‌ளுக்கு கார‌ண‌ங்க‌ள் இல்லை..
எஞ்சியிருப்ப‌து ந‌ந்தினி, க‌ரிகால‌ன் ம‌ட்டும் தான்..ஒன்று ந‌ந்தினி கொன்றிருக்க‌ வேண்டும்..இல்லை க‌ரிகால‌ன் த‌ற்கொலை செய்து கொண்டிருக்க‌ வேண்டும்..

இத‌ற்கு பின்ன‌ர் பாட்ஷா ரேஞ்சில் நான் தான் கொன்னேன் என்று ப‌ழுவேட்ட‌ரைய‌ர், ம‌ணி மேக‌லை என்று ப‌ல‌ர் சாட்சி சொல்வ‌து ந‌ம்பும்ப‌டி இல்லை..

2) அட நந்தினியின் குழந்தையின் அப்பா யார் ? some confussions are there! (ராஜி)

அது யாரென்று க‌தையில் இல்லை..ஆனால், அது ந‌ந்தினியின் குழ‌ந்தை இல்லை என்ப‌து உறுதி... கரிகால‌னுக்காக‌ காத்திருக்கும் க‌டைசி காட்சியில் "அன்று ப‌ள்ளிப்ப‌டை காட்டில் யாரோ ஒரு சிறுவ‌னை உன் ம‌க‌ன் என்று கொண்டு வ‌ந்தார்க‌ள்" என்று அவ‌ள் புல‌ம்புவ‌தாக‌ வ‌ருகிற‌து.. என‌வே அந்த‌ குழ‌ந்தை ந‌ந்தினியின் ம‌க‌ன் அல்ல‌ என்ப‌து உறுதி.

3) வீர‌பாண்டிய‌னுக்கும் ந‌ந்தினிக்கும் என்ன‌ உற‌வு? ம‌க‌ளா இல்லை காத‌லியா இல்லை இர‌ண்டுமேவா? (என்னை அடிக்க‌ வராதீர்க‌ள்..க‌தையில் வ‌ரும் பெரும் குழ‌ப்ப‌ம் இது).. க‌தையில் இர‌ண்டு வீர‌பாண்டிய‌ர்க‌ளா இல்லை ஒரே வீர‌ பாண்டிய‌னா?

முத‌லில், க‌தையில் இர‌ண்டு வீர‌பாண்டிய‌ர்க‌ள் இல்லை.. வீர‌பாண்டிய‌ ம‌ன்ன‌ர் போரில் தோற்று இல‌ங்கை ஓடுகிறார்..அங்கு பிச்சியாக‌ சுற்றிக் கொண்டிருக்கும் ம‌ந்தாகினியுட‌ன் உற‌வு ஏற்ப‌டுகிற‌து..அதில் பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ள் தான் ந‌ந்தினியும், ம‌துராந்த‌க‌ சோழ‌னாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் உத்த‌ம‌ சோழ‌னும்... ஆக மகள் என்பது உறுதி.. இதையே நந்தினியும் கடைசி காட்சியில் சொல்கிறாள்..

இதே வீர‌பாண்டிய‌ன் இல‌ங்கை அர‌ச‌னின் உத‌வியுட‌ன் ப‌டை திர‌ட்டி மீண்டும் போர் வ‌ருகிற‌து..இந்த‌ போரில் தான் ஆதித்த‌ க‌ரிகால‌னால் த‌லை வெட்ட‌ப்ப‌ட்டு இற‌க்கிறார். இந்த‌ இட‌த்தில் ந‌ந்தினி ஆதித்த‌னிட‌ம் கெஞ்சுவ‌து "இவ‌ர் என்னை ம‌ண‌ந்து கொள்ள‌ப் போகிற‌வ‌ர்...என‌க்காக‌ விட்டுவிடுங்க‌ள்..."

குழ‌ப்ப‌ம் இப்பொழுது தான் வ‌ருகிற‌து...ந‌ந்தினிக்கு வீர‌ பாண்டிய‌ன் த‌ன் த‌ந்தை என்று தெரியுமா? தெரிந்திருக்க‌ வாய்ப்பில்லை என்றே தோன்றுகிற‌து..ஆனால் வீர‌பாண்டிய‌னுக்கு க‌ண்டிப்பாக‌ தெரிந்திருக்க‌ வேண்டும்...அத‌னாலேயே அவ‌ன் ந‌ந்தினியை அர‌சியாக்குவேன் என்று சொல்லியிருக்க‌ வேண்டும்..ஏனெனில் அவ‌ள் தான் வாரிசு! ஆனால் ந‌ந்தினி அதை த‌ப்பாக‌ நினைத்துக் கொண்டிருக்க‌ இட‌ம் இருக்கிற‌து..ஏனெனில் அவ‌ளுக்கு த‌ன் பிற‌ப்பு ப‌ற்றி உண்மை தெரியாது...

ஆனால் க‌டைசி காட்சியில் ந‌ந்தினி வீர‌பாண்டிய‌ன் த‌லையை அன்பே என்று விளிப்ப‌த‌ன் அர்த்த‌ம் என்ன‌? த‌ன் த‌ந்தை என்று தெரிந்த‌ பின்னும் "அன்று என் காத‌லை கொன்றீர்க‌ள், பின் என்னை காத‌லித்த‌வ‌ரை கொன்றீர்க‌ள்" என்று க‌ரிகால‌னிட‌ம் சொல்வ‌த‌ன் அர்த்த‌ம் என்ன‌?? என்னை காத‌லித்த‌வ‌ரை என் மேல் அன்பு செலுத்திய‌வ‌ர் என்றும் அர்த்த‌ம் சொல்ல‌லாம்..(வாத‌த்திற்காக‌!)

இதில் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து க‌டைசி வ‌ரை தான் வீர‌பாண்டிய‌னை காத‌லித்த‌தாக‌ ந‌ந்தினி எங்கும் சொல்ல‌வில்லை..யாரிட‌மும் சொல்ல‌வில்லை..(இல்ல‌ நான் எங்க‌னா மிஸ் ப‌ண்ணிட்டேனா?)
"என் நெஞ்சை கிழித்து பாருங்க‌ள், நீங்க‌ள் தான் இருப்பீர்க‌ள்" என்று க‌ரிகால‌ன் சாகும் முன் அவ‌னிட‌ம் சொல்கிறாள்..."அடுத்த‌ முறை பிற‌ந்தால் உங்க‌ளையே க‌ண‌வ‌னாக‌ அடைவேன்" என்று பெரிய‌ ப‌ழுவேட்ட‌ரைய‌ரிட‌ம் சொல்கிறாள்..

ஆக‌, வீர‌பாண்டிய‌ன் மேல் அவ‌ளுக்கு காத‌ல் இருந்த‌து என்று என்னால் சொல்ல‌ முடிய‌வில்லை..ஆனால் வீர‌பாண்டிய‌ன் த‌ன்னை காத‌லித்த‌தாக‌ அவ‌ள் எண்ணியிருக்க‌ வாய்ப்புண்டு..

என‌க்கு என்ன‌வோ அவ‌ள் உண்மையில் காத‌லித்த‌து க‌ரிகால‌னை ம‌ட்டுமே என்று தோன்றுகிற‌து...அவ‌ன் த‌ன்னை ஏமாற்றிவிட்டான் என்ற‌ எண்ண‌த்திலே அவ‌னை ப‌ழிவாங்க‌ விழைகிறாள்..

அண்ண‌ன் த‌ங்கை என்று ஆகிவிட்ட‌ பின் எந்த‌ கால‌த்திலும் ம‌ண‌க்க‌ முடியாது என்ப‌தாலும் அந்த‌ உற‌வின் மோச‌மான‌ நிலையும் எண்ணியே க‌ரிகால‌ன் உயிர் துற‌க்கிறான்..
டாக்ட‌ர் ப்ரூனோ சொல்லும் எடிப‌ஸ் காம்ப்ளெக்ஸ், எல‌க்ட்ரா காம்ப்ளெக்ஸ் இந்த‌ க‌தையில் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை..

4) க‌தையின் தீவிர‌மான‌ காத‌ல் எது?

என‌க்கு தெரிந்த‌ வ‌ரை, ம‌ணிமேக‌லையின் காத‌ல்.. காத‌ல‌னுக்காக‌ கொலைப் ப‌ழியை சும‌க்க‌ தானே முன்வ‌ந்த‌வ‌ள்...காத‌ல‌னுக்கு அபாய‌ம் செய்தால் த‌ன் ச‌கோத‌ர‌னையே கொல்வேன் என்ற‌வ‌ள்...பின் காதலன் இறந்து விட்டான் என்றவுடன் அவனை எண்ணி பைத்தியம் ஆனவள்..
இதைப் போன்றே தீவிர‌மான‌ இன்னொரு காத‌ல் ம‌ந்தாகினியின் காத‌ல்.

ச‌ரி...ஏதோ என்னால் முடிந்த‌ விள‌க்க‌ங்க‌ள்...

இனி யாரும் கேட்காத‌, ஆனால் என்னை ப‌டித்த நாளிலிருந்து உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி..

பொன்னியின் செல்வ‌ன் என்று த‌லைப்பு இருந்தாலும் இந்த‌ க‌தையின் முக்கிய‌ பாத்திர‌ங்க‌ள் வ‌ந்திய‌த் தேவ‌ன், ஆழ்வார்க்க‌டியான் ம‌ற்றும் ந‌ந்தினி..

இதில் வ‌ந்திய‌த் தேவ‌ன் ம‌ட்டுமே உண்மை, ம‌ற்ற‌வை க‌ற்ப‌னைப் பாத்திர‌ங்க‌ள்.. ந‌ந்தினி என்று ஒருவ‌ர் இருந்த‌தாக‌ சோழ‌ வ‌ம்ச‌ம் தொட‌ர்புடைய‌ எதிலும் ஆதார‌ம் இல்லை.

இப்ப‌டி இருக்கையில் ஒரு க‌ற்ப‌னை பாத்திர‌த்தை ப‌டைத்து அதில் உற‌வுச் சிக்க‌லை க‌ல்கி உருவாக்க‌ கார‌ண‌ம் என்ன‌? அவ‌ரின் நோக்க‌ம் வ‌ர‌லாற்று புதின‌மா இல்லை உற‌வுச்சிக்க‌லை ச‌ரித்திர‌ப் பிண்ண‌னியில் சொல்லும் முயற்சியா? அது ர‌சிக‌ர்க‌ளால் த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ப்ப‌ட்டு திசை திரும்பி விட்ட‌தா?

டாக்ட‌ர் ப்ருனோ சொல்வ‌து போல் இது எடிப‌ஸ் காம்ப்ளெக்ஸ்/எல‌க்ட்ரா காம்ப்ளேக்ஸ் அடிப்ப‌டையான‌ க‌தையா? இந்த‌ க‌தையின் இன்ஸ்பைரேஷ‌ன் ஷேக்ஸ்பிய‌ரின் ஹாம்லெட்டா?

சிறிய‌ வ‌ய‌தில் ஒரே ஒரு பாக‌ம் ம‌ட்டும் ப‌டித்திருந்தாலும், பொன்னியின் செல்வ‌னை நான் சென்ற‌ வ‌ருட‌ம் தான் ப‌டித்தேன்.. என‌க்கென்ன‌வோ இது உற‌வுச்சிக்க‌லை சொல்லும் க‌தையாக‌ தான் ப‌டுகிற‌து!

யாரேனும் விள‌க்கினால் ந‌ல‌ம்!

(எல்லாரும் கேட்கும் போது எனக்கு மட்டும் என்ன மானம் வாழுது...அதனால கேட்கிறேன்...பிடிச்சிருந்தா ஓட்டுப் போட்டுட்டு போங்க!)

Saturday 13 December 2008

பொன்னியின் செல்வன் சில கேள்விகளும் ஒரு தற்குறியின் பதில்களும்


நீ என்ன படிச்சிருக்கன்னு கேக்குறது தான் இப்ப தமிழ்மணத்துல ஃபேஷனாருக்கு :0) அதனால நெறைய பேரு அவங்க படிச்சத பத்தி எழுதிகிட்டு இருக்காங்க..


இப்ப சமீபத்துல (இது டோண்டு சாரோட சமீபம் இல்ல..சமீபம்னா நேத்தி நள்ளிரவு சுமார் ஒன்றரை மணி அளவில்!) கிரிஷ் சந்துரு பொன்னியின் செல்வன் பத்தி அழகா எழுதியிருந்ததை படிச்சிட்டேன்.. அவரு எழுதினதை இங்க போடுறது காப்பி அடிக்கிற மாதிரி அநாகரீகம்கிறதுனால, தயவு செஞ்சி அவரு பிளாக்ல போய் படிச்சிக்கங்க...

இப்ப மேட்டரு அவரு பிளாக் இல்ல..அதுல கடைசியா சில கேள்விகள வச்சிருக்காரு...

அதுக்கு முன்னாடி...நீங்க பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்களா? என்னது இல்லியா? அப்பிடின்னா இந்தா இங்க போயி டவுன்லோட் பண்ணி படிங்க...

இதை படிப்பதற்கு நீண்ட நாட்களாகும், ஆனால் சுகமானது...

இப்ப படிக்காதவங்க எல்லாம் வெளிய போய்ட்டாங்களா? சரி, படிச்சவங்களுக்கு மட்டும் கேள்வி.

கேள்வியெல்லாம் கிரிஷ் சந்துருவோடது...பதில் மட்டும் தான் நம்மது!
என் பதிலெல்லாம் தப்புதப்பா இருக்கலாம்..இல்ல இல்ல, அப்பிடித்தான் இருக்கும்...அதனால எதுனா குந்தாங்கொறையா ஒரு மார்க் போட்டு விடுங்க..

1) மிகப்பெரிய குழப்பம் நந்தினி வீரபாண்டியனின் காதலியா மகளா ? நாவலின் இறுதி வரை நந்தினியை வீரபாண்டியனின் பத்தினி என்றே ஸ்தாபித்து விட்டு கடைசியில் மகள் என்று சொல்வது சரியாக நிருபிக்கப்படவில்லை. குந்தவையும் வந்தியத்தேவனும் கடைசியில் பேசும் போது ஆதித்த கரிகாலன் ஒருவேளை போர் வெறியில் சரியாக கேட்காமல் விட்டிருக்கலாம் என்று கூறுவதாக அமைத்தது ஒரு வேளை கல்கியின் சப்பைகட்டோ ? இவ்வளவு பெரிய நாவலில், இத்தனை கதாபாத்திரங்கள் வந்து போகும் இடத்தில் உறவுக்குழப்பத்தில் இந்த விஷயம் மறைந்து விடும் என்று நினைத்தாரோ ? ஒரு வேளை நந்தினி மகளாகவே இருந்தாலும், பள்ளிப்படை காட்டில் பட்டாபிஷேகம் செய்யும் குழந்தை நந்தினியை அம்மா என்று அழைக்கிறதே. அந்த குழந்தை நந்தினிக்கும் யார்க்கும் பிறந்த குழந்தை ? எனக்குத் தோன்றும் ஒரே விடை - பழுவேட்டரையர் வாயிலாக வெளிப்படும் கூற்றாலேயே நாம் நந்தினி வீரபாண்டியனின் மகள் என்று அறிகிறோம். ஆனால் அதைத் தவிர மற்ற இடங்களில் அவர்களை காதலி என்றே சொல்கிறார் - ஒருவேளை அந்த பழுவேட்டரையர் குறிக்கும் வீரபாண்டியனும், ஆதித்த கரிகாலன் கொன்ற வீரபாண்டியனும் வெவ்வேறு ஆசாமிகளா ? அப்படியென்றால் இரு வீரபாண்டியர்களுக்கும் என்ன உறவு ?



இதற்கு நான் இட்ட பின்னூட்டம்:உண்மையில் அருள்மொழியின் அண்ண‌ன் ஆதித்த‌ க‌ரிகால‌னின் ம‌ர‌ண‌ம் எப்ப‌டி நிக‌ழ்ந்த‌து என்ப‌த‌ற்கு ச‌ரித்திர‌த்தில் எந்த‌ ஆதார‌மும் இல்லை.. அவ‌ன் கொல்ல‌ப்ப‌ட்டானா இல்லை த‌ற்கொலை செய்து கொண்டானா? ந‌ந்தினி வீர‌பாண்டிய‌னின் ம‌க‌ளா இல்லை காத‌லியா? அப்ப‌டியானால் ந‌ந்தினிக்கும் ஆதித்த‌ க‌ரிகால‌னுக்கும் என்ன‌ உற‌வு?

பொன்னியின் செல்வ‌ன் க‌தையின் மிக‌ முக்கிய‌ முடிச்சு இந்த‌ உற‌வு சிக்க‌லே..
நந்தினியின் தாய் ம‌ந்தாகினி. த‌ப்பியோடிய‌ வீர‌பாண்டிய‌னுக்கும் ம‌ந்தாகினிக்கும் உற‌வு (ம‌ந்தாகினியின் விருப்ப‌ம் இல்லாம‌ல்) ஏற்ப‌ட்ட‌தாக‌ சிறையில் இருக்கும் பைத்திய‌க்கார‌ன் மூல‌ம் குறிப்பால் உண‌ர்த்த‌ப்ப‌டுகிற‌து.. ம‌ந்தாகினியை சில‌ கால‌ம் காத‌லித்து கைவிட்ட‌வ‌ன் சுந்த‌ர‌ சோழ‌ன். ம‌ந்தாகினி, வீர‌பாண்டிய‌னுக்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் ந‌ந்தினியும், சோழ‌ குடும்ப‌த்தில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் உத்த‌ம‌ சோழ‌னும்!

அப்ப‌டியானால் ந‌ந்தினிக்கும் ஆதித்த‌ க‌ரிகால‌னுக்கும் என்ன‌ உற‌வு முறை? ஒரு வித‌த்தில் அண்ண‌ன் த‌ங்கை.

ஆதித்த‌ க‌ரிகால‌ன் சிறு வ‌ய‌திலேயே ந‌ந்தினியை காத‌லித்த‌தாக‌வும், இது த‌வ‌று என்று தெரிந்த‌ செம்பிய‌ன் மாதேவியார் அவ‌ர்க‌ளை பிரித்த‌தாக‌வும் வ‌ருகிற‌து.

இந்த‌ அண்ணன் த‌ங்கை உற‌வு முறை தெரிய‌ வ‌ருவ‌தாலேயே ஆதித்த‌ க‌ரிகால‌ன் த‌ற்கொலை செய்து கொண்டு இற‌க்கிறான்..

வீர‌பாண்டிய‌ன், ந‌ந்தினி உற‌வில் எந்த‌ குழ‌ப்ப‌மும் இல்லை. ந‌ந்தினி ம‌ந்தாகினி போல் இருப்ப‌தாக‌ க‌தையில் வ‌ருகிற‌து.
இந்த‌ க‌தை 1950க‌ளில் எழுத‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌ தெரிகிற‌து..2008லும் (எந்த‌ கால‌த்திலும்) சொல்ல‌ முடியாத‌ ஒரு உற‌வு பிர‌ச்சினையை க‌ல்கி 1950க‌ளில் வெளிப்ப‌டையாக‌ சொல்ல‌ முடியாது என்ப‌தாலேயே இந்த‌ உற‌வு சிக்க‌ல் மூடி ம‌றைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌ தெரிகிற‌து....கேட்க‌ செவியுள்ள‌வ‌ன் கேட்க‌ க‌ட‌வ‌ன்!

ஆதித்த‌ க‌ரிகால‌னை கொல்ல‌ சூழ்ச்சி செய்த‌தாக‌ ர‌விதாஸ‌னும், உட‌ந்தையாக‌ இருந்த‌தாக‌ ப‌ல‌ கேர‌ள‌த்து குறு நில‌ ம‌ன்ன‌ர்க‌ளும் பிற்கால‌த்தில் ராஜ‌ராஜ‌ சோழ‌னால் த‌ண்டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். ராஜ‌ராஜ‌ன் இத‌ற்காக‌ கேர‌ள‌த்து மீது ப‌டையெடுத்து சென்று ச‌தியாலோச‌னையின் முக்கிய‌ கேந்திர‌மாயிருந்த‌ (அல்ல‌து அவ்வாறு ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌) காந்தாளூர் சாலையை அழித்த‌து வ‌ர‌லாறு. (காந்தாளூர் சாலை க‌ல‌ம‌றுத்த‌ருளிய‌!).

ஆனால், ந‌ந்தினி எந்த‌ கால‌த்திலும் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வில்லை. அத‌ற்கு கார‌ண‌ம் அவ‌ளுக்கு ப‌ழி வாங்கும் வெறி இருந்த‌து, அத‌ற்கு கார‌ண‌மும் இருந்த‌து ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ள் ராஜ‌ ராஜ‌ன், குந்த‌வையின் ச‌கோத‌ரி என்ப‌தும் ஒரு கார‌ண‌மாயிருக்க‌க் கூடும்.
என‌க்கு புரிந்த‌ வ‌ரை, இந்த‌ க‌தை எழுத‌ ஆர‌ம்பிக்கும் போது க‌ல்கியின் முக்கிய‌ நோக்க‌மே இந்த‌ உற‌வு சிக்க‌லை விள‌க்குவ‌தாக‌ இருந்திருக்க்கூடும்..ஆனால், அத‌ன் அபாய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு தாண்டி சென்று விட்ட‌தாக‌ தெரிகிற‌து...


2) நந்தினியும் போலி மதுராந்தகனும் மந்தாகினியின் குழந்தைகள் என்று இருக்கும் பட்சத்தில், அவை பாண்டிய மன்னனுக்குப் பிறந்தவை என்ற பட்சத்தில் - மந்தாகினி ஏன் சுந்தர சோழரை காப்பாற்ற வேண்டும். ஒரே காரணம் அவர்களது முதல் காதல் தான். காதலிப்பது ஒருவனை கைப்பிடிப்பது மற்றொருவனை என்ற கலாசாரம் அந்த காலத்தில் கிடையாதே. அப்படி இருக்கும் போது இது எப்படி சாத்தியம். வீரபாண்டியன் மூலம் குழந்தை பிறந்தது என்று வைத்துக் கொண்டாலும், பாண்டிய வம்சத்தைக் காப்பாற்றாமல் அதன் பகை வம்சமாகிய சோழ வம்சத்தை காப்பாற்றுவது ஏன் ?


ம‌ந்தாகினி சுந்த‌ர‌ சோழ‌ரை காப்பாற்ற‌ கார‌ண‌ம் சுந்த‌ர‌ சோழ‌ர் அவ‌ள‌து காத‌ல‌ன்..ம‌ந்தாகினியும் சுந்த‌ர‌ சோழ‌ரை காத‌லித்த‌து உண்மை...வீர‌பாண்டிய‌ன் அவ‌ளை வ‌ற்புறுத்தியே அடைந்த‌தாக‌ தெரிகிற‌து, ம‌ந்தாகினி விரும்பி அவ‌னை கைப்பிடித்த‌தாக‌ க‌ல்கி சொல்ல‌வில்லை.
ம்ந்தாகினி சோழ‌ நாட்டுப் பெண்..(அவ‌ள‌து அண்ண‌ன் முறையான‌ திருவிட‌ங்க‌ர் கோடிய‌க்க‌ரையில் இருக்கிறார்...அவ‌ள‌து த‌ங்கையான‌ ஊமைப்பெண் செம்பிய‌ன் மாதேவியிட‌ம் வேலைப்பார்த்த‌தாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து. அந்த‌ ஊமைப்பெண் தான் சேந்த‌ன் அமுத‌னின் தாய்.) ம‌ந்தாகினியின் குடும்ப‌மே சோழ‌ நாட்டு குடும்ப‌மாக‌ தான் தெரிகிற‌து..

3) வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்குமிடையிலான காதலை மிகவும் மேலோட்டமாக காட்டியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவ்வளவு தீரணான வந்தியத்தேவனும் புத்திகூர்மையான அரசிளங்குமரியும் இவ்வளவு மேலோட்டமாகவா மோகிப்பார்கள் ? எனக்குத் தெரிந்தவரை intensity அதிகம் இருக்கும் personlityகள் காதலில் மிகவும் தீவிரமாகவே இருப்பார்கள். ஒருவேளை கல்கி இளவரசி தனது நிலையிலிருந்து இறங்கி சொல்லுதலாகாது என்று நினைத்து அந்த காதலை அதிதீவிரமாக எழுதவில்லை போலும். வானதி ராஜராஜன் மீதும், மணிமேகலை வந்தியத்தேவன் மீதும் கொண்ட காதலின் அளவு கூட இல்லாமல குந்தவையும் வந்தியத்தேவனும் கொண்ட காதலின் தீவிரத்தை மேலோட்டமாக கல்கி ஏன் எழுதினார் ?

இத‌ற்கு கார‌ண‌ம் குந்த‌வையின் அன்றைய‌ நில‌வ‌ர‌ம். ராஜ்ய‌த்தில் த‌ந்தைக்கு உட‌ல் நிலை ச‌ரியில்லை..அடுத்து ம‌ன்ன‌ன் ஆக‌ வேண்டிய‌ ஆதித்த‌ க‌ரிகால‌ன் வ‌ட‌புலத்தில் ஒதுங்கி இருக்கிறான்...ப‌ழையாறைக்கோ, த‌ஞ்சைக்கோ அவ‌ன் த‌ந்தையை பார்க்க‌க் கூட‌ வ‌ருவ‌தில்லை.. ம‌ற்றொரு த‌ம்பி க‌ட‌ல் க‌ட‌ந்து இல‌ங்கையில் போர் ந‌ட‌த்திக் கொண்டிருக்கிறான்...
இதில் ராஜ்யபார‌ம் முழுவ‌தும் குந்த‌வையின் மீது விழுகிற‌து..க‌ரிகால‌னுக்கு எதிராக‌ ச‌தி ந‌ட‌க்க‌க்கூடும் என்று அவ‌ளும் எண்ணுகிறாள்...இத்த‌கைய‌ சூழ்நிலையில் காத‌லிப்ப‌து எப்ப‌டி?
வ‌ந்திய‌த் தேவ‌னின் நிலையும் அப்ப‌டியே..
ஆனால் வான‌தி, ம‌ணிமேக‌லையின் நிலை அப்ப‌டி அல்ல‌. வான‌திக்கு இப்ப‌டி ராஜ்ய‌ க‌வ‌லைக‌ள் ஏதுமில்லை..ம‌ணிமேக‌லைக்கும் சோழ‌ ராஜ்ய‌த்தின் பிர‌ச்சினைகள் ப‌ற்றி தெரிய‌வில்லை...அர‌சு, அர‌சியாத‌ல் குறித்து அவ‌ளுக்கு விருப்ப‌மும் இல்லை.. அத‌னாலேயே அவ‌ள் பட்ட‌த்து இள‌வ‌ர‌ச‌ன் ஆதித்த‌ க‌ரிகால‌னையே ம‌ண‌ம் செய்ய‌ ம‌றுக்கிறாள்...

வேற‌ யாருக்காவ‌து எதுனா கேள்வி இருக்கா? இப்ப‌வே கேட்டுக்க‌ங்க‌..அப்புற‌ம் ப‌ரிட்சைல‌ தெரியாம‌ முழிக்க‌ப்படாது...சொல்லிட்டேன் :))

Monday 8 December 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் நான்கு

முன் அறிவிப்பு 1: வழக்கம் போல இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே. கதை மாந்தர்கள் மற்றும் பதிவரின் நலம் கருதி அவர்களின் அடையாளங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.

முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.




பாகம் நான்கு - இழந்துவிட்ட இதயம்

இதன் முந்திய பாகங்களை படிக்க இங்கே சொடுக்கவும்.
பாகம் ஒன்று, பாக‌ம் இர‌ண்டு, பாக‌ம் மூன்று



காருக்கு போன பயல இன்னும் காணமே...அப்பிடியே அடிச்சிட்டு மட்டையாகிட்டானா இல்ல நம்ம கதைய கேட்டு ஓடிட்டானா..ஓடுகாலிப்பய..இவனையெல்லாம் நம்ப முடியாது....இன்னிக்கி நைட்டுக்கு சரக்குக்கு என்ன பண்றது...

வேதாளம் தனது சிந்தனைத் தொட்டியை கலக்கிக் கொண்டிருந்த போது இருட்டில் விக்கிரமன் வருவது தெரிந்தது....

"மாதி...சீக்கிரம் வாப்பு...இப்பிடி கெழவன் மாதிரி நடந்தா எப்பிடி..நீ போன நேரத்துக்கு ஊறல் போட்ருந்தா இன்னேரம் சூடா சரக்கு ரெடியாயிருக்கும்...இம்புட்டு நேரமா.."

"அடிக்கிறது ஓசி சரக்கு அதுல சூடா வேற வேணுமா...ஒனக்கு சீக்கிரமா சங்கு ஊதறேன் பாரு..."

"சங்கெல்லாம் அப்புறம் ஊதலாம்..இப்ப பங்கு போடு...என்ன சரக்கு எடுத்தாந்த?"

"செவிட்டு முண்டமே..அதான் போம்போதே சொன்னேனே...டெக்கீலா.."

"சைடுக்கு? ஊறுகா..லெக் பீசு எதுவும் இல்லியா..."

மாதித்தன் தலையில் அடித்துக் கொண்டான்..

"அட சனியனே.. டெக்கீலாவுக்கு சைட் டிஷ்ஷெல்லாம் கெடயாது...வெரல்ல உப்ப தடவி நக்கிக்க வேண்டியது தான்..."

"அப்ப உப்பாவது குடு..."

"இந்த காட்டுல உப்பெடுக்க தண்டி யாத்திரை தான் போணும்... அதெல்லாம் தெனம் குளிக்கிறவங்களுக்கு..நீ ஒன் வெரல சும்மாவே நக்கிக்கலாம்...நீதான் குளிக்கிறதே இல்லியே..."

"தன்னைப் போல் பிறரையும் நினை..நீ ஒன்ன மாதிரி எல்லாரையும் நெனச்சிட்ட போலிருக்கு"

கும்மிருட்டிலும் விக்கிரமனை முறைத்த வேதாளம் டெக்கிலா பாட்டிலை திறந்து அப்படியே ஊற்றிக் கொண்டு.....அலறியது..

"அம்மே...என்ட அம்மே..என்ட அம்மே..ஒன்ட மோன சவட்டி கள‌ஞ்சிட்டானே...அய்யோ...காது எரியுதே....அடேய் மாதி...ஆசிட்ட‌ குடுத்திட்டியாடா..."

"அட‌ச்சீ....வாய‌ மூடு...சொர‌ங்க்ப்பாதை தொற‌க்கிற‌ மாதிரி...டெக்கீலாவெல்லாம் கொஞ்ச‌மா அடிக்க‌ணும்...இப்பிடி மொத்த‌மா கொட்டிக்கிட்டா....அல‌றாத‌..."

இர‌ண்டு காதுக‌ளுக்குள்ளும் விர‌லை விட்டு வேக‌மாய் குடைந்த‌ வேதாள‌ம் த‌லையை உலுக்கிக் கொண்டு விக்கிர‌ம‌னின் கையை பிடித்து ந‌க்க‌ ஆர‌ம்பித்த‌து...

"அய்ய.. க‌ரும‌ம்.... என்ன‌ ப‌ண்ற‌ நீ....கையை விடு மொட்ட‌ கொர‌ங்கே..."
"நீதான‌ சொன்ன‌...உப்ப‌ ந‌க்க‌ணும்னு...அதான்... ப‌ர‌வால்ல‌..ஒங்கையி ரொம்ப‌ உப்பா தான் இருக்கு...குளிச்சி ஒரு மூணு மாச‌ம் இருக்குமா..."

"ஆமா...நான் முழுகாம‌ இருக்கேன்...அதான் குளிச்சி மூணு மாச‌மாச்சி...இன்னும் ஏழு மாச‌ம் இப்பிடித்தான்...அட‌ச்சீ...இப்ப‌ வாய‌ மூடிக்கிட்டு க‌தைய‌ சொல்றியா இல்லியா...."

"வாய‌ மூடிக்கிட்டு எப்பிடி க‌த‌ சொல்ற‌து..."

இளித்த‌ வேதாள‌ம் காதுக‌ளை குடைந்து கொண்டே க‌தையை சொல்ல‌ ஆர‌ம்பித்த‌து...
==============================


செல்லாத்தா செல்ல‌ மாரியாத்தா
எங்க‌ சிந்தையில் வ‌ந்து அருவி நாடி நில்லாத்தா
க‌ண்ணாத்தா உன்ன‌ காணாட்டா
இந்த‌ க‌ண்க‌ள் இருந்து என்ன‌ புண்ணிய‌ம் சொல்லாத்தா
உந்த‌ன் பெருமையை இந்த‌ உல‌குக்கு எடுத்து பாடாட்டா
இந்த‌ ஜென்ம‌ம் எடுத்துஎன்ன‌ புண்ணிய‌ம் சொல்ல‌டி நீயாத்தா.....

எல்.ஆர். ஈஸ்வ‌ரியின் குர‌ல் கேட்டு முந்திய‌ இர‌வில் அண்டா மாப்ள‌ என்ற‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ முருகேச‌ன் திடுமென்று விழித்துக் கொண்டான்..

"ச்சே..இந்த‌ திருப்ப‌ர‌ங்குன்ற‌த்தில‌ இது ஒரு தொல்ல‌. ம‌னுச‌ன‌ நிம்ம‌தியா தூங்க‌ விட‌மாட்டாய்ங்க‌...கால‌ங்காத்தால‌...."

இர‌வில் வெகு நேர‌ம் க‌ழித்து தூங்க‌ப்போனது திடீரென‌ அவ‌னுக்கு நினைவு வ‌ந்த‌து..டைம் என்ன‌...வ‌க்காளி...ஒம்போதாச்சா....இன்னைக்கும் ஆஃபிஸ் லேட்டு தானா....எல்லாம் அந்த‌ கும‌ர‌ன் ப‌ய‌லால‌ வ‌ந்த‌து...எங்க‌ அந்த‌ நாயி...

திருக்கும‌ர‌ன் ஒரு மூலையில் சுருண்டு சுக‌மாக‌ தூங்கிக் கொண்டிருந்தான்...

"டேய்...ய்யால‌...எந்திரிடா...டைம் ஒம்போதாச்சி..." கும‌ர‌னின் பின்புற‌த்தில் உதைத்தான்...

கும‌ர‌ன் மேலும் சுருண்டு கொண்டு முன‌கினான்...

"...தூங்க‌ விடுங்க‌டா..."

"டேய் ப‌ன்னி...ஒன‌க்கு தான் இன்னிக்கு முக்கிய‌ம்...வேலையில‌ போய் ஜாய்ன் ப‌ண்ண‌னும்...மணி ஒம்போதுடா...இப்ப‌வே ரொம்ப‌ லேட்டு...இனிமே குளிச்சி நீ எப்ப‌ போயி சேர்ற‌து..."

"என்ன‌து ஒம்போதாச்சா....க‌போதி...சீக்கிர‌மா எழுப்ப‌ வேண்டிய‌து தான‌..." பாதி அவிழ்ந்திருந்த‌ லுங்கியை சுருட்டிக் கொண்டு கும‌ர‌ன் வேக‌மாக‌ எழுந்தான்...

"ஆமா நைட்டெல்லாம் குடி...இப்ப‌ என்ன‌ கொற‌ சொல்லு...சீக்கிர‌மா குளிச்சிட்டு கெள‌ம்புடா...இனிமே ஒங்க‌ வீட்டுக்கு போயி டிர‌ஸ் மாத்தெல்லாம் முடியாது...என் டிர‌ஸை போட்டுக்கிட்டு கெள‌ம்பு...ஒன்னோட‌ ஃபைல் என்னோட‌ ரூம்ல‌ தான‌ இருக்கு?"

"நீ சொன்னாலும் எங்க‌ வீட்டுக்கு போக‌ முடியாது...எங்க‌ அப்சு செருப்போட‌ நிப்பாரு..."

அவ‌ச‌ர‌மாக‌ அவ‌ர்க‌ள் குளித்து விட்டு கிள‌ம்பிய‌ போது ம‌ணி ப‌த்தை நெருங்கியிருந்த‌து...

"மாப்ள‌ அண்டா...ரொம்ப‌ லேட்டாயிடுச்சிடா...மொத‌ நாள் ஜாய்ன் ப‌ண்ற‌துக்கே இப்பிடி லேட்டா போனா வேலையே த‌ர‌மாட்டாய்ங்க‌...என்ன‌ ப‌ண்ற‌து....ஒண்ணு ப‌ண்ணு... பேசாம‌ வ‌ண்டிய‌ ந‌ம்ம‌ ம‌ணிய‌ண்ண‌ மெடிக்க‌ல் க‌டைக்கு விடு..."

"அங்க‌ எதுக்குடா...வ‌ழியில‌ ஒரு குவாட்ட‌ர் போட‌வா..."

"அட‌ச்சீ...அதுக்கில்ல‌...அவ‌ரு க‌டையில‌ கொஞ்ச‌ம் பிளாஸ்திரி..ம‌ருந்தெல்லாம் வாங்கி க‌ட்டுப் போட்டுக்க‌ போறேன்...ஆஃபிஸ்ல‌ போயி வ‌ழியில‌ ஆக்சிடெண்ட் ஆயிடுச்சின்னு ப‌ட‌ம் காட்ட‌ வேண்டிய‌து தான்..."

"ங்கொய்யால‌...பொற‌க்கும் போதே மொள்ள‌மாரின்னா அது நீதாண்டா..."

"நாங்கென்ன வேணும்னா பண்றோம்...எல்லாம் சூழ்நில...லெஃப்ட் ஹாண்டு ஒடஞ்ச மாதிரி சீன் போடணும்...அதனால சட்டைய கொஞ்சம் கிளிச்சிக்கிறேன்..."

"டேய்..அது என் சட்டைடா...."

"அதனால தான கிளிக்கிறேன்.."

மெடிக்க‌ல் ஷாப்பில் பிளாஸ்திரி, ம‌ருந்து வாங்கி போலியாய் க‌ட்டுப் போட்டுக் கொண்டு திருக்கும‌ர‌ன் அலுவ‌ல‌க‌த்தை அடைந்த‌ போது ம‌ணி ப‌தினொன்றாகியிருந்தது...

========================

"என்ன‌ சார் மொத‌ நாள் ஜாய்ன் ப‌ண்ற‌துக்கே இவ்வ‌ள‌வு லேட்டா வ‌ர்றீங்க‌..நீங்க‌ மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட்ல‌ தான‌ ஜாய்ன் ப‌ண்றீங்க‌..கொஞ்ச‌ம் இங்க‌ வெய்ட் ப‌ண்ணுங்க‌..நான் உங்க‌ ஹெட் ஆஃபிஸ‌ர்ட்ட‌ பேசிட்டு சொல்றேன்..."

"இல்ல‌ மேட‌ம்...அது வ‌ழியில‌ கொஞ்ச‌ம் ஆக்சிடென்ட் ஆயிடுச்சி...அதான் லேட்டு..."

"அதெல்லாம் என்கிட்ட‌ சொல்லாதீங்க‌...உங்க‌ ஹெட் கேப்பாரு...அவ‌ர்ட்ட‌ சொல்லுங்க‌..."

"ச‌ரிங்க‌ மேட‌ம்.."

ம்ம்ம்...பொண்ணு சூப்ப‌ராருக்கு....ரிஷ‌ப்ச‌னிஸ்டின் அழ‌கை திருக்கும‌ர‌ன் ர‌சித்துக் கொண்டிருக்கும் போதே அவ‌ள் அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பினாள்..

"உங்க‌ள‌ அனுப்ப‌ச் சொல்றாரு...மேல‌ தேர்ட் ஃப்ளோர்ல‌ அவ‌ரு ஆஃபிஸ்..குருமூர்த்தின்னு நேம் ப்ளேட் இருக்கும்....சீக்கிர‌ம் போங்க‌..."

"ரொம்ப‌ தேங்க்ஸ் மேட‌ம்..."

ம்ம்ம்...ந‌ம்ம‌ ம‌ன‌சு ந‌ம்ம‌க்கிட்ட‌ இல்ல‌...திருக்கும‌ரன் லிஃப்டை நோக்கி ந‌ட‌ந்தான்..
.=========================

தேர்ட் ஃப்ளோர்....

S. Guru Murthy M.Tech, MBA
Sr.MANAGER, MARKETING

இது தான் ந‌ம்ம‌ பாஸு ஆஃபிசா...உள்ள‌ ஏதாவ‌து ஒரு சொட்டை உக்காந்திருக்க‌ப் போறான்..மொத‌ நாளே க‌டி தான்...

ட‌க் ட‌க் ட‌க்....

க‌த‌வை த‌ட்டினான்..

"மே ஐ க‌மின் ஸார்..."

"க‌மின்..."

உள்ளே நுழைந்த‌ திருக்கும‌ர‌னுக்கு ச‌ற்று ஏமாற்ற‌மாக‌ இருந்த‌து...குருமூர்த்திக்கு சொட்டையும் இல்லை..கிழ‌வ‌னாக‌வும் இல்லை...ஒரு நாப்ப‌த்த‌ஞ்சி வ‌ய‌சு இருக்குமா...ஆனா அர‌விந்த் சாமி மாதிரி ஸ்டைலா இருக்கான்...இதுக்குன்னே மார்க்கெட்டிங் குடுத்துருப்பாய்ங்க‌...இவ‌ன் வாங்கிக்க‌ன்னு சொன்னா யாரு வேணான்னு சொல்லுவா...

"I'm Gurumurthy....Responsible for Marketing...I assume you are Mr.Thirukkumaran...Please take your seat.."

"Thank you Sir..."

"Sorry for being a bit hasty...but I dont have much time...Let me be straight to the point...This is your very first day...and you're late...infact very late..."

"Sorry Sir...but I had an accident...that's why...."

"I see. I can see that...you still managed to make it...I appreciate it...but hereafter I expect you to be on time...No excuses please...We dont have much time to waste....we have to achieve our target...that's why we recruited more people...."

"I will do my best Sir..."

"That's good....The other engineers joined today are on a factory trip...to see our manufacturing facilities....shop floor...'cos you're late you can't join them... do one thing... you first complete the necessary formalities...After three'o clock I will arrange for a shop floor visit..."

"Thank you Sir..."

இவ‌ய்ங்கெல்லாம் த‌மிழ்ல‌யே பேச‌மாட்டாய்ங்க‌ளா....திருக்கும‌ர‌ன் நினைத்துக் கொண்டிருந்த‌ போது திடீரென்று அவ‌ன் ம‌ன‌தை ப‌டித்த‌தை போல் குருமூர்த்தி த‌மிழில் பேச‌ ஆர‌ம்பித்தார்...

"ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட்ல‌ முடிச்சிட்டீங்ளா"

"இல்ல‌ சார்"

"அக்கவுண்ட்ஸ்?"

"அதுவும் இல்ல‌ சார்..."

"ஒக்கே...மொத‌ல்ல‌ அது ரெண்டையும் முடிச்சிருங்க‌...இப்ப‌ இங்க‌ ஒருத்த‌ங்க‌ வ‌ருவாங்க‌...அவ‌ங்க‌ உங்க‌ளை கைட் ப‌ண்ணுவாங்க‌.."

"ஒக்கே சார்"

"உங்க ஏஜ் என்ன...ட்வென்டி ஒன்னா...அப்ப இது தான் ஃபர்ஸ்ட் ஜாப்பா"

"ஆமா சார்..."

"காலேஜ் இந்த‌ இயர் தான் முடிச்சீங்களா.."

"ஆமா சார்"

"விஷ் யூ ஆல் த‌ பெஸ்ட் வித் யுவ‌ர் ஃப‌ர்ஸ்ட் ஜாப்"

"தேங்க் யூ சார்"

பேசிக் கொண்டே குருமூர்த்தி ட‌ய‌ல் செய்ய‌ ஆர‌ம்பித்தார்...

"குருமூர்த்தி ஹிய‌ர்...வைஜெய‌ந்திய‌ என்னோட‌ ஆஃபிஸுக்கு அனுப்புங்க‌..."
என்ன‌டா இது...கைல‌ இவ்ளோ பெரிய‌ க‌ட்டு போட்ருக்கேன்...ஒருத்த‌ன் கூட‌ என்ன‌ ஆச்சின்னு கேக்க‌ மாட்டேங்குறான்...பெரிய‌ இதுன்னு நென‌ப்பு இவ‌ய்ங்க‌ளுக்கு.... நினைவில் மூழ்கியிருந்த‌ திருக்கும‌ர‌ன் வைஜெயந்தி நுழைந்த‌தையும் அவ‌ள் த‌ன‌க்கு பின்னால் நிற்ப‌தையும் க‌வ‌னிக்க‌வில்லை....

"ம்ம்ம்..மிஸ்ட‌ர் திருக்கும‌ர‌ன்...இவ‌ங்க‌ வைஜெய‌ந்தி...அக்க‌வுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்...இவ‌ங்க‌ கூட‌ போங்க‌...எல்லாம் முடிச்சிட்டு திருப்பி இந்த ஆஃபிஸ் வாங்க..."

"ஒக்கே சார்...தேங்க் யூ சார்".

ஆமா..இது பெரிய‌ தாஜ்ம‌ஹாலு...இங்க‌ திருப்பி வராங்க‌...அசுவ‌ராசிய‌மாய் பின்னால் திரும்பிய‌ திருக்கும‌ர‌னின் இத‌ய‌ம் துடிக்க‌ ம‌ற‌ந்த‌து...

யார் இது... பெண்ணா இல்லை போன‌ ஜென்ம‌த்தில் நான் இழ‌ந்துவிட்ட‌ இத‌ய‌மா?


========= மோக‌ வ‌லை இனி விரியும்===================