
விடாது பெய்யும் மழை...வருவதாக சொல்லிவிட்டு ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டதால் கேன்ஸல் செய்த நட்பு....
பிடித்த பத்து, பிடிக்காத பத்து என்று எல்லாரும் எழுதி விட்டார்கள்...ரொம்ப நல்லவன் வடிவேலு போல பிடித்ததை மட்டும் எழுதிய நல்லவர்கள்...இன்றைய தமிழ் சினிமா பிடிக்கவில்லை, அரசியல் பிடிக்கவில்லை, எனக்கு பிடித்தவர்கள் எல்லாம் செத்து போய்விட்டார்கள் என்று எழுதிய பொத்தாம் பொதுவான தயிர்வடைகள்...(நன்றி: சாரு நிவேதிதா)...அம்மா சுட்ட தோசை பிடிக்கும்.....பாட்டி சுட்ட வடை பிடிக்கும்...முதல் முதல் போட்ட அரைக்கால் டவுசர் பிடிக்கும்...இறந்த காலத்தின் பிரதிநிதிகள்....
நான் எழுதி பெரிதாக எதுவும் கிழிக்கப் போவதில்லை என்றாலும் இருத்தலியத்தின் அவசியம் பொருட்டும் போரடிக்கும் போது புகைக்கும் வழக்கத்தை நிறுத்தும் முயற்சியின் பொருட்டும்....வெறுப்பாக இருக்கும் போது அடுத்தவர்களையும் வெறுப்பேற்றும் என் வழக்கத்தின் காரணமாகவும்...
பிடிக்காததை சொல்வதே நோக்கம்...தலைவாழை இலை போட்டு லட்டும் பக்கத்தில் கொஞ்சம் உப்பும் வைப்பது போல...பிடித்ததும்....
அரசியல்வாதி:
பிடிக்காதது: தலிபான்களின் தமிழக பிரிவு செயலாளர் ராமதாஸ், நாடக மேதை கருணாநிதி, மதச்சார்பற்ற அணி என்று சொல்லிக் கொண்டே மதக்கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகள், சோனியா காந்தி, போலி ஏழைப் பங்காளன் ராகுல் காந்தி, மாயாவதி
பிடித்தது: கம்யூனிஸ்டாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மனிதர் என்பதால் நல்லக்கண்ணு, வைகோ, கருணாநிதியின் போலி அரசியலை பின்பற்றாது கொஞ்சமாவது முன்னேற்ற அரசியலை செய்யும் ஸ்டாலின்.
டைரக்டர்:
பிடிக்காதது: பாரதி ராஜா (வேதம் புதிது தவிர்த்து), விக்ரமன், பேரரசு, ஷங்கர், கெளதம் மேனன்
பிடித்தது: கே.எஸ். ரவிக்குமார், மணி ரத்னம், பாலா
இசை:
பிடிக்காதது: இளையராஜா.
பிடித்தது: எம்.எஸ். விஸ்வநாதன், ஏ.ஆர். ரஹ்மான், தேவா.
நடிகர்:
பிடிக்காதது: எதையுமே சாதிக்காமல் வாய் கிழிய பேச மட்டுமே செய்யும் சிம்பு... ஒரிஜினல் பில்லாவை ரீமேக் செய்து குட்டிசுவராக்கியதால் அஜீத்...காரணமின்றி சூர்யா
பிடித்தது: நிறைய பேர்...குறிப்பாய் நாகேஷ், பிரகாஷ் ராஜ், நாஸர், கமல்ஹாசன், விக்ரம், ரஜினி காந்த்.
நடிகை:
டிக்காதது: ஸ்ரேயா,த்ரிஷா...இப்பொழுது புதிதாய் தமன்னா.
பிடித்தது: அவ்வப்பொழுது மாறிக் கொண்டிருக்கும்....தற்போதைக்கு நாடோடிகள் அனன்யா.
பாடலாசிரியர்:

பிடிக்காதது: கந்தசாமி படத்துக்கு பாடல் எழுதிய நபர்(விவேகா??)....சமீப காலத்தில் இவ்வளவு கேவலமான பாடல்களை கேட்டதாய் ஞாபகம் இல்லை...
பிடித்தது: கண்ணதாசன்... பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்....வைரமுத்து...வாலி...முக்கியமாய் தாமரை
எழுத்தாளர்:
படித்தது மிக மிகக் குறைவு என்பதால் பெரிதாய் எதுவும் இல்லை...படித்தவரை..

பிடிக்காதது: ரமணிச் சந்திரன். இவரது நாவல் ஒன்றை புதிதாய் வாங்கி மூன்று அத்தியாயங்கள் படித்து விட்டு கிழித்து எறிந்தது ஞாபகம் இருக்கிறது...சாரு நிவேதிதா இவரது எழுத்தை மலம் என்று சொல்லியிருந்தார்...உண்மை தான்...
பிடித்தது: எழுத்து நடைக்காக ஜெய மோகன்...பளீரென்று அறையும் உண்மைக்காக சாரு நிவேதிதா. (நெருங்கிய நண்பர் ஒருவர் எஸ்.ராவின் யாமம் குறித்து பெரிதாய் பேசுவதால் படிக்கலாம் என்றிருக்கிறேன்...எனக்கு பிடிக்காவிட்டால் நண்பரிடமிருந்து காசை திருப்பி வசூலிக்கும் உத்தேசம் இருக்கிறது...காசை ரெடி பண்ணிக்கங்க ஃப்ரண்ட்...)
விளையாட்டு:
பிடிக்காத விளையாட்டு: ஃபுட் பால்...செம போரிங்...
பிடித்த விளையாட்டு: ரக்பி....செம காமெடி :0)))
மனிதர்கள்:
பிடிக்காதது: ஜாதி, மத அபிமானம் உடையவர்கள், கலாச்சார காவலர்கள். வெறியர்கள் என்றில்லை அதன் பிடிப்பு உடையவர்களுடன் கூட என்னால் ஒத்துப் போக முடியவில்லை.... மாட்டுக்கறி/பன்றிக் கறி டேஸ்ட் பிடிக்கவில்லை அதனால் நான் சாப்பிட மாட்டேன் என்பவர்களுடன் என்னால் நெருக்கமாக முடிகிறது...அல்கஹாலின் ஸ்மெல் எனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் குடிக்க மாட்டேன் என்பவர்களை புரிந்து கொள்ள முடிகிறது....ஆனால், நான் இந்து அதனால் மாட்டுக் கறி சாப்பிட மாட்டேன், நான் முஸ்லீம் அதனால் நான் அல்கஹாலை தொட மாட்டேன் என்பவர்களுடன் எனக்கு எந்த ஒட்டுதலும் இல்லை...அவர்களிடமிருந்து விலகவே முயற்சிக்கிறேன்....அதைப் போல சாதியும்....
பிடித்தது:தாய்மையிலிருந்து தமிழ் வரை கேள்வி எழுப்புபவர்கள்...கருத்துக்களில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் வெளிப்படையானவர்கள்....கலாச்சாரம்...பாரம்பரியம் என்று சொல்லப்படுவதையும்(!)... மரபையும் உடைப்பவர்கள்.
பதிவர்கள்:
பிடித்தவர்கள்: நிறையப் பேர்...பெயர்கள் என் ப்ளாக் லிஸ்டில் இருக்கிறது...இதில் விடுபட்ட சில பெயர்கள் உண்டு...விரைவில் சேர்க்க வேண்டும்...குறிப்பாக அய்யனார், நர்சிம்,செல்வேந்திரன்.....
பிடிக்காதவர்கள்: இது பிடித்ததை விட மிக மிக அதிகம்....பிறந்த நாள் வாழ்த்து பதிவர்கள், ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியதால் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியில் திளைக்கிறான் என்று எழுதுபவர்கள், வெங்கட்ராமன் கிருஷ்ணன் நோபல் வாங்கியதால் ஒவ்வொரு தமிழனும் காலரை தூக்கி விட்டு கொள்கிறான் என்று க்ரெடிட் திருடுபவர்கள்.... என்ன கருமம்டா சாமி!
பெரும்பாலான பதிவுகள் கலாச்சார காவலர்களின் மறு பிரதியாகவே இருக்கின்றன....காந்தி புனிதமானவர், யாமறிந்த மொழிகளில் தமிழ் தான் இனிமை, குடிப்பழக்கம் சமுதாயத்தின் மிகப் பெரிய தீமை, தாய்மை வணங்கப்பட வேண்டியது, பெண்கள் மூடிக் கொண்டிருந்தால் தான் அழகு இல்லாவிட்டால் அசிங்கம் இப்படி நிறைய....சுட்டி வேண்டுமென்றால் பதிவர் ஆதிமூல கிருஷ்ணனின் அழுக்கின் அழகு...
இதை தவிர குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பதிவர் பரிசல்காரன்....என்னவோ தெரியவில்லை....இவரது இடுகைகள் நன்றாக கழுவிய எவர்சில்வர் தட்டை நக்கியது போல இருக்கிறது...எந்த உணர்வும் தோன்றுவதில்லை.... அடுத்து பதிவர் ராமலஷ்மி....இவரது கவிதைகள்(?) எட்டாம் வகுப்பு பாடம் போல இருக்கிறது...ஸாரி...லேட்டஸ்ட் கவிதை ஆறாம் வகுப்பு பாடம்....Inane!....அப்புறம் பதிவர் அவிங்க ராசா...இவரது எழுத்தும் கருத்தும் நன்றாக இருந்தாலும் இடுகையில் அடிக்கும் அபாரமான மெகா சீரியல் நாடகத்தனம்....ஸ்ஸ்ஸ்ஸ்...யப்பா.... நீண்டு கொண்டே போவதால்....இத்துடன்.
(பி.கு. புடுங்கி மாதிரி பேசாத... நீ எழுதுறது என்ன பெரிய மயிரா என்று யாரும் கேட்க தேவையில்லை...அவர்கள் எழுதுவது நன்றாக இல்லை என்று சொன்னால் என் எழுத்து நன்றாக இருக்கிறது என்று அர்த்தமாகாது...)
