Wednesday, 18 November 2009

எவர்சில்வர் தட்டும் பிடிக்காத பத்தும்....



விடாது பெய்யும் மழை...வருவதாக சொல்லிவிட்டு ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டதால் கேன்ஸல் செய்த நட்பு....

பிடித்த பத்து, பிடிக்காத பத்து என்று எல்லாரும் எழுதி விட்டார்கள்...ரொம்ப‌ நல்ல‌வ‌ன் வ‌டிவேலு போல‌ பிடித்த‌தை ம‌ட்டும் எழுதிய‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள்...இன்றைய‌ த‌மிழ் சினிமா பிடிக்க‌வில்லை, அர‌சிய‌ல் பிடிக்க‌வில்லை, என‌க்கு பிடித்த‌வ‌ர்க‌ள் எல்லாம் செத்து போய்விட்டார்க‌ள் என்று எழுதிய பொத்தாம் பொதுவான‌ த‌யிர்வ‌டைக‌ள்...(ந‌ன்றி: சாரு நிவேதிதா)...அம்மா சுட்ட‌ தோசை பிடிக்கும்.....பாட்டி சுட்ட‌ வ‌டை பிடிக்கும்...முத‌ல் முத‌ல் போட்ட‌ அரைக்கால் ட‌வுச‌ர் பிடிக்கும்...இற‌ந்த‌ கால‌த்தின் பிர‌திநிதிக‌ள்....

நான் எழுதி பெரிதாக எதுவும் கிழிக்கப் போவதில்லை என்றாலும் இருத்தலியத்தின் அவசியம் பொருட்டும் போரடிக்கும் போது புகைக்கும் வழக்கத்தை நிறுத்தும் முயற்சியின் பொருட்டும்....வெறுப்பாக‌ இருக்கும் போது அடுத்த‌வ‌ர்க‌ளையும் வெறுப்பேற்றும் என் வ‌ழ‌க்க‌த்தின் கார‌ண‌மாக‌வும்...

பிடிக்காத‌தை சொல்வ‌தே நோக்க‌ம்...த‌லைவாழை இலை போட்டு ல‌ட்டும் ப‌க்க‌த்தில் கொஞ்ச‌ம் உப்பும் வைப்ப‌து போல‌...பிடித்த‌தும்....

அர‌சியல்வாதி:

பிடிக்காத‌து: த‌லிபான்க‌ளின் த‌மிழ‌க‌ பிரிவு செய‌லாள‌ர் ராம‌தாஸ், நாட‌க‌ மேதை க‌ருணாநிதி, மதச்சார்பற்ற அணி என்று சொல்லிக் கொண்டே மதக்கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகள், சோனியா காந்தி, போலி ஏழைப் பங்காளன் ராகுல் காந்தி, மாயாவதி

பிடித்த‌து: க‌ம்யூனிஸ்டாக‌ இருந்தாலும் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையில் ந‌ல்ல‌ ம‌னித‌ர் என்ப‌தால் ந‌ல்ல‌க்க‌ண்ணு, வைகோ, க‌ருணாநிதியின் போலி‌ அர‌சிய‌லை பின்ப‌ற்றாது கொஞ்ச‌மாவ‌து முன்னேற்ற‌ அர‌சிய‌லை செய்யும் ஸ்டாலின்.

டைர‌க்ட‌ர்:

பிடிக்காத‌து: பார‌தி ராஜா (வேத‌ம் புதிது த‌விர்த்து), விக்ர‌ம‌ன், பேர‌ர‌சு, ஷ‌ங்க‌ர், கெள‌த‌ம் மேன‌ன்
பிடித்த‌து: கே.எஸ். ர‌விக்குமார், ம‌ணி ர‌த்னம், பாலா

இசை:

பிடிக்காத‌து: இளைய‌ராஜா.

பிடித்த‌து: எம்.எஸ். விஸ்வ‌நாத‌ன், ஏ.ஆர். ர‌ஹ்மான், தேவா.

ந‌டிக‌ர்:

பிடிக்காத‌து: எதையுமே சாதிக்காம‌ல் வாய் கிழிய‌ பேச‌ ம‌ட்டுமே செய்யும் சிம்பு... ஒரிஜின‌ல் பில்லாவை ரீமேக் செய்து குட்டிசுவ‌ராக்கிய‌தால் அஜீத்...காரணமின்றி சூர்யா

பிடித்த‌து: நிறைய‌ பேர்...குறிப்பாய் நாகேஷ், பிர‌காஷ் ராஜ், நாஸ‌ர், க‌ம‌ல்ஹாச‌ன், விக்ர‌ம், ர‌ஜினி காந்த்.

நடிகை:

டிக்காதது: ஸ்ரேயா,த்ரிஷா...இப்பொழுது புதிதாய் தமன்னா.

பிடித்தது: அவ்வப்பொழுது மாறிக் கொண்டிருக்கும்....தற்போதைக்கு நாடோடிகள் அனன்யா.

பாட‌லாசிரிய‌ர்:

பிடிக்காத‌து: க‌ந்த‌சாமி ப‌ட‌த்துக்கு பாட‌ல் எழுதிய‌ ந‌ப‌ர்(விவேகா??)....ச‌மீப‌ கால‌த்தில் இவ்வ‌ள‌வு கேவ‌ல‌மான‌ பாட‌ல்க‌ளை கேட்ட‌தாய் ஞாப‌க‌ம் இல்லை...

பிடித்த‌து: க‌ண்ண‌தாச‌ன்... ப‌ட்டுக்கோட்டை க‌ல்யாண‌ சுந்த‌ர‌ம்....வைர‌முத்து...வாலி...முக்கிய‌மாய் தாம‌ரை

எழுத்தாள‌ர்:

ப‌டித்த‌து மிக‌ மிக‌க் குறைவு என்ப‌தால் பெரிதாய் எதுவும் இல்லை...ப‌டித்த‌வ‌ரை..


பிடிக்காத‌து: ர‌ம‌ணிச் ச‌ந்திர‌ன். இவர‌து நாவ‌ல் ஒன்றை புதிதாய் வாங்கி மூன்று அத்தியாய‌ங்க‌ள் ப‌டித்து விட்டு கிழித்து எறிந்த‌து ஞாப‌க‌ம் இருக்கிற‌து...சாரு நிவேதிதா இவ‌ர‌து எழுத்தை ம‌ல‌ம் என்று சொல்லியிருந்தார்...உண்மை தான்...

பிடித்த‌து: எழுத்து ந‌டைக்காக‌ ஜெய‌ மோக‌ன்...ப‌ளீரென்று அறையும் உண்மைக்காக‌ சாரு நிவேதிதா. (நெருங்கிய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் எஸ்.ராவின் யாம‌ம் குறித்து பெரிதாய் பேசுவ‌தால் ப‌டிக்க‌லாம் என்றிருக்கிறேன்...என‌க்கு பிடிக்காவிட்டால் ந‌ண்ப‌ரிட‌மிருந்து காசை திருப்பி வ‌சூலிக்கும் உத்தேச‌ம் இருக்கிற‌து...காசை ரெடி ப‌ண்ணிக்க‌ங்க‌ ஃப்ர‌ண்ட்...)

விளையாட்டு:

பிடிக்காத‌ விளையாட்டு: ஃபுட் பால்...செம‌ போரிங்...

பிடித்த‌ விளையாட்டு: ர‌க்பி....செம‌ காமெடி :0)))

ம‌னித‌ர்க‌ள்:

பிடிக்காத‌து: ஜாதி, ம‌த‌ அபிமான‌ம் உடைய‌வ‌ர்கள், கலாச்சார காவலர்கள். வெறிய‌ர்க‌ள் என்றில்லை அத‌ன் பிடிப்பு உடைய‌வ‌ர்க‌ளுட‌ன் கூட‌ என்னால் ஒத்துப் போக‌ முடிய‌வில்லை.... மாட்டுக்க‌றி/ப‌ன்றிக் க‌றி டேஸ்ட் பிடிக்க‌வில்லை அத‌னால் நான் சாப்பிட‌ மாட்டேன் என்ப‌வ‌ர்க‌ளுட‌ன் என்னால் நெருக்க‌மாக‌ முடிகிற‌து...அல்க‌ஹாலின் ஸ்மெல் என‌க்கு பிடிக்க‌வில்லை அத‌னால் நான் குடிக்க‌ மாட்டேன் என்ப‌வ‌ர்க‌ளை புரிந்து கொள்ள‌ முடிகிற‌து....ஆனால், நான் இந்து அத‌னால் மாட்டுக் கறி சாப்பிட‌ மாட்டேன், நான் முஸ்லீம் அத‌னால் நான் அல்க‌ஹாலை தொட‌ மாட்டேன் என்ப‌வ‌ர்க‌ளுட‌ன் என‌க்கு எந்த‌ ஒட்டுத‌லும் இல்லை...அவ‌ர்க‌ளிட‌மிருந்து வில‌க‌வே முய‌ற்சிக்கிறேன்....அதைப் போல‌ சாதியும்....

பிடித்த‌து:தாய்மையிலிருந்து த‌மிழ் வ‌ரை கேள்வி எழுப்புப‌வ‌ர்க‌ள்...க‌ருத்துக்க‌ளில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் வெளிப்ப‌டையான‌வ‌ர்க‌ள்....க‌லாச்சார‌ம்...பார‌ம்ப‌ரிய‌ம் என்று சொல்ல‌ப்ப‌டுவ‌தையும்(!)... ம‌ர‌பையும் உடைப்ப‌வ‌ர்க‌ள்.

ப‌திவ‌ர்க‌ள்:

பிடித்தவர்கள்: நிறைய‌ப் பேர்...பெய‌ர்க‌ள் என் ப்ளாக் லிஸ்டில் இருக்கிற‌து...இதில் விடுப‌ட்ட‌ சில‌ பெய‌ர்க‌ள் உண்டு...விரைவில் சேர்க்க‌ வேண்டும்...குறிப்பாக‌ அய்ய‌னார், ந‌ர்சிம்,செல்வேந்திர‌ன்.....

பிடிக்காதவர்கள்: இது பிடித்த‌தை விட‌ மிக‌ மிக‌ அதிக‌ம்....பிறந்த நாள் வாழ்த்து பதிவர்கள், ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியதால் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியில் திளைக்கிறான் என்று எழுதுபவர்கள், வெங்கட்ராமன் கிருஷ்ணன் நோபல் வாங்கியதால் ஒவ்வொரு தமிழனும் காலரை தூக்கி விட்டு கொள்கிறான் என்று க்ரெடிட் திருடுபவர்கள்.... என்ன கருமம்டா சாமி!

பெரும்பாலான‌ ப‌திவுக‌ள் க‌லாச்சார‌ காவ‌ல‌ர்க‌ளின் ம‌று பிர‌தியாக‌வே இருக்கின்ற‌ன‌....காந்தி புனித‌மான‌வ‌ர், யாம‌றிந்த‌ மொழிக‌ளில் த‌மிழ் தான் இனிமை, குடிப்ப‌ழ‌க்க‌ம் ச‌முதாய‌த்தின் மிக‌ப் பெரிய‌ தீமை, தாய்மை வ‌ண‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டியது, பெண்கள் மூடிக் கொண்டிருந்தால் தான் அழகு இல்லாவிட்டால் அசிங்கம் இப்ப‌டி நிறைய‌....சுட்டி வேண்டுமென்றால் பதிவர் ஆதிமூல கிருஷ்ணனின் அழுக்கின் அழ‌கு...

இதை த‌விர‌ குறிப்பாக‌ சொல்ல‌ வேண்டுமானால் பதிவர் ப‌ரிச‌ல்கார‌ன்....என்ன‌வோ தெரிய‌வில்லை....இவ‌ர‌து இடுகைகள் ந‌ன்றாக‌ க‌ழுவிய‌ எவ‌ர்சில்வ‌ர் த‌ட்டை ந‌க்கிய‌து போல‌ இருக்கிற‌து...எந்த‌ உண‌ர்வும் தோன்றுவ‌தில்லை.... அடுத்து ப‌திவ‌ர் ராம‌ல‌ஷ்மி....இவ‌ர‌து க‌விதைக‌ள்(?) எட்டாம் வ‌குப்பு பாட‌ம் போல‌ இருக்கிற‌து...ஸாரி...லேட்ட‌ஸ்ட் க‌விதை ஆறாம் வ‌குப்பு பாட‌ம்....Inane!....அப்புற‌ம் ப‌திவ‌ர் அவிங்க‌ ராசா...இவ‌ர‌து எழுத்தும் க‌ருத்தும் ந‌ன்றாக‌ இருந்தாலும் இடுகையில் அடிக்கும் அபார‌மான‌ மெகா சீரிய‌ல் நாட‌க‌த்த‌ன‌ம்....ஸ்ஸ்ஸ்ஸ்...ய‌ப்பா.... நீண்டு கொண்டே போவ‌தால்....இத்துட‌ன்.

(பி.கு. புடுங்கி மாதிரி பேசாத‌... நீ எழுதுற‌து என்ன‌ பெரிய‌ ம‌யிரா என்று யாரும் கேட்க‌ தேவையில்லை...அவ‌ர்க‌ள் எழுதுவ‌து நன்றாக இல்லை என்று சொன்னால் என் எழுத்து ந‌ன்றாக‌ இருக்கிற‌து என்று அர்த்த‌மாகாது...)

Thursday, 29 October 2009

நான் கடவுள்.....


நான் ஏன் இருட்டு சந்துக்குள்....அதுவும் அந்த சந்துக்குள் போக வேண்டும்...வேறு வழியாக போயிருக்கலாம்....அது வழக்கமாக போகும் பாதை கூட அல்ல...சிட்டி சென்டரிலிருந்து கொஞ்சம் ஒதுங்கி பகல் நேரத்திலேயே அந்த சந்து இருட்டாகத் தான் இருக்கும்....ஒரு பழைய சர்ச்...விக்டோரியா மஹாராணி காலமோ இல்லை செயின்ட் பால் அவர் கையாலேயே கரசேவை செய்தாரோ என்று யோசிக்கும் வகையில் அங்காங்கே இடிந்து...ஜன்னல்கள் நொறுங்கி.......Danny loves sTACY...Cat is a SLAG...Blair is a fucker...Man U sucks....Emily fucked everyone in Manchester....கோணல்மானலாய் கறுப்பு, நீலம், சிவப்பு என்று கிடைத்த் நிறத்தில் சுவரில் தெறிக்கும் காதல்...கருத்து சுதந்திரம்...கடுப்பு....உச்சியில் இருக்கும் சிலுவை மட்டும் இல்லாவிட்டால் அது சந்திரமுகி பங்களா...அருந்ததீ அரண்மனை என்று சொல்லிவிடலாம்...அதற்கு பக்கத்தில் எப்பொழுதும் சில பிச்சைக்காரர்கள்...உடைந்த கிடார்கள்....கிழிந்த ட்ரம்ஸ்கள்....நசுங்கிய பியர் கேன்கள்...சில காலி பாட்டில்கள்...பழைய புத்தகங்கள்...விரிக்கப்பட்ட துண்டில் சில காசுகள்...அழுத்தமாய் வீசும் கஞ்சா வாசனை...அழுக்காய் கிழிந்த உடையில் சில மனிதர்கள்....அவர்கள் மீது பயம் இல்லாவிட்டாலும்....என் வீட்டுக்கு குறுக்கு பாதையாய் இருந்தாலும்... அந்த சந்தை ஏனோ நான் தவிர்த்து விடுவதே வழக்கம்...

கொழுப்பு...குடி போதை என்றும் சொல்லலாம்...இரவு ஒரு மணி ஆகிவிட்டது...ஸம்மர் டைம் முடிந்து விண்டர் ஆரம்பித்ததில் ஒரு வேளை சன் ரைஸ் ஆகியிருந்தால் மதியம் மூன்று மணிக்கே சன் செட்....என் கை எனக்கே தெரியாத இருட்டு....காது ஓட்டையில் ஊடுருவி கிட்னியை ஃப்ரீஸ் ஆக்கும் குளிர்...இந்த கருமம் போதாது என்று விட்டு விட்டு பெருந்தூறலாய் மழை வேறு....ரேச்சலின் பர்த்டே பார்ட்டி...வழக்கத்தை விட அதிகமாய் போதை....குறுக்கு சந்தில் போனால் சீக்கிரம் வீடு போகலாம்...புத்திசாலித் தனம் என்று கூட சொல்லலாம்....

சந்தில் நுழைந்து....அதான்டா இதான்டா அருணாச்சலம் நாந்தான்டா...அன்னைத் தமிழ் நாட்டினிலே அனைவருக்கும் சொந்தம்டா...தலைவர் பாட்டை கொஞ்சம் சத்தமாக பாடிக் கொண்டு....இங்கிலாந்துல இருந்துக்கிட்டு என்ன அன்னைத் தமிழ்நாடு...அப்பத்தா தமிழ்நாடு....ஒக்காளி இன்னிக்கி செத்தா நாளைக்கு பால் கூட இல்ல....

பாதி தூரம் நடந்திருப்பேன்...ம்ம்ம்....என்ன கருமம் பிடிச்சே ஊரோ...ஒருத்தனையும் காணோமே.....

அது ஒரு முட்டாள் சந்து....நேராய் போனால் சர்ச்...ஆனால் சர்ச்சை ஒட்டி சந்து ஒரு எழுபது எண்பது டிகிரியில் திடீரென்று திரும்பும்...சந்தை வெட்டி இன்னொரு சந்து...முட்டு சந்து...சந்தின் முடிவில் ஒரு பெரிய சுவர் இருந்தால் அது முட்டு சந்து தானே....கொஞ்சம் கவனிக்காவிட்டால் அப்படி ஒரு சந்து இருப்பதே தெரியாது....அதற்குள்ளிருந்து எவனாவது/எவளாவாது உங்கள் மீது பாய்ந்த பின்னரே கவனிப்பீர்கள்......Fucking stupid turn.....என்பது போல...

நான் அந்த சந்தை கவனிக்காது கடந்து போயிருக்கலாம்...அதான் முன்னாடியே சொன்னேனே...கொழுப்பு...போதை...எவனாவது/எவளாவது திடீரென்று பாய்ந்து விட்டால்....எப்பொழுதும் எனக்கிருக்கும் ஜாக்கிரதை...அல்லது விதி யாரை விட்டது....

முட்டு சந்தை கடக்கும் முன் அனிச்சையாய் தலையை வலப்பக்கம் திருப்பி....நல்லவேளை....அப்படி யாரும் என் மீது பாயவில்லை....ஆனால்.....

சர்ச்சின் சுவர் மீது சாய்ந்து ஒருவன் தரையில் உட்கார்ந்திருந்தான்...இல்லை...சுவரை முதுகுக்கு கொடுத்து அரைகுறையாக படுத்திருந்தான்....கால்கள் இரண்டும் நீட்டி...வழக்கமான பிச்சைக்காரர்களின் தூங்குநிலை தான்...பெரிதாய் சொல்வதற்கில்லை....ஆனால்....அவனுக்கு முழுதாய் முகம் காட்டி....எனக்கு பக்கவாட்டில் முகம் காட்டி....யாரவன்...பிச்சைக்காரனை மிரட்டிக் கொண்டிருக்கிறான் போல...

தூரத்தில் இருக்கும் ஏதோ லைட்டில் இருந்து வெளிச்சம் படுவதால் பிச்சைக்காரனின் முகம் மட்டுமே தெரிகிறது....நின்று கொண்டிருப்பவன் முகம் பக்கவாட்டில் லேசாக....கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்....வெள்ளை நிற முழுக்கை சட்டை....இளைஞன்...வயது...உடலைப்பின் படி...இருபத்தெட்டு இருக்கலாம்...ஆறடிக்கு பக்கமாய் நல்ல உயரம்...நீள நீளமாய் கைகள்....குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல்....சரியான உடல்வாகு...டென்னிஸ் விளையாடுவான் போல...சீராக வெட்டப்பட்ட கறுப்பான தலைமுடி....உருவ அமைப்பை பார்த்தால் கண்டிப்பாக வெள்ளைக்காரன் இல்லை....பாகிஸ்தானியாகவே பங்களாதேஷியாகவோ இல்லை இந்தியனாகவோ இருக்கலாம்....இவன் ஏன் பிச்சைக்காரனை மிரட்டிக் கொண்டிருக்கிறான்....

இருங்கள்...பிச்சைக்காரன் என்றா சொன்னேன்...இல்லை...வெளிச்சத்தில் பார்த்தால் படுத்திருப்பவன் பிச்சைக்காரன் மாதிரி இல்லை...தலை கலைந்திருக்கிறது...முகத்தில் ஒரு வார தாடி....ஒரு வேளை அது அவன் ஸ்டைலாக கூட இருக்கலாம்....அவன் உடைகளும் கூட அழுக்காக இல்லை...நல்ல உடைகள்...இள‌ நீல நிறத்தில் முழுக்கை சட்டை...அடர் கருப்பில் ஜீன்ஸ்...இல்லை...பேன்ட்....கழுத்தில் ஒழுங்காக முடிச்சிடாத டை....ஆனால் கசங்கி இருக்கிறது....குடி போதையில் விழுந்து விட்டானோ....வயது....முகத்தின் தசைகள் இறுகி இருக்கிறது....நீட்டிய கால்களும் தளர்ந்து தரையில் ஊன்றிய கைகளும் உறுதியாக இருப்பது போலத் தான் தெரிகிறது...வயது சொல்வது கஷ்டம்....நாற்பதுக்கும் அறுபதுக்கும் இடையில்...இவனை கிழவன் என்று சொல்வதா இல்லை நடுவயசா....சரி...என்னை விட வயதானவன்...அதனால் கிழவன் என்று வைத்துக் கொள்வோம்....அவனைப் பார்த்தால் வெள்ளைக்காரன் போலவும் இல்லை....சைனாக் காரன் போலவோ இந்திய துணைக்கண்டன் போலவோ இல்லை...ஒரு மாதிரி வெளுப்பான நிறம்....இந்த மங்கலான வெளிச்சத்தில் சரியாக தெரியவில்லை....ஆனால் அவன் லேசாக சிரிப்பது மட்டும் தெரிகிறது....

எவன் எப்படி போனால் என்ன....என்ன பிரச்சினையோ...ஏதேனும் கஞ்சாவாக இருக்கலாம்....நான் தாண்டிப் போயிருக்கலாம்...ஆனால்...அவனவன் விதி அவனை தேடி வருமாமே....இப்பொழுது உட்கார்ந்திருந்த வயது தெரியாத கிழவன் நின்று கொண்டிருப்பவனிடன் ஏதோ சொல்கிறான்....வாக்குவாதம் போலிருக்கிறது....

"நீ ஒரு முட்டாள்....வடிகட்டிய முட்டாள்....நான் யார் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறாய்...."

அட...தமிழ்...நம்ம ஊர்க்காரங்க போலருக்கே... நினைத்துக் கொண்டிருக்கும் போதே நின்று கொண்டிருந்தவனும் ஏதோ சொல்கிறான்....

"கிழிஞ்சது போ....அந்த மயிரத் தான் அரை மணி நேரமா கேட்டுக்கிட்டு இருக்கேன்....யார் நீ...ஏன் இங்க விழுந்து கெடக்க....வீடு எங்கன்னு சொல்லு...ஒரு டாக்ஸி பிடிச்சி அனுப்பி வைக்கிறேன்...."

ஓ....இவனும் நம்ம ஊர்தான் போலருக்கே...பாவம்....எதுனா ஹெல்ப் பண்ணலாம்....என்னை மறைத்த திருப்பத்திலிருந்து ஒரு அடி எடுத்து வைக்கையில்...

கிழவனின் பதில் ஊசியாய் காதில் இறங்கியது....

"நாக்கை அடக்கி பேசு....என்னைத் தெரியவில்லை....முட்டாள்....நான் தான்....கடவுள்...."
========================

இரண்டு



சரி தான்....தனித் தமிழன் மட்டுமல்ல...தண்ணித் தமிழன் போல...எத்தனை ரவுண்ட் அடித்தானோ...எனக்கு லேசாக சிரிப்பு வந்தது...நின்று கொண்டிருந்தவனும் இதையே நினைத்திருக்கலாம்...

"அடடா....கடவுள் இப்படி நடுத்தெருவுல க்வாட்ட்ர் அடிச்சிட்டு குப்புற கெடப்பான்னு எங்கம்மா சொல்லலியே....சரி...விடு...உன் வீடு எங்கருக்குன்னு சொல்லு...இல்லாட்டி உன் பசங்க ஃபோன் நம்பர் குடு...பேசி வரச் சொல்றேன்...."

கிழவன் முறைப்பது தெரிந்தது...

"கடவுளுக்கு ஏதடா வீடு....எல்லாம் என் வீடு....எல்லாம் என் மக்கள்...உனக்கு வேண்டுமானால் ஏதேனும் வரம் வாங்கிக் கொண்டு வீடு போய் சேர்....செயின்ட் ஜெம்மா பள்ளியில் மூன்றாவது படிக்கும் உன் மகள் ஆர்த்திக்கு இன்னும் சிறிது நேரத்தில் காய்ச்சல் வரப் போகிறது....உன் டாக்டர் மிஸஸ் கிப்சனுக்கு ஃபோன் செய்து அவளைக் காப்பாற்று...இன்னும் சிறிது நேரத்தில் பெரிய மழை வரும்....அதற்கு முன் இங்கிருந்து கிளம்பு...."

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியாக இருந்தது....என்ன இது...கிழவன் அள்ளி விடுகிறான்....ஒரு வேளை இது உண்மையாக இருக்குமோ....

தூரத்தில் நின்று கொண்டிருந்தவன் பின் வாங்குவது தெரிந்தது...லேசாய் பின் நகர்ந்து...அவன் குரல்...பேயடித்தவன் போல....குழறலாய்...

"யேய்....நீ..நீ..ஒனக்கு எப்பிடி என் பொண்ணு பேரு தெரியும்....நீ...நீ...சாமியாரா...."

கிழவன்....வேண்டாம்....எனக்கு பயமாக இருக்கிறது....கடவுள்....கடவுள் வெற்றி பெற்றவன் போல மெதுவாக சிரித்தார்....மங்கலான இருட்டிலும் சிரிப்பில் ஒரு களை தெரிந்தது....

"இல்லை மகனே....சாமியார் அல்ல...நான் தான் சாமி....நான் தான் கடவுள்...உனக்கு சந்தேகமிருந்தால் என்ன வேண்டும் சொல்...இப்பொழுதே தருகிறேன்...."

நின்று கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ....

"எனக்கு....எனக்கு....ரொம்ப குளிருது....ஒரு பாக்கெட் டன்ஹில் சிகரெட்டும் ஒரு ஸிப்போ லைட்டரும் வேணும்...."

கடவுள் மந்தகாசமாய் சிரித்தார்...கீழே ஊன்றியிருந்த வலது கை உயர்த்தி...சாய்பாபா சாமியார் போல....வெறுங்கை விரித்து..மூடித் திறக்க....

ஒரு புத்தம் புதிய டன்ஹில் சிகரெட் பாக்கெட்டும்...ஒரு ஸிப்போ லைட்டரும்....

தூரத்தில் நின்று கொண்டிருந்த எனக்கு நாக்கு தொண்டையில் சிக்கிக் கொண்டது....

நின்று கொண்டிருந்தவன் முழங்காலிட்டு சிகரெட்டை பவ்யமாய் வாங்கிக் கொண்டான்..

"மை காட்...மை காட்...சாமி...எனக்கு இன்னொரு பெரிய ஆசை...கேட்டா கோவிச்சிக்க மாட்டீங்களே..."

"நீ என் குழந்தை...என் பிம்பம்...கேள் மகனே...கேள்...."

"அது வந்து சாமி....வந்து...எனக்கு...எனக்கு ப்ரிட்னி ஸ்பியர்ஸை கிஸ் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை...."

கடவுள் திருவிளையாடல் சிவாஜி போல பெரிதாக சிரித்தார்....

"ப்ரிட்னி இப்பொழுது லாஸ்வேகஸில் குடித்துக் கொண்டிருக்கிறாள்...அவளது விதிப்படி இன்றைக்கு மூன்று விநாடிகள் முகம் தெரியாத ஒருவன் அவளை முத்தமிட வேண்டும்....எல்லாம் விதிப்படி நடக்கும்....இதோ....நீ கேட்ட ப்ரிட்னி ஸ்பியர்ஸ்...."

அந்த கும்மிருட்டில்....பளிச்சென்று சிறிய ஒளியுடன்....மறைப்பதை விட காட்டுவதே முக்கியம் எனும் பார்ட்டி ட்ரஸ்ஸில்...ஓ மை காட்....ப்ரிட்னி...நிஜமாகவே ப்ரிட்னி ஸ்பியர்ஸ்....கையில்...அது என்ன...ஐஸ் வோட்காவா...இல்லை மார்ட்டினியா....

இது கனவா...இல்லை நிறைய குடித்து ஹலுசினேஷனா....நம்ப முடியாத திகைப்புடன் நான் யோசித்துத் கொண்டிருக்கும் போதே அவன் ப்ரிட்னியை இறுக முத்தமிட்டு முடித்து....ப்ரிட்னி மறைந்து....மீண்டும் மங்கலான இருட்டு....

கடவுள் மீண்டும் பேச ஆரம்பித்தார்...

"இப்பொழுது நம்புகிறாயா....நான் கடவுள்....ஆனால் நீ...மகனே நீ ஒரு முட்டாள்....கடவுளே வந்தாலும் உனக்கு என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை...சரி சரி கிளம்பு...உனக்கு நேரமாயிற்று....உன் மகள் ஆர்த்தியை போய்ப் பார்...."

"நம்புகிறேன்....கடவுளே....நீர் கடவுள்....நீர் தான் கடவுள்...."

குனிந்து வணங்கியவனின் கைகள் அவனது முழங்காலின் கீழே பின்பக்கமாக இருந்த பாக்கெட்டில் எதையே துழாவுவது தூரத்தில் இருந்து எனக்கு தெரிந்தது....என்ன தேடுகிறான்....ஒரு வேளை சூடம் கொளுத்த போகிறானா....

நிமிர்ந்தவனின் கையில்....அந்த மங்கலான இருட்டை கிழித்துக் கொண்டு...இரு புறமும் கூராக..... ....

ஒரு கத்தி பளபளத்தது.....

============== ==============

மூன்று

இது நான் வழக்கமாக வெண்டைக்காய் வெட்டும் கத்தியல்ல...அது ஒரு புறம் மட்டும் தான் கூர்மையாக இருக்கும்....அதுவும் கூர்மை என்று சொல்ல முடியாது....குறைவாக மொன்னை....ஆனால் இது....தூரத்தில் இருந்து பார்க்கும் போதே தெரிகிறது...ராயல் நேவியில் இருந்து லீவில் வந்த மார்க்கோ காட்டிய கத்தி போல...குத்துவதற்கே செய்த கத்தி....இருபுறமும் கூர்மையாக...


என்ன செய்கிறான் இவன்....கடவுளிடமே வழிப்பறி செய்கிறானா...

என்னைப் போலவே கடவுளும் குழம்பி இருக்க வேண்டும்....அவர் முகத்தில் சிரிப்பும் மந்தகாசமும் மறைந்து....போலி சர்டிஃபிகேட் கொடுத்து இன்டர்வியூவில் மாட்டிய தெலுங்குகாரன் போல...விழித்தார்...

"என்ன செய்கிறாய் நீ...."

"ஒன்றுமில்லை...நீ யாரென்று தெரியாமல் முட்டாள்தனமாக வரம் கேட்டுவிட்டேன்...இப்பொழுது புரிந்து விட்டது...நீ தான் கடவுள்...."

கடவுளின் குரல் கோபமாக ஒலித்தது....

"உன்னை படைத்தவனுக்கு மரியாதை கொடு...."

"மரியாதை...என்ன மயிருக்கு உனக்கு மரியாதை....எதுவும் செய்ய முடியாததால் எதுவும் செய்யாமல் இருப்பவனை மன்னிக்கலாம்....ஆனால் எல்லாம் செய்ய முடிந்த நீ செய்து கிழித்தது என்ன....உனக்கு எதுக்குடா மரியாதை..."

"நீ சொல்வது ஒன்றும் புரியவில்லை...."

"புரியலையா....போடாங்.....என்னை படை...என்னை படைன்னு யார்னா உன்னை கேட்டாங்களாடா....ஒனக்கு பொழுது போகலைன்னா மனுஷங்களை படைச்சிருவியாமே....ஒக்காளி....நாங்க என்ன உன் போதைக்கு ஊறுகாயா...."

கத்தியுடன் நின்றிருந்தவனின் குரல் காரமாக இருந்தது....

"என்ன போதை...என்ன ஊறுகாய்....மகனே....நீ குடித்திருக்கிறாய்....மழை வரும் முன் ஒழுங்காக வீடு போய் சேர் என்று சொன்னேன்....நீ கேட்கவில்லை....இப்பொழுது பார்....மழை வந்துவிட்டது...."

என்னால் நிஜமாகவே நம்ப முடியவில்லை....கடவுள் சொல்லி முடிப்பதற்குள்...சடசடவென்று....பலமாக....மிக பலமாக....மழை கொட்ட ஆரம்பித்தது....நான் நிஜமாகவே கடவுளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....

கத்தியுடன் நின்றிருந்தவன் கவலைப்பட்டதாக தெரியவில்லை....

"மழை வந்தா என்ன...மயிரா போச்சி....உன்கிட்ட கேக்காம விடுறதில்ல....ஊரை கொள்ளையடிச்சி பத்து தலைமுறைக்கு சொத்து சேக்குறவனெல்லாம் மேல மேல தான் போயிக்கிட்டு இருக்கான்....கவுன்சிலரா இருந்தவன் எம்.எல்.ஏ ஆகிடறான்...எம்.எல்.ஏ மந்திரி ஆகிடறான்....அவன் பேரன் ஊர்ல பொறுக்கித் தனம் பண்றான்...நல்லவங்க....ஒன்னும் தெரியாத கொழந்தைங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு சாவுறாங்க...சோத்துக்கே இல்லாம சாவுறாங்க...தேவடியா பசங்க குண்டு வச்சி சாவுறாங்க....இல்ல இனவெறி இறையாண்மைங்கிற பேர்ல கொல்றானுங்க...அப்புறம் அந்த பொணத்தைக் காட்டியே ஓட்டு வாங்குறானுங்க....இதுக்கெல்லாம் நீ என்ன செஞ்ச...."

சோவென்று பெய்த மழையில்.....கடவுளின் உதடுகள் அசையவில்லை...மெளனம்...

"இன்னாடா....கேக்குறோமில்ல....சொல்டாங்க வெண்ணை....."

கடவுளுக்கு பயம் உண்டா....கடுங்குளிரிலும் கொட்டும் மழையிலும் முகம் வியர்க்குமா...

கடவுளின் முகம் வியர்த்திருந்தது...குரல் நடுங்கியது....

"அது....அதெல்லாம் விதிப்படி நடக்கிறது....இப்படித்தான் நடக்கணும்கிறது விதி....அதை நான் நினைச்சாலும் மாத்த முடியாது...."

"எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்னா நீ என்ன மயிருக்குடா இருக்க....."

அவன் கடவுளை நோக்கி கத்தியுடன் முன்னேறினான்....

================ =================

நான்கு

கடவுளுக்கு அவன் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்....

"வேண்டாம்....வேண்டாம்....முட்டாள் தனமாக ஏதாவது செய்துவிடாதே...."

கழுத்து திருகிய கோழி போல கடவுளின் அலறல் அந்த சந்தில் எதிரொலித்தது....இதுவரை சாய்ந்திருந்த சுவற்றில் இருந்து வேகமாக எழ முயன்றார்....

அவன் அதை விட வேகமாக இருந்தான்....அவன் இடக்கால் உயர்ந்து கடவுளின் முகத்தை சுவற்றில் அழுத்தி தேய்த்தது....இடது கை கடவுளின் கலைந்த தலை மயிரை கொத்தாக பற்றியது....

கடவுள் இரு கைகளாலும் அவன் காலைப் பற்றி தன்னை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தார்....அவன் வேகமாக இருந்தான்....கத்த வாயெடுத்த கடவுளின் வாயில் ஷூக்கால் திணிக்கப்பட்டது....

கடவுளின் முழி பிதுங்க...தலை மயிரை இறுகப் பற்றி....குரல் வெளிவராது காலால் தடுத்து....அவன் வலது கை ஓங்கி....

கத்தி கடவுளின் வயிற்றை கிழிப்பதை தூரத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்....கடவுளின் தொப்புளில் கத்தியை சொருகி....நேர்கோடாய் மேலிழுத்து....மீண்டும் கீழே கொண்டு வந்து....வலது பக்கமாய்....ஆங்கில L போல நகர்த்தி.....

மான்செஸ்டரின் குளிர்கால இரவில்....மழையுடன் மழையாக கடவுளின் ரத்தம் கலக்க....கொட்டும் மழை கண் நனைக்க...திறந்த வாய் நிறைக்க....வலப்பக்கம் தலை சாய்த்து.....கடவுள்....செத்துப் போயிருந்தார்....

============ ============

ஐந்து

கடவுளை கொன்று முடித்து....கத்தியை நனைத்திருந்த ரத்தத்தை அவரின் உடையிலேயே துடைத்து முடித்த அவன்....கடவுளின் இறந்த உடலை காலால் நகர்த்தி விட்டு....இது வரை அவர் சாய்ந்திருந்த சுவரில் நின்றவாறே சாய்ந்து கொண்டு....பாக்கெட்டை துழாவி ஒரு சிகரெட்டை எடுத்து....ஸிப்போ லைட்டரால் பற்றவைத்து....ஆழமாக இழுத்து...புகையை வெளியே விட்டு...என்னை நோக்கி திரும்பினான்....

முட்டாள் தனம்...போதை...கொழுப்பு...திமிர்....என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்....கடவுளின் மரணத்தை பார்த்த அதிர்ச்சியில் நான் என் மறைவிடைத்திலிருந்து வெளியே வந்திருந்தேன்....இந்த நிலையில்....இந்த நிலையில்....அவனால்....என்னை நன்றாக பார்க்க முடியும்....என்னாலும் அவனை.....

என்னை நோக்கியவன்...ச்சும்மா ஜாலிக்கு பூனை காதை கிள்ளிட்டேன்...நீ அதை பாத்துட்டியா என்று சிரிக்கும் குழந்தை போல....மெல்ல சிரித்தான்...

உயிர்வரை ஊடுருவும் குளிரில்....கடும் மழையில்....அந்த இரவின் மங்கலான வெளிச்சத்தில்.....

அவன் முகம் நானாகயிருந்தது........

(திருட்டு பயலே என்று யாரும் பின்னூட்டம் போடும் முன்...இதில் கதை மட்டுமே என்னுடையது...அடிப்படை கருத்து நீட்ஷேவுடையது...ஆல்சோ, இதை எழுத எனக்கு இரண்டு மணி நேரம் ஆகியது....படிப்பவர்கள் ஒரு இரண்டு நிமிடம் செலவு செய்து கதையின் குறைபாடுகளை சொன்னால் நல்லது....நன்றி...)