Monday, 3 August 2009

பூஜ்யம்....



அம்மா ஆடு இலை ஈ உடுக்கையில் ஆரம்பித்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் என்றாகி...

சுற்றிலும் பார்த்து அறுப்பதற்கு எதுவும் இல்லாது போக‌
சுண்டு விரலை.....
முன் பற்களால் வலிக்காது மெல்லக் கடித்து...
கசிந்த இரத்தத்தை மெதுவே.....
உப்பாகத் தான் இருக்கிறது....

எக்ஸ் மைனஸ் ஒய் என்றால் இசட்
இசட் ப்ளஸ் எக்ஸ் என்றால் ஒய் எனில்
எக்ஸின் மதிப்பென்ன....
செர்பிய படுகொலையும் சிப்பாய் புரட்சியும்
அல்ஜீரிய தலைநகரும் அல்ஜீப்ரா விடைகளும்....

சிறு கத்தி எடுத்து இடைப் பக்கம்
சிறிதாய் கோடிழுத்து.....

தேரா மன்னா செப்புவதுடையேன்...
குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமின்சிரிப்பும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்....

இன்டக்ரேஷன் டிஃப்ரன்ஷியேஷன்...
எலக்ட்ரான் ப்ரோட்டான் எதுவுமில்லாத ந்யூட்ரான்
யுரேனியம் க்ரிடிக்கல் மாஸ் அணுகுண்டு...
ஃபிஷனை விட பெரிது ஃப்யூஷன்...
சி ட்டூ ஹெச் ஃபைவ் ஓஹெச்
எதில் ஆல்ஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு...

தோள் பக்கம் மெல்ல கடித்து
கழுத்து நோக்கி மெதுவே நகர்ந்து....

ப்ளான் எலிவேஷன் எஞ்சினியரிங் ட்ராயிங்...
ஃபோர்ஸ் டார்க் ஜைராஸ்கோப்...
பெட்ரோல் உடனடி பவர்...டீசல் கொஞ்ச நேரம் ஆகும்...

இன்டர்னல் கம்பஸ்டன் எஞ்சின்...
இருபது வயதில் வேலை இருபதாயிரம் சம்பளம்..
ஏசி ரூம் கம்பெனி கார்...

வலப்பக்கம் அலுப்பாய் இருக்கிறது
இடப்பக்கம் ஆரம்பித்தால் என்ன...

காலாண்டு கணக்குகள் வராக் கடன்கள்
பங்குதாரர்கள் டிவிடென்ட்.. டேக் ஓவர் மெர்ஜர்...
மார்ஜின் ட்ரேடிங்கும் ப்ரைவேட் எக்விட்டியும்...
இன்ஃப்லேஷனும் க்ரெடிட் க்ரென்ச்சும்...
காளைப் பாய்ச்சலும் கரடிப் பிடியும்....

எக்ஸ் மைனஸ் ஒய் என்றால் இசட்
இசட் ப்ளஸ் எக்ஸ் என்றால் ஒய் எனில்
எக்ஸின் மதிப்பென்ன....
கூட்டிக் கழித்துப் பார்த்தால் பூஜ்ஜியமாய் இருக்கலாம்...

தின்ன தின்ன தீராது
நீண்டு கொண்டே இருக்கிறது...

தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தன் போல‌
தின்று கொண்டே இருக்கிறேன் என்னை நானே...

=========================

படம் உதவி: http://freemasonry.bcy.ca/
(This is a repost as I am on a trip to somewhere....I would be really nice of you, if any of my friends can submit this to Tamilsh/Tamilmanam. Thanks for your visit....Cheers....)

Sunday, 14 June 2009

கறிக்கடைல வந்து சென்ட்டு பாட்லு....

கைல நாலு காசு இருந்தா, "ஏய் இங்க பூசு...லெஃப்ட்ல பூசு..ஆங்..ரைட்ல பூசு"ங்கிற மாதிரி நமக்கு முன்னாடி ரெண்டு பேரு, பின்னாடி ரெண்டு பேரு, சைட்ல நாலு பேருன்னு கித்தாப்பா திரியலாம்..ஊர்ல இருக்க ஆட்டோ, சின்ன பசங்க சைக்கிளு எல்லாத்திலயும் நம்ம மொகரைய பெருசா படம் புடிச்சி ஒட்டலாம்...அப்படியே எதுனா கோமநாதபுரம், பாமநாதபுரம் தொகுதி எம்.பி. ஆயிடலாம்...நம்மக்கிட்டயும் பேட்டின்னு எதுனா பத்திரிகைகாரய்ங்க வருவாய்ங்க....நம்ம அருமை பெருமையெல்லாம் அள்ளி வுடலாம்...

எளவு...இங்க சிங்கிள் டீக்கே சிங்கி...அதுல எங்க இருந்து அல்லக்கைங்களுக்கு படியளக்கிறது...நமக்கு நாமே கொள்கை பரப்பு செயலாளரா இருந்துக்க வேண்டியது தான்...

ஆகவே.... ஆன்றோரே, சான்றோரே,ஆய்ந்தவிந்த (அது என்ன முட்டையா??) பெரியோரோ, இளைஞர்களே, இளைஞிகளே, சிறுவர்களே, சிறுமிகளே...நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "புரட்சி கொண்டான்", "புண்ணாக்கு விற்றான்", "டீக்கடையில் பாக்கி வைத்தான்", எங்கள் அண்ணன் "அதுசரி"யின் சூடான நேருக்கு நேர் இதோ...





1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

எந்த பேரு?? ஆங்...நீங்க கேட்டதும் தான் ஞாபகம் வருது..இந்த கழுதைக்கு கழுதைன்னு ஏன் பேரு வந்துச்சி?? அதை கய்தன்னு கூப்பிடறாய்ங்களே அதனால கய்த...ச்சீ கழுத வருத்தப்படுமா? கழுதைக்கு அந்த பேரு பிடிக்குமா பிடிக்காதா?

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

அது டெய்லி அளுவறது தான்....பின்ன போதை ஏர்றதுக்கு மின்னாடி குவாட்டர் தீந்து போயி கொஞ்சமா ஊறுகா மட்டும் இருந்தா அளுக வராம இன்னா பண்ணும்??

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

தெர்லபா...நாமல்லாம் இங்க்க தோச்சி ச்சப்புன்னு கைநாட்டு வெய்க்கிற கேசு..

4.பிடித்த மதிய உணவு என்ன?

நல்லா சுகுரான கொஸ்டின்...தோஸ்த்து வாங்கி தர்றதா இருந்தா குவாட்டரும் கோளி பிரியாணியும்...லெக் பீசுன்னா ஜமா தான்...நாந்தான் தோஸ்த்துக்கு வாங்கி தரணும்னா தயிர் சோறும், அவய்ங்க ஓசில தர்ற ஊறுகாவும்...

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

அய்ய...அவன் கூட போயி யார்னா பெரண்டா இருக்க முடியுமா...தாய்ளி குடிச்சான்னா பீரு பாட்டில எடுத்துக்கிட்டு சேக்காளியவே குத்த‌ வருவான்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடல்ல வச்சி குடிச்சா இன்னா அர்வில வச்சி குட்ச்சா இன்னா....குவாட்டரு குவாட்டரு தான்...இன்னாது குள்க்றதா....இன்னா இது கெட்ட பயக்கம்லாம்...நாம அதெல்லாம் பண்றதில்லபா...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆம்பிளையலா இருந்தா....எதுக்கு அவய்ங்கள பார்த்துக்கிட்டு..எங்கனா பராக்கு பாத்துக்கிட்டு பேஸ்றது தான்...பொம்பிளையளா இருந்தா...தடாபுடான்னு பேசுவேன்...ஆனா நாமெல்லாம் ரொம்ப கூச்சமான ஆளுபா...அதனால தரைய பாத்துக்கிட்டு தான் பேசுறது...

8.உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

என்னாண்ட புட்ச்ச மேட்ரு...அல்லாரையும் நல்லவய்ங்கன்னு நம்பிர்றது...புடிக்காத மேட்டரு...அதுவும் அதேன்...

9. உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயம் எது?

நம்ம டாவுகிட்டியா?? புட்ச்சது குவாட்டரா இருந்தாலும் நைன்டியா இருந்தாலும் நம்க்கு சரி பாதி குடுக்குறது....புடிக்காதுன்னா....நம்ம சரக்குல சரி பாதி கேக்குறது...பாதிய அங்க குட்துட்டா எப்பிடி போதை வரும்னேன்??

10.யார் பக்கத்தில் இல்லாமல் இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

மெர்சலாருக்குப்பா....நம்ப தலிவரு எம்ஜியாரு தான்...

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இன்னிக்கு இன்னா தீபாளியா...அதான் பாக்குறல்ல..நேத்தி கட்டிருந்த அதே ப்ளூ கலர் கைலியும், முண்டா பனியனும் தான்...இன்னாது பனியன் கலரா? சேப்பு கலருபா...சாயம் பூடுச்சா அதான் வெள்ளையா தெரியுது...

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நம்ம டாவு எதொ பாடினு இருக்குபா...சுண்ட கஞ்சி சோறுடா...சுரும்பு கருவாடுடா...வாள மீனு காலுடா...வர்ற ஸ்டைல பாருடா....

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

அய்ய...பேனா வெச்சி இன்னா பண்ண?

14.பிடித்த மணம்?

நல்லா பசிக்கிறப்ப பிரியாணி வாசனை..

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

அய்ய..பேட்டைல நமக்கு யாரையும் தெர்யாதுபா...நம்மள மாதிரி அல்லக்கைலாம் யாரையும் கூப்ட முடியாது...நாம அழைச்சி யார்னா வரப் போறாங்களா?? பின்ன இன்னாத்துக்கு வெட்டி வேலைன்னேன்??வோணும்னா அவங்களே வந்தா தான் உண்டு...

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

நடராசன் அண்ணனா?? நல்லா எய்துவாரு...எவன் குவாட்டர் குடுக்குறானோ அவன் பக்கம்னு நம்மள மாதிரி சைடு போடாம, நடுக்கால நின்னு எய்துவாரு...வோணும்னா நீயே இத படிச்சி பாரேன்...

17. பிடித்த விளையாட்டு?

கோல்ஃப் வெளாடுவேன்னு சொன்னா நம்பவா போறீங்க??

18. கண்ணாடி அணிபவரா?

கண்ணெல்லாம் நல்லா தான் இருக்கு...ஆனா, நம்ம கண்ணு ஊரு மேயுறத அடுத்த பயலுவ‌ பாக்க கூடாதுன்னு நம்ம தலீவரு கலிஞ்சரு மேறி கூலிங்கிளாஸ் போட்டுக்குறது...

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

அல்லாம் ஆக்சனு படங்க தான்...ச்சும்மா கில்லி மாதிரி இருக்கணும்...

20.கடைசியாகப் பார்த்த படம்?

ஏதோ குவாட்டர் ஆஃப் சோலாஸ்னு சொன்னாய்ங்க...ஆஹா பேருலயெ குவாட்டரான்னு போனேன்...ஆனா அது வேற பேராமே??

21. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

பொஸ்தவமா?? இன்னாதிது....கறிக்கடைல வந்து செண்டு பாட்லு கேட்னுருக்க‌?? சரி கேட்டுப்புட்ட....ஒன்ன மேறி நாளைக்கி நாலு பேரு பேசக்கூடாது பாரு...அதான் தோஸ்த்து ஒருத்தன படிச்சி காட்ட சொல்லி கேட்டுக்கினுக்கிறேன்... ஒடையாருன்னு ஒரு பொஸ்தவம்...ஒரு பொஸ்தவம் இல்ல...ஆறு பொஸ்தவம்...நம்ப சாமியாரு பாலகுமாரன் எய்தினாராம்...நான் கூட நம்ப சாராய ஒடையாரு பத்தி எய்தின பொஸ்தவம்னு நெனைச்சிட்டேன்...ஆனா இது தஞ்சாவூர்ல பெர்சா இருக்கே அந்த கோய்லு பத்தின பொஸ்தவமாம்...ராசராச சோழ ஒடையாரு... அப்பாலிக்கா ....நமக்கு இங்கிலிபீசு தெரியாதுன்னு ஒரு பய சொல்லிரப்படாது பாரு...அதனால God Delusion அப்பிடின்னு ஒரு வெள்ளைக்கார தொர எய்தின புக்கு...

22.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

அய்ய...நமக்கு சத்தமே புடிக்காதுபா...

23.பிடித்த பருவ காலம் எது?

நல்லா மள பெய்ற டைம் தான்....கொட்ற மழைல நனைஞ்சிட்டு அப்பிடியே தோஸ்துங்களோட சேந்து ஒரு நாலு ரவுண்டு வுட்டுட்டு தலைக்கறி சாப்ட்ற சொகம் இருக்கே....ஆஹா...இன்னாபா இப்பெல்லாம் மளையே பேய மாட்டேங்குது...

24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

டெஸ்க்டாப்பா? அப்பிடின்னா??

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?

ஊரெல்லாம் சுத்துறது தான்....டேப்பு வச்சில்லாம் அளக்கிறதில்ல...

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இல்லாம பின்ன?? பெட்டு கட்னா மூணு நாளு முளிச்சிக்கிட்டு இருப்பேன்...கட்றியா?

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அது அன்னியன் மேறி பெரிய லிஸ்ட்பா...அல்லாத்தையும் எய்தினா ஒங்க கெவுருமெண்டு இந்த பேட்டிய தடை பண்ணிரும்...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

உள்ள ஒன்ன வெச்சிட்டு வெளிய ஒண்ணு காட்றதெல்லாம் பேமானிங்க பண்றது....நாம உள்ள வெளிய எல்லாம் சாத்தான் தான்...

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?

டூரிஸ்டுங்க வராத ஏரியா...

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னா ஆசப்பட்டு இன்னா புண்ணியம்னேன்??

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

ஹிஹிஹி....இதெல்லாம் எப்பிடி பப்ளிக்கு கிட்ட சொல்றது??

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாய்க்கைங்கிறது போட்டு மேறி...கடல்ல இர்க்க தான் போட்டு....கரைல இருந்தா அதுக்கு பேரு வேஸ்டு....