Wednesday 7 April 2010

திறக்கக் கூடாத கதவு 2: இஸ்லாம் தலையை வெட்டச் சொல்கிறதா?

எல்லாருக்கும் ஒரு பெயர் இருக்கிறது. சில பெயர்கள் பெற்றோர் வைப்பவை, சில பெயர்கள் எமினெம் போல சம்பந்தப்பட்டவர்களே வைத்துக் கொள்வது. அவர் பெயர் அலி சபாத்.

அலி சபாத் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இதைப் படிக்கும் மிடில் ஈஸ்ட் நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். அவர் லெபனானை சேர்ந்தவர். ஐந்து குழந்தைகளின் தகப்பன். லெபனானின் பெரும்பான்மை மதமான இஸ்லாமியர். தொழில் முறையில் ஒரு டி.வி. நிகழ்ச்சியாளர். டி.வி நிகழ்ச்சி என்றால் யாரோ எழுதி யாரோ இசையமைத்த பாடலை நோகாமல் யாருக்கோ டெடிகேட் செய்யும் நிகழ்ச்சி அல்ல, ஒரு வகையில் ஆவி அமுதா போல, தமிழ்நாட்டின் எண்ணற்ற திருட்டு சாமியார்கள் போல குறி சொல்லும் நிகழ்ச்சி.

இஸ்லாமின் விதிகளின் படி குறி சொல்லுதல், உருவ வழிபாடு போன்றவை கடுமையான குற்றங்கள். ஒரு இஸ்லாமியரான அவருக்கும் அது தெரிந்தே இருக்கும். சரி குறி சொன்னதுடன் நிறுத்தி இருக்கலாம். ஆனால் எல்லா இஸ்லாமியர்களுக்கும் இருப்பது போல கடமையோ அல்லது கனவோ, மெக்கா/மெதினா புனிதப் பயணம் செய்ய அவருக்கும் தோன்றி இருக்கிறது.

விதி சில நேரங்களில் புனிதப் பயணம் என்ற பெயரிலும் வரும் போலிருக்கிறது. புனிதப் பயணமாக சவுதி அரேபியா சென்ற அவர், 2008ல் சவுதி அரேபியாவின் மத பாதுகாப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 2008லிருந்து இரண்டு வருடங்களாக அவரது நிலை யாருக்கும் தெரியவில்லை. அவரது மனைவி குழந்தைகள் உட்பட.
சமீபத்தில் அவருக்கு மத ரீதியான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மரண தண்டனை சென்ற வெள்ளியன்று (ஆமாம், புனித வெள்ளி தான்) நிறைவேற்றப்படுவதாக இருந்த நிலையில் அலி சபாத்தின் வழக்கறிஞரும் மற்ற பல மனித உரிமை அமைப்புகளும் செய்த முயற்சியின் விளைவாக தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அன்றைக்கு நடப்பதாக இருந்தது மட்டுமே தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர தண்டனை இன்னமும் மாற்றப்படவில்லை. எந்த நேரத்திலும் அவரது தலை துண்டிக்கப்படலாம்.

அலி சபாத் குறி சொல்லும் நிகழ்ச்சி நடத்தியது சரியா, பகுத்தறிவான செயலா என்ற கேள்விகளை விடுத்து, அவர் யார் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தியதாகவோ, பொது மக்கள் கூடும் இடங்களிலும் அலுவலகங்களிலும் குண்டு வைத்ததாகவோ இல்லை ஓடும் ரயிலில் பீக் அவரில் ஏறி குண்டு வைத்ததாகவோ தெரியவில்லை.

அவர் செய்த ஒரே குற்றம் இஸ்லாமால் தவறு என்று சொல்லப்பட்ட ஒரு செயலை செய்ததே.

சம்பந்தப்பட்டவர் லெபனானை சேர்ந்தவர். புனித பயணமாக வந்த மாற்று நாட்டவரை சவுதி மத போலீஸ் கைது செய்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சவுதி அரசு, அல் குரானையே அரசியல் சட்டமாக அறிவித்திருக்கும் ஒரு நாடு. அங்கு சட்டம் என்றால் இஸ்லாமின் ஷரியா சட்டமே.

குரானை அரசியல் சட்டமாக அறிவித்து ஷரியா சட்டத்தை பின்பற்றும் ஒரு நாடு மதத்தின் பெயரால் மாற்று நாட்டவர் ஒருவரின் தலையை வெட்ட உத்தரவிடுகிறது என்றால், எழும் கேள்வி, உண்மையிலேயே இஸ்லாமும் குரானும் இது போன்ற சில்லறை குற்றங்களுக்கு தலையை வெட்டவும் கை காலை வெட்டவும் உத்தரவிடுகிறதா? எல்லையற்ற அருளாளனால் அருளப்பட்டதாக சொல்லப்படும் குரானில் உண்மையிலேயே இப்படி உத்தரவுகள் இருக்கிறதா? இப்படி சொல்லியிருந்தால் அது என்ன விதமான கருணை?

==================
சரி, அல்குரான் சட்டம், அலி சபாத்தின் தலை என்று இதை கடந்து போய்விடலாம். ஆனால் உங்கள் தலைக்கு எப்படியோ இதில் என் தலைக்கு நிச்சயமாக ஆபத்து இருக்கிறது.

ச‌வுதியின் ஷரியா சட்டப்படி, அயல் நாட்டவர்களும் மாற்று மதத்தினவரும் கூட விதிவிலக்கல்ல. இதை படிக்கும் நீங்கள் எப்படியோ, ஆனால் எனக்கு இஸ்லாம் மீதோ அல்லது வேறு எந்த ஒரு மதத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்பதால் மது அருந்துதல், பன்றி மாமிசம் உண்ணுதல் போன்ற விஷயங்களை நான் விரும்பி கொண்டாட்டத்துடன் தான் செய்து கொண்டிருக்கிறேன். விரும்பி இல்லாவிட்டாலும் விழாக்களின் போது மற்றவர்களுக்காக கோவில்களுக்கும், சர்ச்சுக்கும் கூட செல்வது உண்டு. வேறு வழியின்றி முழங்காலிட்டோ இல்லை என்றைக்கும் கண் திறக்காத கல்சிலைகளின் முன் கைகட்டி நிற்பதும் கூட உண்டு.

அப்படியானால் என்றைக்காவது சவுதி சென்றால் என் தலையும் துண்டாக்கப்படும் வாய்ப்புண்டா? உலகில் இருக்கும் அறுநூறு கோடி பேரில் சுமார் முப்பது சதவீதம் இஸ்லாமை கடைபிடிப்பவர்கள் என்று வைத்துக் கொண்டாலும் மீதி இருக்கும் சுமார் 420 கோடி பேர் நிலை என்ன? இப்படி தலைகளை துண்டித்துக் கொண்டே போனால் உலகத்தில் எத்தனை தலைகள் மிஞ்சும்?

தொடர்புடைய சுட்டிகள்:

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8598134.stm

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8600398.stm

http://edition.cnn.com/2010/WORLD/meast/03/31/saudi.arabia.sorcery/index.html

படம் உதவி: சி.என்.என் மற்றும் பிபிசி

122 comments:

அது சரி(18185106603874041862) said...

For comments...

priyamudanprabu said...

oo
ithu verayaa?

priyamudanprabu said...

mm

KarthigaVasudevan said...

:(((

கோவி.கண்ணன் said...

எந்த மதமும் பெரும்பாண்மையாக இருக்கும் நாடுகளில் அவர்கள் வைத்தத்து தான் சட்டம், அதுவும் கூட அந்த நாட்டில் பெரும்பாண்மை இனத்திற்கு சாதகமாகத்தான் செயல்படுவார்கள். இதில் மனித நேயமாவது மண்ணாங்கட்டியாவது.

சிறுபாண்மையினருக்கு இந்தியாவில் ஆதரவு கொடுப்பது போல் பல நாடுகளில் சிறுபாண்மையாக இருப்பவர்களுக்கு அந்நாட்டின் பெரும்பாண்மையினர் ஆதரவு நிலை எடுப்பது இல்லை

Santhini said...

அப்படியாயின் அவசியம் சௌதிக்கு செல்லவும் ! (ச்சும்மா !!!)
எனது அனுமானம் என்னவெனில் மந்திர தந்திர வேலைகள் எப்போதுமே (கல்ட்) டார்க் மேஜிக் -ஆக கருதப்பட்டு வந்துள்ளது.
அதிகாரம் கை மாறாமல் இருக்கவோ அல்லது அவை எதார்த்தத்துக்கு எதிராக இல்லாமல் இருக்கவோ ....சில காரணம் பற்றி தடை செய்யப்பட்டு வந்துள்ளது. எல்லா விதமான மதம் மற்றும் கலாச்சார வழிமுறைகளில் இதன் பங்கினை நாம் பார்க்கலாம். இன்னும்கூட டிவி -யில் Street Magic செய்யும் Dave -ஐ பார்த்து மக்கள் அலறி அடித்து ஓடுகிறார்கள். அவ்வாறு தடுக்கப்பட்ட ஒரு விஷயம், கொல்வது என்பது மிக சாதாரணமாக நடந்த அக்கால கட்டங்களில், மிக சாதாரண தண்டனையாக கருதப்பட்டிருக்கும். அதே சட்டத்தை கையில் பிடித்துக்கொண்டு ...நவீன உலகில் வாழ நினைப்பதுதான் முட்டாள்தனமான விஷயம். இந்த ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு "இஸ்லாத்தின்" கருணையை கேள்வி கேட்டே ஆகவேண்டிய அவசியமில்லை. எல்லா மதங்களையும் போலவே அங்கு கருணைக்கும் அன்பிற்கும் இடமிருக்கிறது. எப்போதும் போல தவறாக அர்த்தப்படுத்திக்கொண்ட அல்லது அன்பை "செய்ய முடியாத " மனித ஜென்மங்களின் தவறான புரிதல்களின் பிரதிபலிப்பே இது.

Robin said...

//அப்படியானால் என்றைக்காவது சவுதி சென்றால் என் தலையும் துண்டாக்கப்படும் வாய்ப்புண்டா?// உண்டு. சவுதிக்கு செல்வதை தவிர்க்கவும் :)
//இப்படி தலைகளை துண்டித்துக் கொண்டே போனால் உலகத்தில் எத்தனை தலைகள் மிஞ்சும்?// நியாயமான கேள்விதான்.

Unknown said...

அண்ணே ஏர்போர்ட் வழியா வேற ஊருக்கு மாறிப் போனாக்கூட கைது பண்ணிருவாங்களா?

vasu balaji said...

/ச‌வுதியின் ஷரியா சட்டப்படி, அயல் நாட்டவர்களும் மாற்று மதத்தினவரும் கூட விதிவிலக்கல்ல./

அய்யோ.நம்மூர்ல தர்க்கா, சந்தனக்கூடு இதுக்கெல்லாம் போற பெரும்பான்மை இஸ்லாமியர்கள், கக்குவான் இருமல், பில்லி சூனியம் எடுக்க தாயத்து, மந்தரிப்பவர்கள், ஏன் து ஆ முடிந்து வரும்போது வெளியே நிற்கும் குழந்தைகளுக்கு ஊதுவார்களே அந்த இஸ்லாமியர்களுக்கும் தலைக்கு ஆபத்தா?

/அப்படியானால் என்றைக்காவது சவுதி சென்றால் என் தலையும் துண்டாக்கப்படும் வாய்ப்புண்டா?/

நேத்து நடராஜன் இடுகையில் இப்படி ஒரு உள்குத்து இருக்கறது தெரியாம போச்சே. அண்ணோவ். ஒரே இடுகையில எனக்கு, நசரேயனுக்கு, அதுசரிக்கு, பழமைக்கு சேர்த்து ஆப்பா? அவ்வ்வ்வ்வ்வ்வ்..

/சுமார் 420 கோடி பேர் நிலை என்ன? இப்படி தலைகளை துண்டித்துக் கொண்டே போனால் உலகத்தில் எத்தனை தலைகள் மிஞ்சும்?/

அங்கங்க வெட்றவன் தலை மட்டும் அப்புறம் அவனுங்களுக்குள்ளயே வெட்டிக்கிட்டா மினிமம் ஒன்னு மிஞ்சலாம்:))

vasu balaji said...

/முகிலன் said...

அண்ணே ஏர்போர்ட் வழியா வேற ஊருக்கு மாறிப் போனாக்கூட கைது பண்ணிருவாங்களா?/

ந.நா.
செ.எ. சி.எ?

வால்பையன் said...

காட்டுமிராண்டிதனத்தின் உச்சகட்டம்!

கலகலப்ரியா said...

"sigh"...

ராஜ நடராஜன் said...

//நேத்து நடராஜன் இடுகையில் இப்படி ஒரு உள்குத்து இருக்கறது தெரியாம போச்சே. அண்ணோவ். ஒரே இடுகையில எனக்கு, நசரேயனுக்கு, அதுசரிக்கு, பழமைக்கு சேர்த்து ஆப்பா? அவ்வ்வ்வ்வ்வ்வ்..//

தற்செயல்,யதேச்சை அப்படிங்கிறது இதுதான் போல இருக்குது.

சவுதியின் ஷரியா சட்டம் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றபோதிலும்,பில்லி சூனியம்,கருப்பு மந்திரமெல்லாம் தடையென்பதால் வளைகுடா நாடுகளில் இவைகளால் உண்டான சமுதாய பாதிப்பு குறைவு என்ற அடுத்த பக்கத்தையும் நாம் உணர வேண்டும்.

நம்மூர் பில்லி,சூனியங்களில் நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கையோடு பார்க்கும் போது இங்கே இவைகளின் தாக்கம் குறைவு.

ஒரு நாட்டில் இதைச் செய்யாதே எனும்போது அதனை மீறுவது தவறானது.மேலும் லெபனானின் வாழ்க்கை முறைக்கும்,சவுதி வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசங்கள்.லெபனான்காரர்கள் கிட்டத்தட்ட மேற்கத்திய வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்கள்.அப்படியும் லெபனானின் தென்பகுதியில் முக்கியமாக ஹமாஸ் ஆதிக்கம் உள்ள இடத்தில் இஸ்லாமின் நம்பிக்கையுள்ளவர்களும் அதிகம்.

மீண்டும் சவுதியின் ஷரியா விவாதத்திற்குள்ளானது என்பதோடு சில தினங்களுக்கு முன் கலையரசன் தளத்தில் சேனல் 4ல் அமெரிக்கா ஈராக்கில் செய்த மனித உரிமை மீறல்களையும் ஒளி காணல் பார்க்க நேர்ந்தது.ஒரே வித்தியாசம் அமெரிக்க மனித உரிமை மீறல்களை தட்டிக்கேட்க இயலும்.சவுதியில் அது இயலாது.

லெபனான்காரருக்கான மரணதண்டனையை எதிர்க்கும் அதே நேரத்தில்,நீங்கள் வாதாடுபவரின் செயல் உங்களை சிறந்த கிரிமினல் லாயராகவே நினைக்க தோன்றுகிறது.முக்கியமாக பகுத்தறிவை நேசிக்கும் நம்மைப்போன்றவர்கள் பில்லி,சூனியத்துக்கு சிபாரிசு செய்வது.

உங்கள் இடுகையைக் கூட பார்க்காமல் உங்களை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாமேன்னுதான் யதேச்சையாக நேற்று பதிவு போட்டு கலாய்ச்சது.நீங்க சீரியஸ் மூடுல இருக்கீங்கன்னு இப்பத்தான் தெரியுது.

அது சரி(18185106603874041862) said...

//
பிரியமுடன் பிரபு said...
oo
ithu verayaa?

//

ஆமாங்க பிரபு.

அது சரி(18185106603874041862) said...

//
KarthigaVasudevan said...
:(((

//

செய்தி படித்ததும் என் முகமும் இப்படித் தான் ஆனது.

அது சரி(18185106603874041862) said...

//
கோவி.கண்ணன் said...
எந்த மதமும் பெரும்பாண்மையாக இருக்கும் நாடுகளில் அவர்கள் வைத்தத்து தான் சட்டம், அதுவும் கூட அந்த நாட்டில் பெரும்பாண்மை இனத்திற்கு சாதகமாகத்தான் செயல்படுவார்கள். இதில் மனித நேயமாவது மண்ணாங்கட்டியாவது.

சிறுபாண்மையினருக்கு இந்தியாவில் ஆதரவு கொடுப்பது போல் பல நாடுகளில் சிறுபாண்மையாக இருப்பவர்களுக்கு அந்நாட்டின் பெரும்பாண்மையினர் ஆதரவு நிலை எடுப்பது இல்லை

8 April 2010 01:55
//

கருத்துக்கு நன்றி கோவி.

ஒரு சாதாரண குற்றத்திற்கு மரண தண்டனை கொடுப்பதிலிருந்தே மனித நேயம் இல்லை என்று தெரிகிறது...ஆனால், எனக்கு எழுந்த கேள்வி, உண்மையிலேயே குரான் மரண தண்டனை கொடுக்கச் சொல்கிறதா, அப்படியானால் அது என்ன விதமான கருணை என்பது தான்.

அது சரி(18185106603874041862) said...

//
Nanum enn Kadavulum... said...
அப்படியாயின் அவசியம் சௌதிக்கு செல்லவும் ! (ச்சும்மா !!!)
//

ஆஹா, விட்டா ஒன்வே டிக்கட் எடுத்துக் கொடுத்து ஃப்ளைட் ஏத்தி விட்ருவீங்க போலருக்கே :))

//
எனது அனுமானம் என்னவெனில் மந்திர தந்திர வேலைகள் எப்போதுமே (கல்ட்) டார்க் மேஜிக் -ஆக கருதப்பட்டு வந்துள்ளது.
அதிகாரம் கை மாறாமல் இருக்கவோ அல்லது அவை எதார்த்தத்துக்கு எதிராக இல்லாமல் இருக்கவோ ....சில காரணம் பற்றி தடை செய்யப்பட்டு வந்துள்ளது. எல்லா விதமான மதம் மற்றும் கலாச்சார வழிமுறைகளில் இதன் பங்கினை நாம் பார்க்கலாம். இன்னும்கூட டிவி -யில் Street Magic செய்யும் Dave -ஐ பார்த்து மக்கள் அலறி அடித்து ஓடுகிறார்கள். அவ்வாறு தடுக்கப்பட்ட ஒரு விஷயம், கொல்வது என்பது மிக சாதாரணமாக நடந்த அக்கால கட்டங்களில், மிக சாதாரண தண்டனையாக கருதப்பட்டிருக்கும். அதே சட்டத்தை கையில் பிடித்துக்கொண்டு ...நவீன உலகில் வாழ நினைப்பதுதான் முட்டாள்தனமான விஷயம். இந்த ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு "இஸ்லாத்தின்" கருணையை கேள்வி கேட்டே ஆகவேண்டிய அவசியமில்லை. எல்லா மதங்களையும் போலவே அங்கு கருணைக்கும் அன்பிற்கும் இடமிருக்கிறது. எப்போதும் போல தவறாக அர்த்தப்படுத்திக்கொண்ட அல்லது அன்பை "செய்ய முடியாத " மனித ஜென்மங்களின் தவறான புரிதல்களின் பிரதிபலிப்பே இது.
//

நீங்கள் சொல்வது புரிகிறது. இஸ்லாமிய கோட்பாடுகளின் படி, குரான் இறைவனால் நேரடியாக அருளப்பட்டது, மற்ற எல்லாவற்றையும் விட மேலானது. அதனாலேயெ குரான் உண்மையாகவே மரண தண்டணை கொடுக்க சொல்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன என்பதே ஒரு சமரசம் செய்யும் புள்ளியே தவிர அது உண்மையல்ல. எல்லா மதங்களிலும் மிக வன்முறை வளர்க்கும் இடங்கள் இருக்கின்றன. எனக்கு தெரிந்த வரை, இந்து மதத்தின் வேதங்களிலும், பைபிளின் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு (Revelatioந்) ஆகியவற்றில் இது போன்ற வன்முறை வாசகங்கள் அதிகம்.

கருணையே உருவானவன் கடவுள் எனில், அந்த கடவுளால் அருளப்பட்ட நூலில் எப்படி தலை வெட்டும் தண்டனைகள் இருக்க முடியும்? அப்படி இருந்தால், அவன் எப்படி கருணையே உருவான கடவுளாக இருக்க முடியும்?

அது சரி(18185106603874041862) said...

//
Robin said...
//அப்படியானால் என்றைக்காவது சவுதி சென்றால் என் தலையும் துண்டாக்கப்படும் வாய்ப்புண்டா?// உண்டு. சவுதிக்கு செல்வதை தவிர்க்கவும் :)
//

இனிமே நான் அந்த பக்கமே போறதில்லைங்க ராபின்...ட்ரான்ஸிட் கூட துபாய் இல்லாட்டி அபுதாபின்னு போயிடலாம்னு இருக்கேன். எனக்கு இருக்கதே ஒரு தலை...அதுவும் துண்டாயிடுச்சின்னா நான் என்ன பண்றது??

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
அண்ணே ஏர்போர்ட் வழியா வேற ஊருக்கு மாறிப் போனாக்கூட கைது பண்ணிருவாங்களா?

//

பெரும்பாலான நாடுகளில் மிக மோசமான பயங்கரவாதிகளை தவிர மற்றவர்களை இன்டர்னேஷனல் ஏர்போர்ட்டில் கைது செய்வதில்லை. ஆனால், அப்படி கைது செய்ய தடை ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
அய்யோ.நம்மூர்ல தர்க்கா, சந்தனக்கூடு இதுக்கெல்லாம் போற பெரும்பான்மை இஸ்லாமியர்கள், கக்குவான் இருமல், பில்லி சூனியம் எடுக்க தாயத்து, மந்தரிப்பவர்கள், ஏன் து ஆ முடிந்து வரும்போது வெளியே நிற்கும் குழந்தைகளுக்கு ஊதுவார்களே அந்த இஸ்லாமியர்களுக்கும் தலைக்கு ஆபத்தா?
//

இது மிக முக்கியமான கேள்வி ஸார். நேரடியான பதில் ஆம் என்பதே. நீங்கள் சொல்லும் தர்க்கா (நாகூர் ஆண்டவர் தர்கா உட்பட), சந்தனக் கூடு போன்றவை சூஃபி மரபின் பேரில் வந்தவை. ஷரியா சட்டப்படி சூஃபி மரபு என்பதெ மிகக்கடுமையான குற்றம்.

//
/அப்படியானால் என்றைக்காவது சவுதி சென்றால் என் தலையும் துண்டாக்கப்படும் வாய்ப்புண்டா?/

நேத்து நடராஜன் இடுகையில் இப்படி ஒரு உள்குத்து இருக்கறது தெரியாம போச்சே. அண்ணோவ். ஒரே இடுகையில எனக்கு, நசரேயனுக்கு, அதுசரிக்கு, பழமைக்கு சேர்த்து ஆப்பா? அவ்வ்வ்வ்வ்வ்வ்..
//

அய்யோ...அப்படி ஏதும் இல்லைங்க ஸார். இதுக்கும் அதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. நீங்க ஜாலியா சொன்னதை அவர் கொஞ்சம் சீரியசா எடுத்துக்கிட்டார் போலருக்கு.


/சுமார் 420 கோடி பேர் நிலை என்ன? இப்படி தலைகளை துண்டித்துக் கொண்டே போனால் உலகத்தில் எத்தனை தலைகள் மிஞ்சும்?/

அங்கங்க வெட்றவன் தலை மட்டும் அப்புறம் அவனுங்களுக்குள்ளயே வெட்டிக்கிட்டா மினிமம் ஒன்னு மிஞ்சலாம்:))

//

ஆமா...உலகின் கடைசி தலை!

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
/முகிலன் said...

அண்ணே ஏர்போர்ட் வழியா வேற ஊருக்கு மாறிப் போனாக்கூட கைது பண்ணிருவாங்களா?/

ந.நா.
செ.எ. சி.எ?

//

இது என்னன்னு எனக்கு புரியலையே?

அது சரி(18185106603874041862) said...

//
வால்பையன் said...
காட்டுமிராண்டிதனத்தின் உச்சகட்டம்!

//

அப்படித் தான் நானும் நினைக்கிறேன் வால்பையன். ஆனால் இது பற்றி குரான் என்ன சொல்கிறது என்று எனக்கு கேள்விகள். அதன் விளைவே இந்த இடுகை.

(அப்புறம் உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பி இருக்கேன். உங்க சைட்ல யாரோ வைரஸ் விட்டுட்டாங்களான்னு எனக்கு ஒரு டவுட். என்னோட ஜிமெயில் அக்கவுண்ட்டை ஹேக் பண்ண ட்ரை பண்ணிருக்காங்க..யாருன்னு தெரியலை)

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
"sigh"...

//

Yes...

அது சரி(18185106603874041862) said...

ராஜ நடராஜன் said...
//நேத்து நடராஜன் இடுகையில் இப்படி ஒரு உள்குத்து இருக்கறது தெரியாம போச்சே. அண்ணோவ். ஒரே இடுகையில எனக்கு, நசரேயனுக்கு, அதுசரிக்கு, பழமைக்கு சேர்த்து ஆப்பா? அவ்வ்வ்வ்வ்வ்வ்..//

தற்செயல்,யதேச்சை அப்படிங்கிறது இதுதான் போல இருக்குது.

//

உங்க இடுகைக்கும் இந்த இடுகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நடராஜன். அப்படி சம்பந்தப்படுத்தலாம்னு எனக்கு தோணக்கூட இல்லை.

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...

சவுதியின் ஷரியா சட்டம் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றபோதிலும்,பில்லி சூனியம்,கருப்பு மந்திரமெல்லாம் தடையென்பதால் வளைகுடா நாடுகளில் இவைகளால் உண்டான சமுதாய பாதிப்பு குறைவு என்ற அடுத்த பக்கத்தையும் நாம் உணர வேண்டும்.

நம்மூர் பில்லி,சூனியங்களில் நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கையோடு பார்க்கும் போது இங்கே இவைகளின் தாக்கம் குறைவு.
//

பில்லி சூனியம் நல்லது என்று நானும் சொல்ல மாட்டேன். ஆனால், பில்லி சூனியம் செய்வதாக, குறி சொல்வதாக டிவியில் நிகழ்ச்சி நடத்துவதற்கு மரணா தண்டனை என்பது இந்த நூற்றாண்டில் எந்த ஒரு பண்பட்ட சமுதாயமும் ஒப்புக் கொள்ளாது.

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...

ஒரு நாட்டில் இதைச் செய்யாதே எனும்போது அதனை மீறுவது தவறானது.மேலும் லெபனானின் வாழ்க்கை முறைக்கும்,சவுதி வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசங்கள்.லெபனான்காரர்கள் கிட்டத்தட்ட மேற்கத்திய வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்கள்.அப்படியும் லெபனானின் தென்பகுதியில் முக்கியமாக ஹமாஸ் ஆதிக்கம் உள்ள இடத்தில் இஸ்லாமின் நம்பிக்கையுள்ளவர்களும் அதிகம்.
//

உங்கள் பதிலிலியே விடை இருக்கிறது. அலி சபாத் லெபனானை சேர்ந்தவர். அவர் டி.வி. ஷோ நடத்தியதும் லெபனானில் தான். ஆக, அவர் சவுதி சட்டத்தை மீறியதாக் கூட சொல்ல முடியாது. அப்படித் தான் அளவுகோல் எனில், தினமும் சுமார் 420 கோடி பேர் சவுதி சட்டத்தையும், குரானையும் ஏதேனும் ஒரு வழியில் மீறிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நான் இதை எழுதும் இந்த நொடியில் கூட மீறிக் கொண்டு தான் இருக்கிறேன். இதற்காக என் தலையை வெட்ட வேண்டும் என்பீர்களா?

இது எப்படி இருக்கிறது என்றால், இங்கே லண்டனில் மூடப்பட்ட பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என்று சட்டம் இருக்கிறது. அதை மீறி புகைப்பிடித்த ஒருவன், ஜெர்மனிக்கு போகும் போது அவனை கைது செய்து அவன் தலையை வெட்டுவது போல இருக்கிறது.

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...

மீண்டும் சவுதியின் ஷரியா விவாதத்திற்குள்ளானது என்பதோடு சில தினங்களுக்கு முன் கலையரசன் தளத்தில் சேனல் 4ல் அமெரிக்கா ஈராக்கில் செய்த மனித உரிமை மீறல்களையும் ஒளி காணல் பார்க்க நேர்ந்தது.ஒரே வித்தியாசம் அமெரிக்க மனித உரிமை மீறல்களை தட்டிக்கேட்க இயலும்.சவுதியில் அது இயலாது.
//

உண்மை. அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள், குறைந்த பட்சம் சட்டத்திற்கு எதிரானது என்று அவர்களே ஒப்புக் கொள்வார்கள். ஆனால், தலை வெட்டி தண்டனை கொடுப்பது சட்டப்படி என்று சவுதி சொல்கிறதே?

தவிர, இந்த இடுகையின் முக்கிய நோக்கம் சவுதியை குறை சொல்வது கூட அல்ல, குரான் என்ன சொல்கிறது என்ற கேள்வியே.

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...


லெபனான்காரருக்கான மரணதண்டனையை எதிர்க்கும் அதே நேரத்தில்,நீங்கள் வாதாடுபவரின் செயல் உங்களை சிறந்த கிரிமினல் லாயராகவே நினைக்க தோன்றுகிறது.முக்கியமாக பகுத்தறிவை நேசிக்கும் நம்மைப்போன்றவர்கள் பில்லி,சூனியத்துக்கு சிபாரிசு செய்வது.
//

ஒரு வேளை நான் தெளிவாக எழுதவில்லை என்று நினைக்கிறேன், ஆனால் அப்படி சிபாரிசு செய்யும் நோக்கம் எனக்கில்லை.

ஆனால், பில்லி சூனியம், ஜோசியம் போன்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதற்காக அப்படி செய்பவர்களின் தலையை வெட்ட வேண்டும் என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அது எந்த நாட்டு சட்டமாக இருந்தாலும் சரி, யார் சொன்னாலும் சரி.

இந்தியாவில் எத்தனையோ ஜோசியர்கள் இருக்கிறார்கள். நாளை திடீரென்று அரசு ஒரு சட்டம் இயற்றி இவர்களின் தலையை வெட்ட வேண்டும் என்று சொன்னால் நாம் ஒப்புக் கொள்வோமா? என்ன ஒரு கருணை மிக்க அரசு என்று புகழ்பாடுவோமா??

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...

உங்கள் இடுகையைக் கூட பார்க்காமல் உங்களை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாமேன்னுதான் யதேச்சையாக நேற்று பதிவு போட்டு கலாய்ச்சது.நீங்க சீரியஸ் மூடுல இருக்கீங்கன்னு இப்பத்தான் தெரியுது.

//

அடடா..

என்னோட இடுகையை நீங்க பார்த்திருக்க முடியாது நடராஜன். ஏன்னா, நீங்க இடுகை போட்டப்ப நான் இந்த இடுகை எழுதவே இல்லை. :)))

அடச்சே...உங்க இடுகையும் இந்த இடுகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க...இது நான் போன வாரமே, குட் ஃப்ரைடே அன்னிக்கு எழுத வேண்டியது. நடுவுல கொஞ்சம் உடம்பு சரியில்லை, டைம் இல்லைங்கிறதுனால எழுத முடியலை. அவ்வளவு தான்.

Santhini said...

மதங்களில் வன்முறை சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நாம் மதங்களை அன்பின் அல்லது கடவுளின் உருவமாக கற்பிதம் செய்துகொள்வது தவறாகிறது. அப்படியெனில் கடவுள் அன்பின் உருவம் என கொள்வோமாயின், மதங்களின் மொழி கடவுளுடையது இல்லை. அவை மனிதனின் வாழ்வு முறைகளே. வாழ்வு முறை எல்லாவற்றையும் உள்ளடக்கியது (அன்பு + வன்முறை + கொலை + கொள்ளை ...அனைத்தும்). மனிதர்க்கு மனிதரால் சொல்லப்பட்ட அந்த மொழிகளுக்கு அத்தனை முக்கியத்துவம் எதற்கு?

இரண்டாவதாக....கடவுள் என்றால் கருணையா? You must be kidding ! அப்படியெனில் கடவுளால் செய்யப்பட்ட உலகில் வன்முறை ஏன்?
அடுத்து
"அஹம் பிரம்மாஸ்மி" என்று உணர்கிற ஆன்மாக்கள், இந்த கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்க வேண்டியதில்லை.
மேலும் அன்பேயுருவான கடவுள் மரணதண்டனை அளித்தது ஏனெனில் இவ்வுலக துன்பத்திலிருந்து விடுவிக்கவே. மரணம் விடுதலை. விடுதலை விரும்பினால் சௌதி செல்லவும். ( டிக்கட் எல்லாம் எடுத்து தர முடியாது )
( இல்லாத கடவுளையும், சொல்லாத மதத்தையும் நேரம் நிறைய இருக்கிறதென்று வைது கொண்டு இருக்கிறீர்கள்.....அனுபவியுங்கள்.... எனக்கும் வேலை வெட்டி இல்லாமல் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். என்ன செய்வது?
பொழுதை தள்ளணுமே !!!)
--

கல்வெட்டு said...

//அது சரி said...
ஆனால் இது பற்றி குரான் என்ன சொல்கிறது என்று எனக்கு கேள்விகள். அதன் விளைவே இந்த இடுகை.//

அது சரி ,

1.குரான்
2.ஹதீஸ்
3. ஷரியா

* குரான் மட்டுமே கடவுள் நேரடியாக முகமதுவிடம் கொடுத்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.
* ஹதீஸ் முகமத்துவைன் வாழ்க்கை மற்றும் அவராகச் சொன்னதாகச் பிறர் சொல்லும் வழிகாட்டி வாழ்க்கைமுறை
* ஷரியா ஒரு வகையான இஸ்லாமியச் சட்டம்

இந்த மூன்றிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதாவது ஹதீஸ்,ஷரியா இரண்டும் அல்லாவிடம் இருந்து நேரடியாக வந்தது அல்ல.

மேலும் குரானிலேயே பல அடைப்புக்குறி விளக்கங்கள் தாறுமாறாக இருக்கும். உதாரணத்திற்கு "அவன் அறிவான்" என்று மூலம் சொல்லுமானால் தமிழில் ..." இறைவன் நேற்று இன்று நாளை நடக்க இருக்கும் அனைத்தியும் அறிவான். அவனைமீறி நீ ஒன்றும் செய்ய முடியாது. அப்படி செய்தால் உனக்கு தண்டனை" என்று இட்டுக்கட்டப்படும்.

.

Mahesh said...

அண்ணாச்சி... நியாயமான கோவம் (அல்லது ஆதங்கம்)

கடவுள் கருணையாளர்னே வெச்சுக்குவோம்.... மனுஷங்க அப்பிடி இல்லையே... free will ... அது படுத்தற பாடு :(

கொலை செய்யச் சொல்கிறதா வேதம்/விவிலியம்/குர்-ஆன்... இந்தக் கேள்வியே தப்போன்னு தோணுது. மனிதன் தலையை எடுக்கும்போதுதான் இந்தக் கேள்வியே வருது. கோவில்ல ஆடு/மாடு/கோழி வெட்டும்போதோ அல்லது வீட்டுல/கசாப்புகடைல மிருகம்/பறவையோட தலையை எடுக்கும்போதோ தோணறதில்லையே..ஏன்?

Nathanjagk said...

இதில் 2 விஷயங்கள் கவனிக்கத் தூண்டுகின்றன:
1. கடவுள் எதிர்ப்பு பற்றிப் ​பேசும்​போது இந்துமதத்தை மட்டும் இடித்துரைக்கிறார்கள் என்பவர்களுக்கு இந்த இடுகை ஒரு பதிலாகிறது.
2.​மொத்தமாக ஒரு மதத்தையோ மத மரபுகளையோ அல்லது நம்பிக்கைகளையோ ஒரு நிலப்பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளைக் ​கொண்டு விமர்சிக்க / அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது.

நேர்த்தியான எழுத்து தர்க்கரீதியான ​கேள்விகள் என உங்கள் எழுத்து அருமை.

இஸ்லாம் அல்லது குரான் பற்றி நன்கு அறிந்தவர்கள் இந்த விவாதத்தை ​மேற்கொண்டு முன்னகர்த்திச் ​செல்வார்கள் என்று நம்புகிறேன்.
ஆவலாகவும் உள்ளேன்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

THE UFO said...

ரொம்ப ரொம்ப சிம்பிளான மேட்டரை ஊதி ஊதி பெருசாக்கி கடைசி வரை பதில் தெரியாமலேயே போய் விட்டீர்களே...முரண்தொடை...

அதுசரியல்ல...

உங்களுக்கு, குரானில் அல்லா மெய்யாலுமே இந்த குறி சொல்லும் குற்றத்திற்கு தலை வெட்டும் தீர்ப்பா என்று அறிய ஆவல் இருந்திருந்தால்...,

அ) குரான் தமிழாக்கத்தை படித்திருக்க வேண்டும்...

ஆ) அதற்கெல்லாம் மெனக்கெட நேரம் இல்லை என்றால், ஏதாவது ஒரு முஸ்லிம் அறிஞரிடம் சென்று கேட்டு விடை பெற்றிருக்கலாம்...

இ) அப்படியெல்லாம் அலைய முடியாதெனில், இன்று உங்களிடம் இணையத்தில் எத்தனை எத்தையோ இஸ்லாமிய வலைத்தளங்கள், பதிவர்கள் இருக்கின்றனர்... கேட்டு தெளிவு பெற்றிருக்கலாம்...

இவற்றில் ஏதாவது ஒன்றை செய்திருந்தால், இந்த பதிவின் நோக்கமாக (குரானில் இப்படி உள்ளதா என்று அறியவேண்டும்..என) நீங்கள் கூறி இருப்பதன் தேவையே இல்லாமல் போகிருக்கும்...அதாவது இப்பதிவுக்கே அவசியம் இன்றி போயிருக்கும்.

ஆனால், உங்கள் நோக்கம், இப்படிப்பட்ட செய்தியினை வைத்து, முகிலன், வானம்பாடிகள் போன்ற 'ஒப்பாரிகளின்' துணை கொண்டு படிப்பவரிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்பினை குறைக்க முயன்றிருப்பது ஒன்றே உங்கள் நோக்கம் என்று தெரிகிறது...

உங்கள் கேள்விக்கு இன்று வரையேனும் பதில் தெரிந்ததா?
அது சரி..... அது பற்றிய கவலை,
உங்களுக்கெதுக்கு?

Nathanjagk said...

UFO,
உங்கள் எதிர்வினை ஆக்கபூர்வமான உத்தேசத்தில் பதிவிடப் பட்டதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
முரண்தொடை ஒரு சம்பவத்தை விவரித்து தர்க்கரீதியாக சில கேள்விகளை கேட்டிருந்தார். நானும் எனது பின்னூட்டத்தில் யாராவது குரான் கற்றவர்கள் இந்த விவாத்தை முன்னகர்த்திச் செல்வார்களா எனக் கேட்டிருந்தேன். ஒரு உந்துதலால் எனது Google-Buzzல் முரண்தொடையின் இந்த பதிவை சுட்டியாக வெளியிட்டு யாராவது விளக்குங்களேன் என்றேன். இப்பவரைக்கும் எவ்வித பதில்களுமில்லை. இருந்தும் தேடல் நம் கடமையே என்ற ப்ரக்ஞை கொண்டிருக்கிறேன்.

முரண்தொடையின் கருத்தறிய ஆவல்.

(இது ஒரு தொடர் விவாதப்போரை அனாவசியமாக விளைவிக்கும் என்றால் என் பின்னூட்டத்தை நீக்கிவிடுக. நன்றி)

Anonymous said...

Lebanese 'sorcerer' may not be beheaded, says lawyer
By ARAB NEWS


May Al-Khansa told The Associated Press that Lebanese Justice Minister Ibrahim Al-Najjar informed her of the decision to lift the death sentence on Sibat following his meeting with the Saudi ambassador to Lebanon.

“We do not have anything official. It seems they are going to cancel the sentence,” Khansa told AFP by telephone from Beirut. She said she spoke with Al-Najjar after he discussed the case earlier with the Saudi ambassador to Lebanon. “He promised there would be good news,” ...


http://arabnews.com/search/simple.do;jsessionid=F96AB22245C2449A6FCD17B70042E235

Unknown said...

// UFO said...
ரொம்ப ரொம்ப சிம்பிளான மேட்டரை ஊதி ஊதி பெருசாக்கி கடைசி வரை பதில் தெரியாமலேயே போய் விட்டீர்களே...முரண்தொடை...

அதுசரியல்ல...

உங்களுக்கு, குரானில் அல்லா மெய்யாலுமே இந்த குறி சொல்லும் குற்றத்திற்கு தலை வெட்டும் தீர்ப்பா என்று அறிய ஆவல் இருந்திருந்தால்...,

அ) குரான் தமிழாக்கத்தை படித்திருக்க வேண்டும்...

ஆ) அதற்கெல்லாம் மெனக்கெட நேரம் இல்லை என்றால், ஏதாவது ஒரு முஸ்லிம் அறிஞரிடம் சென்று கேட்டு விடை பெற்றிருக்கலாம்...

இ) அப்படியெல்லாம் அலைய முடியாதெனில், இன்று உங்களிடம் இணையத்தில் எத்தனை எத்தையோ இஸ்லாமிய வலைத்தளங்கள், பதிவர்கள் இருக்கின்றனர்... கேட்டு தெளிவு பெற்றிருக்கலாம்...

இவற்றில் ஏதாவது ஒன்றை செய்திருந்தால், இந்த பதிவின் நோக்கமாக (குரானில் இப்படி உள்ளதா என்று அறியவேண்டும்..என) நீங்கள் கூறி இருப்பதன் தேவையே இல்லாமல் போகிருக்கும்...அதாவது இப்பதிவுக்கே அவசியம் இன்றி போயிருக்கும்.//



UFO சார்,
இவ்வளவு நீண்ட பின்னோட்டத்தில் கூட அதுசரிக்கு பதில் சொல்லாம போய்ட்டிங்களே அது ஏன் சார்

அங்க கேட்டிருக்கலாம் இங்கே தேடியிருக்கலாம் என்பதெல்லாம் சரி
ஆனா நீங்க இங்க சொல்ல என்ன தடை

//ஆனால், உங்கள் நோக்கம், இப்படிப்பட்ட செய்தியினை வைத்து, முகிலன், வானம்பாடிகள் போன்ற 'ஒப்பாரிகளின்' துணை கொண்டு படிப்பவரிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்பினை குறைக்க முயன்றிருப்பது ஒன்றே உங்கள் நோக்கம் என்று தெரிகிறது...
//

அதுசரியோட நோக்கம் அப்படியே இருந்தாலும் நீங்க உங்க பதிலோட துணை கொண்டு படிப்பவரிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்பினை அதிகரிக்க முயன்றிருக்கலாமே
ஏன் வாய்ப்பை நழுவ விட்டிங்க சார்

//உங்கள் கேள்விக்கு இன்று வரையேனும் பதில் தெரிந்ததா?
அது சரி..... அது பற்றிய கவலை,
உங்களுக்கெதுக்கு?
//

உங்களுக்கும் அது பற்றிய கவலை இல்லை போல அதனால் தானே மேட்டருக்குள்ள வராமலேயே எஸ் ஆய்ட்டீங்க

கலகலப்ரியா said...

||ஆனால், உங்கள் நோக்கம், இப்படிப்பட்ட செய்தியினை வைத்து, முகிலன், வானம்பாடிகள் போன்ற 'ஒப்பாரிகளின்' துணை கொண்டு படிப்பவரிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்பினை குறைக்க முயன்றிருப்பது ஒன்றே உங்கள் நோக்கம் என்று தெரிகிறது...||

ம்க்கும்.. மேதகு "அதுசரி" அவர்களே நீங்க பிஸியா இருக்கும் நேரம் பார்த்தா இந்த சோதனை... நீங்க திரும்பி வர்றப்போ உங்க ஒப்பாரித் துணையெல்லாம் ஹாலிடேக்கு ஜாலியா போய்டப் போறாய்ங்க... நீங்க எப்பூடி அவங்கள ஆலோசனை கேக்காம ஒரு வார்த்தையாவது எழுதப் போறீங்க.. :o)).. எனக்குன்னா செம காமெடியா இருக்குப்பா..

சீக்கிரம் வந்து பதில் போடுங்கையா... நான் சேர்ந்து ஒப்பாரி வைக்க ரெடி... வீட்டில ஆள் இல்லாத நேரம் பார்த்து நாம பாட்டுக்கு ஒப்பாரி வச்சா நல்லா இருக்காதில்ல... வெயிட்டிங்...

Santhini said...

||ஆனால், உங்கள் நோக்கம், இப்படிப்பட்ட செய்தியினை வைத்து, முகிலன், வானம்பாடிகள் போன்ற 'ஒப்பாரிகளின்' துணை கொண்டு படிப்பவரிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்பினை குறைக்க முயன்றிருப்பது ஒன்றே உங்கள் நோக்கம் என்று தெரிகிறது...||

முகிலன், வானம்பாடிகள் போன்ற ஒப்பாரிகளின் துணை கொண்டும், மேலும் "அதுசரி" அவர்கள் தாமாக முனைந்தும் ....ஆக பதிவுலகில் இருக்கும் சிலபேர் சேர்ந்து மட்டுமே அத்தகைய மாண்புமிக்க இஸ்லாமிய மதத்தின் மாண்பை குறைத்துவிட முடியுமென்று நீங்கள் அவ்வளவு உறுதியாக நம்புகிறீர்கள் எனில் ............அத்தகைய மாண்பு மிகுந்த இஸ்லாம் உங்களை நல்ல நம்பிக்கை உடையவராக ஆக்குவதில் தவறிவிட்டது என்றே கருதத் தோன்றுகிறது. உங்களால் முடிந்தால் இஸ்லாமை நம்புங்கள். இஸ்லாம் தன்னை பார்த்துக்கொள்ளும், தனக்கு வலிமை இருந்தால் !!!
--

vasu balaji said...

//இப்படிப்பட்ட செய்தியினை வைத்து, முகிலன், வானம்பாடிகள் போன்ற 'ஒப்பாரிகளின்' துணை கொண்டு படிப்பவரிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்பினை குறைக்க முயன்றிருப்பது ஒன்றே உங்கள் நோக்கம் என்று தெரிகிறது...//

மீ த ரெடி ஃபார் ஒப்பாரி. எளக்கியம் எங்கிருந்தாலும் வரவும் :o)))

Unknown said...

தங்கமணியும் ஜூனியரும் ஊர்ல இல்லாதப்ப நான் சும்மா பேசுனாலே ஒப்பாரி வைக்கிற மாதிரி இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. இதுல இவரு என்னைய ஒப்பாரி வைக்கவே கூபுடுராங்ககளே.. நான் என்ன செய்ய? எப்பிடி செய்ய....

Unknown said...

ஓகே, அது சரி, வானம்பாடியோட சேந்து இஸ்லாமோட மாண்பைக் குறைச்சாச்சி.

அடுத்த அசைன்மென்ட் வால்பையனோட சேந்து கிறிஸ்தவத்தோட மாண்பைக் குறைக்கணும்.

அடுத்த படியா ஜோ அமலன் பெர்நாண்டோவோட சேந்து ஹிந்து மதத்தோட மாண்பைக் குறைக்கணும்.

யப்பா நிறைய வேலை இருக்கும் போலயே?

அது சரி(18185106603874041862) said...

UFO, Jeganathan, Karikalan, Priya, Naanum En Kadavulum, Vanambadigal, Mukilan...

Thanks for all the comments...I'll post a detailed reply in a day or two...Apologies for the delayed response...

But, UFO, you neither understood the meaning of the post nor provided any answer.

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...
ரொம்ப ரொம்ப சிம்பிளான மேட்டரை ஊதி ஊதி பெருசாக்கி கடைசி வரை பதில் தெரியாமலேயே போய் விட்டீர்களே...முரண்தொடை...

//

எது சிம்பிளான மேட்டர்?? ஒரே ஒரு தனிமனிதனின் தலைக்கு வந்த ஆபத்து என்று பார்த்தால் சிம்பிளான மேட்டர் தான்...இந்த தலைவெட்டல் சம்பவம் ஏதேனும் ரவுடி கும்பலால் நடத்தப்பட்டாலும் கூட அது ஒரு சிம்பிளான மேட்டர் என்று சொல்லி விடலாம்.

ஆனால், குரானை அரசியல் சட்டமாகவும், ஷரியாவை நடைமுறை சட்டமாகவும் வைத்திருக்கும் சவுதி அரேபியா சட்டப்பூர்வமாகவே இதை செய்கிறது.

ஒரு பயங்கரவாதி கற்பழிப்பதற்கும் அரசாங்கமே கற்பழிக்க உத்தரவிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா?? அப்படியானால் அந்த அரசாங்கத்தின் சட்டத்தையும் அதற்கு அடிப்படையாக இருப்பதையும் குறித்து கேள்வி எழத்தான் செய்யும்.

மேலும், இந்த தண்டனையின் மிக முக்கிய அம்சம் மத ரீதியாக பெயரளவுக்கு கூட சகிப்புத் தன்மை இல்லாத நிலையைத் தான் காட்டுகிறது.

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...


அதுசரியல்ல...

உங்களுக்கு, குரானில் அல்லா மெய்யாலுமே இந்த குறி சொல்லும் குற்றத்திற்கு தலை வெட்டும் தீர்ப்பா என்று அறிய ஆவல் இருந்திருந்தால்...,

அ) குரான் தமிழாக்கத்தை படித்திருக்க வேண்டும்...

ஆ) அதற்கெல்லாம் மெனக்கெட நேரம் இல்லை என்றால், ஏதாவது ஒரு முஸ்லிம் அறிஞரிடம் சென்று கேட்டு விடை பெற்றிருக்கலாம்...

இ) அப்படியெல்லாம் அலைய முடியாதெனில், இன்று உங்களிடம் இணையத்தில் எத்தனை எத்தையோ இஸ்லாமிய வலைத்தளங்கள், பதிவர்கள் இருக்கின்றனர்... கேட்டு தெளிவு பெற்றிருக்கலாம்...

இவற்றில் ஏதாவது ஒன்றை செய்திருந்தால், இந்த பதிவின் நோக்கமாக (குரானில் இப்படி உள்ளதா என்று அறியவேண்டும்..என) நீங்கள் கூறி இருப்பதன் தேவையே இல்லாமல் போகிருக்கும்...அதாவது இப்பதிவுக்கே அவசியம் இன்றி போயிருக்கும்.
//

நான் அறிந்து கொள்வது மட்டுமே நோக்கமல்ல, இன்னும் பலர் அறிய வேண்டும் என்பது தான் நோக்கம். தவிர எனது கேள்விகள் மிலாடி நபி கொண்டாடுவது சரியா தவறா, வெண்டைக்காய் ஹலாலா ஹராமா என்பதான கேள்விகள் அல்ல. இது ஒரு பொதுப்படையான பிரச்சினை குறித்து பொதுவில் வைக்கப்பட்ட கேள்வி.

தவிரவும், குரானை மட்டுமல்ல, இன்னும் பல மத நூல்களை படிப்பதில் எனக்கு பல பிரச்சினைகள் உண்டு. முக்கியமானது, இப்படி செய், இப்படி செய்யாதே, இப்படி செய்தால் நரகம், பெண்கள் எனில் பர்தா அணிய வேண்டும், மஞ்சள் குங்குமமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் நூல்களை படிப்பதில் எனக்கு ஆர்வமுமில்லை, நேரமும் இல்லை.

ஆனால், குரானை படித்துத் தான் ஆக வேண்டியிருக்கும் போல இருக்கிறது. குறிப்பாக அன்பையே போதிப்பதாக சொல்லப்படும் மதம், அந்த மதத்தை பின்பற்றாதவர்கள் குறித்து என்ன சொல்லுகிறது என்பதை படிக்க வேண்டியிருக்கிறது.

உதாரணத்திற்கு ஒன்று (நான் ஆங்கிலத்தில் படித்தது)

But when the forbidden months are past,
then fight and slay the Pagans wherever ye find them, and seize them, beleaguer them,
and lie in wait for them in every stratagem (of war)...

from Qur'an 9:5

அதெல்லாம் இருக்கட்டு, அ ஆ இ ஈ என்று பட்டியல் போட்ட நீங்கள் இது குறித்து உங்களுக்கு தெரிந்ததையும் சொல்லியிருக்கலாம். ஒரு வேளை உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டால் நீங்கள் சொன்ன வழிகளை முயன்று பாருங்கள்.

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...

ஆனால், உங்கள் நோக்கம், இப்படிப்பட்ட செய்தியினை வைத்து, முகிலன், வானம்பாடிகள் போன்ற 'ஒப்பாரிகளின்' துணை கொண்டு படிப்பவரிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்பினை குறைக்க முயன்றிருப்பது ஒன்றே உங்கள் நோக்கம் என்று தெரிகிறது...

உங்கள் கேள்விக்கு இன்று வரையேனும் பதில் தெரிந்ததா?
அது சரி..... அது பற்றிய கவலை,
உங்களுக்கெதுக்கு?

25 May 2010 18:27//

ஒப்பாரி??? உங்களுக்கு ஜால்ரா அடித்தால் அதற்கு பெயர் அருமையான கருத்து இல்லாவிட்டால் ஒப்பாரி?? வானம்பாடிகளும் முகிலனும் கேட்டிருப்பது முக்கியமான கருத்து. ஏனெனில், ஷரியா சட்டத்திற்கு மத பாகுபாடுகளோ, நேஷனாலிட்டி பாகுபாடுகளோ கிடையாது என்பதால் அதை எல்லார் மீதும் பிரயோகிக்க முடியும். (ஷல்மான் ருஷ்டிக்கும் டேனிஷ் கார்ட்டூனிஸ்ட்டுக்கும் மரண தண்டனை விதித்து இதை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அதனால் அப்படியெல்லாம் இல்லை என்று கதை அளக்க முடியாது).

இஸ்லாமிய மதத்தின் மாண்பை வானம்பாடிகள், முகிலனுடன் கூட்டணி அமைத்து என்ன, தனியாக கூட நான் வரவேண்டியதில்லை. ஏனெனில், சவுதி அரேபியாவும், பாகிஸ்தானும், தலீபான்களும் அதை மிகத் திறமையாக செய்து கொண்டிருக்கிறார்கள். இதை எழுதும் இன்று கூட, முகமதுவுக்கு பின் அஹமடி என்ற இன்னொரு நபி வந்ததாக கருதும் முஸ்லிம் மக்களின் மசூதி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இறந்தவர்களின் எண்ணிக்கை எண்பது பேர். இந்த படுகொலைகளுக்கு ஒரே காரணம், அவர்கள் முகமதுவை ஏற்றுக் கொண்டாலும் அவருக்கு பின்னரும் ஒரு நபி வந்தார் என்று நம்புவது மட்டுமே.

எனது இடுகையில் நான் இல்லாதது எதையும் எழுதவில்லை. மதத்தின் பெயரால் செய்யப்படுவதை குறித்து கேள்வி எழுப்புவது அந்த மதத்தின் மாண்பை குறைப்பதாக அமையுமானால், அது என் தவறல்ல, அந்த மதத்தின் தவறு. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது!

நான் கேட்ட கேள்விக்கு பதில் தெரிந்தது....அது பின்னர் எழுதப்படும்.

அது சரி(18185106603874041862) said...

//
ஜெகநாதன் said...
UFO,
உங்கள் எதிர்வினை ஆக்கபூர்வமான உத்தேசத்தில் பதிவிடப் பட்டதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
முரண்தொடை ஒரு சம்பவத்தை விவரித்து தர்க்கரீதியாக சில கேள்விகளை கேட்டிருந்தார். நானும் எனது பின்னூட்டத்தில் யாராவது குரான் கற்றவர்கள் இந்த விவாத்தை முன்னகர்த்திச் செல்வார்களா எனக் கேட்டிருந்தேன். ஒரு உந்துதலால் எனது Google-Buzzல் முரண்தொடையின் இந்த பதிவை சுட்டியாக வெளியிட்டு யாராவது விளக்குங்களேன் என்றேன். இப்பவரைக்கும் எவ்வித பதில்களுமில்லை. இருந்தும் தேடல் நம் கடமையே என்ற ப்ரக்ஞை கொண்டிருக்கிறேன்.
//

நன்றி ஜெகன். கேள்வி எழுப்பியவன் என்ற முறையில், தேடிய வரையில் எனக்கு கிடைத்த பதில்கள் எதுவும் அன்பை போதிப்பதாக இல்லை. ஆனால், முழுமையாக தெரிந்து கொண்டு பின்னர் எழுதுகிறேன்.

//

(இது ஒரு தொடர் விவாதப்போரை அனாவசியமாக விளைவிக்கும் என்றால் என் பின்னூட்டத்தை நீக்கிவிடுக. நன்றி)

26 May 2010 02:49
//

அப்படி எதுவும் நீக்கப்படாது ஜெகன். நீங்கள் உங்கள் கருத்துக்களை தாராளமாக எழுதலாம்.

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
Lebanese 'sorcerer' may not be beheaded, says lawyer
By ARAB NEWS


May Al-Khansa told The Associated Press that Lebanese Justice Minister Ibrahim Al-Najjar informed her of the decision to lift the death sentence on Sibat following his meeting with the Saudi ambassador to Lebanon.

“We do not have anything official. It seems they are going to cancel the sentence,” Khansa told AFP by telephone from Beirut. She said she spoke with Al-Najjar after he discussed the case earlier with the Saudi ambassador to Lebanon. “He promised there would be good news,” ...


http://arabnews.com/search/simple.do;jsessionid=F96AB22245C2449A6FCD17B70042E235

26 May 2010 09:27
//

Thanks for the link Anonymous. As I noted in my blog itself, the punishment was postponed.

But my question regarding the law that sanctions death penalty still remains.

அது சரி(18185106603874041862) said...

//
Karikal@ன் - கரிகாலன்

அதுசரியோட நோக்கம் அப்படியே இருந்தாலும் நீங்க உங்க பதிலோட துணை கொண்டு படிப்பவரிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்பினை அதிகரிக்க முயன்றிருக்கலாமே
ஏன் வாய்ப்பை நழுவ விட்டிங்க சார்

//

அது தான் எனக்கும் புரியவில்லை கரிகாலன். கொஞ்சமாவது ட்ரை கூட பண்ணாது போயிட்டார்!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

ம்க்கும்.. மேதகு "அதுசரி" அவர்களே நீங்க பிஸியா இருக்கும் நேரம் பார்த்தா இந்த சோதனை... நீங்க திரும்பி வர்றப்போ உங்க ஒப்பாரித் துணையெல்லாம் ஹாலிடேக்கு ஜாலியா போய்டப் போறாய்ங்க... நீங்க எப்பூடி அவங்கள ஆலோசனை கேக்காம ஒரு வார்த்தையாவது எழுதப் போறீங்க.. :o)).. எனக்குன்னா செம காமெடியா இருக்குப்பா..
//

உங்களுக்கு காமெடியா இருக்கு...எனக்கு கவலையா இருக்கு...முகிலன், வானம்பாடி கூட்டணி இல்லாம நான் இனிமே எப்படி எழுதுவேன்...எனக்கு ஒரு எழுத்துக் கூட எழுத வராதே...கூட்டணி என்னோட அச்சாணி :)))

அது சரி(18185106603874041862) said...

//
Nanum enn Kadavulum... said...
||ஆனால், உங்கள் நோக்கம், இப்படிப்பட்ட செய்தியினை வைத்து, முகிலன், வானம்பாடிகள் போன்ற 'ஒப்பாரிகளின்' துணை கொண்டு படிப்பவரிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்பினை குறைக்க முயன்றிருப்பது ஒன்றே உங்கள் நோக்கம் என்று தெரிகிறது...||

முகிலன், வானம்பாடிகள் போன்ற ஒப்பாரிகளின் துணை கொண்டும், மேலும் "அதுசரி" அவர்கள் தாமாக முனைந்தும் ....ஆக பதிவுலகில் இருக்கும் சிலபேர் சேர்ந்து மட்டுமே அத்தகைய மாண்புமிக்க இஸ்லாமிய மதத்தின் மாண்பை குறைத்துவிட முடியுமென்று நீங்கள் அவ்வளவு உறுதியாக நம்புகிறீர்கள் எனில் ............அத்தகைய மாண்பு மிகுந்த இஸ்லாம் உங்களை நல்ல நம்பிக்கை உடையவராக ஆக்குவதில் தவறிவிட்டது என்றே கருதத் தோன்றுகிறது. உங்களால் முடிந்தால் இஸ்லாமை நம்புங்கள். இஸ்லாம் தன்னை பார்த்துக்கொள்ளும், தனக்கு வலிமை இருந்தால் !!!
//

ஆமா, எங்கது தேசீய ஜனநாயக கூட்டாணீ...இஸ்லாமோட மாண்பை குறைச்சே தீரணும்னு ஸ்டாம்ப் பேப்பர்ல கைநாட்டு வச்சி கூட்டாணீ ஒப்பந்தம் போட்டுருக்கோம் :)))

ஆனா, எங்க கூட்டணியெல்லாம் ச்ச்சும்மா...சப்பை கூட்டணி...சவூதி அரேபியா, பாகிஸ்தான், தலீபான்னு ஒரு கூட்டணி இருக்கு பாருங்க, அவங்க போதும், இஸ்லாம் பேரை கெடுக்க.

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
//இப்படிப்பட்ட செய்தியினை வைத்து, முகிலன், வானம்பாடிகள் போன்ற 'ஒப்பாரிகளின்' துணை கொண்டு படிப்பவரிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்பினை குறைக்க முயன்றிருப்பது ஒன்றே உங்கள் நோக்கம் என்று தெரிகிறது...//

மீ த ரெடி ஃபார் ஒப்பாரி. எளக்கியம் எங்கிருந்தாலும் வரவும் :o)))

27 May 2010 16:49
//

ஹலோ, என்ன சார் இப்படி செஞ்சிட்டீங்க...கடைசியில கூட்டணில என்னை சேர்க்காம விட்டுட்டீங்களே?? அப்ப கைநாட்டு வச்சி ஒப்பந்தம் செஞ்சதெல்லாம்?? சரி போகட்டு, ஸ்டாம்ப் பேப்பர் வாங்கின காசையாவது குடுங்க சார்...

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
தங்கமணியும் ஜூனியரும் ஊர்ல இல்லாதப்ப நான் சும்மா பேசுனாலே ஒப்பாரி வைக்கிற மாதிரி இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. இதுல இவரு என்னைய ஒப்பாரி வைக்கவே கூபுடுராங்ககளே.. நான் என்ன செய்ய? எப்பிடி செய்ய....

27 May 2010 18:26
//

அது ரொம்ப ஈஸி...நச்சுன்னு ஒரு கேள்வி கேளுங்க...மக்களுக்கு பதில் சொல்ல முடியாட்டி ஒப்பாரின்னு சொல்லிடுவாங்க... Simple really!

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
ஓகே, அது சரி, வானம்பாடியோட சேந்து இஸ்லாமோட மாண்பைக் குறைச்சாச்சி.

அடுத்த அசைன்மென்ட் வால்பையனோட சேந்து கிறிஸ்தவத்தோட மாண்பைக் குறைக்கணும்.

அடுத்த படியா ஜோ அமலன் பெர்நாண்டோவோட சேந்து ஹிந்து மதத்தோட மாண்பைக் குறைக்கணும்.

யப்பா நிறைய வேலை இருக்கும் போலயே?

27 May 2010 18:47
//


போம்போது விட்டுட்டு போயிடாதீங்க...என்னையும் ஆட்டத்துக்கு சேத்துக்கங்கப்பா.......இந்த வாரம் எந்த மதத்துக்கு டவுசர் கழட்டறாங்க??

vasu balaji said...

அது சரி said...

// ஹலோ, என்ன சார் இப்படி செஞ்சிட்டீங்க...கடைசியில கூட்டணில என்னை சேர்க்காம விட்டுட்டீங்களே?? அப்ப கைநாட்டு வச்சி ஒப்பந்தம் செஞ்சதெல்லாம்?? சரி போகட்டு, ஸ்டாம்ப் பேப்பர் வாங்கின காசையாவது குடுங்க சார்...//

இன்னாது? கூட்டணில சேர்க்காமவா! அவ்வ்வ்வ். நானும் இளக்கியமும் சைடு பீசு! நீங்கதான் மெயின் பீசு. அப்புறம் என்னாத்த சேர்க்கறது. :)).

கலகலப்ரியா said...

ufo... << இது வேற்றுக் கிரகவாசியின் பறக்கும் தட்டு என்ற அர்த்தத்தில் வைத்துக் கொள்ளப்பட்டதா தெரியவில்லை... ஏலியனாக இருப்பதும்... அநாமதேயமாகப் பின்னூட்டமிடுவதும் மிகவும் சௌகர்யமாக இருக்கிறது போலும்... மறைந்திருந்து முதுகில் கல்லெறிவது போலவும்.. முகமூடியணிந்து மிரட்டுவது போலவும்... இந்தப் பெயரின் போர்வையில் முக்காடிட்டு சகட்டு மேனிக்குப் பதிவர்கள் பெயர் சொல்லி ஏய்க்க ஏதுவாக இருக்கிறது...

ஒரு வேளை நீங்கள் சொல்லும் கருத்துக்களுடன் உங்களுக்கே உடன்பாடில்லையோ... அல்லது உறுதியான நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை இல்லையோ தெரியவில்லை..

||//அ) குரான் தமிழாக்கத்தை படித்திருக்க வேண்டும்...||

தண்டனை கொடுப்பவர்களும்... கேலிக் கூத்தாடுபவர்களும் குரானை ஒரு தடவை சரியாகப் படிக்கலாமே..

விநாயகர் ஒரு தந்தமுடைத்து வியாசர் சொல்லச் சொல்ல மகாபாரதம் எழுதினாப்ல... அல்லா சொல்ல.. ஜிப்ரீல் அத முஹம்மதுக்கு சொன்னாங்க... இப்டி உருவான ஒரு குரான்.. புராணமாகவோ.. இதிகாசமாகவோ.. கையாண்டிருந்தால் இவ்ளோ பிரச்சனை இருந்திருக்காதோ என்னமோ... அதைச் "சட்டப் புத்தகமாகவும்" ஆக்கினதுதான் கஷ்டம்..

முருங்கக்கா சாம்பார் செய்வது எப்படி என்று ஒரு ரெஸிபி இருக்குமானால் அதை வரிக்கு வரி பார்த்துச் சமைப்பது சரி... அதற்கு புளி அதிகமானால் என்ன செய்வது... உப்பு குறைந்தால் என்ன செய்வது.. காரம் அதிகமாகி குடல் எரிந்தால் என்ன செய்வது போன்ற விடயங்களுக்கும்.. அதே புத்தகத்திலேயே பதிலும் இருக்கிறதென்று பார்த்துச் செய்து கொண்டிருந்தால்... மூளை ஒன்றிருப்பதே அந்தப் புத்தகத்தைப் படித்து சாம்பார் செய்வதற்குத்தான் என்று ஆகி விடுகிறது..

வாழ்க்கையை ஒரு முருங்கக்கா சாம்பார் ரெஸிபியில் அடக்க என்னால முடியல..

எங்க போனாலும் சுத்திச் சுத்தி மற்றவர்களையே குற்றம் சொல்லிக் கொண்டிருக்காது... என்னடா சொல்லுறாங்கன்னு விளங்கிக்கொள்ளக் கூடத் தயாராக இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு விளக்கம் கேட்பதற்கு வழி சொல்வதுதான் சகிக்கவில்லை..

கலகலப்ரியா said...

//உங்களுக்கு காமெடியா இருக்கு...எனக்கு கவலையா இருக்கு...முகிலன், வானம்பாடி கூட்டணி இல்லாம நான் இனிமே எப்படி எழுதுவேன்...எனக்கு ஒரு எழுத்துக் கூட எழுத வராதே...கூட்டணி என்னோட அச்சாணி :)))//

ம்ம்.. எனக்கு ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில்ஸ்டார் வயலின்ல வாசிக்க தெரியும்... எப்டியாவது துண்டைப் போட்டாவது காசச் சேர்த்து கூட்டணியப் பலப்படுத்த நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்... நீங்க எனக்குக் கொடுக்க வேண்டிய அந்த 4567.45 £.. ல இதயும் அட் பண்ணா போதும்... அப்புறம் .. ஒரே நிமிடத்தில் ஒரு எழுத்து எழுதக் கற்றுக் கொள்வது எப்படி என்று ஒரு புத்தகம் இருக்கு... அது ஓசில கொடுப்பாங்க வாங்கிக்கலாம்... ஆனா அதப் படிக்கத் தெரியணும்... அது அனகொண்டா மொழில இருக்கு... மொழிபெயர்ப்புக்கு கம்பர் கிட்ட கேக்கலாம்...

UFO said...

//"இஸ்லாம் தலையை வெட்டச் சொல்கிறதா?"//--பதிலுக்கு போகும் முன்....
அட..! பின்னூட்டங்கள்.... நான் இந்தளவு பெரிய தவறு செய்து விட்டேனா?

பின்னூட்டங்களை 'ஒப்பாரிகள்' என்று நான் சொன்ன வார்த்தைக்காக வானம்பாடிகள் & முகிலன் ஆகியோரிடம் மனம்வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மன்னிக்கவும்.(தோழமையுடன் UFO : Ubaidulla From Orathanadu)

//இருந்தும் தேடல் நம் கடமையே என்ற ப்ரக்ஞை கொண்டிருக்கிறேன்.//--மிக்க நன்றி. திரு.ஜெகநாதன், இந்த வரிதான் மீண்டும் இங்கே என்னை பின்னூட்ட வைத்தது.

//குறைக்க முயற்சி// என்றுதான் சொல்லி இருக்கிறேன்..... சிலர் 'குறைத்துவிட்டதாக' பேருவகை கொண்டு விட்டீர்களே... என்னத்த சொல்றது...

பதிவின் நோக்கம் பற்றி :அது சரியான குற்றச்சாட்டுதான். எனவே, உங்கள் பதிவை கொஞ்சம் அலசி விடுவோமா?

ஒருவன், 'எங்கும் சிகரட் பிடிக்க எனக்கு தனிமனித உரிமை இருக்கிறது' என்கிறான்.(சுயநலன் & பிறர்நலன் பேணா இவனை 'கெட்டவன்' என்கிறேன் நான்)
'அந்த சிகரட் புகை கலக்காத தூய காற்றை எங்கும் சுவாசிக்க எனக்கு தனிமனித உரிமை உள்ளது என்கிறான்'...ஒரு சிகரட் பிடிக்காதவன்.(சுயநலன் கொண்ட இவனை நல்லவன் என்கிறேன் நான்)
உலக நாடுகள் அனைத்தும் முதலாமவனின் தனிமனித உரிமையை மட்டுமே பேணுகின்றன. சில நாடுகள் வேண்டுமானால், பொது இடங்களில் மட்டும் சிகரட் பிடிக்க தடை போடுகின்றன. (அப்போ, வீட்டில் உள்ள சிகரட் பிடிக்காத அவன் குடும்பத்தினர் நாட்டின் குடிமக்கள் இல்லையா?) இச்சட்டம் மீறப்பட்டால் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. காரணம்: சிகரட் கம்பெனி கொடுக்கும் லஞ்சம் தனக்கு லாபம் என்பது மட்டுமே குறிக்கோள். இரண்டாமவனுக்கு ஆதரவாய் நின்றால் அதனால் சட்டமியற்றுவருக்கு எந்த வருவாயும் இல்லை..நஷ்ட்டம்.
சிகரட் புகை- சிகரட் பிடிப்பவருக்கும், அதை பிடிக்காத அந்த மாசுபட்ட காற்றை சுவாசிப்பவருக்கும் கேடு என்று ஒரு அரசு, "இனி சிகரட் குடிப்பது,விற்பது சட்டப்படி தவறு" என்று சட்டம் போட்டு நடைமுறைப்படுத்தினால் அதுதான் சுயநலன் பேணாத, பிறர்நலன்-மக்கள்நலன் பேணும் சிறந்த அரசு.
அதற்கு என்ன தண்டனையை தருவது?
அம்பது ரூபாய் அபராதம்? பணம் உள்ளவன் சிகரட் குடிப்பான். அம்பது ரூபாய் ஒரு பொருட்டா? குற்றம் ஒழியாது.
மூன்று வருடம் சிறை தண்டனை? ஓரளவு ஒழியும். அவ்வப்போது சிலர் கைதாகும்போதும், தீர்ப்பு வரும்போதும். ஆனால், சிறையில் சிகரட் குடிப்பான்.
தலை வெட்டு..... (சும்மா ஒரு பேச்சுக்கு)..... ??? விளைவு..?
ஒரு சட்டம் தீவிரமாய் அமல்படுத்தப்பட வேண்டுமானால் தண்டனை மிக கருமையாக இருத்தல் அவசியம். அப்படியானால், அடுத்தவன் செய்ய அஞ்சுவான். எவ்வளவு அச்சம் இருக்குமோ, அந்த அளவு, ‘அக்குற்றம் நடைபெறும் ரேட்’ ..... உடனே பூச்சியம் என்ற நிலைக்கு வரும்.
ஒவ்வொரு நாட்டிலும் ஒரே குற்றத்துக்கு ஒரே தண்டனை அளிக்கப்படுவது இல்லை. இதில் ஏதும் மாற்றுக்கருத்து உண்டா?
ஒரு நாட்டில் குற்றம் எனப்படுவது வேறொரு நாட்டில் குற்றம் என கருதப்படாது. இதில் ஏதும் மாற்றுக்கருத்து உண்டா?
ஒரு நாட்டில் குற்றம் எனப்படுவது வேறொரு நாட்டில் சட்டப்படி செய்தே ஆக வேண்டிய கட்டாயமாக இருக்கும். இதில் ஏதும் மாற்றுக்கருத்து உண்டா?
அந்த அடிப்படையில் இவ்விஷயத்தை இங்கே யாரும் அணுகவில்லை.
பொதுவாக இஸ்லாமிய சட்டம் கடுமையாக இருக்கும்...குற்றவாளிகளுக்கு..!!! உதாரணம், திருட்டுக்கு ‘கைவெட்டு’. இது குரானில் உள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இச்சட்டம் இப்போது கிடையாது. காரணம், சட்டமியற்றும் தலைவர்களே தங்கள் கைகளை இழக்க விரும்புவது இல்லை. இதை நடைமுறைப்படுத்தினால், நாட்டில் அனைவரும் கையில்லாமல் போய் விடுவார்களே என்று கவலைப்படுகிறீர்களா?
எனில்,நீங்கள்..
####சின்ன வயதில் ஒரு விடுகணக்கு போடுவார்கள். ஒரு மரத்தில் நூறு குருவி உட்கார்ந்து இருக்கு. ஒருத்தன் தன் துப்பாக்கியால் ஒரு குருவியை 'டுமீல்'என்று சுட்டு கொன்றுவிட்டால் மீதி எத்தனை குருவி அந்த மரத்தில் உட்கார்ந்து இருக்கும்..?#####
....இதற்கு ‘தொன்னூத்தி ஒம்போது’ என்று தப்பாக பதில் சொல்லி மாட்டி இருப்பீர்கள்... இன்றும் அப்படியேதானா?

சரியான பதில்: எல்லாமே பறந்துடும்..ஒண்ணுமே மரத்தில் உக்காந்து இருக்காது.

(தொடரும்....)

UFO said...

(பகுதி-2)
கைவெட்டுவதால், அந்த திருடனுக்கு ஒரு கை போய் விடுமே என்று பார்க்காது இஸ்லாம், மற்ற நல்லவர்கள் அனைவரும் திருட்டுபயம் அறவே இல்லாமல் இருப்பார்களே என்றுதான் பார்க்கும். குற்றவாளிகளுக்கு இஸ்லாத்தில் கருணை இல்லை. குற்றம் இழைக்கா நல்லாருக்கே சட்டம் பாதுகாப்பு தர வேண்டும் என்கிறது இஸ்லாம்.

''இந்த இடத்தில் ஒரு கைவெட்டினாலும் கவலைப்படாமல் அவனே மீண்டும் திருடினால்? மறுகை வெட்டப்படும். நவீன தொழில்நுட்ப புரட்சியால் போலி கைகளை பொருத்திக்கொண்டு நாளை மீண்டும் திருடினால்? ‘தலை வெட்டப்பட வேண்டும்’. இது குரானில் இல்லை. நான் ஓர் உதாரணமாகத்தான் கூறுகிறேன். இங்கு நோக்கம், திருடுக்கொடுக்கும் அப்பாவிகளின் உடமை இழக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே. திருடனின் தலை ஒரு போடுட்டே இல்லை'' இப்படி நினைத்து, தன்னை ஒரு இஸ்லாமிய நாடு என்று கூறிக்கொள்ளும் ஒரு நாடு, இச்சட்டம் போட்டு அது இஸ்லாமிய அடிப்படையில் போட்டதாக அந்நாடு கூறினால் அது ஷரியா சட்டம் எனப்படுகிறது. இச்சட்டத்தை ‘இஸ்லாமிய (ஷரியா) சட்டம்’ என்றழைக்காமல் அந்த நாட்டின் பெயரை சொல்லி ‘அந்நாட்டு சட்டம்’ என்று அழைத்தால் சிறப்பாக இருக்கும்.
இதேபோலத்தான்.....
அலி ஸிபாத்தின் குற்றத்துக்கு தலை எடுக்கும் சட்டம் குரானில் கிடையாது. அதை 'சவூதி அரபியா சட்டம்' என்றழைத்தால் சரியாக இருக்கும்.

இப்போது பதிவின் பிரச்சினைக்கு வருவோம்.

மேற்படி குற்றம் நடந்த இடம் சவூதி இல்லை. நடத்தியவர் லெபனான் நாட்டுகாரர்... அதுவும் லெபனானில். சவூதி சட்டம் லெபனான் நாட்டுக்காரருக்கு பொருந்தாது. பின் எப்படி அக்குற்றத்துக்கு சவூதி தண்டனை அளிக்க முடியும்? லெபனானை ஆளுகிறதா சவூதி? லெபனானில் நடந்த குற்றத்துக்கு சவுதியில் அவர் வந்தநேரம் தண்டனை தர முடியுமா? அதேநேரம் இந்த குற்றத்துக்கு லெபனானில் தண்டனை இருந்தும் லெபனான் கண்டுக்காமல் விட்டது தவறு மற்றும் அது நம் கவனத்துக்கு உரியது...(லெபனான் சட்டப்படி இக்குற்றத்துக்கு இரண்டுமாதம் சிறை தண்டனை உண்டு...!!!!)

இக்கேள்விக்கு நீண்ட ஒரு பதிவு அவசியம் அல்ல. கூகுள் சர்ச் கூட போதும். அதனால்தான் சொன்னேன், இதில் உங்கள் நோக்கம் விடைகான்பதைவிட இஸ்லாத்தை பகடி செய்வதே பிரதான நோக்கமாக இருக்கிறது என.

அலி ஸிபாத், பொய் சொல்லும் அடிப்படையில் பொதுமக்களிடம் நம்பிக்கை மோசடி செய்த ஏமாற்றுக்காரர். இதை நீங்கள் தெளிவாக புரிந்துகொண்டே, ஒரு ஏமாற்றுக்கார மோசடிப்பெர்வழியின் குடும்ப-குழந்தைகளுடன் உள்ள போட்டோவை போட்டு, 'பாருங்கள் இக்குடும்பத்தலவனான அப்பாவியின் தலையை வெட்ட போகிறார்கள்' என்று ஒரு குற்றவாளிக்கு ‘சிம்பதி’ கிரியேட் பண்ணி, இதற்கு சவுதியும் அதனை உருவாக்கிய இஸ்லாமும்தான் காரணம் என்றும் 'உங்கள் தலை பற்றி அக்கறை இல்லை இனி நான் சென்றால் என் தலையும் போய்விடும்' என்றும் ... என்னே இறைவனின் கருணை என எதற்கு பகடி பண்ண வேண்டும், பதிவிலும்,பின்னூட்டத்திலும்? சவுதியை எதிர்ப்பதுடன், இது இஸ்லாமா என்று கேள்வி கேட்பதுடன் நிருத்திக்கொண்டிருக்கலாம்.
(தொடரும்...)

UFO said...

(பகுதி-3)
பதிவின் முகமூடி கிழிபடும் இடங்கள்:

//வெள்ளியன்று (ஆமாம், புனித வெள்ளி தான்)//--???

//அலி சபாத் குறி சொல்லும் நிகழ்ச்சி நடத்தியது சரியா, பகுத்தறிவான செயலா என்ற கேள்விகளை விடுத்து,// --->>> நீங்கள் அழகாக தப்பிக்கும் இந்த இடத்தில் ஒரே ஒருவர் மட்டும் பின்னூட்டம் போட்டு உங்களை பிடித்து நிறுத்தியது சிறப்பானது:

//லெபனான்காரருக்கான மரணதண்டனையை எதிர்க்கும் அதே நேரத்தில்,நீங்கள் வாதாடுபவரின் செயல் உங்களை சிறந்த கிரிமினல் லாயராகவே நினைக்க தோன்றுகிறது.முக்கியமாக பகுத்தறிவை நேசிக்கும் நம்மைப்போன்றவர்கள் பில்லி,சூனியத்துக்கு சிபாரிசு செய்வது.//
(நன்றி- ராஜ நடராஜன் இதில் கிரிமினல் லாயர் என்ற வார்த்தை ‘எல்லாவற்றையும்’ விளக்கி விடுகிறது- எந்த ஒரு லாயரும் 'ஆதாயமின்றி' ஒரு கிரிமினலுக்கு ஆஜராக மாட்டார்)

//அவர் யார் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தியதாகவோ, பொது மக்கள் கூடும் இடங்களிலும் அலுவலகங்களிலும் குண்டு வைத்ததாகவோ இல்லை ஓடும் ரயிலில் பீக் அவரில் ஏறி குண்டு வைத்ததாகவோ தெரியவில்லை.// ---பல மக்களை பொய்சொல்லி மோசடி செய்து, பல குழப்பங்களை பலரிடம் ஏற்படுத்தி மன நிம்மதியிழக்கவைத்து, மனநோயாளியாக்கி.... இதெல்லாம்...?

//சம்பந்தப்பட்ட சவுதி அரசு, அல் குரானையே அரசியல் சட்டமாக அறிவித்திருக்கும் ஒரு நாடு. அங்கு சட்டம் என்றால் இஸ்லாமின் ஷரியா சட்டமே.//-- உங்களின் இக்கூற்று உண்மையா? மேலே விளக்கி உள்ளேன்.

//இது போன்ற சில்லறை குற்றங்களுக்கு// --இது முழுக்க உங்கள் சொந்த மதிப்பீடு. சிலருக்கு சில்லரைப்பிரச்சனை சிலருக்கு தலை போற பிரச்சனை...

விபச்சாரம்...இதை... விடுங்கள்...பல நாடுகளில் ஓரினச்சேர்க்கை-திருமணம் சட்டபூர்வமானது...! தெரியுமா? ஆனால், நம் நாட்டில்? ‘கோவா’ படத்தையே மக்கள் விமர்சனம் என்ற பெயரில் நார் நாராய் கிழித்து தொங்கவிட்டு விட்டனர். நிழலுக்கே இக்கதி.

//எல்லையற்ற அருளாளனால் அருளப்பட்டதாக சொல்லப்படும் குரானில் உண்மையிலேயே இப்படி உத்தரவுகள் இருக்கிறதா?//----என்று கேள்வி கேட்டுவிட்டு...பதில் பெறாமலேயே இதற்கு கமெண்டும்
//இப்படி சொல்லியிருந்தால் அது என்ன விதமான கருணை//..என
நீங்களே சொல்வது எனக்கு உங்கள் நோக்கத்தை தெரிவிக்கவில்லையா?...

//சரி, அல்குரான் சட்டம், அலி சபாத்தின் தலை என்று இதை கடந்து போய்விடலாம். ஆனால் உங்கள் தலைக்கு எப்படியோ இதில் என் தலைக்கு நிச்சயமாக ஆபத்து இருக்கிறது.// சவுதியிலோ, சவுதிமக்கள் பாதிக்கப்ப்படும்படி அரபி டிவி செனல்களிலோ, அப்படி என்ன குற்றம் செய்தீர்கள்?

//ச‌வுதியின் ஷரியா சட்டப்படி, அயல் நாட்டவர்களும் மாற்று மதத்தினவரும் கூட விதிவிலக்கல்ல. இதை படிக்கும் நீங்கள் எப்படியோ, ஆனால் எனக்கு இஸ்லாம் மீதோ அல்லது வேறு எந்த ஒரு மதத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்பதால் மது அருந்துதல், பன்றி மாமிசம் உண்ணுதல் போன்ற விஷயங்களை நான் விரும்பி கொண்டாட்டத்துடன் தான் செய்து கொண்டிருக்கிறேன். விரும்பி இல்லாவிட்டாலும் விழாக்களின் போது மற்றவர்களுக்காக கோவில்களுக்கும், சர்ச்சுக்கும் கூட செல்வது உண்டு. வேறு வழியின்றி முழங்காலிட்டோ இல்லை என்றைக்கும் கண் திறக்காத கல்சிலைகளின் முன் கைகட்டி நிற்பதும் கூட உண்டு.// --இப்போது இதே விஷயங்களை தங்கள் ஊரில் செய்த கிருத்துவர்கள், ஹிந்துக்கள், நாத்திகர்கள் சவுதியில் தங்கள் தலையுடன் வேலை செய்து கொண்டிருக்கவில்லையா?

//அப்படியானால் என்றைக்காவது சவுதி சென்றால் என் தலையும் துண்டாக்கப்படும் வாய்ப்புண்டா? உலகில் இருக்கும் அறுநூறு கோடி பேரில் சுமார் முப்பது சதவீதம் இஸ்லாமை கடைபிடிப்பவர்கள் என்று வைத்துக் கொண்டாலும் மீதி இருக்கும் சுமார் 420 கோடி பேர் நிலை என்ன? இப்படி தலைகளை துண்டித்துக் கொண்டே போனால் உலகத்தில் எத்தனை தலைகள் மிஞ்சும்?// மிக பிரபலமான ஏ.ஆர்.ரஹ்மானே பலமுறை சவூதி சென்று வந்துள்ளார்... சாமானியர்களுக்கு என்ன வந்தது..?

(தொடரும்...)

UFO said...

(பகுதி-4)

//தொடர்புடைய சுட்டிகள்:

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8598134.stm

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8600398.stm

http://edition.cnn.com/2010/WORLD/meast/03/31/saudi.arabia.sorcery/index.html

படம் உதவி: சி.என்.என் மற்றும் பிபிசி// --ஏன்? சவூதி/லெபனான்/மிடில் ஈஸ்ட் ஆகிய நாடுகளில் செய்தி நிருவனங்களே கிடையாதா?

அவர்கள் தரப்பு வாதம் என்ன என்று எதற்கு ஆராய வில்லை?

லெபனானில் ஒருவர் செய்த குற்றத்துக்கு சவுதியில் அவரை பொறுப்பேற்க வைக்க முடியாது. கைது செய்து தண்டிக்கவும் முடியாது. சவூதி செய்தது தவறு என்று ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால்...

ஒருவேளை, அந்த அலி ஸிபாத் சவூதி வந்த இடத்தில் தன் குறி சொல்லும் பிசினசை செய்திருந்தால்......?

அது சவூதி சட்டப்படி குற்றம் ஆயிற்றே?

(ஆமாம்...அதுதான் நடந்திருக்கிறது...)

எனில்.....

சவூதி தன் சட்டப்படி செய்தது சரி என்றாகிவிடுமே?

அதை சவூதி அல்லது மிடில் ஈஸ்ட் மீடியாக்களில் தேடிணீர்களா? நான் தேடி எடுத்து கொடுத்திருக்கிறேன் படித்து பாருங்கள்.

http://gulfnews.com/news/region/lebanon/family-of-lebanese-psychic-on-death-row-lives-in-fear-1.610220

கற்பழிப்பு, கொலை, ஆயுதங்களுடன் மிரட்டி கொள்ளை, போதைமருந்து கடத்தல்& விநியோகித்தல், குறி/ஜோசியம்/சூனியம் சொல்லுதல் போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனை சவுதியில். நம்நாட்டில் இல்லை. நம் நாட்டு சட்டங்களே எல்லா நாட்டிலும் இருக்கவேண்டும் என்றில்லை. பப்ளிக்கா ஆண்/பெண் என பலர் முன்னிலையில் ஸ்டைலாக நின்றுகொண்டு ஒண்ணுக்கு போவது நம் இந்தியர்களாகிய ஒவ்வொருவரின் பிறப்புரிமை. அது சவுதியில் சட்டப்படி தவறு. இதற்கு நாம் ஆதரிக்கும் சுற்றுப்புற சுகாதார சுத்தத்தை காரணம் சொல்லாமல், குரானை-ஹதீஸை காரனமாக்குகிறது சவூதி. உடன் அது நமக்கு அன்னியமாகிவிடுகிறதால், ஒரு மநிதனுக்கு //எல்லையற்ற அருளாளனால் அருளப்பட்டதாக சொல்லப்படும் குரானில் உண்மையிலேயே இப்படி உத்தரவுகள் இருக்கிறதா? இப்படி சொல்லியிருந்தால் அது என்ன விதமான கருணை?//இப்படி கேட்கிறோம். இறைவன் குற்றவாளிகளிடம் என்றுமே கருணை காட்டியது கிடையாது....அவர் தவறுனர்ந்து மனம்வருந்தி மன்னிப்பு கேட்பதுவரை....

பின் குறிப்பு:
நீங்கள் கேட்டதுக்கு இணங்க...இது என்னால் தரப்பட்ட விளக்கம். ஒரு முஸ்லிம் என்ற முறையில் என் கருத்துக்களை படிக்காது நடுநிலையுடன் படித்துணர வேண்டுகிறேன்.
அனைவருக்கும் நன்றி சகோதரர்களே....

vasu balaji said...

UFO said...
/லெபனானில் ஒருவர் செய்த குற்றத்துக்கு சவுதியில் அவரை பொறுப்பேற்க வைக்க முடியாது./
/கற்பழிப்பு, கொலை, ஆயுதங்களுடன் மிரட்டி கொள்ளை, போதைமருந்து கடத்தல்& விநியோகித்தல், குறி/ஜோசியம்/சூனியம் சொல்லுதல் போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனை சவுதியில். நம்நாட்டில் இல்லை./

80 வயது கிழவன் 13 வயது பெண்ணை மாலையில் மணந்து சுகித்துவிட்டு காலையில் தலாக் செய்தோ, சொல்லாமல் ஓடுவதோ சவுதியில் தண்டனைக்கு உரியதா இல்லையா. அப்படியானால் அதற்கென்ன தண்டனை. நீங்கள் சொன்னபடி இந்தியாவில் அவர் செய்த குற்றத்துக்கு சவுதியில் தண்டிக்க முடியாது. இந்தியாவில் கேஸ் இழுபட்டு, அல்லது கோர்ட்டுக்கு வெளியில் சமாதானமாக காசு கொடுத்து சரிகட்டி விட்டால் அது தவறில்லையா?

ஷரியா சட்டப்படியும் இவர்கள் செய்வது சரியில்லை, குரானின் வழிநடத்தல் படியும் செய்வது தப்பாகத் தோன்றுவதில்லையெனில் இவர்கள் இப்படி முறைதவறிச் செய்யும் காரியம் நடைபெறும் இடத்தை வைத்தே தீர்மானிக்கப் படவேண்டுமா என்ன?

இதையே ஒரு இந்திய முஸ்லிம் சவுதியில் செய்தால் அவருக்கு என்ன தண்டனை?

Hyderabad Marriyage scandal
Mass Wedding

என்னத்தச் சொல்லுவீங்களோ சொல்லுங்க சார்.

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...

//குறைக்க முயற்சி// என்றுதான் சொல்லி இருக்கிறேன்..... சிலர் 'குறைத்துவிட்டதாக' பேருவகை கொண்டு விட்டீர்களே... என்னத்த சொல்றது...

//

முன்னரே சொன்னது போல மதத்தின் மாண்பை குறைக்க யாரும் முயற்சிக்க வேண்டியதில்லை, அனபைத் தான் போதிக்கிறது என்ற போலி பகுத்தறிவாளர்களின் ஜல்லியடிப்பை விலக்கி விட்டு, அந்த மதம் உண்மையில் என்ன சொல்லியிருக்கிறது என்று எழுதினாலே போதும். Its very simple, really!

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...

பதிவின் நோக்கம் பற்றி :அது சரியான குற்றச்சாட்டுதான். எனவே, உங்கள் பதிவை கொஞ்சம் அலசி விடுவோமா?

ஒருவன், 'எங்கும் சிகரட் பிடிக்க எனக்கு தனிமனித உரிமை இருக்கிறது' என்கிறான்.(சுயநலன் & பிறர்நலன் பேணா இவனை 'கெட்டவன்' என்கிறேன் நான்)
'அந்த சிகரட் புகை கலக்காத தூய காற்றை எங்கும் சுவாசிக்க எனக்கு தனிமனித உரிமை உள்ளது என்கிறான்'...ஒரு சிகரட் பிடிக்காதவன்.(சுயநலன் கொண்ட இவனை நல்லவன் என்கிறேன் நான்)
உலக நாடுகள் அனைத்தும் முதலாமவனின் தனிமனித உரிமையை மட்டுமே பேணுகின்றன.
//

தனி மனித உரிமைகளைப் பற்றி நீங்கள் பேசும் போது,மன்னிக்க, எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வருகிறது. அதே சமயம், இஸ்லாமையும், முகமதுவையும் நம்பாதவர்கள், பின்பற்றாத தனிமனிதர்கள் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்ற கேள்வியும் வருகிறது. ஒரு டேனிஷ் கார்ட்டூனிஸ்டுக்கும், சல்மான் ருஷ்டிக்கும் மரண தண்டனை இஸ்லாத்தின் பேரில் விதிக்கப்படும் போது, கார்ட்டூன் வரைவது மரண தண்டனைக்குரிய குற்றமா, அது என்ன விதமான மனித உரிமையை பேணல் என்ற கேள்வியும் எழுகிறது.

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...


சில நாடுகள் வேண்டுமானால், பொது இடங்களில் மட்டும் சிகரட் பிடிக்க தடை போடுகின்றன. (அப்போ, வீட்டில் உள்ள சிகரட் பிடிக்காத அவன் குடும்பத்தினர் நாட்டின் குடிமக்கள் இல்லையா?) இச்சட்டம் மீறப்பட்டால் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. காரணம்: சிகரட் கம்பெனி கொடுக்கும் லஞ்சம் தனக்கு லாபம் என்பது மட்டுமே குறிக்கோள். இரண்டாமவனுக்கு ஆதரவாய் நின்றால் அதனால் சட்டமியற்றுவருக்கு எந்த வருவாயும் இல்லை..நஷ்ட்டம்.
சிகரட் புகை- சிகரட் பிடிப்பவருக்கும், அதை பிடிக்காத அந்த மாசுபட்ட காற்றை சுவாசிப்பவருக்கும் கேடு என்று ஒரு அரசு, "இனி சிகரட் குடிப்பது,விற்பது சட்டப்படி தவறு" என்று சட்டம் போட்டு நடைமுறைப்படுத்தினால் அதுதான் சுயநலன் பேணாத, பிறர்நலன்-மக்கள்நலன் பேணும் சிறந்த அரசு.
அதற்கு என்ன தண்டனையை தருவது?
அம்பது ரூபாய் அபராதம்? பணம் உள்ளவன் சிகரட் குடிப்பான். அம்பது ரூபாய் ஒரு பொருட்டா? குற்றம் ஒழியாது.
மூன்று வருடம் சிறை தண்டனை? ஓரளவு ஒழியும். அவ்வப்போது சிலர் கைதாகும்போதும், தீர்ப்பு வரும்போதும். ஆனால், சிறையில் சிகரட் குடிப்பான்.
தலை வெட்டு..... (சும்மா ஒரு பேச்சுக்கு)..... ??? விளைவு..?
ஒரு சட்டம் தீவிரமாய் அமல்படுத்தப்பட வேண்டுமானால் தண்டனை மிக கருமையாக இருத்தல் அவசியம். அப்படியானால், அடுத்தவன் செய்ய அஞ்சுவான். எவ்வளவு அச்சம் இருக்குமோ, அந்த அளவு, ‘அக்குற்றம் நடைபெறும் ரேட்’ ..... உடனே பூச்சியம் என்ற நிலைக்கு வரும்.
//

சிகரெட் பிடிப்பதற்கும், இசையை ஒலி/ஒளிபரப்புவதற்கும் தலையை வெட்டுவது என்பது இஸ்லாமிய நாடுகளுக்கு வேண்டுமானால் எளிதாக/பழக்கமான விஷயமாக இருக்கலாம், ஆனால் நாகரீகம் அடைந்த நாடுகளில் அது சாத்தியமில்லை.

ஏனெனில், குற்றத்தின் அளவுக்கும், நோக்கத்துக்கும் ஏற்ப தண்டனை என்பதே இங்கு நடைமுறை. நாடுகளை பற்றி பேசும் போது, உங்களுக்கு ஒரு கேள்வி, ஜனநாயக ஆட்சி முறை பற்றி குரான் என்ன சொல்கிறது?? அவை ஒழிக்கப்பட வேண்டும், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எந்த ஆட்சி முறையும் அழிக்கப்பட வேண்டும், அல்லாவால் அனுமதிக்கப்பட்ட, ஷரியத்தையும் குரானையும் ஏற்றுக் கொள்ளும் ஆட்சி மட்டுமே அனுமதிக்கப்படும் என்று சொல்கிறதா இல்லையா?? அதே சமயம், எப்படி உங்களால் கூசாது மனித உரிமை பற்றி பேச முடிகிறது??

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...

ஒவ்வொரு நாட்டிலும் ஒரே குற்றத்துக்கு ஒரே தண்டனை அளிக்கப்படுவது இல்லை. இதில் ஏதும் மாற்றுக்கருத்து உண்டா?
ஒரு நாட்டில் குற்றம் எனப்படுவது வேறொரு நாட்டில் குற்றம் என கருதப்படாது. இதில் ஏதும் மாற்றுக்கருத்து உண்டா?
//

ஒரு குற்றத்திற்கு எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியான தண்டனை இல்லை, உண்மை தான். ஆனால், குற்றத்தின் அளவுக்கு ஏற்ப தண்டனை என்பதே நடைமுறை. இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டா?

//
ஒரு நாட்டில் குற்றம் எனப்படுவது வேறொரு நாட்டில் சட்டப்படி செய்தே ஆக வேண்டிய கட்டாயமாக இருக்கும். இதில் ஏதும் மாற்றுக்கருத்து உண்டா?
அந்த அடிப்படையில் இவ்விஷயத்தை இங்கே யாரும் அணுகவில்லை.
பொதுவாக இஸ்லாமிய சட்டம் கடுமையாக இருக்கும்...குற்றவாளிகளுக்கு..!!!
//

அடடா....விஷயம் அந்த "குற்றவாளிகளுக்கு" என்ற விஷயத்தில் தான் இருக்கிறது. இஸ்லாம் எதையெல்லாம் குற்றம் என்று சொல்கிறது?? அதில் மிக முக்கியமான குற்றம் எது என்று உங்களுக்கு தெரியுமா? (தெரியாவிட்டால் நான் சொல்கிறேன், பின்னர்!)

//
உதாரணம், திருட்டுக்கு ‘கைவெட்டு’. இது குரானில் உள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இச்சட்டம் இப்போது கிடையாது. காரணம், சட்டமியற்றும் தலைவர்களே தங்கள் கைகளை இழக்க விரும்புவது இல்லை. இதை நடைமுறைப்படுத்தினால், நாட்டில் அனைவரும் கையில்லாமல் போய் விடுவார்களே என்று கவலைப்படுகிறீர்களா?
எனில்,நீங்கள்..
//

என்னை திருடனா என்று கேட்க நினைத்தால் நேரடியாக கேட்கலாம். என்னைப் பற்றி எனக்கு தெரியும் என்பதால் நான் அதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். திருட்டுக்கு கை வெட்டு என்று யாரும் சட்டம் இயற்றுவதில்லை, முன்னரே சொன்னது போல அது குற்றத்தின் அளவை மீறி தண்டனை வழங்கும் பழக்கம், பழங்குடி மனநிலை. உலகின் பல்வேறு நாடுகள் காட்டில் குகையில் வசித்து உணவுக்கு வேட்டையாடி கையை வெட்டும் தலையை வெட்டும் நிலையை கடந்து நாகரீகத்தில் மேலே வந்து விட்டார்கள்.

ஆனால், இஸ்லாமில் அப்படித் தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்...உண்மையில், இஸ்லாமுக்கும் எனக்குமான பிரச்சினை இங்கு தான் ஆரம்பிக்கிறது (அது ஆரம்பம் மட்டுமே, இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன)...கடந்த இரண்டாயிரம் வருடமாக முயற்சித்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்த மனநிலையை இஸ்லாம் ஒரேடியாக அறுபதாயிரம் வருடங்களுக்கு பின்னால் இழுக்கிறது.

மீண்டும் குகையில் வசித்து சோற்றுக்கு போராடி, கையை வெட்டி தலையை வெட்டி வாழ எனக்கு விருப்பமில்லை! அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்புவர்கள் உடனடியாக ஆஃப்கனிஸ்தான் சென்று பார்க்கலாம். அங்கு தலிபான்கள் ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று கேட்கலாம்...


(தொடரும்!)

அது சரி(18185106603874041862) said...

//
கைவெட்டுவதால், அந்த திருடனுக்கு ஒரு கை போய் விடுமே என்று பார்க்காது இஸ்லாம், மற்ற நல்லவர்கள் அனைவரும் திருட்டுபயம் அறவே இல்லாமல் இருப்பார்களே என்றுதான் பார்க்கும். குற்றவாளிகளுக்கு இஸ்லாத்தில் கருணை இல்லை. குற்றம் இழைக்கா நல்லாருக்கே சட்டம் பாதுகாப்பு தர வேண்டும் என்கிறது இஸ்லாம்.
//

சரி, UFஓ அவர்களே,

குரானில் எதெல்லாம் குற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று நீங்களே ஒரு லிஸ்ட் போடுங்கள், அவற்றின் தண்டனை பற்றி குரான் சொல்வதையும் போடுங்கள்.

அதன் பின், யார் குற்றம் இழைக்கிறார்கள் என்று பார்க்கலாம். Are you ready for that?

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...

ஒரு நாடு, இச்சட்டம் போட்டு அது இஸ்லாமிய அடிப்படையில் போட்டதாக அந்நாடு கூறினால் அது ஷரியா சட்டம் எனப்படுகிறது. இச்சட்டத்தை ‘இஸ்லாமிய (ஷரியா) சட்டம்’ என்றழைக்காமல் அந்த நாட்டின் பெயரை சொல்லி ‘அந்நாட்டு சட்டம்’ என்று அழைத்தால் சிறப்பாக இருக்கும்.
//

ஆனால் ஒரு இஸ்லாமிய நாடு போடும் எல்லா சட்டங்களும் குரானில் சொல்லியிருப்பதை ஒட்டி இருக்கிறதா என்பது அந்த சட்டத்தை அளக்கும் அளவுகோல். அதாவது, குரானை மீறி எந்த ஒரு இஸ்லாமிய நாடும் சட்டம் போட்டு விட முடியாது. அப்படி செய்தால் அது இஸ்லாமிய நாடே இல்லை, இது உண்மையா இல்லையா??

ஆக, எல்லா ஷரியத் சட்டங்களும் அடிப்படை குரான் தான், இல்லை என்று மறுப்பீர்களா??

ஆக, தலை வெட்டும் சட்டம், குரானை அரசியல் சட்டமாகவே செய்திருக்கும் சவுதி அரேபியாவின் தன்னிச்சையான சட்டமல்ல, குரானின் சட்டமே என்றே என்னால் முடிவு செய்ய முடிகிறது!

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...

இதேபோலத்தான்.....
அலி ஸிபாத்தின் குற்றத்துக்கு தலை எடுக்கும் சட்டம் குரானில் கிடையாது. அதை 'சவூதி அரபியா சட்டம்' என்றழைத்தால் சரியாக இருக்கும்.

//

Got to say, I really like this....

மற்ற எல்லா இடத்திலும் நீட்டி முழக்கிய நீங்கள், இந்த இடத்தில்,
அலி ஸிபாத்தின் குற்றத்துக்கு தலை எடுக்க குரானில் சட்டமில்லை என்று வெண்ணையில் ஊற்றிய விளக்கெண்ணை போல ஒற்றை வரியில் தப்பிக்கிறீர்கள்...

குரான் என்ன சொல்கிறது என்றும் சொல்லியிருக்கலாமே?? சொன்னால் எல்லையற்ற அருளாளனின் முகத்திரை கிழிந்து தொங்கும் என்று கடந்து போய் விட்டீர்களா?

சரி, நான் சொல்கிறேன். இஸ்லாத்தில் மன்னிக்கப்படவே முடியாத குற்றம் என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?? ஷிர்க் (Shirk) என்று சொல்வார்கள். எவையெல்லாம் ஷிர்க் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, அல்லாவை தவிர மற்றவர்களை, மற்றவைகளை(மிஸ்டிக் பவர்ஸ், முன்னோர்கள் வழிபாடு) நம்புவது.

முஸ்லிம்கள் இன்ஷா அல்லா என்று சொல்வதற்கும், அலி சிபாத்தின் தலை வெட்டும் தண்டனைக்கும் அடிப்படை இதுவே. அல்லா விருப்பத்தின் பேரில் நடக்கிறது என்று சொல்லாவிட்டால் அது மனித முயற்சியின் பேரில் நடக்கிறது என்று அவர்கள் (உண்மையை) ஒப்புக் கொண்டவர்களாகி விடுவார்கள்...அது ஷிர்க். அதை தவிர்க்கவே இன்ஷா அல்லா!

ஆக சவுதி அரேபியாவின் சட்டம், நீங்கள் சொல்வது போல அந்த நாடு தன்னிச்சையாக ஏற்படுத்திய சட்டமல்ல! குரானால் சொலல்ப்பட்ட சட்டம், இது உண்மையா இல்லையா??

ஆக நீங்கள் முஸ்லிமாக இருந்தால், அல்லா விருப்பத்தின் பேரிலேயே அபுசிபாத்தின் தலை வெட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா??

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...

இப்போது பதிவின் பிரச்சினைக்கு வருவோம்.

மேற்படி குற்றம் நடந்த இடம் சவூதி இல்லை. நடத்தியவர் லெபனான் நாட்டுகாரர்... அதுவும் லெபனானில். சவூதி சட்டம் லெபனான் நாட்டுக்காரருக்கு பொருந்தாது. பின் எப்படி அக்குற்றத்துக்கு சவூதி தண்டனை அளிக்க முடியும்? லெபனானை ஆளுகிறதா சவூதி? லெபனானில் நடந்த குற்றத்துக்கு சவுதியில் அவர் வந்தநேரம் தண்டனை தர முடியுமா? அதேநேரம் இந்த குற்றத்துக்கு லெபனானில் தண்டனை இருந்தும் லெபனான் கண்டுக்காமல் விட்டது தவறு மற்றும் அது நம் கவனத்துக்கு உரியது...(லெபனான் சட்டப்படி இக்குற்றத்துக்கு இரண்டுமாதம் சிறை தண்டனை உண்டு...!!!!)


//

லெபனான் சட்டப்படி அது குற்றமெனில், இரண்டு மாதம் சிறை தண்டனை தந்திருந்தால் அது பெரிய விஷயமாகி இருக்காது.....ஆனால், தலை வெட்டி தண்டனை???

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...

இக்கேள்விக்கு நீண்ட ஒரு பதிவு அவசியம் அல்ல. கூகுள் சர்ச் கூட போதும். அதனால்தான் சொன்னேன், இதில் உங்கள் நோக்கம் விடைகான்பதைவிட இஸ்லாத்தை பகடி செய்வதே பிரதான நோக்கமாக இருக்கிறது என.
//

ஓ!

பகடி செய்வது என்ற சொல்லுக்கு நக்கல் செய்வது, காமெடி செய்வது என்று ஒரு பொருள் உண்டு.

பகடி செய்வது நோக்கமல்ல, ஆனால் அன்பை போதிக்கிறது என்று பதிவர்களும் இன்னும் பலரும் ஜல்லியடிக்கும் ஒரு மதம் எந்த அளவு "அன்பை" கொட்டுகிறது என்று கேள்வி எழுப்புவதே நோக்கம்.

ஆனால், பகடி செய்ய வேண்டியிருந்தால், அதை செய்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மிக நேரடியாகவே செய்வேன்!

//

அலி ஸிபாத், பொய் சொல்லும் அடிப்படையில் பொதுமக்களிடம் நம்பிக்கை மோசடி செய்த ஏமாற்றுக்காரர். இதை நீங்கள் தெளிவாக புரிந்துகொண்டே, ஒரு ஏமாற்றுக்கார மோசடிப்பெர்வழியின் குடும்ப-குழந்தைகளுடன் உள்ள போட்டோவை போட்டு, 'பாருங்கள் இக்குடும்பத்தலவனான அப்பாவியின் தலையை வெட்ட போகிறார்கள்' என்று ஒரு குற்றவாளிக்கு ‘சிம்பதி’ கிரியேட் பண்ணி, இதற்கு சவுதியும் அதனை உருவாக்கிய இஸ்லாமும்தான் காரணம் என்றும் 'உங்கள் தலை பற்றி அக்கறை இல்லை இனி நான் சென்றால் என் தலையும் போய்விடும்' என்றும் ... என்னே இறைவனின் கருணை என எதற்கு பகடி பண்ண வேண்டும், பதிவிலும்,பின்னூட்டத்திலும்? சவுதியை எதிர்ப்பதுடன், இது இஸ்லாமா என்று கேள்வி கேட்பதுடன் நிருத்திக்கொண்டிருக்கலாம்.
//

அலி ஸிபாத் மோசடிக்காரர் என்று சொல்லும் முன், அவர் தெரு தெருவாக போய், கூவி கூவி வியாபாரம் செய்யவில்லை...அவரிடன் டெலிவிஷன் ஷோவில் கேள்வி கேட்ட மக்களுக்கு பதில் சொல்லியே பிரபலமானார் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்?? அவர்களின் தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் எல்லாம் தெரிந்த அல்லாவும் முகமதுவும் அருளிய குரான் ஏன் பதில் சொல்ல முடியவில்ல்லை??

ஆனாலும் கூட, அலி ஸிபாத் அப்பாவி என்று நான் எங்கும் சொல்லவில்லை...அதே சமயம், ஜோசியம் சொன்னானா, அவன் தலையை வெட்டு என்ற பழங்குடி, காட்டுமிராண்டி சட்டங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, அது அல்லாவே சொன்னாலும் சரி!

இந்த சட்டத்துக்க்கும் தண்டனைக்கும் அடிப்படை சவுதி அரேபியாவும், அதன் அடிப்படையாக இருக்கும் இஸ்லாமும் எனும் போது அதை விடுத்து எப்படி கேள்வி எழுப்ப முடியும்?? கையை எடு, காலை எடு என்று இருப்பதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள், அப்படி இருக்க, இஸ்லாம் அன்பையே போதிக்கிறது என்று ஜல்லியடிப்பது போலி முற்போக்கு பதிவர்களுக்கு வேண்டுமானால் சரியாக வரும், எனக்கு வராது! ஏனெனில் நான் முற்போக்கும் இல்லை, போலியும் இல்லை!

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...
(பகுதி-3)
பதிவின் முகமூடி கிழிபடும் இடங்கள்:

//வெள்ளியன்று (ஆமாம், புனித வெள்ளி தான்)//--???
//

கிழிவதற்கு இங்கு எங்கு முகமூடி இருக்கிறது?? நான் எதுவும் பர்தா போடவில்லை!

நான் இஸ்லாத்தை மதிக்கிறேன், எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்று சொல்லி விட்டு கேள்வி எழுப்பினால் அது முகமூடி, ஆனால் என் இடுகையில் மிகத் தெளிவாக இருக்கிறது. " எனக்கு இஸ்லாம் மீதோ அல்லது வேறு எந்த ஒரு மதத்தின் மீதோ நம்பிக்கை இல்லை". இதற்கு மேல் எப்படி தெளிவாக சொல்ல முடியும்?? மாற்று பழக்கங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதை என்னால் இப்படித் தான் சொல்ல முடியும். ஃபத்வா விதிப்பது எனக்கு பிடிக்காத ஒன்று!

புனித வெள்ளி என்று அழுத்தமாகத் தான் குறிப்பிட்டிருக்கிறேன், முகமூடிக்கு பின் ஒளிந்து கொண்டு அல்ல. ஏனெனில் ஒன்று அன்றைக்கு உண்மையிலேயே புனித வெள்ளி (Good Friday). இங்கு பிரிட்டனில் மக்கள் எல்லாரும் நீண்ட விடுமுறையில் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம். அதே சமயம், உலகில் இருக்கும் எல்லா இஸ்லாமியர்களுக்கும் வெள்ளிக்கிழமை முக்கியமான ஒன்று, அலி ஸிபாத் அவரது நம்பிக்கையின் படி ஒரு முஸ்லிம். அன்றைக்கு தான் அவரது தலை வெட்டப்படுவதாக இருந்தது!

இப்பொழுது புரிகிறதா அந்த அழுத்தத்தின் காரணம்??

If you think I am a Christian, just because that word Good Friday, you got me laughing, once again!

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...
(பகுதி-3)
நீங்கள் அழகாக தப்பிக்கும் இந்த இடத்தில் ஒரே ஒருவர் மட்டும் பின்னூட்டம் போட்டு உங்களை பிடித்து நிறுத்தியது சிறப்பானது:

//லெபனான்காரருக்கான மரணதண்டனையை எதிர்க்கும் அதே நேரத்தில்,நீங்கள் வாதாடுபவரின் செயல் உங்களை சிறந்த கிரிமினல் லாயராகவே நினைக்க தோன்றுகிறது.முக்கியமாக பகுத்தறிவை நேசிக்கும் நம்மைப்போன்றவர்கள் பில்லி,சூனியத்துக்கு சிபாரிசு செய்வது.//
(நன்றி- ராஜ நடராஜன் இதில் கிரிமினல் லாயர் என்ற வார்த்தை ‘எல்லாவற்றையும்’ விளக்கி விடுகிறது- எந்த ஒரு லாயரும் 'ஆதாயமின்றி' ஒரு கிரிமினலுக்கு ஆஜராக மாட்டார்)

//


அடடா...நீங்கள் புல்லரிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தது குறித்து எனக்கு மகிழ்ச்சியே.

பகுத்தறிவு வேண்டும் என்று சொல்லும் அதே நேரத்தில், மூட நம்பிக்கையை பின்பற்றுபவர்களின் தலையை வெட்ட வேண்டும் என்று எந்த பகுத்தறிவாளனும் ஒப்புக் கொள்ள மாட்டான். அப்படி சொன்னால் அவன் பகுத்தறிவாளன் இன்ன பிற மயிரென்ன, மனிதன் கூட அல்ல.

இந்தியாவில் பல ஆயிரம் ஜோசியர்கள் இருக்கிறார்கள்...குறி சொல்பவர்கள் இருக்கிறார்கள்...எல்லா மாரியம்மன் திருவிழாவிலும் யாராவது ஒரு பெண்ணுக்கு சாமி(????) வருகிறது.. அவர்களும் அருள்வாக்குகளை அள்ளி விடுகிறார்கள்...அதற்காக அவர்கள் தலையை வெட்டி விடுங்கள் என்று சொல்லும் காட்டுமிராண்டித் தனம் தான் பகுத்தறிவு என்றால் அந்த பகுத்தறிவாளன் நான் அல்ல! அப்படி ஒரு மயிரு பட்டமே எனக்கு வேண்டாம்! நானும் என்னை பகுத்தறிவாளன் என்று ஒரு போதும் சொல்லிக் கொள்வதில்லை, பகுத்தறிவை நேசிக்கிறேன் என்று ஒரு போதும் அறிக்கை விடவும் இல்லை!

ஆதாயம் தானே?? இருக்கிறது...அலி ஸிபாத்துக்கு ஆதரவாக இஸ்லாமையும், சவுதி அரேபியாவையும் கேள்விக்குள்ளாக்கி ஐம்பது பேர் படிக்கும் என் பதிவில் எழுதினால், எனக்கு நான் செத்த பின்பு ஏழு கன்னி பெண்களை அனுப்பி வைப்பதாக சொல்லியிருக்கிறார்கள்...போதுமா?? (ஆனால், செத்த பின்பு அனுப்பினால் அவர்களை வைத்து என்ன செய்வது என்று தான் எனக்கு தெரியவில்லை...அறிந்தவர்கள் சொன்னால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...குரானில் கூட இது வருகிறதாமே?? கூடவே வரும் இன்னொரு கேள்வி, அப்படி நான் "ஏதாவது" செய்த பின்பும் அவர்கள் கன்னிப் பெண்களா இல்லையா? மற்றவர்களிடன் "அனுப்பி" வைக்கப்படுவார்களா இல்லையா? இல்லாவிட்டால், அதற்கு பின் அவர்கள் கதி என்ன?)

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...
//இது போன்ற சில்லறை குற்றங்களுக்கு// --இது முழுக்க உங்கள் சொந்த மதிப்பீடு. சிலருக்கு சில்லரைப்பிரச்சனை சிலருக்கு தலை போற பிரச்சனை...


//


மிக நிச்சயமாக தலை போகிற பிரச்சினை தான்...கண்டிப்பாக அலி ஸிபாத்துக்கும், எல்லா மனிதர்களும் பிறக்கும் போது இஸ்லாமியராக பிறந்தவர்கள் என்று அறிவிக்கும் இஸ்லாமுக்கும்!

ஒவ்வொரு மனிதர்களும் தனி மனிதர்கள், அவரவர் விரும்பிய மதத்தையும், பழக்க வழக்கங்களையும் செய்ய முழு உரிமை படைத்தவர்கள் என்று நம்பும் என்னைப் போன்றவர்களுக்கு இது சில்லறை பிரச்சினை, ஒரு மத அமைப்பு மனிதனை தன் அடிமையாக நடத்தும் பிரச்சினை!

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...
---பல மக்களை பொய்சொல்லி மோசடி செய்து, பல குழப்பங்களை பலரிடம் ஏற்படுத்தி மன நிம்மதியிழக்கவைத்து, மனநோயாளியாக்கி.... இதெல்லாம்....

//

முன்னரே பதில் சொல்லியிருக்கிறேன்.

உங்கள் குரானும், முகமதுவும், அல்லாவும் தீர்க்க முடியாத, விடை சொல்ல முடியாத பிரச்சினைகள் என்று நினைத்து மக்கள் அலி ஸிபாத் தீர்த்து வைப்பார் என்று நம்பியிருக்கிறார்கள்...இல்லாவிட்டால் எதற்கு டெலிவிஷன் ஸ்டேஷனுக்கு அழைக்க வேண்டும்?? அல்லாவை அழைத்திருப்பார்களே??

ஆக, மக்களின் பார்வையில் அல்லாவை விட, அலி ஸிபாத் வல்லமை உடையவராக மாறி இருக்கிறார்....அது தான் இந்த ஒட்டுமொத்த விஷயத்தின் பிரச்சினை!

இதற்கு தீர்வு அலி ஸிபாத்தின் தலையை வெட்டுவதல்ல, அவர்களின் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு சொல்வது தான்!

அது சரி(18185106603874041862) said...

//
UFO said...
விபச்சாரம்...இதை... விடுங்கள்...பல நாடுகளில் ஓரினச்சேர்க்கை-திருமணம் சட்டபூர்வமானது...! தெரியுமா? ஆனால், நம் நாட்டில்? ‘கோவா’ படத்தையே மக்கள் விமர்சனம் என்ற பெயரில் நார் நாராய் கிழித்து தொங்கவிட்டு விட்டனர். நிழலுக்கே இக்கதி.


//

ஓரினச் சேர்க்கை சட்டபூர்வமானது என்று பிரிட்டனில் இருக்கும் எனக்கு நீங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்பு என்ற முறையில் அதை முழுமையாக ஆதரிப்பவர்களில் நானும் ஒருவன். நாங்கள் ஒன்றும் குரான் சொல்வதே சட்டம் என்று இருப்பதில்லை என்பதால் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் தலையிடுவதில் எங்களுக்கு விருப்பமில்லை!

கோவா படம் பற்றி நீங்கள் சொல்வதில் ஒரு முக்கிய விஷயம்...நார் நாராய் கிழித்து தொங்க விட்டார்களே தவிர, படத்தில் நடித்தவர்களுக்கும், இயக்குனருக்கும், தயாரித்தவருக்கும் ஃபத்வா விதித்து அவர்களின் தலையை வெட்ட சொல்லி உத்தரவிடவில்லை! விமர்சிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு என்ற அடிப்படையில் அவர்கள் நார் நாராய் என்ன டார் டாராய் கிழிக்கவும் உரிமை உண்டு, பொதுவில் வைக்கப்படும் எதுவும் எவனும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவனவல்ல...குரானும், அல்லாவும் கூட இதில் அடக்கம்!

(அது இருக்கட்டும், ஓரினச் சேர்க்கை, குதப்புணர்ச்சி பற்றி குரான் என்ன சொல்ற்கிறது, அதன் தண்டனை என்ன என்றும் நீங்கள் சொல்லி இருக்கலாமே?? இஸ்லாமின் மாண்பை உயர்த்த உங்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்குமே??)

அது சரி(18185106603874041862) said...

//
//எல்லையற்ற அருளாளனால் அருளப்பட்டதாக சொல்லப்படும் குரானில் உண்மையிலேயே இப்படி உத்தரவுகள் இருக்கிறதா?//----என்று கேள்வி கேட்டுவிட்டு...பதில் பெறாமலேயே இதற்கு கமெண்டும்
//இப்படி சொல்லியிருந்தால் அது என்ன விதமான கருணை//..என
நீங்களே சொல்வது எனக்கு உங்கள் நோக்கத்தை தெரிவிக்கவில்லையா?...
//

எல்லையற்ற அருளாளனின் அடிமையாகவோ அடியாளாகவோ ஆவது என் நோக்கமல்ல...

ஆனால், கையை வெட்டு, காலை வெட்டு என்று சொல்பவன் எப்படி எல்லையற்ற அருளாளன் ஆக முடியும்?? தன்னை ஏற்று தனக்கு அடிமையானவர்களுக்கு மட்டுமே கருணை காட்டுவானாகில் அவன் எப்படி எல்லையற்ற அருளாளன்??

உங்களுக்கு தெரியுமா, மக்களுக்கு எதுவுமே செய்யாத மோசமான அரசியல்வாதி கூட தனது அல்லக்கைகளுக்கு கருணை காட்டுவான்...

நான் எவனுக்கும் அல்லைக்கையுமில்லை, அப்படி ஒரு கருணை எனக்கு தேவையுமில்லை! நானாச்சு, அவனாச்சு, மயிரே போச்சு! போதுமா?

அது சரி(18185106603874041862) said...

//
//சரி, அல்குரான் சட்டம், அலி சபாத்தின் தலை என்று இதை கடந்து போய்விடலாம். ஆனால் உங்கள் தலைக்கு எப்படியோ இதில் என் தலைக்கு நிச்சயமாக ஆபத்து இருக்கிறது.// சவுதியிலோ, சவுதிமக்கள் பாதிக்கப்ப்படும்படி அரபி டிவி செனல்களிலோ, அப்படி என்ன குற்றம் செய்தீர்கள்?
//

அடடே...

சவுதி டிவியிலோ இல்லை சவுதி மக்கள் பாதிக்கும்படி ஏதேனும் செய்தாலோ தான் குற்றம் என்று குரான் சொல்கிறதா??

நீங்கள் உண்மையிலேயே குரான் படித்திருக்கிறீர்களா இல்லையா?? இல்லாவிட்டால், தயவு செய்து படித்துப் பாருங்கள்...

அது சரி(18185106603874041862) said...

//
//ச‌வுதியின் ஷரியா சட்டப்படி, அயல் நாட்டவர்களும் மாற்று மதத்தினவரும் கூட விதிவிலக்கல்ல. இதை படிக்கும் நீங்கள் எப்படியோ, ஆனால் எனக்கு இஸ்லாம் மீதோ அல்லது வேறு எந்த ஒரு மதத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்பதால் மது அருந்துதல், பன்றி மாமிசம் உண்ணுதல் போன்ற விஷயங்களை நான் விரும்பி கொண்டாட்டத்துடன் தான் செய்து கொண்டிருக்கிறேன். விரும்பி இல்லாவிட்டாலும் விழாக்களின் போது மற்றவர்களுக்காக கோவில்களுக்கும், சர்ச்சுக்கும் கூட செல்வது உண்டு. வேறு வழியின்றி முழங்காலிட்டோ இல்லை என்றைக்கும் கண் திறக்காத கல்சிலைகளின் முன் கைகட்டி நிற்பதும் கூட உண்டு.// --இப்போது இதே விஷயங்களை தங்கள் ஊரில் செய்த கிருத்துவர்கள், ஹிந்துக்கள், நாத்திகர்கள் சவுதியில் தங்கள் தலையுடன் வேலை செய்து கொண்டிருக்கவில்லையா?
//

"தங்கள் ஊரில் செய்தவர்கள்"!!!

நீங்கள் சொல்வதில் ஒரு முக்கிய உண்மை இருக்கிறது...இதே விஷயங்களை அவர்கள் சவுதியில் செய்ய முடியுமா?

உதாரணத்திற்கு, சௌதியில் குரானை கேள்வி கேட்டு ஒரு கூட்டம் நடத்த முடியுமா? நக்கல் செய்து ஒரு டிவி நிகழ்ச்சி நடத்த முடியுமா? அப்படி செய்து விட்டு, தலையுடன் நடமாட முடியுமா?? அப்புறம் ஏன் அன்பை போதிக்கும் மதம் என்று அள்ளி விடுகிறீர்கள்??

அவ்வளவு ஏன், சௌதியில் எங்கே பன்றிக் கறி கிடைக்கும்?? சொன்னால் உண்மையிலேயே நன்றி...நான் எப்போதவாது சவுதி (no, i dont want to go there!) போனால், வாங்க வசதியாக இருக்கும்...

அது சரி(18185106603874041862) said...

//
//அப்படியானால் என்றைக்காவது சவுதி சென்றால் என் தலையும் துண்டாக்கப்படும் வாய்ப்புண்டா? உலகில் இருக்கும் அறுநூறு கோடி பேரில் சுமார் முப்பது சதவீதம் இஸ்லாமை கடைபிடிப்பவர்கள் என்று வைத்துக் கொண்டாலும் மீதி இருக்கும் சுமார் 420 கோடி பேர் நிலை என்ன? இப்படி தலைகளை துண்டித்துக் கொண்டே போனால் உலகத்தில் எத்தனை தலைகள் மிஞ்சும்?// மிக பிரபலமான ஏ.ஆர்.ரஹ்மானே பலமுறை சவூதி சென்று வந்துள்ளார்... சாமானியர்களுக்கு என்ன வந்தது..?
//

இதற்கு என்ன அர்த்தம்? உலகம் தெரிந்தவர்கள் வந்தால் தான் அவர்கள் தலை வெட்டப்படும், சாமானியர்களுக்கு அந்த பயம் தேவையில்லை என்றா??

தவிர, ரஹ்மான் இங்கே எங்கே வந்தார்?? எதற்கு அந்த உதாரணம்?? அவர் தண்ணியடிப்பதாகவும், பன்றி கறி சாப்பிடுவதாகவும் அறிக்கை கூட விடவில்லையே?

ஒரு வேளை, அவர் இசை அமைப்பாளாராக இருப்பதுவும், அல்லாவை தவிர மற்றவர்களை வணங்க கூடாது என்ற "மனித நேயமிக்க, முற்போக்கு" இஸ்லாமை மீறி மா துஜே சலாம் என்று பாடியதலா?? அடப்பாவிங்களா, இதுக்கு கூடவா தலையை வெட்டுவாங்க??

(இஸ்லாமை பற்றி மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே, இஸ்லாத்தில் இசை ஒரு ஹராம் என்பதே தனக்கு தெரியாது என்று சொல்லும் முற்போக்கு பதிவர்களை விட எனக்கு இஸ்லாம் பற்றி அதிகம் புரிதல் உள்ளது என்றே நினைக்கிறேன்.. அதனால் தான் இந்த ரஹ்மான் கேள்வி!)

அது சரி(18185106603874041862) said...

//
UFO saiட்...

ஒருவேளை, அந்த அலி ஸிபாத் சவூதி வந்த இடத்தில் தன் குறி சொல்லும் பிசினசை செய்திருந்தால்......?

அது சவூதி சட்டப்படி குற்றம் ஆயிற்றே?

(ஆமாம்...அதுதான் நடந்திருக்கிறது...)

எனில்.....

சவூதி தன் சட்டப்படி செய்தது சரி என்றாகிவிடுமே?

அதை சவூதி அல்லது மிடில் ஈஸ்ட் மீடியாக்களில் தேடிணீர்களா? நான் தேடி எடுத்து கொடுத்திருக்கிறேன் படித்து பாருங்கள்.

http://gulfnews.com/news/region/lebanon/family-of-lebanese-psychic-on-death-row-lives-in-fear-1.610220

//

இது கொஞ்சம் காமெடியா இருக்கு!

நீங்க குடுத்திருக்க லின்க்கை படிச்சி பார்த்தீங்களா இல்லியா? அதுல அலி ஸிபாத் அவரா போய் பிரச்சாரம் செஞ்சி மக்களை ஏமாத்துனதா சொல்லலை, அவர் இருந்த ஹோட்டலுக்கு ஃபோன் செஞ்சி, ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்ருக்காங்க, அவரு சரின்னு சொல்லிருக்காரு...அடுத்த அஞ்சாவது நிமிஷம், சௌதியோட மதப் போலீஸ் அவர் ஹோட்டலுக்கு வந்து அவரை அரெஸ்ட் செஞ்சிருக்காங்க...

ஹெல்ப் பண்றேன்னு சொல்றது பெரிய குத்தமா? இல்லை, அப்ப குத்தம் என்ன? இஸ்லாம்ல ஷிர்க்னு சொல்றதை செஞ்சது தான் குத்தம்...அப்ப, தலை வெட்டி தண்டனைக்கு அடிப்படி என்ன?? இஸ்லாம் தானே?? அப்புறம் எப்படி அதை எல்லையற்ற அருளாளன் அளித்த மனித நேயம்னு சொல்ல முடியும்?

அப்படி சொல்ல நான் ஒரு பொய்யனா இருக்கணும்...ஆனா நான் இல்ல!

அது சரி(18185106603874041862) said...

//
UFO saiட்...

கற்பழிப்பு, கொலை, ஆயுதங்களுடன் மிரட்டி கொள்ளை, போதைமருந்து கடத்தல்& விநியோகித்தல், குறி/ஜோசியம்/சூனியம் சொல்லுதல் போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனை சவுதியில். நம்நாட்டில் இல்லை. நம் நாட்டு சட்டங்களே எல்லா நாட்டிலும் இருக்கவேண்டும் என்றில்லை. பப்ளிக்கா ஆண்/பெண் என பலர் முன்னிலையில் ஸ்டைலாக நின்றுகொண்டு ஒண்ணுக்கு போவது நம் இந்தியர்களாகிய ஒவ்வொருவரின் பிறப்புரிமை. அது சவுதியில் சட்டப்படி தவறு. இதற்கு நாம் ஆதரிக்கும் சுற்றுப்புற சுகாதார சுத்தத்தை காரணம் சொல்லாமல், குரானை-ஹதீஸை காரனமாக்குகிறது சவூதி. உடன் அது நமக்கு அன்னியமாகிவிடுகிறதால், ஒரு மநிதனுக்கு //எல்லையற்ற அருளாளனால் அருளப்பட்டதாக சொல்லப்படும் குரானில் உண்மையிலேயே இப்படி உத்தரவுகள் இருக்கிறதா? இப்படி சொல்லியிருந்தால் அது என்ன விதமான கருணை?//இப்படி கேட்கிறோம். இறைவன் குற்றவாளிகளிடம் என்றுமே கருணை காட்டியது கிடையாது....அவர் தவறுனர்ந்து மனம்வருந்தி மன்னிப்பு கேட்பதுவரை....

//

அலி ஸிபாத் கற்பழிக்கவில்லை. ஆயுதங்களுடன் மிரட்டி கொள்ளை நடத்தவில்லை...போதைப் பொருள் கடத்தவில்லை. அதை விநியோகிக்கவில்லை.

ஆக, உங்கள் லிஸ்டில் எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்று. குறி சொல்லுதல். அது மனிதர்களுக்கு எதிரான குற்றம் என்று சொல்ல முடியாது. இஸ்லாமிய மதத்துக்கு எதிரான குற்றம். அதற்குத் தான் மரண தண்டனை...இஸ்லாமின் சகிப்புத் தன்மையும், மனித நேயமும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு நீங்கள் எழுதியதே சாட்சி!

நடுரோட்டில் "ஒண்ணுக்கு" போவது தவறு தான்...அதே சமயம் அப்படி செய்தால் தலையை வெட்டு என்பது காட்டுமிராண்டித் தனம்!

மற்றபடி, குற்றங்கள் என்று உங்கள் இறைவன் சொல்வதையும் அதற்கு என்ன தண்டனை என்று அவன் திருவாய் மலர்வதையும் லிஸ்ட் போடுங்கள்...அப்புறம் தெரியும் உங்கள் இறைவனின் எல்லையற்ற கருணை...

(உங்கள் இறைவன் என்றே அழுத்தமாக சொல்கிறேன்...ஏனெனில், இறைவன் என்ற மோசடி கான்செப்ட்டை நான் முற்றிலுமாக நிராகரிக்கிறேன்!)

அது சரி(18185106603874041862) said...

//
UFO saiட்...

பின் குறிப்பு:
நீங்கள் கேட்டதுக்கு இணங்க...இது என்னால் தரப்பட்ட விளக்கம். ஒரு முஸ்லிம் என்ற முறையில் என் கருத்துக்களை படிக்காது நடுநிலையுடன் படித்துணர வேண்டுகிறேன்.
அனைவருக்கும் நன்றி சகோதரர்களே..

//

உங்கள் விளக்கத்துக்கு நன்றி UFO.

ஆனால், எதற்கு அந்த நடுநிலை விளக்கம்?? நீங்கள் ஒரு முஸ்லிம் என்ற முறையிலேயே விளக்கம் அளிக்கிறீர்கள், இஸ்லாத்தின் மாண்பை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் அல்லது குறைந்த பட்சம் அதை டிஃபன்ட் செய்கிறீர்கள், உண்மையா இல்லையா?

நடுநிலை என்றால் அது பொய். இஸ்லாத்த்தை முழுமையாக நிராகரிப்பவன் என்ற முறையில் தான் நான் எழுதுகிறேன்.

முகமூடியை கிழிக்கிறேன் என்று நீங்கள் பின்னூட்டம் இடுவதால் இன்னும் தெளிவாக எழுத முயற்சிப்பேனே தவிர அய்யோ நம்ம பர்தா விலகிடுச்சே என்று பின்வாங்க மாட்டேன், ஏனெனில் பர்தா போடுவது, அந்த உடையில் ஓடி மறைவது பாகிஸ்தானில் வேண்டுமானால் வழக்கமாக இருக்கலாம், எனக்கு அந்த வழக்கம் இல்லை. WE STAND UP AND PUT OUR HANDS UP AND HAPPY TO BE COUNTED! IF I CAN'T STAND UP FOR MY VERY OWN FREEDOM FROM OPPRESSION THEN WHAT THE FUCK I AM LIVING FOR?

எல்லா மதமும் சம்மதம், எல்லா மதங்களும் கருணையையே போதிக்கின்றன என்று போலி முற்போக்கு பதிவனாக மாறி முக்காடு போட்டுக் கொண்டு ஓடவும் மாட்டேன்.

Tell you what, I actually think, I have been gifted to live in a free soceity where nobody will cut by head off for questioning the religion. It's a gift from my forefathers in India and forefathers of Britain.

AND ITS MY BLOODY FUCKING DUTY TO GIVE IT TO THE FUTURE GENERATIONS. I HAVE NO INTENTION OF LEAVING THEM A SOCEITY LIKE AFGHANISTAN/PAKISTAN OR SAUDI ARABIA. YES, IN THE END, MY QUESTIONS REGARDING ISLAM ARE SELFISH, BUT ONLY BECAUSE OF MY CONCERN FOR THE FUTURE OF MANKIND, BUT NOT TO GET SEVEN VIRGINS. PERIOD!

கலகலப்ரியா said...

||மூன்று வருடம் சிறை தண்டனை? ஓரளவு ஒழியும். அவ்வப்போது சிலர் கைதாகும்போதும், தீர்ப்பு
ஒரு சட்டம் தீவிரமாய் அமல்படுத்தப்பட வேண்டுமானால் தண்டனை மிக கருமையாக இருத்தல் அவசியம். அப்படியானால், அடுத்தவன் செய்ய அஞ்சுவான். எவ்வளவு அச்சம் இருக்குமோ, அந்த அளவு, ‘அக்குற்றம் நடைபெறும் ரேட்’ ..... உடனே பூச்சியம் என்ற நிலைக்கு வரும்.||

சிகரெட் என்பது ஒரு உதாரணமாதலால்... அதை விட்டு விடலாம்..! ஆனால் பொதுவாகக் குற்றம் நடைபெறும் ரேட் பூஜ்ய நிலையிலிருப்பது பற்றி ஒரு கேள்வி... இஸ்லாம் \ குரான் சட்டத்தைப் பின்பற்றும் நாடுகளில் குற்றங்கள் பூஜ்ய நிலையில் இருக்கின்றனவா?!குற்றங்களென நீங்கள் கருதுவன யாவை?

என்னைப் பொறுத்தவரை... கற்பழிப்பு - குற்றம்.... அதற்கு குரானில் கடுமையான தண்டனை சொல்லப்பட்டிருந்தால் வழங்கலாம்... ஏற்றுக்கொள்கிறேன்... இதை விட.. ஒன்றும் தெரியாத குழந்தைகளை... குறிப்பாகப் பெண் குழந்தைகளை.. அவர்களுக்கு நான் ஒரு பெண் என்கிற பிரக்ஞை ஏற்பட முன்னாடியே.. யாரோ ஒருவனுக்கோ.. ஒரு பெரியவருக்கோ.. கட்டிக் கொடுத்து அனுப்புவது... கற்பழிப்பை விட ஆயிரமாயிரம் மடங்கு தவறான குற்றம்.. இதை குரான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லையெனில்... இதற்கு குரானில் தண்டனைகள் குறிக்கப்படவில்லையெனில்... அதை நீங்கள் தாராளமாகச் செய்யலாமென்றால்.. கற்பழிப்பு என்பது உங்கள் சட்டத்தில் ஒரு குற்றமே இல்லையென்பது என் கருத்து...உங்களுக்குள் நீங்களேதான் முரண்படுகிறீர்கள்..

ஒரு தகப்பன் அவரின் பதினெட்டு வயது மகள் இன்னொரு மதம் சார்ந்தவனைக் காதலித்த காரணத்தினாலோ.. அல்லது புகைப்பிடித்த காரணத்தினாலோ.. "உயிரை வதைப்பது பாவமெனக் கருதி"... கோடரியால் அவளின் உச்சி மண்டையில் ஒரே போடாகப் போட்டுக் கொல்வாரானால்.. (சில தினங்களுக்கு முன் நான் இருக்கும் நாட்டில் நடந்தேறிய சம்பவம்...).. அந்தப் பெண் ஏன் புகைப் பிடித்தாள்? அது பாவம்... அந்தப் பெண் ஒரு சக மனிதனை ஏன் காதலித்தாள்? அது பாவம்... இப்படிப் பேசி.. பரலோகம் சென்ற அவளின் ஆத்மா நாசமாப் போகட்டுமென்று சபிப்பது சரியா... அந்தத் தகப்பனாரும் அவரது குருட்டு நம்பிக்கையும் நாசமாப் போகட்டுமென்று நினைப்பது சரியா?..

கடவுள் என்று அழைக்கப்படும் யாரோ.. உயிரின் மூலத்தை உருவாக்க எத்தனை யுகங்கள் எடுத்தது என்ற ஆராய்ச்சியை விடுத்து... ஒரு தாயின் கர்ப்பத்தில் வளர ஒரு சிசுவுக்கு ஏறத்தாழ 9 மாத காலமாகிறது... அது வளர எத்தனை காலமாகிறது... என்று யோசித்தாலே ஒரு உயிரின் மதிப்பு தெரியுமே... அந்த உயிருக்கு மதிப்பளிக்கத் தெரியாது... எந்தவொரு உறுதியான காரணமுமின்றி கண்மூடித்தனமாக ஒரு உயிரை எடுக்கும்... எந்த மத.... வேண்டாம்.. மதம் எதற்கு... எந்தப் பிறப்பும்.. ஏற்புடையதாக இல்லை... மிக மிக விஷத்தன்மை கூடிய... அறிவில் நம்மை விடப் பல படி கீழிருக்கும் பாம்பு கூட அதன் விஷத்தைத் தற்காப்புக் கருதியே பயன்படுத்துகிறது... ஊர்வன.. .பறப்பனவை விடக் கீழானவர்களா மனிதர்...

(தொடரும்.....)

கலகலப்ரியா said...

||சரியான பதில்: எல்லாமே பறந்துடும்..ஒண்ணுமே மரத்தில் உக்காந்து இருக்காது.||
கை வெட்டு லாஜிக்குக்கும்... இந்த விடுகதைக்கும் எந்தவொரு லாஜிக்கும் எனக்குப் புலப்படவில்லை...

(தொடரும்..)

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
என்னத்தச் சொல்லுவீங்களோ சொல்லுங்க சார்.||

சொன்னால் கேட்க நானும் ஆவலாக உள்ளேன்..

(தொடரும்..)

கலகலப்ரியா said...

||அது சரி said...||

அது சரி... இஸ்லாம் மதச் சட்டம் இதுவென்று யாரோ சொல்லி வைத்ததைக் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிப்பவர்களை விட உங்களுக்கு இஸ்லாம் மதம் பற்றிய புரிதல் அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது... கேள்வியிலும், பதிலிலும்.. முதிர்ச்சியும்.. பக்குவமும் இருக்கிறது... உலகத்திற்கும் மக்களுக்கும் தேவையானது இவ்வாறான புரிதல்தான் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.. வாழ்த்துகளும்... பாராட்டுகளும்..!

(தொடரும்..)

கலகலப்ரியா said...

||UFO said...

சுயநலன் & பிறர்நலன் பேணா இவனை 'கெட்டவன்' என்கிறேன் நான்

சுயநலன் கொண்ட இவனை நல்லவன் என்கிறேன் நான்||
உதாரணத்திற்கு.. இந்தச் சிகரெட் விடயத்தில்... மற்றவனை நல்லவன் என்பதும், கெட்டவன் என்பதும் உங்கள் கருத்துச் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில்... உங்களை நான் நல்லவன் என்கிறேன்... அது உங்கள் கருத்தாக மட்டுமன்றி அவன் தலையை எடுக்கத் துணிவீர்களானால் நான் உங்களைத் துஷ்டன் என்கிறேன்...

நீங்கள் சொன்ன அதே வெவ்வேறு நாட்டுச் சட்டங்கள் வேறுபடுவது போன்று... வெவ்வேறு நாட்டு நாகரிகச் சூழலுக்கேற்றவாறு.. பார்வைகளும்.. கருத்துகளும் மாறுபடும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா..?

(தொடரும்..)

கலகலப்ரியா said...

||அது சரி said...

தனி மனித உரிமைகளைப் பற்றி நீங்கள் பேசும் போது,மன்னிக்க, எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வருகிறது.||
என்ன பெரிய மனசுய்யா உமக்கு... எனக்கு எரிச்சல்தான் வருகிறது...

(தொடரும்... அப்புறம் வர்றேன்..)

U F O said...

//விமான பணிப்பெண்ணை கற்பழித்த துணை விமானி கைது
ஞாயிற்றுக்கிழமை, மே 30, 2010, 13:21[IST]

மும்பை: திருமணம் செய்து கொள்ளவதாக உறுதியளித்து விமானப் பணிப்பெண்ணை பலமுறை கற்பழித்த, ஜெட் ஏர்வேஸ் நிறுவன துணை விமானி மும்பை விமான நிலையத்தில் வைதது கைது செய்யப்பட்டார்.

வருண் அகர்வால் (27) என்ற அந்த துணை விமானியும், 22 வயதான ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 2009ம் ஆண்டு மே மாதம் முதல் மும்பையில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர்.

அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தொடர்ந்து உடலுறவு வைத்துள்ளார் வருண்.

உடலுறவுக்கு அந்தப் பெண் உடன்பட மறுத்தபோது அவரை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று மோதிரத்தையும் அணிவித்துள்ளார் அகர்வால். ஆனால், திருமணம் செய்ய மட்டும் தொடர்ந்து மறுத்து வந்த அகர்வால், சமீபத்தில் அவரை கைவிட்டுவிட்டார்.

மேலும் திருமணத்துக்கு வற்புறுத்திய அந்தப் பெண்ணை தாக்கி, வீட்டை விட்டும் விரட்டியுள்ளார்.

இதையடுத்து விலே பார்லே காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் செய்ததையடுத்து, நேற்று அகர்வாலை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

2006ம் ஆண்டு முதல் ஜெட் ஏர்வேசில் பணிபுரியும் அகர்வால், 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்த அந்தப் பணிப்பெண்ணை காதலிப்பதாகக் கூறி பின்னாலேயே சுற்றியுள்ளார்.

முதலில் அந்தக் காதலை பெண் ஏற்க மறுத்துள்ளார். ஆனால், இருவருமே உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, தொடர்ந்து வற்புறுத்தியதால் அவரது காதலை ஏற்றுள்ளார் அந்தப் பெண்.

பின்னர் மும்பை மரோல் மிலிட்டரி சாலையில் உள்ள அசோக் டவர் அபார்ட்மெண்ட்ல், உள்ள தனது வீட்டிலேயே அந்தப் பெண்ணை தங்க வைத்த அகர்வால் திருமணம் செய்வதாகக் கூறி தொடர்ந்து உடலுறவு வைத்துவிட்டு சமீபத்தில் கைகழுவியுள்ளார்.

அகர்வால் மீது கற்பழிப்பு, மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகர்வால் மற்றும் அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.//

கேள்வி: உண்மையில் இது கற்பழிப்பு வழக்கா? விபச்சார வழக்கா? அல்லது.... நம்பிக்கைமோசடி வழக்கா?

கற்பழிப்பு எனில் இந்தியாவில் ஆண் தண்டிக்கப்படுவார்.

விபச்சாரம் எனில் இந்தியாவில் பெண் தண்டிக்கப்படுவார்.

சமீபத்திய குஷ்பு வழக்கில் தீர்ப்பு- திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் இந்தியாவில் அனுமதிக்கப்படுகிறது.

உங்கள் மேலான தீர்ப்பை ஆவலாய் எதிர்நோக்கியுள்ளேன்.

vasu balaji said...

U F O said...

//கேள்வி: உண்மையில் இது கற்பழிப்பு வழக்கா? விபச்சார வழக்கா? அல்லது.... நம்பிக்கைமோசடி வழக்கா?

கற்பழிப்பு எனில் இந்தியாவில் ஆண் தண்டிக்கப்படுவார்.

விபச்சாரம் எனில் இந்தியாவில் பெண் தண்டிக்கப்படுவார்.

சமீபத்திய குஷ்பு வழக்கில் தீர்ப்பு- திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் இந்தியாவில் அனுமதிக்கப்படுகிறது.

உங்கள் மேலான தீர்ப்பை ஆவலாய் எதிர்நோக்கியுள்ளேன்//

//அகர்வால் மீது கற்பழிப்பு, மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.//

அதான் செய்தியிலயே இருக்குதே. அப்புறம் என்ன கேள்வி. இங்க இருக்கிற கேள்விக்கும் பதிலுக்கும் இந்த கண்றாவிக்கும் என்ன சம்பந்தம்?

கலகலப்ரியா said...

||
அதான் செய்தியிலயே இருக்குதே. அப்புறம் என்ன கேள்வி. இங்க இருக்கிற கேள்விக்கும் பதிலுக்கும் இந்த கண்றாவிக்கும் என்ன சம்பந்தம்?||

கண்றாவிதான்... (seems to be another U F O... with gaps..)

குடுகுடுப்பை said...

UFO with கேப்பு, காமன் சென்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கு அத வெச்சு நீரே உம்மைக்கேள்வி கேட்டுப்பாரும், மேலும் கேள்விகள் நிறைய பிறக்கும்,என்றாவது ஒரு நாள் பதிலையும் நீரே அறியக்கூடும். பதிலைத்தேடி மதப்புத்தகம் தேடி ஓடுவதை நிறுத்தினால்தான் மேலே சொன்னது நடக்கும்.

குடுகுடுப்பை said...

அதே விமானி சவுதியில் ஒரு அதே பெண்ணோடு ஏமாற்றி உடலுறவு வைத்துக்கொண்டால் நாலு சாட்சி வேணும்,தெரியாமத்தான் கேக்கறேன் நாலு பேர வெச்சிக்கிட்டு எப்படி கற்பழிக்கவோ செய்யவோ முடியும்.இந்த மாதிரி கேசுல என்ன தீர்ப்பு கிடைக்கும் (நாலு சாட்சி இல்லை)

vasu balaji said...

follow up poda maranthutten.

கலகலப்ரியா said...

||இறைவன் குற்றவாளிகளிடம் என்றுமே கருணை காட்டியது கிடையாது....அவர் தவறுனர்ந்து மனம்வருந்தி மன்னிப்பு கேட்பதுவரை....||

இறைவன்தானே..? ஆமா உங்கள்ல யாரு இறைவன்..? அவர் சவுதில செட்டில் ஆய்ட்டாரா?..

எது தவறு..? யார் குற்றவாளி..? இதைத் தீர்மானிப்பது யார்?.. அரபு மொழியிலிருக்கும் புனிதக் குரானைப் படித்தறிந்தவர்களா?.. அவர்கள் கடவுளின் ப்ராக்ஸிகளா?..

(தொடரலாம்...)

கலகலப்ரியா said...

||கலகலப்ரியா said...
||சரியான பதில்: எல்லாமே பறந்துடும்..ஒண்ணுமே மரத்தில் உக்காந்து இருக்காது.||
கை வெட்டு லாஜிக்குக்கும்... இந்த விடுகதைக்கும் எந்தவொரு லாஜிக்கும் எனக்குப் புலப்படவில்லை...||

ஓ... ஒரு வாட்டி சுட்டா எல்லா குருவியும் பறந்து போற மாதிரி... ஒரு கையோ.. வேற எதயோ எடுத்தா.. அப்புறம் குற்றம் நடக்காது..? அப்டிங்கிறதுதான் இந்த லாஜிக்கா?

அப்படின்னு பார்த்தா... குரான் வந்து கிட்டத்தட்ட 1400 ஆண்டுகளுக்கு அப்புறமும்.. இந்தத் தண்டனைக்கான தேவையே இருந்திருக்க நியாயமில்லை... 140 ஆண்டுகளே மிக மிக அதிகம்... முதலாவது தலைமுறையிலேயே கையோ காலோ தலையோ வெட்டும் தேவை இல்லாதிருக்க வேண்டும்.. மிஞ்சி மிஞ்சிப் போனால் மூன்றாவது தலைமுறையிலாவது இது நடந்திருக்க வேண்டும்.. இப்போ வர வர மோசமாகிக் கொண்டு போவதானால்... குருவிக்கு வைத்தது வெட்டு வேத்தா..?

லாஜிக் இங்கயும் இடிக்குது...

கலகலப்ரியா said...

100 ...

(தொடரலாம்..)

Nathanjagk said...

திறக்கப்படாத கதவுகள் மூலம் நாம் (அல்லது நான்) ஒரு செய்தியெனக் கடந்துவிடக்கூடிய நிகழ்வை முன்னிலைப்படுத்தி நம்முள் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார் முரண்தொடை.

சக மனிதரை புறக்கணிக்கிற அல்லது மனதளவில் காயப்படுத்துகிற சுதந்திரம் அவரைப் பாராட்டுகிற போது நம்மிடம் - முக்கியமாக பதிவுலகத்தில் - இல்லையோ எனத் தோன்றுகிறது. மனம்விட்டு பாராட்டிவிடத் தோன்றிய மனிதர்களிடமெல்லாம் விரல்கள் விட்டுக் கொடுத்தது என்னவோ வெறும் ஸ்மைலிகள்தான். இருந்தும் சகட்டுமேனிக்கு சிலரைப் புகழ்ந்து விட்ட பெருமிதமும் திருப்தியும் என்னிடம் இருக்கிறது எனலாம். புகழப்படுபவர்கள் புறமுதுகிட்டு அமர்ந்திருப்பது போலவும் புகழுபவன் படத்தில் வரும் வாம்பயர் போல விரல்நகங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருவது போல புகழ்தல் இங்குச் சித்தரிக்கப்படுகிறது. சுருக்கமாக முதுகு சொறிதல்.

இங்கு என் புகழ்தலை நீங்கள் (அதுசரி முதல் UFO ஈறாக..) எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்குச் சம்மதமே.

அதுசரி ஏற்படுத்திய அதிர்வலைகள் கவனத்திற்குரிய. ஒரு மதம் பற்றிய கேள்விகள் விசாரணைத் தொனியில் இருப்பது தன்னளவில் ஒரு தெளிவைத் தேடிக்கொள்ளும் முயற்சியே. அந்த ஊக்கத்தை பிறருக்கும் கொடுத்தவிதத்தில் அதுசரி பாராட்டுக்குரியவர். மதம் பற்றி நம்மிடம் நிறைய கேள்விகள் உள. அதற்கு விடைகள் தெரியாது என்ற உண்மையை பேராற்றல், விதி அல்லது ஆக்கப்பூர்வமற்ற வாதம் என்ற பெயர்களில் செரித்துக் கொள்ளப் பயின்றிருக்கிறோம். விடைகளைத் தேட நிறைய உழைப்பு வேண்டியிருக்கிறது. உழைக்கப் பயந்தவர்கள்தான் தங்களைத் தேடிவருகிற எளிய பொய்களை உண்மை என நம்பிக்கொள்கிறார்கள். எளிய பொய்கள் தங்கள் வாழ்வின் நிம்மதியைக் காப்பாற்றும் என்ற உத்திரவாதம்தான் இப்போதைக்கு யாவர்க்கும் முக்கியமாக இருக்கிறது. உண்மையைக் கண்டறியும் ஒரு சிந்துபாத் கடற்பயணமாக அதுசரியின் முயற்சியை மதிக்கிறேன். இதில் நாமும் இருக்கிறோம் என்பது திருப்தியைத் தருகிறது.

UFO அவர்களின் தொடக்கப் பின்னூட்டத்தில் சில ஆக்கப்பூர்வமான பின்விளைவுகளை உத்தேசித்தேன். ஏனைய கலகப் பின்னூட்ட வகைகளில் இருந்து தனிப்பட்டதாக இருந்தது. அது மெய்ப்பிக்கும் வகையில் அவரின் தொடர் பின்னூட்டங்கள் வாதத்தை தர்க்கபூர்வமான தளத்தில் முன்னகர்த்திச் செல்கிறது. இவருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.

ஆதார நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் அறங்கள் ஒருமித்த வடிவவைப் பெறும் போது அது மதம் என்ற பெயரில் தன்னை அடையாளப் படுத்திக்கொள்கிறது. இதுவே எல்லா நாகரீகங்களின் மதங்களின் துவக்கப் புள்ளி. நம்பிக்கைகளும் அறங்களும் அவை சார்ந்த நிலம் மற்றும் காலஅளவைக்கேற்ப பரிமாணம் கொள்கின்றன. ஒரே மதம் ஆப்ரிக்காவில் தோன்றுவதற்கும் ஐரோப்பாவில் தோன்றுவதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன. நிலம்தான் மிகப்பெரிய சூத்ரதாரி. காலம் சிறந்த வடிவமைப்பாளன்.
நிலம்-காலம் என்ற மையக் கோட்பாட்டுகளில் யோசிக்கும்போது எதன் மீதும் குற்றம் சொல்ல முடியாது.
(...)

Nathanjagk said...

ஒரு கணத்தில் எல்லா மதங்களும் ஒரே ஆதாரக்குணம் கொண்டவைதான் என்றும் தோன்றுகிறது. ஒரு மதத்தில் நம்மையறிமால் ஒருவித பிரேமத்தை ஏற்படுத்திக் கொண்டுவிடுகிற படியால் அதை நுணுக்கி ஆராய முடியாதவர்களாகிறோம். அந்த பிரேமத்தை அல்லது மதிப்பை விசாரணைக்குட்படுத்தும் எந்த வாதத்திலும் எரிச்சல் ஏற்படுவதும் சாதாரணமே.

நிலம் மற்றும் காலமாறுதல்கள் பற்றிய தெள்ளிய படிப்பு மற்றும் ஆழ்ந்த புரிதல் இல்லாமல் மதம் பற்றி விசாரிப்பது சரியான படிப்பினையைத் தராது என்பது என் நம்பிக்கை. மதம் (இதற்கும் நில-கால புரிதல் முக்கியம்) பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் அதன் பின்விளைவாக அமைந்த ஒரு சம்பவத்தைக் கொண்டு மொத்த மதநம்பிக்கையும் விசாரணைப்படுத்துவதும் விமர்சிப்பதும் தர்க்கப்பூர்வமாக சரியாக அமையாது. ஒரு நிகழ்வின் கண்கொண்டு ஒரு அமானுடத்தை பரீட்சீர்ப்பதும் அவதானிப்பதும் அபத்தமானது என்கிறேன்.

நாம் இங்கு ஒரு சம்பவத்தை விவரிக்கக் காண்கிறோம். அதன் பொருட்டு ஒரு விவாதத்தைத் துவக்குகிறோம் அல்லது நம்மைத் தெளிவுபடுத்திக் கொள்ள முயல்கிறோம். இது ஆரோக்கியமானது. இந்த விவாதங்கள் சரியான கனத்தில், திசையில் நிகழ்ந்தாலும் அதை முன்னகர்த்தும் படிப்பு அல்லது திறன் இருக்க வேண்டும். நமக்கு எளியதாக தோன்றும் கருத்தின் பின்வெளிக் கண்ணிகள் நம்மை வேறுபக்கம் இயக்கிச் செல்லும் சாத்தியம் கொண்டது. ஆகவே, நுணுக்கி தெளிந்த ஆய்வு, பெரு வாசிப்பு, களப்பணி, பரீட்சார்த்த முயற்சிகள், முயற்சிகளின் பதிவுகள், தன்னியல்பு சாரா படிப்பினை, மேல்நோக்கி ஆயும் அறிவு போன்ற இயல்புகள் அற்ற ஒருவனின் இது போன்ற தேடல்கள் மெய்படிப்பினையை விளைவிக்குமா?

என் கருத்து.. நாம் இங்கு நாம் விவாதிக்கும் பொருள் எல்லாக் காலத்திலும் இதே பரிணாமத்திலேயே கொஞ்சமும் மாறாமல் இருந்து வந்திருக்கிறது.

மதத்தின் ஆயத்தங்கள் எப்போதும் அரசியல் முனைப்பு கொண்டதாகவே இருக்கிறது. மதத்தை பின்பற்றுபவனை விட அதை விமர்சிபவன் அந்த மதத்தோடும் மத அரசியலோடும் இறங்கி இணைந்து வாழவேண்டியிருக்கிறது. முடிவுறா பயணமாக, படிப்பாக அது போய்க்கொண்டேயிருக்கக் கூடியது. நம் விவாத்தின் முடிவுகள் நான் எண்ணும் வகையில் சாதாரணமாகவோ வலுவிழந்ததாகவோ போய்விடக்கூடிய வகையில் இருப்பதாக உணர்கிறேன். இதை இக்கணத்தில், இங்கே ஆரோக்கியமாக முடித்துக் கொள்ளுதலே ஒரு சிறந்த படிப்பினை என்று நம்புகிறேன். இவ்விடத்தில் நாம் அனைவரும் சிரித்த முகமாக கைகுலுக்கிக் கொள்ளமுடிகிறது என நாமும் நம்பலாம்.

U F O said...

நடந்து முடிந்த குற்றங்களுக்கு வந்த தீர்ப்புகளையும், நடக்கும் குற்றங்களின் மீது போடப்படும் வழக்கையும் அலசும் பதிவும் பின்னூட்டங்களும் இவை, ஆகையால், இனி தொடர்ந்து வரப்போகும் என்னுடைய பின்னூட்டங்கள் தங்கள் அனைவரின் சிந்தைக்கும் தீர்ப்பு வழங்கலுக்கும் பெரும் சுவையான தீனியாக அமையும் என்று நம்புகிறேன்.

'அது கற்பழிப்பு கேஸ்' என்று வழக்குப்பதிவு எனக்குத்தெரியாமல் இல்லை. அது சரியா என்பதே ஏன் கேள்வி. அது மட்டும்தானா? திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்தது விபச்சாரம் இல்லையா? என்பதும் கேள்வி. மோசடி வழக்குப்பதிவு சரியா? இதுவும் கேள்வி.

அதோடு இது ஏன் நடந்தது, எதனால் அடிக்கடி நடக்கிறது, சட்டம் எப்படி இருந்தால் இனி இதுபோல நடக்கவே நடக்காது என்று இத்தளத்தின் சீரிய சிந்தனையாளர்கள் சிந்திக்கவும் & விவாதிக்கவும்.

அடுத்த செய்திக்கு செல்வோமா?

21/02/2010 அன்றைய தினமலரில் வந்த செய்தியின் சுருக்கம்.

லண்டன் :கற்பழிப்பு சம்பவம் நடப்பதற்கு பெண்களே காரணம், என பிரிட்டன் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 18வயது முதல் 24வயதுக்குட்பட்ட பெண்கள்தான் அதிக அளவில் கற்பழிக்கப்படுகிறார்கள். இவை நடப்பதற்கு பெண்களே காரணம் என பெரும்பான்மை கருத்து பதியப்பட்டுள்ளது. இளம் பெண்கள் குட்டைப்பாவாடை போன்ற தொடை தெரியும் அளவுக்கு ஆபாசமாய் உடை அணிவதும், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதும், போதையில் ஆண்களின் வக்கிரங்களுக்கு இனங்குவதும், ஆண் நண்பர்களின் வீட்டில் இரவு தங்குவதும், பார்ட்டிகளில் கலந்து கொண்டு மேலாடை கீழாட விளகுவதுகூட தெரியாது நடனமாடுவதும் ஆண்களை சபலப்படுத்தி கற்பழிப்பில்கொண்டுபோய் விடுகிறது. கற்பழிக்கப்பட்ட பெண்களில் வெறும் நாற்பத்தி இரண்டு சதவீதம்பேர் மட்டுமே போலீசில் புகார் செய்கின்றனர் :- இவ்வாறு நான் சொல்லலைங்க, உங்க நாட்டு லண்டன் கருத்துக்கணிப்பு சொல்கிறதாம். தினமலரில் படித்தது.

அடுத்தநாள் இணையத்தில்....(கற்பழிப்புக்கு பெண்களே காரணம் ...
22 Feb 2010 ... லண்டன் :கற்பழிப்பு சம்பவம் நடப்பதற்கு பெண்களே காரணம், என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டனில் சமீபத்தில் கற்பழிப்பு ...
www.dinamalar.com/world_detail.asp?news_id=4882)

அரைகுறை ஆடை அணிவதுதான் பெண்ணுரிமை என்கிறார்கள். அப்படியெனில், "இந்த-பெண்ணுரிமை" பெண்களுக்கு பாதுகாப்பானதுதானா? இல்லையெனில் இது பெண்ணுரிமை இல்லையா? ஆமெனில், இது பெண்களுக்கு தேவையா?


உலகில் பொதுவான சட்டம் யாதெனில், குற்றம் செய்பவருக்கும் அவரை அவ்வாறு செய்யத்தூண்டியவருக்கும் சேர்த்து தண்டனை தரவேண்டுமேன்பதே...

இங்கு குற்றம் செய்தவரும், செய்யத்தூண்டியவரும் யார் யார் என்று விளக்கத்தேவை இல்லை.

தன் தங்கக்கடையை இரவில் வேண்டுமென்றே அகலத்திறந்து போட்டுவிட்டு நகைக்கடைகாரரும் மற்றும் கடையில் உள்ள அனைவரும் வீட்டுக்கு தூங்க வெகுதூரம் சென்று விடுகின்றனர்.

கதவை தாழிட்டு பல பூட்டுக்களை போட்டு பூட்டிவிட்டு அவற்றை ஒருமுறை இழுத்துப்பார்த்துவிட்டு மற்றொரு நகைக்கடைக்காரர்கள் தங்கள் வீடுகளுக்கு தூங்கச்செல்கின்றனர்.

யாருடைய நகைக்கடை கொள்ளையர்களால் அன்றைய இரவு சூறையாடப்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பது ஒன்னாங்கிலாஸ் கேள்விதான். ஆனாலும் கேட்கிறேன். தங்கள் விடைகான ஆவலாய் உள்ளேன்.

UFO said...

திரு. ஜெகநாதன்,
மிக்க நன்றிகள் அய்யா. உங்களுக்கும், என் இனிய அன்பும் வாழ்த்துக்களும்.

நீங்கள் ஒருவராவது என்னை புரிந்து கொண்டீர்களே...

வால்பையன் said...

@ UFO

யோவ் லூசு!

கற்பழிப்புக்கு பெண்கள் தான் காரணமா!?
கோவாவுல பெண்கள் டூ பீஸ்ல இருப்பாங்க, உன்னைய மாதிரி ஆண்கள் போனா தான் அவுங்களுக்கு பிரச்சனை, உனக்கு நட்டுகிச்சின்னா அதுக்கு பெண்கள் என்னயா பண்ணுவாங்க!

உன்னைய மாதிரி ஆண்களோட கண்னை புடிங்கிட்டா அந்த மாதிரி தீர்ப்பு வராது தெரியுமா!

ஆண்களும் தான் சார்ட்ஸ் போட்டு திரியுறானுங்க, எந்த பொண்னாவது கற்பழிச்சு கேஸ் வந்துருக்கா!

குரான் படிச்சு மெண்டலான கேஸ்ல நீயும் சேர்ந்துட்டியா!?

U F O said...

@
//@ UFO
யோவ் லூசு!//
//உன்னைய மாதிரி ஆண்கள்// //உனக்கு நட்டுகிச்சின்னா//
//உன்னைய மாதிரி ஆண்களோட கண்னை புடிங்கிட்டா//
//எந்த பொண்னாவது கற்பழிச்சு கேஸ் வந்துருக்கா!//

நன்றி!
மாண்புமிகு...'வா...' அவர்களே....

தங்களின் கருத்து வறட்சியை அறிந்து கொண்டேன்... தக்க பதில் இல்லையேல் இப்படித்தான் வார்த்தைகள் தடித்து வெடிக்கும்...

//இளம் பெண்கள் குட்டைப்பாவாடை போன்ற தொடை தெரியும் அளவுக்கு ஆபாசமாய் உடை அணிவதும், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதும், போதையில் ஆண்களின் வக்கிரங்களுக்கு இனங்குவதும், ஆண் நண்பர்களின் வீட்டில் இரவு தங்குவதும், பார்ட்டிகளில் கலந்து கொண்டு மேலாடை கீழாட விளகுவதுகூட தெரியாது நடனமாடுவதும் ஆண்களை சபலப்படுத்தி கற்பழிப்பில்கொண்டுபோய் விடுவது// தான் பெண்ணுரிமையா? இதையே ஆண்கள் செய்தால் அது ஆணுரிமையா? இப்படி பெண்கள் செய்யக்கூடாது என்றால்-கண்ணியமாக இருங்கள் என்றால் ஆணாதிக்கமா? இப்படி ஆண்கள் செய்யக்கூடாது என்றால்-கண்ணியமாக நடந்துகொள்ளவேண்டும் என்றால் பெண்ணாதிக்கமா?

இவைகள் ஜஸ்ட் எனது கேள்விகள்...

//குரான் படிச்சு மெண்டலான கேஸ்ல நீயும் சேர்ந்துட்டியா!?//

இல்லை. படிச்சு சிந்தித்ததால்தான் இக்கேள்விகள் பிறந்தன...

பதில் இருந்தால் சொல்லுங்கள்...

வீணாய் திட்டிக்கொண்டு இருப்பதால் யாருக்கும் உபயோகம் இல்லை...

வால்பையன் said...

//இளம் பெண்கள் குட்டைப்பாவாடை போன்ற தொடை தெரியும் அளவுக்கு ஆபாசமாய் உடை அணிவதும், //


உன்னைய யார்யா தொடைய பார்க்க சொல்றது!?

குரான் படிச்சி சிந்திச்சி கிழிச்ச ஆட்களை நானும் நிறைய பார்த்துட்டேன்!

U F O said...

//இஸ்லாம் தலையை வேட்டச்சொல்கிறதா?//--ஐயத்துடன் நீங்கள் வைத்த தலைப்பு...இந்த கேள்விக்கு விடை தெரிந்த பிறகும் எதற்கு இன்னும் இத்தலைப்பு, மாற்றப்படாமல்...? பதிவினுள்ளேயும் எந்த மாற்றமும் காணவில்லையே? இதுபற்றி எந்த விபரமும் இல்லாமல் சந்தேகத்துடன் தலைப்பிட்டதற்கே சொன்னேன், இது உங்களின் இஸ்லாமிய காண்டு என்று. இப்போது பதில் தெரிந்த பின்னும் மாற்றுவதற்கு என்னவாயிற்று?

இஸ்லாம் கூறிய அனைத்தையும் சவூதி பின்பற்றுவதில்லை;சவூதி செய்வது அனைத்தும் இஸ்லாம் அல்ல என்று முன்பே தெளிவாக விளக்கிவிட்டேன். அது இஸ்லாமிய சட்டம் இல்லை. சவூதி சட்டம், என்று. அவரவர் நாட்டுக்கு எந்த குற்றம் மிகவும் தீமை என்று கருதுவார்களோ அதற்கு உச்சபட்ச தண்டனை தருவார்கள். இது இயற்கை. இதனால், இஸ்லாம் மீது புழுதி வாரி இறைக்க தேவை இல்லை. இவ்வளவு விளக்கிய பின்னும் இன்னும் கிணற்றில் போட்ட கள் போன்று செயலர்ரிருந்தால் என்ன அர்த்தம்? இவ்வளவுதானா உங்கள் நேர்மை? இப்போது நன்றாய் வெட்டவெளிச்சமாகிறதே உங்களின் இஸ்லாமிய காழ்ப்புணர்வு?

எங்கோ யாரோ ஒரு குற்றவாளி அலி சிபாத்துக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள், இங்கே நம் நாட்டில் ஆயிரக்கனக்கில் அப்பாவி இளம் முஸ்லிம்கள் சந்தேகத்தின் பேரில் விசாரனைக்கைதிகளாக 'தடா'விலும் 'பொட்டா'விலும் கைதாகி பத்து முதல் அதினெட்டு வருடங்களாக எக்குர்ரப்பத்திரிக்கையும் தாக்கல் இல்லாமல் சிறையில் வாடுகின்றனரே? எங்கே போய்விட்டது உங்கள் அநீதிக்கெதிரான "அதுசரி" குரல்? இவர்களுக்காக என்ன பதிவு போட்டு எதிர்த்து கேட்டிருக்கிறீர்கள்? இவர்களுக்கு இந்தியன் என்ற முறையில் கூட கேட்க முடியாத நீங்கள் அலி சிபத்துக்கு வக்காலத்து வாங்குவது ஏன்? இதுதான் 'முரண்தொடை'யா?

சமீபத்தில் குணங்குடி ஹனீபா என்ற அப்பாவி, பதிமூன்று வருடங்கள் கழித்து நிரபராதி என்று ரிலீஸ் ஆனபோது எங்கே போனீர்கள்? எத்தனை பதிவர்கள் கேட்டீர்கள்?(முஸ்லிம்கள் அல்லாதவரில் ஒரே ஒருவரைத்தவிர, நன்றி:செந்தழல் ரவி)

பதிமூன்று ஆண்டுகள்... சிறைத்தண்டனை ... எக்குற்றமும் செய்யாத ஒரு நிரபராதிக்கு... இது கொடுமை அல்லவா? 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது' என்ற சட்ட அடிப்படையில் இயங்கும் நமது நீதி, இங்கே செத்துக்கிடந்தபோது என்ன பதிவு எழுதி கிழித்தீர்கள்? இப்போது, என்ன நீதி செத்துவிட்டது என்று சவுதிக்கு போய் இஸ்லாத்திற்கு எதிராய் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீர்கள்? இங்கே நாமோ நம்மால் போடப்பட்ட சட்டத்தையே காப்பாற்றவில்லை. அதைக்கேட்க துப்பில்லை, ஆனால் சவுதியில் அவர்கள் போட்ட சட்டப்படி அவர்கள் நடந்ததுக்கு, இஸ்லாத்திகு எதிரான காழ்ப்புணர்வுடன் ஒரு பதிவா? இங்கே தெரியவில்லை உங்கள் இஸ்லாமிய காண்டு? (தொடரும்)

U F O said...

(தொடர்கிறது...)

'தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி' என்று இயங்கும் நம் சட்டமும் நீதியும், அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் பாபர்மசூதியில் ஒரு கயவர்கூட்டம் இரவில் பூட்டிய மசூதி கதவை உடைத்து சிலைகளை உள்ளே வைத்து பின்னர் கேஸ் முடியும்வரை யாரும் தொழ அனுமதிக்காமல் மசூதி சீலிடப்பட்ட வழக்கில் இன்ன்ன்ன்ன்ன்ன்ன்னும் அறுபது ஆண்டுகளாக நீதி வழங்க வில்லையே? இதைப்பற்றி என்ன கேட்டிருக்கிறீர்கள்? அந்த மசூதியை லைவ் டெலிகாஸ்ட்டில் இடித்த கயவர்களை லிபரான் கமிஷன் அறிக்கை வந்தும் இன்னும் கைது செய்யவில்லையே. இதுவரை என்ன எழுதி கிழித்திருக்கிறீர்கள்? நீங்கள், அலி சபாத்துக்கு வக்காலத்தா? இல்லை. இப்போது புரியவில்லையா உங்கள் இஸ்லாமிய காழ்ப்புணர்வு?

இன்னும், ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் அறிக்கை, ராஜகோபால் கமிஷன் அறிக்கை என்று எதிலோன்றிலாவது சுட்டப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிரார்களா? இவற்றை எதிர்த்து வாயைத்திரந்ததுண்டா?

சச்சார் கமிஷன் அறிக்கை, மிஸ்ரா கமிஷன் அறிக்கை இவைகளெல்லாம் என்னாச்சு? இதுவரை என்ன கேட்டு கிழித்திருக்கிறீர்கள்? இப்போது வெட்ட வெளிச்சமாகவில்லையா உங்கள் இஸ்லாமிய காழ்ப்புணர்வு?

நம் நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்காமல், நம் நாட்டு சட்ட அடிப்படையையே மதிக்காத நம் நாட்டு நீதிமன்றத்தை-நம் அரசை, நம் மக்களுக்கு ஆதரவாய் கேள்வி கேட்க வக்கில்லை; ஆனால், எங்கோ சவுதியில் ஒரு குற்றவாளிக்கு எதிராய் சட்டப்படி நடக்கும் அவர்களை கேட்க என்ன உரிமை இருக்கிறது உங்களுக்கு? அலி சிபாத்துக்கு ஆதரவாய் எதற்கு உங்களின் இந்த நீலிக்கண்ணீர்/முதலைக்கண்ணீர்?

முதலில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் பொதுமக்களுக்கெதிரான பயங்கரவாதத்தை எதிர்த்து கேட்க வக்கில்லாத வினவை கேள்விகேட்கும் அருகதையை உண்டாக்கிக்கொள்ளுங்களேன்...ஐயா?இது...செம காமடி...

முரண்தொடை-பெயர்காரணம்:

பொய்யான "சரியில்லாத" விஷயங்களை, "அதுசரி" என்ற புனைப்பெயரில் கழிந்து விடும் இடம் இத்தளம் என்பதால்தான் இக்கழிப்பிடத்திற்கு பெயர் 'முரண்தொடை'யோ?

ச்சீ...வெட்கக்கேடு...

அது சரி(18185106603874041862) said...

யூ எஃப் ஓ,

இப்பொழுது உங்களின் முகத்திரை விலக்கி கழிந்து விட்டு போயிருக்கிறீர்கள்..நீங்கள் கழிவதை எல்லாம் கழிந்து விட்டு போகலாம்...குரானை படித்துக் கொண்டே இருப்பதை தவிர எனக்கு வேறு பல வேலைகள் இருப்பதால் (ஆமாம், எனக்கு எந்த அல்லாவும் முல்லாவும் சோறு போடுவதில்லை, நானே உழைத்தால் தான் உண்டு. ஸோ, நோ இன்ஷா அல்லா), உங்களுக்கு நேரம் கிடைத்ததும் பின்னர் பதில் சொல்லப்படும்.

பர்தா போடு என்று பெண்களுக்கு இஸ்லாம் உத்தரவிடுவது போல எனக்கு யாரும் உத்தரவு போட முடியாது. நான் எதற்கும், எவனுக்கும் அடிமை இல்லை என்பதால் அப்படி எவனாவது உத்தரவு போட்டால் ஏற்கவும் மாட்டேன். அதனால், இடுகையின் தலைப்பு மாற்றப்படாது!

வால்பையன் said...

Torment to Non-believers:
SURA 4.56: (As for) those who disbelieve in Our communications, We shall make them enter fire;
so oft as their skins are thoroughly burned, We will change them for other skins, that they may taste the chastisement; surely Allah is Mighty, Wise.
Allah causes you to disbelieve and then he punishes you for that
2.7 Allah has set a seal upon their hearts and upon their hearing and there is a covering over their eyes, and there is a great punishment for them.
No friends with parents / siblings if not believers
9.23: O you who believe! do not take your fathers and your brothers for guardians if they love unbelief more than belief; and whoever of you takes them for a guardian, these it is that are the unjust.
Friends with Jews, Christians...
5.51: O you who believe! do not take the Jews and the Christians for friends; they are friends of each other; and whoever amongst you takes them for a friend, then surely he is one of them; surely Allah does not guide the unjust people.
Gruesome Amputations
Said he (Pharaoh): You believe in him before I give you permission; most surely he is the chief of you who taught you the magic, so you shall know: certainly I will cut off your hands and your feet on opposite sides, and certainly I will crucify you all. (External link: Dhimmi Watch)
Fight non-believers
9.123: O you who believe! fight those of the unbelievers who are near to you and let them find in you hardness; and know that Allah is with those who guard (against evil).
Kill non-believers
4.89 : They desire that you should disbelieve as they have disbelieved, so that you might be (all) alike; therefore take not from among them friends until they fly (their homes) in Allah's way; but if they turn back, then seize them and kill them wherever you find them, and take not from among them a friend or a helper.
Killing Idolaters
9.5: So when the sacred months have passed away, then slay the idolaters wherever you find them, and take them captives and besiege them and lie in wait for them in every ambush, then if they repent and keep up prayer and pay the poor-rate, leave their way free to them; surely Allah is Forgiving, Merciful.
Islam Acceptable:
3.85: And whoever desires a religion other than Islam, it shall not be accepted from him, and in the hereafter he shall be one of the losers.
No friends from outsiders

வால்பையன் said...

3.118: O you who believe! do not take for intimate friends from among others than your own people; they do not fall short of inflicting loss upon you; they love what distresses you; vehement hatred has already appeared from out of their mouths, and what their breasts conceal is greater still; indeed, We have made the communications clear to you, if you will understand.
No friends with non believers
3.28: Let not the believers take the unbelievers for friends rather than believers; and whoever does this, he shall have nothing of (the guardianship of) Allah, but you should guard yourselves against them, guarding carefully; and Allah makes you cautious of (retribution from) Himself; and to Allah is the eventual coming.
Believers make superior friends
4.144: O you who believe! do not take the unbelievers for friends rather than the believers; do you desire that you should give to Allah a manifest proof against yourselves?
God a plotter

வால்பையன் said...

8.30: And when those who disbelieved devised plans against you that they might confine you or slay you or drive you away; and they devised plans and Allah too had arranged a plan; and Allah is the best of planners.
Anti Jewish verses
5.82: Certainly you will find the most violent of people in enmity for those who believe (to be) the Jews and those who are polytheists, and you will certainly find the nearest in friendship to those who believe (to be) those who say: We are Christians; this is because there are priests and monks among them and because they do not behave proudly.
Idolaters are unclean just because they are idolater
9.28: O you who believe! the idolaters are nothing but unclean, so they shall not approach the Sacred Mosque after this year; and if you fear poverty then Allah will enrich you out of His grace if He please; surely Allah is Knowing Wise.
Forcing non-believers to pay tax
9.29: Fight those who do not believe in Allah, nor in the latter day, nor do they prohibit what Allah and His Apostle have prohibited, nor follow the religion of truth, out of those who have been given the Book, until they pay the tax in acknowledgment of superiority and they are in a state of subjection.
The Torment of Hell for infidels (Jews, atheists, and unbelieving infidels)

வால்பையன் said...

43: Surely the tree of the Zaqqum,
[Sinners, eat Zaqqum to intensify the torment of the Khati'un
(Koran Sura 69:36-37); it tastes like Like molten brass...]
44: Is the food of the sinful
45: Like dregs of oil; it shall boil in (their) bellies,
46: Like the boiling of hot water.
47: Seize him, then drag him down into the middle of the hell;
48: Then pour above his head of the torment of the boiling water:
49: Taste; you forsooth are the mighty, the honorable:
50: Surely this is what you disputed about.
51: Surely those who guard (against evil) are in a secure place,
52: In gardens and springs;
53: They shall wear of fine and thick silk, (sitting) face to face;
54: Thus (shall it be), and We will wed them with Houris pure, beautiful ones.
55: They shall call therein for every fruit in security;
56: They shall not taste therein death except the first death,
and He will save them from the punishment of the hell,

வால்பையன் said...

57: A grace from your Lord; this is the great achievement.
58: So have We made it easy in your tongue that they may be mindful.
2.62, 5.69 : All except Muslims / Jews/Christians / Sabeans will go to hell
Surely those who believe, and those who are Jews, and the Christians, and the Sabians, whoever believes in Allah and the Last day and does good, they shall have their reward from their Lord, and there is no fear for them, nor shall they grieve.
Smite the neck and cut fingertips of unbelievers8.12: When your Lord revealed to the angels: I am with you, therefore make firm those who believe. I will cast terror into the hearts of those who disbelieve. Therefore strike off their heads and strike off every fingertip of them.
Smite the neck of unbelievers
47.4: So when you meet in battle those who disbelieve, then smite the necks until when you have overcome them, then make (them) prisoners, and afterwards either set them free as a favor or let them ransom (themselves) until the war terminates. That (shall be so); and if Allah had pleased He would certainly have exacted what is due from them, but that He may try some of you by means of others; and (as for) those who are slain in the way of Allah, He will by no means allow their deeds to perish.
Severe Punishment for atheists
10.4: To Him is your return, of all (of you); the promise of Allah (made) in truth; surely He begins the creation in the first instance, then He reproduces it, that He may with justice recompense those who believe and do good; and (as for) those who disbelieve, they shall have a drink of hot water and painful punishment because they disbelieved.

வால்பையன் said...

5.10: And (as for) those who disbelieve and reject our communications, these are the companions of the name.
5.86: And (as for) those who disbelieve and reject Our communications, these are the companions of the flame.
Severe Punishment for non-believers
22.19: These are two adversaries who dispute about their Lord; then (as to) those who disbelieve, for them are cut out garments of fire, boiling water shall be poured over their heads.

22.20: With it shall be melted what is in their bellies and (their) skins as well.

22.21: And for them are whips of iron.

22.22: Whenever they will desire to go forth from it, from grief, they shall be turned back into it, and taste the chastisement of burning.
Severe Punishment for non-believers

வால்பையன் said...

72.23 : (It is) only a delivering (of communications) from Allah and His messages; and whoever disobeys Allah and His Apostle surely he shall have the fire of hell to abide therein for a long time. 98.6 : Surely those who disbelieve from among the followers of the Book and the polytheists shall be in the fire of hell, abiding therein; they are the worst of men.
Punishing non-believers of Hereafter
17.10 : And that (as for) those who do not believe in the hereafter, We have prepared for them a painful chastisement.
Punishing for rejecting faith
3.91 : Surely, those who disbelieve and die while they are unbelievers, the earth full of gold shall not be accepted from one of them, though he should offer to ransom himself with it, these it is who shall have a painful chastisement, and they shall have no helpers.
Unbelievers go to hell

வால்பையன் said...

4.140 : And indeed He has revealed to you in the Book that when you hear Allah's communications disbelieved in and mocked at do not sit with them until they enter into some other discourse; surely then you would be like them; surely Allah will gather together the hypocrites and the unbelievers all in hell.
7.36 : And (as for) those who reject Our communications and turn away from them haughtily -- these are the inmates of the fire they shall abide in it.
Partial Believers go to hell too
4.150 : Surely those who disbelieve in Allah and His apostles and (those who) desire to make a distinction between Allah and His apostles and say: We believe in some and disbelieve in others, and desire to take a course between (this and) that.

4.151 : These it is that are truly unbelievers, and We have prepared for the unbelievers a disgraceful chastisement.

4.152 : And those who believe in Allah and His apostles and do not make a distinction between any of them -- Allah will grant them their rewards; and Allah is Forgiving, Merciful.
Sadistic punishments
56.41 : And those of the left hand, how wretched are those of the left hand!

56.42 : In hot wind and boiling water,

56.43 : And the shade of black smoke,

வால்பையன் said...

56.44 : Neither cool nor honorable.
Punishment for apostates
16.106 : He who disbelieves in Allah after his having believed, not he who is compelled while his heart is at rest on account of faith, but he who opens (his) breast to disbelief -- on these is the wrath of Allah, and they shall have a grievous chastisement.

3.86 : How shall Allah guide a people who disbelieved after their believing and (after) they had borne witness that the Apostle was true and clear arguments had come to them; and Allah does not guide the unjust people.

3.87 : (As for) these, their reward is that upon them is the curse of Allah and the angels and of men, all together.

3.88 : Abiding in it; their chastisement shall not be lightened nor shall they be respited.

3.89 : Except those who repent after that and amend, then surely Allah is Forgiving, Merciful.

3.90 : Surely, those who disbelieve after their believing, then increase in unbelief, their repentance shall not be accepted, and these are they that go astray.
Allah will commit genocide
17.16-17: When we decide to destroy a population, we send a definite order to them who have the good things in life and yet transgress; so that Allah's word is proved true against them: then we destroy them utterly. How many generations have we destroyed after Noah? And enough is thy Lord to note and see the Sins of his servants.
Allah boasts about His as genocide
21.11: How many were the populations we utterly destroyed because of their inequities, setting up in their place other peoples.
Allah instructs Islamics to heap up a mountain (of corpses) of non believers
8.37: In order that Allah may separate the impure from the pure, Put All the impure ones (Non-Muslim -- atheists, Jews), one on top of the another in a Heap and cast them into Hell. They will be the ones to have lost.

U F O said...

//இஸ்லாம் தலையை வெட்டச் சொல்கிறதா?//
---கேள்வி கேட்டீர்கள்...

//இல்லை...இல்லை...இல்லவே இல்லை//
---பதில் சொல்லியாயிற்று...

அந்த பதிலில் உடன்பாடில்லை என்றால், நான் சொன்னவை அனைத்தும் பொய் என்று நிரூபியுங்களேன், நீங்கள் ஒரு மனிதப்பிறவியாக இருந்தால்...அதைவிட்டுவிட்டு... எதற்கு வெட்டித்தனமாய் குடிகாரன் போல கண்டபடி சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறுகிறீர்கள்...?
இப்படி....//பர்தா போடு என்று பெண்களுக்கு இஸ்லாம் உத்தரவிடுவது போல எனக்கு யாரும் உத்தரவு போட முடியாது. நான் எதற்கும், எவனுக்கும் அடிமை இல்லை என்பதால் அப்படி எவனாவது உத்தரவு போட்டால் ஏற்கவும் மாட்டேன். அதனால், இடுகையின் தலைப்பு மாற்றப்படாது!//
---'இருட்டறையிலேயே கடைசி வரை இருப்பேன்' என்றால் எனக்கு அது பற்றி கவலை இல்லை...

---ஆனால் இவற்றை எல்லாம் படிப்பவர் தெரிந்து கொள்வர், உளறிக்கொண்டு இருப்பது கண்ணையும், காதையும் அறுத்தெறிந்த ஒரு நேர்மையற்ற அரக்கன் என்று...

மிக்க நன்றி...
இனிமேல் என்றும் இங்கே வரமாட்டேன்...
எனவே, தைரியமாக உங்கள் பொய் சொல்லும் தொழிலை தொடர்ந்து நடத்தவும்...

வால்பையன் said...

//இனிமேல் என்றும் இங்கே வரமாட்டேன்...
எனவே, தைரியமாக உங்கள் பொய் சொல்லும் தொழிலை தொடர்ந்து நடத்தவும்... //


குண்டு வைக்கும் மததீவிர வாதியும், அல்லாவுக்கு நன்றி சொல்லிட்டு தான் வைக்கிறான்! அவனுக்கு அவன் தான் உண்மையான முஸ்லீம், உமக்கு நீர்! இப்படி மாறி மாரி பொய் பேசி கொண்டிருப்பது நீர் தான்!

மேற்கண்ட ஆங்கில குரான் வசனங்கள் உண்மை தானே, அதில் காஃபீர்களை என்ன செய்ய சொல்லியிருக்கு! அதெல்லாம் பொனா குரான் பொய்யா!, இஸ்லாமே பொய்யா!?, நீர் பொய்யா!? உமது நம்பிக்கை பொய்யா!?

வந்துட்டாரு மதத்துக்கு சொம்பு தூக்கிட்டு!

Anonymous said...

@ வால்பையன்...

இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டுபவர்கள், தமது விமர்சனத்துக்கு சான்றாக இறைவசனமோ, ஆதராப்பூர்வமான நபிமொழியையோ ஒன்றைக் கூட எவராலும் சமர்ப்பிக்க முடியாது. மாறாக தீவிரவாதத்தை வேரோடு, வேரடி மண்ணோடு துடைத்து எறிவதையே இஸ்லாம் விரும்புகிறது.

#####ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அல்-குர்ஆன் சொல்வதை படியுங்கள்:

''ஒரு சாராரின் மீது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உங்களை அத்துமீறலான செயல்களுக்குத் தூண்டிவிட வேண்டாம். நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்''. (அல்குர்ஆன் 5:2)

ஓ நம்பிக்கையாளர்களே!... ''எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள், இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும்''. (அல்குர்ஆன் 5:8)

ஓ நம்பிக்கையாளர்களே! ''நீங்கள் நீதியைக் கட்டிக் காப்போராக விளங்குங்கள். உங்களுக்கோ, அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்''. (அல்குர்ஆன் 4:135)

''நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த்தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். மேலும் எவனொருவன் ஒரு மனிதரை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்''.. (அல்குர்ஆன் 5:32)

யாராவது ஒருவன், ஒரு மனிதனைக் கொன்று விட்டால் அவன் மனித இனம் முழுவதையுமே வெட்டிச் சாய்த்ததுக்குச் சமமாகும். இதே கட்டளை அல்குர்ஆனின் வேறொரு இடத்தில் மீண்டும் சொல்லப்படுகிறது. ''அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை முறையான நீதி விசாரணையின்றி கொல்லாதீர்கள்" (அல்குர்ஆன் 6:151)

இப்படி, மனித நேயத்திற்காக, மனித உரிமைக்காக, இஸ்லாம் வழங்கியுள்ள ''வழிகாட்டல்களை'' எழுதிக் கொண்டே இருக்கலாம்


#####வேறொரு இடத்தில், குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்கும் ஒரு நாட்டின் நீதிபதியாக இருப்பவருக்கு மட்டும் அல்குர்ஆன் இப்படி சொல்கிறது.

''அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை முறையான நீதி விசாரணையின்றி கொல்லாதீர்கள்" (அல்குர்ஆன் 6:151)


#####பிறகு ஒரு நாட்டை ஆளும் மன்னருக்கு அவர்தம் நாட்டை எதிர்த்து அழிக்க வரும் காபிர் படைகளுக்கு எதிராக சொல்லப்படும், 'காஃபிர்களைக் கொல்லுங்கள்' என்ற (அல்குர்ஆன் 9:5) வசனத்தைத் ''திரித்து'' விமர்சிப்பவர்கள் மேற்கூறிய தனிமனிதருக்கு சொல்லப்படும் குரான் வசங்களையும் பார்க்க கடமைப்பட்ட்ள்ளனர்.

நம் இந்திய நாட்டு பிரதமர்,

"பாக்கிஸ்தானியரை விரட்டி விரட்டி கொல்லுங்கள், கண்டவுடன் சுட்டு விடுங்கள்..." என்று சொல்வார். எப்போது? ஒரு போர் சூழலில் எல்லையில் போருக்கு தயாராகும் நம் இந்திய இராணுவத்தினரிடம்..!

அதே பிரதமர்,

"பாக்கிஸ்தாநியரிடம் கைகுலுக்கி நண்பராக இருங்கள், இன்முகம் காட்டி பேசுங்கள், நம் நாட்டுக்கு சுற்றுலா வந்தால் உபசரியுங்கள், கடுஞ்சொல் கூறாதீர்கள்..." என்பார், எப்போது? பொதுமக்களிடம், பொதுமேடையில்.

இரண்டும் வெவ்வேறு சூழ்நிலையில் பேசப்பட்டவை என்றும் இரண்டுமே மிக மிக சரியானவை என்பதையும், ஒருத்தருக்கு சொல்லப்பட்டது மற்றவருக்கு பொருந்தாது என்பதயும் வால்பையன் & கோ அறிந்து கொள்ளவேண்டும்....

வால்பையன் said...

இங்கே கோவெல்லாம் ஒன்னும் கிடையாது, கேள்விகள் அனைத்தும் என்னுடயதே!

இஸ்லாம் என்னும் மதத்தை அழகாக அரசுடன் ஒப்பிட்டுள்ளீர்கள், அதையே தான் ஒரு இஸ்லாமிய நாடு செய்துள்ளது, அதை இஸ்லாம் பெயரில் நியாயபடுத்தவும் செய்கிறது!

ஒருத்தனுக்கு எந்த எதிர்ப்பும் வரலைனா அவன் இஸ்லாம்னு பெருமையடிச்சிகிறது, தப்பு பண்ணி மாட்டிகிட்டா அவன் உண்மையான இஸ்லாமியன் இல்லைன்னு பல்டி அடிக்கிறது, இதை தானே ஆண்டாண்டுகாலமா செஞ்சிகிட்டு இருக்கிங்க!