Tuesday 5 April 2011

ஓர் இரவு


அதாவது நீங்காப் பெருவெளியை புறந்தள்ளி நீல நிழல்களை கடந்து அங்கே ஒரு எறும்பின் துதிக்கை பிடித்து தொங்கும் போது அது துதிக்கை இல்லை அறுந்து விழுந்த பல்லியின் வால் என்று தெரிந்து அதை கையோடு எடுத்துக் கொண்டு எதிரில் வந்த ஏசுவை பார்த்து குட் மார்னிங் சொல்லிவிட்டு செல்லும் கவிதை பற்றி ஜி நாகராஜன் என்ன சொல்றாருன்னு கோணங்கியை கேட்டா அவரை ஏன் கேக்கறீங்க சுஜாதா எதுவுமே எழுதலைன்னு ஜெயமோகன் சத்தம் போடற அதே டைம்ல உத்தம தமிழ் எழுத்தாளன் குற்றாலத்துல குளிச்சதுக்கு காரணமே நான் தான் அப்படின்னு சாரு டவுசரை அவரோட டவுசரை தான் அவுத்துட்டு சொல்றப்ப கோணங்கி அப்படியெ மெரண்டு போயி தருமு சிவராமு கைய பிடிச்சிண்டு நகுலனோட வீடு எங்கன்னு கேட்டா அவரு காட்டுனது இந்திரா பார்த்தசாரதியோட வீடுன்னு நான் சொன்னேன்.

ரொம்ப நாளா ஆளையே காணோம். நேத்து சுப்புணி திடீர்னு வீட்டுக்கு வந்து ஏண்ணா நல்லா கருவாட்டு கொழம்பு வைப்பேளான்னு கேக்கரான் கடங்காரன். ஒரு எழுத்தாளனை பாத்து கேக்க வேண்டிய கேள்வியாய்யா இது? அப்படின்னா ஒனக்கு கருவாட்டு கொழம்பு வைக்கத் தெரியாதான்னு எனக்கு ஈமெயில் வருது. என்ன எழவுடா இது. எனக்கு கருவாட்டுக் கொழம்பு வைக்கத் தெரியும்னு நான் என்ன போஸ்டர் அடிச்சா ஓட்ட முடியும்?

இவங்களோட இதே எழவா போச்சின்னு வெளிய கெளம்புனா அங்க கருணாநிதி வந்திட்ருக்காரு. அவரு பாடு என்னை விட மோசம். எம் பையனை கொலைகாரன்னு சொல்லிட்டாங்க, கொலைகாரன்னு சொல்லிட்டாங்கன்னு ஒரே பொலம்பல். என்னை இருந்தாலும் தெரிஞ்சவா பாருங்க. என்னங்கய்யா ஆச்சுன்னு கேட்டேன்.

யதா யதா யதாய. அபிஷ்ட்டு. நான் சொல்லலை. மஹாபாரதத்துல கிருஷ்ண பரமாத்மா சொல்றார். அவரு ஆயிரஞ் சொல்வார். ஒமக்கென்னவோய். அதில்லங்காணும். விதி விதின்னு சொல்றால்லியா. அதான். என்னங்கய்யா ஆச்சுன்னு கருணாநிதிய கேட்டா அவரு ஒரு பாட்டம் பொலம்பி தள்ளிட்டு துணிஞ்சவனுக்கு சுடுகாடு. தள்ளாடுறதுக்கு தமிழ்நாடு. தம்பி வா. டாஸ்மாக்கு போகலாம் வான்னு கூப்ட்டாரு. இதுக்கே அசந்து போயிடாதேள். தா கிருஷ்ணன் தானே வெட்டிண்டு செத்தாருன்னு சொல்லிட்டாருன்னா என்ன பண்ணுவேள். அவா சொன்னா அப்பீலு ஏதுன்னேன். குடும்பத்துக்கு பெரியவா இல்லியோ?

தமிழர்கள் கலையுணர்வு இல்லாத மொன்னைகள். ஃப்ரான்ஸில் யாரும் டாஸ்மாக்கில் குடிப்பதில்லை. நான் டப்ளின்ல மட்டும் தான் குடிப்பேன்னு சாரு சண்டைக்கு வந்துட்டார். அவரு கைல டவுசர் வேற. அந்த டவுசரை போட்டா தான் உங்களுக்கு அடுத்த நோபல் பரிசுன்னு சொல்லிட்டேன். நிஜமா சொல்றியா நிஜமாவே சொல்றியா அப்ப அடுத்த நோபல் எனக்கு தான்னு என்னோட எல்லா ஃப்ரண்டுக்கும் சொல்லிடவான்னு அவரு ஒரே அஜால் குஜால் மூடுக்கு வந்துட்டாரு.

அடிக்கடி அதை கழட்டி ஆட்டாதேள். நாத்தம் பிடுங்கறதுன்னு சொன்னா யூ ஃபக்கர்னு சாரு திட்ட ஆரம்பிச்சிட்டார். ஷிவாஸ் ரீகல்னு சொன்ன பின்னாடி தான் அடங்கினார் போங்கோ. ஆனா விதி யாரை ஓய் விட்டது? சிவனே வெறும் கோமணத்தோட அலைஞ்சாரு இல்லியோ?

எல்லாரையும் கூட்டிண்டு டாஸ்மாக் போனா கூட வர்றது கருணாநிதின்னு அங்க எல்லா பேருக்கும் தெரிஞ்சு போச்சு. என்ன இருந்தாலும் கடை முதலாளி இல்லியோ. அதனால அவருக்கு பிடிச்ச கேசட்டு போட ஆரம்பிச்சிட்டா. மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, மறக்காது எமக்கு இடுவீர் முத்திரைன்னா அது துரை முருகன் சொல்றார். நம்ம டி.ராஜேந்தர் எப்பிடில்லாம் எழுதிருக்கார் பார்த்தீங்களா தலைவரேன்னு.

நாசமா போச்சு. அய்யா அது அண்ணா துரை இல்லியான்னு நான் கேட்டா துரை முருகனுக்கு செம குழப்பம். என்னா துரையா...அண்ணன் எப்ப வந்தாரு..ஒருத்தரும் ஒண்ணும் சொல்லலியேன்னு அழகிரி பையனை தேட ஆரம்பிச்சிட்டார். ஒரே எழவு போங்கோ.
இங்க இத்தனை குழப்படி நடக்குது. பக்கத்துல ஒரு ஆளு உக்காந்து அவரு பாட்டுக்கு குடிச்சிண்டு இருந்தார். மக்களுக்கு சொரணையே இல்ல பாருங்கோ. எனக்குன்னா பத்திண்டு வர்றது. என்னவோய் எருமை தண்ணி குடிச்சா மாதிரி குடிக்கறேள்னு கேட்டுட்டேன். அதுக்கு அவரு சொல்றாரு, எம் பேரு குமாரு. குவாட்டர் குமாருன்னு.

குமாருன்னா என்னவோய். என்ன நடந்தாலும் குடிப்பேளான்னு கேட்டுட்டேன். அவரு குவாட்டர் பாட்டிலை காலி பண்ணிண்டு அந்த கடங்காரன் வடிவேலு மாதிரி அவ்வ்வ்னு அழ ஆரம்பிச்சிட்டார். அழுதுண்டே சொன்னது. இப்ப தான் என்னை எல்லாரும் குவாட்டர் குமாரு குவாட்டர் குமாருன்னு கூப்பிடறா. அதுலயும் சில நீசாள் குவாட்ட்ருன்னுன்னு சொல்றா. என்னோட பேரு குமரன். எங்காப்பாருட்ட ஒரு மாம்பழம் கேட்டேன். அந்தாளு எப்பவுமே ஒன் சைடு. எங்கண்ணனுக்கு கொடுத்துட்டான். அன்னைக்கு கடுப்பாயி அடிக்க ஆரம்பிச்சவன் இன்னை வரைக்கும் அடிச்சிட்டே இருக்கேன். என்னைய யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்குறா மாங்கா ஊறுகா கூட கிடைக்க மாட்டேங்கிறதுன்னு புலம்ப ஆரம்பிச்சிட்டான்.

விதின்னு சொன்னா யாரு நம்பறேள். குமரனோட விதி அன்னைக்கு அப்படி இருந்துருக்கு. பின்ன என்ன ஓய்? அவரு சொல்லி முடிச்சதும் என்டர் ஆனது ஜெயமோகன். சாருவை தேடி வந்தவரு குமரனை கண்டதும் குஜால் ஆகிட்டார்.

அப்பனுக்கு சொன்ன சுப்பனா இருந்தா ஜெயமோகனுக்கு என்னவோய்? சுஜாதாவையே எழுத தெரியுமான்னு கேட்டவரு.சுப்பனை விடுவாரா. இது தாண்டா இந்து ஞான மரபுன்னு பறந்து பறந்து அடிக்க ஆரம்பிச்சிட்டார். அவரு ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு, தெரியுமோல்லியோ?

வெயிட்டுன்னா விஷ்ணுபுரம்னு நினைச்சிடாதேள். அந்த வெயிட்டு விழுந்தா மனுஷா பொழைப்பாளா? நசுங்கிப் போய்டுவா ஓய். காலத்தை வட்டமின்னு சொல்றேளே நேக்கு புரியலைன்னு ஜெயமோகண்ட்ட கேப்பாளா ஓய்? இல்ல தெரியாம தான் கேக்குறேன் கேப்பாளா? இதாண்டா அதுன்னு சுத்தி சுத்தி அடிக்க ஆரம்பிச்சுட்டார். நேக்கே கண்ணை இருட்டிண்டு வந்தது போங்கோ.

இவ பண்ண கூத்துல குடலு கலங்கி போயிருக்கச்ச ட்வீட்டர்ல மெசேஜ் வருது. லெதர் பார்ல இருக்கேன். மயில் கால் சூப்பு வச்சிருக்கான் பாருங்க. நாகூர்ல கூட நான் இப்படி சாப்பிட்டதில்லை. முழு மயிலை அப்படியே உப்பு, பச்சை மிளகாய் தடவி சுட்டு கொடுக்கிறார்கள். எழுத்து தான் என் உயிர். நான் வெளிய எட்டிப் பார்த்தே நாலு நாளாச்சி. இப்பொழுது கூட கேரள கிழமூதிக்கு எட்டு கட்டுரை எழுதிக்கிட்டு தான் இருக்கேன்னு மெஸேஜ். என்னடா இதுன்னு பார்த்தா சாரு. இவரு இங்கன்னா இருக்காரு. அப்புறம் என்ன லெதர் பாருன்னு அவராண்ட போய் கேட்டுட்டன்.

அவரு சொல்றாரு. நான் இந்த வேலிமுட்டி, கள்ளு, பட்டசரக்கு எல்லாம் அடிப்பேன். அதில்லங்காணும் இங்க எங்க லெதர் பாரு வந்துச்சின்னேன். அதைக் கேட்டா நான் பாரிஸ் போனப்ப பாரிஸ் கார்னர் இல்லவோய் பாரீசு பிரான்ஸ் பக்கத்துல இருக்குன்னார். சரி போனப்ப அங்க ஒரு லேடி மெட்ரோல மூத்திரம் அடிக்குது. நான் அந்த மூத்திரத்தை முத்தமிடுகிறேன்னு சொல்றாரு. அய்யே அந்த கருமத்துக்கு எதுக்கு அவ்வளவு செலவு பண்ணுவானேன்? மெட்ராஸிலயே செய்யலாமேன்னேன். இது ஒரு தப்பா ஓய். அப்படின்னா நீ தேகம் படின்னு சொல்லிட்டு அவரு மயில் தலையை கடிக்க ஆரம்பிச்சுட்டார். என் மூஞ்சில விளம்பர போஸ்டர் ஒட்டலையோன்னோ அதுவரைக்கும் சந்தோஷம் போங்கோ.

பெருமாளே இதுக்கு மேல நம்மாள முடியாதுன்னு ஒரு ஓரமா ஒளிஞ்சிக்கலாம்னு போனா அங்க ஒருத்தர் டேபிளுக்கு கீழ உக்காந்து ஆட்டுக்காலை கடிச்சிண்டு இருக்கார். துஷ்டன்னு நினைச்சிண்டே எனக்கு ஓட்டை வாய் கேட்டேளா துஷ்டன்னு நினைச்சிண்டே என்ன ஓய் இங்க உக்காந்திருக்கேள் அப்படின்னா அவரு சொல்றாரு நான் எஸ்.ரா. என்ன நடந்தாலும் கண்டுக்க மாட்டேன்னு. இதென்னடா எழவா போச்சின்னு பார்த்தா காலை தூக்கி காமிச்சி அவரு காலு இல்லவோய் ஆட்டுக்காலு ஆட்டுக்காலை தூக்கி காமிச்சி இது பழனி மலை ஆடு அப்படின்னார். எனக்கு கேடு காலம் பாருங்கோ. மலைல நின்னு உங்களுக்காக பாலே நடனம் ஆடுச்சே அந்த ஆடான்னு கேட்டுட்டேன். அம்மா செஞ்சா அடை பாட்டி சுட்டா வடை அதை சுட்டுடுச்சி ஒரு நரி இந்த கதை அதோட சரி அப்படிங்கிறார். எங்காத்துக்காரி அடை செஞ்சா எருமை சாணில தட்டின வறட்டி மாதிரின்னா இருக்கும்னு நினைச்சிண்டே படுத்தாதீங்க வோய்னு சொல்லிட்டேன். விடுவாரா? அவரு விடுவாரா? விட்டா என்ன எஸ்ரா அது வெறும் ரா. நான் உறுபசில இருக்கேன். கீழ கிடந்த ஒரு இலையை வச்சே ஒம்போது பக்கத்துக்கு கட்டுரை எழுதுவேன். இன்னைக்கு இவ்ளோ பெரிய காலு அதுவும் ஆட்டுக்காலு சிக்கிடுச்சி. அடுத்து வருது பாரு பத்தாயிரம் பக்கத்துக்கு என்னோட புக்கு. ஒனக்கு மட்டும் சொல்றேன். அதுக்கு டைட்டிலு பெரும்பசி. முன்னுரையே முன்னூறு பக்கத்துக்குன்னார். நேக்கு பீதியில பசியே அடங்கிப் போச்சு.

கருவாட்டு கொழம்பு வைக்கலாமான்னு எந்திரிச்சா கருணாநிதி ரொம்ப கோவமா முன்னாடி நிக்கிறாரு. உளியின் ஓசை தந்த இடிச்ச புளி இப்படி நிக்கலாமாங்கய்யான்னு கேட்டேன். நான் தான் சொன்னேனில்லையோ எனக்கு ராகு எட்டுல சட்டமா உக்காந்துட்டான். நான் யானை இவன் எறும்பு. என்னை இலக்கியவாதியில்லைன்னு சொல்லிட்டான்னு ஜெயமோகனை பார்த்து ஒரே சத்தம். இல்லைங்கய்யான்னு நான் சொல்ல வாய் தான் திறந்தேன். இதெல்லாம் அவா சதி நீ போய் பெண் சிங்கம் பாருன்னார். எனக்கு ஏழரைல சனி எட்டுல ராகு. எப்படி விடும். அதில்லைங்கய்யா குமரிமுத்து இலக்கியவாதின்னா நீங்களும் பெரிய இலக்கியவாதிதாங்கய்யான்னு சொல்லிட்டேன்.

அதுக்குள்ள டாஸ்மாக்கை மூட ஆரம்பிச்சிட்டா. அப்பாடா இன்னைக்கு தப்பிச்சோம்னு நினைச்சா ஒரு ஆட்டோ வந்து நின்னது. இதென்னான்னு பார்த்திண்டு இருக்கும் போதே ஜெயமோகன் யார்ட்டயோ போன்ல சொல்றார். இவய்ங்களை ஊட்டி குருகுலத்துக்கு அனுப்பி வைக்கிறேன். அங்க வச்சி கவனிச்சிக்கோன்னு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


6 comments:

அது சரி(18185106603874041862) said...

இ.மா.கோ

vasu balaji said...

/அது சரி(18185106603874041862) said...

இ.மா.கோ//
கொ.வி.

vasu balaji said...

பின்,முன்,நடு,வலது,இடது,மேல்,கீழ் நவீனத்துவ இலக்கியத்துக்கு இத விட்டா வேற ஒன்னு உண்டுமா?

/தள்ளாட தமிழ்நாடுக்கு
தம்பி வா டாஸ்மாக்குக்கு//

எலக்‌ஷன் ஸ்லோகம் மாதிரி இருக்கு. பொன்னர் சங்கர்ல ஒரு சாங் இத வச்சி எழுதிடலாம்.

தண்டவாளத்து நடுவில விழுந்து குறுக்கிண்டு மேல தடதடன்னு ரயில் போனாமாதிரி இருக்கு:)). யப்பே.

நசரேயன் said...

யோவ் என்ன இலக்கியவாதி ஆகிட்டியரோ .. ஒரு எழவும் புரியலை

நசரேயன் said...

கும்மி அடிக்க ஆள் இருந்தா சொல்லி அனுப்பும் வாறன்

vasu balaji said...

/நசரேயன் said...

யோவ் என்ன இலக்கியவாதி ஆகிட்டியரோ .. ஒரு எழவும் புரியலை/

ம்கும். இவரு அப்புடியே படிச்சிட்டாரு. புரியாம போச்சு. புரிஞ்சிட்டாலும்:))