Monday 19 April 2010

எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கருணாநிதியின் ஒப்புதல் வாக்குமூலம்

எண்பது வயதில் பக்கவாதத்தாலும் இன்ன பிற நோய்களாலும் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு சிகிச்சை பெற வந்த பார்வதி அம்மாள் ஒரு கொடிய பயங்கரவாதி போல நடத்தப்பட்டு விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாது வந்த விமானத்திலேயே அந்த விமானம் திரும்பி செல்லும் வரை இருக்க வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் கருணாநிதி வழக்கம் போல 1975 கதையையும் சில புள்ளி விபரங்களையும் அள்ளி விட்டுருக்கிறார்.

அவரது அறிக்கைப்படி, நடந்த விவகாரத்திற்கு முழு பொறுப்பு. 5.5.2003 அன்று, அன்றைக்கிருந்த ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் படியே பார்வதியம்மாள் இந்தியாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், கருணாநிதி மிகத் தெளிவாக, சொல்லாது திட்டமிட்டு மறைத்த விஷயம், அன்றைக்கிருந்த மத்திய ஆட்சி வாஜ்பாய் தலைமையில், திமுகவின் ஆதரவுடன் நடந்த ஆட்சி, கருணாநிதியின் ஆட்சி. மாறன், டி.ஆர். பாலு, ஆ.ராசா என்று திமுகவின் முக்கிய புள்ளிகள் எல்லாம் ஆட்சியில் முக்கிய பங்கும், அதிகாரமும் செலுத்திய ஆட்சி. தமிழ்நாட்டு விவகாரங்களில் மாறனையும் திமுகவையும் மீறியோ, அல்லது அவர்களுக்கு தெரியாமலோ எந்த ஒரு முடிவையும் மத்திய அரசு எடுக்க முடியாத படி, திமுகவின் முழு செல்வாக்கின் கீழ் நடந்த ஆட்சி.
(இதன் பின்னரே முரசொலி மாறன் நவம்பர் 23, 2003ல் இறக்கிறார். உடல்நலமில்லாது இருந்த அவரை, இந்திய அரசின் செலவில் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தது இதே கருணாநிதி தான் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்)

அதாவது, ஜெயலலிதாவின் அதிமுக அரசு எழுதிய கடிதத்தை மாறனும், பாலுவும், கருணாநிதியும் நினைத்திருந்தால் ஏற்காது கிடப்பில் போட்டிருக்கலாம். ஆனால், கருணாநிதியின் மந்திரிகள் முழு ஒப்புதல் அளித்தே பார்வதி அம்மாள் இந்தியா உள்ளே நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது! இதையே சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க கோரியோ, கருணாநிதியை கைது செய்ய கோரியோ ஜெ. அரசு கடிதம் கொடுத்திருந்தால் செய்திருப்பார்களா?

ஆக, இந்த மனிதத் தன்மையே இல்லாத செயலில் பொறுப்பு அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மட்டுமா? இல்லை கருணாநிதிக்கும் பங்கு உண்டா? இதைப் படிப்பவர்களும், திமுக தொண்டர்களும் முடிவு செய்து கொள்ளலாம்.

=============

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், விமான நிலையத்தில் நடந்த விஷயம் எதுவுமே தனக்கு இரவு 12 மணி வரை தெரியாது என்று சொல்லியிருக்கிறார். அதே சமயம், அங்கு சென்னை நகர போலீசும், விமான நிலைய பாதுகாப்பு போலீசும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்வதி அம்மாளை வரவேற்க சென்ற வைக்கோவும், நெடுமாறனும் உள்ளே செல்லவே முடியாது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வருக்கு, தலைநகரின் ஏர்போர்ட்டில் போலீஸ் குவிக்கப்படுவதே தெரியாதாம்..இது என்ன விதமான நிர்வாகம் என்ற கேள்வி எழுந்தாலும் கருணாநிதியின் வயதும் உடல்நிலையும் கருதி அதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், துணை முதல்வர், அன்பழகன், வீராசாமி போன்ற மூத்த மந்திரிகள், டிஜிபி, தலைமைச் செயலாளர் என்று யாருக்குமே தெரியாதா? அப்படியானால், போலீசார் யார் உத்தரவும் இன்றி அவர்களே குவிந்து கொண்டார்களா??

===========================

அடுத்து, இந்திய இறையாண்மை குறித்து நான் கேள்வி எழுப்புவதை சில‌ நண்பர்கள் தனிப்பட்ட முறையில் கண்டித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எழுப்பும் கேள்விகள்,

1. ஒரு எண்பது வயதான, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதிய பெண் எந்த விதத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு சவாலாக இருப்பார் என்று நினைக்கிறீர்கள்? இன்னும் பத்து வருடத்தில் உலகின் சூப்பர் பவர் ஆவோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் நாடு, நடக்கவே முடியாத ஒரு மூதாட்டியை பார்த்து தொடை நடுங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

2. கார்கில் போருக்கு முக்கிய காரணம் முஷாரஃப் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார்கள். உங்கள் இந்தியாவின் ஜனாதிபதியும், பிரதமரும் அவருக்கு விருந்தளித்து அவரை கடவுள் போல நடத்தினார்கள். கார்கில் போரில் இறந்து போனவர்களுக்கு இது இந்தியா செய்த துரோகமா இல்லையா? இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட முஷாரஃப்ஃபுக்கு விருந்தளித்தால் அது இறையாண்மையை பாதுகாப்பதாக அர்த்தமா?


3. பார்வதி அம்மாள் ஒன்றும் விசா, பாஸ்போர்ட் என்று எதுவும் இல்லாது வந்து விடவில்லை. முறைப்படி அனுமதி பெற்றே வந்திருக்கிறார். அவரை அனுமதிக்க முடியாது என்றால் விசா தராது மறுக்க வேண்டியது தானே? உடல் நலமில்லாத ஒருவரை எதற்கு அலைக்கழிக்க வேண்டும்? யாரெல்லாம் தடை செய்யப்பட்ட லிஸ்டில் இருக்கிறார்கள் என்பது விசா வழங்கிய இந்திய தூதரகத்துக்கும் இந்திய தூதருக்கும் தெரியவில்லை, ஆனால் விமான நிலையத்தில் இருக்கும் குடியேற்ற அதிகாரிகளுக்கு பயணி விமானத்தை விட்டு இறங்கும் முன்னரே தெரிகிறது. இது தற்செயலாக நடந்த தவறா இல்லை பிரபாகரனின் தாய் என்பதற்காக அவரை வரவழைத்து அவமானப்படுத்த உங்களின் இந்திய அரசும் தமிழக அரசும் திட்டமிட்டு செய்த இழிவான செயலா?

பின் குறிப்பு: நண்பர் தமிழ்ப்ரியன், எனது முந்தைய பதிவு, அதில் சொல்லி இருக்கும் நபரின் பேச்சு போலவே நரகலான எழுத்து என்று சொல்லியிருக்கிறார். நன்றி தமிழ்ப்ரியன். நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. அந்த எழுத்துக்காக நான் முழு மனதுடன் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், அரசியல் மேடையில் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேவலமாக பேசுவதை விட, என் எழுத்து கேவலமாக இல்லை என்றே நான் இன்னமும் நினைக்கிறேன். நன்றி.

29 comments:

அது சரி(18185106603874041862) said...

To get the comments...

கலகலப்ரியா said...

ஓ... இவ்ளோ கூத்து நடந்திருக்கா... ம்ம்.. நாசமாப் போகட்டு..

மாயாவி said...

இந்த மஞ்சதுண்டு மண்டையை போட்ட அன்னைக்கு தீபாவளி திருநாள்தான்

vasu balaji said...

ஈகோ புடிச்ச பரதேசிப்பயலுவ. இதுக்கு பதில் கேட்டே டெசோ புண்ணாக்குன்னு உளறுது. இனியும் வர விரும்பினால்னு பேசுறவன் மனுசனா என்னான்னே தெரியலை. இவனுக்கு ஊதறதுக்கு அந்தப் பரதேசி ஈனங்கெட்ட தெருமா வேற. வாந்தி வருது.

சக்திவேல் said...

கிழவியைப்பர்த்து தமிழ் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு கலவரம் செய்வார்கள் என்று பயந்து அப்பா நல்ல வேளை வரவில்லைன்னு ஒரு ஐயர் பதிவர் சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்காரு. காங்கிரசும் ஆமாம் கிழவியைக்காட்டி வைக்கோ அரசியல் செய்வார் என்று அலறியிருக்கு. அப்பன்ன என்ன அர்த்தம்? மக்கள் கிழவிமேல் பரிதாபப்படுவார்கள் என்று பயப்படுகிறார்கள் என்றுதானே அர்த்தம்?
சுப்பிரமனியசாமி இந்தியாவுக்கு முதலாளிபோல இது ஒன்னும் தர்ம சாலை இல்லைன்னு சொல்லுறான். அந்த ஐயர் பதிவர், சுப்பிரமனிய சாமி இவர்களுக்கு நான் குறைந்தவனில்லைன்னு கருனாநிதியும் ஒத்துக்கொன்டிருக்கிறார். கிழவியைப்பாத்து இப்படி பயந்து அலறித்துடிக்கிறீங்களேடா உங்களுக்கு இருக்குடா ஆப்பு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

திருட்டுப்பயலுக.. பதவிக்காக, மலம் தின்னகூட தயாராவானுக..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அது சரி

Unknown said...

நாசமாப் போக.

பனித்துளி சங்கர் said...

////எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கருணாநிதியின் ஒப்புதல் வாக்குமூலம் ///////


தலைப்பே நெத்தி அடி .

seeprabagaran said...

கருணாநிதியும் செயலாலிதாவும் தமிழ்நாட்டிற்கு தலைவர்களாக இருப்பது தமிழினத்தின் மிகப்பெரிய சாபக்கேடு...

இந்த நூற்றாண்டில் தமிழினம் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டியநாள் கருணாநிதி செத்தநாள்.

உண்மைத்தமிழன் said...

நன்றி.. நன்றி..

முற்றிலும் உடன்பாடான பதிவு..!

ராஜ நடராஜன் said...

//அவரது அறிக்கைப்படி, நடந்த விவகாரத்திற்கு முழு பொறுப்பு. 5.5.2003 அன்று, அன்றைக்கிருந்த ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் படியே பார்வதியம்மாள் இந்தியாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், கருணாநிதி மிகத் தெளிவாக, சொல்லாது திட்டமிட்டு மறைத்த விஷயம், அன்றைக்கிருந்த மத்திய ஆட்சி வாஜ்பாய் தலைமையில், திமுகவின் ஆதரவுடன் நடந்த ஆட்சி, கருணாநிதியின் ஆட்சி. மாறன், டி.ஆர். பாலு, ஆ.ராசா என்று திமுகவின் முக்கிய புள்ளிகள் எல்லாம் ஆட்சியில் முக்கிய பங்கும், அதிகாரமும் செலுத்திய ஆட்சி//

இதுக்குதான் வரலாறு படிக்கணும்ங்கிறது.

Karunanithy is always right ன்னுதான் நேற்று புதிய சட்டசபை மேசையில கழக கண்மணிகள் தப்பு கொட்டுறாங்க.

தமிழக வரலாற்றின் கருப்பு பக்கங்களாக ஈழம் குறித்த தமிழக அரசியல் நிகழ்வுகளும்,பார்வதி அம்மாள் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப் பட்டதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

கபீஷ் said...

அவர் சொல்றதெயெல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு :):) அவருக்கு சப்போர்ட் பண்றவங்கள சொல்லணும்

Anonymous said...

அன்று அந்த கூட்டணியில் ______________(டாஷ்) மவன் வைகோவும் இருந்தான்.

தம்பி உங்களுக்கு மட்டும் உலகம் தெரிந்த மாதிரி பேசாத. எல்லா அரசியல் வாதியும் ஒன்றுதான்.

கலைஞரை பத்தி பேசணும்னா மட்டும் உங்களுக்கு எங்க இருந்துடா இப்படி வருது.

Anonymous said...

யே பேமானி, மத்த நாய்ங்கெல்லாம் -----ம்பிகிட்டா இருந்தாங்க.

என்னாமயித்துக்கு, ரகசியமா வரணும். இந்த வீணாப்போன வைகோ, அட்வைஸா இருக்கும்.

ப்ராபரா இன்பார்ம் பண்ணிட்டு வந்திருந்தா நல்ல வரவேற்பு இருந்திருக்கும்.

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
அன்று அந்த கூட்டணியில் ______________(டாஷ்) மவன் வைகோவும் இருந்தான்.

தம்பி உங்களுக்கு மட்டும் உலகம் தெரிந்த மாதிரி பேசாத. எல்லா அரசியல் வாதியும் ஒன்றுதான்.
//

அண்ணே, நான் எனக்கு மட்டும் தான் ஒலகம் தெரியும்னு பேசலை. கருணாநிதி அவரைத் தவிர வேற யாருக்கும் உண்மை தெரியாதுன்னு மோசடி பண்றதை தான் சொன்னேன்...

இந்த வரலாறு கதை சொல்றதெல்லாம் நான் ஆரம்பிக்கல...ஆரம்பிச்ச ஆளுக்கிட்ட போய் கேளுங்க.

அந்த கூட்டணில வைகோவும் இருந்தது உண்மை தான்...ஆனா, கருணாநிதி அளவுக்கு அவர் பவர்ஃபுல்லா நாலு மந்திரியோட இல்ல.

//
கலைஞரை பத்தி பேசணும்னா மட்டும் உங்களுக்கு எங்க இருந்துடா இப்படி வருது.
//

ஒரு போலி வேஷதாரிய பத்தி பேசுனா உங்களுக்கு எங்கருந்து வருதோ அங்கருந்து தான்டா எனக்கும் வருது!

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
யே பேமானி, மத்த நாய்ங்கெல்லாம் -----ம்பிகிட்டா இருந்தாங்க.

என்னாமயித்துக்கு, ரகசியமா வரணும். இந்த வீணாப்போன வைகோ, அட்வைஸா இருக்கும்.

21 April 2010 12:13
//

டேய் பரதேசி, மத்த நாய்ங்கெல்லாம் ____ம்பிக்கிட்டு இருந்தததாவே வச்சிக்கலாம்....அப்ப கருணாநிதியும் _____ம்பிக்கிட்டு இருந்ததா வச்சிக்கலாமா?

யாருடா ரகசியமா வந்தா?? ஏண்டா, விசா அப்ளை பண்ணி, ஃப்ளைட் டிக்கட் எடுத்து வந்தா அது ரகசியமா வர்றதா?? அறிவு இருந்தா யோசிச்சி பாருடா மயிராண்டி. ஆளு வர்றதுக்கு முன்னாடியே அங்க போலீஸ் போய் நிக்குதுன்னா அப்புறம் என்னடா ரகசியம்?

உன்னை மாதிரி மண்டையில ஒரு மயிரும் இல்லாத மயிரானுங்களை வச்சித் தான் எண்பது வருஷமா உன் தலைவனோட அரசியல் நடக்க்குது...

//
ப்ராபரா இன்பார்ம் பண்ணிட்டு வந்திருந்தா நல்ல வரவேற்பு இருந்திருக்கும்.
//

வரவேற்பா? எவன்டா வரவேற்பு கேட்டான்? எதுக்குடா விசா கொடுத்து அப்புறம் உள்ள விட மாட்டேன்னு சொல்லணும்? இதைக் கேட்டா வரவேற்பு கொடுத்திருப்பாங்களாம்...தூக்கி சாக்கடைல போடு உன் வரவேற்பை...இல்லாட்டி தெனமும் எங்கனா பாராட்டு விழான்னா இன்விடேஷன் இல்லாமயே ஆஜர் ஆகிறாரே உங்க தலைவர், அவரு டாய்லெட் போனதுக்கு, பல்லு விளக்குறதுக்கு குடுடா உன்னோட வரவேற்பையும் மயிரையும்! ஒனக்கும் இதயத்துல இடம் கிடைக்கும்!

ஒனக்கு பேமானி, மயிருங்கிற மாதிரி லாங்குவேஜ் தான் புரியும்னா எனக்கு அதுவும் பேசத் தெரியும்டா டோமரு!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
ஓ... இவ்ளோ கூத்து நடந்திருக்கா... ம்ம்.. நாசமாப் போகட்டு..

19 April 2010 21:47
//

ஆமா...மொள்ளமாரியிம் முடிச்சவிக்கியும் கவர்ன்மென்ட் நடத்தினா இந்த கூத்து என்ன இதை விட அதிக கூத்து நடக்கும்..

எனக்கு தெரிஞ்சது கையளவு. தெரியாத கூத்து கடலளவு.

அது சரி(18185106603874041862) said...

//
மாயாவி said...
இந்த மஞ்சதுண்டு மண்டையை போட்ட அன்னைக்கு தீபாவளி திருநாள்தான்

19 April 2010 22:22
//

என்னத்தை சொல்றதுன்னு தெரியலீங்க மாயாவி.

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
ஈகோ புடிச்ச பரதேசிப்பயலுவ. இதுக்கு பதில் கேட்டே டெசோ புண்ணாக்குன்னு உளறுது. இனியும் வர விரும்பினால்னு பேசுறவன் மனுசனா என்னான்னே தெரியலை. இவனுக்கு ஊதறதுக்கு அந்தப் பரதேசி ஈனங்கெட்ட தெருமா வேற. வாந்தி வருது.

19 April 2010 22:55
//

ஈகோல்லாம் இல்லைங்க...அசிங்கமான அரசியல்....இவனுங்களுக்கு ஈகோ இருந்தா, கவர்மென்ட்டை கலைச்ச காங்கிரஸோடயே கூட்டணி சேருவாங்களா??

ஈகோல்லாம் சுயமரியாதை இருக்கவங்களுக்குத் தான் இருக்கும்...இந்த கும்பலுக்கு இருக்காது...

அது சரி(18185106603874041862) said...

//
சக்திவேல் said...
கிழவியைப்பர்த்து தமிழ் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு கலவரம் செய்வார்கள் என்று பயந்து அப்பா நல்ல வேளை வரவில்லைன்னு ஒரு ஐயர் பதிவர் சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்காரு.
//

ஆமா...மோடிக் கும்பல் குஜராத்ல கொன்னு குவிச்சதை விட பயங்கர கலவரம் நடந்துடும்...

//
காங்கிரசும் ஆமாம் கிழவியைக்காட்டி வைக்கோ அரசியல் செய்வார் என்று அலறியிருக்கு.
//

இந்திரா செத்த அன்னைக்கி டெல்லில சீக்கியர்களை கொன்னு குவிச்சதெல்லாம் தர்ம காரியம்னு இந்த காங்கிரஸ் தறுதலைங்களை சொல்ல சொல்லுங்க...செருப்பு பிய்ய பிய்ய அடி விழும்..

//
அப்பன்ன என்ன அர்த்தம்? மக்கள் கிழவிமேல் பரிதாபப்படுவார்கள் என்று பயப்படுகிறார்கள் என்றுதானே அர்த்தம்?
சுப்பிரமனியசாமி இந்தியாவுக்கு முதலாளிபோல இது ஒன்னும் தர்ம சாலை இல்லைன்னு சொல்லுறான்.
//

சு.சாமி...அவ்ளோ தான்! ஆமா, ராஜீவ் மரணத்துல இவனுக்கும் சந்திரா சாமிக்கும் நேரடி தொடர்புன்னு சொல்றாங்களே...அது பத்தி இவன் எதுவும் சொன்னதா தெரியலியே?

அது சரி(18185106603874041862) said...

//
பட்டாபட்டி.. said...
திருட்டுப்பயலுக.. பதவிக்காக, மலம் தின்னகூட தயாராவானுக..

//

இனிமே என்ன தயாராகுறது பட்டாபட்டி? ஏற்கனவே அது தானே??

அது சரி(18185106603874041862) said...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
அது சரி

20 April 2010 03:29
//

நன்றி டி.வி.ஆர். ஸார்.

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
நாசமாப் போக.

//

நாசமாப் போகவா?? சொத்து மதிப்பு நாலாயிரம் கோடியாம் முகிலன்...

அது சரி(18185106603874041862) said...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
////எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கருணாநிதியின் ஒப்புதல் வாக்குமூலம் ///////


தலைப்பே நெத்தி அடி .

//

நன்றி சங்கர்...

அது சரி(18185106603874041862) said...

//
seeprabagaran said...
கருணாநிதியும் செயலாலிதாவும் தமிழ்நாட்டிற்கு தலைவர்களாக இருப்பது தமிழினத்தின் மிகப்பெரிய சாபக்கேடு...

//

உண்மை பிரபாகரன்... இந்த விஷயம் மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்களில் கருணாவும் ஜெயாவும் சாபக் கேடு தான்.

அது சரி(18185106603874041862) said...

//
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நன்றி.. நன்றி..

முற்றிலும் உடன்பாடான பதிவு..!

//

நன்றிண்ணே...

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...

இதுக்குதான் வரலாறு படிக்கணும்ங்கிறது.

Karunanithy is always right ன்னுதான் நேற்று புதிய சட்டசபை மேசையில கழக கண்மணிகள் தப்பு கொட்டுறாங்க.
//

ஆமா...அவங்கள்லாம் மக்கள் பிரதிநிதிகள்...இது தான் மக்கள் சேவை!

//
தமிழக வரலாற்றின் கருப்பு பக்கங்களாக ஈழம் குறித்த தமிழக அரசியல் நிகழ்வுகளும்,பார்வதி அம்மாள் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப் பட்டதையும் இங்கே பதிவு செய்கிறேன்.
//

ஒரு பெரிய கறுப்பு புத்தகமே இருக்கு...அதுல வர்ற ஒரு பக்கம் கூட இல்ல, ஒரே ஒரு வரி தான் இந்த நிகழ்வு...

அது சரி(18185106603874041862) said...

//
கபீஷ் said...
அவர் சொல்றதெயெல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு :):) அவருக்கு சப்போர்ட் பண்றவங்கள சொல்லணும்

//

உண்மை தாங்க கபீஷ்...

ஆனா, என்னவோ ஒலக உத்தமன் நித்யானந்தா சீடன் மாதிரி வேஷம் போட்டதை பார்த்து டென்ஷன் ஆயிட்டேன்..