Sunday 31 August 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதல்- பாகம் ஐந்து

இருண்ட சந்திரன்


அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.


அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!


அறிவிப்பு 3: இந்த பாகத்தில் வரும் கெட்ட வார்த்தைகள் அந்த சூழ்நிலையில் கதாபாத்திரங்களால் உபயோகிக்கப்பட்டவையே. கதையை சொல்லி வரும் வேதாளத்திற்கோ, வெறுமே பதிவிடும் எனக்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை. இருந்தாலும் இதில் வரும் வார்த்தைகளுக்காக, நான் சூப்பர் ஸ்டார் போல் மன்னிப்பு, இல்லை, வருத்தம் கேட்டுக்கொள்கிறேன்.








காருக்கு சென்று ஃப்ளாஸ்க்கில் வென்னீருடன் வந்த விக்கிரமன் அந்த நள்ளிரவில், காட்டில் உட்கார்ந்து காஃபி கலக்க ஆரம்பித்தான்.

அவள் வருவாளா, அவள் வருவாளா என் ஒடஞ்சி போன கொம்பை ஒட்ட வைக்க அவள் வருவாளா...

பாடிக்கொண்டிருந்த
வேதாளம் நக்கலடிக்க ஆரம்பித்தது.

"நாயர், இவிட சூடா ஒரு ச்சாயா"

"அட, ஜாக்கெட் போட்ட சனியனே. ஆயிரம் ஆண்டு தொங்கி கொண்டிருந்தாலும் உன் கொழுப்பு அடங்கவில்லை".

"கோவிச்சுக்காத மாதித்தா. நீ காஃபி கலக்கும் அழகில் எனக்கு பாட்டு வந்து விட்டது. சரி, சரி, எனக்கு சக்கரைய கம்மியா போடு. நம்ம டாக்டர் வேதாள மூர்த்தி சொல்லிருக்கார்".

"பெயரை ஒழுங்கா சொல்லு தாளமே. டாக்டர் வேதமூர்த்தியா??"

"வேதம், மாத்ருபூதம் எல்லாம் மனிதர்களுக்கு தான். எனக்கெதற்கு வேதமும், பூதமும். நம்ம டாக்ட‌ர் வேதாள‌ மூர்த்தி தான்"

நீயும்
உன் டாக்ட‌ரும். எப்ப‌டியோ நீ ஒழி ந்தால் தான் என‌க்கு நிம்ம‌தி. ச‌ரி ச‌ரி, க‌தைக்கு வா! சென்னைக்கு போன‌ விஜி என்ன‌ ஆனாள்? சென்னையில் அவ‌ளுக்கு காத்திரு ந்த‌ செய்தி என்ன‌? த‌மிழ் ம‌ண்ணில் கால் வைத்த‌தும் அவ‌ள் ம‌ன‌ம் மாறி விட்ட‌து என்று என‌க்கு தோன்றுகிற‌து.

"பேஷ் பேஷ். காப்பின்னா, ஓசி காப்பி தான்"

சூப்ப
‌ர் ந‌டிக‌ர் போல், க‌ண்ணால் முறைத்து த‌ம்மை ப‌ற்ற‌ வைக்க முயன்று தோற்ற‌ வேதாள‌ம், மீண்டும் க‌தை சொல்ல‌ ஆர‌ம்பித்த‌து.

============================

மாதித்தா, க‌ட‌ல் ம‌ண்ணை அள ந்த‌வ‌ன் கூட‌ உண்டு, ஆனால், மனித‌ எண்ண‌த்தை அள‌ந்த‌வ‌ன் இல்லை. தின‌ம் ஒரு கூட்டணியில் இருக்கும் ராம‌தாசு போல‌, தின‌ம் மாறுவ‌து தான் இய‌ற்கை குண‌ம்.

விஜி ல‌ண்ட‌ன் போன‌ ஒரு மாத‌ கால‌த்தில், மாமியார் மிக‌வும் மாறியிரு ந்தாள். ல‌ண்ட‌ன் போன‌வ‌ர்க‌ள் எல்லாம் ம‌று நாளே கோடீஸ்வ‌ர‌ர்க‌ள் ஆகி விடுகிறார்க‌ள் என்ப‌து தான் இந்தியாவில் சொல்ல‌ப்ப‌டுவ‌து.
தான் கோடீஸ்வ‌ரி ஆகிவிட்ட‌தாக‌வே மாமியார் ம‌கிழ்ந்திருந்தாள். அவ‌ளுக்கு விஜி திரும்பி வ‌ந்த‌தும் அதிர்ச்சியே.

"என்ன‌டி திடீர்னு வ‌ந்துட்ட‌. லீவுல‌ தான‌ வ‌ந்திருக்க‌? வேல‌ ஒண்ணும் பிர‌ச்சினை இல்லியே, திரும்பி போவல்ல?"

விஜிக்கு எரிச்ச‌லாக‌ இரு ந்த‌து. ல‌ண்ட‌ன் போக‌ இவ‌ள் காட்டிய‌ எதிர்ப்பு என்ன‌? இப்பொழுது கேட்ப‌து என்ன‌?

உள்ள‌ம் என்ப‌து ஊமை என்று க‌ண்ண‌தாச‌ன் த‌ன‌க்கு ம‌ட்டும் சொல்ல‌வில்லை விக்கிர‌மா. எல்லா உள்ள‌ங்க‌ளும் ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ஊமையாய் இருப்ப‌து போல் விஜியின் உள்ள‌மும் ஊமையாய் இருந்த‌து.

"அதெல்லாம் ஒண்ணும் பிர‌ச்சினை இல்ல‌ அத்த‌. திரும்பி போக‌ணும்".

விக்கிரமா
, சொல்வ‌து எளிது . செய்வ‌து க‌டின‌ம். ஆன்ட‌ர்ச‌னும், ல‌ண்ட‌னும் கொடுத்த‌ தைரிய‌த்தில் வ‌ந்து விட்டாளே த‌விர‌, விஜிக்கு ந‌டுக்க‌மாயிருந்த‌து.

இவ
‌ர்க‌ளிட‌ம் எப்ப‌டி ஆர‌ம்பிப்ப‌து, என்ன‌ சொல்வ‌து? நான் இன்னொருவ‌னை காத‌லிக்கிறேன் என்று எந்த‌ பெண்ணும் த‌ன் க‌ண‌வ‌னிடமே சொன்ன‌தாக‌ அவ‌ள் க‌தையில் கூட‌ ப‌டித்த‌தில்லை. அவ‌ள் பார்த்த‌ எந்த‌ த‌மிழ் சினிமாவும் இதை காட்ட‌வில்லை.

அவ‌ள் க‌ண‌வ‌ன் ச‌ந்திர‌னும் ச‌ந்தோஷ‌மாக‌ இருன்தான். பார்வை ம‌ங்க‌லாக‌ இருந்தாலும், விஜியின் அழ‌கு அதிக‌மாகியிருப்ப‌தாக‌ அவ‌னுக்கு தோன்றிய‌து. இது வ‌ரை இல்லாத‌ காத‌ல் அவ‌னுக்கு அந்த‌ ஒரே நாளில் வ‌ந்து விட்டிருந்த‌து. ச‌ந்தோஷ‌த்தையும், துக்க‌த்தையும் "பாட்டிலுட‌ன்" ப‌கிர்ந்து கொள்வ‌து தான் அவ‌ன் வ‌ழ‌க்க‌ம்.
பெரிய‌ சிரிப்புட‌ன் அவ‌ளை இறுக்கி அணைத்து கொண்டான்.

"ம்ம்ம், ஆ..., விஜி, ஒரு ஐநூறுவா குடு"

"எதுக்குங்க, ஏற்கனவே குடிச்சி தான உங்களுக்கு கண்ணுல பிரச்சினை.."

"என்ன‌டி புதுசா... க‌டை வ‌ரையிலும் போய்ட்டு வ‌ந்துர்றேன்"

விஜிக்கு புரிந்த‌து. ஆனால் பாதி பார்வை போன‌ பின்னும் திருந்தாத‌ ம‌னித‌னை என்ன‌ சொல்லி திருத்த‌ முடியும்?

பார்த்து கொண்டே இருந்த‌ மாமியார் அருகில் வ‌ந்தாள்.

"விஜி, உன் புருஷ‌னுக்கு க‌ண்ணு ஆப‌ரேஷ‌ன் ப‌ண்ண‌னும். ஒரு நாலு ல‌ட்ச‌ம் வேணும்".

"ப‌ண்ணிட‌லாம் அத்த‌. ஆனா, இப்ப‌ என்ட்ட‌ அவ்வ‌ள‌வு ப‌ண‌ம் இல்லியே"

" இல்லாட்டி என்ன‌.. பேங்குல‌ தான‌ வேல‌ பாக்குற‌. லோன் போட்டு குடு. அவ‌ அவ‌ புருச‌னுக்கு என்ன‌மோ ப‌ண்றா. நீ புருச‌ன் க‌ண்ண‌ ப‌த்தி கூட‌ க‌வ‌ல‌ ப‌ட‌ மாட்டேங்குற‌. எல்லாம் அவ‌ன் த‌ல‌ விதி. உன்ன கட்டிக்கிட்டு மாரடிக்கிறான். வேற‌ன்ன‌ சொல்ல"

ஏற்க‌ன‌வே உத‌ற‌லில் இருந்த‌ விஜிக்கு ஒன்றும் சொல்ல‌ முடிய‌வில்லை.

"ச‌ரிங்க‌த்த‌. நான் எங்க‌ ஆஃபிஸ்ல‌ கேட்டு பாக்குறேன்"

க‌ழுத்தை நொடித்து கொண்ட‌ மாமியார் அத்துட‌ன் பேச்சை முறித்து கொண்டு ந‌க‌ர்ந்தாள்.

விஜிக்கு ஆன்ட‌ர்ச‌னின் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. அவ‌னிட‌ம் என்ன‌ சொல்வ‌து? இவ‌ர்க‌ளிட‌ம் எப்ப‌டி ஆர‌ம்பிப்ப‌து? உள்ளே ந‌டுங்கி கொண்டிருந்த‌ விஜிக்கு அத‌ற்கான‌ நேர‌மும் அன்றிர‌வே வ‌ந்த‌து.....

========================

"விக்கிர‌மாதித்தா, என்றைக்கு ம‌துவை ம‌னித‌ன் க‌ண்டுகொண்டானோ, அன்றிலிருந்தே ம‌துவும், மாதுவும் இணைபிரியாம‌ல் ஆகிவிட்ட‌ன‌. தின‌மும் ஒரு பெண்ணுட‌ன் ச‌ல்லாபிக்கும் உன‌க்கு நான் சொல்லித் தெரிய‌ வேண்டிய‌தில்லை".

"முட்டாள் வேதாள‌மே. என் சொந்த‌ வாழ்க்கையை ப‌ற்றி பேச‌ உன்னிட‌ம் வ‌ர‌வில்லை. நீ என்ன‌ டாக்ட‌ர் நாராய‌ண‌ ரெட்டியா? உன் க‌தைய‌ மட்டும் சொல். என் க‌தை என‌க்கு தெரியும்".

"உண்மையைச் சொன்னால் உட‌ம்பெரிச்ச‌ல். உன்னை சொல்ல‌வில்லை விக்கிர‌மா, நான் பொதுவாக‌ சொன்னேன்"

"இப்பொழுது நீ க‌தையை தொடராவிடில் உன் உட‌ம்பில் எரிச்ச‌லெடுக்கும். க‌தையை சொல்"

ந‌க்க‌லாக‌ த‌ன் உட‌ம்பை சொறிந்து கொண்ட‌ வேதாள‌ம் க‌தையை தொட‌ர்ந்த‌து.

=======

"கேள் விக்கிர‌மா. மாலையில் வெளியே சென்ற‌ க‌ண‌வ‌ன் இர‌வு தான் திரும்பி வ‌ந்தான். அவ‌னுக்கு குடியுட‌ன் மோக‌ வெறியும் ஏறியிருந்த‌து. காவி உடுத்திய‌ பல காஞ்சிவாசிகளே காம‌த்தில் தோற்கும் போது, அவ‌னையும் ந‌ம்மால் குறை சொல்ல‌ முடியாது. க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக‌ விஜி இல்லாம‌ல் அவ‌ன் ப‌ட்ட‌ அவ‌ஸ்தை அவ‌னுக்கு மட்டுமே, இல்லை அவ‌ன் பாட்டிலுக்கும் ம‌ட்டுமே தெரியும்".

வீடு வ‌ந்த‌ அவ‌னுக்கு, விஜியுட‌ன் உட‌னே போக‌ம் அனுப‌விக்க‌ தோன்றிய‌து.

"விஜி , ரொம்ப‌ ட‌ய‌ர்டா இருப்ப‌. வா, ப‌டுத்துக்க‌லாம்"

விஜிக்கு அவ‌ன் அழைப்ப‌த‌ன் நோக்க‌ம் புரிந்த‌து.

"ம்ம்ம், நீங்க‌ ப‌டுங்க‌. நான் கொஞ்ச‌ம் வேலைய‌ முடிச்சிட்டு வ‌ர்றேன்".

"அதெல்லாம் நாளைக்கி பாக்க‌லாம் விஜி. இப்ப‌ வா..."

கைப்பிடித்து ப‌டுக்கைக்கு இழுக்கும் க‌ண‌வ‌னிட‌ம் என்ன‌ சொல்வ‌து என்று விஜிக்கு தெரிய‌வில்லை.

விக்கிர
‌மா, திரும‌ண‌த்திற்கே பெண்ணிட‌ம் ச‌ம்ம‌தம் கேட்காத‌ த‌மிழ்னாட்டில், ப‌டுக்கைக்கும் ம‌னைவியிடம் யாரும் ச‌ம்ம‌த‌ம் கேட்ப‌தில்லை.அழுக்கு துணிக‌ளை துவைப்ப‌து போல், க‌ண‌வ‌னுட‌ன் முய‌ங்குவ‌தும் அவ‌ள‌து அன்றாட‌ க‌ட‌மைக‌ளில் ஒன்று என்ப‌து தான் த‌மிழ் கலாச்சார‌ கோட்பாடு என்ப‌தால் இதில் நாம் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ ஒன்றுமில்லை.

விஜியை ப‌டுக்கைக்கு அழைத்து சென்ற‌ ச‌ந்திர‌னுக்கு பொறுக்க‌வில்லை. அவ‌ளை ப‌டுக்கையில் த‌ள்ளி மேலே ப‌ட‌ர்ந்தான்.

ம‌துவின் நாற்ற‌மும், ச‌ந்திர‌னின் அழுக்கான‌ உட‌ம்பும் விஜிக்கு அருவெறுப்பை ஏற்ப‌டுத்திய‌து.

"வேணாங்க‌... இப்ப‌ வேண்டாம்"

"என்ன‌டி ச்சும்மா வேணாம் வேணாம்னுட்டு.... ஒரு மாச‌ம் ஒன்னுமில்லாம‌ கெட‌க்குறேன்... பேசாம‌ இருடி..."

"வேணாங்க‌. என‌க்கு இஷ்ட‌மில்ல‌. என்ன‌ விட்ருங்க"

ப‌டுக்கையில், ம‌னைவியால் ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ந்திர‌னுக்கு வெறி ஏறிய‌து.

"என்ன‌து இஷ்ட‌மில்லையா? ஏண்டி உன‌க்கு புருஷ‌ன் கூட‌ ப‌டுக்க‌ இஷ்ட‌மில்லையா? அப்ப‌ எவ‌ன் கூட‌ ப‌டுக்க‌ இஷ்ட‌ம்? சொல்லுடி, சொல்லு".
அவ‌ள‌து முடியை பிடித்து உலுக்கினான்.

விஜிக்கு உட‌லும், ம‌ன‌மும் வ‌லித்த‌து. இப்படி நாயினும் கேவலமாக வண்புணர்ச்சி செய்யப்படுவதா என் வாழ்க்கை?

"ஆமா, இஷ்ட‌மில்ல‌ தான். விடுங்க‌ என்ன‌"

"என்ன‌டி சிலுத்துக்குற‌. இஷ்ட‌மில்ல‌ன்ன‌ விட்ருவாங்க‌ளா? இப்ப‌ ப‌டுக்க‌ போறியா இல்ல‌ வேற‌ எவ‌ன் கூட‌யாவ‌து ப‌டுத்துக்கிட்டு இருக்கியா??"

"ஆமா, அப்ப‌டி தான் வ‌ச்சுக்க‌ங்க‌. நான் வேற‌ ஒருத்த‌ன் கூட‌ ப‌டுத்துகிட்டு தான் இருக்கேன். இப்ப‌ போதுமா? விடுங்க‌ என் முடிய‌"

ச‌ந்திர‌னுக்கு த‌ன் கேட்ட‌தை ந‌ம்ப‌ முடிய‌வில்லை. க‌டும் போதையிலும், காம‌ வெறியிலும் இரு ந்த‌ அவ‌னால் சிந்திக்க‌வும் முடிய‌வில்லை.

"என்ன‌டி சொன்ன, தேவடியா நாயே. புருஷ‌ன்கிட்ட‌யே இன்னொருத்த‌ன் கிட்ட‌ ப‌டுத்துகிட்டு இருக்கேன்னு சொல்ற‌, அவ்வ‌ள‌வு திமிரா உன‌க்கு.."
விஜியின் முடியை பிடித்து உலுக்கிய‌ அவ‌ன், அவ‌ள் க‌ன்ன‌த்தில் ப‌ல‌மாக‌ அறைந்தான். அவ‌ளை எட்டி உதைத்தான்.

வ‌லியில் விஜியால் அழாம‌ல் இருக்க‌ முடிய‌வில்லை.

"வேணாங்க‌, என்ன‌ விட்ருங்க‌, வ‌லிக்குது..."

விஜியின் அழுகுர‌ல் கேட்டு அவ‌ள் மாமியார் ஓடி வ‌ந்தாள்.

"என்ன‌டி, இங்க‌ ச‌த்த‌ம் போட்டுகிட்டு இருக்க‌? என்ன‌டி, என்ன‌ ஆச்சி"

ச‌ந்திர‌னுக்கு வெறி அட‌ங்க‌வில்லை. அவ‌ளை மீண்டும் எட்டி உதைத்தான்."நீயே கேளும்மா. இவ‌ எவ‌னையோ வ‌ச்சிகிட்டு இருக்கா"

"என்ன‌டா சொல்ற‌... ஏண்டி வாய‌ தொற‌ந்து பேசேண்டி. இவ‌ன் என்ன‌ சொல்றான்?"

விஜியால் வாய் திற‌ ந்து பேச‌ முடிய‌வில்லை. அடி வாங்கி எரிந்த‌ க‌ன்ன‌த்தை பொத்திக்கொண்டு முன‌கினாள்.

"ஆமா, நான் ஒருத்த‌ர‌ ல‌வ் ப‌ண்றேன்"

கேட்ட‌ ச‌ந்திர‌ன் மீண்டும் அவ‌ளை அறை ந்தான். அவ‌னால் ஒழுங்காக நிற்க‌ முடியாத‌தாலும், கை ந‌டுங்கிய‌தாலும் அந்த‌ அறை குறி த‌வ‌றி அவ‌ள‌து மாமியார் மீது பலமாக‌ விழுந்த‌து.

மாமியார்
அல‌ற‌ ஆர‌ம்பித்தாள்.

"நாச‌மா போன‌வ‌னே, என்ன‌ ஏண்டா அடிக்கிற. அவ‌ள‌ கொல்லுடா. த‌ட்டுவானி முண்ட‌. ஓடுகாலி நாயி. இப்பிடி ப‌ண்ணிட்டாளே, நான் என்ன‌ ப‌ண்ணுவேன். எங்குடிய‌ கெடுத்துப்புட்டாளே.... யாருடி அவ‌ன், சொல்லுடி, சொல்லு"

மாமியார் விஜியை உலுக்க‌ ஆர‌ம்பித்தாள்.

"அவ‌ரு என் கூட‌ வேலை பாக்குறாரு".

"இதுக்கு தாண்டா இவ‌ள‌ வேலைக்கு அனுப்ப‌ வேண்டாம்னு சொன்னேன். கேட்டியா நீ? வேல‌ பாக்குறான்னா யாருடி அவ‌ன்? கும்மோன‌த்து கார‌னா? பேசி வ‌ச்சிகிட்டு தான் நீ ல‌ண்ட‌ன் போனியா? சொல்லுடி"

"இல்ல‌. அவ‌ரு ல‌ண்ட‌ன் கார‌ரு...."

"என்ன‌து, ல‌ண்ட‌ன் கார‌னா? அப்பிடின்னா, வெள்ள‌க்கார‌னா??"

"ஆமா" விஜி முன‌கினாள்....

"அடி நாச‌ம‌த்து போற‌வ‌ளே. அய்ய‌ய்யோ இப்பிடி ப‌ண்ணிட்டாளே. வெள்ள‌க்கார‌ங்கூட‌ ப‌டுத்துட்டு வ‌ந்துருக்காளே. நான் என்ன‌ ப‌ண்ணுவேன்... அய்யோ என் மானம் போச்சே. டேய், இவள தூக்குடா. கும்மோனத்துக்கு போயி, ஓடுகாலிய பெத்து வச்சிருக்க இவ அப்பன்கிட்ட பேசிக்குவோம்..."

விஜிக்கு
மேலும் அடியும் உதையும் விழுந்தது, அவள் அப்பாவுக்கும் ஃபோன் செய்து விஷயம் சொல்லப்பட்டது.

விஜியால் எதுவும் செய்ய‌ முடிய‌வில்லை. ஆன்ட‌ர்ச‌னுக்கு ஃபோன் செய்ய‌லாம் என்று கூட‌ அவ‌ளுக்கு தோன்ற‌வில்லை. அடி வாங்கி அவ‌ள‌து உட‌லும், ம‌ன‌மும் ம‌ரத்து போயிருந்த‌து.

======================

விக்கிர‌மாதித்தா, ப‌டித்த‌ பெண்ணான‌ விஜி, ம‌வுனமாக‌ அடி வாங்கிய‌து ஏன் என்று கேட்காதே. அவ‌ள் சினிமாவில் காட்டும் புர‌ட்சி பெண்ண‌ல்ல. எல்லாரையும் போல, அன்புக்கு ஏங்கும் ஒரு சாதாரண பெண்ணே!பெண்ணை வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ ப‌டுக்கைக்கு இழுக்கும் த‌மிழ் க‌லாச்சார‌ க‌ண‌வ‌ர்க‌ளுக்கு எதிராக‌ தான் செய்வ‌து புர‌ட்சி என்று கூட‌ அவ‌ளுக்கு தெரியவில்லை.

================================================

பார்க் ஷெராட்ட‌னில், ஆன்ட‌ர்ச‌ன் ம‌ன‌ உளைச்ச‌லின் இருந்தான். காலையில் பிரி ந்த‌ விஜியிட‌மிருந்து எந்த‌ த‌க‌வ‌லும் இல்லை. தானே கூப்பிட‌லாமா?? இன்னும் முழுதாக‌ ஒரு நாள் கூட‌ ஆக‌வில்லை. அத‌ற்குள் அவ‌ளை அவ‌ச‌ர‌ப்ப‌டுத்த‌ அவ‌னுக்கு விருப்ப‌மில்லை. ஒரு வேளை, அவ‌ள் வீட்டில் சொல்லி அவ‌ர்க‌ள் ம‌றுத்து விட்டார்க‌ளோ?? ஏதேனும் ஆகியிருக்குமோ?? அவ‌னுக்கு என்ன‌ செய்வ‌து என்று தெரிய‌வில்லை.

எப்ப
‌டியானாலும் ச‌ரி, நாளை அவ‌ளை டெலிஃபோனில் அழைப்ப‌து என்று முடிவு செய்தான். லண்டனிலிருந்து பயணம் செய்த களைப்பில் இருந்த அவன் உடனடியாக ஆழ் ந்த தூக்கத்திற்கு போனான்!

============================================

மாமியாரின் ஏற்பாட்டின் பேரில் அவ‌ச‌ர‌மாக‌ ஒரு வாட‌கைக்கார் அழைக்க‌ப்ப‌ட்ட‌து. விஜி காருக்குள் திணிக்கப்பட்டாள்.

‌டும் போதையில் இருந்த‌தாலும், மான‌ப்பிர‌ச்சினை என்ப‌தாலும், ச‌ந்திர‌ன் வ‌ர‌ மறுத்துவிட்டான்.

மாமியாரும்
மாமானாரும் ம‌ட்டும் ஏறிக்கொள்ள‌, கார் அந்த‌ இர‌வு நேர‌த்தில் சென்னையில் இருந்து கும்ப‌கோண‌ம் நோக்கி விரைந்த‌து.

=====================================

வேக‌மாக‌ க‌தையை சொல்லிக் கொண்டு வ‌ந்த‌ வேதாள‌ம் விக்கிர‌மாதித்த‌ன் எந்த‌ ச‌த்த‌மும் இல்லாம‌ல் இருக்க‌வே க‌தையை நிறுத்திய‌து.

"விக்கிர‌மா, என்ன‌ தூங்கி விட்டாயா??"

"இல்லை வேதாளமே. இல்லை. விருப்ப‌மில்லா பெண்ணை ப‌டுக்கைக்கு இழுக்கும் க‌ண‌வ‌ர்க‌ளைப் ப‌ற்றி க‌லாச்சார‌ காவ‌ல‌ர்க‌ள் என்ன‌ சொல்வார்க‌ள் என்று யோசித்து கொண்டிருந்தேன். நீ க‌தையை சொல். விஜிக்கு என்ன‌ ஆயிற்று? ஆன்ட‌ர்ச‌ன் என்ன‌ செய்தான்?"

வேதாள‌ம் சோக‌மாக‌ சிரித்த‌து.

"புண்ப‌ட்ட‌ நெஞ்சை புகை விட்டு ஆற்று. நீ ஒரு த‌ம்மை எடு. நான் மீதிக்க‌தையை சொல்கிறேன்".

விக்கிர‌மாதித்த‌ன் ஒரு த‌ம்மை வேதாள‌த்து கொடுத்து விட்டு, தானும் ஒரு த‌ம்மை ப‌ற்ற‌ வைத்தான்.

அவ‌ர்க‌ளை சுற்றி யார்க் ஷ‌ய‌ரின் ந‌வ‌ம்ப‌ர் மாத‌ காரிருள் சூழ் ந்த‌து.

=============== தொட‌ரும் ================

Saturday 30 August 2008

வேடிக்கை மனிதர்கள்!

முதலில் எழுதும் எண்ணமில்லை. எழுதி என்ன ஆகப்போகிறது? என்னை எழுத வைத்தவர்கள் இதை படிக்கப் போவதுமில்லை.
நீங்கள் குடித்ததுண்டா? காஃபி, டீயை கேட்கவில்லை. ஆல்கஹால் ஏதேனும், ஒரு முறையாவது குடித்ததுண்டா??

இல்லவே இல்லையா? நீங்கள், நீங்கள் தான் எனக்கு வேண்டும். உங்களுடன் தான் பேச விரும்புகிறேன்.

உங்களை யாராவது குடித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் என்ன செய்வீர்கள்?? குடிக்காதவர்கள் அயோக்கியர்கள், குடும்பத்தை கெடுப்பவர்கள் என்று குற்றம் சாட்டினால் என்ன சொல்வீர்கள்??
குடிக்காமல் இருப்பது உங்கள் விருப்பம், உரிமை என்று சொல்ல மாட்டீர்களா??

அப்படி இருக்கையில், எனக்கு புரியவில்லை, குடிப்பவர்கள் எல்லாம் சமூக வியாதிகள், இழிவானவர்கள் என்ற பிம்பம் ஏன்? யாரேனும் உண்மையை சொல்லுங்கள், குடிக்காதவர்கள் அனைவரும் நல்லவர்களா?

ஒரு நாளும் ஆல்கஹாலை தொட்டதில்லை என்பது மட்டுமே ஒருவரை தெய்வத்தின் அவதாரமாக்கி விடுமா?? கையில் காசில்லாததால், குடிக்காதவனுமா?? ஒரு ப்யூன் 200 ரூபாய் தான் ல‌ஞ்ச‌ம் வாங்குறான், ஆனால், க‌லெக்ட‌ர் 50,000 கேக்குறான், ப்யூன் தான் ரொம்ப‌ நல்ல‌வ‌ன் என்று சொல்வ‌து போல் இருக்கிற‌து.

இவ‌ர்க‌ள் த‌ரும் அட்வைஸ்க‌ள் க‌டும் கொலை வெறியை தான் ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌.

"காசு கொழுப்பு உன‌க்கு".

என்ன‌வோ, இவ‌ன் என‌க்கு பிச்சை போடுவ‌தைப் போல!

இல்லை, இவர்களுக்கு உண்மையில், யார் மீதாவது எந்த அக்கறையாவது உண்டா? சாணி வீச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்ற சந்தோஷமே!

இவர்கள் சித்தரிப்பது போல, ஒருவன் நாள் முழுவதும், வேண்டாம், தினந்தோறும் குடித்தால், நிமிடத்திற்கு நிமிடம் மாறும் ஷேர் மார்க்கெட்டில் இருக்க முடியுமா? இல்லை, 66 கிலோ என்று எடையை மெய்ன்டெய்ன் செய்ய முடியுமா?? சாணி வீச ஏதோ ஒரு சாக்கு, அவ்வளவே!

தின‌மும் உண்ப‌தும், உற‌ங்குவ‌தும், க‌ண‌வ‌ன்/ம‌னைவியுட‌ன் முயங்குவதும் தான் வாழ்க்கை என்று இருக்கும் இவ‌ர்க‌ளைப் ப‌ற்றி சொல்ல‌ முடியாதா??

தேடி சோறு நித‌ம் தின்று

ப‌ல‌ சின்ன‌ஞ்சிறு க‌தைக‌ள் பேசி,

ம‌ன‌ம்வாடி துன்ப‌ம் மிக‌ உழ‌ன்று,

ந‌ரைகூடி கிழ‌ப்ப‌ருவ‌ம் எய்தி,

கொடுங்கூற்றுக்கு இரையென‌ பின் மாயும்

வேடிக்கை ம‌னித‌ர் போல‌

வீழ்வெனென்று நினைத்தாயோ,

சொல்ல‌டி ப‌ராச‌க்தி!

என்று பார‌தி, இவ‌ர்க‌ளை தான் பாடினான் என்று எங்க‌ளுக்கு திருப்பி சொல்ல‌ தெரியாதா??
அவ‌ன‌வ‌ன் வாழ்க்கை, அவ‌ன‌வ‌ன் வ‌லி, அவ‌ன‌வ‌ன் வ‌ழி!

விட்டு விடுங்க‌ள்.

அடுத்து, காதல் பற்றி இவர்கள் பேசி வருவது.

...வேண்டாம், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்!

(க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ ந‌ட‌ந்த‌ த‌னிப்ப‌ட்ட‌ பிர‌ச்சினை, வலியின் விளைவே இந்த‌ ப‌திவு. என‌க்கு டைரி எழுதும் ப‌ழ‌க்க‌ம் இல்லாத‌தால், இங்கு எழுதிவிட்டேன். ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் ம‌ன்னிக்க‌வும்!)

Monday 25 August 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள்- மனைவியின் காதல்- பாகம் நான்கு

புலி வேட்டை!

அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.

அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!


இரண்டு ப்ளேட் மொகல் பிரியாணியையும், நாலு ப்ளேட் காளான் ஃபிரையையும் (பேலன்ஸ்டு டயட்டாம்), பாத்தி கட்டி வெட்டி முடித்த வேதாளம், ஆவ்வ்வ்வ் என்ற ஏப்பத்துடன் மீண்டும் ஒரு தம்மை பற்ற வைத்தது.

டயட்டில் இருப்பதால், வெறும் பாயில்ட் ரைசையும், உப்பில்லாத தயிரும் சாப்பிட்டு முடித்த விக்கிரமன் வேதாளத்தை வெறுப்புடன் பார்த்து கொண்டிருந்தான். இந்த வேதாளத்துடன் கூத்தடித்து கொண்டிருந்ததில், அந்த ஸ்பானிஷ் சிட்டை எவன் தள்ளிக்கொண்டு போனானோ! அவனவன் கவலை அவனுக்கு! இந்த வேதாளமோ கதையை முடித்தபாடாக தெரியவில்லை. என்ன செய்வது?

"முட்டாள் வேதாளமே. கொட்டி கொண்டாயல்லவா? கதையை தொடர வேண்டியது தானே?"

"அவசரப்படாதே விக்கிரமா. பிரியாணி எந்த கடையில‌ வாங்குன? அந்த பாகிஸ்தான் பாய் கடையிலா? ரொம்ப நல்லா இருக்கு, ஆனா, நம்ம தலப்பா கட்டி நாயுடு பிரியாணி மாதிரி வராது. அடுத்த தடவை வரும்போது எங்கனா கெடைக்குமான்னு ட்ரை பண்ணி பாரேன்"

" நேரம் சரியில்லாட்டி, சனீஸ்வரன் ஒத்த கால நின்னு ஒண்ணுக்கடிப்பாராம்! தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணிக்கு உன் தலையத்தான் அடகு வைக்கனும். ஏன், உன் தலைவன் அந்த தாடிக்கார கிழட்டு மந்திரவாதியை கேட்க வேண்டியது தானே?"

"யார், அந்த செவிட்டு கிழவனா? அவனுக்கு மந்திரத்தில் மாங்காயே வரவைக்க தெரியாது. அவனா பிரியாணி வரவைப்பான்? வேணும்னா எனக்கு கால்ல பெரிய ஆணி வரவைப்பான். வெளக்கெண்ண மண்டையன்".

"ஏய் மொட்டை வேதாளமே. நீ நேரத்தை கடத்துகிறாய். கதையை மீண்டும் ஆரம்பிக்காவிட்டால் உனது கொம்பை அறுத்து விடுவேன்"

மனோகரா சிவாஜி குரலில் விக்கிரமாதித்தன் கத்துவதை பார்த்த வேதாளம், அவனுக்கு பயந்தது போல் நடித்துக் கொண்டே கதையை மீண்டும் ஆரம்பித்தது.
========================================================

"மாதித்தா, நீ ஜெய‌கான்த‌னின் சில‌ நேர‌ங்க‌ளில் சில‌ ம‌னித‌ர்க‌ள் ப‌டித்து இருக்கிறாயா? முறைக்காதே. நானும் ப‌டித்த‌தில்லை."

"ஆனால், சில‌ நேர‌ங்க‌ளில், சில‌ ம‌னித‌ர்க‌ள் எது செய்தாலும் இல்லை எதுவும் செய்யாவிட்டாலும் த‌ப்பாகி விடுகிற‌து".

WILL YOU MARRY ME VEEJEE?

என்ற‌ பிரைய‌னின் கேள்வி விஜியை உண்மையில் பெரிய‌ அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய‌து. இதுவ‌ரை அவளை யாரும் இப்ப‌டியொரு கேள்வி கேட்ட‌தில்லை. த‌மிழ்னாட்டில், பெண்க‌ளின் ச‌ம்ம‌த‌த்தை க‌ண‌வ‌னாக‌ப்போகும் ஆண்ம‌க‌ன் தானே கேட்ப‌து வ‌ழ‌க்க‌மில்லை. த‌விர‌, இன்திய‌ க‌லாச்சார‌ப்ப‌டி, பெரும்பாலும் பெண்ணின் ச‌ம்ம‌த‌த்தை கேட்ப‌தில்லை. இப்ப‌டி ஒரு கேள்வி கேட்க‌ப்ப‌டும் என்று அவ‌ளுக்கு யாரும் சொல்லியும் த‌ர‌வில்லை.

அத‌னால், அவ‌ள் என்ன‌ ப‌தில் சொல்வ‌து என்று திகைத்து நின்றாள். ஆனால், ஆன்ட‌ர்ச‌ன் த‌வ‌றாக‌ புரின்து கொண்டான்.

"I know VeeJee. I know India. Your parents are not going to agree. But its all about you. If you say yes, let me speak to them. I am sure, I can convince them".

இன்த‌ இட‌த்தில் நீ ஒன்றை க‌வ‌னிக்க‌ வேண்டும் மாதித்தா. இப்ப‌டிப்ப‌ட்ட‌ கேள்விக‌ளுக்கு "செருப்பு பிஞ்சிரும்" என்று வ‌ழி வ‌ழியாக‌ வ‌ன்த‌ உட‌ன‌டி ப‌திலை சொல்வ‌து தான் த‌மிழ்னாட்டு பெண்க‌ளின் வ‌ழ‌க்கம். அவ‌ள் என்த‌ ப‌திலும் சொல்லாத‌த‌ற்கு திகைப்பு மட்டும‌ல்ல‌, அவ‌ளுக்கு தெரியாம‌லேயே ஆன்ட‌ர்ச‌ன் மீது அவ‌ளுக்கு இருன்த‌ ஒருவித‌ ஈர்ப்பும் கார‌ண‌ம் என்று சொல்ல‌லாம். இதை தொட‌ர்ன்து பால‌ குமார‌னை ப‌டித்த‌ த‌மிழ‌ர்க‌ள் புரின்து கொள்வார்க‌ள்.

ஒரு வ‌ழியாக‌ விஜி திகைப்பிலிருன்து மீண்டாள்.

"I am already married Brian".

இப்பொழுது திகைப்ப‌து பிரைய‌னின் முறை.

"What... Oh Jesus..... oh no, oh no. I am sorry...I never... never knew this....believe me, you never told me".

"Ofcourse, you never asked me a question like this before".

"errr, yeah, yes. stupid me, I should 'ave. I never thought about it. I am really sorry VeeJee. But I 'ave to say, I am in love with you".

"I like you too Brian. But remember, I am married.".

விக்கிர‌மா, ந‌ல்ல‌ நாக‌ரீக‌மான‌ ஆண்ம‌க‌ன் இத்துட‌ன் வில‌கி இருப்பான். ஆனால், ம‌னித‌ ம‌ன‌ம் வித்தியாச‌மான‌து. அருகில் இருக்கும் மானை விட‌, தூர‌த்தில் ஓடும் மானை துர‌த்தும் விசித்திர‌ங்க‌ளை ம‌னித‌ர்க‌ள் ம‌ட்டுமே செய்ய‌ முடியும்.

ஆன்ட‌ர்ச‌ன் ம‌னித‌ன் ம‌ட்டும‌ல்ல‌, தான் ந‌ல்ல‌ நாக‌ரீக‌மான‌ ஆண்ம‌க‌ன் என்று கூட‌ அவ‌ன் ஒரு போதும் ஒப்புக்கொண்டதில்லை. தான் அடைய நினைப்பதை அடைபவன் தான் ஆண்மகன் என்பது அவன் கொள்கை. த‌விர‌வும், காத‌ல் என்றால், கும‌ர‌க்க‌ட‌வுளே குற‌வ‌ன் ஆகும்போது, ஆன்ட‌ர்ச‌ன் த‌ன‌து நாக‌ரீக‌ முக‌மூடிக‌ளை தூக்கியெறின்த‌தில் விய‌ப்பில்லை. ப‌ல‌ ம‌னித‌ர்க‌ள் காத‌லுக்காக‌ பறக்கும் விமான‌த்திலேயே ஃபுட் போர்ட் அடிக்க‌ த‌யாராக இருக்க, இது கூட‌ செய்யாவிட்டால் எப்ப‌டி?

"mmmh, VeeJee.... ah, its your personal life. But if I can ask..... ah, are you.... happily married?"

இட்ஸ் ந‌ன் ஆஃப் யுவ‌ர் பிஸ்ன‌ஸ் என்று விஜி சொல்லியிருக்க‌ முடியும். ஆனால், அவ‌ளால் அப்ப‌டி சொல்ல‌ முடிய‌வில்லை.

"mmh, sort of..... well, not really".

"ah,.....then why are you sticking with him? Is he any good?"

"You won't understand it Brian. It's India. It's the way of life, or you can say thats the culture. Whether he is good or not, we dont leave our husband".

"Are you saying you are going to live with him even though you are not happy and waste your entire life? Forgive me, but I dont understand it"

"Thats what I told you. You wont understand it. It is the choice, because it is the ONLY choice".

"You are wrong VeeJee. Certainly wrong. You are beautiful. You know it. You can choose anyone of your liking and get out of this marriage".

"And how do I face my parents? How do I face my brothers? Above all, what would I tell my husband? What our neighbours will think of me? "

"So, is that all you are living for? For your parents, your brothers and what to tell your husband? or what some xyz will think of you?"

"Thats your way of saying Brian. But I would say, I am caring for them".

"I dont know, but I think you are deceiving yourself".

"May be I am, may be not. But it doesn't matter Brian. It's India, not London. In anycase, its too late, and I am very tired. Shall I go home?"

ஆன்ட‌ர்ச‌னுக்கு ஏமாற்ற‌மே. ஆனால், இத‌ற்கு மேலும் விஜியை க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ அவ‌னுக்கு ம‌ன‌மில்லை.

"Sure VeeJee. I'll arrange a taxi for you. Thanks for coming out".
"You are a great guy Brian. I am sorry if I have upset you. But please understand my situation".
"Its alright VeeJee. To be honest, I am upset. Very upset. But I wont blame you for that. After all, its my fault".

"I am sorry Brian".

அத‌ற்குள் டாக்ஸி வ‌ன்துவிட‌வே அவ‌ர்க‌ளால் அத‌ற்கு மேல் எதுவும் பேச‌ முடிய‌வில்லை.
==========================================

Alright என்று விஜியிட‌ம் சொல்லிவிட்டானே த‌விர‌, உண்மையில் பிரைய‌னுக்கு அன்று இர‌வு எதுவும் ரைட்டாக‌ இல்லை. 17 வ‌ய‌திலிருன்து அவ‌ன் என்த‌ பெண்ணாலும் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌தில்லை. அதற்கு காரணம், அவ‌ன‌து அன்த‌ஸ்தும், ட்யூக் ஆஃப் ல‌ங்காஷ‌ய‌ரின் நெருங்கிய‌ உற‌வின‌ன் என்ப‌து ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ன‌து அழ‌கிய‌ தோற்ற‌மும் ஒரு கார‌ண‌ம் என்ப‌து அவ‌ன் ந‌ம்பிக்கை.

அது ம‌ட்டும‌ல்ல‌. அவ‌னுக்கு வேறொரு பிர‌ச்சினையும் இருன்த‌து. 18 வய‌திலிருன்து ஒரு பெண் இல்லாம‌ல் "தூங்கி" அவ‌னுக்கு ப‌ழ‌க்க‌மில்லை. பாருக்கு சென்று விட்டு என்த‌ பெண்ணும் இல்லாம‌ல் திரும்பி வ‌ருவ‌து இது தான் அவ‌னுக்கு முத‌ல் முறை. வ‌ழ‌க்க‌மான‌ த‌ன‌து "ஏஜென்சிக்கு" ஃபோன் செய்து ஒரு "இரவுப்" பெண்ணை வ‌ர‌ச்செய்தான். அவ‌ள் அச‌த்தும் அழ‌குடைய‌வ‌ள் தான். ஆனால், பாதி "காரிய‌த்தில்" அவ‌னுக்கு விஜியின் நினைவு வ‌ன்துவிட்ட‌து. அன்த‌ பெண்ணை திரும்பி போக‌ச் சொல்லிவிட்டான். அன்த‌ பெண் த‌ன்னிட‌ம் தான் ஏதோ த‌வ‌று இருக்கிற‌தோ என்று ப‌ல‌ முறை சாரி சொல்லிவிட்டு போனாள்.

அன்றைய‌ இர‌வு அவ‌னால் தூங்க‌ முடிய‌வில்லை. விஜி இல்லாம‌ல் த‌ன‌து வாழ்க்கையே அர்த்த‌மில்லாத‌தாக‌ அவ‌னுக்கு தோன்றிய‌து.
தான் ஒரு புலி வேட்டையை ஆர‌ம்பித்திருப்ப‌து புரின்த‌து. வாழ்க்கையில் முத‌ல் முறையாக‌ தோற்றுவிடுவோமோ என்ற‌ ப‌ய‌மும் அவனுக்கு வ‌ன்த‌து.

=====================================

க‌தை சொல்லுவ‌தை நிறுத்திய‌ வேதாள‌ம், விக்கிர‌ம‌னின் ஜாக்கெட்டை த‌ட‌வி மீண்டும் ஒரு த‌ம்மை ப‌ற்ற‌ வைத்த‌து.
"விக்கிர‌மா, நீ ப‌ல‌ த‌ட‌வை புலி வேட்டைக்கு போயிருக்கிறாய். உண்மையைச் சொல். புலி வேட்டைக்கு போகும் எவ‌ருக்கும், புலியை வேட்டையாடுவ‌தை விட‌, முழுதாக‌ திரும்பி வ‌ர‌வேண்டும் என்ற‌ உத‌ற‌ல் இருக்கும் தானே?""அன்த‌ உத‌ற‌ல் தான், பிரைய‌னை அன்று இர‌வு தூங்க‌ விடாம‌ல் செய்த‌து. அவ‌னுக்கு அது புரிய‌வில்லை. த‌விர‌, நீ அவ‌ன‌து வ‌ய‌தையும் க‌வ‌னிக்க‌ வேண்டும். 32 வ‌ய‌து என்ப‌து ஒருவித‌ இர‌ண்டும் கெட்ட‌ நிலை. இன்னும் கால‌ம் இருக்கிற‌து என்று சொல்ல‌க்கூடிய‌ இள‌ம் வ‌ய‌தும் இல்லை. எல்லாம் முடின்துவிட்ட‌து என்று ஒதுங்க‌க்கூடிய‌ முதிய‌ வ‌ய‌தும் இல்லை".

"வேதாள‌மே, உன் ம‌ன‌ உள‌விய‌ல் அறிவை காட்டிய‌து போதும். க‌தைக்கு வா. ஓசியில் கிடைத்த‌து என்று ஓயாம‌ல் ஊதிக்கொண்டு வேறு இருக்கிறாய்".

"ம்க்கும். தின‌ம் ஒரு பெண்ணுட‌ன் ப‌டுக்கையில் உருளும் உன்னிட‌ம் சொன்னேன் பார். நான் அடுத்த‌ பிற‌வியில் ஆடிட்ட‌ராக‌ பிற‌ன்து யாராவ‌து ஒரு அம்மாவிட‌ம் செருப்பால் தான் அடி வாங்க‌ போகிறேன்!"
ந‌க்க‌ல‌டித்த‌ வேதாள‌ம் க‌தையை தொட‌ர்ன்த‌து.
============================================

"மாதித்தா, இதுவ‌ரை ந‌ட‌ன்த‌து ச‌ரி. இனிவ‌ரும் க‌தையை யாரேனும் க‌லாச்சார‌ காவ‌ல‌ர்க‌ளிட‌ம் சொல்லிவிடாதே. சில‌ இடிப்பு புக‌ழ்வாதிக‌ள் உன‌து த‌லையை க‌ட‌ப்பாறையால் இடித்துவிடுவார்க‌ள்".

"அடுத்த‌ வ‌ன்த‌ நாட்க‌ளுக்கு ஆன்ட‌ர்ச‌னால் விஜியை பார்க்க‌ முடிய‌வில்லை. பார்த்தாலும், அவள் எதுவும் பேச‌வில்லை.வ‌ழ‌க்க‌மாக‌, தின‌ன்தோறும், அவ‌ன் தான் அவ‌ளுக்கு லிஃப்ட் கொடுத்து, அவ‌ள‌து ஹோட்ட‌லில் இற‌க்கி விடுவ‌து வ‌ழ‌க்க‌ம். அன்த‌ வார‌ம் முழுவ‌தும் அதையும் த‌விர்த்துவிட்டாள்".
ஆன்ட‌ர்ச‌னுக்கு பொறுக்க‌வில்லை. அன்று மாலை அவ‌ள‌து சீட்டுக்கு சென்றான்.

"I am going home VeeJee. Can I drop you at the hotel?"

"Oh, thanks Brian. I am going to be late. I have some more documents to read. You, have a nice evening. I'll see you tomorrow".

"mmh. VeeJee.... Can I ask you something? Why are you avoiding me?"

"oh, No. I am not avoiding you Brian. Why should I? Its just.... I have a bit of things to do".

"Come on VeeJee. I know. Ever since I spoke to you on that Friday, you dont want to talk to me anymore"

"errr Brian, its not so..."

பிரைய‌ன் சிரித்தான்.

"If that's the case, you would come with me now. I know you have plenty of time to read that document".

"ah, well, alright. You are such a demanding boss".

பிரைய‌னுக்கு ப‌ய‌ங்க‌ர‌ ச‌ன்தோஷ‌ம். ஒரு வ‌ழியாக‌ அவள் மீண்டும் பேசிவிட்டாளே!

பிரைய‌னின் கார் அவ‌ள‌து ஹோட்ட‌லை நெருங்கிய‌து.

"VeeJee, I am very tired. I can do with a coffee. Can you buy me a coffee? You see, you actually owe me a coffee. Remember, I bought you one at Heathrow?"

விஜியால் சிரிக்காம‌ல் இருக்க‌ முடிய‌வில்லை.
"Is this your way of getting me talking Brian?"
"Errr, no. I'm just trying to call in my debts".

விஜியால் இதை ம‌றுக்க‌ முடிய‌வில்லை. பெரும்பாலும், தூண்டில் என்று தெரியாம‌லே மீன்க‌ள் க‌டித்துவிடுகின்ற‌ன். ஆனால், சில‌ நேர‌ங்க‌ளில் தூண்டில் என்று தெரின்தும் த‌ப்பி விட‌லாம் என்று க‌டிக்கின்ற‌ன். விஜி இதில் இர‌ண்டாவ‌து வ‌கை.
அந்த‌ ஹோட்ட‌லிலேயே இருந்த‌ ரெஸ்டார‌ண்டில் இருவ‌ருக்கும் காஃபி வாங்கினாள்.

ஆன்ட‌ர்ச‌ன் மீண்டும் பேச‌ ஆர‌ம்பித்தான்.

"I am sorry about that Friday VeeJee. I hope you did'nt miss understand me. I was not trying to get in your pants".
"ah, leave it Brian. I didn't take it wrong. ".
"That's.... amm, thanks VeeJee. I hope, I am not haraasing you. Its not my idea. But I 'ave to be honest. I ......mmm, still in love with you".
விஜ‌ய‌ல‌ட்சுமிக்கு இத‌ற்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌து என்று தெரிய‌வில்லை.

"விக்கிர‌மா, செருப்பு பிஞ்சிடும் என்று அவ‌ள‌து தாய்மார்க‌ளும், பாட்டிமார்க‌ளும், பாட்டியின் பாட்டிக‌ளும் சொல்லி வ‌ந்த‌ த‌மிழ் ப‌ண்பாட்டு வ‌ச‌ன‌த்தை அவ‌ளால் இங்கு சொல்ல‌ முடிய‌வில்லை என்ப‌தை நீ க‌வ‌னிக்க‌ வேண்டும்".

"So, VeeJee, just being funny.... hypothetically, lets say.... if you are a single, will you date me??"

"mmmh, ah.... Brian, I.... dont know. hypothetically..... you are being hoest with me. so to be honest...... well, yes"
ஆன்ட‌ர்ச‌னுக்கு Dow Jones Index அரை ம‌ணி நேர‌த்தில் ஐனூறு பாய்ண்ட் மேலே சென்ற‌து போல் ச‌ந்தோஷ‌மாக‌ இருந்த‌து.

"oh, thats very nice of you VeeJee. I am really happy now"
"so you can't date me, because you are married, sametime, its not a happy marriage?"
"mmh.... yes"

"VeeJee, If I can say this......Why shouldn't you think for yourself? You don't have to stuck up with an unhappy marriage for your entire life. Do you want to waste your life?"

"But Brian...... I told you... I have to think about my parents.."

ஆன்ட‌ர்ச‌ன் அவ‌ளை இடைம‌றித்தான்.

"Of course. but not at the expense of your entire life. Also, in what way they are going to lose? Do you think they honestly want their only daughter to be stuck up with an unhappy marriage for her life? It sounds like life imprisonment to me"

"What about my husband...."

"I can't say VeeJee. You are not happy with him anyway. You dont 'ave to sacrifice your life for someone you dont love"

"You can say all those things Brian. But only I know the depth of problems. You know nothing about India, our culture or anything about it so to speak of.".

"oh, come on VeeJee. Let me put it straight. If we can sort out the problems, will you come out of this marriage? Do you really love me?"

"விக்கிர‌மாதித்தா, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் ந‌க‌ரும் என்ற‌ த‌மிழ் ப‌ழ‌மொழியோ, இல்லை மன‌து வைத்தால் ஆண்டிப்ப‌ட்டியிலேயே அம்மாவை தோற்க‌டிக்க‌ முடியும் என்றோ ஆன்ட‌ர்ச‌ன் கேள்விப்ப‌ட்ட‌தில்லை என்ப‌தால், அவ‌ன் அதை தான் செய்து கொண்டிருக்கிறான் என்று நாம் சொல்ல‌ முடியாது.

காத‌லிப்ப‌து சுகம் விக்கிரமா. காத‌லிக்க‌ப்ப‌டுவ‌து அதைவிட‌ சுக‌ம். தான் காத‌லித்த‌ காத‌ல‌னும் கைவிட்டான். க‌ட்டிய‌ க‌ண‌வ‌னுக்கு காத‌ல் என்றாலே என்ன‌வென்று தெரிய‌வில்லை. ஒரு காத‌லுக்காக‌ ட்ராய் ந‌க‌ர‌மே அழிந்த‌து.ரோம‌ பேர‌ர‌சே வீழ்ந்த‌து எனும் போது விஜியின் ம‌ன‌தை நீ புரிந்து கொள்ள‌ முடியும்"

"mmmmh, Brian.... its ....difficult.... to say. But.... Yes"

"Oh my god..... Oh my god.... you are actually saying you love me...oh, honey, I love you so much. I love you like I've never loved anything ever before".

விஜிக்கு என்ன‌ சொல்வ‌தென்று தெரிய‌வில்லை. பிரைய‌னை பார்க்க‌வும் துணிவில்லை. தான் செய்வ‌து ச‌ரியா த‌வ‌றா என்ற‌ ப‌ய‌த்தில் த‌லை குனிந்து, த‌லையை முழ‌ங்காலில் புதைத்திருந்தாள்.

பிரைய‌ன் அவ‌ளை தூக்கி நிறுத்தி, அழுத்த‌மாக‌ அவ‌ள் நெற்றியில் முத்த‌மிட்டான்.

"oh, love... I am yours. now. forever. I promise. I will speak to your parents and husband. I am sure, I can convince them. Let me sort out all the problems".

மேலும் சிறிது நேர‌ம் பேசிவிட்டு பிரைய‌ன் விடை பெற்று சென்றான்.
சொல்லி விட்டாளே த‌விர‌, விஜிக்கு அடி வ‌யிற்றில் ப‌ய‌ப்ப‌ந்து உருண்டு கொண்டே இருந்த‌து..எப்படி கணவனிடம் சொல்வது? எப்படி பெற்றவர்களிடம் அனுமதி கேட்பது??

அடுத்து வ‌ந்த‌ நாட்க‌ளில் பிரைய‌ன் வேக‌மாக‌ செய‌ல்ப‌ட்டான். அவ‌ளை த‌னியாக‌ இந்தியாவுக்கு அனுப்ப‌ அவ‌னுக்கு விருப்ப‌மில்லை.

"I don' know much about India VeeJee. But I 'ave read stories about women being in sort of house arrest. They may not allow you leave home at all. I am not ready to lose my love".

ஆன்ட‌ர்ச‌னின் பிடிவாத‌த்தால், அவ‌ர்க‌ள் இருவ‌ரும் அந்த‌ ச‌னிக்கிழ‌மை இந்தியாவிற்கு ப‌ற‌ப்ப‌து என்று முடிவாயிற்று. முத‌லில் சென்னைக்கும், அடுத்து அவ‌ள‌து பெற்றோரை ச‌ந்திக்க‌ குட‌ந்தைக்கும் செல்வ‌து என‌ தீர்மானித்தார்க‌ள்.

சென்னை விமான‌ நிலைய‌த்தில் அவ‌ளையும், ஆன்ட‌ர்ச‌னையும் வ‌ர‌வேற்க‌ யாருமில்லை. த‌ன்னை வ‌ர‌வேற்க‌ ஆன்ட‌ர்ச‌ன் 12 ம‌ணி நேர‌ம் ஹீத்ரூவில் காத்திருந்த‌து அவ‌ளுக்கு நினைவில் வ‌ந்த‌து.

ஆன்ட‌ர்ச‌னுட‌ன் த‌ன‌து வீட்டுக்கு போவ‌தில் அவ‌ளுக்கு விருப்ப‌மில்லை. அத‌னால் அவன் பார்க் ஷெராட்ட‌னில் த‌ங்கிக்கொள்ள‌ அவ‌ள் ம‌ட்டும் வீடு சேர்ந்தாள்.

அங்கு அவ‌ள‌து க‌ண‌வ‌னைப் ப‌ற்றிய‌ முக்கிய‌ செய்தி அவ‌ளுக்கு காத்திருந்தது!!
====================================================

"விக்கிர‌மா, ம‌னித‌ ம‌ன‌ம் என்ப‌து அலைபாய்வ‌து. இன்று விரும்புவதையே நாளை வெறுக்கும்.இன்று வெறுப்ப‌தையே நாளை மிக‌த்தீவிர‌மாக‌ விரும்பும். காய்ந்து போன‌ காவிரியில், க‌ர்னாட‌க‌ புண்ணிய‌த்திலோ, க‌டும் மழையாலோ, எதிர்பாராத‌ வெள்ள‌ம் பெருக்கெடுத்து அழுக்குக‌ளை அடித்து செல்வ‌து போல், ம‌னித‌ ம‌ன‌மும் நிலை மாற‌க்கூடிய‌து".

த‌த்துவ‌த்தை கொட்டி முடித்த‌ வேதாள‌ம் க‌தையை நிறுத்திய‌து.

"என் ம‌ன‌த்தை ப‌ற்றிய‌ ம‌ன‌க்க‌வ‌லை உன‌க்கு வேண்டாம் வேதாள‌மே. நான் உன்னையும், அந்த‌ தாடிக்கார‌ ச‌ண்டாள‌ ம‌ன்திரவாதியையும் ஒரு போதும் விரும்ப‌ போவ‌தில்லை".

"உன்னைப் ப‌ற்றி யார் க‌வ‌லைப்ப‌ட்ட‌து மாதித்தா. என் ம‌ன‌ம் இப்பொழுது சூடாக‌ ஒரு காஃபியை விரும்புகிற‌து. ஏற்பாடு செய்ய‌ முடியுமா??"

"ஹூம். அஞ்சு நாள‌க்கி முன் அர‌ச‌னா, எப்பிடி இருந்த‌ நான் இப்பிடி ஆயிட்டேன்"லக்குபாய் பதக் ல‌ஞ்ச‌ வ‌ழ‌க்கில் மாட்டிக்கொண்ட‌ ந‌ர‌சிம்ம‌ ராவ் போல‌, விக்கிர‌மாதித்த‌ன் புல‌ம்பிக் கொண்டே காஃபியை எடுக்க‌ காருக்கு சென்றான்.
==================== தொட‌ரும் ==================================











Sunday 24 August 2008

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்!

மக்கா,
ஒண்ணாம் கிளாசில் இருந்து அதிகம் எழுதி பழக்கம் இல்லாத எனக்கு, இந்த விக்கிரமாதித்தன் கதைய எழுத அதிக செலவாகிறது. குறைந்த பட்சம் ஒரு ஃபுல் பாட்டில் ஒயினும், ஒரு ஆறேழு கேன் ஸ்டெல்லா பியரும் இதற்காக நான் குடிக்க வேண்டி இருக்கிறது.

எனவே, இதை நீங்கள் படித்தால், ஏதேனும் ஒரு பின்னூட்டம் இட்டு செல்ல வேண்டுமாய், வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.


பிடிச்சாதான் பின்னூட்டம் போடணும்னு இல்ல. பிடிக்காட்டியும் போடலாம் இல்ல?

தட்டு தடுமாறி எழுதும் அன்ப‌ன்,

அது ச‌ரி

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதல் - பாகம் மூன்று

அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.

அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!


தம்மை ஊதி முடித்த வேதாளம், உடனடியாக மீண்டும் ஒரு தம்மை பற்ற வைப்பதை விக்கிரமாதித்தன் கவலையுடன் பார்த்து கொண்டிருந்தான்.

"ரொம்ப தம் அடிக்காத தாளமே. கேன்சர் வரும்னு எல்லாரும் சொல்றாங்க".
"மாதித்தா, என் மேல் தான் உனக்கு எவ்வளவு அக்கறை. நீ உண்மையிலேயே ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்".

"ச்சேசே, அப்பிடியெல்லாம் ஒன்னுமில்ல. உன்னை பிடித்து கொண்டுவருவதாக மந்திரவாதிக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். நீ பாட்டு கேன்சர் வந்து மண்டய போட்டுட்டா அப்புறம் நான் எப்படி வாக்கை காப்பாற்றுவது?"
கேட்ட விக்கிரமாதித்தனை வேதாளம் கடுமையாக முறைத்தது. ஏதோ சொல்ல வாயெடுத்த வேதாளத்தை விக்கிரமன் கையுயர்த்தி தடுத்தான்.

"அதெல்லாம் இருக்கட்டும் வேதாளமே. உன் வாய்ப்பாட்டை அப்புறம் வைத்துக் கொள். இப்ப கதைக்கு வா. அடிக்கிற குளிரில், எனது காது ஓட்டையில் ஐஸ் கட்டி உண்டாக ஆரம்பித்து விட்டது".
விக்கிரமனை முறைத்தபடி, வேதாளம் கதையை மீண்டும் ஆரம்பித்தது.
================================================


"விக்கிர‌மா, நீ என்றாவ‌து யாரையாவ‌து காத‌லித்து இருக்கிறாயா? பின் இர‌வில் ஆர‌ம்பித்து, அதிகாலையில் முடின்துவிடும் உன‌து அன்றாட‌ காத‌ல்க‌ளை கேட்க‌வில்லை. த‌மிழ் சினிமாக்க‌ளில் வ‌ரும் காத‌லுக்கு ம‌ரியாதை வ‌கை காத‌லை கேட்கிறேன்"

"காத‌லித்திருன்தால் தான் உன‌க்கு தெரியும். ஒருவ‌ரை பார்த்து ஏன் காத‌ல் வ‌ர‌வில்லை என்று ஆயிர‌ம் கார‌ண‌ங்க‌ள் சொல்ல‌முடியும். ஆனால், ஏன் காத‌ல் வ‌ருகிற‌து என்று கார‌ண‌ம் சொல்வ‌து க‌டின‌ம். காத‌ல் வ‌ருகிற‌து, அவ்வ‌ள‌வே.அன்த‌ பெண்ணின் முக‌ம் பார்த்தா, அவ‌ள் அகம் பார்த்தா,அவ‌ள் உன்னை திட்டும் மொழி பார்த்தா, இல்லை அண்ணாமலையில் ரஜினிகாந்த் பார்த்தது போல் வேறு எதையாவது பார்த்தா என்று வ‌கைப்ப‌டுத்துவ‌து க‌டின‌ம்."

அப்ப‌டித்தான், விஜியை ரிசீவ் செய்ய‌ ஹீத்ருவில் காத்திருன்த‌ பிரைய‌னுக்கும் உட‌ன‌டியாக‌ காத‌ல் வ‌ன்துவிட்ட‌து. அத‌ற்கு கார‌ண‌ம் அவ‌னுக்கே தெரியாத‌ போது, அவ‌ன் த‌ன‌து அப்போதைய‌ கேர்ள் ஃபிர‌ண்டை மூன்று நாட்க‌ளுக்கு முன் தான் பிரின்தான் என்ப‌தோ இல்லை அவ‌ன‌து முன்தைய‌ ஆறு காத‌லிக‌ளில் யாருமே இன்திய‌ பெண் இல்லை என்ப‌தோ கார‌ண‌ம் என்று நான் எப்ப‌டி சொல்ல‌ முடியும்? இருக்க‌லாம் இல்லாம‌லும் இருக்க‌லாம்.
அவ‌னுக்கு விஜியை பார்த்த‌வுட‌ன் காத‌ல் வ‌ன்துவிட்ட‌து. அவ்வ‌ள‌வு தான். விஜிக்கும் அவ‌னை பிடித்திருன்த‌து. உட‌னே, ஆஹா, ஒரு திரும‌ண‌ம் ஆன‌ பெண்ணுக்கு எப்ப‌டி ம‌ற்றொரு ஆண்ம‌க‌னை பிடிக்க‌லாம், இன்தியாவின் இர‌ண்டாயிர‌த்து நூற்று ப‌தினேழு புள்ளி எட்டு ஆண்டு க‌லாச்சார‌ம் என்ன‌ ஆவ‌து என்று குதிக்காதே.

ம‌திய‌ம் ஒரு ம‌ணிக்கு ல‌ண்ட‌ன் வ‌ன்து சேர‌ வேண்டிய‌ ஏர் இண்டியா விமான‌ம், கொஞ்ச‌மே கொஞ்ச‌ம் 12 ம‌ணி நேர‌ம் லேட்டாக‌ இர‌வு ஒரு ம‌ணிக்கு வ‌ன்து சேர்ன்திருக்கும் போது, த‌ன‌க்காக‌ அவ்வ‌ள‌வு நேர‌ம் காத்திருக்கும் ஒருவ‌னை யாருக்கு தான் பிடிக்காது?

ந‌ள்ளிர‌வில் ல‌ண்ட‌னில் எப்ப‌டி ச‌மாளிப்ப‌து, எங்கே போவ‌து என்ற‌ க‌வ‌லையுட‌ன் வ‌ன்த‌ விஜிக்கு, "Welcome to Britain. I am really sorry that your flight was delayed" என்று அன்த‌ ந‌ள்ளிர‌வில் புன்ன‌கையுட‌ன் வ‌ர‌வேற்ற‌ பிரைய‌னை பிடித்துப் போன‌தில் ஆச்ச‌ரிய‌மில்லை. இதே குட‌ன்தையில் க‌டைக்கு போய்விட்டு வ‌ர‌ ஐன்து நிமிட‌ம் லேட்டானாலும் அவ‌ள‌து மாமியார் அன்று முழுக்க‌ பேசும் பேசு தாங்க‌முடியாது என்ப‌தை விஜியின் ம‌ன‌ம் நினைக்க‌ த‌வ‌ற‌வில்லை.

த‌விர‌ 6.2 உய‌ர‌த்தில், ச‌த்ய‌ராஜின் ப‌ட‌ம் அல்ல‌, பிரைய‌ன் ஆண்ட‌ர்ச‌னின் உய‌ர‌ம், 6.2 அடி உய‌ர‌த்தில், அன்த‌ ந‌ள்ளிர‌வு குளிரில், ஸ்டெல்லா ஆர்டிஸ் பிய‌ர் கேனோடு நின்றிருன்த‌ பிரைய‌னை பார்த்து அவ‌ளுக்கு ஆச்ச‌ரிய‌ம். இன்த‌ குளிரில் எப்ப‌டித்தான் குடிக்கிறார்க‌ள்? குளிர்வ‌தால் தான் குடிக்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள் என்ப‌து பாவம், அன்த‌ குட‌ன்தை த‌மிழ்ப்பெண்ணுக்கு தெரிய‌வில்ல‌.

"Would you like to have a drink?"

ஆண்ட‌ர்ச‌ன் கேட்ட‌ போது விஜி கொஞ்ச‌ம் அதிர்ச்சி அடைன்தாள். இவ‌ன் குடிக்கிற‌து ப‌த்தாதுன்னு, ந‌ம்மை வேறு குடிக்க‌ சொல்கிறானே! எப்ப‌டித்தான் இவ‌ர்களுட‌ன் ஆறு மாத‌ம் குப்பை கொட்ட‌ போகிறேன்?

"No. No. I don't drink. You carry on".

"Err, VeeJee, I meant, would you like to have a coffee?".

விஜிக்கு த‌ன் மீதே சிரிப்பாக‌ வ‌ன்த‌து.

"Oh, Sorry. I thought...."

"No worries VeeJee. I am not taking you to the bar. I am already skint".


இருவ‌ரும் ப‌க்க‌த்தில் இருன்த‌ ஸ்டார் ப‌க்ஸில் காஃபி ஆர்ட‌ர் செய்தார்க‌ள். ஆன்ட‌ர்ச‌ன் பாலும், ச‌ர்க்க‌ரையும் இல்லாத‌ க‌றுப்பு காஃபி குடிப்ப‌தை விஜி ஆச்ச‌ரிய‌த்துட‌ன் பார்த்து கொண்டிருன்தாள். ஏழைக‌ள் ம‌ட்டுமே க‌டுங்காப்பி குடிப்பார்க‌ள் என்று நினைத்து கொண்டிருன்த‌ விஜிக்கு ஆச்ச‌ரிய‌மே!

விக்கிர‌மாதித்தா, விதி ம‌னித‌ர்க‌ள் பிற‌ன்த‌ ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளால் தீர்மானிக்க‌ப்ப‌டுகிற‌தா என்ப‌து என‌க்கு தெரியாது, ஆனால், அன்த‌ ஸ்டார் ப‌க்ஸில் விஜியின் விதி மீண்டும் எழுத‌ப்ப‌ட்டு கொண்டிருன்த‌து.
=====================================


அடுத்த நான்கு வாரங்கள் விஜிக்கு உண்மையிலேயே மிகவும் பிஸியான நாட்கள். தான் கற்றுக்கொள்ள வேண்டியது ஏகப்பட்டது இருப்பது அவளுக்கு தெரிந்தது. பிரையன் ஆண்டர்சன் தான் அந்த டிபார்ட்மெண்டின் முக்கிய புள்ளி என்பதும், அவனுக்கு வேலை நேரம் போக பெண்களை துரத்துவது தான் வேலை என்பதும் விஜிக்கு சொல்லப்பட்டது. ஆனால், அவன் நடந்து கொண்ட விதம், மற்றவர்களை நடத்திய விதம் அவளுக்கு பிடித்திருந்தது. இந்திய வங்கியில், அசிஸ்டண்ட் டெபுடி சீனியர் கிளர்க் ஆக இருந்தாலே மற்றவர்களை துரும்பாக பார்க்கும் மேலதிகாரிகளையே பார்த்திருந்த விஜிக்கு, Head of EMEA ஆக இருந்த பிரையன், மற்றவர்களுக்காக காஃபி வான்கியதும், தினந்தோறும் அவளுக்கு லிஃப்ட் கொடுப்பதும் ஆச்சரியமாக இருந்ததில் தப்பில்லையே விக்கிரமாதித்தா??

ஆனால், அவள் பாருக்கு போவதை மட்டும் தவிர்த்தாள். குறைந்த பட்சம் வாரத்துக்கு இரண்டு முறை டீமில் எல்லாரையும் பாருக்கு அழைத்து போவது பிரையனின் வழக்கமாக இருந்தது. விஜி ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்லி தட்டி கழித்து வந்தாள். குடிக்கிற எடத்துக்கு பொம்மனாட்டி போவதாவது? மாமியாருக்கு தெரிந்தால், என் மண்டையை உடைத்து விடுவாள். இவர்களுக்கு அது தெரிய மாட்டேங்குதே, என்று விஜி நினைத்து கொண்டாள். தவிரவும், அவளுக்கு குடிப்பவர்கள் மேல் அவ்வளவு மரியாதை இல்லை. அவள் கணவன் ஒருவன் போறாதா, குடிப்பவர்களின் லட்சணத்தை தெரிந்து கொள்ள??


ஆனால், அதற்கும் ஒரு முடிவு வந்தது. அந்த வெள்ளிக்கிழமை அவள் பாருக்கு வராவிட்டால் அவளுடன் யாரும் பேசப்போவதில்லை என்றும், அவளுக்கு யாரும் MiFID பற்றி சொல்லித்தர போவதில்லை என்றும் அன்றைய டீம் மீட்டிங்கில் அவளது தோழி ஜெஸிக்கா அறிவித்தாள். பிரையனும் தன் பங்குக்கு தான் இனிமேல் அவளுக்கு லிஃப்ட் கொடுக்கப்போவதில்லை என்று அறிவித்தான்!


விக்கிரமாதித்தா, ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு லண்டனில் வெள்ளையர் செய்த கொடுமை என்று கொதிக்காதே! அவர்கள் கலாச்சாரப்படி, வெள்ளைக்காரனுக்கு கலாச்சாரம் எல்லாம் உண்டா என்று கேட்காதே, அவர்கள் கலாச்சாரப்படி இதெல்லாம் விளையாட்டு. உன்னை வற்புறுத்தி கூப்பிடுகிறார்கள் என்றால், உன்னை அவர்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று அர்த்தம். அதனால், கொடுமை என்று கொடிபிடிக்காதே.

ஆனால், விஜிக்கு பாவம் இதெல்லாம் தெரியவில்லை. எங்கே உண்மையிலேயே தன்னை டீமிலிருந்து ஒதுக்கிவிடுவார்களோ என்று பயந்தாள்...ஆனாலும் அவளுக்கு பாருக்கு போவதில் இஷ்டமில்லை. டிஸ்கோ சாந்திகளும், சிலுக்கு சுமிதாக்களும் தான் பாருக்கு போவார்கள், அம்பிகாக்களும் நதியாக்களும் அம்மன் கோவிலுக்குத்தான் போவார்கள் என்று அவளுக்கு நம்பிக்கை.
அந்த வெள்ளிக்கிழமையும் வந்தது. ஜெஸிக்கா அவளை நிஜமாகவே தரதரவென்று பாருக்கு இழுத்து போய்விட்டாள்.
"Dont be silly VeeJee. We are not bad girls" என்று சுய விளம்பரம் வேறு!
=================


அது லண்டனின் காஸ்ட்லி பகுதியான St.James Place ல் இருந்த பார். ப‌ணம் படைத்த பெரிய மனிதர்கள் மட்டுமே அந்த பாருக்கு வர முடியும் என்பதும், அந்த பாருக்கு உள்ளே நுழைய தனிப்பட்ட மெம்பர்ஷிப் வேண்டும் என்பதும், பிரையன் ஆன்டர்சனின் தாய்வழி மாமன் லங்காஷயரின் ட்யூக் என்ப்தால் பிரையனுக்கு அங்கு தனி செல்வாக்கு உண்டு என்பதும் பாவம், குடந்தையிலிருந்து சென்ற விஜிக்கு தெரிய நியாயமில்லை.


ஆனால், பல அறுபது வயதான பெரிய மனிதர்கள் 18 வயது இளம்பெண்களுடன் குடித்தவாறே உல்லாசமாக இருப்பது விஜிக்கு ஆச்சரியாமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. இவர்களுக்கெல்லாம் குடும்பம், குழந்தைகள் என்று எதுவும் கிடையாதா??
அந்த பாரில் இருந்த பெரிய மனிதர்கள் எல்லாருக்கும் பிரையனை தெரிந்திருந்தது. பிரையன் ஆன்டர்சன் அவளை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தினான்.


அவள் வயதை ஒத்த, அவளை விட மிக சிறிய வயதுடைய, அவளை விட, அவள் மாமியாரின் வயதையொத்த என்று பல பெண்களும் Lovely girl என்று செல்லமாக அவளை முத்தமிட்டார்கள். சில ஆண்களும் அவளை கன்னத்தில் முத்தமிட்டார்கள். தப்பாக எடுத்துக்கொள்ளாதே விக்கிரமா, நண்பனின் மனைவியை செல்லமாக முத்தமிட வேண்டும் என்பது அவர்கள் வழக்கம். அவ்வளவே.
ஆனால், கணவன் தவிர எந்த ஆண்மகனின் ஸ்பரிசமும் படாத விஜிக்கு இது கடுப்பாக இருந்தது. எல்லாம் இந்த பிரையனால் வந்த வினை. இவன் எதற்கு என்னை எல்லாரிடமும் அறிமுகப்படுத்துகிறான்?? கேட்டே விட்டாள்.


"What's going on Brian? Why everyone is kissing me?"
பிரையனின் முகம் மன்னிப்பு கேட்கும் விதமாக மாறியது.

"I am sorry VeeJee. My Fault. Usually, I come to this bar with my girl friend of that time. So, when I introduce you, they think you are my current girl friend. I should have made it clear to them, which I didn't. I apologise".

"mmh. I hope its over now. Can you call me a taxi? I would like to go home".

"I am sorry VeeJee. Looks like I have upset you. I am really sorry".

"Its okay Brian. Its not something you planned".

"VeeJee, I would love to see you stay around for couple of hours. For my sake, please...And I want to talk to you, something personally".

விஜயலட்சுமிக்கு அவன் கெஞ்சுவதை பார்த்து சிரிப்பு வந்தது.

ஒரு பெண் பாஞ்சாலியின் சிரிப்பால், பாரதத்தின் சரித்திரமே மாறியது விக்கிரமா.
இந்த இடத்தில், விஜி சிரித்திருக்காவிட்டால், இந்த கதையும் இல்லை. நானும் நீயும் இந்த நடுக்காட்டில் இதைப்பற்றி பேசிக் கொண்டும் இருக்கப்போவதில்லை.

ஆனால், தனது விதி மாற்றப்பட போவது தெரியாமல் அவள் சிரித்துவிட்டாள்.


"Just for you Brian. What's that you want to talk to me?"

"mmm. errr.... You know VeeJee, I've never been this much reluctant in my entire life"

"I know there are a lot of rumours about me. That I am sleeping around, I am chasing girls etc etc. Most of them are true. Yes, I have slept with many girls. Some of them are girl friends and some of them are paid. "

விஜிக்கு குழப்பமாக இருந்தது. தனது சொந்த குப்பைகளை எல்லாம் ஏன் என்னிடம் கொட்டுகிறான்? ஒரு வேளை அதிகம் குடித்துவிட்டானா?

"I dont claim I am Mr.Nice Guy VeeJee. I know myself. I know I am 32 yars old, and you are 27. I have been with many girls, but I never ever thought of asking them this one question".

"What's that Brian?"

"WILL YOU MARRY ME VEEJEE?"

என்னை கல்யாணம் செய்து கொள்வாயா என்று ஆன்டர்சன் கேட்டதும், விஜிக்கு அம்மன் கோவில் மணி அறுந்து தலையில் விழுந்தது போல் உலகம் இருண்டது!


"விக்கிரமா, ஏற்கனவே திருமணம் ஆன, ஒரு குடந்தை தமிழ்ப்பெண் இதற்கு என்ன சொல்வாள் என்று நினைக்கிறாய்??"

=============

கதைய கேள்வியுடன் நிறுத்திய வேதாளம், வயிற்றை பிடித்து கொண்டது.


"விக்கிரமா, மதியம் மெக் டொனால்ட்ஸில் ஒரு சிக்கன் பர்கர் சாப்பிட்டது. கொடும் பசி. எனக்கு டின்னருக்கு வாங்கி வரச்சொன்னேனே, வாங்கி வந்தாயா??"
"வாங்கி வந்திருக்கிறேன் வேதாளமே"
"என்ன வாங்கி வந்திருக்கிறாய்? நான் கேட்ட மொகல் பிரியாணியும், பஞ்சாபி சன்னா மசாலாவும் வாங்கி வந்திருக்கிறாயா?? பர்கர் சாப்பிட்டு, சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது"


"என் கஷ்ட காலம், உனக்கு சேவை செய்ய வேண்டிய நிலை. எல்லாம் அந்த கிழட்டு மந்திரவாதியால் வந்தது. இந்த லட்சணத்தில், நடிகன் படத்தில் சத்தியராஜிடம் உள்ளான் கேட்ட கவுண்டமணி போல் நீ கேட்க கூடாது".
சலித்து கொண்ட விக்கிரமாதித்தன், காருக்கு சென்று ஹாட் பேக்கில் வைத்திருந்த பிரியாணியை எடுத்து வந்தான்.


"ஆகா, நிஜமாகவே மொகல் பிரியாணியா? " என்று சப்புக்கொட்டிய வேதாளம், கால்களை மடித்து சம்மணமிட்டு சாப்பிட ஆரம்பித்தது.
விக்கிரமன் தானும் அந்த அத்துவான காட்டில் தரையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.


============== தொடரும் ==========================






Friday 22 August 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதல் - பாகம் இரண்டு

அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.
அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!

"விக்கிரமாதித்தா, தமிழ் கலாச்சாரத்தை பற்றி என்ன நினைக்கிறாய்?"


வேதாளம் கேட்டதும் விக்கிரமாதித்தன் பேயடித்தவன் போலானான்.

தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவானேன், சு.சாமி போல் "பார்க்ககூடாத" கலாச்சார விஷ்யங்களை பார்ப்பானேன்? கொஞ்ச நாட்களுக்கு முன், ஆண் பெண் உறவில் பாதுகாப்பு வேண்டும் என்று குண்டுபூ நடிகை சொல்லப்போய், பல பெண்கள் துடைப்பத்துடன் அவரது வீட்டு வாசலில் தமிழ் கலாச்சாரத்தை நிரூபித்தனர். இதையெல்லாம் நினைவில் ஓட, விக்கிரமாதித்தன் அம்மா முன் நிற்கும் "மூத்த" அமைச்சர் போல் அமைதி காத்தான்.

"மாதித்தா, பயப்படாதே!. நமது கதை தமிழ் கலாச்சாரத்தை பற்றி அல்ல. தமிழ் கலாச்சார காவலர்களை சந்திக்க எனக்கும் துணிவில்லை. ஆனால், நமது கதானாயகி, விஜி என்ற விஜயலட்சுமி, தமிழ்னாட்டில், ஒரு காலத்தில் காவிரி ஓடி வளமான குடந்தையில் தான் பிறந்தாள். 1970களின் வழக்கப்படி, நான்கு ஆண் மக்களுக்கு பிறகு ஐந்தாவதாக பிறந்த ஒரே பெண். அவள் தந்தை ஊரில் முக்கியமான ஆள். அந்த ஊரின் மற்ற எல்லாரையும் போல அவரும் ஒரு விவசாயி."

"அவள் பிறக்கும் போது வளமாக இருந்த குடும்பம், தமிழுக்காக உயிரை கொடுக்கும், ஆனால், மயிரை கூட கொடுக்காத தமிழக அரசியல்வாதிகளாலும், நான்கள் எப்படிப்போனாலும், தமிழ்னாடு நாசமாக போக வேண்டும் என்ற நல்ல தேசிய உணர்வு கொண்ட கன்னட அரசியல்வாதிகள் கைங்கர்யத்தாலும், சுருங்கிப்போன காவிரி போல், வளம் குன்றி ரேஷன் கடையில் கெரசினுக்கு சண்டை பிடிக்கும் குடும்பமாக மாறிப்போனது".
"இதனால் எல்லாம் அவளது தந்தைக்கு ஊரில் இருந்த மதிப்பு குறையவில்லை. இன்னமும் ஊரின் மரத்தடி பஞ்சாயத்துக்கு அவர் தான் தலைவர். ஊரின் கொப்பரங்கண்ட மாரியம்மன் கோவிலுக்கு முதல் மரியாதை அவர் தான்."
விஜியும் இந்த சூழ்னிலையில் தான் வளர்ந்தாள். பெண்கள் எட்டாம் கிளாஸ் படித்தால் போதும் என்று இருந்த ஊரில், டவுனுக்கு சென்று காலேஜ் படித்த மொத்தம் ஏழு பேரில் அவளும் ஒருத்தி."
த‌மிழ் சினிமா ம‌ட்டுமே பார்ப்ப‌தாலோ என்ன‌வோ, அவ‌ளுக்கும் காத‌ல் வ‌ன்த‌து. எல்லா ப‌ட‌த்திலும் வ‌ருவ‌து போல் அது அவ‌ள‌து வீட்டுக்கும் தெரின்த‌து.
விக்கிர‌மா, என்ன‌ ந‌ட‌ன்திருக்கும் என்று நினைக்கிறாய்?? நீ நினைப்ப‌து ச‌ரியே. த‌மிழ்க‌லாச்சார‌ப்ப‌டி, காத‌ல் என்ப‌து க‌டும் குற்ற‌ம். அதுவும் வேறு ஜாதி ஆண்ம‌க‌னை காத‌லிப்ப‌து ம‌ன்னிக்க‌ முடியாத‌ குற்ற‌ம். வேறு ஜாதி என்பதால் விஜியின் வீட்டிலும், வ‌ச‌தி இல்லாத‌ பெண் என்ப‌தால் அவ‌ள‌து காத‌ல‌ன் வீட்டிலும் க‌டுமையாக‌ எதிர்த்தார்க‌ள்.

ஆனால் அவ‌ள‌து காத‌ல‌ன் ஒன்றும் த‌மிழ் சினிமா காத‌ல‌ன் போல் போராட‌வில்லை. "என்ன‌ ம‌ன்னிச்சிடு விஜி. என‌க்கு வேற‌ வ‌ழி தெரில‌. நான் வேற‌ ஒருத்திய‌ க‌ல்யாண‌ம் செஞ்சிக்கிட்டாலும், உன் நினைவாக‌வே இருப்பேன்" என்று வ‌ஜ‌ன‌ம் பேசி விட்டு, ந‌ல்ல‌ வ‌ர‌த‌ட்ச‌னையுட‌ன் வேறு ஒரு பெண்ணை திரும‌ண‌ம் செய்து, வ‌ழி வ‌ழியாக‌ மூத்தோர்க‌ள் பாடுப‌ட்டு காத்த‌ த‌மிழ் க‌லாச்சார‌த்தை நிலை நாட்டினான்!
விஜியின் த‌ன்தை இவ‌ர்க‌ளுக்கு க‌லாச்சார‌த்தில் என்த‌ வித‌த்திலும் குறைன்த‌வ‌ர் அல்ல‌வே! அவ‌ரும் பாடுபட்டு ஒரு மாப்பிள்ளையை க‌ண்டுபிடித்தார். விஜியின் திரும‌ண‌மும் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ந‌டன்து முடின்த‌து!
=========================
ஆனால் அன்தோ ப‌ரிதாப‌ம். ந‌ய‌ன்தாரா போல் ந‌ல்ல‌ அழ‌கியான‌, அறிவாளியான‌ விஜியின் க‌ண‌வ‌ன் ஒன்றுக்கும் உத‌வாத‌வ‌ன். விவ‌சாயி என்று தான் பெய‌ர். ஆனால், அவ‌ன் நில‌த்தில் புல் ம‌ட்டுமே விளைன்த‌து. என்றாவது அந்த நிலத்தில் உழைத்தால் தானே! ஆனால் பாவம், விஜியின் கணவன் சந்திரனையும் குறை சொல்ல முடியாது. புர‌ட்சி இளைஞ‌ர் ச‌ங்க‌த்தில் சீட்டு விளையாட‌வும், அம்ம‌ன் ஒயின்ஸில் அக்க‌வுண்டில் த‌ண்ணி அடிப்ப‌தும் போக‌, அவ‌னுக்கு நேர‌மே கிடைப்ப‌தில்லை. அவ‌ன் என்ன‌ செய்வான்? ஆனால், அவ‌ன் குடிகார‌ன் என்று ஒப்புக்கொள்ள‌ மாட்டான். அவ‌னுக்கும்(!) ஒரு காத‌ல் தோல்வி இருன்த‌து. புண்ப‌ட்ட‌ நெஞ்சை குவாட்ட‌ர் ஊத்தி ஆத்துறேன் என்ப‌து அவ‌ன் கொள்கை.

திரும‌ண‌ம் ஆன‌ ஆறு மாத‌ங்க‌ளில், க‌ரூர் ச‌ர‌க்கு, த‌ர்ம‌புரி "குடிசை தொழில்" புக‌ழ் குவாட்ட‌ர் அடித்து அவ‌ன‌து குட‌ல் வென்த‌து. க‌ண்க‌ளும் ம‌ங்க‌லாயிற்று. அரைக்க‌ண் க‌ண‌வ‌ன், பேராசை மாமியார், வாய் திறக்கா மாமனார் இவ‌ர்க‌ளை காப்பாற்றும் பொறுப்பு விஜியின் த‌லையில் விழுன்த‌து!
வேக‌மாக‌ சொல்லி வன்த‌ வேதாள‌ம் சிறிது நிறுத்திய‌து.

=====================================
"விக்கிர‌மா, த‌ம்மு வ‌ச்சிருக்கியா?"
"நான் த‌ம் அடிப்ப‌தை குறைத்து கொண்டு வ‌ருகிறேன் வேதாள‌மே".
"அதை எவ‌ன் கேட்டான்? வ‌ச்சிருக்கியா இல்லியா?"
கேட்ட‌ வேதாள‌ம் உரிமையுட‌ன், அவ‌ன‌து ஜாக்கெட் பாக்கெட்டிலிருன்து மால்ப‌ரோவை எடுத்து பற்ற‌ வைத்த‌து.
"கேள் விக்கிர‌மா. குடும்ப‌ பொறுப்பை சும‌க்க‌ நேர்ன்த‌ விஜி, வேலை தேடினாள். செம்மொழி நாட்டின் த‌லை ந‌க‌ர‌மாம், கூவ‌ம் ந‌தியால் ம‌க்க‌ளுக்கு நோயும், அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கும் அதிகாரிக‌ளுக்கும் ப‌ண‌மும் சேர்ன்த‌ சென்னையில் தான் அவ‌ளுக்கு ஒரு வ‌ங்கியில் வேலை கிடைத்த‌து. அவ‌ள் சென்னையில் த‌ங்கியிருக்க‌வும் நேர்ன்த‌து."
முத‌லில் அவ‌ள‌து க‌ண‌வ‌னுக்கும்,மாமியாருக்கும் சென்னை வ‌ர‌ கொஞ்ச‌மும் விருப்ப‌மில்லை. அவ‌னுக்கு அவ‌ன‌து முன்னாள் காத‌லியின் கால‌டி ப‌ட்ட‌ ம‌ண்ணையும், அக்க‌வுண்டில் குவாட்ட‌ர் த‌ரும் அம்ம‌னையும் (ஒயின்ஸ்) பிரின்து வ‌ர‌ விருப்ப‌மில்லை. அவ‌ன் மாமியாருக்கோ ம‌ரும‌க‌ள் த‌ன்னை ம‌திக்க‌ மாட்டாளோ என்ற‌ ப‌ய‌ம்.
ஆனால், எல்லா கையாக‌லாத‌ ஆண்க‌ளையும் போல‌ அவ‌னுக்கு விஜி மேல் எப்பொழுதும் ஒரு ச‌ன்தேக‌ம். என‌வே ஒரு வ‌ழியாக‌ சென்னைக்கு குடி பெய‌ர்ன்தார்க‌ள்.

க‌தை இத்துட‌ன் நின்றிருந்தால், நான் உனக்கு இந்த டிசம்பர் குளிரில் விஜியின் கதைய சொல்ல நேர்ந்திருக்காது. ஆனால் நிற்க‌வில்லை. அவ‌ள் வேலை செய்த‌ வ‌ங்கி பிரிட்ட‌னில் க‌டை திற‌க்க‌ ஆசைப்ப‌ட்ட‌து. அத‌ற்காக‌ அவ‌ளை ல‌ண்ட‌னுக்கு அனுப்பிய‌து. மாமியார் ம‌ற்றும் ச‌ன்திர‌னின் க‌டும் எதிர்ப்புக‌ளுக்கு ம‌த்தியில், தினம்தோறும் ஃபோனில் பேசுவ‌தாக‌வும், என்த‌ ஆணிட‌மும் பேச‌மாட்டேன் என்றும், இன்ன ப‌ல‌ வாக்குறுதிக‌ளையும் கொடுத்து விஜி ல‌ண்ட‌னுக்கு விமான‌ம் ஏறினாள்.

"விதிக்குத்தான் எத்த‌னை ரூப‌ங்க‌ள் விக்கிர‌மா! த‌மிழ்னாட்டில் ராம‌தாசு, பெங்க‌ளூரில் எடியூர‌ப்பா, டெல்லியில் பிர‌காஷ் கார‌த் உருவில் இளிக்கும் விதி ல‌ண்ட‌னிலும் காத்திருந்தது."


"ஹீத்ரூ விமான‌ நிலைய‌த்தில், விதி விஜியை பிரைய‌ன் ஆண்டர்சன் உருவில் சிரிப்புட‌ன் வ‌ர‌வேற்ற‌து !"

சொல்லி நிறுத்திய வேதாளம், ஊறுகாயை நக்கியபடி, மீதி இருந்த விஸ்கியில் கொஞ்சம் வாயில் கவிழ்த்து கொண்டு, அப்படியே ஒரு தம்மை பற்ற வைத்தது.
வேதாளம் சிந்தனையில் ஆழ்ந்து விட்டதை உணர்ந்த விக்கிரமாதித்தன் தானும் ஒரு மால்பரோவை பற்ற வைத்தான்
================== தொட‌ரும் ===================






Thursday 21 August 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதலன் - பாகம் ஒன்று

அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.
அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்
என்று நினைக்கும் பெண்களும்,
அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,
தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!




"மாதித்தா, உஜ்ஜைனியிலிருந்து பிரிட்டனுக்கு ஓடி வந்து விட்டதால் தப்பி விட்டதாக நினைக்காதே. மந்திரவாதிக்கு நீ கொடுத்த வாக்கை இன்னமும் நீ நிறைவேற்றவில்லை. உடனடியாக என்னை சந்தி. மேலும் விபரங்கள் அடுத்த செய்தியில்".

==========
விக்கிரமாதித்தனுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த வேதாளமும் அந்த நாதாரி மந்திரவாதியும் விட்ட பாடாயில்லை. இதில் இந்த வேதாளம் SMS அனுப்பும் அளவுக்கு முன்னேறி விட்டது. எவனிடம் மொபைல் ஃபோனை ஆட்டை போட்டதோ?
வேதாளம் சொன்ன இடம் வழக்கம் போல, ஷெஃப்பீல்ட் அடுத்து அறுபது மைல் தாண்டி ஒரு காடு. வேதாளம் என்ன ஹில்டன் ஹோட்டலுக்கா அழைக்கும்? வேறு வழியில்லை. போய்த்தான் ஆக வேண்டும்.
விக்கிரமாதித்தன் இப்பொழுதெல்லாம் குதிரை ஓட்டுவதில்லை. அதுவும் தவிர, யார்க்ஷையரில் குதிரைக்கு எங்கே போக??அத‌னால், த‌ன‌து புத்த‌ம் புதிய‌ BMW 320 யை கிள‌ப்பினான்.
‍‍‍‍‍‍‍‍=========================
"வா மாதித்தா, வா. பார்த்து சில‌ நூற்றாண்டு இருக்குமா?"
வேதாள‌ம் தான் ஒரு ம‌ர‌த்திலிருன்து த‌லை கீழாக‌ தொங்கிய‌ப‌டி கூவிய‌து. விக்கிர‌மாதித்த‌ன் குர‌ல் வ‌ன்த‌ திசையை பார்த்தான். வேதாள‌ம் விசித்திர‌மாக‌ உட‌ல் முழுதும் மூடிய‌ ஒரு ஓவ‌ர் கோட்டும், கொம்புக‌ளுக்கு காலுக்கு போடும் சாக்ஸும் மாட்டிய‌ப‌டி ஒரு பெரிய‌ ம‌ர‌த்தின் அடிக்கிளையில் த‌லை கீழாக‌ தொங்கிக் கொண்டிருன்த‌து!
"முட்டாள் தாள‌மே! உன் வ‌ர‌வேற்புக்காக‌ நான் வ‌ர‌வில்லை. எத‌ற்காக‌ என்னை வ‌ர‌ச் சொன்னாய்? நான் இப்பொழுது தான் ராம‌தாசு, ல‌ல்லு பிர‌சாத், மாயாவ‌தி வ‌கைய‌றாக்க‌ளின் தொல்லை இல்லாம‌ல் நிம்ம‌தியாக‌ இருக்கிறேன். உன‌க்கும் அன்த‌ ம‌றை க‌ழ‌ண்ட‌ கிழ‌ட்டு ம‌ன்திர‌வாதிக்கும் அது பொறுக்க‌வில்லையா?? அது ச‌ரி, இது என்ன‌ விசித்திர‌மான‌ உடை? கொம்புக்கு சாக்ஸு?"
"மாதித்தா, நீ உணர்ச்சி வசப்படுவதில் வைகோவுக்கு நிகர் என்று அடிக்கடி நிரூபிக்கிறாய். அவர் போலவே உனது வாக்கையும் மறந்து விடுகிறாய். அது உன் போன்ற அரசியல்வாதிகளுக்கு சகஜமே. போகட்டும். என் உடை பற்றி உனக்கு ஏன் இந்த கவலை? உனக்கு மட்டும் தான் குளிருமோ? இந்த பிரிட்டனில் அடிக்கும் ஊதக்காற்றில் கிட்னிக்கு உள்ளே இருக்கும் யூரின் கூட உறைந்து விடும் போலிருக்கிறது. அது தான் இந்த ஓவர் கோட்".
"உன் பாழாய்ப் போன கொம்புக்கு எதுக்கு சாக்ஸ்?"
"என்ன மாதித்தா? என்னையும் உஜ்ஜைனி மக்கள் என்று நினைத்தாயா? அவர்கள் தான் எதற்கு உறை மாட்ட வேண்டுமோ, அதற்கு மாட்டாமல், மக்கள் தொகையை பெருக்கிவிட்டார்கள். ஆனால், நான் எனக்கு முக்கியமான இடத்தில் மாட்டி இருக்கிறேன்"
"என்ன எளவோ! எப்படி SMS அனுப்பினாய்? மொபைல் ஃபோனை எவனிடமிருந்து ஆட்டையை போட்டாய்??"
"மாதித்தா, மீண்டும் மீண்டும் தவறு செய்கிறாய். நான் திருடவில்லை. எவனோ ஒருத்தன் ஃபோனை பாரில் மறந்து வைத்துவிட்டான். அவ்வளவே. என் கஷ்ட காலம், அவன் ஒரு மிஸ்டு கால் மொள்ளமாரி போலிருக்கிறது. Pay and Go அக்கவுண்டில் அம்பது பென்ஸ் தான் இருந்தது. அதனால் தான் உன்னை அழைக்கவில்லை. இல்லாவிட்டால் நான் அழைத்திருப்பேன். குறுஞ்செய்தி அனுப்பியிருக்க மாட்டேன். என்னையும் மிஸ்டு கால் கொடுக்கும் தமிழ்னாட்டு கயவன் என்று நினைக்காதே!"
விக்கிரமாதித்தனுக்கு எரிச்சலாக் இருந்தது. இந்த வேதாளம் பேசுவதை எல்லாம் கேட்க வேண்டிய தலைவிதி. நாடாறு மாதம், காடாறு மாதம் என்று இந்த நாடோடி வாழ்க்கை தேவையா?
"அசட்டு வேதாளமே, உன் சொந்த கதை சோக கதை கேட்க நான வரவில்லை. என்னை எதற்கு வரச் சொன்னாய்?"
"அவசரப்படாதே மாதித்தா. சொல்கிறேன். அதற்கு முன் நான் வான்கி வரச்சொன்ன விஷ்யங்கள்...."
விக்கிரமாதித்தன் தனது தோள்ப்பையிலிருந்து ஒரு ஸ்காட்ச் விஸ்கியும், ஒரு பாக்கெட் ஊறுகாயும் எடுத்து நீட்டினான்.
"தேங்க்ஸ் மாதி. என்ன தான் இருந்தாலும் ஓல்டு மங்க்கும், பூண்டு ஊறுகாயும் அடிச்ச மாறி வராது, என்ன சொல்ற?" (இன்த‌ வேதாள‌த்திட‌ம் இது ஒரு புது பிர‌ச்சினை. த‌ண்ணி அடித்தால், ரொம்ப்ப்ப்ப்ப‌ ஃபிர‌ண்ட்லியாகி விடும்!)
சப்பு கொட்டியபடியே, வேதாளம் அரை பாட்டில் விஸ்கியை முடித்தது.
"மாதி, நீயும் ஒரு ரவுண்டு அடியேன். குளுருக்கு எதமா இருக்கு".
"ஒரு மண்ணும் வேணாம். நான் திருப்பி வீட்டுக்கு கார் ஓட்டணும். இது என்ன, இந்தியான்னு நெனச்சியா? போலிஸ்காரனுக்கு ஒரு குவாட்டரை குடுத்து கரெக்ட் பண்ண?. சரி சரி, ரவுண்டு முடிஞ்சதில்ல. இப்ப சொல்லு. எதுக்கு என்ன வர சொன்ன? சீக்கிரம் சொன்னின்ன, நான் பாட்டுக்கு இப்பிடியே போய்க்கினே இருப்பேன்".
வேதாளம் வாயை துடைத்து கொண்டது. "ஸ்ஸ், அப்பாடா, ஒரு ரவுண்டு அடிச்சாதான் மனசே தெளிவாவுது. இன்னா சொள்ர மாதி??"
"இன்னா கேட்ட, மேட்ரா? வருவேமில்ல? எதுக்கு இப்பிடி காசுக்கு வந்த அயிட்டம் மேறி குதிச்சினுக்கீர??"
விக்கிர‌மாதித்த‌ன் பெரும் க‌டுப்பானான். முழுசா ஒரு அரை பாட்டில் விஸ்கிய‌ முழுங்கிட்டு இன்த‌ வேதாள‌ ந‌க்க‌ல‌ பாரேன். ம்ம், ப‌க்க‌த்து ஃப்ளாட் ஸ்பானிஸ் குட்டிய‌ க‌ண‌க்கு ப‌ண்ணிட்டு இருக்க‌ வேண்டிய‌ இன்த‌ டைம்ல‌, இன்த‌ வேதாள‌த்தோட‌ கூத்த‌டிக்க‌ வேண்டிய‌தா இருக்கு. எல்லாம் விதி!
"மாதித்தா, நீ நினைப்ப‌து என‌க்கு தெரிகிற‌து. ஆனால், கேட்ப‌து தான் பிரிய‌ல‌. நான் ஒரு க‌தை சொல்லி கேள்வி கேட்ப‌தும், நீ ப‌தில் சொல்வ‌து தான் தானே ந‌ம‌து வ‌ழ‌க்க‌ம். அது உன‌க்கு ம‌ற‌ன்துவிட்ட‌தா?"
"ச‌ரி, உன‌து எழ‌வெடுத்த‌ க‌தையை சொல். பீ. வாசுவின் குசேல‌ன் க‌தை போல் இல்லாம‌ல், க‌த‌ ப‌றையும் போள் மாதிரி இருன்தால் ச‌ன்தோஷ‌மே"
"ம்ம். புது ப‌ட‌மெல்லாம் பாத்துட்ட‌ போல‌ இருக்கு. இருக்க‌ட்டும். ந‌ம்ம‌ க‌தை வ‌ழ‌க்க‌ம் போல‌ ஒரு கோக்கு மாக்கான‌ க‌தை தான்."
"க‌தைக்கு வா தாள‌மே".
"உன் அவ‌ச‌ர‌ம் புரிகிற‌து மாதித்தா. அன்த‌ ஸ்பானிஷ் சிட்டை எவ‌னாவ‌து இன்னைக்கி நைட்டு த‌ள்ளிக்கினு போயிருவானோ என்று நீ நினைப்ப‌து என‌க்கு தெரிகிற‌து. அத‌னால் க‌தைக்கு வ‌ருகிறேன்."
"அத‌ற்கு முன் உன‌க்கு விதி முறைக‌ளை நினைவுப‌டுத்துகிறேன். என்னை ம‌ன்திர‌வாதியிட‌ம் ஒப்ப‌டைத்தால் தான் உன‌க்கு விடுத‌லை.ஆனால், என்னை அழைத்து செல்லும் போது எக்கார‌ண‌ம் கொண்டும் உன் ம‌வுன‌ம் க‌லைய‌க்கூடாது. க‌லைன்தால் நான் மீண்டும் ம‌ர‌த்திற்கு வ‌ன்து விடுவேன். நியாப‌க‌ம் இருக்கிற‌தா?"
"எல்லாம் இருக்கிற‌து. உன் க‌தைக்கு வா".

====
விக்கிரமாதித்த‌னின் அவ‌ச‌ர‌த்தின் ரகசியத்தை ர‌சித்த வேதாள‌ம் தொண்டையை க‌னைத்த‌ப‌டி க‌தையை ஆர‌ம்பித்த‌து.
"விக்ர‌மாதித்தா, த‌மிழ் க‌லாச்சார‌ம் ப‌ற்றி நீ என்ன‌ நினைக்கிறாய்??"
======== தொட‌ரும் ============

Saturday 9 August 2008

குசேலன் - ஒரு முன் நவீனத்துவ காவியம்!

பீவாசு, பெரும்பாலும் கமர்சியல் டைரடக்கராக அறியப்பட்டிருப்பதால், இந்த படத்தில் எங்கெனும் பரவியிருக்கும் முன் நவீனத்துவ கோட்பாடுகள் பலருக்கு புரிவதில்லை. மு.ன. என்பது பி.னா. வுக்கு முந்தியது. அதாவது பி.னா.வின் காலகட்டம் ஒரு காலகட்டத்தில் வரக்கூடும் என்பதை பி.னா. வின் காலகட்டத்திற்கு பல நூற்றாண்டு முந்திய காலகட்டத்தில் அறைகூவிய நிலை தான் மு.னா. என்பது சிலேவின் முன் நவீனத்துவ, இடை நவீனத்துவ, நவீனத்துவ, மற்றும் பின் நவீனத்துவ தந்தையான Adinga Gommala வின் அறுதியான வாதம்.

இந்த முன் நவீனத்துவமானது படம் ஆரம்பிக்கும் முன்னரே துவங்கிவிடுகிறது. இந்த படக்கதை மலையாளத்தில் முன்னரே வெளிவந்தது. கதானாயகன் முடிவெட்டி. முன் நவீனத்துவத்துவமும், முடிவெட்டுவதும் ஒன்றே என்பது (இரண்டும் "மு" வில் ஆரம்பிப்பதை கவனியுங்கள்) படத்தை உற்று கவனிக்கும் எவருக்கும் புரியும்.

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம் முகம் பார்க்கும் கண்ணாடி. கண்ணாடியை முன்னாடி பிடித்தால் தான் முகம் தெரியும். பின்னால் பிடித்த்தால் குண்டி தான் தெரியும். ஆனால் நீங்கள் அதை பார்க்க முடியாது. உங்களை பின்னாடி இருந்து பார்ப்பவர்களுக்கு கண்ணாடி இல்லாமலேயே உங்கள் பின்புறம் தெரியும். அவர்களுக்கு கண்ணாடி தேவையில்லை. ஆக, பின் நவீனத்துவமா, முன் நவீனத்துவமா என்று வாதிக்கும் முட்டாள்களுக்கு முன் நவீனத்துவமே என்று உணர வைப்பது பீவாசுவின் திறமை.

மற்றொரு முக்கிய பாத்திரமான மீனா, அறிமுக காட்சியில் சட்டியை போட்டு உடைக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது அவர் சட்டியை முன்பக்கமாக போட்டு உடைக்கிறார். பின்பக்கமாக போட்டு உடைக்கவில்லை. இடையிலும் வைத்து உடைக்கவில்லை. இது பி.னா. மற்றும் இ.னா வாதிகளுக்கு பீவாசு தரும் சவுக்கடி.

கதாபாத்திரங்களின் பெயரிலும் கூட, டைரடக்கர் தனது முன் நவீனத்துவ முத்திரையை பதிக்க தவறவில்லை. பால கிருஷ்ணன் என்ற பாத்திரம் படம் நெடுக துன்பத்திலும் துயரத்திலும் வாடுகிறது. பிள்ளைகள் கூட பேச மறுக்கிறார்கள். ஆனால், அசோக் குமார் என்ற பாத்திரம் செல்வம், செல்வாக்கு மிக்கதாக வருகிறது. இதை கவனிக்க வேண்டும். பால் எங்கிருந்து வருகிறது?? மாட்டின் பின்புறமிருந்து வருகிறது. ஆனால், "அ" என்பது தமிழின் முதல் எழுத்து. எல்லாவற்றுக்கும் முன்னால் வரும் எழுத்து.

படத்தில் முதலாளியாக வரும் லிவிங்ஸ்டன் பின்புறத்தை அழுத்தமாக முடிவெட்டும் நாற்காலியில் வைக்க, நாற்காலி உடைந்து விடுகிறது. இது படத்தின் முக்கியமான காட்சி. பின் நவீனத்துவ பின்புறங்களால் பெரும் சேதமே என்பது குறிப்பால் உணரப்படுகிறது. இந்த காட்சி முதலாளித்துவ எதிர்ப்பு கம்யூனிசமும் பேசுகிறது!

ஆனால், அதே நாற்காலியை பால கிருஷ்ணன் மீண்டும் தேடி கண்டுபிடித்து கொண்டு வருகிறான். பின் நவீனத்துவத்தால் சேதமுற்றாலும், முன் நவீனத்துவம் மீண்டும் உயிர் பெறும் என்ற டைரடக்கரின் உள்ளக்கிடக்கை உள்ளங்கை நெல்லிக்கனி!

முதலாளியாக வரும் லிவிங்ஸ்டன் ஒரு காட்சியில் "இங்க பாரு ஒம்பதாவது அதிசயம்" என்று தனது முன்புற வேட்டியை தூக்கி காண்பிக்கிறார். ஒன்பதாவது போன்ற அதிசயங்கள் முன் நவீனத்துவம் மட்டுமே காட்ட முடியும் என பின் நவீனத்துவ பிற்போக்குவாதிகளை புறம்காட்ட செய்யும் இடம் இது.

படத்தின் கிளைமாக்ஸ் முன் நவீனத்துவத்தின் உச்சகட்டம். அசோக் குமாராக வரும் ரஜினிகாந்த் (அதாவது முன் நவீனத்துவம்) பால கிருஷ்ணனின் வீட்டுக்கு வருகிறார். இதில் கவனிக்க வேண்டியது, அந்த பாத்திரம் எந்த வழியாக வருகிறது என்பது. ஆம், அவர் வருவது வீட்டின் முன்புற வழி. மேலும் அந்த பாத்திரம் சொல்வது " நான் முன்னாடி போய் ஒனக்கு ஏற்பாடு செய்றென்". பின் நவீனத்துவ பதர்களுக்கு, முன் நவீனத்துவமே இன்றும், என்றும் வழிகாட்ட வேண்டும் என்று பீவாசு படத்தை முடிக்கிறார்.

இப்படி ஒரு முன் நவீனத்துவ காவியத்தை படைத்த பீவாசு சென்ற காலகட்டத்திய, காலம் சென்ற முன் நவீனத்துவ முன்னோடிகளான சிலேவின் Adinga Gommala, பெருவின் Masura-illa Usura, ஃஃப்ரான்ஸின் Dhaadi vachcha Thorஐ, சைனாவின் Oru Mayirum Illeengo ஆகியோர் வரிசையில் இடம் பிடித்துவிட்டார், இது போல் ஒரு படம் இனி அவர் தனது வாழ்னாளில் செய்ய முடியாது, அவர் மட்டுமல்ல இனி எவராலும் செய்ய முடியாது என்பது உறுதி!!!
‍‍‍‍‍‍‍==================

நன்றி: பீவாசு என்ற பீவாசுவின் சரியான பெயர் உச்சரிப்பை எனக்கு தெரிய செய்த அன்பு நண்பர் "சாத்தான் குளத்தின் வேதம்" ஆசிஃப் மீரானுக்கு.
http://asifmeeran.blogspot.com/2008/08/blog-post_07.html