Saturday 14 February 2009

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் எட்டு

முன் அறிவிப்பு : கலாச்சாரம் தான் என் மூச்சு...தெய்வீக காதல் தான் என் பேச்சு...காதல்னா கடவுள்...காமம் ஒரு சைத்தான் என்று பெருமாளுக்கே வைகுண்டம் திறக்கும் கலாச்சார காதலர்கள் இந்த தொடரை படிக்க வேண்டாம்.

எச்சரிக்கை : நான் படிக்கிறது ராணி காமிக்ஸ்...இல்லாட்டி சிறுவர் மலர் என்று சொல்லும் குழந்தைகளும் பொம்பளைன்னா அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்கணும் அடங்குனாதான் அவ பொம்பள என்று சொல்லும் பெரியவர்களும்...இது உங்களுக்கான கதை அல்ல..மீறிப் படித்தால் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.



மணந்தால் மகாதேவி

இந்த கதையின் முந்திய பாகங்களை இங்கே படிக்கலாம்.


முன்கதைச் சுருக்கம்:

எடின்பரோவில் தன் அன்றைய கேர்ள் ஃப்ரண்டுடன் ரெஸ்டாரன்டில் இருக்கும் விக்கிரமாதித்தனை வேதாளத்தை பிடித்து வரும்படி மந்திரவாதி தொந்தரவு செய்கிறான்....வேதாளத்தை பிடிக்க செளத் வேல்ஸில் இருக்கும் ப்ரெக்கன் ரேஞ்சஸ் காட்டுக்கு செல்லும் விக்கிராமாதித்தனிடம் வேதாளம் வைஜெயந்தியின் கதையை சொல்கிறது...

இருப‌த்தொரு வ‌ய‌தான‌ திருக்கும‌ர‌ன் த‌ன‌து முத‌ல் வேலையில் சேர‌ அலுவ‌ல‌க‌ம் செல்கிறான்..அங்கு அவ‌ன‌து மேல‌திகாரி குருமூர்த்தி அவ‌னுக்கு வைஜெய‌ந்தியை அறிமுக‌ப்ப‌டுத்தி வைக்கிறார்...வைஜெய‌ந்தியை பார்க்கும் திருக்கும‌ரன் அவள் மேல் காதல் கொள்கிறான்....அதே சமயம் அவனது மேலதிகாரி குருமூர்த்தியும் வைஜெயந்தியை ரகஸியமாக காதலிக்கிறார்...ஆனால் வைஜெயந்திக்கு ஜெய் என்ற பெயரில் கணவன் இருப்பது தெரிய வருகிறது...

இனி.....
======

"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ள இருக்குமாம் ஈறும் பேனும்..."

மாதித்தன் விழித்தான்...

"என்னது...பாட்டில மோந்து பாத்ததுக்கே போதை ஏறிடிச்சா....தமிழ்நாட்டுல ஒரு அம்மா குட்டிக்கதை சொல்ற மாதிரி நீ பழமொழி சொல்ற...."

போதையில் இருந்த வேதாளம் இளித்தது....

"ஆமா அது குட்டிக் கதை...இது புட்டிக் கதை....அய்யா எனக்கு நீதி வழங்குங்க...அம்மா எனக்கு நீதி வழங்குங்க...என் சேலைய உருவிட்டாங்க...என்னா கும்மி என்னா கும்மி....அந்த மம்மி இலங்கை பிரச்சினைல‌ இப்ப சத்தம் இல்லாம டம்மியா இருக்கே...என்ன ஆச்சி மாதி....மம்மிக்கு அறிக்கை எழுதறவரு கையில அம்மி விழுந்துருச்சா..."

"அம்மி விழுந்துச்சோ இல்ல ஆடிட்டர் கதையாகிப் போச்சோ....யாருக்கு தெரியும்...அத விடு...ரெண்டு ரவுண்டு டெக்கீலா அடிச்சதுக்கே ஒனக்கு ஏறிடுச்சா..."

"நான் இந்திய வேதாளம்..."

"என்ன ஒளர்ற...இந்தியாவும் சந்தியாவும் இங்க எங்க வந்திச்சி..."

"அதில்ல...நாங்கெல்லாம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்...மொதல்ல பாம்பேல அடிச்சானுங்க...அப்புறம் டெல்லில பார்லிமெண்ட் உள்ள பூந்து அடிச்சானுங்க...அப்புறம் பெங்களூர்ல அடிச்சானுங்க...அப்புறம் திருப்பி பாம்பேல ஓட்டல் பூந்து அடிச்சானுஙக்....எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்....அப்பப்ப அறிக்கை விடுவோமே ஒழிய வேற ஒண்ணும் செய்ய மாட்டோம்...பாகிஸ்தான் காரனுங்க அடிச்சே அசராத நாங்க கேவலம் ஒரு பாட்டில பாத்தா ஓடிடுவோம்....நாங்கெல்லாம் ரொம்ப நல்லவனுங்க..."

"சும்மா சொறியற கொரங்குக்கு செரங்கு வந்துச்சாம்....ஏற்கனவே ஒனக்கு வாய் கிழியும்...இப்ப போதை வேற ஏறிடிச்சா....வெளங்குன மாதிரி தான்...சரி இப்ப கதை சொல்றியா இல்லையா..."

"குட்டிக்கதை குசல குமாரியே சும்மா இருக்கும் போது என்கிட்ட கதை கேட்கிறியே...சரி சொல்றேன்...ஒரு ஊர்ல ஒரு நரியாம்...அதோட சரியாம்..."

"அடிங்க..."

விக்கிரமாதித்தன் எறிந்த குப்பைத் தொட்டியிலிருந்து விலகிக் கொண்ட வேதாளம் தன் மூக்கை சொறிந்தவாறே வைஜெயந்தியின் கதையை தொடர ஆரம்பித்தது.....

======================

பேப்பர் போடுறவங்களுக்கு பீக் அவரு காலைல ஆறு...பால் போட்றவங்களுக்கு காலைல ஏழு...ஸ்கூலுக்கு பீக் அவர் காலைல எட்டரை டூ ஒம்போது...கவருமெண்டு ஆபீசுக்கு பீக் அவரு...அவய்ங்க எப்பவும் லேட்டா தான் வருவாய்ங்க...அதனால பீக் அவரு பத்து மணிக்கு மேல...கோயிலுக்கு பீக் அவர் சாயந்தரம் ஆறு டூ எட்டு...அப்ப பாருக்கு பீக் அவரு?...கோயிலுக்கு போயிட்டு தான் பாருக்கு போக முடியும்கிறதால எட்டு மணிக்கு மேல தான் பாரெல்லாம் பிசி...ஏம்ப்ப்பு ஒரு குவாட்டர சாத்திட்டு அப்புறமா கும்பிட போப்படாதான்னெல்லாம் கும்மி அடிக்கப்படாது....கலாச்சார காவலரெல்லாம் இருக்காய்ங்க...கும்மிருவாய்ங்க... காலைல‌ பத்து மணிக்கு வேல...ஆறு மணிக்கு முருவனோ அம்மனோ அய்யப்பனோ எதுனா ஒரு கோயிலு...எட்டு மணிக்கு மேல குவாட்டரு....இது தான் கலாச்சாரம்னு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் சொல்லி வச்சிருக்காய்ங்களா இல்லியா...கலாச்சாரத்தை காத்துல உட்டுட்டு இப்பிடி தடுக்குல பூந்து தகராறு பண்ணினா எப்பிடின்னேன்??

நம்ம மக்க, அதாங்க போன வருசம் இந்த கதை ஆரம்பிச்சப்ப பார்த்தோமுல்ல திருக்குமரன், அவன் பிரண்டு அண்டா முருகேசன் அப்படின்னு...அவய்ங்க தான்...ரொம்ப நாளா காணாம போயிட்டு இப்ப தான் வர்றாய்ங்க...

இப்ப கூட வத்தலா திருக்குமரனை விட கொஞ்சம் கறுப்பா பாப்பா மாதிரி இன்னொரு பயலும் இருக்கான்...இவன் குமரன், அண்டாவுக்கு ஜூனியர்...அவய்ங்க படிச்ச காலேஜூல இப்ப தான் ஃபர்ஸ்ட் இயர் சேந்துருக்கான்...இவனுக்கு ஒரு சமாச்சாரம் தெரிஞ்சா தந்தி பேப்பருல வந்த மாதிரி மருதை ஃபுல்லா பரப்பிருவான்....அதனால இவன் பேரு...ஆமா, நீங்க நெனச்சது தான்...பய பேரு பீப்பீ....பயலுக்கு பதினாறு வயசு....பாப்பா மாதிரி இருக்கான்..சுள்ளான்னு நெனச்சிராதீங்கப்பு....நல்லா கவனிச்சி வைங்க...இந்த கதைல வில்லனே இந்த பய தான்...

எல்லா பயலும் திருப்பரங்குன்றம் தேரடி தெருவுல இருக்காய்ங்க...கோயிலுன்னு நெனச்சிராதீங்க...அங்க தான் கோல்டன் ஒயின்ஸ் இருக்கு...நைட்டு ஒம்போது மணி...பீக் அவரு பாருங்க...ரொம்ப பிஸியா இருக்கு....குரூப்ல இருக்கறதுலயே சீனியர்ங்கிறதுனால நம்ம அண்டா முருகேசன் தான் ரொம்ப ஆக்டிவ்வா கொரல் குடுக்கிறாரு...

"அண்ணே இங்க ஒரு குவாட்டரு ஓல்டு மங்கு...ரெண்டு முட்டை பொரியல்..ரெண்டு கிங்சு...கொமாரு...ஒனக்கென்ன‌டா..."

"ஒக்காளி...ஒனக்கு தான் இவ்வளவும் சொன்னியா....எனக்கு ஒரு குவாட்டரு ஒல்டு மங்கு சொல்லு..."

"அண்ணே எனக்கு ஒரு பீப்பி கோல்டு மூணு வில்ஸு"

பீப்பீ குரல் கொடுத்தான்...

"ஒன்ன எவன் கேட்டான்...வேணும்னா நீயே வாங்கிக்க..."

"காங்கோவிலே காடு அழிக்கிறார்கள்...கடப்பாவிலே கல்லை உடைக்கிறார்கள்...மெக்சிகோவிலே கோழி பிடிக்கிறார்கள்...சோவியத் யூனியனிலே பனி கொட்டுகிறது...தமிழ் நாட்டில் மழை இல்லை...அதனால் உடன்பிறப்பே நிதி கொடு...உன் கோவணத்தை விற்றாவது நிதி கொடு...நான் குவாட்டர் வாங்கும் அளவுக்காவது நிதி கொடு...."

"பீப்பீன்னு ஒனக்கு பேரு வச்சது சரியா தாண்டா இருக்கு...ஒக்காளி சொந்த காசுல ஒரு குவாட்டர் வாங்க வக்கில்ல...பேச்ச பாரு...இனிமே காசு குடுத்தா தான் ஒனக்கு குவாட்டர்...எவ்வளவு வச்சிருக்க.."

"மூன்றுவா அம்பது காசு...."

"ய்யால‌....மூன்றுவா வச்சிக்கிட்டு குவாட்டர் ஆர்டர் பண்றவன் ஒலகத்துலேயே நீ தான்டா...அது என்ன மூன்றுவா கணக்கு..."

"திரும்பி ஹாஸ்டல் போக டிக்கட் காசுண்ணே..வரும்போது டிக்கட் எடுக்காம வந்துட்டேன்...ஒன்னாருவா மிச்சம்..."

"எவன் எவன் மேலயோ லாரி ஏறுது...ஒம் மேல ஒரு லாரி ஏற மாட்டேங்குதே..."

சலித்துக் கொண்ட அண்டா ஆர்டர் குடுத்தான்...

"அண்ணே....ஒரு பீப்பி கோல்டு மூணு வில்ஸு சேத்துக்கங்க...ஏண்டா சைடு எதுவும் வேணாமா..."

"வேணாம்னே...அதான் ரெண்டு முட்டை பொரியல் சொன்னீங்கள்ல..."

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு குமரன் அமைதியாக இருந்தான்...அடுத்தவன் நல்லா இருக்கது எவனுக்கு பிடிக்குது....அண்டாவுக்கு பொறுக்கவில்லை...

"என்ன மாப்ள....அப்பல இருந்து பாக்குறேன்...என்னவோ பன்னி கடிச்ச நாய் மாதிரி ரொம்ப சைலன்டா இருக்க....

குமரன் பதில் ஏதும் சொல்லாமல் ஒரு கிங்ஸை பற்ற வைத்து இழுத்தான்...

"என்னடா...மொத நாளே ஆஃபிஸ்ல எதுனா பிரச்சினையா...சொல்லு...தட்றதுனா தட்டிறலாம்...."

"இல்லடா....வேற மேட்டர்...."

"வேற மேட்டரா....ஒனக்கெல்லாம் வாழ்க்கைல ரெண்டே பிரச்சினை..ஒண்ணு குவாட்டருக்கு காசு...ரெண்டாவது எதுனா ஜாரி....எதுனா ஜாரி மேட்டரா..."

"ஆமாடா...."

"அடங்கொக்காலி....ஏண்டா மொத நாளேவா...."

ஏற்கனவே ஓசி குவாட்டர் சந்தோஷத்தில் இருந்த பீப்பிக்கு சுதி ஏறியது....

"என்னது ஜாரியா....அண்ணே எவ்வளவு செலவானாலும் பரவால்ல...சொல்லுங்கண்ணே..."

"ஆமா இவரு பெரிய டாட்டா பிர்லா....செலவு பண்ணிருவாரு....பொட்லம் அடிக்கிற தறுதலை....மாப்ள...அது கொசுத் தொல்ல‌...அவன விடு...நீ சொல்லு...என்ன மேட்டரு..."

"இல்ல மச்சான்...ஆஃபிஸ்ல ஒரு பொண்ண பார்த்தேன்...அதான் ஒரு மாதிரி ஆயிடுச்சி..."

"ச்சப்...இவ்ளவு தானா....ஒடனெ ஒனக்கு லவ்வு வந்துருக்குமே..."

"ஆமாண்டா"

"அதான‌....ஒனக்கு லவ்வு வராட்டி தான் அது மேட்டரு....தாயளி நீ லவ் பண்ண பொண்ணெல்லாம் ஒன்ன லவ் பண்ணியிருந்தா மருத ஃபுல்லா ஒன் பொண்டாட்டிங்க தாண்டா இருக்கும்.....இதெல்லாம் ஒரு மேட்டரு...இதுக்கு ஒரு ஃபீலிங்க்ஸ் வேற உட்டுக்கிட்டு இருக்க...."

"இல்ல மச்சான்....இது வேற மாதிரி....ஒனக்கு புரியாது...."

"வேற மாதிரின்னா....அந்த ஈரோடு ப்ரியாவ நீ லவ் பண்ண மாதிரியா..."

குமரன் அவனது சிகரெட்டை வெறித்துக் கொண்டிருந்தான்...

"இல்லடா....ப்ரியாவ லவ் பண்ணது வேற....ஆனா இது வேற...."

"ஆமா....ஈரோடு வேற...மதுர வேற...அது கொங்கு மண்டலம்...இது தங்கம் வித்த சங்கம்...ச்சீ...ச‌ங்கம் வச்ச தங்கம்...."

பீப்பி ஏதோ உளறினான்...

"எலேய்...கெரகம் புடிச்சவனே...ஒன் பீப்பிய கொஞ்ச நேரம் ஊதாம இருக்கியா....நீ சொல்டா....பொண்ணு யாரு..எந்த ஏரியா..."

"யாருன்னா என்ன சொல்றது...நம்ம ஏரியா தான்...பழங்காநத்தம்...."

"யாருன்னா....என்ன பேருடா..."

"வைஜெயந்தி...."

"வைஜெய‌ந்தியா....வித்தியாசமா இருக்கே...நம்ம ஜாதில இப்பிடி பேரு வைக்க மாட்டாங்களே....வேற ஜாதியா...."

"தெரிலைடா....ஆனா அப்படித் தான் நெனைக்கிறேன்...."

"அப்ப கொஞ்சம் பிரச்சினை தான் மாப்ள...ஒங்க அப்ஸை பத்தி ஒனக்கே நல்லா தெரியும்....ஜாதி சங்கத்துல பெரிய ஆளு....நாமெல்லாம் ஒரே ஜாதின்னு தான் என்னையெல்லாம் உங்க வீட்டுக்குள்ளயே விட்றாரு....அதனால பேசாம மறந்திரு...."

"பிரச்சினை அது இல்லடா...."

"பின்ன...."

"அவளுக்கு...ம்ம்ம்ம்...இல்ல அவங்களுக்கு என்ன விட வயசு கொஞ்சம் ஜாஸ்தி...அப்புறம்..."

"வயசு ஜாஸ்தியா...வெளங்கிரும்....ஒன்ன்னொட சேத்து எனக்கும் செருப்படி நிச்சயம்....என்ன வயசு அந்த பொண்ணுக்கு...."

"சரியா தெரில....இருவத்தேழுன்னு நினைக்கிறேன்..."

"இருவத்தேழா....ஒனக்கு இருவத்தொண்ணு.....அவங்களுக்கு இருவத்தேழா...ரொம்ப ஜாஸ்தியா இருக்கேடா..."

குமரன் தனது சிகரெட்டை ஆழமாக இழுத்தான்....

"பிரச்சினை அது கூட இல்லடா...."

"பின்ன...."

"வைஜெயந்திக்கு கல்யாணம் ஆயிடுச்சி...."

அண்டா முருகேசனின் முகம் ஓல்ட் மங்க் ரம் போல் இருண்டது....

"வேற ஜாதி...வயசு ஜாஸ்தி....கல்யாணம் ஆயிடுச்சி....ஆனா நீ லவ் பண்ற....ஏண்டா ஒனக்கு லூசா இல்ல இந்த நாயி பீப்பீ கூட சேந்து எதுனா பொட்லம் அடிச்சியா...ஒக்காளி...ஊர்ல சொன்னா செருப்பால அடிப்பாய்ங்க....ஒங்க அப்பனுக்கு தெரிஞ்சா மொதல்ல ஒண்ண கொளுத்திருவான்...அடுத்து ஒங்க ஆத்தாவ கொளுத்திருவான்....அப்புறம் கூட இருந்த கொடுமைக்கு என்ன கொளுத்திருவான்"

இது வரை தனது பீப்பி கோல்டில் கவனமாயிருந்த பீப்பீ வாய் திறந்தான்...

"கடலுக்கு ஏதுண்ணே மூடி....காற்றுக்கு யாரு வேலி போட்டாங்க...காதல்ங்கிறது காற்று மாதிரிண்ணே....அதுக்கு கல்யாணம், கணவன்னு எந்த வேலியும் இல்ல....நம்ம குமாரு அண்ணன் காதலிச்சா சேத்து வைக்க இந்த பீப்பீ இருக்காண்ணே...."

"ஆமா....இந்த பன்னாடை இருக்காரு....ஒக்காளி ஓசில குவாட்டரு கெடைச்சா குடிச்சிட்டு சும்மா இரு....மூடி தாடின்னு பேச ஆரம்பிச்சிட்டான்..."

பாரில் எரிந்து கொண்டிருந்த மங்கலான நாற்ப‌து வாட்ஸ் பல்பையும் அதை சுற்றி பறந்த கொசுக்களையும் வெறித்து கொண்டிருந்த குமரன் அடுத்த சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்.....அவன் கண்கள் நிலை குத்தி நின்றிருந்தது....அவன் குரல் மாறியிருந்தது.

"இல்ல மச்சான்....எனக்கு வைஜெயந்தி வேணும்....வயசு வேற, கல்யாணம் ஆயிடுச்சி....இதெல்லாம் எனக்கு பிரச்சினை இல்ல....எனக்கு இந்த ஜென்மத்தில வொய்ஃப்னா அது வைஜெயந்தி தான்....மணந்தால் வைஜெயந்தி...இல்லாட்டி வைகை கரையோரம் ஒரு சமாதி...."
=======================

சொல்லிக் கொண்டே வந்த வேதாளம் திடீரென்று நிறுத்தியது....

"டைம் என்ன ஆச்சி மாதி...."

"ம்ம்ம்ம்...ரெண்டு மணி ஆகுது....எதுக்கு...."

"படுக்கைய போட தான்...வேற எதுக்கு...."

"ஆரம்பிச்ச கதைய முடிக்க மாட்டேங்குற...ஒனக்கு தூக்கம் ஒரு கேடா....ஒழுங்கா கதைய சொல்லு...."

விக்கிரமனை அலட்சியம் செய்த வேதாளம் படுக்கைய விரிக்க ஆரம்பித்தது.....

============= தொடரும் ======================



23 comments:

Vijay said...

கத கிறுகிறுன்னு போவுதுப்பா. நேரத்துல நீ வேற கடைய நியாபக படுத்தி விட்டுட்டியா. சரி நானும் கடமய முடிச்சிக்கினு வந்துட்றேன்.

Vijay said...

அட, நாந்தான் பர்ஸ்டா? அதுக்கு தனியா ஒரு ""இது"".. ஹி....ஹி...

gayathri said...

அதுக்கு கல்யாணம், கணவன்னு எந்த வேலியும் இல்ல....நம்ம குமாரு அண்ணன் காதலிச்சா சேத்து வைக்க இந்த பீப்பீ இருக்காண்ணே...."


intha mathiri ooruku renduperu iruntha velangidum.

அது சரி(18185106603874041862) said...

//
Vijay said...
கத கிறுகிறுன்னு போவுதுப்பா. நேரத்துல நீ வேற கடைய நியாபக படுத்தி விட்டுட்டியா. சரி நானும் கடமய முடிச்சிக்கினு வந்துட்றேன்.

14 February 2009 10:37
//

ஆமா, கடமைய மறந்துராதீங்க :0))

அது சரி(18185106603874041862) said...

//
Vijay said...
அட, நாந்தான் பர்ஸ்டா? அதுக்கு தனியா ஒரு ""இது"".. ஹி....ஹி...
//

தனியா ஒரு இதுன்னா?? கூட ஒரு கட்டிங்கா?

அது சரி(18185106603874041862) said...

//
gayathri said...


intha mathiri ooruku renduperu iruntha velangidum.
//

வாங்க காயத்ரி...

நீங்க சொல்றது சரி தான்...ஆனா இந்த கதையில் இந்த மாதிரி இன்னும் வில்லங்கமான வசனம் நிறைய வரும்...ஏன்னா கதையே ஒரு வில்லங்கத்தை பத்தினது தான் :0))

பழமைபேசி said...

நல்லா ஒரு சொப்பு அடிச்சி, எட்டு இட்டிலி தின்ன மாதரயே இருக்கு... நொம்ப நல்லா இருக்கு...

பழமைபேசி said...

//Vijay said...
கத கிறுகிறுன்னு போவுதுப்பா. நேரத்துல நீ வேற கடைய நியாபக படுத்தி விட்டுட்டியா. சரி நானும் கடமய முடிச்சிக்கினு வந்துட்றேன்.
//

சாலணாக் கடைல லீலாவதி இருக்காளா? இல்லியா??

Sundar சுந்தர் said...

//நீ லவ் பண்ண பொண்ணெல்லாம் ஒன்ன லவ் பண்ணியிருந்தா மருத ஃபுல்லா ஒன் பொண்டாட்டிங்க தாண்டா இருக்கும்//
நல்லா போகுது. ஆனா 4 வரி கதை சொல்லி இப்படி சீரியல் மாதிரி இழுக்கறீங்களே. இனிமே நீங்க எல்லா பகுதியையும் போட்ட பிறகு மொத்தமா படிச்சுக்கலாம்ன்னு பார்க்கிறேன்.

Indian said...

Sooper dialogs maame.

Anonymous said...

//பீப்பி கோல்டில் //

watz dat?
Some beer brand?

Anonymous said...

// குட்டிக்கதை குசல குமாரியே சும்மா இருக்கும் போது என்கிட்ட கதை கேட்கிறியே...சரி சொல்றேன்...ஒரு ஊர்ல ஒரு நரியாம்...அதோட சரியாம்..." //
மைனாரிட்டி கருணாநிதி ஆட்சியில் தான் இப்படி எல்லாரும் பேச முடியும். எனவே இந்த ஆட்சியை கலைக்க வேண்டும்.

// ஒரு பீப்பி கோல்டு மூணு வில்ஸு சேத்துக்கங்க //
அது என்னங்கோ பீப்பி கோல்டு?

//"கடலுக்கு ஏதுண்ணே மூடி....காற்றுக்கு யாரு வேலி போட்டாங்க...காதல்ங்கிறது காற்று மாதிரிண்ணே....அதுக்கு கல்யாணம், கணவன்னு எந்த வேலியும் இல்ல....நம்ம குமாரு அண்ணன் காதலிச்சா சேத்து வைக்க இந்த பீப்பீ இருக்காண்ணே...." //
இப்படி எத்தி விட்டே உடம்பை ரணகளம் ஆகறதுக்கு ஒரு கும்பல் சுத்துமே?

//அண்டா முருகேசனின் முகம் ஓல்ட் மங்க் ரம் போல் இருண்டது...//
எப்படிண்ணே இப்படி ஒரு வர்ணனை?

Anonymous said...

story is creeping up like a snail but the dialogues are awesome. great narration.

(i visit your blog very often but you are the one who does not give us chances to comment often - you know what i mean :))

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
நல்லா ஒரு சொப்பு அடிச்சி, எட்டு இட்டிலி தின்ன மாதரயே இருக்கு... நொம்ப நல்லா இருக்கு...
//

எட்டு இட்டிலி?? :0)))

அது புரியுது...ஆனா சொப்பு அடிக்கிறதுன்னா என்ன?? கள் குடிக்கிறதா?

அது சரி(18185106603874041862) said...

// பழமைபேசி said...

சாலணாக் கடைல லீலாவதி இருக்காளா? இல்லியா??

//

அது யாருங்கண்ணா லீலாவதி??

அது சரி(18185106603874041862) said...

//
Sundar said...
நல்லா போகுது. ஆனா 4 வரி கதை சொல்லி இப்படி சீரியல் மாதிரி இழுக்கறீங்களே. இனிமே நீங்க எல்லா பகுதியையும் போட்ட பிறகு மொத்தமா படிச்சுக்கலாம்ன்னு பார்க்கிறேன்.

//

வாங்க சுந்தர்....நீங்க சொல்ற மாதிரியே நிறைய பேரு சொல்லிட்டாங்க...கதை ரொம்ப ஸ்லோவா போகுதுன்னு...ஆனா ரொம்ப வேகமா சொன்னா ராஜேஷ்குமார் கதை மாதிரி வெறும் சம்பவங்களை அடுக்கின மாதிரி இருக்கும்....

இப்ப தான எழுத பழகறேன்...கொஞ்சம் பொறுத்துக்குங்க :0))

அது சரி(18185106603874041862) said...

//
Indian said...
Sooper dialogs maame.

//

வாங்க இன்டியன்...வார்த்தைகளுக்கு நன்றி மாப்ள :0))

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
//பீப்பி கோல்டில் //

watz dat?
Some beer brand?
//

பீப்பீ கோல்டுன்னா BagPiper Gold.....அம்மா ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி விஸ்கின்னா BP Gold தான்...அம்மா வந்துதான் இந்த மிடாஸ் குப்பை எல்லாம்.....ம்ம்ம்ம்ம் அது ஒரு பொற்காலம்....

அது சரி(18185106603874041862) said...

// mpmohankumar said...

மைனாரிட்டி கருணாநிதி ஆட்சியில் தான் இப்படி எல்லாரும் பேச முடியும். எனவே இந்த ஆட்சியை கலைக்க வேண்டும்.
//

ஹிஹி...ஆட்சியை கலைக்க இன்னொரு காரணமா??

//
அது என்னங்கோ பீப்பி கோல்டு?
//

Bagpiper Gold.....அது ஒரு ப்ராண்ட் விஸ்கிண்ணா..

//
இப்படி எத்தி விட்டே உடம்பை ரணகளம் ஆகறதுக்கு ஒரு கும்பல் சுத்துமே?
//

ஆமா...எல்லாத் தெருவுலயும், எல்லா கேங்குலயும் இது மாதிரி ஒரு நாலு பேரு இருக்காய்ங்க :0)))


//அண்டா முருகேசனின் முகம் ஓல்ட் மங்க் ரம் போல் இருண்டது...
எப்படிண்ணே இப்படி ஒரு வர்ணனை?
//

எல்லாம் ஓல்டு மங்க்கு உபயம் தான் :0))

அது சரி(18185106603874041862) said...

//
Shrek said...
story is creeping up like a snail but the dialogues are awesome. great narration.

(i visit your blog very often but you are the one who does not give us chances to comment often - you know what i mean :))
//

வாங்க ஷ்ரெக் ஐயா....

கதை ரொம்ப மெல்லமா போகுதுங்கிறீங்க...இன்னும் கொஞ்ச நேரம் இப்படித் தான்...இப்ப தான வில்லன் வந்துருக்காரு...

ம்ம்ம்...நீங்க சொல்றது உண்மை தான்...என்னோட எல்லா பதிவுக்கும் நீங்க பெரும்பாலும் கமெண்ட் எழுதறீங்க...ஆனா நான் தான் ரொம்ப எழுதறதில்லை...என்னங்க பண்றது...எல்லாம் டைம் பிரச்சினை தான்....

பாருங்க, பதில் பின்னூட்டம் போட்றதுக்கே எனக்கு மூணு நாள் ஆகுது....இப்பிடி இருந்தா எங்க வெளங்குறது??

குடுகுடுப்பை said...

"வைஜெய‌ந்தியா....வித்தியாசமா இருக்கே...நம்ம ஜாதில இப்பிடி பேரு வைக்க மாட்டாங்களே....வேற ஜாதியா...." //

ஏன் ? ஏன் ? ஏன்?. கதைய இன்னும் படிக்கல பிஸி அப்புரமா வரேன்

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
"வைஜெய‌ந்தியா....வித்தியாசமா இருக்கே...நம்ம ஜாதில இப்பிடி பேரு வைக்க மாட்டாங்களே....வேற ஜாதியா...." //

ஏன் ? ஏன் ? ஏன்?. கதைய இன்னும் படிக்கல பிஸி அப்புரமா வரேன்

17 February 2009 22:51
//

எனக்கு பதில் சொல்லி பழக்கமில்ல...கேள்வி கேட்டு தான் பழக்கம் ;0))

மங்களூர் சிவா said...

/
"இல்ல மச்சான்...ஆஃபிஸ்ல ஒரு பொண்ண பார்த்தேன்...அதான் ஒரு மாதிரி ஆயிடுச்சி..."

"ச்சப்...இவ்ளவு தானா....ஒடனெ ஒனக்கு லவ்வு வந்துருக்குமே..."

"ஆமாண்டா"

"அதான‌....ஒனக்கு லவ்வு வராட்டி தான் அது மேட்டரு....தாயளி நீ லவ் பண்ண பொண்ணெல்லாம் ஒன்ன லவ் பண்ணியிருந்தா மருத ஃபுல்லா ஒன் பொண்டாட்டிங்க தாண்டா இருக்கும்.....இதெல்லாம் ஒரு மேட்டரு...இதுக்கு ஒரு ஃபீலிங்க்ஸ் வேற உட்டுக்கிட்டு இருக்க...."
/

ஹா ஹா
கலக்கல்!
கதை 'செமை'யா இருக்கு!