
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....முன்னாள் மந்திரிக்கு ஒரு ரெய்டு...உனக்கு எத்தனை சூடு மாதித்தா...எத்தனை சூடு...ஆயிரத்து நூத்தி பதினேழு வருடங்கள் ஆகிவிட்டது...சொன்ன வாக்கை காப்பாற்ற முடிந்ததா உன்னால்??"
மந்திரவாதியின் குரல் மாதித்தனின் செல்போனை கிழித்துக் கொண்டு அறை முழுவதும் பரவியது...
"மந்திரா...கட்சி விட்டு கட்சி ஓடும் கயவாளிகள் மாதிரி என்னை பேசாதே...நான் என்ன போகாமயா இருக்கேன்....நீ சொன்னன்னு பிரிஸ்டால் வரைக்கும் போனேன்....அந்த சனியன் பிடிச்ச வேதாளம் இந்தா வர்றேன்னுட்டு அப்பிடியே ஓடிப் போயிருச்சி ஓடுகாலி நாயி....நானும் தேடிக்கிட்டு தான் இருக்கேன்...சீக்கிரமா அதை பிடிச்சி உன்கிட்ட ஒப்படைச்சாதான் எனக்கு நிம்மதி..."
"சீக்கிரமான்னா...நீ வேதாளத்தை பிடிக்கிறதுக்குள்ள கருணாநிதி காவிரிப் பிரச்சினையவே தீத்துருவாரு...ரஜினிகாந்து அப்பா வேஷத்துல நடிக்க ஆரம்பிச்சிருவாரு போலருக்கே..."
"நீ பேசுறதா பார்த்தா நான் பிடிக்கவே மாட்டேன்னு சொல்ற மாதிரி இருக்கே...இன்னும் கொஞ்ச நாள் டைம் குடு...."
"ஆமா நான் நயந்தாரா...நீ ரஜினிகாந்து....கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்னு மரத்த சுத்தி டூயட் பாடலாம் வர்றியா..."
என்னக் கொடுமைடா மாதி இது...போயும் போயும் இந்த தாடிக்கார சடையன் கூட டூயட் பாட்ற மாதிரி ஆயிடுச்சே நம்ம நிலைமை...ம்ம்ம்ம்...நினைக்கிறதெல்லாம் வெளிய சொல்ல முடியுமா...
மாதித்தன் குரலை மென்மையாக்கி கொண்டான்...
"இல்ல மந்திரா...இன்னும் மூணு மாசம் டைம் குடு..அந்த வேதாளம் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சி கொண்டு வர்றேன்"
"மூணு மாசம் டைம் விக்கிரமாதித்தா...மூணே மாசம்..."
மந்திரவாதியின் மிரட்டல் குரலுடன் மாதித்தனின் மொபைல் போன் ஊமையானது.
------------------------------------------------------
மந்திரவாதி கத்தியதில் மாதித்தனுக்கு ஏற்றி வைத்திருந்த போதை எல்லாம் இறங்கியிருந்தது...
ம்ம்....சுதி மொத்தமா எறங்கிருச்சு...இன்னும் நாலு ரவுண்டு விட்டாதான் நைட்டு தூக்கம் வரும்..விஸ்கி வேற தீந்து போச்சே.....சரி அப்பிடியே மெதுவா நடந்து போயி தெருக்கடைல ரெண்டு பாட்டில் வாங்கிட்டு வந்துரலாம்...வெளிய ஃபுல்லா இருட்டிருச்சே....கடை தொறந்திருக்குமா இல்ல இன்னிக்கி நைட்டு ட்ரையா தான் தூங்கணுமா...
ஷூவை மாட்டிக் கொண்டு மாதித்தன் வெளியே நடந்த போது இரவு நேர பிரிஸ்டால் மெல்லிய மழையில் நனைந்து கொண்டிருந்தது.
தெருவுல ஒரு பயலைக் காணோமே...நைட்டு பகல் எப்ப பார்த்தாலும் இந்த தெருவுல ஒருத்தனைக் கூட பார்க்க முடியல....ம்ம்ம்...இந்நேரம் உஜ்ஜைனிலருந்தா புள்ளையார் சதுர்த்தியும் அதுவுமா ஜெகஜோதியா இருந்திருக்கும்...எல்லாம் போச்சு....ஆமா அது என்ன காரு....பழைய காரு பாத்திருக்கேன்...ஆனா இது என்ன நசுங்கி போன கெரசின் டின்னுக்கு நம்பர் ப்ளேட் மாட்ன மாதிரி...இதைக் கூட இந்த ஊர்ல ஓட்றாய்ங்களா...
மாதித்தன் யோசித்துக் கொண்டிருந்த போதே அவனை தாண்டி சென்ற கார் திடீரென்று நின்றது...அது ஒரு பழைய ஃபோர்ட் ஃபியஸ்டா கார்...கருப்பு பெயின்ட் தேய்ந்து போய் தகரம் பல இடங்களில் மார்க்கெட் போன நடிகை போல பல்லிளிக்க...நம்பர் ப்ளேட் பாதி கழன்று தொங்கிக் கொண்டிருந்தது..ஒரு டயரில் பாதி காற்று இல்லை...கமலஹாசன் போல ஈரமான ரோட்டை அழுத்தி முத்தமிட்டுக் கொண்டிருந்தது.... அதில் இருந்து வயது கணிக்க முடியாத ஒரு ஆள் இறங்கினான்...நீளமான ரெயின்கோட் பல இடங்களில் கிழிந்து ஒட்டுப் போட்டிருந்தது...தலையில் ஒரு பழைய தொப்பி...கழுத்தில் ஒரு சாயம் போன நீளமான காசித் துண்டு...இருட்டில் மாதித்தனுக்கு முகம் தெரியவில்லை...
யார்டா இவன்...அப்பிடியே ரீசைக்ளிங் பின்ல இருந்து எந்திரிச்சி வந்த மாதிரி இருக்கான்... மாதித்தன் பேச ஆரம்பிக்கும் முன் ஒரு பேப்பரை நீட்டி அந்த மனிதன் பேச ஆரம்பித்தான்...
"எக்ஸ்க்யூஸ் மீ ஸார்....டூ யூ நோ திஸ் அட்ரஸ் பை எனி சான்ஸ்"
லெட் மீ ஸீ...எடிங்க்டன் ஸ்ட்ரீட்...டேக் லெஃப்ட் அன்ட் தென்.."
அடுத்து நடந்ததை நிஜமாகவே மாதித்தன் எதிர்பார்க்கவில்லை...
அவன் வாயில் ஒரு அழுக்கு துணி திணிக்கப்பட்டது....தலையில் கனமான எதுவோ தாக்கியது.... மாதித்தன் நினைவிழந்தான்.....
---------------------------------------------------
"நான் எங்க இருக்கேன்..."
தமிழ்ப்பட ஹீரோயின் போல கேள்வியுடன் மாதித்தன் கண்விழித்த போது பதில் சொல்ல ஹீரோ யாரும் இல்லை...அவன் கைகள் ஒரு பாறையுடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தது....கண்களை சுற்றிலும் துழாவ விட்டான்....
அது ஒரு குகை...ஒழுங்கில்லாமல் குடையப்பட்டிருந்ததால் பாறைகள் துருத்திக் கொண்டிருந்தன....இருண்ட மூலைகளில் பிரம்மாண்டமான சிலந்தி வலைகள்...சில வவ்வால்கள் தலைகீழாக...ஒரு வேளை சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டிருக்கலாம்...பாறைகளில் லேசாய் ஈரக்கசிவு....விடாது பெய்யும் பிரிட்டிஷ் மழை...ஒரு மூலையில் அழுக்குத் துணிகள்...முட்டை ஓடுகள்...ஒரு காலியான வைன் பாட்டில்..சில மண் சட்டிகள்.....சிகரெட் துண்டுகள்....மூலையில் மரக்கட்டைகளை குவித்து எரியும் நெருப்பு...
"என்ன மாதி....மப்பு ரொம்ப ஜாஸ்தியோ....லேசா தட்டினதுக்கே இம்புட்டு நேரம் கழிச்சி எந்திருக்கிற.... கே.எஃப்.ஸில சிக்கன் வாங்கிட்டு வந்தேன்...சாப்ட்றியா..."
பேசிக் கொண்டே வேதாளம் உள்ளே வந்தது...இன்னமும் அதே கிழிந்த பல இடங்களில் ஒட்டுப் போட்ட ரெயின் கோட்...கழுத்தில் சாயம் போன காசித் துண்டு...தலையில் பழைய தொப்பி இல்லை...கொம்புகள் நீட்டிக் கொண்டு தெரிந்தன...
"அட சனியனே....ரொம்ப அசிங்கமா இருக்கும் போதோ எனக்கு லேசா ஒரு டவுட்டு வந்திச்சி...நீ தானா அது....எதுக்கு என்ன இங்க கடத்திட்டு வந்த...."
"ரொம்ப கத்தாத மாதித்தா...எத்தினி நாள் தான் நீ என்னை பிடிப்ப....ரொம்ப போரடிக்குது....அதான் ஒரு சேஞ்சுக்கு....நானே ஒன்னப் பிடிச்சிட்டு வந்துட்டேன்...."
"எதிர்கட்சி எம்.எல்.ஏவை பிடிக்கிற மாதிரி ரொம்பக் கேவலமா இருக்கே...சரி சரி அவுத்து விடு...ஒன்னை மந்திரவாதிகிட்ட சேத்துட்டு நான் பாட்டுக்கு போய்கிட்டே இருக்கேன்..."
வேதாளம் பலமாக சிரித்தது....
"மாதி...ஒனக்கு உறவுகள் பத்தி எதுவுமே தெரியலை...சில உறவுகள் ஒரு தடவை ஒடஞ்சிட்டா எப்பவுமே ஒட்டாது...ஒனக்கு ஒரு கதை தெரி"
"ஏய்...நில்லு நில்லு....நீ கதை சொல்ல ஆரம்பிக்கிற மாதிரி இருக்கே...நீ வந்தா வா...வராட்டி போ...ஆனா கதை மட்டும் சொல்லாத....ரொம்பக் கொடுமையா இருக்கு...ப்ளீஸ் என்னை அவுத்து விட்றேன்...நான் நடந்தே உஜ்ஜைனிக்கு போயிட்றேன்...இனிமே உன் பக்கமே வர மாட்டேன்..."
வேதாளத்தை இடை மறித்த மாதித்தன் கெஞ்ச ஆரம்பித்தான்....
"பெட்ரோல் செலவு பண்னி ஒன்னை இவ்ளோ தூரம் தூக்கிட்டு வந்ததே இதுக்குத் தான்...அப்புறம் கதை சொல்லாட்டி எப்பூடீ...."
மாதித்தனின் கெஞ்சலை புறக்கணித்த வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது....
"மாதி....சுட்ட மண் என்னிக்காவது திருப்பி ஒட்டியிருக்கா??"
==================== தொடரும் ===================