Tuesday 8 March 2011

இடம்

பூனைக்குட்டிகள் எனக்கு வேண்டும்
எதிர்வீட்டு குழந்தை என் பூனைகளை அள்ளிப் போனது.
வீட்டுக் காவலுக்கு நல்லது
பெரிதாய் வளர்ந்திருந்த நாய் பென்ஷன் தாத்தாவுக்கு.
காரை நான் வைத்துக் கொள்கிறேன்
பேருதவியாய் இடுக்கண் களையும் நட்பு
உன் நிலம் என் நிலம் பிரிப்பதில்லை
வேலி விரிக்கும் தூரத்து மாமன். 
வீடு மட்டும் என் பேரில் எழுது
கரிக்கோடுகள் இல்லாத தாய்ப்பால் கணக்கு.
எத்தனை நாளானாலும் பிஸினஸை என்னிடம் விடு
வேகமாய் சொல்லும் உடன்பிறப்பு.
எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது.
இன்னமும் கிடைக்கவில்லை
என்னை விட்டுச் செல்ல ஒரு இடம்.

9 comments:

vasu balaji said...

ம்ம்

கலகலப்ரியா said...

ம்ம்ம்..

அது சரி(18185106603874041862) said...

என்ன பிரச்சினைன்னு தெரியலை. தமிழ்மணத்துல இணைக்க முடியலை.

கலகலப்ரியா said...

|| அது சரி(18185106603874041862) said...
என்ன பிரச்சினைன்னு தெரியலை. தமிழ்மணத்துல இணைக்க முடியலை.||

ஆமா.. no such post அப்டின்னு வருது..

அது சரி(18185106603874041862) said...

|| கலகலப்ரியா said...
|| அது சரி(18185106603874041862) said...
என்ன பிரச்சினைன்னு தெரியலை. தமிழ்மணத்துல இணைக்க முடியலை.||

ஆமா.. no such post அப்டின்னு வருது..||

எனக்கு கன்னாபின்னான்னு ஓட்டு விழுதுன்னு தமிழ்மணத்துல ஒரு முடிவெடுத்துட்டாங்க போல :))

Anonymous said...

உறவுகளின் சிதறலில் பாசத்தின் கதறல், நன்று

Santhini said...

போனால் போகிறது .....என்னிடம் விட்டுப் போ .!

அது சரி(18185106603874041862) said...

|| "குறட்டை " புலி said...
உறவுகளின் சிதறலில் பாசத்தின் கதறல், நன்று||

நன்றி புலி.

உங்க பேரு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பேரு மட்டும் தான். குறட்டை விடறவங்களை கண்டாலே எனக்கு ரொம்ப பயம் :)))

அது சரி(18185106603874041862) said...

|| Nanum enn Kadavulum... said...
போனால் போகிறது .....என்னிடம் விட்டுப் போ .!||

ஆஹா. தேங்க் யூ. :))